Showing posts with label கணிதம்(MATHS). Show all posts
Showing posts with label கணிதம்(MATHS). Show all posts

Thursday, August 20, 2015

மகா துவார வாசலில் மயன் குறியீடு: கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் கண்டுபிடிப்பு


கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் வாசல் படியில் குறிக்கப்பட்டுள்ள மயன் குறியீட்டை சுட்டிக்காட்டுகிறார் பொறியாளர் கோமகன். (உள்படம்) மயன் குறியீடு. 
 
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதற்கு ஆதாரமான மயன் குறியீடு அதன் மகாதுவார வாசலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிய ராஜேந்திர சோழன், தஞ்சையைப் போலவே அதேசமயம் தமிழ் கட்டிடக்கலை மரபுப்படி கங்கை கொண்ட சோழபுரத்திலும் பிரகதீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினான். வழக்கமாக கோயில்களில் நான்கு பக்க விமானம்தான் இருக்கும் ஆனால், இந்தக் கோயிலில் தமிழ் மரபுப்படி எட்டு பக்கங்களைக் கொண்ட விமானத்தை அமைத்தான் ராஜேந்திரன்.

கோயிலின் கிழக்கு பக்கம் உள்ள மகா துவாரத்தில் (பெரிய நுழைவு வாயில்) இரண்டு பக்கமும் இரண்டு தூண்கள் மட்டுமே நிற்கின்றன. முன்பு இதன் வழியாகத்தான் கோயிலின் உட்பகுதிக்கு செல்ல வேண்டும். தற்போது வழி அடைக்கப்பட்டுள்ள இந்த வாயிலின் படியில்தான் மயன் குறியீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய வரலாற்று ஆர்வலரும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவருமான பொறியாளர் கோமகன், “துவாரகாபுரியை வடிவமைத்துக் கொடுத்த மயன்தான் நமக்கு ஆதி தச்சர். மயன் சாஸ்திரம்தான் நாம் பயன்படுத்தும் கட்டுமான சாஸ்திரம்.
பொதுவாக நாங்கள் ஒரு கட்டுமானத்தை கட்ட ஆரம்பிப்பதற்கு முன்பு ஆதாரக் குறியீடு ஒன்றை ஏற்படுத்துவோம். ‘பெஞ்ச் மார்க்’ என்று சொல்லப்படும் அதுதான் மயன் குறியீடு. அந்த குறியீடுதான் ஒட்டுமொத்தக் கட்டுமானத்துக்கும் ஆதார அளவீடாக இருக்கும்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் வாசல் படியில் குறிக்கப்பட்டுள்ள மயன் குறியீட்டை ஆதாரமாகக் கொண்டுதான் ஒட்டு மொத்த கோயிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மகா துவார படியானது இரண்டு கல் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டு முனைகளிலும் மயன் குறியீடு உள்ளது. இந்தக் குறியீடுகள் இரண்டுக்கும் மையத்தை குறித்தால், கோயில் வாசலிலிருந்து உள்ளே உள்ள கர்ப்பகிரகம் வரை ஒரே நேர்கோட்டில் வருகிறது.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் மயன் குறியீட்டின் மையத்தில் திசைமானியை வைத்தால், கோயில் மிகச் சரியாக கிழக்கு மேற்கில் அமைந்திருப்பதை துல்லியமாக காட்டுகிறது. கர்ப்பகிரகத்தில் மின்காந்த அலைகள் சமமாக இருக்க வேண்டும்.

இந்தக் கோயிலில் அதை மிகச் சரியாக அமைத்துள்ளனர். நாம் இப்போது பயன்படுத்தும் அளவீடுகள் மற்றும் காந்தப்புல கருவிகளைப் போல ஏதோ ஒரு கருவியையோ தொழில்நுட்பத்தையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தி உள்ளனர்’’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

Tuesday, August 18, 2015

MARRIAGE ASTRO திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது

திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதுடன், ஜாதகத்தில் களத்திரதோஷம், பாவாதிதோஷம், ஆயுள்பாவம், புத்தியபாவம், யோகஅமைப்புகள், திசைகள், திசா- சந்திப்பு ஆகியவற்றையும் முக்கியமாக அலசிப் பார்த்த பின்னரே விவாகம் செய்ய வேண்டும்.

செவ்வாய் தோஷம்

ஜாதகத்தில் லக்னம், ராசி, சுக்ரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமுள்ள ஜாதகமாகும். மூன்று இடங்களுக்கும் இருந்தால் முழுச் செவ்வாய் தோஷமாகும். இதில் ஆண், பெண் இருபாலருக்கும் தோஷமிருந்தாலும், தோஷம் இல்லாமல் இருந்தாலும், தோஷம் இருந்து பரிகாரம் பெற்றிருப்பினும் திருமணம் செய்து கொள்ளலாம்.

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து, மற்றொருவருக்கு இல்லாதிருந்தால் விவாகம் செய்யக் கூடாது. லக்ன ரீதியான செவ்வாய் தோஷம் கடுமையானதாகும்.

செவ்வாய் 12-ல் இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை பலவீனப்படும். 12-ம் இடம் புதன், சுக்ரன் வீடானால் தோஷம் குறையும்.

செவ்வாய் தோஷப் பரிகாரம்!

1. செவ்வாய் தோஷம் ஏற்பட்டு செவ்வாய் இருக்குமிடம் ஆட்சி, உச்ச வீடானால் தோஷம் குறையும்.

2. செவ்வாயுடன் குரு சேர்ந்தாலும் அல்லது பார்த்தாலும் தோஷம் குறையும்.

3. கடக சிம்ம லக்னங்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய்க்கு சுப ஆதிபத்யம் என்பதால் தோஷம் குறையும்.

4. செவ்வாய் தோஷம் ஏற்பட்டு, செவ்வாய் நட்பு ராசியில் இருப்பினும், செவ்வாய் நின்ற ராசிக்குடையவர் கேந்தி திரிகோணங்களில் நட்பு நிலையில் இருப்பினும் செவ்வாய் தோஷம் குறையும்.

5. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று முறையான பரிகாரங்கள் செய்வதுடன், செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் போன்ற நாட்களில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வந்தால் தோஷம் குறைந்து யோகம் வரத் தொடங்கும்.

6. செவ்வாய் தோஷம் ஏற்பட்டு செவ்வாயுடன் சுக்ரன் சனி போன்ற கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டால் தோஷம் கடுமையாக இருக்கும்.

எனவே திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது செவ்வாய் தோஷம் என்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே அவசியம் இதைப் பார்க்க வேண்டும்.

பத்துப்பொருத்தங்கள்  எவை  எவை?


1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்தீரி தீர்க்கம், 5. யோனி,
6. ராசி, 7. ராசி அதிபதி, 8. வசியம், 9. ரஜ்ஜூ, 10. வேதை

பெண்ணின் நட்சத்திரம் ரோஹிணி (ரிஷப ராசி)


.எ.     ஆணின் நட்சத்திரம், ராசி    அமையும்                   மொத்தப்
                                                                       பொருத்தங்கள்        பொருத்தம்


1     அஸ்வினி (மேஷம்)    - 2,3,4,5,6,7,9,10    - 8

2     பரணி (மேஷம்)    -1,2,4,5,6,7,9,10 -    8

3     கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்)    1,2,4,5,6,7,9,10 -    8

4     கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷபம்) -    1,2,4,5,6,7,9,10 -    8

5     ரோஹிணி (ரிஷபம்)    - பொருத்தம் உண்டு -    7

6     மிருகசீரிஷம் 1,2-ம்பாதம் (ரிஷபம்)    - 1,2,5,6,7,9,10 -    7

7     மிருகசீரிஷம் 3,4-ம் பாதம் (மிதுனம்)-    1,2,5,7,9,10 -    6

8    திருவாதிரை (மிதுனம்)     - ரஜ்ஜு தட்டும்  
  
9    புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம் (மிதுனம்)    - 1,2,3,5,7,9,10 - 7

10     புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்)    - 1,2,3,5,8,9,10 - 7

11    பூசம் (கடகம்)    2,5,8,9,10 -    5

12     ஆயில்யம் (கடகம்)    1,2,5,8,9,10 -     6

13    மகம் (சிம்மம்)    2,3,9,10 -    4

14     பூரம் (சிம்மம்)    1,2,4,9,10    - 5

15    உத்திரம் 1-ம் பாதம் (சிம்மம்)    - 1,2,4,5,9,10    - 6

16     உத்திரம் 2,3,4-ம் பாதம் (கன்னி) -    1,2,4,5,7,9,10    - 7

17     ஹஸ்தம் (கன்னி)    - ரஜ்ஜு தட்டும்   
   
18     சித்திரை 1,2-ம் பாதம் (கன்னி)    - 1,2,4,5,7,9,10    - 7

19    சித்திரை 3,4-ம் பாதம் (துலாம்) -    1,2,4,5,7,8,9,10 -  8

20    சுவாதி (துலாம்)    - ரஜ்ஜு தட்டும்   
   
21    விசாகம் 1,2,3-ம் பாதம் (துலாம்) - 1,2,3,4,5,7,8,9,10  -    9

22     விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்) -     1,2,3,4,5,6,7,9,10 -     9

23     அனுஷம் (விருச்சிகம்)    - 2,4,5,6,7,9,10 -     7

24     கேட்டை (விருச்சிகம்)    - 1,2,4,5,6,7,9,10 -     8

25     மூலம் (தனுசு)    - 2,3,4,5,7,9,10    - 7

26     பூராடம் (தனுசு)    - 1,2,4,5,7,9,10 -     7

27     உத்ராடம் 1-ம் பாதம் (தனுசு)    - 1,2,4,5,7,9,10    - 7

28     உத்ராடம் 2,3,4-ம் பாதம் (மகரம்)     - 1,2,4,5,7,9,10 -     7

29     திருவோணம் (மகரம்)    - ரஜ்ஜு தட்டும்
       
30     அவிட்டம் 1,2-ம் பாதம் (மகரம்)    1,2,4,5,6,7,9,10 -     8

31     அவிட்டம் 3,4-ம் பாதம் (கும்பம்)    1,2,4,5,6,7,9,10 -     8

32     சதயம் (கும்பம்) -    ரஜ்ஜு தட்டும்    -
   
33     பூரட்டாதி1,2,3-ம் பாதம்(கும்பம்)    1,2,3,4,5,6,7,9,10 - 9

34     பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்) - 1,2,4,5,6,7,9,10 - 8

35     உத்திரட்டாதி (மீனம்) - 2,4,5,6,7,9,10 -     7

36     ரேவதி (மீனம்) - 1,2,4,5,6,7,9,10 - 8

Wednesday, May 6, 2015

கணித அறிவை விருத்தி செய்ய ஓர் இணையத்தளம்!


____________________________________________________________
பல பேர் கணித அறிவில் சிறந்தவர்களாக விளங்குவார்கள் சிலபேருக்கு கணிதம் விளங்காமல் மிகவும் அவஸ்தைப்படுவார்கள். அப்படி அவஸ்த்தைப்படுபவர்களுக்காக உருவாக்கப் பட்டுள்ளது ஒரு இணையம். இதன் மூலம் நீங்கள் ஒவ்வொரு கணித section களையும் அறிந்து கொள்ளலாம்.சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கணித அகராதியான ஏ மேக்த்ஸ் டிக்ஷனரி பாட் கிட்ஸ் தான் அந்த தளம்.அகராதிகளில் பல வகை உண்டு இல்லையா? ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழியில் உள்ள சொற்களுக்கு அர்த்தம் பார்க்க உதவும் பொதுவான அகராதிகள் தவிர குறிப்பிட்ட துறைகளுக்கான அகராதியும் உண்டு.அந்த வகையில் கணித பாடத்தில் அடிப்படையான விஷயங்களுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்தஅகராதி உருவாக்கப்பட்டுள்ளது.
கணித பாடத்தில் ஏதாவது ஒரு பதம் சரியாக புரியவில்லை என்று வைத்து கொள்ளுங்கள் அதற்கான அர்தத்தை இந்த தளத்தில் தேடிப் பார்க்கலாம். அகராதியில் எப்படிபொருள் தேடுவோமோ அதே போல இந்த தளத்திலும் குறிப்பிட்ட சொல்லுக்கான பொருள் தேடலாம்.அகராதியை போலவே அகர வரிசையில் சொற்களுக்கான பட்டியல் இடம் பெற்றுள்ளது. விளக்கம் தேவைப்படும் சொல்லின் ஆரம்ப எழுத்தை இந்த பட்டியலில் பார்த்து கிளிக் செய்து பொருள் தெரிந்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு “டிகேட்” என்றால்என்ன என்றோ அல்லது “டிரில்லியன் “என்றால் என்ன என்ற சந்தேகமோ ஏற்பட்டால் அந்த சொல்லுக்கான பொருளை தெரிந்து கொள்ளலாம்.அதே போல “ஹெக்சகன்” என்பது எதை குறிக்கும் என்று குழப்பமாக இருந்தாலும் அதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.“மில்லினியம்” என்பதுஎதை குறிக்கும் “வென் டயகிராம்” என்றால் என்ன என்று சந்தேகம் ஏற்பட்டாலும் அவற்றுக்கான பொருளை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு கணித பாடம் தொடர்பான பதங்களுக்கு விளக்கம் தேவை என்றால் இந்த அகராதி கை கொடுக்கும்.
சுட்டிசுக்கான அகராதி இல்லையா,அதனால் இதில் விளக்கங்களும் சுவாரஸ்யமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. வழக்கமான அகராதி போல வெறும் அர்தத்தை மட்டும் தராமல் அந்த அர்தத்தை எளிதாக புரிய வைக்க கூடிய அழகான விளக்கமும் இடம் பெற்றுள்ளது. பல இடங்களில் இந்த விளக்கம் அனிமேஷன் வடிவிலும் இருப்பது தான் சிறப்பு.இந்த அனிமேஷன் விளக்கத்தால் அர்த்தமும் எளிதாக புரிவதோடு அந்த விளக்கத்தை தெரிந்து கொள்வதில் கூடுதல் சுவாரஸ்யமும் உண்டாகும்.உதாரணத்திற்கு டிரில்லியன் என்ற சொல்லையே எடுத்துக்கொள்வோம்.எண்ணிக்கையில் நூறு ,ஆயிரம்,லட்சம் போல மில்லியன்,பில்லியன்அதற்கடுத்து டிரில்லியன் வருகிறது. டிரில்லியன் என்றால் லட்சம் கோடி என்று பொருள். அதாவது மில்லியன் மில்லியன். இது எத்தனை பெரிது என்று எளிதாக உணர்த்துவதற்காக இந்த அகராதி டிரில்லியன் என்றால் பத்தின் பனிரெண்டு மடங்கு என்று விளக்கம் தருகிறது. அருகிலேயே 12 முறை வரைசையாக பத்தை பெருக்கி காட்டுகிறது. அதற்கு கீழே உள்ள பகுதியில் கிளிக் செய்தால் டிரில்லினனை நீங்களே எண்ணிக்கையில் எழுதிப்பார்க்கலாம். அதாவது பத்தை பணிரெண்டு முறை கிளிக் செய்தால் அந்த எண்ணிக்கை தோன்றுகிறது. இது ஒரு சின்னஞ்சிறிய அனிமேஷனாக தரப்பட்டுள்ளது.
இதே போல முப்பரிமாணம் என்னும் திரி டைமன்ஷனுக்கும் சின்ன அனிமேஷனோடு விளக்கம் தரப்பட்டுள்ளது.இந்த அனிமேஷன் விளக்கங்கள் பல இடங்களில் நாமே விளையாடி பார்க்க கூடிய புதிர் விளையாட்டு போல இருக்கிறது. டிஸ்டன்ஸ் என்ற சொல்லுக்கு இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான நீளம் என்று பொருள் தெரிந்து கொள்வதோடு அதற்கான உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ள பறவைகளுக்குஇடையிலான தூரத்தை நாமே ஸ்கேல் கொண்டு அளந்து பார்க்கலாம்.அதே போல பித்தகரஸ் பற்றிய விளக்கத்தில் வெவ்வேறு வகையான முக்கோணங்களை உருவாக்கி பார்க்கலாம். இப்படி எல்லா விளக்கங்களுமே அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய அழகான அனிமேஷன் விளக்கத்தோடு அமைந்துள்ளன. தேவையான இடங்களில்எண்கள் மற்றும் வரைபடத்துடனான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
ஆக கணித பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதோடு புதிய புதிய கணித பதங்களுக்கான அர்தத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் இந்த தளம் ஏற்படுத்துகிறது. எடுத்து கொண்ட விஷய்த்தை மிக எளிதாக புரிய வைத்து சுவாரஸ்யத்தையும் உண்டாக்குவதால் இந்த அக்ராதியில் உள்ள மற்ற சொற்களையும் வரிசையாக கிளிக் செய்து பார்க்கத்தோன்றும்.எல்லா பதங்களுமே எளிமையாக புரியும் வகையில் இருப்பதால் கணிதம் மீதான மிரட்சி நீங்க ஆர்வம் ஏற்பட்டு விடும்.
அகராதி தவிர கணித வரைப்பங்களுக்கான பகுதியும் இருக்கிறது.
http://www.amathsdictionaryforkids.com/
நன்றி,
சிஎன்
தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள
FB Page: https://www.facebook.com/thagavalguru1
மேலும் மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்..
https://www.facebook.com/groups/ThagavalGuru/
நட்புடன்,
TG அட்மின்

Sunday, January 18, 2015

FIRST FLIGHT 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக ரிக் வேதம்

1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில,....!!
இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல.
1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கறையில் ஒரு ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அதிசயித்தனர். இதுவே தற்போதிய காலத்து முதல் விமான கண்டுபிடிப்பு. நான் கூறும் இந்த செய்தி ஏதோ உளறல் போல் தோன்றினால் வலைதளத்தில் தகவல்களைத் தேடவும். மேலும் அக்டோபர் 18, 2004ல் வெளிவந்த டைம்ஸ் ஒஃப் இந்தியா நாளிதழின் செய்தியை இங்கே காணவும் (http://articles.timesofindia.indiatimes.com/…/27162445_1_pl…)
இவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் பழங்கால ரிக் வேதங்களில் தெரிவித்துள்ள முறைப்படி அந்த விமானத்தை வடிவமைத்தனர். விமான சாஸ்த்திரம் குறித்து 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக ரிக் வேதம் விளக்குகிறது. இன்றைய அறிவியலுக்கு புலப்படாத பல விஷயங்கள் அதில் புதைந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இவர்கள் பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமானம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய பழங்கால ஏடுகள் மூலம் இதை சாதித்தனர். உலகில் முதல் முதலில் பாதரசத்தை (Mercury) எரிவாயுவாக பயன்படுத்தியது இந்தியர்கள் தான். பாதரசத்தை எரிவாயுவாக பயன்படுத்துவது எவ்வாறு என்று இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த விமானம் முழுக்க முழுக்க பாதரசத்தை பயன்படுத்தும் Mercury Vortex Principle அடிப்படையைக் கொண்டது. இந்த Ion Mercury Vortex Engine ஆனது NASA வின் தீவிர ஆய்வில் உள்ளது.
இதைப்பற்றி தி ஹிஸ்டரி சேனல் (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஏன்ஸியன்ட் ஏலியன்ஸ் (Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது…
இவர் உருவாக்கிய அந்த ஆளில்லா பறக்கும் விமானம் மணிக்கு சுமார் 40000 கிமீ வேகத்தில் 1500 அடி சென்று விண்ணை முட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது. பொது மக்களோடு மக்களாக பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் அதை கண்டு வியந்தனர். இந்த செய்தி அப்போதிய “கேசரி” நாளிதழிலும் வெளியானது.
இவரது ஆய்வுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பரத்வாஜ முனியின் பழைய குறிப்புகளை கொடுத்துதவியது பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி (Pandit Shri Subbaraya Shastri). இவரது தூண்டுதலின் பேரில் தான் தால்பேட் அவர்கள் ஆய்வை தொடங்கினார். தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது பின் நாளில் திரு ஜோஸ்யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் ஹேட்சர் சில்ட்ரஸ் ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தால்பேடுக்கு தேவையான நிதியுதவியை மகாராஜ சயாஜிராவ் வழங்கினார். www.puradsifm.com
இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு பின் தால்பேடுக்கு கிடைக்கப்பட்ட வெகுமதி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது நடவடிக்கை. அவருடன் சாஸ்த்ரியும் கைது செய்யப்பட்டார். மகாராஜா பிரிட்டிஷ் அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பின் சில நாட்களில் தால்பேடின் மனைவி இறந்த பின் ஆய்வில் இருந்து ஓய்வு கொண்டார் தால்பேட். அவரும் இறந்த பின்னர் அவரது மிக முக்கிய குறிப்புகளை, அதன் மதிப்பறியாமல் சில ஜெர்மானியர்களிடம் விற்றுவிட்டனர் அவரது உறவினர்கள்.
இப்போதும் இதை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்?
(பின் குறிப்பு :- பரத்வாஜ முனிவர் வாழ்ந்த காலகட்டம் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு, இராமாயண காலம்)

Friday, January 9, 2015

HISTORY - பிரும்ம குப்தா கி.பி. [598-668]


தன் சொந்த வரலாறை மறந்த சமுதாயத்தால் புதிய வரலாறை படைக்க முடியாது.

பிரும்ம குப்தா கி.பி. [598-668]

ந்யூடநிர்க்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புவியீர்ப்பு சக்தி இருப்பதை கண்டறிந்தவர். ஜாமென்ட்ரி, அல்ஜீப்ரா போன்ற கணித முறைகளை கண்டு பிடித்தவர்.

இன்று ராஜஸ்தானில் பிம்மல் என்று அழைக்க படும் நகரில் அன்றய பெயர் பில்லமலா. பிறந்த பிரும்ம குப்தா ஹர்ஷ மன்னர்களது அவையில் முதன்மை வானியல் அறிங்கர் மற்றும் ஜோதிடராக இருந்தவர். உஜ்ஜயினியில் இருந்த பள்ளிகளில் இவர் இந்த கலைகளை கற்றதாக சரித்திர குறிப்புகள் உள்ளன. இவர் பிறந்த ஊரின் பெயரால் இவரை பில்லமாச்சாரியா என்றும் அழைப்பதுண்டு. இவர் பல நூல்கள் எழுதி உள்ளார். அதில் முக்கியமான இரண்டு நூல்கள்.

பில்ம சித்தாந்தம்- ஜாமென்ட்ரி, அல்ஜீப்ரா போன்ற பல கணித முறைகள் இதில் விளக்கப்பட்டு உள்ளன.

பிரம்மகுப்த சித்தாந்தம்- இது இவர் எழுதிய மற்றொரு பிரபலமான நூலாகும். முதன் முதலாக புவியீர்ப்பு குறித்த கருத்துக்கள் இதில் எழுதபட்டு உள்ளன.

இவரது நூல்களை கிபி 770இல் அல்பைசி என்கிற அறிங்கர். அரேபிய மொழியிலும் பின்னர் 1817இல் H.T கோல்புரூக் என்ற அறிங்கரால் அவை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கபட்டு உள்ளன.

நிறைய போதி தர்மர்கள் நமது நாட்டில் வாழ்ந்து உள்ளனர். இந்த உலகினில் இன்றும் தமது பெருமை, தொன்மை ஆகியவற்றை உணராத நாட்டு மக்கள் உள்ளனர் என்றால் அது நமது நாட்டு மக்கள் தான். இன்று சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற அறிங்கர்கள் ஒரு முன் உதாரணம். நாம் பிறந்த மண்ணில் தான் இவர்களும் பிறந்தார்கள். நம்மாலும் இவர்களை போல் சாதிக்க முடியும் என்று நாம் Inspirationனாக எடுத்து கொண்டு ஏதாவது ஒன்றில் சாதிக்க வேண்டும். முடிந்த அளவு நாம் நமது மண்ணில் பிறந்த ஞானிகள், விஞ்ஞானிகளை பற்றி குழந்தைகளுக்கு சொல்லுவோம். சில பெரியவர்களுக்கும். உலகில் பல மொழிகள் கற்று கொள்வது. பல உலக பிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல் சிறந்தது தான். ஆனால் நமது நாட்டு வரலாறு தெரியாமல் பிற நாட்டு வரலாறுகளை படிப்பதில் ஒரு பயனும் இல்லை.

2600 வருடங்களுக்கு முன்பு ப்லாஸ்டிக் ஸர்ஜரீ, இதய அறுவை சிகிச்சை செய்த சுஸ்ருதாவில் ஆரம்பித்து ஆரியபட்டா, பாஸ்கராசார்யா, வராஹ மிக்ரர், ராமன், சந்திர போஸ், G.D நாய்டு வரை நமது மண்ணில் பிறந்த விஞ்ஞானிகளின் வரலாறு அவர்களது கண்டு பிடிப்புகளை தெரிந்து கொண்டு பின்னர் நாம் மற்ற நாட்டு விஞ்ஞானிகளை பற்றியும் அவர்களது கண்டு பிடிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்வதில் ஒரு அர்த்தம் உள்ளது.

தன் சொந்த வரலாறை மறந்த சமுதாயத்தால் புதிய வரலாறை படைக்க முடியாது.

Thursday, December 25, 2014

அதென்ன 10 பத்து ஜோதிடம் பொருத்தம்............?



திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.

அதென்ன பத்து பொருத்தம்?

ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள்.
நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா?

1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.

5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.

9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.

10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.

இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.

பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.
---------------------------------------------------------------

Thursday, November 20, 2014

பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !

இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,
இது எப்படி சாத்தியமானது ? ? ! !
கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..
பெரிய கோயில் அளவுகோல்...
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்
1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது. !!

Wednesday, October 8, 2014

சித்தர் அறிவியல் மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன்



மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன் :
=================
கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .
இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவைக் காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டேக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்க எண்ணினேன்.
1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.
அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிடப்பட்டது. எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.
சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.
1 முழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )
சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்
1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)

மன வேகத்தை அளந்த முதல் ஆய்வாளன் தமிழன் :
=================

கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது . தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .

இதில் நீட்டலளவை (தூரத்தை) அளக்கும் ஒரு அட்டவனையை கண்டேன், அதில் "யோசனை" என்ற ஒரு அளவைக் காணமுடிகிறது . அதைப் பற்றிச் சற்றே யோசித்த வாரே இருந்தேன். அந்த யோசனை அளவை பற்றி ஒரு யோசனை கிட்டியது. இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டேக் கூறுகின்றனர். ஆக, யோசனை என்று ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்க எண்ணினேன்.

1850 ஆம் வருடம் "ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச" ( Hermann von Helmholtz ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார்.

அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (Speed of Thought). அவை 50 மீட்டர் /நொடி என்று அளவிடப்பட்டது. எனினும் வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் /நொடி என்ற அளவிலும் கடக்குமாம்.

சரி இவை ஒரு பக்கம் இருக்க அந்த யோசனை என்ற அளவையும் தற்போதிய கணித அளவையும் ஒப்பிட்டுப் பாப்போம்.

1 முழம் = 46.6666 சென்டிமீட்டர் (Cm )
1 சிறுகோல் = 559.9992 சென்டிமீட்டர் (Cm )
1 கூப்பிடுதூரம் = 279999.6 சென்டிமீட்டர் (Cm )
1 காதம் = 1119998.4 சென்டிமீட்டர் (Cm )
1 யோசனை = 4479993.6 சென்டிமீட்டர் (Cm )

சென்டிமீட்டரை கிலோமீட்டராக மாற்றினால்

1 யோசனை = 44.799936 கிலோமீட்டர் (இது காலத்தை குறிக்காத அளவு)


இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்

50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்

180 km/hr

எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,

180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .

45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை

எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.

இதே போல்,

நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )

இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.

இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.

இப்பொழுது அவர்கள் கூறியபடி 50 மீட்டர்/நொடி என்று கால அளவுடன் கணக்கிட்டால்
50 மீட்டர்/நொடி என்பதை கிலோமீட்டர் கணக்கில் பார்த்தல்
180 km/hr
எனினும் இவர்கள் அறிவித்த இந்த அளவு உணர்ந்து, சிந்தித்து, முடிவெடுத்து, செயல்படுதல் என்ற நான்கு செயல்பாட்டை ஒருகிணைந்த அளவே. இங்கு யோசனை என்ற அளவு சிந்தித்தல் என்ற பகுதியில் வரும். ஆகவே,
180 / 4 = 45 கிலோமீட்டர் / hr என்றே வருகிறது .
45 கிலோமீட்டர் / hr = 1 யோசனை
எனவே காலத்தைக் குறிக்காத ஒரு யோசனையின் அளவு இவர்கள் அறிவித்த அளவுடன் பொருந்துகிறது.
இதே போல்,
நூற்று ஐம்பதாயிரம் யோசனை = 1 கதிரவநியங்குகிற மட்டு (6719990.4 km)
இரண்டு கதிரவநியங்குகிற மட்டு = 1 விண்மீன் மண்டலம் (13439980.8 Km )
இந்த அளவுகளும், நவீன அறிவியலில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகளிலும் வேறுபாடு இருந்தாலும். முதல் முயற்சி என்றும் தமிழனின் சொந்தமாக இருக்கிறது. இன்றளவும் ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் முதல் வெற்றி காண்பது கடினந்தான்.
இப்படி ஆயிரம் அதிசயங்களைப் புதைத்து வைத்துருக்கும் நம் தமிழரின் அறிவின் அதிசயத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்.

Thursday, August 7, 2014

1 குழி = 576 sq.ft (24 * 24)



comments:

1 kuzhi = 1.3223 cents and not 44 cents.....
1 kuzhi = 144 sqft
1 குழி = 576 sq.ft (24 * 24)


1 kuzhi is 576 Sq.ft (1.3223 cents)
 and 1/4th kuzhi is 144 Sq.ft in Tamilnadu. 
In kerala it is 144. ....
In the Presidency of Madras, India, 19th century, a unit of land area = 576 square feet. Also romanized as coozwy. Source:Charles Stewart Crole.
The Chingleput, Late Madras, District. A Manual compiled under the orders of the Madras Government.
Madras: Printed at the Lawrence Asylum Press, Mount Road, by W. H. Moore, 1879.
Page 59.
100 குழி = 1 kaani
100 குழி-1மா.   20 ma = 1 veli,
300 குழி-1ஏக்கர்்
3 குழி- 1சென்ட்

1குழி-144 ச அடிகள்