Showing posts with label கற்றுக்கொள். Show all posts
Showing posts with label கற்றுக்கொள். Show all posts

Tuesday, October 17, 2017

GOLD COIN DETAILS IN TAMIL




















Sunday, July 24, 2016

ஆலயமும் அர்ச்சகர்களும்...



ஆலயத்தைப் பற்றிய இவ்விஷயத்தில் அர்ச்சகரைப் பற்றியும் சொல்ல வேண்டியது அவசியம்.

இறைவனுக்கும், பக்தனுக்கும் நடுவில் தரகரைப் போல அர்ச்சகர் எதற்கு என்று ஒரு சில அறிவு ஜீவிகள் கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் ஆலயத்தில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் தரகர் என்பவர் ஒரு பொருளை வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையில் செயல்படுபவரே. அப்படியானால் ஆலயத்தில் விற்கப்படும் பொருள் என்ன? விற்பவர் யார்? என்பதெல்லாம் தெரியவில்லை.

மற்றொரு சாரார் அர்ச்சகர்கள் தாங்கள் உலக நன்மையின் பொருட்டு பூஜை செய்கிறோம் என்று கூறுகிறார்கள் அவர்கள். எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும் எங்களுக்காக அர்ச்சகர்கள் பூஜை செய்ய வேண்டாம். நாங்கள் செய்து கொள்கிறோம் என்கிறார்கள். இவர்கள் உலகம் என்பது இவர்கள் மட்டுமே என்று நினைப்பார்கள் போலும்.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற காரணத்தினாலோ என்னவோ? ஆனால் ஆலய வழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்கும் ஆகமங்கள் அர்ச்சகரைப் பற்றியும்,  ஆலய வழிபாட்டின் நோக்கத்தை பற்றியும் தெளிவாக விளங்குகின்றன.

ஆலய வழிபட்டின் நோக்கம்.

सर्वेशाम् रक्ष्णार्थाय ग्रामाधिशु विसेशध:
स्थापिधम् विढिना लिन्गम् सुरैर्वा मुनिबिर्नरै:
स्वयमुध्बूथ लिन्ग्न्ज प्रथिमान्जैस्वराथ्मकम्
थथ्परार्थम् समाक्याथम् सर्वेशाम् आथ्मन: फलम्.

சர்வேஷாம் ரக்ஷணார்த்தாய, க்ராமாதிஷு விசேஷத:.
ஸ்தாபிதம் விதிநா லிங்கம், சுரைர்வா முநிபிர்நரை:.
ஸ்வயமுத்பூத லிங்கஞ்ச ப்ரதிமாஞ்சேஸ்வராத்மகம்..

பொருள்.

{உலகிலுள்ள} அனைவரின் நல்வாழ்வின் பொருட்டு கிராமம் {நகரம், பட்டணம்} போன்ற இடங்களில் விஷேசமான முறையில் தேவர்களாலோ, முனிவர்களாலோ, அல்லது மனிதர்களாலோ முறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தினையோ. தான் தோன்றியாகிய ஸ்வயம்பு லிங்கத்தினையோ, இறை தன்மை பொருந்திய சிலைகளையோ {பூஜை செய்வது} என்பது பரார்த்தம் எனப்படும். {அந்த பரார்த்த பூஜையின்} பலன் அனைத்து உயிர்களுக்கும் உரியதாகும்.

அர்ச்சகர் யார்? அவரது பணி என்ன?

சிவாலயங்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஆதிசைவர்கள், சிவப்ராஹ்மணர், சிவேதியர், சிவ விப்ரர், சிவாசார்யர் போன்ற பல பெயர்கள் உண்டு. அவர்கள் பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜை செய்தவர்கள் பொருட்டு சிவபெருமானால் நேரடியாக தீக்ஷிக்கப் பெற்ற கௌசிகர் முதலான ரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள் என்றும் பூஜையானது அவர்களாலேயே செய்யப்பட வேண்டும் என்பதும் ஆகமங்களும் பெரிய புராணமும் கூறும் செய்தி.

“பரார்த்த யஜனம் கார்யம், சிவ விப்ரைஸ்து நித்யச:”_சிவாகமம்.

परार्थम् यजनम् कार्यम्, सिव विप्रैस्थु निथ्यस:

பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜையானது ஆதிசைவரான சிவவிப்ரராலேயே தினமும் செய்யப்பட வேண்டும்.

எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே,
அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதற்சைவராம் முனிவர்._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}

தெரிந்துனரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம்
வருங்காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்,
விரும்பியவர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன அப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம் புகழும் பெற்றியதோ._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}

மேற்கூறிய கருத்துக்களின் மூலம் அர்ச்சகர் தரகர் அல்ல என்பதும் அவர் சிவபெருமானின் ஆணையால் தான் உலக நன்மைக்கான பரார்த்த பூஜைகளைச் செய்கிறார் என்பதும் தெளிவாக விளங்குகிறது.

இனி ஆலய பூஜையில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

திருகோவிலுள் ப்ரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் {விக்ரஹங்கள்} மூன்று காரணங்களால் தெய்வத்தன்மையை அடைகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன.

“ அர்சகஸ்ய ப்ரபாவேந அர்சநஸ்யாதி சாயநாத், ஆபிருப்யாச்ச பிம்பாநாம் சிலாபவதி தேவகி"

अर्शकस्य प्रभावेन, अर्शस्याथि सायानाथ्
आभिरुप्यास्स बिम्बानाम्, सिलाभवथि धेवकि.

அர்ச்சகருடைய மனோபாவனையாலும், அர்ச்சனையின் சிறப்பாலும், விக்ரஹத்தின் அழகினாலும் சிலையானது தெய்வத்தன்மை அடைகிறது.

இறைவனது ஸாந்நித்யம் நிலை பெறுவதற்கு ஆச்சார்யனின் தவ வலிமையே காரணம் என்கிறது.

மற்றொரு வாக்யம்

“அர்சகஸ்ய தபோயோகாத், தேவ சாந்நித்ய ம்ருச்சதி:”

अर्शस्य थपोयोगाथ्, धेव सान्निढ्य म्रुछथि.

மூர்த்திகளை {விக்கிரஹங்களை} எண்ணை தேய்த்து, நீராட்டி, வஸ்த்திரம் சாற்றி தன் குழந்தைகயைப் போல கவனிக்கும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பல்வேறு நேரங்களில் எவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

“ஆவாஹனாதி காலேது ஆசார்யோ குரு ரூப த்ருத்
அபிஷேகாத்யலங்காரே ஆசார்யோ மாத்ரு ரூபவாநு,
நைவேத்ய தூப தீபாதௌ அர்ஸ்நே மந்த்ர ரூபவாநு
ஸ்தோத்ர ப்ரதக்ஷிணே காலே ஆசார்யோ பக்த ரூபவாநு. _சிவாகமம்.

आवाहनाथि कालेधु आशार्यो गुरु रूप ध्रुक्
अभिशेकाध्यलन्गारे थ्वाशार्यो माथ्रु रूपवानु
नैवेध्य प्रधक्षिणे कालेथ्वाशार्यो भक्थ रूपवानु.

ஆவாஹனம் முதலான காலத்தில் ஆச்சார்யன் குரு ரூபமாகவும், அபிஷேக, அலங்கார காலத்தில் தாயைப் போலவும், நைவேத்யம் முதலான சமயத்தில் மந்த்ர ரூபமாகவும், ஸ்தோத்ரம், மற்றும் ப்ரதக்ஷிண காலத்தில் பக்தனைப்போலவும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பாவித்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாக்யமோ இன்னும் ஒரு படி மேலாக 7 வித லிங்கங்களில் அர்ச்சகனும் ஒன்று என்று கூறுகிறது.

“ கோபுரே சிகரே த்வாரே, ப்ராகாரே பலி பீடகே.
அர்ச்சகே மூல லிங்கேச சப்த லிங்கஸ்ய தர்ஸநம்.”

गोबुरे सिखरे ध्वारे प्राकारे बलिपूटके
अर्श्के मूल लिन्गेश सप्थ लिन्गस्य धर्स्नम्.

அதையே "அர்ச்சகஸ்து ஹரஸ்ஸாக்ஷாத்" அதாவது அர்ச்சகர் சிவபெருமானே என்று ஒரு பழமொழி தெளிவு படுத்துகிறது.

இவ்வளவு பெருமை கொண்ட அர்ச்சகர்கள் இன்று கூலிக்கு வேலை செய்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அது அவர்கள் பிழை அல்ல. காலத்தின் கோலமே என்பதையும் அதன் காரணத்தையும் கீழ்க்காணும் திருக்குறள் உணர்த்துகிறது.

“ ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்,
காவலன் காவான் எனின்"_திருக்குறள்.

இதையே பாரதியும் சொன்னான்

“ பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்த்திரங்கள்" என்று. அது உண்மையே என்பதை நம்மால் நிதர்சநமாக காணமுடிகிறது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் ஆண்டவனே துணை என்பதை உணர்ந்து அர்ச்சகர்கள் தன் கடமையை செவ்வனே செய்யட்டும்.

Tuesday, July 12, 2016

காலபைரவ கர்மா








ஒருவர் இறந்துவிட்டால் அவர் உடலை விட்டு உயிர் பிரிவது என்பது 11லிருந்து 14 நாட்கள் வரையில் மெதுவாகவே நடைபெறுகிறது. அதனால்தான் நம் கலாச்சாரத்தில் இறப்பு சடங்குகள் அத்தனை நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு யோகி இறக்கும்போது தன் உடலில் இருக்கும் எல்லா வாயுக்களும் ஒரே நேரத்தில் உடலைவிட்டு பிரியுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் சாதாரணமாக இறப்பவர்களுக்கு மரணம் பகுதி பகுதியாகத்தான் நிகழ்கிறது, எனவேதான், இந்தக் கலாச்சாரத்தில், இறந்தவர்களுக்காக வெளியிலிருந்து ஒருவர் சில செயல்முறைகள் செய்து, அந்த உயிர் நல்லவிதமாகப் பிரிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்த சடங்குகள் அதன் தன்மையை இழந்து வருகின்றன.
எனவே இறந்தவர்களுக்கான இந்த சடங்குகளை முறைப்படி செய்ய ஈஷா யோகா மையம் முயற்சி எடுத்து வருகிறது, இவை வெறும் சடங்குகளாக, வியாபார நோக்கத்துடன் இல்லாமல், அந்த உயிருக்கு உண்மையாக எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதாக இருக்கும். ஆரம்பத்தில் சில பிரம்மச்சாரிகளையும் சன்னியாசிகளையும் சத்குரு அவர்கள் இதற்காக தயார் செய்தார்கள். தற்போது விருப்பமுள்ள மற்றவர்களுக்கும் இது கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. வாழும்போது தேவையான விழிப்புணர்வும் பயிற்சிகளும் இருந்திருந்தால், இறக்கும்போது அவர்களுக்கு எந்த சடங்குகளும் தேவையில்லை. அவர்களே தங்களைப் பார்த்துக் கொள்வார்கள், ஆனால் அந்த பயிற்சியும் விழிப்புணர்வும் இல்லாதபோது இத்தகைய சேவை மக்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த செயல்முறையைத்தான் காலபைரவ கர்மா என்கிறோம்.
இது இறந்தவர்களுக்கான ஒரு செயல்முறை. அவர்கள் செல்லும் புதிய இடம் ஒரு சிறந்த இடமாக இருப்பதை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டிருக்கிறது. ஒருவர் இறந்தவுடன் தன் நிர்ணயிக்கும் மனதையும் இழந்துவிடுகிறார். எனவே இறக்கும்போது எந்தவிதமான உந்துதல்கள் இருந்ததோ, அவை இப்போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பல மடங்காகப் பெருகும். அவருடைய உந்துதல் இனிமையான உணர்வுடன் இருந்தால், அந்த இனிமை உணர்வு பல மடங்காகும். உந்துதல் சோகமான உணர்வுடன் இருந்தால், சோகமான உணர்வு பல மடங்காகும். எனவேதான், ஒரு மனிதர் இறக்கும்போது, அவரைச் சுற்றி ஒரு இனிமையான சூழ்நிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது.
எனவே அந்த கடைசி நேரத்திலோ, அல்லது அதற்கடுத்த சில குறிப்பிட்ட காலத்திற்குள்ளோ, நாம் அந்த உயிரை அணுகி அது தனக்குள் இனிமையை உணருமாறு பார்த்துக் கொள்ள முடியும். ஒரு சொட்டு இனிமையை அவருக்குள் புகுத்திவிட்டால் கூட, சரி தவறு என நிர்ணயிக்கும் மனம் இல்லாத காரணத்தால், அந்த இனிமை இப்போது அவருக்குள் இலட்சம் மடங்காக பெருகிவிடும். எனவே அந்த உயிருக்குள் இனிமையை ஊட்டுவதைத்தான் நாம் இப்போது ஒரு செயல்முறையாக செய்கிறோம். இதுதான் காலபைரவ கர்மாவின் அடிப்படை. காலபைரவ சாந்தி என்னும் செயல்முறையும் இருக்கிறது. அதை இறந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த செயல்முறைகளுக்காக லிங்கபைரவி திருக்கோவில் சக்தித்தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காலபைரவ கர்மா
காலபைரவ கர்மா, ஒருவர் இறந்த குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட வேண்டிய செயல்முறையாகும்.

தேவையானவை:
இறந்தவரின் புகைப்படம், உடை (உள்ளாடை மற்றும் சேலை தவிர) இந்த செயல்முறைக்கு தேவை. இறந்தபோது அணிந்திருந்த உடை வேண்டாம். இரத்த சம்பந்தமான உறவினர் ஒருவர் இந்த செயல்முறையின் போது அருகில் இருக்க வேண்டும். இந்த செயல்முறைகள் லிங்கபைரவி திருக்கோவிலில் நடைபெறும். பிறகு உறவினர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். (தவிர்க்க முடியாத காரணத்தால் உறவினர்கள் இந்த செயல்முறைக்கு வர இயலவில்லை என்றால் மையத்திற்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்ய இயலும்)

நிபந்தனைகள்:
இயற்கை மரணமாக இருந்தால் 50 வயதுக்கு மேல்- 14 நாட்களுக்குள்
50 வயதுக்கு கீழ் 48 நாட்களுக்குள்
இயற்கை மரணமாக இல்லாமல் விபத்து, தற்கொலை போன்று இறந்திருந்தால் 33 வயதுக்கு மேல் – 48 நாட்களுக்குள்:
33 வயதுக்கு கீழ் – 90 நாட்களுக்குள்
காலபைரவ சாந்தி
காலபைரவ சாந்தி ஒவ்வொரு அமாவாசை அன்றும் நள்ளிரவில் நடைபெறும். (See our Lunar Calendar)

தேவையானவை:
இறந்தவரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி, அனுப்புநரின் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவை இந்த செயல்முறைக்கு தேவை. நன்கொடையை லிங்கபைரவி கோவில் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது “ஷிலீக்ஷீவீ சீஷீரீவீஸீவீ ஜிக்ஷீust” என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாகவோ செலுத்தலாம். காலபைரவ சாந்தியை வருடத்திற்கு ஒருமுறை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது. 10 வருடங்களுக்கு சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். வருட சாந்தி மகாளய அமாவாசையன்று செய்யப்படும்.

பகிர்வுகள்:
நான் என்னுடைய ஒரே மகனை இழக்க நேரிட்டது. என் வாழ்நாள் முழுவதும் நான் வறுமையில், பணத்திற்காக போராடினேன். ஆனால் இன்றோ என்னிடம் எல்லாம் இருக்கிறது, ஆனால் அவன் இல்லை. எனக்கு இது மிகப் பெரிய இழப்பு. நான் தனிமையாய் உணர்கிறேன். இந்த சமயத்தில்தான் நான் என் தம்பி மூலம் காலபைரவ கர்மாவைப் பற்றி அறிந்தேன். எனக்கு அதில் பெரிய நம்பிக்கை இல்லை என்றாலும் என் மகன் அமைதியாய் இருப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். காலபைரவ கர்மா செய்ததன் மூலமாக அவன் ஆத்மா சாந்தி அடைந்ததாய் உணர்கிறேன். எனக்குள்ளும் நான் இப்போது அமைதியாகி விட்டேன். என் குடும்பத்தினர் கூட என்னில் மிகுந்த மாற்றத்தை காண்கின்றனர்.
– திருமதி. அருணா கந்தசாமி, கரூர்

நாங்கள் எங்கள் தாயாரின் ஆத்மா சாந்தியடைய விரும்பினோம். அதனால் காலபைரவ கர்மா செய்வதற்காக ஈஷா யோகா மையம் சென்றோம். அங்கு சடங்குகளை செய்து கொண்டிருந்த போது என் உடலும் மனமும் லேசாவதை உணர்ந்தேன். ஒருவிதமான அதிர்வு என்னுள் ஏற்படுவதை உணர முடிந்தது. பொதுவாக ஒரு ஆண் குழந்தைதான் இறுதி சடங்கை செய்ய முடியும். ஆனால் இங்கோ பெண்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்குகின்றனர். என் தாய்க்கு ஏதோ ஒன்றை செய்த திருப்தியை நான் அடைந்தேன்.
– திருமதி. எல். இலக்ஷ்மி, சென்னை

Friday, April 22, 2016

எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம்

தமிழ்நாட்டின் கால்நடை சந்தைகள் : 



எந்த  நாளில் எங்கு  சென்றால் நாட்டு பசுவை  வாங்கலாம்  என்ற  தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது முடிந்தால்  பயன்படுத்தி  கொள்ளுங்கள் நண்பர்களே 
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,  இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், நம் தெய்வங்கள் (நாட்டு பசுக்கள் )வெட்ட  படுவதற்கு  விற்பனை  செய்யும்  இடம் முடிந்தால்  தடுத்து  பாரம்பரியத்தை  காத்திடுங்கள். 

வ.எண்-- மாவட்டம்-- தாலுக்கா--சந்தை கூடும் இடம்--சந்தை நாள் 
1-- கோயமுத்தூர்-- அவினாசி--அவினாசி--ஆண்டு தோறும் (ஏப்ரல் 15-25) 
2-- கோயமுத்தூர்-- கோயமுத்தூர் (வடக்கு)--துடியலூர்--திங்கள் 
3-- கோயமுத்தூர்-- கோயமுத்தூர் (தெற்கு)--பூளூவபட்டி--வெள்ளி 
4-- கோயமுத்தூர்-- மேட்டுப்பாளையம்--காரமடை--ஆண்டுதோறும் (பிப்ரவரி 11-22) 
5-- கோயமுத்தூர்-- மேட்டுப்பாளையம்--மேட்டுப்பாளையம்--- 
6-- கோயமுத்தூர்-- பல்லடம்--பல்லடம்--திங்கள் 
7-- கோயமுத்தூர்-- பொள்ளாச்சி--பொள்ளாச்சி--வியாழன் 
8-- கோயமுத்தூர்-- திருப்பூர்--பெரமநல்லூர்--சனி 
9-- கோயமுத்தூர்-- திருப்பூர்--மங்கலம்--சனி 
10-- கோயமுத்தூர்-- உடுமலைபேட்டை--பூலவாடி--வெள்ளி 
11-- கோயமுத்தூர்-- உடுமலைபேட்டை--உடுமலைபேட்டை--திங்கள் 
12-- கோயமுத்தூர்-- அவினாசி--அன்னூர்--- 
13-- கூடலூர்-- ---சின்னசேலம்--வியாழன் 
14-- கூடலூர்-- ---குள்ளஞ்சவாடி--ஞாயிறு 
15-- கூடலூர்-- ---மூங்கில்துரைப்பட்டு--ஞாயிறு 
16-- கூடலூர்-- ---தியாகதுர்கம்--சனி 
17-- கூடலூர்-- சிதம்பரம்--சேத்தியாதோப்பு--புதன் 
18-- கூடலூர்-- சிதம்பரம்--புவனகிரி--புதன் 
19-- கூடலூர்-- கூடலூர்--காரமணிக்குப்பம்--திங்கள் 
20-- கூடலூர்-- கட்டுமனனார்கோவில்--லால்பேட்டை--செவ்வாய் 
21-- கூடலூர்-- திட்டகுடி--திட்டகுடி--புதன் 
22-- கூடலூர்-- விருதாச்சலம்--வேப்பூர்--வெள்ளி 
23-- கூடலூர்-- விருதாச்சலம்--விருதாச்சலம்--வியாழன் 
24-- கூடலூர்-- விருதாச்சலம்--அத்தியூர்--செவ்வாய் 
25-- தர்மபுரி-- --- பல்லாபள்ளி--திங்கள் 
26-- தர்மபுரி-- ---பெட்டாரைய சுவாமி--ஆண்டு தோறும் 13-16) 
27-- தர்மபுரி-- ---குடிச்செட்லு--ஆண்டு தோறும் (பிப்ரவரி 23-25) 
28-- தர்மபுரி-- ---பாத்தகோட்டா--ஆண்டு தோறும் 4 நாட்கள் 
29-- தர்மபுரி-- தென்கன்னிகோட்டை--கீழமங்கலம்--ஞாயிறு 
30-- தர்மபுரி-- தென்கன்னிகோட்டை--மடகோண்டப்பள்ளி--ஆண்டு தோறும் (பிப்ரவரி 18-20) 
31-- தர்மபுரி-- தர்மபுரி--நல்லாம்பள்ளி--செவ்வாய் 
32-- தர்மபுரி-- ஹரூர்--கோபிநாத்தம்பட்டி--புதன் 
33-- தர்மபுரி-- ஹரூர்--கம்பியநல்லூர்--வெள்ளி 
34-- தர்மபுரி-- ஒசூர்--பாகலூர்--வியாழன் 
35-- தர்மபுரி-- ஒசூர்--ஒசூர்--புதன் 
36-- தர்மபுரி-- ஒசூர்--சப்பரப்பள்ளி--ஆண்டு தோறும் (பிப்ரவரி- மார்ச்) 
37-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--ஒரப்பம்--புதன் 
38-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--குண்டரப்பள்ளி--வெள்ளி 
39-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--காவேரிப்பட்டினம்--சனி 
40-- தர்மபுரி-- பாலக்கோடு--கரிமங்கலம்--செவ்வாய் 
41-- தர்மபுரி-- பப்பிரேடிப்பட்டி--கடத்தூர்--ஞாயிறு 
42-- தர்மபுரி-- போச்சம்பள்ளி--போச்சம்பள்ளி--ஞாயிறு 
43-- தர்மபுரி-- உத்தன்கரை--சிங்காரப்பேட்டை--திங்கள் 
44-- தர்மபுரி-- உத்தன்கரை--உத்தன்கரை--திங்கள் 
45-- திண்டுக்கல்-- ---நரிக்கால்பட்டி--வியாழன் 
46-- திண்டுக்கல்-- திண்டுக்கல்--அம்மாப்பட்டி--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15) 
47-- திண்டுக்கல்-- திண்டுக்கல்--ஆத்தூர்--வெள்ளி 
48-- திண்டுக்கல்-- நிலக்கோட்டை--நிலக்கோட்டை--சனி 
49-- திண்டுக்கல்-- ஒட்டன்சத்திரம்--எஸ்.ஆத்திக்கோம்மை--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15) 
50-- திண்டுக்கல்-- ஒட்டன்சத்திரம்--விருப்பாச்சி--வியாழன் 
51-- திண்டுக்கல்-- பழனி--தொப்பம்பட்டி--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 10) 
52-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--வடமதுரை--ஞாயிறு 
53-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--வடசுந்தர்--ஞாயிறு 
54-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--கலவர்ப்பட்டி--ஞாயிறு 
55-- ஈரோடு-- ---கன்னபுரம்--ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரம் 
56-- ஈரோடு-- ---சலிப்புதூர்--திங்கள் 
57-- ஈரோடு-- பவானி--அந்தியூர்--திங்கள் 
58-- ஈரோடு-- பவானி--குருநாட்டசாமிகோவில் மாட்டுத்தாவரி--ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5-15 
59-- ஈரோடு-- பவானி--வெள்ளித்திருப்பூர்--ஆண்டு தோறும் மே 
60-- ஈரோடு-- தாராபுரம்--தாராஊரன்--வியாழன் 
61-- ஈரோடு-- தாராபுரம்--கன்னிவாடி--வெள்ளி 
62-- ஈரோடு-- தாராபுரம்--குண்டடம்--சனி 
63-- ஈரோடு-- தாராபுரம்--முலனூர். ஆர்.எஸ்.--புதன் 
64-- ஈரோடு-- ஈரோடு--முனிசிபல் காலனி--தினசரி சந்தை 
65-- ஈரோடு-- ஈரோடு--சிவகிரி--வெள்ளி 
66-- ஈரோடு-- ஈரோடு--ஈரோடு--திங்கள் 
67-- ஈரோடு-- கோபிசெட்டிபாளையம்--மொடச்சூர்--வியாழன் 
68-- ஈரோடு-- கோபிசெட்டிபாளையம்--சிறுவலூர்--செவ்வாய் 
69-- ஈரோடு-- காங்கயம்--முத்தூர்--சனி 
70-- ஈரோடு-- காங்கயம்--நத்தக்கடையூர்--புதன் 
71-- ஈரோடு-- காங்கயம்--காங்கேயம்--திங்கள் 
72-- ஈரோடு-- பெருந்துறை--வலயப்பாளையம்--- 
73-- ஈரோடு-- பெருந்துறை--பெருந்துறை--ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரம் 
74-- ஈரோடு-- பெருந்துறை--குன்னத்தூர்--ஞாயிறு 
75-- ஈரோடு-- சத்தியமங்கலம்--புஞ்சைபுயிளம்பட்டி--வியாழன் 
76-- காஞ்சிபுரம்-- ---வலஜாபேட்டை--திங்கள் 
77-- காஞ்சிபுரம்-- செய்யாறு--அணைக்கட்டு--வெள்ளி 
78-- காஞ்சிபுரம்-- மதுரான்தகம்--அச்சரபாக்கம்--ஞாயிறு 
79-- காஞ்சிபுரம்-- தாம்பரம்--பல்லாவரம்--வெள்ளி 
80-- காஞ்சிபுரம்-- திருக்கல்குன்றம்--திருக்கழுக்குன்றம்--வியாழன் 
81-- காஞ்சிபுரம்-- உத்திரமேரூர்--மனம்பதி--வியாழன் 
82-- கன்னியாகுமரி-- ---மார்த்தாண்டம்--செவ்வாய் 
83-- கன்னியாகுமரி-- ---திங்கள் சந்தை--திங்கள் 
84-- மதுரை-- ---செக்கனூரனி--- 
85-- மதுரை-- மதுரை (வடக்கு)--வீரபாண்டி--வருடாந்திரம் 8 நாட்கள் 
86-- மதுரை-- மதுரை (தெற்கு)--திருப்பரங்குன்றம்--வெள்ளி 
87-- நாகப்பட்டினம்-- ---செம்பகராயநல்லூர்--சனி 
88-- நாகப்பட்டினம்-- ---திருத்துறைப்பூண்டி--வெள்ளி 
89-- நாகப்பட்டினம்-- சீர்காழி--கொல்லிடம்--திங்கள் 
90-- நாமக்கல்-- ---கொங்கனபுரம்--சனி 
91-- நாமக்கல்-- ---மோர்பாளையம்--வெள்ளி 
92-- நாமக்கல்-- நாமக்கல்--புதன்சந்தை--புதன் 
93-- நாமக்கல்-- ராசிபுரம்--முத்துக்கள்ளிப்பட்டி--தைபூசம் (ஆண்டு தோறும் 10 நாட்கள்) 
94-- நாமக்கல்-- திருச்செங்கோடு--எடப்பாடி--புதன் 
95-- நாமக்கல்-- திருச்செங்கோடு--பள்ளக்காபாளையம்--திங்கள் 
96-- பெரம்பலூர்-- ---மீன்சுருட்டி--ஞாயிறு 
97-- பெரம்பலூர்-- அரியலூர்--அரியலூர்--ஞாயிறு 
98-- பெரம்பலூர்-- உடையார்பாளையம்--உடையார்பாளையம்--சனி 
99-- புதுக்கோட்டை-- ஆழங்குடி--ஆலங்குடி--வியாழன் 
100-- புதுக்கோட்டை-- அரந்தாங்கி--அறந்தாங்கி--செவ்வாய் 
101-- புதுக்கோட்டை-- மனமேல்குடி--மனமேல்குடி--ஞாயிறு 
102-- புதுக்கோட்டை-- புதுக்கோட்டை--புதுக்கோட்டை--வெள்ளி 
103-- புதுக்கோட்டை-- திருமயம்--பொன்னமரவாதிக்கரையூர்--திங்கள் 
104-- இராமநாதபுரம்-- பரமக்குடி--பரமக்குடி--வியாழன் 
105-- சேலம்-- ---செட்டிப்பட்டி--- 
106-- சேலம்-- ---சின்னப்பம்பட்டி--ஞாயிறு 
107-- சேலம்-- ---சின்னதிருப்பதி--சனி 
108-- சேலம்-- ---மீனம்பள்ளி--- 
109-- சேலம்-- ---முத்துநாயக்கண்பட்டி--வெள்ளி 
110-- சேலம்-- ---சேவாபேட்டை--செவ்வாய் 
111-- சேலம்-- ஆத்தூர்--ஆத்தூர்--ஞாயிறு 
112-- சேலம்-- ஆத்தூர்--பொத்தநாயக்கன்பாளையம்--வியாழன் 
113-- சேலம்-- எடபாடி--எடப்பாடி--- 
114-- சேலம்-- கங்காவல்லி--வீரகனூர்--- 
115-- சேலம்-- மேட்டூர்--மேச்சேரி--புதன் 
116-- சேலம்-- மேட்டூர்--கொளத்தூர்--வெள்ளி 
117-- சேலம்-- மேட்டூர்--நங்கவள்ளி--- 
118-- சேலம்-- ஓமலூர்--ஓமலூர்--சனி 
119-- சேலம்-- ஓமலூர்--தாரமங்கலம்--வியாழன் 
120-- சேலம்-- சேலம்--பனமரத்துப்பட்டி--திங்கள் 
121-- சேலம்-- சேலம்--பாப்பாரபட்டி--- 
122-- சேலம்-- சங்ககிரி--மெக்.டொனால்ட் செளத்ரி--ஆண்டு தோறும் - அக்டோபர் 
123-- சேலம்-- வாலப்பாடி--அயோத்தியாப்பட்டணம்--திங்கள் 
124-- சேலம்-- வாலப்பாடி--பேலூர்--திங்கள் 
125-- சிவகங்கை-- தேவகோட்டை--தேவகோட்டை--ஞாயிறு 
126-- சிவகங்கை-- மானாமதுரை--மானாமதுரை--வெள்ளி 
127-- சிவகங்கை-- மானாமதுரை--திருப்புவனம்--புதன் 
128-- சிவகங்கை-- சிவகங்கா--சிவகங்கை--புதன் 
129-- தஞ்சாவூர்-- ---மொடுக்கூர்--ஞாயிறு 
130-- தஞ்சாவூர்-- கும்பகோணம்--நீரத்தநல்லூர்--வருடம் - ஏப்ரல் 20 நாட்கள் 
131-- தஞ்சாவூர்-- ஒரத்தநாடு--திருவோணம்--ஞாயிறு 
132-- தஞ்சாவூர்-- பட்டுக்கோட்டை--பட்டுக்கோட்டை--திங்கள் 
133-- தஞ்சாவூர்-- பேரவூரணி--பேராவூரணி--செவ்வாய் 
134-- தஞ்சாவூர்-- திருயைாறு--திருக்காட்டுப்பள்ளி--வியாழன் 
135-- தேனி-- ஆண்டிப்பட்டி--உசிலம்பட்டி--- 
136-- தேனி-- பெரியகுளம்--டி.வாடிப்பட்டி--- 
137-- திருவள்ளூர்-- ---திருவோட்டியூர்--- 
138-- திருவள்ளூர்-- ---நெல்வாய்--புதன் 
139-- திருவள்ளூர்-- உத்துக்கோட்டை--உத்துக்கோட்டை--தினசரி சந்தை 
140-- திருவண்ணாமலை-- ---அம்மாபாளையம்--திங்கள் 
141-- திருவண்ணாமலை-- ---பழகையூர்--வெள்ளி 
142-- திருவண்ணாமலை-- ---நாச்சியார்கோவில்--செவ்வாய் 
143-- திருவண்ணாமலை-- ---தெப்பநாண்டால்--சனி 
144-- திருவண்ணாமலை-- ஆரணி--ஒன்னுபுரம்--வியாழன் 
145-- திருவண்ணாமலை-- ஆரணி--ஆரணி--ஞாயிறு 
146-- திருவண்ணாமலை-- ஆரணி--தேவிகாபுரம்--திங்கள் 
147-- திருவண்ணாமலை-- சேன்கம்--செங்கம்--புதன் 
148-- திருவண்ணாமலை-- சேன்கம்--தண்டாரம்பேட்டை--சனி 
149-- திருவண்ணாமலை-- செய்யாறு--செய்யாறு--ஞாயறு 
150-- திருவண்ணாமலை-- செய்யாறு--கொறுக்காதூர்--திங்கள் 
151-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--மல்லவாடி--ஞாயிறு 
152-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--திருவண்ணாமலை--புதன் 
153-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--தன்டாரை--புதன் 
154-- திருவண்ணாமலை-- வந்தவாசி--தெல்லார்--ஞாயறு 
155-- திருவண்ணாமலை-- வந்தவாசி--பெரனமல்லூர்--திங்கள் 
156-- திருவண்ணாமலை-- வந்தவாசி--மருதாடு--புதன் 
157-- திருவாரூர்-- மன்னார்குடி--மன்னார்குடி--செவ்வாய் 
158-- திருவாரூர்-- திருத்துறைப்பூண்டி--முத்துப்பேட்டை--புதன் 
159-- திருநெல்வேலி-- ---எட்டையபுரம்--சனி 
160-- திருநெல்வேலி-- ---கழுகுமலை--செவ்வாய் 
161-- திருநெல்வேலி-- ---கயத்தாறு--வியாழன் 
162-- திருநெல்வேலி-- ---மேலப்பாளையம்--வியாழன் 
163-- திருநெல்வேலி-- ---நாகலாபுரம்--வியாழன் 
164-- திருநெல்வேலி-- ---பாம்புகோயில்--- 
165-- திருநெல்வேலி-- ---புடியம்புத்தூர்--புதன் 
166-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--பாப்பாகுடி--ஞாயிறு 
167-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--முக்கூடல்--வெள்ளி 
168-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--கடயம்--திங்கள் 
169-- திருநெல்வேலி-- நங்குநேரி--நங்குநேரி--ஞாயிறு 
170-- திருநெல்வேலி-- பாளையம்கோட்டை--வி.ரெட்டியார்பட்டி--- 
171-- திருநெல்வேலி-- பாலட்நஜிட்டு--சீவலபேரி--வருடம்(ஆகஸ்ட்-செப்டம்பர்) (14-30) 
172-- திருநெல்வேலி-- ராதாபுரம்--வள்ளியூர்--- 
173-- திருநெல்வேலி-- ராதாபுரம்--திசயன்வில்லை--- 
174-- திருநெல்வேலி-- சங்கரன்கோவில்--திருவேங்கடம்--- 
175-- திருநெல்வேலி-- சிவகிரி--இனம்கோவில்பட்டி--திங்கள் 
176-- திருநெல்வேலி-- தென்காசி--நைனார் அகரம்--- 
177-- திருநெல்வேலி-- தென்காசி--பாவூர்சத்திரம்--- 
178-- திருச்சிராப்பள்ளி-- ---உப்பிடமங்கலம்--ஞாயிறு 
179-- தூத்துக்குடி-- ---மைனர் அக்ரஹாரம்--சனி 
180-- வேலூர்-- ---காமதிலி--சனி 
181-- வேலூர்-- ---ராணிபேட்டை--வெள்ளி 
182-- வேலூர்-- ---விம்மியம்பதி--வியாழன் 
183-- வேலூர்-- அரக்கோணம்--நெமிலி--திங்கள் 
184-- வேலூர்-- காட்பாடி--சோலிங்கர்--புதன் 
185-- வேலூர்-- திருப்பத்தூர்--நாட்ராம்பள்ளி--திங்கள் 
186-- வேலூர்-- திருப்பத்தூர்--ஜோலார்பேட்டை--புதன் 
187-- வேலூர்-- வானியம்பாடி--வானியம்பாடி--சனி 
188-- வேலூர்-- வேலூர்--ஒடுக்கத்தூர்--வெள்ளி 
189-- வேலூர்-- வேலூர்--பொய்கை--வியாழன் 
190-- வேலூர்-- வேலூர்--ஆம்பூர்--வெள்ளி 
191-- விழுப்புரம்-- ---செட்டிபாளையம்--வெள்ளி 
192-- விழுப்புரம்-- ஜின்ஜீ--ஆல்வார்பேட்டை--ஞாயிறு 
193-- விழுப்புரம்-- ஜின்ஜீ--மேலோகடகூர்--செவ்வாய் 
194-- விழுப்புரம்-- ஜின்ஜீ--வாலதி--ஞாயிறு 
195-- விழுப்புரம்-- திண்டிவனம்--கோட்டேரிபட்டை--ஞாயிறு 
196-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--கண்டச்சிபுரம்--சனி 
197-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--முகையூர்--வியாழன் 
198-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--தீவனூர்--வெள்ளி 
199-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--வீரபாண்டி--வியாழன் 
200-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--திருக்கோயிலூர்--செவ்வாய் 
201-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--மணலூர்பேட்டை--சனி 
202-- விழுப்புரம்-- உளுந்தூர்பேட்டை--உளுந்தூர்பேட்டை--- 
203-- விழுப்புரம்-- உளுந்தூர்பேட்டை--மடப்பட்டு--ஞாயிறு 
204-- விழுப்புரம்-- விழுப்புரம்--செங்கீதமங்கலம்--ஞாயிறு 
205-- விழுப்புரம்-- விழுப்புரம்--பிரம்மதேசம்--புதன் 
206-- விருதுநகர்-- ---கன்னிசேரிபுதூர்--ஆண்டு தோறும் - மே-ஜீன் 15 நாட்கள் 
207-- விருதுநகர்-- கரியப்பட்டை--காரியாபட்டி--சனி 
208-- விருதுநகர்-- கரியப்பட்டை--தொனுக்கள்--வியாழன் 
209-- விருதுநகர்-- ராஜபாளையம்--இராஜபாளையம்--வியாழன் 
210-- விருதுநகர்-- திருச்சுழி--வீரசோழம்--திங்கள்

Thursday, April 14, 2016

ஆண்டுப் பெயர்கள் தமிழில்



1 நற்றோன்றல் - பிரபவ

2 உயர்தோன்றல் - விபவ

3 வெள்ளொளி - சுக்கில

4 பேருவகை - பிரமோதூத

5 மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி

6 அயல்முனி - ஆங்கிரச

7 திருமுகம் - ஸ்ரீமுக

8 தோற்றம் - பவ

9 இளமை - யுவ

10 மாழை - தாது

11 ஈச்சுரம் - ஈஸ்வர

12 கூலவளம் - வெகுதான்ய

13 முன்மை - பிரமோதி

14 நேர்நிரல் - விக்ரம

15 விளைபயன் - விஜ_

16 ஓவியக்கதிர் - சித்ரபானு

17 நற்கதிர் - சுபானு

18 தாங்கெழில் - தாரண

19 நிலவரையன் - பார்த்திப

20 விரிமாண்பு - விய

21 முற்றறிவு - சர்வசித்

22 முழுநிறைவு - சர்வதாரி

23 தீர்பகை - விரோதி

24 வளமாற்றம் - விக்ருதி

25 செய்நேர்த்தி - கர

26 நற்குழவி - நந்தன

27 உயர்வாகை - விசய

28 வாகை - சய

29 காதன்மை - மன்மத

30 வெம்முகம் - துன்முகி

31 பொற்றடை - ஏவிளம்பி

32 அட்டி - விளம்பி

33 எழில்மாறல் - விகாரி

34 வீறியெழல் - சார்வரி

35 கீழறை - பிலவ

36 நற்செய்கை - சுபகிருது

37 மங்கலம் - சோபகிருது

38 பகைக்கேடு - குரோதி

39 உலகநிறைவு - விசிவாவசு

40 அருட்டோற்றம் - பராபவ

41 நச்சுப்புழை - பிலவங்க

42 பிணைவிரகு - கீலக

43 அழகு - சௌமிய

44 பொதுநிலை - சாதாரண

45 இகல்வீறு - விரோதிகிருது

46 கழிவிரக்கம் - பரிதாபி

47 நற்றலைமை - பிரமாதீச

48 பெருமகிழ்ச்சி - ஆனந்த

49 பெருமறம் - இராட்சச

50 தாமரை - நள

51 பொன்மை - பிங்கள

52 கருமைவீச்சு - காளயுத்தி

53 முன்னியமுடிதல் - சித்தார்த்தி

54 அழலி - ரௌத்ரி

55 கொடுமதி - துன்மதி

56 பேரிகை - துந்துபி

57 ஒடுங்கி - ருத்ரோத்காரி

58 செம்மை - ரக்தாட்சி

59 எதிரேற்றம் - குரோதன

60 வளங்கலன் - அட்சய

Thursday, April 7, 2016

ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா !!!. இயற்கையே மருந்து

🙏🌻



ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.

பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

 அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. 

மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. 

திரு மணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. 

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. 

இது ஒரு நல்ல பயிற்சி.

கம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. 

மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.

இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். 

தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. 

சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். 

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். 

வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.

வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. 

சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. 

இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

ஊஞ்சல்கள் பலவகை:

சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.

நவீன வகை ஊஞ்சல்கள் “சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.

தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.

மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது. 

மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. 

குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. 

காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.

கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. 

ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.

"இயற்கையே மருந்து" !

Saturday, January 9, 2016

சிவ மந்திரமும் அத்ன் பலன்களும்



நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்

அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்

வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.

அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்

ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்

ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்

ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.

நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.

உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.

கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்

சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.

நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.

சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க -சந்தான பாக்யம் ஏற்படும்.

சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார்

உங்றீம்
சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.

அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.

ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.

லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.

ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும்.

ஓம் ஸ்ரீறியும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.

ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.

ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

ஒரு லட்சம் தடவை சொன்னால் தான் பலன்கள் அபரிவிதமாக இருப்பதை நீங்கள் உனரலாம்!

Sunday, December 13, 2015

இயற்கையில உள்ள காற்று எப்படி உருவாகுது ?



முதல் காற்று எப்படி உருவானதுன்னு யோசிப்போம்.

அது புவி பிறந்த காலம். சுமார் 4,540 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து 4,000 மில்லியன் வருடங்களுக்கு முன் வரை. அந்தக் காலத்தை ஹேடியன் காலம்னு (Hadean eon) சொல்வோம்

அதுக்கு முன்னாடி புவித்தோற்றக் காலத்தை மில்லியன் ஆண்டுகளில் வரிசைப்படுத்துனதைப் பார்த்துருவோமா.

1. Hadean Eon (4500-4000)
2. Archean Eon (4000-2500)
..........a. Eoarchean Era (4000-3600)
..........b. Paleorchean Era (3600-3200)
..........c. Mesoarchean Era (3200-2800)
..........d. Neorchean Era (2800-2500)
3. Proterozoic Eon (2500-500)
..........a. Paleoproterozoic Era (2500-1600)
..........b. Mesoproterozoic Era (1600-1000)
..........c. Neoproterozoic ERa (1000-541)
4. Phanerozoic Eon (500-Present)
..........a. Paleozoic Era (541-252.2)
..........b. Mesozoic Era (252-66)
..........c. Cenozoic Era (66-Present)

அந்த ஹேடியென் காலத்துலயே காற்று உருவாகி விட்டது. ஆனா, இப்ப இருக்குற மாதிரியான காற்று இல்லை. அப்பொழுதெல்லாம் பூமிக்கு அப்படியொன்றும் வலிமையான ஈர்ப்பு விசை கிடையாது. அதனால் தண்ணீர் மூலக்கூறுகள் கூட தப்பி விண்வெளிக்குச் சென்றுவிடும். ஹைட்ரஜன், ஹீலியம் இவற்றையெல்லாம் சொல்லவே வேண்டாம். ஒரே கொதிப்பும் வெடிப்பும்தான் பூமியில் அப்பொழுது. எங்கு பார்த்தாலும் எரிமலைகள்தான். குழம்புகள்தான். மெதுவாக இறுகத் துவங்கின.

இந்தக் காலத்தில்தான் பூமிக்கு ஒரு பெருமோதல் ஒன்னு நிகழ்ந்தது. இதை Great Impact Hypothesis-GIHனு சொல்வாங்க. செவ்வாய் கிரகம் அளவு பெரிதான ஏதோ ஒன்று (Theia-a protoplanet) பூமியை மோதிச் சென்றிருக்கவேண்டும். அதன் காரணமாக லேசாக இறுகிக்கொண்டிருந்த பூமிப் பந்தின் ஒரு சிறு பகுதி சிதறுண்டு போய் தனித்து இறுகி இன்றைக்கு அது நிலவாக இருக்கின்றது. 

அப்படி பூமியிலிருந்து சிதறுண்டு போனால் பூமியில் ஒரு பகுதி குறைவு பட்டிருக்க வேண்டுமல்லவா? அதுதான் இன்றைய பசிபிக் பெருங்கடல். இந்தோனேஷியாவில் இருந்து கொலம்பியா வரையில் இதன் தொலைவு19,800 கிலோமீட்டர்கள். இது நிலவின் விட்டத்தை விட 5 மடங்கு அதிகம். மொத்தப் பரப்பளவு 165.2 மில்லியன் சதுரகிலோமீட்டர்கள். நாம் அறிந்த ஆழம் 10லிருந்து 12 கிலோ மீட்டர் வரைக்கும். அந்த இடத்திற்குப் பெயர்தான் மரியானா அகழி (Mariana Trench).

சரி, அப்படியொரு மோதல் நிகழ்ந்ததும் இறுகிக்கொண்டிருந்த பொருட்களெல்லாம் மோதலினால் ஏற்பட்ட அதிவெப்பத்தில் மீண்டும் குழம்புகளாகின. எப்படியென்றால், குழம்புகளின் சிறுபகுதி ஆவியாகிப் போகுமளவிற்கு. அதிஉயர் வெப்பம். பாறைகள் ஆவியாகிப் பூமியைச் சூழ்ந்திருந்தன. இரண்டாயிரம் வருடங்களில் அந்தப் பாறை ஆவிகள் குளிர்ந்து படிந்தன. அப்பொழுது எடைகூடிய கார்பன்டையாக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் நீராவிகள் தோன்றின. எடைகூடிய கார்பன்டையாக்சைடு வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக நீராவிகள் அழுத்தப்பட்டு நீராக மாறி பெருங்கடல்கள் உருவாகின. அப்பொழுதே ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினம் இருந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.

அடுத்து வரும் காலம் ஆர்க்கியென் காலம். இந்தக் காலத்தில்தான் Cyanobacteria என்ற நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெற்று உயிர் வாழ்ந்திருக்கின்றன. விடுபொருளாக ஆக்சிஜனை வெளியேற்றியிருக்கின்றன. இவையே பூமிக்கு ஆக்சிஜனை அதிகளவில் தந்திருக்கின்றன. இந்த நுண்ணுயிரிகளின் படிமங்கள் Stromatolites படிமங்களாகக் கடற்படுகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு காலமும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் ப்ரொட்டரஸோவிக் (Proterozoic) காலத்தில்தான் ஆக்சிஜன் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. காரணம் புவியின் முதல் மேம்படுத்தப்பட்ட ஒரு செல் உயிரினம் Eukaryote.

மேற்சொன்ன இந்த மூன்று காலங்களையும் ஒரே தொகுப்பாக Precambrian Supereon என்பார்கள். (தமிழில் இதனை நீள்காலம் எனலாமா?) ஏனெனில், இக்காலங்களில் புவி மாறுதல்கள் மிக மெதுவாகவே நிகழ்ந்து வந்தன. மெதுவாக என்றால்... நம் எதிர்பார்ப்பில் மெதுவாக; அடுத்த காலமான ஃபெனெரஸோவிக் (Phanerozoic) காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒப்பிடும்பொழுது அது மிக மெதுவாக என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த நீள்காலத்தில்தான், Cyanobacteria நுண்ணுயிரியால் புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தாவரங்கள் தோன்றி ஒளிச்சேர்க்கையில் ஆக்சிஜனை வெளிவிட்டதும் அந்த நீள்காலத்தில்தான்.

தற்போதைய வளிமண்டலத்தில் வாயுக்களின் இருப்பு
..........நைட்ரஜன் - 78.084%
..........ஆக்சிஜன் - 20.947%
..........ஆர்கான் (argon) - 0.934%
..........கார்பன்டையாக்சைடு - 0.033%
..........இதர வாயுக்கள் - 0.002%

காற்றில் ஆக்சிஜனின் சதவீதம் 19.5க்குக் கீழே போனால் நமக்கு உளவியல் பிரச்சனைகள் ஏற்படும். 16 சதவீதத்திற்குக் கீழே போனால், நம் வாழ்க்கை மட்டுமல்ல ஏனைய உயிரிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறிதான்.

இப்பொழுது எப்படி இந்தக் கலவை நிலைப்படுத்தப்படுகின்றது என்றால், நம் வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக நைட்ரஜன் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. தாவரங்கள் மிருகங்கள் அழிந்துபட்டு மண்ணில் மட்கிப்போகும்பொழுது அல்லது எரிக்கப்படும்பொழுது எரிமலை வெடிப்புகள் என்றெல்லாம். ஆனால், அப்படி அதிகரிக்கும் நைட்ரஜன், சில உயிரினங்கள் அதனை உட்கொண்டும், மழை மற்றும் பனிப்பொழிவுகள் காற்றிலுள்ள நைட்ரஜனை கழுவித் துடைத்தும் சமன் செய்யப்பட்டு விடுகின்றது.

ஆக்சிஜன் அளவு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்பொழுது வெளிவிடப்படுகின்றது. அதே சமயத்தில் பெரும்பாலான உயிரினங்கள் அதனை உட்கொண்டு சமன் செய்து விடுகின்றன. 

உயிரினங்கள் வெளிவிடும் கார்பன்டையாக்சைடு தாவரங்களால் உட்கொள்ளப்பட்டு சமன்செய்யப்படுகின்றது.

இயற்கையில உள்ள காற்று எப்படி உருவாகுது ?



முதல் காற்று எப்படி உருவானதுன்னு யோசிப்போம்.

அது புவி பிறந்த காலம். சுமார் 4,540 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து 4,000 மில்லியன் வருடங்களுக்கு முன் வரை. அந்தக் காலத்தை ஹேடியன் காலம்னு (Hadean eon) சொல்வோம்

அதுக்கு முன்னாடி புவித்தோற்றக் காலத்தை மில்லியன் ஆண்டுகளில் வரிசைப்படுத்துனதைப் பார்த்துருவோமா.

1. Hadean Eon (4500-4000)
2. Archean Eon (4000-2500)
..........a. Eoarchean Era (4000-3600)
..........b. Paleorchean Era (3600-3200)
..........c. Mesoarchean Era (3200-2800)
..........d. Neorchean Era (2800-2500)
3. Proterozoic Eon (2500-500)
..........a. Paleoproterozoic Era (2500-1600)
..........b. Mesoproterozoic Era (1600-1000)
..........c. Neoproterozoic ERa (1000-541)
4. Phanerozoic Eon (500-Present)
..........a. Paleozoic Era (541-252.2)
..........b. Mesozoic Era (252-66)
..........c. Cenozoic Era (66-Present)

அந்த ஹேடியென் காலத்துலயே காற்று உருவாகி விட்டது. ஆனா, இப்ப இருக்குற மாதிரியான காற்று இல்லை. அப்பொழுதெல்லாம் பூமிக்கு அப்படியொன்றும் வலிமையான ஈர்ப்பு விசை கிடையாது. அதனால் தண்ணீர் மூலக்கூறுகள் கூட தப்பி விண்வெளிக்குச் சென்றுவிடும். ஹைட்ரஜன், ஹீலியம் இவற்றையெல்லாம் சொல்லவே வேண்டாம். ஒரே கொதிப்பும் வெடிப்பும்தான் பூமியில் அப்பொழுது. எங்கு பார்த்தாலும் எரிமலைகள்தான். குழம்புகள்தான். மெதுவாக இறுகத் துவங்கின.

இந்தக் காலத்தில்தான் பூமிக்கு ஒரு பெருமோதல் ஒன்னு நிகழ்ந்தது. இதை Great Impact Hypothesis-GIHனு சொல்வாங்க. செவ்வாய் கிரகம் அளவு பெரிதான ஏதோ ஒன்று (Theia-a protoplanet) பூமியை மோதிச் சென்றிருக்கவேண்டும். அதன் காரணமாக லேசாக இறுகிக்கொண்டிருந்த பூமிப் பந்தின் ஒரு சிறு பகுதி சிதறுண்டு போய் தனித்து இறுகி இன்றைக்கு அது நிலவாக இருக்கின்றது. 

அப்படி பூமியிலிருந்து சிதறுண்டு போனால் பூமியில் ஒரு பகுதி குறைவு பட்டிருக்க வேண்டுமல்லவா? அதுதான் இன்றைய பசிபிக் பெருங்கடல். இந்தோனேஷியாவில் இருந்து கொலம்பியா வரையில் இதன் தொலைவு19,800 கிலோமீட்டர்கள். இது நிலவின் விட்டத்தை விட 5 மடங்கு அதிகம். மொத்தப் பரப்பளவு 165.2 மில்லியன் சதுரகிலோமீட்டர்கள். நாம் அறிந்த ஆழம் 10லிருந்து 12 கிலோ மீட்டர் வரைக்கும். அந்த இடத்திற்குப் பெயர்தான் மரியானா அகழி (Mariana Trench).

சரி, அப்படியொரு மோதல் நிகழ்ந்ததும் இறுகிக்கொண்டிருந்த பொருட்களெல்லாம் மோதலினால் ஏற்பட்ட அதிவெப்பத்தில் மீண்டும் குழம்புகளாகின. எப்படியென்றால், குழம்புகளின் சிறுபகுதி ஆவியாகிப் போகுமளவிற்கு. அதிஉயர் வெப்பம். பாறைகள் ஆவியாகிப் பூமியைச் சூழ்ந்திருந்தன. இரண்டாயிரம் வருடங்களில் அந்தப் பாறை ஆவிகள் குளிர்ந்து படிந்தன. அப்பொழுது எடைகூடிய கார்பன்டையாக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் நீராவிகள் தோன்றின. எடைகூடிய கார்பன்டையாக்சைடு வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக நீராவிகள் அழுத்தப்பட்டு நீராக மாறி பெருங்கடல்கள் உருவாகின. அப்பொழுதே ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினம் இருந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.

அடுத்து வரும் காலம் ஆர்க்கியென் காலம். இந்தக் காலத்தில்தான் Cyanobacteria என்ற நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெற்று உயிர் வாழ்ந்திருக்கின்றன. விடுபொருளாக ஆக்சிஜனை வெளியேற்றியிருக்கின்றன. இவையே பூமிக்கு ஆக்சிஜனை அதிகளவில் தந்திருக்கின்றன. இந்த நுண்ணுயிரிகளின் படிமங்கள் Stromatolites படிமங்களாகக் கடற்படுகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு காலமும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் ப்ரொட்டரஸோவிக் (Proterozoic) காலத்தில்தான் ஆக்சிஜன் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. காரணம் புவியின் முதல் மேம்படுத்தப்பட்ட ஒரு செல் உயிரினம் Eukaryote.

மேற்சொன்ன இந்த மூன்று காலங்களையும் ஒரே தொகுப்பாக Precambrian Supereon என்பார்கள். (தமிழில் இதனை நீள்காலம் எனலாமா?) ஏனெனில், இக்காலங்களில் புவி மாறுதல்கள் மிக மெதுவாகவே நிகழ்ந்து வந்தன. மெதுவாக என்றால்... நம் எதிர்பார்ப்பில் மெதுவாக; அடுத்த காலமான ஃபெனெரஸோவிக் (Phanerozoic) காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒப்பிடும்பொழுது அது மிக மெதுவாக என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த நீள்காலத்தில்தான், Cyanobacteria நுண்ணுயிரியால் புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தாவரங்கள் தோன்றி ஒளிச்சேர்க்கையில் ஆக்சிஜனை வெளிவிட்டதும் அந்த நீள்காலத்தில்தான்.

தற்போதைய வளிமண்டலத்தில் வாயுக்களின் இருப்பு
..........நைட்ரஜன் - 78.084%
..........ஆக்சிஜன் - 20.947%
..........ஆர்கான் (argon) - 0.934%
..........கார்பன்டையாக்சைடு - 0.033%
..........இதர வாயுக்கள் - 0.002%

காற்றில் ஆக்சிஜனின் சதவீதம் 19.5க்குக் கீழே போனால் நமக்கு உளவியல் பிரச்சனைகள் ஏற்படும். 16 சதவீதத்திற்குக் கீழே போனால், நம் வாழ்க்கை மட்டுமல்ல ஏனைய உயிரிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறிதான்.

இப்பொழுது எப்படி இந்தக் கலவை நிலைப்படுத்தப்படுகின்றது என்றால், நம் வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக நைட்ரஜன் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. தாவரங்கள் மிருகங்கள் அழிந்துபட்டு மண்ணில் மட்கிப்போகும்பொழுது அல்லது எரிக்கப்படும்பொழுது எரிமலை வெடிப்புகள் என்றெல்லாம். ஆனால், அப்படி அதிகரிக்கும் நைட்ரஜன், சில உயிரினங்கள் அதனை உட்கொண்டும், மழை மற்றும் பனிப்பொழிவுகள் காற்றிலுள்ள நைட்ரஜனை கழுவித் துடைத்தும் சமன் செய்யப்பட்டு விடுகின்றது.

ஆக்சிஜன் அளவு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்பொழுது வெளிவிடப்படுகின்றது. அதே சமயத்தில் பெரும்பாலான உயிரினங்கள் அதனை உட்கொண்டு சமன் செய்து விடுகின்றன. 

உயிரினங்கள் வெளிவிடும் கார்பன்டையாக்சைடு தாவரங்களால் உட்கொள்ளப்பட்டு சமன்செய்யப்படுகின்றது.