Showing posts with label SOCIAL DEVELOPMENT NEWS. Show all posts
Showing posts with label SOCIAL DEVELOPMENT NEWS. Show all posts

Thursday, November 2, 2017

ஏன் வழுகட்டாயமாக மோடி அவர்களை இஸ்லாமிய எதிரியாகவே உருவாக்குகிறார்கள்???

பிஜேபி, இந்துதுவா என்றால் இஸ்லாமியருக்கு எதிரி, கிருஸ்தவத்திற்கு விரோதி? இந்தவிதம் மக்கள் மத்தியில் இருக்கும் கருத்து பற்றி உங்கள் பதில் என்ன மாரிதாஸ்?{கேள்வி: கார்த்திக்}
இது மிக சிக்கலான கேள்வி.
இந்தியா என்ற இந்த மண்ணை, இதன் வரலாற்று புனிதத்தை தனது உயிருக்கும் மேலாக நேசிக்கும் எவரும் இந்து தான். இந்த மண்ணின் புனிதம் உணர்ந்த எவரும் இந்துவே. இந்துகளின் தேசமாக பாகபிரிவினை நடந்து பாக்கிஸ்தான் கொடுத்துவிட்ட பின்பும் இதுவே இந்து,இந்தியா என்பதற்கு அடையாளம்.
இந்துதுவா என்றால் "இஸ்லாமிய வெறுப்பு என்றும் , கிருஸ்தவர்கள் அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்" என்ற தோற்றத்தை திட்டமிட்டு இந்த கம்யூனிஸ்ட், திராவிட கழகங்கள், காங்கிரஸ் இவர்கள் நடத்தும் பத்திரிக்கைகள் பரப்பும் உண்மைக்கு மாறான செய்தி..
RSS என்பது இந்துதுவாவாதிகள் தான். அவர்கள் ஏன் பத்திரிக்கைகள் முன்வருவது இல்லை? எல்லா மீடியாக்களையும் விட்டு ஏன் விலகி நின்றார்கள்? நேரு புகழ் பாடவும், கம்யூனிஸ்ட் புகழ்பாடவும் தான் புதிய சுதந்திரம் வாங்கிய இந்தியாவில் ஆட்கள் இருந்தனர். நேருவின் விருப்பமானவர்கள் அனைவரும் தான் எல்லா மேல்தட்டு பதவியிலும் அமர்ந்தார்கள்.
கோட்சே காந்தியை கொலை செய்த பழியை அப்படியே இந்துதுவாவின் மீது போட்டு மொத்தமாக அழுத்தி ஒடுக்கினார் நேரு. அவருக்கு அதில் அரசியல் ரீதியாக வெற்றிகிடைத்தது. ஒருபக்கம் நேதாஜி ஆதரவாளர்களை ஒடுக்கிவிட்டு , இன்னொருபக்கம் இந்துதுவாவை ஒடுக்க , காங்கிரஸ் என்ற கட்சியை தன் குடும்ப சொத்தாக மாற்றி இந்தியாவை அனைத்து தளத்திலும் தனது ஆதரவாளார்களை அமர்த்த பத்திரிக்கைகளும் நேரு புகழ்பாட???? என்ன இங்கே நியாயம் கிடைக்கும்???
எனவே அன்று முதல் இன்று வரை மீடியாவை விட்டு முழுமையாக விலகி நிற்கிறார்கள் இந்துதுவாவாதிகள். பிஜேபி கட்சி வழியாக சிலர் பேசினாலும். பிஜேபியே கூட முழு இந்துதுவாவாதியாக அங்கிகரீக்க மாட்டார்கள் இந்துதுவாவை முழுமையாக நேசிக்கும் பலர். ஒரு அரசியல் இயக்கமாக பிஜேபியை அங்கிகரீக்கிறார்கள் அவ்வளவே.
------------------------------------
பிரதமர் மோடி?
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (Union Minority Affairs Ministry)வெளிப்படையாகவே புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் மோடி அரசு பதிவிக்கு வந்த பின்னர் எப்படியாக திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று தகவல் கிடைக்கும். தாராளமாக தேடி படிக்கவும்.
காங்கிரஸ் அரசு 2012-13ல் 3135 கோடி ஒதுக்கிய இந்த துறைக்கு மோடி அரசு 3,827.25கோடி ஒதுக்கீடு செய்கிறது. அதாவது நீங்கள் சொல்லும் ஹிந்துதுவாவாதி எதற்கு நிதியை அதிகபடுத்த வேண்டும்?
இந்த நிதி கொண்டு Maulana Azad Education Foundationக்கு தேவையான நிதி , National Minorities Development & Finance Corporation (NMDFC) மூலம் சிறுபான்மை மக்கள் தொழில் தொடங்க உதவித்தொகை , Azad National Fellowship மூலம் சிறுபான்மையினருக்கு உதவிதொகைகள் , Interest Subsidy on Educational Loans for overseas studies என்று ஆரம்பித்து Pre-matric scholarship, Post-matric scholarship, Merit-Cum-means scholarship வரை சில நுறு திட்டங்கள் கொண்டு சிறுபான்மையினர் கல்வி , வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் முன்னேற்றம் கொண்டுவர எதற்கு உதவ வேண்டும்?
மேலும் தகவல் வேண்டும் என்றால் தாராளமாக Union Minority Affairs Ministry தொடர்பு கொள்ளுங்கள் , அதன் websiteசென்று பாருங்கள். என்ன இப்போ மோடி வந்தவுடன் குறைத்துவிட்டார் என்று குறை கூறிவிட முடியும்????
அட அவருக்கு தான் இஸ்லாமியரை பிடிக்காதே !!! ??????
78.03% படிப்பறிவு பெற்ற அந்த மாநிலத்தில் இஸ்லாமியர்கள் படிப்பறிவு சதவீதம் இன்று எவ்வளவு தெரியுமா 80%சதவீதம். Sachar Committee Report தேடி பாருங்கள் , அது வெளியாகும் போது குஜராத் முதல்வராக இதே நரேந்திர மோடி அவர்கள் தான் முதல்வராக இருந்தார், தேடி படியுங்கள்.9.1 % சதவீதம் மக்கள் தொகையுள்ள இஸ்லாமியர்கள் High Posts, Officer Posts என்று அரசு வேலைகளில் 8.5 % முதல் 9.9 % வரை பதவியில் இருந்தனர். அதாவது எந்த அளவு மக்கள் தொகை உள்ளார்களோ அதே அளவு அரசு வேலைவாய்ப்பிலும் , பதவிகளிலும் இருந்தனர். ஆனால் சிறுபான்மையினர் வோட்டுக்கு அலையும் இந்த கம்யுனிசத் , காங்கிரஸ் , திராவிட கட்சிகள் ? கேரளா மாநிலம் 24.7 % இஸ்லாமியர் உள்ள மாநிலம் ஆனால் 9.5 % அளவு தான் அரசின் High Posts, Officer Posts என்று பதவியில் இருக்கிறார்கள், 25.2 % என்று இருக்கும் மேற்கு வங்காளத்தில் வெறும் 10% கூட கிடையாது. இதை நான் கூறவில்லை Sachar Committee Reportஅறிக்கை தெரிவிக்கிறது.
என்ன இப்போ இஸ்லாமியர் வளர்ச்சியை முதல்வராக இருக்கும் போது மோடி தடை செய்தார்???? கொஞ்சமாது பகுத்தறிவு இருப்பவனுக்கு இது புரியும்.
"Sufism is the voice of peace, co-existence, compassion and equality" இது கூறியவர் யார்?? இதே மோடி அவர்கள் தானே. சரி March 17, 2016 சூபி இஸ்லாம் மார்க்க அறிஞர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து வாழ்த்தியதும் இதே மோடி தானே..
கம்யூனிஸ்ட , காங்கிரஸ் எவனாது பாராட்டுங்கள் பார்க்கலாம்???
--------------------------------
பின்னர் இஸ்லாம் எதிர்ப்பு என்பது???
நன்கு புரிந்துகொள்ளுங்கள் இந்தியாவில் சூபி இஸ்லாம் மக்களுக்கும் இந்துதுவாவாதிகளுக்கும் எந்த உரசலும் கிடையாது. இதை வம்படியாக கம்யூனிஸ்ட் , திராவிட, காங்கிரஸ் பத்திரிக்கை கூட்டம் மறைக்கிறது. சூபி இஸ்லாம் தான் இந்த நாட்டில் இருக்கிறது. ஆனால் இந்த சவுதி அரபியா பரப்பும் வகாபிசம் கிடையாது. அதாவது பெர்சியன் வழியாக தான் இஸ்லாம் இங்கே பரவியது.. வால் முனையில் பரவிய இஸ்லாம் வரலாறு தவீர்த்துவிட்டு பார்த்தால் ஒரு பக்கம் சூபி ஞான மரபு என்பது இந்திய ஞான மரபில் ஒன்றாக ஏற்றுகொண்டோம்.
வால்முனையில் பரவிய மொகாளாயர் இஸ்லாம் என்பதை எதிர்க்கும் இதே இந்துதுவாவாதிகள்- சூபி ஞானிகள் வழி பரவிய அமைதியான இஸ்லாமிய ஞான மரபை எதிர்ப்பது இல்லை.
அதாவது Syed Mohammad Ashraf,rumi, அப்துல்கலாம், ஏஆர் ரகுமான் , ஜாகீர் குசேன் என்று மிக சிறந்த தேசியவாதிகள் பலரை மதம் கொண்டு எதிர்க்கிறார்களா? கிடையாது. ஆனால் ஜாகீர் நாயக் போன்ற வகாபிசம் பரப்பும் யாரையும் கடுமையாக எதிர்கிறார்கள். கடந்த 35 வருடத்தில் இந்தியாவில் வகாபிசம் வேகமாக பரவுவது கண்கூடு.. இன்றய தலைமுறை இஸ்லாமிய இளைஞர்கள் அதிகம் வகாபிசம் தழுவுகிறார்கள் அவர்களுக்கு தெரியாமலேயே. அது தான் உண்மை.
தர்க்காகளை இடிக்கவேண்டும், தர்க்கா என்பது இஸ்லாமிர்க்கு எதிரானது- இசை கேட்க கூடாது , இசை இஸ்லாமுக்கு எதிரானது - பெண்கள் ஆடை விசயத்தில் இருக்கும் கட்டுபாடுகள். இந்த 3 விவரங்களை எடுத்து கொஞ்சம் வரலாற்றோடு ஒப்பிட்டுபாருங்கள் அப்பட்டமாக சவுதி அரசியாவின் கலாச்சாரம் தெரியும். அதாவது வகாபிசம் மூலம் இங்கே இந்திய ஞான மரபில் பரவி விரிந்த சூபி இஸ்லாம் முழுமையாக அழிக்கபட்டு வகாபிசம் வழியாக மத போர்வையில் அரபிய கலாச்சாரம் பரவுகிறது. இதனால் தான் ISIS போன்ற தீவிரவாத குழுக்களுக்கு அதிகம் ஆதரவு உருவாகிறது. இது இந்திய இஸ்லாமியர்களுக்கு நல்ல விஷயம் அல்ல. இஸ்லாமிய இளையஞர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும். வரலாறு கொண்டு வெறுப்பை நாம் உருவாக்க கூடாது.
இதை நானோ, இந்துத்துவாவாதிகளோ குற்றம்சாட்டவில்லை... இதை குற்றம்சாட்டுவது Syed Akbar Nizamuddin Hussaini போன்றவர்கள் தான் கூறுகிறார்.
ஆன்மீக ஞானம் பரப்புவதற்க்கும் - மதம் வழி ஒரு கலாச்சாரத்தை பரப்புவதற்கும் வித்தியாசம் உண்டு. அரபிய கலாச்சாரம் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறார்கள். அப்படி எதிர்ப்பதை இங்கே பூதாகரமாக திட்டமிட்டு இஸ்லாமியருக்கு எதிரானவர்கள் என்று பரப்புகிறார்கள்.
சரி உங்கள் அனைவரிடமும் நான் கேட்கிறேன் சங்க்பரிவார் அமைப்பில் இருந்து வந்த மோடி அவர்கள் மிக சிறந்த இந்துதுவாவாதி. சரிதானே?
அவர் என்றாவது மாற்றுமத உள்விவகாரங்களில் தலையிட்டு பேசியதை கண்டது உண்டா? RSS மோகன் பகத் அவர்கள் என்றாவது மாற்றுமத உள்விவகாரங்களை தலையிட்டு பேசியது உண்டா? {நீங்கள் சிலரை காட்டலாம். அவர்கள் மூன்றாம் தர பேச்சாளார்கள். அதே பேச்சாளர்கள் எல்லா இடங்களிலும் உண்டு. சிலர் இஸ்லாமியர்களை அவதூராக பேசுகிறார்களே??? என்று நீங்கள் கூறினால் அதே அளவு இந்து கடவுள்களை அவதுறாக பேசும் கூட்டமும் உண்டு தானே??? எனவே இவைகளை நான் கணக்கில் எடுப்பது இல்லை. எனக்கு மோடி மீது இருக்கும் நியாயங்களை பேசவே விரும்புகிறேன்.}
முத்தலாக் விவகாரத்தில் கூட மோடி என்ன கூறினார் என்று தேடி பாருங்கள்.. "இஸ்லாமிய மத பெரியவர்கள் முன்வந்து இந்த விவகாரத்தை தீர்வு காணவேண்டும்" என்று தானே கேட்டுகொண்டார்? இதை விடவா ஒரு இந்துத்துவாவாதி நாகரீகமாக நடந்துகொள்ள முடியும்?
ஒரு உண்மை சொல்லவேண்டும் என்றால் - இஸ்லாமியர்கள் அல்ல எதிரி.. பிஜேபிக்கு உண்மையில் கம்யூனிஸ்ட் தான் எதிரி. கம்யூனிஸ்ட் தந்திரமாக இதை மதபிரச்சனை ஆக்கிவிட்ட வேடிக்கை பார்க்கிறார்கள்.
அதே நேரம் தீவிரவாதம் , பிரிவினைவாதிகளுக்கு எந்த இரக்கமும் காட்டபடாது... காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் காங்கிரஸ் உக்காந்து பேசியது போல் நிச்சயம் மோடி பேசமாட்டார். ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பிரிவினை தீவிரவாதிகளை கூண்டோடு அழித்து ஒழிக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் மத சாயம் தேவை இல்லை.
-----------------------------------------------------
மாற்றுமதங்களை அழிக்க நினைப்பவர்கள் என்று வைத்துகொள்வோம் - அப்படி என்றால் ஏன் புத்தம், ஜெயின் , சீக்கியர் என்று எவருடனும் பகை கொள்ளவில்லை இந்துதுவாவாதிகள்? அது என்ன கிருஸ்தவம் , இஸ்லாம் மட்டும் எதிர்க்கிறார்கள்????
உண்மையில் ஒரு உண்மையான இந்துதுவாவாதி என்பவன் மதங்களால், இறைவழிபாட்டால் ஒருவரை அடையாளபடுத்தி எதிர்ப்பது இல்லை. அவன் இந்த நாட்டின் புனிதம் மீது தொடுக்கபடும் மறைமுக/நேர்முக போரை எதிர்க்கிறான். இங்கேயே இறைவனை வழிபடும் முறைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. கங்கை நதிகரையில் இருக்கும் நாகாசாதுக்கள் முதல் இமயமலையில் மானசரோவர் மலையில் ஒட்டிகொண்டு வாழும் சாதுக்கள் தொட்டு, வேதம் கொண்டு மக்களை வழிநடத்தும் குரு, சித்தர்கள் பலரையும் ஏற்றுகொள்ளும் இந்துதுவாவாதிகள் எப்படி இறைவழிபாட்டால் மாறுபடும் ஒருவரை வெறுப்பார்கள்?
இங்கே ஆன்மீகம் என்பது வெறிதனமான சொல்லி கொடுக்கபடவில்லை. கட்டாயபடுத்தவும் இல்லை.. சரிதானே? அட நாத்திகத்தை அனுமதிக்கும் ஒரே மதகலாச்சரம் இருக்கும் நாடு இந்த மண்.. மனசாட்சிக்கு நேர்மையாக வாழும் நாத்திகனையும், இயற்கைதான் கடவுள் மற்றவை இல்லை என்று ஒதுக்கிய யோகிகளையும் ஏற்றுகொண்ட தர்மம் இந்த மண்ணுக்கு சொந்தமானது.
இந்த மண்ணில் உருவான மக்கள் குணமே கூட அது கிடையாது. அனைத்து வடிவிலும் ஆனந்தமாக இறைவழிபாடு கொண்டவர்கள். மதுரையில் பாண்டி கோவிலில் வந்து சாமி கும்பிடும் பல இஸ்லாமியர் உண்டு சரிதானே??? தர்காவில் பிள்ளைகளை கொண்டு போய் மந்திரிக்கும் ஆயிரம் இந்துகள் உண்டு??? சரிதானே.. இங்கே இருப்பது மதநல்லிணக்கம். இது தான் இந்தியா இதுதான் இந்த மக்கள் குணம்.
இந்து மதமே அனைத்தையும் தன்னுள் இழுத்துகொள்ளும் அளவு ஆன்மவியல் ஈர்ப்பு கொண்டது. வழிபடும் முறையால் மட்டும் பகையை உருவாக்கி கொள்ள இந்துதுவாவாதிகள் முட்டாள்கள் இல்லை. ஆனால் இந்த கலாச்சாரத்தை கெடுத்து இன்னொரு நாட்டின் கலாச்சாரமே மேம்பட்டது என்று திணிக்க முற்படுவதை தடுக்கிறது இந்துத்துவா.
-----------------------------------------
பின்னர் ஏன் வழுகட்டாயமாக மோடி அவர்களை இஸ்லாமிய எதிரியாகவே உருவாக்குகிறார்கள்???
Iconography படித்தீர் என்றால் இந்த மனித சமூகம் எப்படி ஒரு நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற புத்திசாலிதனம் கிடைக்கும். மோடி என்ற பிம்பம் இஸ்லாமியர் எதிரி , ஹிந்து வெறியர் என்று உருவாக்க கம்யூனிஸ்ட் இந்த குஜராத் காலவரத்தை எடுத்து கையாண்ட விதத்தில் வெற்றி பெற்றனர்.. ஆனால் குஜராத் கலவரத்தில் இறந்த ஹிந்துகள் பற்றி எந்த மூச்சும் விடவில்லை கம்யூனிஸ்ட் பத்திரிக்கைகள்!!! அது ஏன்? அதே குஜராத் கலவரத்தை வைத்து பக்கம் பக்கமாக வகாபிசம் ஆதரவாளர்கள் தீவிரமாக மோடியை இஸ்லாமியருக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உருவாக்க பெரியவெற்றி கிடைத்துவிட்டது தான்.
வாய்ப்புகிடைக்கும் அனைத்து நிகழ்வுகளையும் - செய்திகளையும் கம்யூனிஸ்ட் பத்திரிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் மோடிக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள். ஏன் என்றால் அவன் இப்போ ஒரு இந்துத்துவா Icon, இதன் மூலம் இந்துத்துவா என்பது ஒரு மதவெறி கூட்டம் என்று உருவகம் செய்ய முயல்கிறார்கள். அதில் இந்த திராவிட தறுதலை கூட்டமும் சேர்ந்து கொண்டுவிட தமிழகத்தில் இது ஒரு படி மேலை போய் விட்டது.
இன்று மோடி என்ற Icon இஸ்லாமுக்கு எதிரானதாகவே ஆகிவிட்டது. இப்போ அவர் முகம் , அவர் பெயர் எல்லமே ஒரு Icon ஆக்கபட்டுவிட்டது.
மோடி தான் மிக அதிகம் வழுவான உறவை ஆப்கன் அரசுடன் உருவாக்குகிறார். அவர்கள் என்ன இஸ்லாமியர்கள் இல்லையா???? எனவே பொது எதிரியாக மோடி , இந்துதுவா உருவாக்குவது திட்டமிட்டு நடந்து வரும் ஒரு சதி இது.
இந்துக்களை மதம் மாற்றபடுவதை தடுப்பது , இந்துகளின் சிறுபான்மையினராக ஆக்கபடுவதை தடுப்பது , இந்த பிரிவினைவாதிகளை அழித்தொழிப்பது, தீவிரவாதிகளை கூண்டோடு அழிப்பது என்று அடிப்படையில் தெளிவான கொள்கையுடன் தான் பிஜேபி செயல்படுகிறது. சிறுபான்மையினர் நலன் என்று இந்துகளின் நலனை விட்டுகொடுக்க வேண்டுமா என்ன?? இந்தியாவின் எதிரியாக நாட்டுக்குள் திரியும் நரிகளை விட்டு வைக்க வேண்டுமா?
------------------------------------------
கிருஸ்தவர்கள்????
அட கிருஸ்தவர்கள் பிரச்சனையே கிடையாது. மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகள் தான் பிரச்சனை. மதம் அவர் அவர் விருப்பும். மாறுவது அவர் அவர் சுதந்திரம். ஆனால் திட்டமிட்டு மதம் மாற்றுவது???? எனவே கிருஸ்தவர்களை பொறுத்தவரை அவ்வளவு தான் விசயம்.
இரண்டும் மதங்களுமே ஆப்ரகாம் வழி தோன்றல்களால் உருவான மதங்கள்.. இந்த மதங்களின் புனித பூமி இது அல்ல. காசாவும் , ஜெருசலமும் தான் என்னும் போது மத ரீதியாக தங்கள் தாய் மண்ணை இவர்கள் நேசிக்காமல் விலகிவிட கூடாது. அது பிற்காலத்தில் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கே பிரச்சனையை உருவாக்கும் என்பதால் பிஜேபி நாட்டுபற்று என்ற விசயத்தை அதிகம் மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறது. இப்போ அதுவும் பிரச்சனை ஆக்குகிறார்கள்.
----------------------------------------------------------
இறுதியாக :
"சிறுபான்மையினரை திருப்தி படுத்தித்தான் வோட்டு வாங்கி அரசியல் செய்யவேண்டும் என்று எந்த எண்ணமும் பிஜேபிக்கு கிடையாது. யாரையும் திருப்த்திபடுத்தவும் முடியாது; ஆனால் நாட்டின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியது தான் என்பது மோடி நன்கு உணர்ந்தே செயல்படுகிறார்".
"ஆம் நான் இந்துகளுக்கு தான் உழைக்கிறேன், இது இந்துகளுக்கு மட்டுமே சொந்தமான தேசம்" என்று உணர்வை தூண்டிவிட்டு பேச எவ்வளவு நேரம் ஆகும் அவருக்கு? என்றாவது அப்படி பேசியது உண்டா அவர்???? ஒரு மாநிலத்தில் 12ஆண்டுகள் முதல்வராக இருந்த ஒருவர் - 3வருடமாக ஒரு நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் வீட்டு சொத்து என்ன??? அவர் அண்ணன் தம்பி சொத்து என்ன??? அதே கருணாநிதி குடும்பம் சொத்து என்ன???? இதில் கூடவா மோடி அவர்களின் நேர்மை தெரியாது????
1.திமுக, காங்கிரஸ் - மீண்டும் ஆட்சியை பிடிக்கணும்.
2.கம்யூனிஸ்ட்&போராளிகள் - எப்டியாது நாட்டை பிளவு படுத்தனும்.
3.பெரியார் இயக்கம் - இந்துவே இருக்க கூடாது.
4.மதம் மாற்றும் இயக்கங்கள் - நன்கொடை வந்த வழியை அடைத்துவிட்டார் மோடி.
இந்த எல்லோருக்கும் பொது எதிரி? மோடி.. இந்துத்துவா.. அதனால் உருவாகும் குழப்பமே இன்று இந்த கேள்வி.
எனவே இந்துத்துவா என்பது மதவெறி அல்ல. அது இந்த தேசத்தின் ஆன்மாவை நேசிக்கும் உண்மை.
-மாரிதாஸ்

https://www.facebook.com/viji.prabhu.921/posts/1771246146221084

Tuesday, October 17, 2017

GOLD COIN DETAILS IN TAMIL




















Thursday, October 29, 2015

கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்.

நம் உடலில் 

கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்.

1. மரபணு மாற்றப்பட்ட உணவு:
DNA MODIFIED FOODS/HYBRID:
அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).

2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (ACT-II)
 MICROWAVED POPCORN.

3. கேன் செய்யப்பட்ட உணவு: 
 (CANNED, PACKAGED DRINKS):
 REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை பாதிக்கும்.

4.எரிக்கப்பட்ட இறைச்சி:
GRILLED MEATS: அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது.

5.வெள்ளை சக்கரை:
REFINED SUGAR: கரும்பில் இருந்து எடுக்கும் சக்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சக்கரையை 'மந்த விஷமாக' மாக மாறுகிறது. வெள்ளை சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.

6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள், ஊறுகாய் வகைகள்:
 (SALTED, PICKLED FOODS):
விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம் செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATES ஐ உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்:
கோக் முதல் போவோண்டோ அனைத்திலும் மேல சொன்ன வெள்ளை சக்கரை வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சக்கரையை விட கொடூரமான சோளச்சக்கரை (CORN SYRUP) சேர்கிறார்கள். இது நம் உடலில் அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மாவு வகைகள்: REFINED WHITE FLOURS:
மைதா, ATTA, தோசா MIX போன்ற மாவு வகைகள் தான். கடையில் விற்கப்படும் 80% மாவு வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BROMIDE வரை கலப்பார்கள். அதனால் தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்...

9.பண்ணை மீன்கள்:
FARMED FISH: பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்க படுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது. விலை மலிவில் கேன்சர் செல்கள் தூண்ட காரணமான ரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒரு முறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன் தான் சிறந்தது.

10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்:
Hydrogenated & Refined Oils: விதைகள், காய் கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நாமும் நம் குடும்பநபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.

மேல் சொன்ன உணவுகள் தான் நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான பொருள் நம் அருகிலேயே கிடைக்கும். தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.

முடிந்த வரை - "SUGAR FREE", "DIET", "LITE", "FAT FREE" போன்று அச்சிடப்பட்ட பொருள்களை தவிர்த்தால் கேன்சர் வர காரணமான ரசாயனத்தையும் தவிர்க்கலாம்.


Wednesday, September 30, 2015

"Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...


"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...


“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...


நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
  
19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்...
ஆரோக்கியமாக வாழுங்கள்...         
நன்றி.

Wednesday, September 23, 2015

Important links

🔘 GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘

*Obtain:
🔴1.  Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

🔴2.  Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

🔴3.  Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

🔴4.  Domicile Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

🔴5.  Driving Licence
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

🔴6.  Marriage Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

🔴7.  Death Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

Apply for:
🔴1.    PAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

🔴2.     TAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

🔴3.     Ration Card
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

🔴4.     Passport
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

🔴5.     Inclusion of name in the Electoral Rolls
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10

Register:
🔴1.    Land/Property
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

🔴2.    Vehicle
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

🔴3.    With State Employment Exchange
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

🔴4.    As Employer
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

🔴5.    Company
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

🔴6.    .IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

🔴7.    GOV.IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25


Check/Track:
🔴1.    Waiting list status for Central Government Housing
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

🔴2.     Status of Stolen Vehicles
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

🔴3.    Land Records
http://www.india.gov.in/landrecords/index.php

🔴4.    Cause list of Indian Courts
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

🔴5.    Court Judgments (JUDIS )
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

🔴6.    Daily Court Orders/Case Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

🔴7.    Acts of Indian Parliament
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

🔴8.    Exam Results
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

🔴9.    Speed Post Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

🔴10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6

Book/File/Lodge:
🔴1.     Train Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

🔴2.     Air Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

🔴3.     Income Tax Returns
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

🔴4.     Complaint with Central Vigilance Commission (CVC)
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14

Contribute to:
🔴1.      Prime Minister's Relief Fund
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

Others:
🔴1.      Send Letters Electronically
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20

Global Navigation
🔴1.     Citizens
http://www.india.gov.in/citizen.php

🔴2.     Business (External website that opens in a new window)
http://business.gov.in/

🔴3.     Overseas
http://www.india.gov.in/overseas.php

🔴4.     Government
http://www.india.gov.in/govtphp

🔴5.     Know India
http://www.india.gov.in/knowindia.php

🔴6.     Sectors
http://www.india.gov.in/sector.php

🔴7.     Directories
http://www.india.gov.in/directories.php

🔴8.     Documents
http://www.india.gov.in/documents.php

🔴9.     Forms
http://www.india.gov.in/forms/forms.php

🔴10.    Acts
http://www.india.gov.in/govt/acts.php

🔴11.  Rules
http://www.india.gov.in/govtmoo/rules.php

PLS FORWARD TO ALL GROUPS AND FRIENDS.
Keep ds msg handy...u may need it anytime

Thursday, August 13, 2015

கம்பனும் மதுவிலக்கும்


ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டில் மது விலக்குக்காக 1886-ல் மதராஸ் அப்காரி சட்டம் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அப்காரி என்ற சொல்லுக்குப் போதை ஊட்டும் பானங்களையோ மருந்துகளையோ தயாரிப்பது அல்லது விற்பது என்பது பொருளாகும். இச்சொல், பெர்ஷிய மொழிச் சொல்லாகும். இந்தச் சொல்லுக்கு இன்னொரு பொருள் மதுபானம் மற்றும் மருந்துகள் தயாரிப்பது அல்லது விற்பதற்கு விதிக்கப்படும் வரி என்பதாகும்.

மதராஸ் அப்காரி சட்டம், 1905, 1913, 1929 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு, அதன் பின்னால் ஒரு புதுச் சட்டமாக 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் முதல் நோக்கம் என்னவென்றால், போதையூட்டும் பானங்களையும், மருந்துகளையும் தயாரிப்பது, விற்பது மற்றும் அருந்துவது ஆகிய அனைத்தையும் தடை செய்வதாகும். ஆனால் பின்னாளில், மதுபானங்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் அருந்துதலை ஒழுங்குபடுத்தும் சட்டமாக இது மாற்றப்பட்டுவிட்டது.
1947-ல், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 26.1.1950-ல் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அதில் மருத்துவத் தேவையைத் தவிர மற்ற எந்தக் காரணத்துக்காகவும் மது அருந்துவதைத் தடை செய்வதற்கு எல்லா மாநிலங்களும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்னும் உறுதிப்பாடு, பிரிவு 47-ல் கொண்டுவரப்பட்டது. இது ஏட்டளவில் நின்றுபோய், பெருவாரியான மாநிலங்கள் மது விலக்கைத் தளர்த்தி, குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளை உடல் மற்றும் மனவளம் குன்றியவர்களாக ஆக்கிவிட்டது. கடந்த 67 ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் பல மாநிலங்கள் மது விற்பனையால் வரும் வருமானத்தைக்கொண்டே மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதாகக் கூறுகின்றன. 

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவது போலவும், கோயிற்பசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயிற் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல் போலும், நம் நாட்டின் மதுவிலக்குக் கொள்கை அமைந்துவிட்டது. 

கம்பன் கண்ட கோசல நாடு, கிஷ்கிந்தை மற்றும் இலங்கை கூட, இந்தக் குழப்பத்துக்கு விதிவிலக்குகளாக அமையவில்லை போலும். எனவே, கம்பன் பல இடங்களில் கோசல நாட்டு மக்கள், கிஷ்கிந்தை மற்றும் இலங்கை மக்கள் கொண்டிருந்த குடிப் பழக்கத்தை ஆங்காங்கே காட்டிவிட்டு, அதேசமயம், பல இடங்களில் இப்பழக்கத்தைக் கண்டிக்கவும் செய்கிறான். 

யுத்த காண்டம், பிரம்மாத்திரப் படலத்தில், இந்திரஜித்தனின் பிரம்மாஸ்திரத்தால் அனைவரும் கீழே விழுந்து கிடக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட ராவணன், ஒரு வெற்றிவிழாக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறான். இந்தக் கொண்டாட்டங்களைக் களியாட்டுப் படலத்தில், கம்பன் கற்பனை வளத்தோடு விவரிக்கிறான். அந்தக் கொண்டாட்டத்தில், அரம்பையர்கள், அரக்கியர்கள், அசுரப் பெண்கள், நாக கன்னியர்கள் ஆகியோரை ராவணன் ஆடவைக்கிறான். அப்போது, கள்ளுண்டு ஆடியவர்களுடைய நிலை எப்படி இருந்தது என்பதைக் கம்பன் சொல்கிறான் : 

நல் பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி,
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி,
பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம். 
 
அதாவது, நல்ல கல்விச் செல்வத்தால் பெரியோர் களது உபதேச மொழிகளை அறிந்து அவற்றால் வரும் பயனைத் துய்க்க வேண்டிய தருணத்தில், ஒரு மூடன் மனதில் ஒரு வஞ்சகன் வைத்த கற்பனை எப்படிப் பரவி நிற்குமோ அப்படிக் கள்ளின் வேகம், மகளிர் கூட்டத்தில் பரவியது என்பது இப்பாடலின் பொருள். கல்வியால் பெறும் தெளிவைக் கள்ளினால் வரும் மயக்கம் அழித்துவிடும் என்னும் உறுதியை இப்பாடலில் கம்பன் காட்டுகிறான்.

 இதில் பின்னால் வரும் இன்னொரு பாடலில் கள்ளுண்டு ஆடிய காரணத்தால் தாளமும், காலமும் தவறி ஆடிய பெண்களைக் கம்பன்,
‘பாணியின் தள்ளி, கால மாத்திரைப் படாது பட்ட நாணியின் முறையின் கூடாது, ஒரு வழி நடையின் செல்லும் ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர்’
என்று விவரித்தான். கள்ளுண்ணுதல் பெரும் பாவம் என்னும் கருத்தையும் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறான். 


யுத்த காண்டம், நிகும்பலை யாகப் படலத்தில், தன்னை இகழ்ந்து பேசும் இந்திரஜித்தனுக்கு மறுமொழி உரைக்கும் வீடணன், தான் குற்றமற்றவன் என்பதற்கு அத்தாட்சியாக 

‘உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென், யாரும் குற்றம் கண்டிலர் என்பால்; 

என்று உரைக்கிறான். எனவே, மது அருந்துவது என்பது, பொய் சொல்வதற்கும், பிறர் பொருளைக் கவர்வதற்கும், வஞ்சம் செய்வதற்கும் இணையான குற்றம் என்பதையும் கம்பன் பதிவு செய்கிறான். 

‘ஏயின இது அலால், மற்று, ஏழைமைப் பாலது என்னோ?
“தாய் இவள், மனைவி” என்னும் தெளிவின்றேல், தருமம் என் ஆம்?
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும், திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்! 
 
‘கள்ளுண்ணல் ஐம்பெரும் பாதகங்களில் ஒன்று. தாயையும் மனைவியையும் வேறுபடுத்தி அறியும் அறிவைக் கள் அழிக்கும். மற்ற எல்லா அறங்களைப் பின்பற்றி வாழ்ந்தாலும், கள் அருந்துபவனுக்குப் பிற அறங்களால் என்ன பயன்? மனிதப் பிறவி எடுத்தவன் ஏற்கெனவே மாயையின் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் போது, அந்த மயக்கத்தின் மேல் இன்னொரு மயக்கத்தை ஊட்டுவது எவ்வளவு விந்தை’ என்று ஒரு மாயையின் தத்துவத்தை இப்பாடலில் சுக்ரீவன் பேசுகிறான். 

‘வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்
கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால் அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே? 
 
விஷம்கூட அருந்தியவரைக் கொல்லுமே தவிர, நரகத்தில் தள்ளி விடாது. ஆனால், மது அருந்துவதால் வஞ்சனை, திருட்டு, பொய், அறியாமை, தொன்று தொட்டு வந்த மரபுக்கு மாறான கொள்கை, அடைக் கலமாக வந்தவரைக் காப்பாற்றாத தன்மை, ஆணவம் ஆகியவை வந்து சேர்ந்து நரகத்தில் கொண்டு விட்டுவிடும் என்கிறான் சுக்ரீவன். 

இப்படி சுக்ரீவன் மூலமாக மது ஒழிப்புக்கு ஒரு மிகப் பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த கம்பன், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 47-ல் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மது விலக்கு, நடைமுறையில் காற்றில் பறக்க விடப்பட்டதை நமக்கு நினைவுபடுத்திக் காட்டுகிறான். 

- உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் எழுதிய ‘கம்பனில் சட்டமும் நீதியும்’ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் (வெளியீடு: வானதி பதிப்பகம்).

Wednesday, July 29, 2015

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்



1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

 12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..
நன்றி மோகன்தாஸ் சாமுவேல்

Saturday, July 4, 2015

வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி?



அடையாளச் சான்றுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்று, தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை. தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு அவசியமான சான்றுகளில் ஒன்று. தமிழகத்தில் 01.01.2014 அன்று சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 01.10.2013 அன்று வெளியானது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். அதனால், வாக்காளர் அடையாள அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள்...
 
வாக்காளர் அடையாள அட்டைக்கு எங்கே / எப்படி விண்ணப்பிப்பது?

மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், ஆணையர் அலுவலகம், மண்டல அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.
மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
 (வாக்காளர் பதிவு அலுவலர்), வட்டாட்சியர் அலுவலகம் (துணை வாக்காளர் பதிவு அலுவலர் ) ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.
 
உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPICCENTREADDRESS1.pdf இத்தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
 
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்

ஜனவரி 01, 2014 அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையுமெனில், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு இப்போது விண்ணப்பிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்த வேண்டும். படிவம் - 6 உடன், ஒரு வண்ணப் புகைப்படம் அல்லது கறுப்பு வெள்ளை புகைப்படம் இணைக்க வேண்டும்.
பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்
வேறு தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம் அல்லது நீக்க வேண்டிய பெயர் ஏதேனும் இருந்தால் இதற்காக, படிவம்-7 ஐ பயன்படுத்தி தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்

உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா. - பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தவறான பதிவின் திருத்தத்திற்கு படிவம்-8 ஐ பயன்படுத்துங்கள். அடையாளச் சான்றாக பிறப்புச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்கான விண்ணப்பம் வேறு வாக்காளப் பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக படிவம்-8 ஐ பயன்படுத்த வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை பெற தேவையான ஆவணங்கள்:

வாக்காளர் அடையாள அட்டை பெற அடையாளச் சான்று, பிறப்புச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவை அவசியம்.
 
1.முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர்,தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை சான்றாக இணைக்க வேண்டும்.

2.பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் சான்றிதழ் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.

3.அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
 
4.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

http://eci-citizenservices.nic.in/default.aspx இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு, 'verification code' என்ற குறுஞ்செய்தி வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation செய்தி வரும். பின்னர், 'online application' என்பதை கிளிக் செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
 
http://www.elections.tn.gov.in/eregistration/ இத்தளத்திலும் உங்களுக்குத் தேவையான விண்ணப்பத்தைத் தேர்வு செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து இலக்க எண் தரப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலையை http://elections.tn.gov.in/apptrack/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 
http://www.elections.tn.gov.in/contacts/ இத்தளத்திற்குச் சென்று உங்கள் பகுதி அதிகாரியின் தொடர்புஎண்ணைத் தெரிந்துகொள்ளலாம்.
 
ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் http://www.elections.tn.gov.in/eroll/ இத்தளத்திற்குச் சென்று தமது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
 
மேலும் விவரங்களுக்கு www.elections.tn.gov.in/ இத்தளத்திற்குச் செல்லவும்.