Showing posts with label BODY BUILDING. Show all posts
Showing posts with label BODY BUILDING. Show all posts

Saturday, December 27, 2014

YOGA HISTORY - யோகா பற்றிய வரலாறு. -இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள்



பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர்.

ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர்.

இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகளாக வடிவமைக்கின்றனர்.இவையே பிற்காலங்களில் யோகாசனங்கள் மற்றும் பிரணாயாமங்கள் எனப்படுகின்றன.

இந்த வகையில் மயிலை அடிப்படையாக கொண்டு அமையும் ஆசனம் மயூராசனம் ஆகும்.வடமொழியில் மயூரா என்றால் மயில் ஆகும்.இதை போன்றே பிற உயிரினங்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்களின் பட்டியலை கீழே காணலாம்.

ஒவ்வொரு ஆசனத்தின் அருகிலும் அதற்கு அடிப்படையான வடமொழி சொல்லும், அதன் தமிழ் பொருளும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

மகராசனம் (மகரம்–முதலை), சலபாசனம் (சலபம் – வெட்டுக்கிளி), சசாங்காசனம் ( சசாங்கம் – முயல் ), மச்சாசனம் ( மச்சம் – மீன் ), கூர்மாசனம் ( கூர்மம் – ஆமை ),புஜங்காசனம் ( புஜங்கம் – பாம்பு ),
பாகாசனம் ( பாக – கொக்கு ),
பேகாசனம் ( பேக – தவளை ),
குக்கூட்டாசனம் ( குக்கூடம் – சேவல் ),
சிம்மாசனம் ( சிம்மம் – சிங்கம் )
உஷ்ட்ராசனம் ( உஷ்ட்ரா – ஒட்டகம் ),
கபோடாசனம் ( கபோடா- புறா )

இதைப் போன்று மரம் மற்றும் மலர்களை அடிப்படையாக கொண்ட ஆசனங்கள் :

பத்மாசனம் ( பத்மா – தாமரை மலர் ),
விருட்சாசனம் ( விருட்சம் - மரம் )

பிறகு அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை அடிப்படையாகக் கொண்டும் ஆசனங்களை வடிவமைக்கின்றனர்.அவற்றுள் சில பின்வருமாறு,

நாவாசனம் ( நாவா – படகு ), தனுராசனம் ( தனுரா-வில் ),
ஹலாசனம் ( ஹலா- கலப்பை ),
துலாசனம் ( துலா – தராசு )
சக்கராசனம் ( சக்கரா- சக்கரம் ),
தண்டாசனம் ( தண்டா – கம்பு,தடி )

இதே போன்று சில உயிரினங்களை அடிப்படையாக கொண்டு, மூச்சு பயிற்சிமுறைகளையும் வடிவமைக்கின்றனர்.இவ்வாறாக முற்றிலும் இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகளை தமிழ் மொழியில் தொல் தமிழர்கள் வடிவமைத்தனர். இதனை நீண்ட உடல் நலத்திற்காகவும்,உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் பொருட்டும் அன்றாடம் பயிற்சி செய்து வந்துள்ளனர்.

இப்பழக்கம் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் வரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.அதன் பிறகு காலப்போக்கில் கடல்கோள்கள் போன்ற இயற்கை சீற்றங்களாலும்,ஆட்சி மாற்றங்களாலும் இந்த வழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருத மொழி செல்வாக்கு பெற்றிருந்த வேளையில் ( இன்றைக்கு ஆங்கிலம் செல்வாக்கு பெற்றிருப்பதை போல ) இந்த இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள் சமஸ்கிருத மொழியில் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.இவ்வாறு சமஸ்கிருத மொழியில்இயற்கை சார்ந்த உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் என பெயர் பெறுகின்றன.

இனி இந்த யோகாசனங்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன என காணலாம்.

தமிழ்நாட்டில் அகத்தியர்,திருமூலர்,பதஞ்சலி உள்ளிட்ட பதினெட்டு சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் எழுதிய நூல்களில் யோகாசனங்களை பற்றிய செய்திகளை காணலாம்.

இதில் பதஞ்சலி முனிவர் வடநாட்டுக்கு சென்று யோக சூத்திரம் என்ற நூலை எழுதுகின்றார்.இது எட்டு உறுப்புகளை கொண்டதால் அஷ்டாங்க யோகா என அழைக்கப்படுகின்றது.

பிறகு 15 ஆம் நூற்றாண்டில், யோகி ஸ்வாத்மராமா என்பவர் ஹத யோகா பற்றிய நூலை எழுதுகின்றார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் ராஜ யோகம் பற்றி விளக்குகின்றார்.

இதனைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் அரவிந்தர், சுவாமி சிவானந்தர் போன்றோர் ஆன்மீக ரீதியிலான யோகாவை பரப்புகின்றனர்.

1920 களில் மைசூர் மாகாணத்தை சேர்ந்த திருமலை கிருஷ்ணமாச்சார்யா எனும் யோக நிபுணர் ஆரோக்கிய ரீதியிலான யோகாவை வடிவமைக்கின்றார்.பல்வேறு நோய்களுக்கும் இயற்கை உணவு +மருந்து + யோகாசனங்கள் அமைந்த சிகிச்சை திட்டங்களை தீட்டி நோய்களை குணப்படுத்துகின்றார்.இம்முறை பின்னர் பல்வேறு யோக ஆசிரியர்களாலும் கடைபிடிக்கப்படுகின்றது.

1980 களில் டீன் ஆர்னிஷ் ( Dean Ornish ) எனும் அமெரிக்க மருத்துவ நிபுணர், யோகாவின் மூலம் இருதய நோய்கள் குணமடைவதை மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கின்றார்.சுவாமி சச்சிதானந்தாவிடமிருந்து இவர் யோகாவை கற்றவராவார்.

இதன் பிறகு மேற்கு நாடுகளில் யோகாவை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இன்றைய நிலையில் தமிழ் வழி யோகா என்பது இல்லை.நாம் இன்று பெறக்கிடைப்பது வட நாட்டு யோகா ஆகும்.வருங்கால ஆராய்ச்சிகள் முற்றிலும் இயற்கை சார்ந்த, அனைவருக்கும் பொதுவான தமிழ் வழி யோகாவை உருவாக்கும் என நம்புவோமாக.

யோகா செயல்படும் விதம் :

யோகா பயிற்சிகளின் போது தொடர்புடைய பகுதிகளில் இரத்த ஒட்டம் அதிகரிக்கின்றது.இதனால் ஊட்டச்சத்துக்களும்,ஆக்ஸிஜனும் தேவையான அளவு செல்களுக்கு கிடைப்பதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கின்றது.இதனால் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குகின்றன.

பொதுவாக உடல் முழுமைக்குமான யோகா பயிற்சிகளை செய்யும் போது, இரத்த ஒட்டம் நன்கு உறுதி செய்யப்பட்டு உடலின் ஆரோக்கியம் தொடர்ந்து அதிகரிக்கின்றது.

உடல் முழுவதும் பரவியுள்ள நரம்பு மண்டலமும் சீரான நிலையில் வைக்கப்படுகின்றது.

நம் சுவாசத்திற்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.கோபம், கண்ணீர்,அதிக சந்தோஷம் போன்ற உணர்ச்சி வசப்பட்ட தருணங்களில் நாம் வேகமாக மூச்சு விடுவோம்.அதாவது அந்த நிலையில் நம் மனதின் எண்ண ஒட்டங்கள் அதிகமாக இருக்கும்.

மாறாக அமைதியான தருணங்களில் ஆழ்ந்து மூச்சு விடுவோம்.அதாவது தெளிவான எண்ண நிலையில் இருப்போம்.

இந்த அடிப்படையில் மூச்சு பயிற்சி, நம் சுவாசத்தை ஆழப்படுத்தி அமைதியான எண்ணங்களை நிலை கொள்ளச் செய்யும்.இது உளவியல் ரீதியாக மிகுந்த பலனை நமக்கு தரும்.

யோகா பற்றிய குறிப்புகள் :

• யோகாசனங்கள் எப்பொழுதும் இருபக்க சமச்சீரானவை.முதலில் இடது பக்கம் செய்யப்படும் அசைவுகள்,அடுத்ததாக வலது பக்கமும் அதே அளவு செய்யப்படும்.இந்த அடிப்படையில் பார்க்கும்போது இரண்டு கைகளையும் சமமாக பயன்படுத்தும் பழக்கம் தொல் தமிழர்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்.இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்.

• ஒவ்வொரு ஆசனத்திலும், ஆரம்ப நிலையில் தொடங்கி ஒவ்வொரு நிலையாக கடந்து இறுதி நிலையை அடைய வேண்டும்.பிறகு அதே படிவரிசையில் ஆரம்ப நிலையை அடைய வேண்டும்.அதாவது 1-2-3-4-5 என்றவாறு ஆசனத்தின் இறுதி நிலையை அடைந்தபின் 5-4-3-2-1 என்றவாறு ஆரம்ப நிலைக்கு திரும்ப வேண்டும்.இதுவே உடலின் பாதுகாப்பை உறுதி செய்யும்.மீறினால் சுளுக்கு,தசைபிடிப்பு ஏற்படலாம்.

• ""''ஸ்திரம் சுகம் ஆசனம்" என்ற அடிப்படையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.முதலில் உடல் ஆடாமல் நிலையாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு வலியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.பிறகு இறுதி நிலையை முயற்சிக்க வேண்டும்.இதற்கு உரிய நாட்களை எடுத்து கொள்ளவேண்டும்.சில ஆசனங்களை செய்வதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம்.மாறாக அவசரப்பட்டால் தவறு நேரலாம்.

• கீழ்நோக்கிய அசைவுகள் மூச்சு விட்டுக் கொண்டே செய்யப்படும்.மேல்நோக்கிய அசைவுகள் மூச்சை இழுத்துக் கொண்டே செய்யப்படும்.இந்த வகையில் யோகப்பயிற்சிகள் புவியீர்ப்பு விசையை கருத்தில் கொண்டவை.

யோகாவின் இன்றைய அவசியங்கள் :

இன்றைய நிலையில் நமது வாழ்வில், உடலுழைப்பு குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சிறுநீரக கோளாறு, அல்சர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றோம்.

பொருளாதார நெருக்கடி, அவசரம் , பதற்றம் காரணமாக பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனால் நம்முடைய மன நலமும் குறைகின்றது.இதனால் சமூகத்தில் உளவியல் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக நம் முன்னோர்கள் வழியில், நாமும் யோகாவை தினசரி வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
தினசரி அரைமணி நேரமாவது யோக பயிற்சிகளை செய்யலாம்.இயலாதவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்ய முயற்சிக்கலாம்.

இதன் மூலம் உங்கள் உடல் நலமும்,மனநலமும் மேம்படுவது உறுதி.நீண்ட காலம் தொடர்ந்து செய்தால் நோய்கள் குறைந்து ஆரோக்கியமாக வாழலாம்.இது சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி அமைதிக்கு வழி வகுக்கும்.குடும்பத்தில் ஒருவர் யோக பயிற்சிகள் செய்யும்போது, இந்த பழக்கம் குழந்தைகள்,இளைஞர்களிடமும் பரவும்.
எல்லோரும் இன்புற்று வாழலாம்.

Thursday, December 25, 2014

மார்பகங்களால் அவதிப்படும் பெண்களுக்கு!



பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் மார்பகங்கள். இந்த பிரச்சினையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளைத் தான் அணிய முடியும். ஏனெனில் ஒருசில ஆடைகளை அவர்களை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும்.

பொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க ஆரம்பிக்கும். ஆனால் பெண்கள் தங்களின் மார்பகங்கள் தொங்கி காணப்படுவதற்கான காரணங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக, அறுவை சிகிச்சை மூலம் அதனை சரிசெய்ய நினைக்கின்றனர். இதனால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும் என்பது தெரியுமா?

ஆனால், தொங்கும் மார்பகங்களை ஒரு சில இய ற்கை வழிக ளின் மூலம் சரிசெய்யலாம். இங்கு அசிங்கமாக காணப்படும் தொங்கும் மார்பகங்களை சரிசெய்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வந்தால், மார்பகங்கள் தொங்கிக் காணப்படுவதைத் தடுக்கலாம்.

உடலில் புரோட்டீன் குறைபாடுகள் இருந்தால், அவை மார்பக தசைகளை தளரச் செய்து, மார்பகங்களைத் தொங்கச் செய்யும். ஆகவே, புரோட்டீன் உணவுகளுடன், தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பூண்டு போன்ற காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மார்பகங்களை அழகாக சிக் கென்று வைத்துக் கொள்ளலாம்.

தரையில் படுத்துக் கொண்டு தம் புள்ஸ் ஐ மார்ப கங்களுக்கு மேலே தூக்கி 10 வரை எண்ணிக் கொண்டு பிடித்திருக்க வேண்டும். பின் அதனை மார்பகங்களுக்கு பக்கவாட்டில் மடக்கி 10 வரை எண்ணிப் பிடிக்க வேண்டும். இது போல் தினமும் 10 முறை செய்தால், மார்பகங்களின் தளர்ச்சியைத் தடுக்கலாம்.

குப்புறப்படுத்துக் கொண்டு, கைகளை தரையில் மார்பங்களுக்கு நேராக நீட்டி உடலே மேலே தூக்கி, கால்களை மேல்புறமாக தூக்கி, தரையைத் தொடாமல் முன்புறமாக குனிந்து 10 வரை எண்களை எண்ணி, பின் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும். இதுபோன்று தினமும் 10 முறை செய்து வந்தாலும், தொங்கும் மார்பகங்களை சரிசெய்யலாம்.

தினமும் 15 நிமிடம் கையால் மேல்புறமாக மார்பகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகத்தில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மார்பகங்களில் உள்ள திசுக்கள் மற்றும் தசைகளை வலிமையாக்கி, மார்பகங்கள் தளர்ந்து இருப்பதை சரிசெய்யும்.

ஐஸ் கட்டிகளை எடுத்து மார்பகத்தின் மீது வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்யும் மசாஜானது ஒரு நிமிடத்திற்கு மேல் செய்யக் கூடாது. இல்லாவிட்டால், ஐஸ் கட்டிகளானது மார்பகங்களில் கட்டிகளை ஏற்படுத்திவிடும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செயது வந்தால், மார்பக தசைகளானது வலிமையடையும். பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் செய்து வந்தாலும், மார்பகங்களானது இறுக்கமடைய ஆரம்பிக்கும்.

நரம்பு மண்டல ரகசியங்கள் - The seceret of Nerology Department


மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது. மூச்சு விடுவது முதல் தசைகளின் அசைவுகளை கட்டுப்படுத்துவது, சூடு, குளிர் உணர்வது வரை அனைத்துக்கும் நரம்பு மண்டலமே காரணமாகின்றது. நரம்பு மண்டலம் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது... தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு: இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் சூட்டினை சீராய் வைத்தல் இவற்றிற்குப் பொறுப்பாகின்றது.

மோட்டார் நரம்பு பிரிவு:

அசைவுகளையும், செயல்களையும் மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க வைக்கின்றது.

சென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு:

தோல், தசைகளிலிருந்து தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச்செல்வது. இது அங்கு ஆராயப்பட்டு வலி, எரிச்சல், இதம் போன்ற உணர்ச்சிகளை மனிதன் உணரச் செய்கின்றது. நரம்பு மண்டலமே அனைத்திற்கும் காரண மாவதால் நரம்பு வலியும் அல்லது நரம்பு பாதிப்பும் மனிதனின் வாழ்வினை வெகுவாக பாதித்து விடுகின்றது.

நரம்பு வலியின் அறிகுறி என்ன?

நரம்பு பாதிக்கப்படும் பொழுது பலவித அறிகுறிகள் தெரியும். பாதிப்பு மூளையிலா, தண்டுவடத்திலா அல்லது பரவியுள்ள புற நரம்புகளிலா என்பதனைப் பொறுத்து அறிகுறிகள் இருக்கும்.

தன்னிச்சை இயக்க நரம்பு பாதிக்கப்படும் பொழுது...

* நெஞ்சு வலியினை உணர முடியாது
* அதிக வியர்வை அல்லது குறைந்த வியர்வை இருக்கும்.
* வறண்ட கண், வாய் காணப்படும்.
* மலச்சிக்கல் ஏற்படும்.
* சிறுநீரக பை சரிவர இயங்காது.
* உடல் உறவில் பிரச்சனை இருக்கும்.

மோட்டார் நரம்பு இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் பொழுது.
* உடல் சோர்வு ஏற்படும்.
* தசை தேய்மானம் காணப்படும்.
* தசை துடிப்பு இருக்கும்.
* பக்கவாதம் ஏற்படும்.

சென்சரி அதாவது உணர்ச்சி நரம்பு பாதிப்பு ஏற்படும் பொழுது..
* வலி இருக்கும்.
* மதமதப்பு இருக்கும்.
* குறுகுறுப்பு, குத்தல் இருக்கும்.
* எரிச்சல் இருக்கும்.
* குளிர், சூடு தாங்காமை இருக்கும். சிலருக்கு இரண்டு மூன்று தொந்தரவுகள் கூட அறிகுறிகளாகத் தெரியலாம்.

பொதுவாக 100 வகையான நரம்பு பாதிப்புகள் உள்ளன. வயது கூடும் பொழுது புற நரம்பு பாதிப்பு கூடும். நாலில் ஒரு சர்க்கரை நோயாளிக்கு இப்பாதிப்பு எளிதில் ஏற்படும். புற்றுநோய் பாதிப்பு நரம்புகளை பாதிக்கலாம்.
விபத்துக்கள், சில மருந்துகள் போன்றவை கூட நரம்புகளை பாதிக்கலாம். சத்து குறைபாடு, தொற்றுநோய் போன்றவைகளும் நரம்பு பாதிப்பினை ஏற்படுத்தலாம். அதிக நபர்களுக்கு இதனை முழுமையாக சரி செய்ய முடிகின்றது. சின்ன அறிகுறி இருந்தாலும், உடனடி பெறும் மருத்துவ ஆலோசனை நல்ல நிவாரணம் அளிக்கும். அடிப்படை காரணம் அறிந்து சிகிச்சை செய்யவேண்டும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவினை சரி செய்யவேண்டும்.
* சத்து குறைபாடுகளை சரி செய்யவேண்டும்.
* பாதிப்பு தரும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி நீக்குதல் வேண்டும்.
* அடிபட்ட இடத்தில் தகுந்த சிகிச்சை தர வேண்டும்
* மற்ற பாதிப்புகளுக்கு உரிய மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் சிலருக்கு திடீரென கால், கை சற்று சோர்வாய் இருப்பது போன்று இருக்கும். நரம்பு முறையாய் வேலை செய்யாததால் ஏற்படும் பாதிப்பு இது. அதிக கவலை, டென்ஷன் இருப்பவர்களுக்கு அதிகமாக இவ்வகை பாதிப்பு ஏற்படுகின்றது.
அடிபட்ட பிறகு, முதுகுவலி, கழுத்துவலி இருக்கும்போது இத்தகு பாதிப்பு ஏற்படுகின்றது. அதிக சோர்வு, அதிக வேலை செய்து ஓய்ந்துப் போகுதல் போன்றவை இத்தகு பிரச்சினைகளை உருவாக்கும். இதற்கு உடற்பயிற்சியும், பிஸியோதெரபி எனப்படும் குறிப்பிட்ட பயிற்சியும் நல்ல பலனை அளிக்கும்.
சில சமயம் மனநல நிபுணர் ஆலோசனையும் தேவையே. (அதிகம் பாதிப்பினை பற்றியே நினைக்காது இருப்பதும் முன்னேற்றத்தினைத் தரும்) சிலருக்கு வளைந்த விரல்கள் இருக்கலாம். மணிகட்டு சுழன்று கை கீழ் நோக்கி பிரண்டு இருக்கலாம். அவரவர் உடலுக்கு ஒரு வரைப்படம் உண்டு. சில காரணங்களால் மூளை இந்த மடிந்த விரல்களையும், பிசகிய கையினையும் சரியான வரைபடமாக எடுத்துக் கொள்கின்றது.
மூளையை மீண்டும் சரியான வரைபடத்திற்கு மாற்றுவதே பயிற்சி ஆகின்றது அல்லது தொடர்ந்து அப்படியே இருந்தால் பாதிக்கப்பட்ட பகுதி நலிந்து செயலிழக்கின்றது.

* அடிக்கடி உட்கார்ந்து, எழுந்து, நடந்து பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
* மருத்துவ ஆலோசனை மிக அவசியம். திடீரென ஒருவர் உடல் உதறி அப்படியே நினைவற்று விழுந்து விடுவார். சற்று கூடுதல் நேரம் அவ்வாறே இருப்பார். பிறகு எழுந்து விடுவார். இதன் காரணம், நரம்பின் இயக்கம் சிறிதுநேரம் முறையற இயங்காததால் ஏற்படும் பாதிப்பு ஆகின்றது. மருத்துவ சிகிச்சையில் இன்று இப்பாதிப்பிற்கு நவீன மருந்துகள் உள்ளன.

* சோபாவிலோ, படுக்கையிலோ ஓய்வில் இருக்கும் பொழுது பலருக்கு இது ஏற்படுவதுண்டு.
* நீண்ட நேர பாதிப்பு இருந்தாலோ
* தலை, கை, கால்கள் முறையற்று நடுங்குதல் இருந்தாலோ.
* வாய் விட்டு திடீரென அதிக மூச்சு விடுவது போன்று கண்டிப்பாய் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பொதுவில் பலமின்மை என்பதனை அதிக சோர்வுடன் இருந்தாலும் வழக்கில் கூறுவர். பலமின்மை என்பது சோர்வுடன் இருந்தாலும், ஒரு சாதாரண பொருளை (பால் டம்ளர்) தூக்க முடியாமல் இருப்பதோ, நகர்த்த முடியாமல் இருப்பதோ ஆகும். (உ-ம்) ஒருவரது வலது கால் பலமிழந்து இருக்கின்றது என்றால் அவரது வலது பக்க தண்டு வடமோ அல்லது இடது பக்க மூளையோ பாதிப்படைந்து இருக்கக்கூடும். இதனை செயல்பாட்டு பலவீனம் என்று கூறுவர்.

தலையில் அடிபட்டால்

சாதாரணமாக தலையில் இடித்துக் கொள்வதில் இருந்து, ரோட்டில் ஏற்படும் விபத்து வரை என பல காரணங்களால் தலையில் அடிபடக் கூடும். மண்டையில் சற்று அமுங்கினால் போல் இருந்தாலோ, மண்டை ஓட்டில் லேசாக விரிசல் தெரிந்தாலோ பாதிப்பு அதிகம் என்றே கொள்ள வேண்டும்.

இந்த பாதிப்பு ஏற்பட்டவர்...
* நினைவின்றி விழுந்தாலோ
* சற்று சாதாரணமாக எழுந்து விட்டு பின் நினைவின்றி விழுந்தாலோ
* கண் கருவிழிகள் இருபுறமும் சமமாக அசையாமல் விட்டாலோ, கருவிழி விரிந்தாற் போல் தெரிந்தாலோ
* கை, கால் அசைவுகள் மிகவும் குறைந்தாலோ, அசைவின்றி இருந்தாலோ இவருக்கு மிக அவசர சிகிச்சை தேவை என்பதனை உணருங்கள். சிலர் அடிபட்ட சில மணி நேரங்கள், சில நாட்கள், சில வாரங்கள் கூட கழித்து

மயங்கி விழுவர். இவர்களுக்கு,
* தலைவலி
* குழம்பிய பேச்சு
* வாந்தி
* மூக்கிலும், காதிலும் இருந்து ரத்தக் கசிவோ அல்லது திரவ கசிவோ இருக்கும்.

ஆகவே தலையில் அடிபட்டு ஒன்றுமில்லை என்றாலும், மருத்துவர்கள் சில வாரங்கள் வரை அவரை கண்காணிப்பில் இருக்கச் சொல்வர். மண்டையில் அடிபட்டு ரத்தப்போக்கு சற்று அதிகமாக தெரிந்தால் மிகவும் அதிர்ச்சி கொள்ள வேண்டாம். முகம், தலை இவற்றுக்கு ரத்த ஓட்டம் அதிகம் என்பதால், சிறு காயம் கூட அதிக ரத்தப்போக்கினைத் தரும்.

இருப்பினும், காயம் சிறியதா, பெரியதா என்பதை மருத்துவரே முடிவு செய்யவேண்டும். இம்மாதிரி அடிபடும் ஒருவருக்கு சுத்தமான கட்டை விரல் கொண்டு லேசாக அந்த இடத்தை அழுத்த, சிறிய காயங்கள் கட்டுப்படும். மருத்துவமனை செல்லும்வரை சுத்தமான பேண்டேஜ் துணி கொண்டு, காயம்பட்ட இடத்தில் லேசான அழுத்தம் கொடுக்கலாம்.

காயம் அடைந்தவரை உட்கார வைத்து, அவர் தலையையும், தோள்பட்டையையும் நாம் பின்னால் பிடித்துக் கொள்ளவேண்டும். மருத்துவர் மூலம் நரம்பு பிரச்சினைகளை அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சைகள் பெறுங்கள். நலம் பெற்று வாழுங்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------



சுய இன்பத்தால் வரும் பிரச்சினைகள்:

இவை அனைத்து அதிக சுய இன்பத்தால் ஏற்படும் பிரச்சினைகள். தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும்.

1) இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும்.
2) முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும்.
3) ஆண்குறி சுருங்கி சிறுத்து காணப்படும்.
4) ஆண்குறி வலுவிழந்து அதில் நிறைய நரம்புகள் தோன்ற ஆரம்பிக்கும். எவ்வளவு நரம்பு அதிகரிக்குதோ அந்த அளவு உங்கள் ஆண்குறி பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.
5) ஆண்குறி முன் போல விறைப்பு இல்லாமல் விறைப்பு குறையத் துவங்கும்.
6) கன்னம் ஒட்டி போகும்.
7) கண் குழி விழுந்து கருவளையம் உண்டாகும்.
8) உடல் எடை குறையும்.
9) உடலில் உள்ள நரம்பு பாதிக்கப்பட்டு கைகளில் நரம்பு புடைத்து வெளியே தெரிய ஆரம்பிக்கும்..
10) எப்போதுமே சோர்வாக இருக்கும்.
11) கை அடிக்க ஆரம்பித்து 10 அல்லது 20 நொடிகளில் விந்து வெளியேறிவிடும்.
12) உங்களால் ஒரு 15 நிமிடம் கூட வெறுமனே கவர்ச்சிப் படம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதற்குள் துடைக்க துணியை தேடுவீர்கள்.
13) ஆண்மைக் குறைவு உண்டாகும்.
14) பயம் நடுக்கம் படப்பிடிப்பு அதிகமாகி ஒரு புதிய மனிதரை சந்திக்க தயங்குவீர்கள்.
15) மலம் கழிக்க முக்கினால் கூட விந்து வெளியாக ஆரம்பிக்கும்.
16) ஸ்டாமினா குறைந்து மாடிப்படி ஏறினால் கூட மூச்சு வாங்கும்.
17) நியாபக மறதி ஏற்படும்.
18) பெண்களை பார்த்தாலே பயம் வரும்.
19) நான் ஆண் தானா? என்னால் ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியுமா என் சந்தேகம் தோன்றும்.
20) உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு உண்டாகும்.
21) மன அழுத்தம் அதிகமாகும்.
22) உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து லேசாக குளிர் அடித்தால் கூட உங்களுக்கு அதிகம் குளிரும்.
23) தும்மினால் கூட சிறுநீரும் விந்துவும் வெளியேறும்.
24) எப்போதும் எதற்காகவாது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
25) பெண்கள் மீது வெறுப்பு உண்டாகும்.
26) சிறுநீரில் விந்து கலந்து வெளியாக ஆரம்பிக்கும்.
27) கவர்ச்சி படம் பார்த்து ஆண்குறி விரைத்த மறு வினாடியே ஈரம் ஆகிவிடும்.
28) கை கால் மூட்டு இணைப்புகளில் வலி உண்டாகும்.
29) தசைப்பிடிப்பு உண்டாகும்.
30) எந்த காரியத்திலும் கவனம் செலுத்த முடியாது.
31) கவர்ச்சிப் படம் பார்க்கும் போது ஆண்குறி கொஞ்ச நேரம் விறைத்து இருக்கும் போது ஆண்குறிக்கு கீழே உள்ள விதைப்பை வலிக்க ஆரம்பிக்கும்.
32) யாரிடமும் பேச பிடிக்காமல் தனியாகவே இருக்க விரும்புவீர்கள்.
33) சிறுநீர் மண்டலம் பாதிக்கப்பட்டு சரியாக சிறுநீர் கழிக்க முடியாது.
34) காது கேட்கும் திறனும் கண் பார்வை திறனும் மங்க ஆரம்பிக்கும்.
35) உங்கள் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்து உங்களால் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியாத சூழ்நிலை உண்டாகும்.
36) அதிக சுய இன்பத்தால் முழுமையாக விறைப்பு தன்மை குறைந்து ஒரு பெண்ணை வாழ்நாளில் எப்போதுமே திருப்திபடுத்த முடியாமல் போகும்.
இவை அனைத்து அதிக சுய இன்பத்தால் ஏற்படும் பிரச்சினைகள். தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும். அதனால் வாரம் ஒரு முறை மட்டும் சுய இன்பம் செய்யுங்கள். அது தான் உங்கள் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது.
சுய இன்பம் உடலின் மொத்த நரப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. நரம்பு மண்டலம் ஒன்றுதான் பாதிக்கப்பட்டால் சரி செய்ய இயலாத ஒன்று என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் நரம்பு மண்டலத்தை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.
மேலும் சிலர் ஆண்மைக் குறைவை சரி செய்ய அதிக பணம் செலவு செய்து சித்த மருத்துவதை நாடுவர். அவை அனைத்தும் ஏமாற்று வேலையே. ஆண்மைக் குறைவை சரி செய்ய ஒரே மருந்து காலம் தான். ஒரு ஆறு மாதம் சுய இன்பம் செய்யாமல் இருந்து பாருங்கள் உங்கள் உடல் மற்றும் ஆண்குறியில் நல்ல மாற்றம் தெரியும். இதை தான் சித்த மருந்து சாப்பிட்டு சுய இன்பம் செய்யாமல் இருக்கும் போது உங்கள் உடல் மற்றும் ஆண்குறியில் நல்ல மாற்றம் தெரியும். அதை நீங்கள் மருந்து தான் செய்தது என்று நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் ஆறு மாதம் சுய இன்பம் செய்யாமல் இருந்தாலே உங்கள் ஆண்மைக் குறைவு சரியாகிவிடும்.
அதனால் வாரம் ஒருமுறை மட்டும் சுய இன்பம் செய்து உங்கள் உடல் நலத்தையும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் நல்ல முறையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிப்பை நீங்கள் அனைவரும் share பண்ணுங்கள். அப்போது தான் அதிக இளைஞர்கள் பார்த்து பயனடைவார்கள். நீங்களும் இதைப் பார்க்க பார்க்க உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாடு வரும். இவ்வளவு பிரச்சனை உள்ள சுய இன்பம் நமக்கு தேவையா என எண்ணம் தோன்றும்

Monday, September 29, 2014

எப்போதும் ஃபிட்டாக இருக்க - How to stay super fit always

ஒரு மனிதனுக்கு பெரிய சொத்தே ஆரோக்கியமான உடல் தான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதனால் ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் ஓடியாடி வேலை பார்க்க முடியும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நம்மில் பலரும் உடலை வருத்திக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவாக சின்ன வயதிலேயே பல உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.
கட்டமைப்பான உடல் என்பது ஆரோக்கியத்தை குறிக்கும். கட்டமைப்பான உடலைப் பெற, உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் சேர்ந்து செயல்பட வேண்டும். மற்றொரு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது உடற்பயிற்சி. கட்டமைப்பான உடலுக்கு மனதும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
உடலை கட்டுக்கோப்புடன் வைத்து நீண்ட நாள் வாழ்வதற்கு நாங்கள் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி இதில் அடக்கம். உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள வல்லுனர்கள் கூறும் வீட்டு சிகிச்சைகள் இதோ:
1. சருமத்திற்கு வயதேறாமல் இருக்க கடல் உணவுகள் 
மீன்களை வாரம் மூன்று முறை உட்கொண்டால், சரும சுருக்கம் மற்றும் தொய்வை 30 சதவீதம் வரை குறைக்கும். அதற்கு காரணம் கடல் உணவுகளில் வளமையான அளவில் புரதம், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது கொலாஜனுக்கு புத்துணர்வு கொடுத்து தசைகளை வளுவளுவென வைத்திருக்கும். சால்மன் மீன்களில் அஸ்டாக்சன்தின் என்ற ஆண்டி-ஆக்சிடன்ட் உள்ளது. இது உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும்.
2. மன அழுத்தத்தை நீக்க க்ரீன் டீ 
க்ரீன் டீயில் உள்ள கூட்டுப்பொருட்கள், இரத்த சர்க்கரையை எரிப்பொருளாக உங்கள் மூளை பயன்படுத்த உதவும். மேலும் ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் ஹார்மோனான என்டோர்பின் உற்பத்தியையும் இது ஊக்குவிக்கும். அதனால் அடுத்த முறை ஆற்றல் திறன் குறையும் போது, ஒரு கப் க்ரீன் டீயை பருகுங்கள்.
3. திடமான இதயத்திற்கு 
வால்நட் தினமும் 5-6 வால்நட்களை உண்ணுமாறு இதய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நெஞ்சு வலி ஏற்படும் இடர்பாட்டை பாதியாக குறைக்கிறதாம். ஆயுளையும் 3 வருடங்களுக்கு அதிகரிக்கிறதாம். இந்த மொறுமொறு நட்ஸில், இதயத்தை குணமாக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் வளமையாக உள்ளது.
4. நல்ல நினைவாற்றலுக்கு மஞ்சள் 
உங்கள் உணவுகளில் மஞ்சளை சேர்த்துக் கொண்டால், உங்கள் நினைவாற்றல் குறைந்தது 30 சதவீதமாவது அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் மஞ்சளில் உள்ள கர்குமின். இது மூளைக்கு புத்துணர்வை உண்டாக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகும்.
5. சுவாசப்பயிற்சியால் மன அழுத்தத்தை நீக்குங்கள் 
வயிறு மூலமாக சுவாசித்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை நீக்குங்கள். 6 எண்ணும் வரை உங்கள் மூக்கின் வழியாக மெதுவாவும் ஆழமாகவும் மூச்சை உள்ளிழுக்கவும். அப்படி செய்யும் போது வயிற்று பகுதி அமைதி பெற்று விரிவடையும். 4 எண்ணும் வரை அப்படியே இருந்து, பின் வாயின் வழியாக மெதுவாக மூச்சை வெளியேற்றவும். 7 எண்ணும் வரை இதனை செய்யவும். நன்றாக உணரும் வரை இதனை தொடர்ந்து செய்யுங்கள்.
6. தூக்கத்தை கொண்டு வலிகளை குறையுங்கள் 
உங்களுக்கு அடிக்கடி தலைவலி, முதுகு வலி, மூட்டு வலி அல்லது இதர வலிகள் ஏற்படுகிறதா? கவலையை விடுங்கள், போய் தூக்குங்கள். நன்றாக தூங்கினால், ஒரு மாதத்தில், உங்கள் அசௌகரியங்கள் அனைத்தும் பாதியாக குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தூக்கம் உங்கள் வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அதனால் அது அழற்சியை குறைத்து, பாதிப்படைந்த திசுக்களை வேகமாக ஆற வைக்கும்.
7. இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த லவங்கப்பட்டை 
ஆராய்ச்சியாளர்களின் படி, உங்கள் உணவில் தினமும் 1/2 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டால், அது உங்கள் இரத்த அழுத்தத்தை 29% அல்லது அதற்கு மேலாகவும் கட்டுப்படுத்தும். உங்கள் சிறு குடலில் கார்ப் உறிஞ்சுவதை குறைக்கும்.
8. காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 
வண்ணமயமான காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால் வியாதிகளில் இருந்து அது நம்மை பாதுகாக்கும். கேரட், மிளகு மற்றும் வெண்டைக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிக வண்ணம் இருந்தால் அதிக நன்மை. காயின் நிறமி சுவாச குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் கிருமிகளால் உள்ளே நுழைய முடியாது. மேலும் நோய் எதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
9. கிருமிகளை கொல்வதற்கு தேன் 
பாய்ஸ்சுரைஸ் செய்யப்படாத தேனில் இயற்கையான ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் குணப்படுத்தும் என்சைம்ஸ் அடங்கியுள்ளது. அதனால் நோய்வாய்பட்டிருக்கும் போது, அதனை உட்கொண்டால், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே குணமாகும். சைனஸ் பிரச்சனை மற்றும் அனைத்து வகையான சளி பிரச்சனைகளை உண்டாக்கும் கிருமிகளையும் இது கொள்ளும்.
===========

How to stay super fit always?

A man of great wealth and a healthy body . If you can draw the picture on the wall . If the body is healthy so you can see rushing . But today , many of us were working with the body hurt . As a result, such a young age , causing many health problems .

The health of the body representing the construct . To construct the body , eating habits , lifestyle must act together . Exercise is another important consideration . Construct is important for the body and mind .

We have some tips on how to survive a long day in order to keep up with the body . Food , including lifestyle and fitness . Home treatments are available to keep the structure of the body , experts say :

1. Seafood to be Anti Aging skin
Consumption of fish three times a week , up to 30 percent and reduce skin wrinkles and sag . Due to the level of the sea foods rich in protein , minerals and is rich in nutrients such as omega-3 fats . It is refreshing to collagen valuvaluvena keeps the muscles . Astakcant salmon fish of the year - is the oxidant . This will reduce the wrinkles in your skin .



Remove the stress of Green Tea
Compounds in green tea , blood sugar will help to fuel your brain . Harmonana to promote energy efficiency and encourage the production of endorphins . So next time when energy efficiency is reduced , drink a cup of green tea .


Solid heart
Doctors recommend heart walnuts eat 5-6 walnuts daily . It reduce halved the risk of heart attack . your life time will increase by 3 years . In this crispy Nuts , heart healing , prosperity is Mono saturated fats .


Yellow for good memory
Add the turmeric to your diet , your memory will increase to at least 30 percent , according to experts . Karkum because it 's in yellow . It revitalized the brain , which can lead to powerful anti - aksitanttakum .


Delete the stress cuvacappayirci
Breathe through the abdomen to remove stress and tension . 6 counting the breath deeply and slowly through your nose, inhale. While doing so, the abdominal area will expand peace . Counting up to 4 remains intact , then exhale slowly through the mouth to the left . 7 Repeat this until the epilogue . It feels good to work.


Reduce pain and sleep
You have frequent headaches , back pain , joint pain or other aches happen ? Do not worry , Pick go . If you sleep well , in a month , according to research that will be half of your inconvenience . Increases production of growth hormones in your sleep . So it reduces inflammation , and heal damaged tissue will keep pace .


Cinnamon to control blood pressure
According to researchers , in your diet daily 1 / 2 teaspoon lavankappattaiyai add 29 % or more , and controlling your blood pressure . Corp. of your small intestine to reduce the suction .


Vegetables to boost the immune system
Colorful vegetables consumption, as it protects us from diseases . Carrots , pepper and okra boost your immune system . Greater benefit if more color . Cain keeps pigment respiratory tract healthy . So germs can enter the inside . In addition to increasing the production of immune cells .


Honey to kill germs
Honey has been payscurais natural anti - encaims includes payatiks and healing . So when the ailing , the antidepressants , three days before the healing. Sinus problems and colds all kinds of problems which can lead to germs .


அதிகப்படியான தொடை சதையைக் குறைக்க சில எளிய பயிற்சிகள்

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன.ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததா? என்றால் நிச்சயம் இல்லை. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை. எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது.

உடலுக்கு ஒவ்வாத உடற்பயிற்சிகள் சில நேரங்களில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். தொடைப்பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த பயிற்சிகள் அனைத்தும் அதிகப்படியான தொடை சதையைக் குறைப்பதற்கே, பொதுவாகவே சற்று பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு இந்த பயிற்சிகள் பயன் தராது. சரி, இப்போது பயிற்சிக்குப் போகலாம்.


how reduce heavy thighs

* பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்.

* கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி இருக்கட்டும். அதாவது, கட்டைவிரல் முதுகைப் பார்த்தவண்ணம் இல்லாமல், வயிற்றின் மீது இருக்கட்டும்.

* இப்பொழுது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும். சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுற்றவும். பின்னர் அடுத்த 60 வினாடிகள் அதே போல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுற்றவும்.

* இதுபோல் மாறி மாறி ஆறுமுறை செய்யவும். இந்தப் பயிற்சி செய்யும்போது பாதம் முழுவதும் தரையில் அழுத்தமாக ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

* இப்பொழுது அதே நிலையில் நின்றவாறு, வலது பக்க இடுப்பை எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம் முன்னோக்கித் தள்ளவும். அதே நிலையில் இருந்தவாறு, இடுப்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகளும், பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும் சுழற்றவும். சுற்றி முடித்தவுடன், மறுபடியும் நேராக நின்று கொள்ளவும்.

* இப்பொழுது இடது பக்க இடுப்பை அதே போல் முன்னோக்கித் தள்ள வேண்டும். பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும், இடமிருந்து வலமாக 30 வினாடிகளும் மாறி மாறி சுழற்றவும். முடித்தவுடன் மறுபடியும் நேரான நிலைக்கு வந்துவிடவும்.

* கால்களை நகர்த்தாமல், இப்பொழுது இடுப்பை மட்டும் வலதுபுறமாக சுமார் 15 செ.மீ முதல் 20 செ.மீ வரை தள்ளவும். இதே நிலையில் இருந்தவாறு, உடம்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகள் வரை சுற்றவும். பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகள் சுற்றவும். முடித்த பின்னர் இடுப்பை பழையபடி நேரான நிலைக்கு கொண்டு வந்துவிடவும்.

* மறுபடியும் இடுப்பை அதே போல் இடதுபுறமாக 15 செ.மீ முதல் 20 செ.மீ வரை தள்ளவும். இதே நிலையில் உடம்பை இடமிருந்து வலமாக 30 வினாடிகளும், பின்னர் வலமிருந்து இடமாக 30 வினாடிகளும் சுற்றவும். முடித்த பின்னர் இடுப்பை பழையபடி நேரான நிலைக்கு கொண்டு வந்துவிடவும்.

இந்தப் பயிற்சியை நடுவில் இடைவெளி எதுவும் இல்லாமல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். எவ்வளவு தூரம் இடுப்பை சுற்ற முடிகிறதோ அவ்வளவு சுற்றினால் போதும். அதிக தூரம் சுற்ற முடியவில்லையே என்ற கவலை வேண்டாம். பயிற்சியைத் தொடர்ந்து செய்ய செய்ய நாளடைவில் சுற்றும் தூரம் அதிகரிக்கும்.

Sunday, September 21, 2014

சூரியகாந்தி விதை சத்துப்பட்டியல்:


பாதாம், முந்திரி போல பருப்பு வகைகளில் முக்கியமானது சூரியகாந்தி விதைகள். இனிப்பு சுவையுடன் உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் இதனை கொறித்து உண்கின்றன. சூரியகாந்தி விதையில் உள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா...

சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான எண்ணெய் தயாரிக்கப் பயன்படும். உலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. சூரியகாந்தி விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுடைய இதனை மற்ற பருப்புகள் போலவே மென்று தின்னலாம். 100 கிராம் விதைகள் 584 கலோரி ஆற்றல் வழங்கவல்லது. 

இதில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்களே உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகின்றன. லினோலெய்க் ஆசிட் எனப்படும் பூரிதமாகாத கொழுப்பு இதில் மிகுதியாக உள்ளது. இது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும்.

நல்ல கொழுப்புகளான எச்.டி.எல். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். சூரியகாந்தி விதைகள் அதிக புரதம் உடைய பருப்பு வகையாகும். டிரிப்டோபான் எனும் சிறப்புக்குரிய அமினோ அமிலம் இதிலுள்ளது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. 100 கிராம் சூரிய காந்தி விதைகள் 21 கிராம் புரதம் வழங்க வல்லது.

இது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 37 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களான குளோரோஜெனிக் அமிலம், குயினிக் அமிலம், காபிக் அமிலம் அதிக அளவில் உள்ளன. குளோரோஜெனிக் அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.
கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் 'கிளைகோஜன்' அளவை கட்டுக்குள் வைப்பதிலும் உதவும். 'வைட்டமின்-ஈ', சூரிய காந்தி விதைகளில் மிகுந்துள்ளது. 100 கிராம் விதையில் 35 கிராம் 'வைட்டமின் ஈ' உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். செல் சவ்வுகள் முழு வளர்ச்சி பெற உதவும்.

ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் ஆற்றலும் இதற்கு உண்டு. நியாசின், போலிக் அமிலம், தயாமின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் சூரிய காந்தி பருப்பில் நிறைய உள்ளது.

போலிக் அமிலம் டி.என்.ஏ. இணைப்புக்கு அத்தியாவசியமானது. நியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், மக்னீசியம், செலினியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன.

சாப்பிடும் முறை.....

* சூரியகாந்தி விதைகளை சிறிது உப்பு சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.
* சாலட்களிலும் சுவைக்காக இது சேர்க்கப்படுவது உண்டு.
* சாஸ் போல தயாரித்து பிரைடு-ரைஸ் உணவுகளில் தெளித்து சாப்பிடலாம்.
* கேக் மற்றும் ரொட்டி வகைகளில் சூரியகாந்தி விதைகள் சேர்ப்பார்கள்.
* ஜெர்மனியில் 'சன்னென் புளுமென்பிராட்' என்ற பெயரில் சூரியகாந்தி 'பிரெட்' பிரபலம்.
* சூரியகாந்தி விதையில் வெண்ணெய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Saturday, December 14, 2013

Six pack is Dangerous

சிக்ஸ் பேக் உடலமைப்பு உயிருக்கு உலை வைக்கும்.

Pred paťdesiatimi rokmi sperku bojové umenie, kickboxing, a dospelí učia a udržuje postavu


ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்பு, குத்துச்சண்டை, ஆகியவற்றை வாலிபர்கள் கற்றுக்கொண்டு உடலமைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற்போது ஜிம்மில் 5 முதல் 10 மணி வரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உடலமைப்பை உருவாக்குவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சமீப காலமாக படங்களில் பாலிவுட்டில் அமீர்கான், சல்மான்கான், கோலிவுட்டில் சூர்யா, பரத் போன்ற நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்பை காட்டும் வகையில் நடித்தனர். இந்த சிக்ஸ்பேக் ஆசை, இன்றைய  இளைஞர்களிடம் தீயாக பரவியுள்ளது. அழகின் முகவரி எது என்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ்பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள்.

அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்தின் மூலம் இயல்பாக கரைந்து போகும். சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும். இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுபகுதியில் உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். ஒரு முறை சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டாலும் அதை தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம். அதனால் தான் உடற்பயிற்சி மூலம் இதை பெற வேண்டும். அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு.

ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோடீரோன் இயல்பாக சுரக்கும் இந்த ஹர்மோனை அதிக அளவில் சுரக்க செய்வது ஸ்டீராய்டு. இந்த ஹார்மோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும். தசைகள் அளவில் பெரிதாகும். அதன் மூலம் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பயங்கரமானவை..முதலில் ஏற்படுவது ஆண்மைக்குறைவு தான். மலட்டுத்தன்மை, குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர், மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, பார்வைக்குறைபாடு, போன்றவை ஏற்படவும் வாய்ப்புள்ளது. அழகான ஆரோக்கியமான உடலுக்கு அன்றாடம் எளிதான உணவு வகைகளும் இயல்பான உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் சொல்லுவது
.

சிக்ஸ் பேக் உடலுக்கு தயாராகுபவர்கள், உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும், நீரின் அளவினை 40சதவீகிதம் அளவுக்கு குறைத்தே ஆகவேண்டும். மேலும் புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்து கொள்வதால் கல்லீரல், சிறுநீரகம், இரண்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முற்றி செயலிழந்து விடக்கூடிய அபாயமும் இருக்கிறது. அதிக அளவு உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பம் அதிகரிக்கும் இவ்வாறு கூறுகிறார்கள்.

எலும்பு சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறியது.


சர்க்கரை, தண்ணீர், உப்பு ஆகிய மூன்றையும் நீக்கிவிட்டால் உயிர் வாழ்வது கடினம் தான். அதிலும் புரதம், மாவுச்சத்து, இல்லாமல் கடும் உடற்பயிற்சி செய்யும் போது உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். மனிதனுக்கு வலிமையான தசைநார்களே தேவை. உடல் வலி, காயம், ஏற்படுவதைத் தடுக்கவும் முதுகுவலி வராமல் காக்கவும் தசை நார்கள் பயன்படுகின்றன.

ஆனால் சிக்ஸ் பேக் வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச்சனைகள்தான் அதிகம். அழகுக்கு ஆசைப்பட்டு தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞர்கள் படையெடுக்கின்றனர். ஆனால் நிரந்தர அழகுக்கு ஒருவர் முறையாக உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத்தலே முக்கியம். சிக்ஸ்பேக் அழகு என்பது தற்காலிகமானதே, நீடித்தது அல்ல.  அழகை விட ஆரோக்கியமே முக்கியம்.

Sunday, October 13, 2013

பெண்கள் செய்ய கூடிய உடற் பயிற்சிகள் எவை


பெண்கள் மேற்கொள்ளத் தகுந்த உடற்பயிற்சிகளை நான்கு வகைப்படுத்தலாம். அவை..
1) ஏரோபிக்ஸ் வகை உடற்பயிற்சி.
2) ஆனோ ரோபிக் உடற்பயிற்சி.
3) யோகாசன பயிற்சிகள்.
4) ஸ்கிப்பிங் பயிற்சி
இந்த உடற்பயிற்சிகளை எந்த வயது பெண்ணும் செய்யலாம். உடல் உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும்
இருக்க இவற்றை செய்யலாம்.
• சில பெண்களுக்கு கைகள் மெலிதாக இருக்கும். உடம்பு நன்றாக இருந்து கைகள் குச்சி மாதிரி இருந்தால், அவர்கள் ஒரு கையால் மிகமிக எளிதாக தூக்க கூடிய ரூபிடாய் என்கிற சின்ன வெயிட்டை கையில் கீழிலிருந்து மார்பு வரை தினமும் கையை மாற்றி தூக்கி, 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும். காலை சாதாரணமாக வைத்து நின்று கொண்டு, கையை மட்டும் மேலே தூக்கி, கீழே இறக்க வேண்டும். இதை போன்று 5 நிமிடம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
• இடுப்பு கொடி போன்று இருப்பது அழகல்ல. உறுதியுடனும், ஓரளவு சதை பிடிப்புடனும் இருப்பதுதான் அழகும், ஆரோக்கியமும் ஆகும். இப்படி அழகான வனப்பான இடுப்பை பெற ஏரோபிக் ஸில் கிவ்னாட் என்கிற பயிற்சியினை தொடர்ந்து பெண்கள் செய்து வந்தால் பயன் பெறலாம்.
• பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்து மடக்கி குறைந்தது பத்து நிமிடம் செய்து வந்தால் தோள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.
• குச்சியான பாதம் பெற்றவர்கள் ஏரோபிக்ஸ் பயிற்சியுடன், கால்களை அகலமாக விரித்து மறுபடியும் ஒன்று சேர்க்கும் பயிற்சியினையும், நின்று கொண்டே ஓடும் டிரெல் மில் பயிற்சியினையும், மெல்லிய நடை பயிற்சி அல்லது ஓடுவதை மேற்கொண்டால் நாளடைவில் கால்கள் உறுதி பெறும்.

Sunday, September 22, 2013

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight

உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறைப்பதை பற்றி தான் பல பேரும் ஆலோசனை பெறுவார்கள். அதனை பற்றிய பல சிகிச்சை முறைகளை தான் அன்றாடம் பத்திரிக்கைகளிலோ அல்லது தொலைக்காட்சியிலோ பார்க்கிறோம். ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனையும் இருக்கும் அல்லவா?


ஆனால் அவர்களின் வீதம் குறைவாக இருப்பதால், பலர் அதை பற்றி அறிந்து கொள்வதில்லை. அதற்காக அவர்கள் பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா? ஜீரோ சைஸ் உடல் கட்டமைப்பை கொள்வதற்கு விரும்பும் இந்த காலத்தில், ஆரோக்கியமான உடல் கட்டமைப்பின் மீது கவனம் செலுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு உடல் எடை குறைவாக இருந்தால், அதனை ஒருசில உணவுகளின் மூலம் சரிசெய்யலாம்.உடல் எடையை அதிகரிக்க உதவும் 25 வகையான உணவுகளை பட்டியலிட்டுள்ளது.



சால்மன் மீன்
தினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.




சூரை மீன்
சூரை மீன்களில் உள்ள அதிமுக்கியமான கொழுப்பமிலங்கள், உடல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யாமல், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவி புரியும். அதிலும் மதிய உணவில், சீரான முறையில் சூரை மீன் சாலட்டை சேர்த்துக் கொண்டால், கொஞ்சம் வேகமாக உடல் எடையானது அதிகரிக்கும்.


இறால்
கடல் உணவு பிரியர்களா? அப்படியானால் தினமும் இரண்டு முறை இறால்களை சாப்பிடலாம். அதிலுள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், உடலில் கலோரிகளை தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.





கோழியின் நெஞ்சுக்கறி
கோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து, மயோனைஸ் தடவி மதிய உணவோடு சாப்பிடலாம். இது சுவைமிக்க உணவாக மட்டுமல்லாமல், உடல் எடை கூடவும் உதவி புரியும்.


கொத்திய மாட்டிறைச்சி
சத்துள்ள கொத்திய மாட்டிறைச்சியை சாண்ட்விச் உடன் சேர்த்து உண்டால், உடல் எடை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள கொழுப்பு சுலபமாக உள்ளிறங்குவதால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.




முட்டை
உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் கலந்துள்ள முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பிணியும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.




சீஸ்/பாலாடைக் கட்டி
நுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில், சைவ உணவு உண்ணுபவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகம் உள்ளதால், உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும். அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.


சிவப்பு இறைச்சி
போதுமான அளவில் சிவப்பு இறைச்சியை உண்டால், உடலில் புரதச்சத்து உள்ளிறங்கும். அதனை பல வகையில் சமைத்து சாப்பிடலாம். சாஸ் உடன் சேர்த்து அதனை உணவோடு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் வயிறு நிறைவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.



ஓட்ஸ்
ஒரு பௌல் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவாக அமையும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை உடனே இது கொடுத்து விடும். ஆகவே ஓட்ஸ் உடன் சேர்த்து க்ரீம், நட்ஸ் மற்றும் வாழைப்பழங்களை சேர்த்து சுவையை அதிகரித்து கொள்ளுங்கள்.
Ōṭs

கைக்குத்தல் அரிசி
கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.





பாஸ்தா
ஒரு கிண்ணத்தில் சுவைமிக்க பாஸ்தாவை போட்டு சாப்பிட்டால், அது திருப்தியான உணவாக அமையும். அதிலும் இது வயிற்றை மட்டும் நிரப்பாமல், அதிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.



கோதுமை சப்பாத்தி
கோதுமையால் செய்யப்பட்ட ஒரு துண்டு சப்பாத்தியில் 13 கலோரிகள் அடங்கியுள்ளது. ஆகவே கோதுமை சப்பாத்தியில் பிடித்த ஜாம், வெண்ணெய் அல்லது மயோனைஸ் தடவி சாப்பிட்டால், சுவைமிக்க காலை உணவாக அது அமையும். இதனால் வயிறும் வேகமாக நிறையும். இது உடலால் மெதுவாக உட்கொள்ளப்படுவதால், சுலபமாக உடல் எடை அதிகரிக்கும்.





பீன்ஸ்
விலங்கில் உள்ள புரதச்சத்துக்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அதனை சைவ உணவு உண்ணுபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சாஸ் உடன் அதை சமைத்தல், அதில் 300 கலோரிகள் அடங்கியிருக்கும். வேண்டுமெனில் அதனுடன் சில பீட்டா ரொட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், சுவைமிக்க உணவாக அது அமையும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்.





உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், சத்தான கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.



சேனைக்கிழங்கு
அதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு உள்ளது. ஒரு முறை அதனை உண்ணும் போது, உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கும். அதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.


அவகேடோ (வெண்ணைப் பழம்)
பட்டர் ப்ரூட் என்றழைக்கப்படும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சூப், சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, தேவையான கொழுப்பையும் சேர்க்கும். இதனால் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.



வேர்க்கடலை வெண்ணெய்
அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.



பாதாம் வெண்ணெய்
ஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையாக விளங்குகிறது பாதாம் வெண்ணெய். மேலும் இதில் அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் நிறைந்துள்ளது. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்டுகளில் சேர்த்த சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதனுடன் சேர்த்து உடல் எடையும் அதிகரிக்கும்.



ஆலிவ் எண்ணெய்
சாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமலும் காக்கும்.



பாதாம் பருப்பு
பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இதனை உடல் எடை கூடுவதற்கான ஆரோக்கியமான சில விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை உண்ணுவதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.


ஆளி விதை
ஆளி விதையில் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அடங்கியுள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை காத்து, உடலை சீரான முறையில் செயல்பட உதவும். எனவே தினமும் போதுமான அளவை ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.


முந்திரி
நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கை முந்திரி பருப்பை சாப்பிடுங்கள். அதிலுள்ள முக்கிய எண்ணெய்கள், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் அணுக்களின் அடுக்குகளில் உய்வூட்டி, சருமம் மென்மையானதாக வைத்துக் கொள்ள உதவும்.




வாழைப்பழம்
வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது கூடுதல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. மேலும் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இது உடனடி சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவி புரியும்.


தேங்காய் பால்
தேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பலவகையான உணவு வகைகளுக்கு சுவையை கூட்டவும் பயன்படுகிறது. தேங்காய் பாலில் செய்த உணவில் அதிக கலோரிகள் இருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்கும்.




உலர் திராட்சை
உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கை உலர் திராட்சையை சாப்பிட்டால், உடலில் ஆரோக்கியமான கலோரிகள் நிறையும். மேலும் நார்ச்சத்தும் தேங்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.