Monday, December 21, 2015

பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மண விழா காணும் பாக்கியம்

ஷஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகங்கள் போன்ற சடங்குகளை நடத்திக் கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மண விழா காணும் பாக்கியம் அமைகிறது.

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாக்க் கொண்டே அமைகின்றன. சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும். நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்து சென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்

பூஜையின் போது 64 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 64 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய அக்னி, சூரியன், சந்திரன், வாயு ஆகில நால்வரையும் சேர்த்துக் குறிப்பதற்காகத்தான் 64 கலசங்கள் என்பது ஐதீகம். பிரபவ முதல் விரோதிகிருது வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும், ஆங்கிரஸ முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும், ஈஸ்வர முதல் துன்பதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும், சித்திரபானு முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள். தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்து தான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர்

அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை. இப்படி அனைத்திலும் இறைவனை – அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையைஒரு மனிதன் 80 வயதில் பெறும் போது தான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறான்.

Sunday, December 13, 2015

இயற்கையில உள்ள காற்று எப்படி உருவாகுது ?



முதல் காற்று எப்படி உருவானதுன்னு யோசிப்போம்.

அது புவி பிறந்த காலம். சுமார் 4,540 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து 4,000 மில்லியன் வருடங்களுக்கு முன் வரை. அந்தக் காலத்தை ஹேடியன் காலம்னு (Hadean eon) சொல்வோம்

அதுக்கு முன்னாடி புவித்தோற்றக் காலத்தை மில்லியன் ஆண்டுகளில் வரிசைப்படுத்துனதைப் பார்த்துருவோமா.

1. Hadean Eon (4500-4000)
2. Archean Eon (4000-2500)
..........a. Eoarchean Era (4000-3600)
..........b. Paleorchean Era (3600-3200)
..........c. Mesoarchean Era (3200-2800)
..........d. Neorchean Era (2800-2500)
3. Proterozoic Eon (2500-500)
..........a. Paleoproterozoic Era (2500-1600)
..........b. Mesoproterozoic Era (1600-1000)
..........c. Neoproterozoic ERa (1000-541)
4. Phanerozoic Eon (500-Present)
..........a. Paleozoic Era (541-252.2)
..........b. Mesozoic Era (252-66)
..........c. Cenozoic Era (66-Present)

அந்த ஹேடியென் காலத்துலயே காற்று உருவாகி விட்டது. ஆனா, இப்ப இருக்குற மாதிரியான காற்று இல்லை. அப்பொழுதெல்லாம் பூமிக்கு அப்படியொன்றும் வலிமையான ஈர்ப்பு விசை கிடையாது. அதனால் தண்ணீர் மூலக்கூறுகள் கூட தப்பி விண்வெளிக்குச் சென்றுவிடும். ஹைட்ரஜன், ஹீலியம் இவற்றையெல்லாம் சொல்லவே வேண்டாம். ஒரே கொதிப்பும் வெடிப்பும்தான் பூமியில் அப்பொழுது. எங்கு பார்த்தாலும் எரிமலைகள்தான். குழம்புகள்தான். மெதுவாக இறுகத் துவங்கின.

இந்தக் காலத்தில்தான் பூமிக்கு ஒரு பெருமோதல் ஒன்னு நிகழ்ந்தது. இதை Great Impact Hypothesis-GIHனு சொல்வாங்க. செவ்வாய் கிரகம் அளவு பெரிதான ஏதோ ஒன்று (Theia-a protoplanet) பூமியை மோதிச் சென்றிருக்கவேண்டும். அதன் காரணமாக லேசாக இறுகிக்கொண்டிருந்த பூமிப் பந்தின் ஒரு சிறு பகுதி சிதறுண்டு போய் தனித்து இறுகி இன்றைக்கு அது நிலவாக இருக்கின்றது. 

அப்படி பூமியிலிருந்து சிதறுண்டு போனால் பூமியில் ஒரு பகுதி குறைவு பட்டிருக்க வேண்டுமல்லவா? அதுதான் இன்றைய பசிபிக் பெருங்கடல். இந்தோனேஷியாவில் இருந்து கொலம்பியா வரையில் இதன் தொலைவு19,800 கிலோமீட்டர்கள். இது நிலவின் விட்டத்தை விட 5 மடங்கு அதிகம். மொத்தப் பரப்பளவு 165.2 மில்லியன் சதுரகிலோமீட்டர்கள். நாம் அறிந்த ஆழம் 10லிருந்து 12 கிலோ மீட்டர் வரைக்கும். அந்த இடத்திற்குப் பெயர்தான் மரியானா அகழி (Mariana Trench).

சரி, அப்படியொரு மோதல் நிகழ்ந்ததும் இறுகிக்கொண்டிருந்த பொருட்களெல்லாம் மோதலினால் ஏற்பட்ட அதிவெப்பத்தில் மீண்டும் குழம்புகளாகின. எப்படியென்றால், குழம்புகளின் சிறுபகுதி ஆவியாகிப் போகுமளவிற்கு. அதிஉயர் வெப்பம். பாறைகள் ஆவியாகிப் பூமியைச் சூழ்ந்திருந்தன. இரண்டாயிரம் வருடங்களில் அந்தப் பாறை ஆவிகள் குளிர்ந்து படிந்தன. அப்பொழுது எடைகூடிய கார்பன்டையாக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் நீராவிகள் தோன்றின. எடைகூடிய கார்பன்டையாக்சைடு வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக நீராவிகள் அழுத்தப்பட்டு நீராக மாறி பெருங்கடல்கள் உருவாகின. அப்பொழுதே ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினம் இருந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.

அடுத்து வரும் காலம் ஆர்க்கியென் காலம். இந்தக் காலத்தில்தான் Cyanobacteria என்ற நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெற்று உயிர் வாழ்ந்திருக்கின்றன. விடுபொருளாக ஆக்சிஜனை வெளியேற்றியிருக்கின்றன. இவையே பூமிக்கு ஆக்சிஜனை அதிகளவில் தந்திருக்கின்றன. இந்த நுண்ணுயிரிகளின் படிமங்கள் Stromatolites படிமங்களாகக் கடற்படுகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு காலமும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் ப்ரொட்டரஸோவிக் (Proterozoic) காலத்தில்தான் ஆக்சிஜன் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. காரணம் புவியின் முதல் மேம்படுத்தப்பட்ட ஒரு செல் உயிரினம் Eukaryote.

மேற்சொன்ன இந்த மூன்று காலங்களையும் ஒரே தொகுப்பாக Precambrian Supereon என்பார்கள். (தமிழில் இதனை நீள்காலம் எனலாமா?) ஏனெனில், இக்காலங்களில் புவி மாறுதல்கள் மிக மெதுவாகவே நிகழ்ந்து வந்தன. மெதுவாக என்றால்... நம் எதிர்பார்ப்பில் மெதுவாக; அடுத்த காலமான ஃபெனெரஸோவிக் (Phanerozoic) காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒப்பிடும்பொழுது அது மிக மெதுவாக என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த நீள்காலத்தில்தான், Cyanobacteria நுண்ணுயிரியால் புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தாவரங்கள் தோன்றி ஒளிச்சேர்க்கையில் ஆக்சிஜனை வெளிவிட்டதும் அந்த நீள்காலத்தில்தான்.

தற்போதைய வளிமண்டலத்தில் வாயுக்களின் இருப்பு
..........நைட்ரஜன் - 78.084%
..........ஆக்சிஜன் - 20.947%
..........ஆர்கான் (argon) - 0.934%
..........கார்பன்டையாக்சைடு - 0.033%
..........இதர வாயுக்கள் - 0.002%

காற்றில் ஆக்சிஜனின் சதவீதம் 19.5க்குக் கீழே போனால் நமக்கு உளவியல் பிரச்சனைகள் ஏற்படும். 16 சதவீதத்திற்குக் கீழே போனால், நம் வாழ்க்கை மட்டுமல்ல ஏனைய உயிரிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறிதான்.

இப்பொழுது எப்படி இந்தக் கலவை நிலைப்படுத்தப்படுகின்றது என்றால், நம் வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக நைட்ரஜன் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. தாவரங்கள் மிருகங்கள் அழிந்துபட்டு மண்ணில் மட்கிப்போகும்பொழுது அல்லது எரிக்கப்படும்பொழுது எரிமலை வெடிப்புகள் என்றெல்லாம். ஆனால், அப்படி அதிகரிக்கும் நைட்ரஜன், சில உயிரினங்கள் அதனை உட்கொண்டும், மழை மற்றும் பனிப்பொழிவுகள் காற்றிலுள்ள நைட்ரஜனை கழுவித் துடைத்தும் சமன் செய்யப்பட்டு விடுகின்றது.

ஆக்சிஜன் அளவு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்பொழுது வெளிவிடப்படுகின்றது. அதே சமயத்தில் பெரும்பாலான உயிரினங்கள் அதனை உட்கொண்டு சமன் செய்து விடுகின்றன. 

உயிரினங்கள் வெளிவிடும் கார்பன்டையாக்சைடு தாவரங்களால் உட்கொள்ளப்பட்டு சமன்செய்யப்படுகின்றது.

இயற்கையில உள்ள காற்று எப்படி உருவாகுது ?



முதல் காற்று எப்படி உருவானதுன்னு யோசிப்போம்.

அது புவி பிறந்த காலம். சுமார் 4,540 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து 4,000 மில்லியன் வருடங்களுக்கு முன் வரை. அந்தக் காலத்தை ஹேடியன் காலம்னு (Hadean eon) சொல்வோம்

அதுக்கு முன்னாடி புவித்தோற்றக் காலத்தை மில்லியன் ஆண்டுகளில் வரிசைப்படுத்துனதைப் பார்த்துருவோமா.

1. Hadean Eon (4500-4000)
2. Archean Eon (4000-2500)
..........a. Eoarchean Era (4000-3600)
..........b. Paleorchean Era (3600-3200)
..........c. Mesoarchean Era (3200-2800)
..........d. Neorchean Era (2800-2500)
3. Proterozoic Eon (2500-500)
..........a. Paleoproterozoic Era (2500-1600)
..........b. Mesoproterozoic Era (1600-1000)
..........c. Neoproterozoic ERa (1000-541)
4. Phanerozoic Eon (500-Present)
..........a. Paleozoic Era (541-252.2)
..........b. Mesozoic Era (252-66)
..........c. Cenozoic Era (66-Present)

அந்த ஹேடியென் காலத்துலயே காற்று உருவாகி விட்டது. ஆனா, இப்ப இருக்குற மாதிரியான காற்று இல்லை. அப்பொழுதெல்லாம் பூமிக்கு அப்படியொன்றும் வலிமையான ஈர்ப்பு விசை கிடையாது. அதனால் தண்ணீர் மூலக்கூறுகள் கூட தப்பி விண்வெளிக்குச் சென்றுவிடும். ஹைட்ரஜன், ஹீலியம் இவற்றையெல்லாம் சொல்லவே வேண்டாம். ஒரே கொதிப்பும் வெடிப்பும்தான் பூமியில் அப்பொழுது. எங்கு பார்த்தாலும் எரிமலைகள்தான். குழம்புகள்தான். மெதுவாக இறுகத் துவங்கின.

இந்தக் காலத்தில்தான் பூமிக்கு ஒரு பெருமோதல் ஒன்னு நிகழ்ந்தது. இதை Great Impact Hypothesis-GIHனு சொல்வாங்க. செவ்வாய் கிரகம் அளவு பெரிதான ஏதோ ஒன்று (Theia-a protoplanet) பூமியை மோதிச் சென்றிருக்கவேண்டும். அதன் காரணமாக லேசாக இறுகிக்கொண்டிருந்த பூமிப் பந்தின் ஒரு சிறு பகுதி சிதறுண்டு போய் தனித்து இறுகி இன்றைக்கு அது நிலவாக இருக்கின்றது. 

அப்படி பூமியிலிருந்து சிதறுண்டு போனால் பூமியில் ஒரு பகுதி குறைவு பட்டிருக்க வேண்டுமல்லவா? அதுதான் இன்றைய பசிபிக் பெருங்கடல். இந்தோனேஷியாவில் இருந்து கொலம்பியா வரையில் இதன் தொலைவு19,800 கிலோமீட்டர்கள். இது நிலவின் விட்டத்தை விட 5 மடங்கு அதிகம். மொத்தப் பரப்பளவு 165.2 மில்லியன் சதுரகிலோமீட்டர்கள். நாம் அறிந்த ஆழம் 10லிருந்து 12 கிலோ மீட்டர் வரைக்கும். அந்த இடத்திற்குப் பெயர்தான் மரியானா அகழி (Mariana Trench).

சரி, அப்படியொரு மோதல் நிகழ்ந்ததும் இறுகிக்கொண்டிருந்த பொருட்களெல்லாம் மோதலினால் ஏற்பட்ட அதிவெப்பத்தில் மீண்டும் குழம்புகளாகின. எப்படியென்றால், குழம்புகளின் சிறுபகுதி ஆவியாகிப் போகுமளவிற்கு. அதிஉயர் வெப்பம். பாறைகள் ஆவியாகிப் பூமியைச் சூழ்ந்திருந்தன. இரண்டாயிரம் வருடங்களில் அந்தப் பாறை ஆவிகள் குளிர்ந்து படிந்தன. அப்பொழுது எடைகூடிய கார்பன்டையாக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் நீராவிகள் தோன்றின. எடைகூடிய கார்பன்டையாக்சைடு வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக நீராவிகள் அழுத்தப்பட்டு நீராக மாறி பெருங்கடல்கள் உருவாகின. அப்பொழுதே ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினம் இருந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.

அடுத்து வரும் காலம் ஆர்க்கியென் காலம். இந்தக் காலத்தில்தான் Cyanobacteria என்ற நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெற்று உயிர் வாழ்ந்திருக்கின்றன. விடுபொருளாக ஆக்சிஜனை வெளியேற்றியிருக்கின்றன. இவையே பூமிக்கு ஆக்சிஜனை அதிகளவில் தந்திருக்கின்றன. இந்த நுண்ணுயிரிகளின் படிமங்கள் Stromatolites படிமங்களாகக் கடற்படுகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு காலமும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் ப்ரொட்டரஸோவிக் (Proterozoic) காலத்தில்தான் ஆக்சிஜன் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. காரணம் புவியின் முதல் மேம்படுத்தப்பட்ட ஒரு செல் உயிரினம் Eukaryote.

மேற்சொன்ன இந்த மூன்று காலங்களையும் ஒரே தொகுப்பாக Precambrian Supereon என்பார்கள். (தமிழில் இதனை நீள்காலம் எனலாமா?) ஏனெனில், இக்காலங்களில் புவி மாறுதல்கள் மிக மெதுவாகவே நிகழ்ந்து வந்தன. மெதுவாக என்றால்... நம் எதிர்பார்ப்பில் மெதுவாக; அடுத்த காலமான ஃபெனெரஸோவிக் (Phanerozoic) காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒப்பிடும்பொழுது அது மிக மெதுவாக என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த நீள்காலத்தில்தான், Cyanobacteria நுண்ணுயிரியால் புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தாவரங்கள் தோன்றி ஒளிச்சேர்க்கையில் ஆக்சிஜனை வெளிவிட்டதும் அந்த நீள்காலத்தில்தான்.

தற்போதைய வளிமண்டலத்தில் வாயுக்களின் இருப்பு
..........நைட்ரஜன் - 78.084%
..........ஆக்சிஜன் - 20.947%
..........ஆர்கான் (argon) - 0.934%
..........கார்பன்டையாக்சைடு - 0.033%
..........இதர வாயுக்கள் - 0.002%

காற்றில் ஆக்சிஜனின் சதவீதம் 19.5க்குக் கீழே போனால் நமக்கு உளவியல் பிரச்சனைகள் ஏற்படும். 16 சதவீதத்திற்குக் கீழே போனால், நம் வாழ்க்கை மட்டுமல்ல ஏனைய உயிரிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறிதான்.

இப்பொழுது எப்படி இந்தக் கலவை நிலைப்படுத்தப்படுகின்றது என்றால், நம் வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக நைட்ரஜன் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. தாவரங்கள் மிருகங்கள் அழிந்துபட்டு மண்ணில் மட்கிப்போகும்பொழுது அல்லது எரிக்கப்படும்பொழுது எரிமலை வெடிப்புகள் என்றெல்லாம். ஆனால், அப்படி அதிகரிக்கும் நைட்ரஜன், சில உயிரினங்கள் அதனை உட்கொண்டும், மழை மற்றும் பனிப்பொழிவுகள் காற்றிலுள்ள நைட்ரஜனை கழுவித் துடைத்தும் சமன் செய்யப்பட்டு விடுகின்றது.

ஆக்சிஜன் அளவு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்பொழுது வெளிவிடப்படுகின்றது. அதே சமயத்தில் பெரும்பாலான உயிரினங்கள் அதனை உட்கொண்டு சமன் செய்து விடுகின்றன. 

உயிரினங்கள் வெளிவிடும் கார்பன்டையாக்சைடு தாவரங்களால் உட்கொள்ளப்பட்டு சமன்செய்யப்படுகின்றது.

Tuesday, December 8, 2015

Cryogenic Sleeping உறைநிலைக்குளிர் உறக்கம் Walt Disney

க்ரையோஜெனிக் உறக்கம், தமிழ்ல சொல்றதுன்னா... உறைநிலைக்குளிர் உறக்கம் அல்லது கடுங்குளிர் உறக்கம்னு சொல்லலாமா? ஏன்னா, க்ரையோஸ் (kryos) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு உறைநிலைக்குளிர்னு (icy cold) பொருள். இப்போதைக்கு நாம க்ரையோஜெனிக் உறக்கம்னே ஒலிபெயர்த்துக்குவோம். நுட்பப்படி இதனை Cryonic Suspensionனு சொல்வார்கள். 





 

இப்படி ஒரு முறை இருக்குன்னு நமக்கு திரைப்படங்கள் வாயிலாகத்தான் தெரியவந்துருக்கு. அதுவும் கடந்த 2014ம் வருடம் வெளிவந்த Interstellar திரைப்படத்துல இருந்துதான் பெரும்பாலானோர் இதைப்பத்தி பேசுறாங்க. 1993ல் நான் கல்லூரியில் படிக்கும்பொழுது Demolition Man என்றொரு படம் வந்தது. அதில் இந்த நுட்பம் குறித்துக் காட்டியிருப்பார்கள். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பே 1992ல் Forever Young என்றொரு திரைப்படத்திலும் இதனைக் காட்டியிருப்பார்கள். இப்படியொரு நுட்பம் இருக்கின்றது என்று காட்டிய முதல் திரைப்படம் இதுதான்.

அதன் பின்னர் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஏலியன், பேட்மேன், ஜேஸன் எக்ஸ், கேப்டன் அமெரிக்கா, அண்டர்வேர்ல்டு என்று பல திரைப்படங்களிலும் இதனைக் காட்டியிருப்பார்கள். 1819ல் வாஷிங்டன் இர்வின் என்பார் எழுதிய ரிப் வான் விங்க்கிள் என்ற புத்தகத்தில் கூட இது போன்றதொரு உறக்கத்தினை கோடிகாட்டியிருப்பார்.

க்ரையோனிக் சஸ்பென்ஷன் பயன் என்ன?

தற்போதைய மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத, ஆனால், குணப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் ஆய்வுகள் அதி தீவிரமாக இருக்கும்பொழுது நோயாளியை இந்த முறையைக் கொண்டு உறைந்து போகச் செய்து வைத்து விட்டால், பின்னர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் கண்டறிந்த காலத்தில் அவரை மீண்டும் உயிர்ப்பித்து அந்நோயைக் குணப்படுத்திக் கொண்டு வாழ வைக்கலாம்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி உயிருள்ள ஒருவரை அப்படி Cryonic Suspensionல் வைக்க சட்டம் அனுமதிப்பதில்லை. சட்டப்படி இறந்துவிட்டார் அதாவது Clinical Death என்று மருத்துவர் அறிவித்து விட்டால் அவரை க்ரையோனிக் சஸ்பென்ஷனில் வைக்கலாம். இறந்து போனவரை அப்படி வைத்து என்ன பயன்?

Clinically Death என்பது இதயம் தன் பணியை நிறுத்திக்கொள்வதுதான். அதுவே முழுமையான மரணம் என்று சொல்லிவிடமுடியாது. அதன் பின்னரும் நம் மூளையின் செயல்பாடுகள் உயிர்ப்புடன்தான் இருக்கும்.

நம் உடல் அழிந்துபட்டுப் போவது என்பது நம் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது. நம் செல்கள் சிதைவடைவதை நிறுத்தி வைக்க முடிந்தால் நம் அழிவும் நிறுத்திவைக்கப்படும். அப்படியொரு செயல்பாடுத்தான் இதில் மேற்கொள்ளப்படுகின்றது.

சரி, க்ரையோனிக் சஸ்பென்ஷன் என்றால் என்ன? எப்படிச் செய்கிறார்கள்?

க்ரையோனிக் சஸ்பென்ஷன் என்பது, உடலின் வளர்சிதை மாற்றத்தினை சடாரென்று நிறுத்தி வைப்பது. ஒருவர் இறந்துவிட்டார் என்று மருத்துவரால் அறிவிக்கப்பட்டவுடன், க்ரையோனிக் சஸ்பென்ஷன் முறைக்கு எடுத்துச் செல்லப்படும் வரைக்கும், மூளைக்குத் தேவையான ஆக்சிஜனும் இரத்தமும் தொடர்ந்து செலுத்தப்படும். அதன் பின்னர் Heparin என்னும் மருந்து உடலினுள் ஏற்றப்படும். இது இரத்தத்தை உறையச் செய்வதிலிருந்து தடுக்கும் (Anticoagulant).

இனிதான் உண்மையான உறைய வைத்தல் துவங்கும். உடலையும் சடாரென்று குளிர்நிலைக்குக் கொண்டு போய்விடமுடியாது. காரணம், உடல் செல்களில் இருக்கும் நீர் குளிர்நிலைக்குப் போனால், அது உறையத் துவங்கும். உறைந்தால் விரிவடையும். அதனால் செல்கள் சிதைவுறும். அதனால் என்ன செய்வார்கள் என்றால், செல்களில் இருக்கும் நீரை நீக்கிவிட்டு Cryoprotectant எனப்படும் க்ளிசரால் (Ethylene Glycol போன்று) அடிப்படையிலான ஒரு வேதியற்கலவையை உட் செலுத்துவார்கள். ஆர்க்டிக் மற்றும் அண்டார்ட்டிகாவில் இருக்கும் சில பூச்சிகள், மீன்கள் மற்றும் நீர்நிலவாழ்வி (Ambibians) தாங்களே தங்கள் உடலில் இந்த Cryoprotectantயை உற்பத்தி செய்து கொள்ளும்.

க்ளைகால்ஸ் (Glycols) எனப்படுபவை குறைந்த பட்சம் இரண்டு ஹைட்ராக்சில் தொகுப்புகள் உள்ள ஆல்கஹால் ஆகும். எத்திலின் க்ளைக்கால் (Ethylene Glycol), ப்ரோப்பிலின் க்ளைக்கால் (Propylene Glycol) மற்றும் க்ளிஸரால் (Glycerol) போன்றவை அதற்கு உதாரணங்களாகும்.

எத்திலின் க்ளைக்கால் ஆட்டோமொபைலில் உள்எரி எஞ்சின்களில் குளிர்விப்பானாக தண்ணீருக்குப் பதிலாகவோ அல்லது தண்ணீருடன் கலந்தோ பயன்படுத்தப்படும். இது குளிர்காலங்களில் தண்ணீர் உறைந்து அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றது. இது சற்று ஆபத்தானது.

ப்ரொப்பிலின் க்ளைக்கால் மேற்சொன்ன எத்திலின் க்ளைக்காலை விட ஆபத்து வெகுவாகக் குறைந்தது. ஆபத்தற்ற உறைநிலைத்தடுப்பான் என்று பெயரிட்டே விற்பனைக்கும் வரும். எத்திலின் க்ளைக்கால் பயன்படுத்த முடியாத இடங்களில் இதனைப் பயன்படுத்துவார்கள். உணவுத் தயாரிப்பில் இது பயன்படும். குறிப்பாக பனிக்குழைவு (Ice Cream) தயாரிப்பில் பனிக்கட்டிகள் (Ice) உருவாகிடாமல் அது குழைவாகவே இருப்பதற்காக இதனைச் சேர்ப்பார்கள்.

இருப்பினும், இது காற்று மற்றும் வெப்பத்தோடு வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்யும். இதனைச் சரியாக சமநிலைப்படுத்தப்படவில்லை என்றால் அரிக்கும் (Corrossive) தன்மையுடையதாக இருக்கும்.

மேற்சொன்ன இரண்டையும் விட பாதுகாப்பானதும் மிகக்குறைந்த உறைநிலையையும் கொண்ட க்ளிசராலே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. க்ரையோனிக் சஸ்பென்ஷனில் உடல் செல்களில் உள்ள நீருக்குப் பதிலாக இதனையும் பயன்படுத்துவார்கள்.

எதைப் பயன்படுத்தினாலும், நோக்கம் என்னவென்றால், உறைநிலைக் குளிரில் செல்கள், திசுக்கள், உறுப்புகளுக்குள் பனிப்படிகங்கள் (Ice Crystals) உருவாவதைத் தடுப்பதுதான். இப்படி ஏதேனும் ஒரு உறைநிலைக் கலவைக்குள் (திரவ நைட்ரஜன்) உடலைக் கொண்டு செல்லும் முன் ஆழ்குளிர் நிலைக்கு (Deep Cooling without Freezing) உட்படுத்தி வளர்சிதை மாற்றம் நிகழ்வதில் இருந்து நிறுத்தி வைக்கும் முறைக்குப் பெயர்தான் Vitrification.

அதன் பின்னர், -130°Celcius அளவிலான வெப்பநிலையை எட்டும் வரைக்கும் உடலை உலர்பனிக் கட்டியில் (Dry Ice) வைப்பார்கள். இத்தோடு Vitrification செயல்பாடு முடிகின்றது. அதற்குப் பின்னர் -196°Celcius வெப்பநிலையளவில் திரவ நைட்ரஜன் நிரப்பப் பட்ட ஒரு பெரிய உருளைக்குள் உடலைத் தலைகீழாக நுழைத்து வைத்து விடுவார்கள். ஏன் தலைகீழாக என்றால், ஒரு வேளை உருளையில் ஏதேனும் கசிவு இருந்தால், தலைப்பகுதியில் இருக்கும் மூளை மட்டுமாவது இறுதி வரை பாதுகாப்பான குளிர்நிலையில் பத்திரமாக இருக்கட்டும் என்பதற்காக.

அவ்வளவுதான் க்ரையோனிக் சஸ்பென்ஷன். ஆனால், திருப்பி உயிர்ப்பிக்கும் நுட்பம்தான் இன்னும் நமக்குக் கைவரப்பெறவில்லை. அண்மைய எதிர்காலத்தில் அதனை எதிர்பார்க்கவும் முடியாது என்று விஞ்ஞானிகளும் கூறிவிட்டனர். மீளுயிர்ப்பிப்பதில் என்னவொரு கடினம் என்றால், சரியான வெப்பநிலைக்கு படிப்படியாக உடல் செல்களைக் கொண்டு வராவிட்டால், பனிப்படிகங்கள் உருவாகி செல்களை விரிவடையச் செய்து சிதைத்துவிடும் என்பதுதான்.

ஆனால், நானோ தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டால், மிக நுணுக்கமாக அணுஅளவிலே போய்க்கூட செல்களைப் பாதுகாப்பாக மீளுயிர்க்கச் செய்ய முடியும் என்று கருதுகிறார்கள்.

அப்படி எவரேனும் க்ரையோனிக் சஸ்பென்ஷனில் வைக்கப்பட்டிருக்கின்றார்களா....? ஆம், சிலர் அவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

1. Dr. James Bedford, உளவியல் பேராசிரியர்
2. Dick Clair Jones, தொலைக்காட்சி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்
3. Thomas K Donaldson, கணிதவியலார்
4. Fereidoun M. Esfandiary (FM-2030), எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் மீவுமனிதத்துவச் சிந்தனையாளர் (Transhumanist Philosopher)
5. Dora Kent, Alcor Life Extension Foundationன் ஒரு உறுப்பினரான Saul Kent என்பாரின் தாய்.
6. Jerry Leaf. Alcor Life Extension Foundationன் துணைத் தலைவர்
7. Ted Williams, பேஸ்பால் விளையாட்டு வீரர்
8. John Henry Williams, Ted Williamsன் மகன், இவரும் பேஸ்பால் விளையாட்டு வீரர்.
9. Walt Disney, கார்ட்டூனிஸ்ட், திரைப்படத் தயாரிப்பாளர், அசைபடத் தயாரிப்பாளர், குரல் நடிகர் மற்றும் தொழிலதிபர்

படம் எடுக்கப்பட்ட தளம் : http:// transhumanity. net/wp-content/uploads/2014/09/Cryonics.jpg


thanks to BABU PK