Tuesday, September 30, 2014

தெரிந்து கொள்வோம் - பிறப்பு சான்றிதழ் :

இந்தியச் சட்டப்படி குடும்ப அட்டை, ஓட்டுநர உரிமம், வாக்காளர் அடையாள அட்டை முதல் பாஸ்போர்ட் வரை அனைத்து ஆவணங்களையும் பெற வயதுச் சான்றாக பயன்படுவது பிறப்புச் சான்றிதழ். ஏன் திருமணத்திற்கே கூட வயது சான்றிதழ் கட்டாயமாகிறது. அதேபோல வாரிசுகளின் உரிமை, சொத்துரிமை, அரசு சலுகைகள் போன்றவற்றைப் பெற இறப்புச் சான்றிதழ் அவசியமாகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பிறப்பு மற்றும், இறப்புச் சான்றிதழைப் பெறுவது எப்படி? விவரங்கள் இங்கே.

பிறப்பைப் பதிவு செய்வது கட்டாயமா?

பல்வேறு விஷயங்களுக்காகப் பிறந்த தேதியை ஆவணப்படுத்துவது கட்டாயமாகிறது. இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படி, பிறந்த ஒவ்வொரு குழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக, கிராம/நகரப் பதிவுத்துறை, மாவட்டப் பதிவுத்துறை, மாநில பதிவுத்துறை, மத்திய பதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

எங்கே பதிவு செய்வது?

ஒருவர் பிறப்புச் சான்றிதழ் பெற, பிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேன்டும். பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாக, குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஏரியாவிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது வீடுகளில் பிறப்பு நடந்திருந்தாலோ, அந்த பகுதி காவல்துறை மூலம் பிறப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்?

• பிறப்பை 21 நாட்களுக்குள்ளும், இறப்பை ஒருவாரத்திற்குள்ளும் பதிவு செய்ய வேண்டும்.

• பிறப்பு அல்லது இறப்பிற்குப் பின்னர் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டால் பிறப்புச் சான்றிதழ் அல்லது இறப்புச் சான்றிதழைச் சம்பந்தப்பட்ட பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான் பெற முடியும். நகரம் அல்லது மாநகரம் என்றால், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு கட்டணமும் உண்டு.
கட்டண விபரம்:
மூன்று வாரங்களுக்குள் இலவசமாகவும், அதற்கு மேல் ஒரு மாதம் வரை 5 ரூபாயும், ஓராண்டிற்கு மேல் ரூபாய் 10/- மற்றும் மாவட்ட நீதிபதி அவர்களின் ஆணையும் தேவை.

மருத்துவமனையில் பிறப்பைப் பதிவு செய்தல்:

• •மருத்துவமனையில் நடக்கும் பிறப்புகள் அனைத்தும் மாநகராட்சிக்குத் தெரிவிக்கப்படும்
• •மருத்துவமனை சான்று கிடைத்தவுடன் ஒரே நாளில் மாநகராட்சியால் பிறப்புச்சான்று வழங்கப்படும்.
• •பிறப்புச்சான்றை அந்தந்த மாநகராட்சியின் இணையதளத்தில் இலவசமாகப் பெற முடியும்
• •குழந்தையின் பெயரை ஓராண்டு வரை மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

எத்தனை நகல்கள் பெற முடியும்?

இச்சான்றிதழ் எத்தனை நகல்களில் வேண்டுமானாலும் கிடைக்கும். அதற்காக உரிய கட்டணங்கள் கட்ட வேண்டியிருக்கும். இதற்காக, ஒரு தனி வெள்ளைத் தாளில் ஒரு வேண்டுகோளை எழுதி விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் இரண்டு ரூபாய்க்கான நீதிமன்ற வில்லையை ஒட்டி, அதனுடன் அதற்கான சான்றுகளாக மனுதாரரின் குடும்ப அட்டை அல்லது ஏதாவது முகவரிச் சான்று, குழந்தையின் பெயருடன் கூடிய பள்ளிச் சான்று போன்றவற்றை இணைத்து விண்ணப்பித்தால் வட்டாட்சியர் அவ்விண்ணப்பத்தின் மீது உரிய விசாரணை செய்து, வேண்டுகோள் உண்மையென முடிவு செய்யும்பட்சத்தில், குறிப்பிட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பிறப்புப் பதிவேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கே வரவழைத்துப் பெயர் பதிவு செய்து மீண்டும் அப்பதிவேட்டை அந்தச் சார்பதிவாளர் அலுவலகத்திற்கே அனுப்பிவைப்பார்.

பிறப்பு / இறப்புச் சான்றிதழ்களில் மாற்றங்கள்

பெற்றோர் சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவு செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் மட்டும், பதிவு செய்கையில் பெற்றோர் அளித்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்களைப் பரிசோதித்துவிட்டு அதை மாற்றித் தருவர்.

அப்படியான சூழலில் சரியான தகவல்களை ஆதாரத்துடன் அளித்து திருத்தங்கள் செய்ய வேண்டுகோள் கடிதம் கொடுக்க வேண்டும்.
குழந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில் மாற்ற முடியுமா?
பிறந்த குழந்தையின் தாய் தந்தையர் அல்லது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரியான சான்றுகள் அளித்து மாற்றிக்கொள்ளலாம்; அதே வேளையில் குழந்தையின் பெயரில் ஏதேனும் மாற்றம் தேவையென்றால் அப்படி மாற்ற முடியாது. எனவே, குழந்தையின் பெயரை உறுதி செய்த பின்னரே அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யவேண்டும். ஒருமுறை பதிவு செய்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பதிவானபின் குழந்தையின் பெயர் மாற்றப்பட மாட்டாது. பதிவான பெயரை அரசு கெஜெட் மூலமே மாற்ற முடியும்.
இந்திய பெற்றோர்களுக்கு வெளிநாட்டில் குழந்தை பிறந்தால்:

• இந்தியாவில் உள்ள ஒரு கணவனும் மனைவியும் பணி நிமித்தமாக, அல்லது குழந்தைப்பேறு மருத்துவத் தேவைகளுக்காக வெளிநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து அங்கேயே குழந்தை பெற்றுக்கொண்டால், அக்குழந்தையின் பிறப்பு அங்குள்ள தூதரக அலுவலகம் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும்.

• ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவருக்கு உயர் மருத்துவக் காரணங்களுக்காக அவருடைய உறவினர்கள் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படி வெளிநாட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ நடவடிக்கைகளின் போது அந்த நபர் இறந்து விட்டால், அங்குள்ள தூதரகம் வாயிலாகப் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும்.

பயணத்தின் போது குழந்தை பிறந்தால்:

• பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு என்பது ஒவ்வொருவரின் சொந்த ஊரில் அல்லது நிலையான இருப்பிடத்தில் தான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவறு. ஒரு குழந்தை எங்கு பிறக்கிறதோ அங்கு தான் அதன் பிறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும். அதே போல், ஒருவர் இறந்து விட்டாலும் அவர் எங்கு இறக்கிறாரோ அங்குதான் அவரது இறப்புப் பதிவு செய்யப்பட வேண்டும்.

• விமானத்தில் அல்லது கப்பலில் பயணிக்கும் பொழுது குழந்தை பிறந்தால் அல்லது ஒருவர் இறந்துவிட்டால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமாக எங்கு முடிகிறதோ அங்குதான் அந்தப் பிறப்பு அல்லது இறப்புப் பதிவு செய்யப்படவேண்டும். எரிபொருள் நிரப்ப அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த விமானம் அல்லது கப்பல் ஏதாவது ஒரு நிலையில் நிறுத்தப்பட்டால் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. உண்மையில் பயணியை அதிகாரப்பூர்வமாக எங்கு இறக்கிவிடுகிறார்களோ அங்குதான் பதிவு செய்யவேண்டும்.

இவள் பாரதி
நன்றி – புதிய தலைமுறை

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும்

மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல வழங்கியது, பெரும் அதிர்ச்சியை தலித் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியது. இதனை எதிர்த்தும், உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழில் புரியும் மு.பூபால் உள்ளிட்ட 12 இளம் வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அவர்களில் இருவருக்கு குற்றவாளிகள் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் கடிதங்களும் வந்தன. பின்னர், 11.2.2005 அன்று உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, உயர்நீதிமன்ற மேல்முறையீடு நிலுவைக் காலத்தில் பிணை வழங்கியிருக்கக் கூடாது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த பிணையை ரத்து செய்தும், அவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
.
ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும் பிணையை ரத்து செய்யும் அதிகாரம் பிணை வழங்கிய நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும் தான் உண்டு. பிணையில் விடுவிக்கும்போது அந்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இடும் நிபந்தனைகள் மீறப்படும்போது, பிணையை வழங்கிய நீதிமன்றமே பிணை உத்தரவை ரத்து செய்யலாம். மற்ற நிகழ்வுகளில் உயர் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482 வழங்கியுள்ள தன்னதிகாரத்தின் கீழும் (Inherent Powers) அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 227இன் படியான கீழமை நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் அதிகாரத்தின் கீழும் (Supervisory Juisdiction) பிணையை ரத்து செய்யலாம்.
.
ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டுமென கீழ்க்கண்ட ஏதாவது ஒரு அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட காரணங்களின் அடிப்படையில் மனுதாக்கல் செய்து கோரலாம். இவை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின்படி உள்ள காரணங்களாகும், இவை முழுமையானவை அல்ல. இவை தவிர மற்றெந்த நியாயமான, ஏற்கத்தக்க காரணங்களின் அடிப்படையிலும் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு.
.
1. பிணையில் விடுவிக்கப்படும் நபர் பிணையில் இருக்கும்போது எவ்வகையான குற்றத்திற்காக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறாரோ, அதே வகையான குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர் பிணையில் தொடர்ந்து இருக்கும் தகுதியை இழந்தவராகிறார்.
.
2. புலன்விசாரணையின்போது கிடைக்கும் புதிய தகவலின் அடிப்படையில் அந்நபர் கூடுதல் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவராகத் தெரிய வருமாயின், அந்நபரின் பிணை திரும்பப் பெறப்படலாம்.
.
3. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் புலன்விசாரணைக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்துவாரானால் அந்நபரின் பிணை திரும்பப் பெறத்தக்கதாகிறது.
.
4. வழக்கின் சம்பந்தப்பட்ட சாட்சிகளை எவ்வகையிலாவது மிரட்டுவதன் மூலம் சாட்சியத்தைக் கலைக்க முற்படுவாரானால், அச்சூழலில் அவர் பிணையில் இருக்கும் தகுதியை இழக்கிறார்.
.
5. பிணையில் உள்ள நபர் தலைமறைவாக முயற்சித்தாலோ, தப்பித்துச் செல்ல முயற்சித்தாலோ, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சித்தாலோ, அல்லது வேறு வகையில் நீதிமன்றப் பார்வையிலிருந்து மறைந்து கொள்வாராயின், அந்நபரின் பிணை ரத்து செய்யப்படலாம்.
.
6. புலன்விசாரணை அதிகாரி மீதோ அல்லது வழக்கு சாட்சிகளின் மீதோ வன்முறை புரிதலும் பிணை திரும்பப் பெறலாகும்.
.
7. நீதிமன்றம் பிணை வழங்கும்போது பிழையான அணுகுமுறையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டிருந்தால் அப்பிணை ரத்து செய்யப்படலாம்.
.
8. குற்றச்சாட்டின் தன்மை மாறுபடும் பட்சத்திலும், வேறு விதமான வழக்குச் சூழ்நிலை மாற்றங்களும்கூட பிணை ரத்து செய்யக் காரணமாக அமையலாம்.
.
9. நீதிமன்ற நிபந்தனைப்படி பிணையிலுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினாலும் பிணை ரத்து செய்யப்படத்தக்கதே.
.
10. பிணையாளர்கள் குற்றம்சாட்டப்பட்ட நபர் பிணையில் வெளியே வர பத்திரம் முலம் நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியவர்கள், தாங்கள் வழங்கிய பிணைப் பத்திரத்தை திரும்பப் பெறக்கோரி நீதிமன்றத்தில் மனு செய்தாலும் பிணை ரத்து செய்யப்படலாம்.
.
11. பிணைப் பத்திரம் தவறுதலாகவோ, மோசடியாகவோ அல்லது வேறு வகையிலோ நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைபாடாக இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் பிணை ரத்து செய்யப்படலாம்.
.
12. பிணையப்பத்திரம் வேறு எவ்வகையிலாவது செல்லுபடியாகும் தன்மையை இழக்கும் போதும் பிணை ரத்து செய்யக்கூடியதாகிறது.
.
இவ்வகையில், வன்கொடுமை வழக்குகளில் பிணை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை பாதிக்கப்பட்டோர் தரப்பு வலிமையுடன் எடுக்கும்போது, வழக்கு சிதைக்கப்படாமலும் வலுவிழக்காமலும் நீதிமன்றத்தில் நடத்தப் பெற முடியும். இதை சரியாகப் பயன்படுத்தினால் வன்கொடுமையாளர்கள் – பாதிக்கப்பட்டோரையோ, மற்றவர்களையோ அச்சுறுத்துதல் செய்வதை முழுமையாகத் தடுக்க முடியும்.
Thanks – makkal sattam

Monday, September 29, 2014

திருமணத்தன்று அழகாக ஜொலிப்பதற்கான சில டிப்ஸ்

ஒவ்வொரு பெண்ணும் தன் திருமண நாளில் தான் முழுமையான அழகுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எல்லோருக்கும் மத்தியில் தான் ஒரு தனிப்பட்ட ஈர்க்கும் அழகுடன் விளங்க வேண்டி எடை இழப்பு, சரும பராமரிப்பு முதல் ஆடைகள் வரை எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார்கள். திருமணத்திற்கு தேவையான உடல் எடையை பெறுவது பெரும்பாலும் பெண்களுக்கு ஒரு புதிய பிரச்சினை ஆகும்.

மேலும் பல அம்சங்களும் அழகாக இருப்பதற்கு முக்கியமாக இருக்கின்றன. ஒரு குறைந்த கலோரி உடைய சரிவிகித ஊட்டச்சத்து, பக்க விளைவுகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தாத அழகுப்பொருட்களை பயன்படுத்தி, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சிறப்பு சிகிச்சை கவனிப்பும் இன்றியமையாததாகும். அழகு மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தைப் பெற, முக மற்றும் உடலின் சிகிச்சையை வெகு முன்னரே தொடங்க வேண்டும்.

இப்போது திருமண நாள் முன்பாக சருமத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான சில அழகுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் படித்து பயன்பெறுங்கள்.

உலர்ந்த சருமம் 
உலர்ந்த சருமம் பெரும்பாலும் மணப்பெண்ணால் அனுபவிக்கப்படும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். தோல் உலர்ந்தும் பொலிவிழந்தும் இருந்தால், இறந்த செல்களை சருமத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் உள்ள பொருட்கள் தோலை, சுத்தமான, மென்மையான மற்றும் பார்ப்பதற்கு அழகாக வைக்க நன்றாக வேலை செய்கிறது. ஒவ்வொரு நாளும் மாய்ஸ்சுரைசரை சருமத்தில் பயன்படுத்த மறக்க வேண்டாம். வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ இருக்கின்ற ஒரு மாய்ஸ்சுரைசர் தேர்வு செய்யவும். ஏனெனில் இவை முகப்பருவை கட்டுப்படுத்தும்.

முகப்பரு
முகப்பருவுடன் போராட பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. முகப்பருவைப் போக்குவதற்கு ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் க்ரீம் போன்றவற்றை சரியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எண்ணெய் இல்லாமல் இருக்கும் ஒரு மாய்ஸ்சரைசரைத் தேர்வுச் செய்து பயன்படுத்தவும். கடுமையான முகப்பரு இருந்தால், சரியான சிகிச்சை பெற தோல் மருத்துவரை பார்க்க வேண்டும்.

கண்களை சுற்றிலும் கருவளையங்கள் 
கண்களை சுற்றிலும் கருவளையங்கள் ஏற்பட மன அழுத்தம், தூக்க குறைபாடு, ஒவ்வாமை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் சூரிய ஒளி பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக ஏற்படுகிறது. இப்போது சந்தையில் உள்ள பல்வேறு சிகிச்சைகள் மற்றும் தயாரிப்புகள் பெரும்பாலானவைகள் கண்களை சுற்றிலும் இருக்கும் கருவளைய தோற்றத்தை குறைக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. வைட்டமின் சி, கே மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட் கொண்ட க்ரீம்கள் வழக்கமாக நன்றாக செயல்படுகிறது. க்ரீம் எதிர்பார்த்த படி வேலை செய்யவில்லை என்றால், பதட்டப்பட வேண்டாம். இயற்கைப் பொருட்களை பயன்படுத்தினால், நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

வீங்கிய கண்கள் 
கண்களை சுற்றிலும் உண்டாகும் கருப்பு வளையம் போல், வீங்கிய கண்கள் கூட தற்காலிகமான அழுத்தம் காரணமாகவும், திரவத்தை தக்க வைத்தல், ஒவ்வாமை அல்லது தூக்க குறைபாடு போன்றவற்றால் ஏற்படுகிறது. வீங்கிய கண்கள் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் போது, அதை ஒவ்வாமை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். ஒவ்வாமை காரணமாக இல்லை என்றால் மாறாக கண்களுக்கான க்ரீம்கள், முகத்திற்கு பூசும் க்ரீம்கள் மற்றும் குளிர் நீரால் நன்றாக முகத்தை கழுவுதல் என எளிதாக செய்ய கூடிய சில சிகிச்சைகளும் உள்ளன. வைட்டமின் சி அல்லது ஆக்ஸிஜனேற்றம் கொண்ட க்ரீம், வீங்கிய கண்களின் பிரச்சினையை தீர்க்க சிறந்த க்ரீம்கள் ஆகும்.

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள் - Best Ways To Get Your Child To Talk

'குழல் இனிது யாழ் இனிது என்பார் மக்கள் தம் மழலைச் சொல் கேளா தவர்' என்றார் வள்ளுவர். வள்ளுவனின் வார்த்தைகளுக்கேற்ப, உங்கள் குழந்தைகள் மழழை பேச்சில் மயங்கி இருக்கும் நீங்கள் அவர்கள் எப்போது பேசுவார்கள் என்று நிச்சயம் காத்துக் கொண்டு தான் இருப்பீர்கள். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் வளரும் பருவத்திற்கு ஏற்ப வளர்ச்சிகளை அவர்கள் பெறுகின்றனரா என்று கவனித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
சில குழந்தைகள் விரைவாக பேசி விடுவார்கள். அவர்களுக்கு தங்கள் குழந்தை, மழழை மொழியில் அழகாக பேசுவதை கேட்கும் போது அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவு கிடையாது. ஆனால் சிலர் அந்த குறிப்பிட்ட காலத்தில் பேசுவதில்லை. இவர்கள் மற்ற குழந்தைகளை காட்டிலும் சிறிது நாட்கள் கழித்து தான் பேசுவார்கள்.
இந்த சமயத்தில் தான் நமது குழந்தையை எப்படியாவது பேச வைக்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு வருவீர்கள். குழந்தைகள் பேசுவது அவர்கள் வளரும் மற்றும் வெளிப்படுத்தப்படும் வெவ்வேறு சூழல்களுக்கேற்ப மாறுபாடுகின்றது.
குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்!!!
குறித்த காலத்தில் பேசாத குழந்தைகளை நாம் உடனடியாக ஒரு நல்ல மருத்துவரிடம் அல்லது பேச்சு சிகிச்சை தருபவரிடம் கூட்டிச் சென்று அதன் காரணங்களை கண்டறிய வேண்டியுள்ளது. மருத்துவ ரீதியான காரணங்களை தவிர்த்து வேறு எந்த வித காரணமாக இருந்தாலும் நம்மால் கட்டாயம் குழந்தைகளை பேச வைக்க முடியும்.
உங்கள் குழந்தைக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிறிது முயற்சி செய்தால் போதும் அவர்களை பேச வைத்திட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. அதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
அனைவருடனும் பழக விடுங்கள்: உங்கள் குழந்தையை அனைவருடனும் பழக விட வேண்டும். இதுவே நீங்கள் பெருமளவில் முயற்சி செய்யாமல் அவர்களை பேச வைத்திட சிறந்த வழியாகும். மற்ற குழந்தைகளுடனும் விளையாட விடும் போது பேச்சு தானாக நிச்சயம் வரும். இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தை மற்றவர்களிடம் பேசுவதன் அவசியத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் உங்களுடைய முயற்சிகள் இல்லாமலேயே அவர்கள் பேசத் தொடங்குவார்கள்.
அவர்களுடன் பேசுங்கள்: எப்போதும் வேலை வேலை என்று இருந்தால் குழந்தைகளை பேச வைக்க வெகு நாட்களாகி விடும். குழந்தைகளுடன் பேசும் போது தான் அவர்களும் பேச கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு என்ன புரியப் போகின்றது என்று தவறாக எண்ணி விடாதீர்கள். நீங்கள் சும்மாவாவது அவர்களிடம் பேசும் போது, அவர்கள் அதற்கு பதில் அளிக்கத் தொடங்குவார்கள்.
அனைத்து பெயர்களையும் சொல்லித் தருதல்: உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளின் பெயரையும் குறிப்பிட்டு பேசுவது நல்ல யோசனையாகும். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா போன்ற அழைக்கும் சொற்களையும் எப்போதும் கூறி கொண்டு அவர்களையும் சொல்ல வையுங்கள். நீங்கள் கேட்பது அவர்களுக்கு விரைவாக புரிந்து விடும். இதுவே உங்கள் குழந்தையை பேச வைக்க சிறந்த வழியாகும்.
இரவு நேரக் கதைகள்: ஒருவேளை உங்கள் குழந்தை இன்னும் பேசாமல் இருந்தால் இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் போது கதைகளை படித்து காட்டுங்கள். இதுவும் உங்கள் குழந்தையின் பேச்சுத்திறனை வெளிப்படுத்தும் சிறந்த முயற்சியாக அமைகின்றது. இதை செய்தால் உடனடியாக வித்தியாசம் காண முடியாது ஆனால் உங்களுக்கு நல்ல ஒரு பதில் கிடைக்கும் வரை முயற்சி செய்வதை விட்டு விடாதீர்கள்.
சத்தத்தை திரும்பச் சொல்வது: ஆடு, மாடு, நாய் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் சத்தத்தை அவர்களுக்கு சொல்லிக் காட்டுங்கள். நல்ல சங்கீதம் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை கேட்க விடுங்கள். இதை அவர்கள் கேட்டு திரும்பச் சொல்லும் வரை பொறுமையுடன் காத்திருங்கள். அவர்கள் கேட்டதை ஒரு நாள் நிச்சயம் சொல்லுவார்கள்.
குழந்தைப் பாடல்கள்: இந்த பாடல்களை குழந்தைகளுக்கு போட்டு காண்பிக்கலாம் மற்றும் பாடியும் காட்டலாம். அவர்கள் சாப்பிடும் போதும் மற்றும் குளிக்கும் போது இதை செய்யலாம். இதை திரும்பத் திரும்ப கேட்கும் போது அவர்களும் ஒரு நாள் அதை பாடுவார்கள். குழந்தைகளை பேச வைக்க இதுவும் ஒரு வழியாகும்.
திருப்பி சொல்லச் சொல்லுங்கள்: வெறும் பேச்சு மட்டும் போதாது. அவர்களையும் திருப்பிச் சொல்ல சொல்லுங்கள். சிறிய வார்த்தைகளை சொல்லிக் கொண்டே இருங்கள். அது குழந்தையின் பெயராகவும் கூட இருக்கலாம், அந்த பெயரை கொண்டு இரவு நேர கதைகளில் ஏதேனும் ஒரு கதையை சொல்லலாம். இது அவர்களுக்கு நிச்சயம் புரியும். இதை எல்லாம் கேட்கும் குழந்தைகள் வெகு சீக்கிரம் பேசி விடுவார்கள்.

முடி அடர்த்தியாக வளர

 பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அவற்றின் போது சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.
தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்……….

ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும், அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.

செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

எப்போதும் ஃபிட்டாக இருக்க - How to stay super fit always

ஒரு மனிதனுக்கு பெரிய சொத்தே ஆரோக்கியமான உடல் தான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதனால் ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் ஓடியாடி வேலை பார்க்க முடியும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நம்மில் பலரும் உடலை வருத்திக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவாக சின்ன வயதிலேயே பல உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.
கட்டமைப்பான உடல் என்பது ஆரோக்கியத்தை குறிக்கும். கட்டமைப்பான உடலைப் பெற, உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் சேர்ந்து செயல்பட வேண்டும். மற்றொரு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது உடற்பயிற்சி. கட்டமைப்பான உடலுக்கு மனதும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
உடலை கட்டுக்கோப்புடன் வைத்து நீண்ட நாள் வாழ்வதற்கு நாங்கள் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி இதில் அடக்கம். உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள வல்லுனர்கள் கூறும் வீட்டு சிகிச்சைகள் இதோ:
1. சருமத்திற்கு வயதேறாமல் இருக்க கடல் உணவுகள் 
மீன்களை வாரம் மூன்று முறை உட்கொண்டால், சரும சுருக்கம் மற்றும் தொய்வை 30 சதவீதம் வரை குறைக்கும். அதற்கு காரணம் கடல் உணவுகளில் வளமையான அளவில் புரதம், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது கொலாஜனுக்கு புத்துணர்வு கொடுத்து தசைகளை வளுவளுவென வைத்திருக்கும். சால்மன் மீன்களில் அஸ்டாக்சன்தின் என்ற ஆண்டி-ஆக்சிடன்ட் உள்ளது. இது உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும்.
2. மன அழுத்தத்தை நீக்க க்ரீன் டீ 
க்ரீன் டீயில் உள்ள கூட்டுப்பொருட்கள், இரத்த சர்க்கரையை எரிப்பொருளாக உங்கள் மூளை பயன்படுத்த உதவும். மேலும் ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் ஹார்மோனான என்டோர்பின் உற்பத்தியையும் இது ஊக்குவிக்கும். அதனால் அடுத்த முறை ஆற்றல் திறன் குறையும் போது, ஒரு கப் க்ரீன் டீயை பருகுங்கள்.
3. திடமான இதயத்திற்கு 
வால்நட் தினமும் 5-6 வால்நட்களை உண்ணுமாறு இதய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நெஞ்சு வலி ஏற்படும் இடர்பாட்டை பாதியாக குறைக்கிறதாம். ஆயுளையும் 3 வருடங்களுக்கு அதிகரிக்கிறதாம். இந்த மொறுமொறு நட்ஸில், இதயத்தை குணமாக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் வளமையாக உள்ளது.
4. நல்ல நினைவாற்றலுக்கு மஞ்சள் 
உங்கள் உணவுகளில் மஞ்சளை சேர்த்துக் கொண்டால், உங்கள் நினைவாற்றல் குறைந்தது 30 சதவீதமாவது அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் மஞ்சளில் உள்ள கர்குமின். இது மூளைக்கு புத்துணர்வை உண்டாக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகும்.
5. சுவாசப்பயிற்சியால் மன அழுத்தத்தை நீக்குங்கள் 
வயிறு மூலமாக சுவாசித்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை நீக்குங்கள். 6 எண்ணும் வரை உங்கள் மூக்கின் வழியாக மெதுவாவும் ஆழமாகவும் மூச்சை உள்ளிழுக்கவும். அப்படி செய்யும் போது வயிற்று பகுதி அமைதி பெற்று விரிவடையும். 4 எண்ணும் வரை அப்படியே இருந்து, பின் வாயின் வழியாக மெதுவாக மூச்சை வெளியேற்றவும். 7 எண்ணும் வரை இதனை செய்யவும். நன்றாக உணரும் வரை இதனை தொடர்ந்து செய்யுங்கள்.
6. தூக்கத்தை கொண்டு வலிகளை குறையுங்கள் 
உங்களுக்கு அடிக்கடி தலைவலி, முதுகு வலி, மூட்டு வலி அல்லது இதர வலிகள் ஏற்படுகிறதா? கவலையை விடுங்கள், போய் தூக்குங்கள். நன்றாக தூங்கினால், ஒரு மாதத்தில், உங்கள் அசௌகரியங்கள் அனைத்தும் பாதியாக குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தூக்கம் உங்கள் வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அதனால் அது அழற்சியை குறைத்து, பாதிப்படைந்த திசுக்களை வேகமாக ஆற வைக்கும்.
7. இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த லவங்கப்பட்டை 
ஆராய்ச்சியாளர்களின் படி, உங்கள் உணவில் தினமும் 1/2 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டால், அது உங்கள் இரத்த அழுத்தத்தை 29% அல்லது அதற்கு மேலாகவும் கட்டுப்படுத்தும். உங்கள் சிறு குடலில் கார்ப் உறிஞ்சுவதை குறைக்கும்.
8. காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 
வண்ணமயமான காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால் வியாதிகளில் இருந்து அது நம்மை பாதுகாக்கும். கேரட், மிளகு மற்றும் வெண்டைக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிக வண்ணம் இருந்தால் அதிக நன்மை. காயின் நிறமி சுவாச குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் கிருமிகளால் உள்ளே நுழைய முடியாது. மேலும் நோய் எதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
9. கிருமிகளை கொல்வதற்கு தேன் 
பாய்ஸ்சுரைஸ் செய்யப்படாத தேனில் இயற்கையான ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் குணப்படுத்தும் என்சைம்ஸ் அடங்கியுள்ளது. அதனால் நோய்வாய்பட்டிருக்கும் போது, அதனை உட்கொண்டால், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே குணமாகும். சைனஸ் பிரச்சனை மற்றும் அனைத்து வகையான சளி பிரச்சனைகளை உண்டாக்கும் கிருமிகளையும் இது கொள்ளும்.
===========

How to stay super fit always?

A man of great wealth and a healthy body . If you can draw the picture on the wall . If the body is healthy so you can see rushing . But today , many of us were working with the body hurt . As a result, such a young age , causing many health problems .

The health of the body representing the construct . To construct the body , eating habits , lifestyle must act together . Exercise is another important consideration . Construct is important for the body and mind .

We have some tips on how to survive a long day in order to keep up with the body . Food , including lifestyle and fitness . Home treatments are available to keep the structure of the body , experts say :

1. Seafood to be Anti Aging skin
Consumption of fish three times a week , up to 30 percent and reduce skin wrinkles and sag . Due to the level of the sea foods rich in protein , minerals and is rich in nutrients such as omega-3 fats . It is refreshing to collagen valuvaluvena keeps the muscles . Astakcant salmon fish of the year - is the oxidant . This will reduce the wrinkles in your skin .



Remove the stress of Green Tea
Compounds in green tea , blood sugar will help to fuel your brain . Harmonana to promote energy efficiency and encourage the production of endorphins . So next time when energy efficiency is reduced , drink a cup of green tea .


Solid heart
Doctors recommend heart walnuts eat 5-6 walnuts daily . It reduce halved the risk of heart attack . your life time will increase by 3 years . In this crispy Nuts , heart healing , prosperity is Mono saturated fats .


Yellow for good memory
Add the turmeric to your diet , your memory will increase to at least 30 percent , according to experts . Karkum because it 's in yellow . It revitalized the brain , which can lead to powerful anti - aksitanttakum .


Delete the stress cuvacappayirci
Breathe through the abdomen to remove stress and tension . 6 counting the breath deeply and slowly through your nose, inhale. While doing so, the abdominal area will expand peace . Counting up to 4 remains intact , then exhale slowly through the mouth to the left . 7 Repeat this until the epilogue . It feels good to work.


Reduce pain and sleep
You have frequent headaches , back pain , joint pain or other aches happen ? Do not worry , Pick go . If you sleep well , in a month , according to research that will be half of your inconvenience . Increases production of growth hormones in your sleep . So it reduces inflammation , and heal damaged tissue will keep pace .


Cinnamon to control blood pressure
According to researchers , in your diet daily 1 / 2 teaspoon lavankappattaiyai add 29 % or more , and controlling your blood pressure . Corp. of your small intestine to reduce the suction .


Vegetables to boost the immune system
Colorful vegetables consumption, as it protects us from diseases . Carrots , pepper and okra boost your immune system . Greater benefit if more color . Cain keeps pigment respiratory tract healthy . So germs can enter the inside . In addition to increasing the production of immune cells .


Honey to kill germs
Honey has been payscurais natural anti - encaims includes payatiks and healing . So when the ailing , the antidepressants , three days before the healing. Sinus problems and colds all kinds of problems which can lead to germs .


இந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Secrets of Indian Women


இந்திய பெண்கள் மிகவும் அழகானவர்கள். இதை யார் தான் மறுக்க முடியும்? பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். இந்திய பெண்களை கருத்தில் கொள்ளும் போது கலாச்சாரம் கலந்த, மிகவும் பவ்யமான குணமும், நீளமான கூந்தல் கொண்டும் மற்றும் மென்மையான சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற்று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
1. நெல்லிக்காய் எண்ணெய் 
நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.
2. கடலை மாவு 
முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.
3. மஞ்சள் 
இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.
4. குங்குமப்பூ 
இந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.
5. ரோஸ் வாட்டர் 
புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.
6. சந்தனம் 
இந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.
7. சீகைக்காய் 
இதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.
8. தயிர் 
இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் வெளிப்புற பயனை காட்டிலும் தினசரி சாப்பிட்டால் வயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.
9. உதடு பராமரிப்பு 
அழகிய உதடுகளை கொண்ட இந்திய பெண்கள் முக்கிய நாட்களில் மட்டும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வார்கள்.
10. பொட்டு 
எந்த ஒரு இந்திய அழகு கலையும் பொட்டு இல்லாமல் முடிந்து விடாது. இது ஒரு ஒளிரும் சிவப்பு நிற வட்டம். அதை நெற்றியின் நடுவில் வைப்பார்கள். இதை நாம் பல வடிவங்களில் மற்றும் பல வண்ணங்களில் வாங்க முடியும். இது நாம் செய்யும் அழகிற்கு ஒரு புள்ளி வைப்பதை போல் அமையும்.

முகப்பருக்கள் எதனால் வருகிறது?


தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபாக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ், கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட
முகப்பருக்களை உண்டாக்கும்.




 

சந்தனப் பொடி
சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.


 

கிராம்பு
கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.


 

ஆவிப்பிடித்தல்
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்.



உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு - beauty benefits besan

 
அக்காலத்தில் பெண்கள் அனைவரும் அழகாக இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அவர்கள் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு, உடலைப் பராமரித்து வந்தது தான். அதிலும் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான், உடலைப் பராமரித்து வந்தார்கள். அந்த பொருட்களாவன மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பயித்தம் பருப்பு மாவு போன்ற பல. அதனால் தான் வீட்டில் உள்ள பாட்டிகள் குளிக்கும் போது மஞ்சள் தூள், கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தி குளிக்குமாறு சொல்கிறார்கள்.

ஏனெனில் அவற்றில் பல அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் பஜ்ஜி சுடுவதற்கு பயன்படும் கடலை மாவானது ஒரு பாரம்பரிய இந்திய அழகுப் பொருள். இந்த பொருளைக் கொண்டு உடலைப் பராமரித்து வந்தால், பிம்பிள், சரும வறட்சி மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் பொலிவிழந்த கூந்தல் போன்ற பலவற்றை சரிசெய்ய முடியும்.

இப்போது உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க கடலை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.


வறட்சியைப் போக்குவதற்கு...
கடலை மாவில், தேன், 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், வறட்சியானது நீங்கி, முகமானது பட்டுப்போன்று காணப்படும்.



அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க...
கடலை மாவை தயிர் அல்லது ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மென்மையாக இருக்கும்.



பழுப்பு நிறத்தைப் போக்க...
சிலருக்கு சருமத்தின் நிறமானது பழுப்பு நிறத்தில் இருக்கும். அத்தகைய பழுப்பு நிறத்தைப் போக்குவதற்கு, 4-5 பாதாமை பவுடர் செய்து, அதில் 1 டீஸ்பூன் பால், எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், சருமம் பொலிவோடும் இருக்கும்.



பிம்பிளைப் போக்குவதற்கு...
சிலரது சருமத்தில் பிம்பிளானது அதிகம் இருக்கும். அத்தகைய பிம்பிளை போக்குவதற்கு பல பொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.



முகத்தில் வளரும் முடியை தடுக்க...
சில பெண்களுக்கு, வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு, கடலை மாவில் மஞ்சள் தூளை சேர்த்து, நீர் ஊற்றி போஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில், முடி வளரும் இடத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.



கருமையான முழங்கை மற்றும் கழுத்து
நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது கடலை மாவு மாஸ்க் தான். அதற்கு கடலை மாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் போய்விடும்.



பொலிவிழந்த மற்றும் பாதிப்படைந்த கூந்தலுக்கு...
ஆம், கடலை மாவை கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். அதிலும் கூந்தலானது பொலிவிழந்து பாதிக்கப்பட்டு காணப்பட்டால், கடலை மாவில், தயிர் சேர்த்து கலந்து, குளிக்கும் முன் தலைக்கு தடவி 5 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி பட்டுப் போன்று மின்னும். மேலும் கூந்தலும் நன்கு வலிமையோடு வளரும். அதுமட்டுமல்லாமல், பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்...



பொதுவாக கோடையில் அதிக அளவில் வியர்வையானது வெளிப்படும். அதிகமாக வியர்ப்பது சங்கடம் கொடுக்க கூடியது. அதுவும், பயணத்தின் போதும், வெளியிடங்களில் தங்கும் போதும், ஒரு நாளுக்கு ஐந்து முறை உடை மாற்ற முடியாத போதும், அல்லது வியர்க்கும் பொழுது அடர்த்தியான மேலுறையை அணியும் போதும் தாங்க முடியாத வேதனை ஏற்படுகின்றது. இத்தகைய வேதனையை தவிர்ப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பயன்பெறுங்கள்...


how deal with excessive sweating on holiday

வியர்வையின் வேதனையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்...

* கையில்லா சட்டைகளை வாங்க வேண்டும். அதுவும் சட்டைகளின் ஓரப் பகுதிகள் அக்குளுக்கு மேலே போகாமல் கீழே இருத்தல் அவசியம். இதனால் வியர்வையின் ஈரம் துணிகளின் மேல் தங்கி நமக்கு அசெளகரியம் ஏற்படுத்தாமல் ஆவியாகி வெளியேறி விடும். இவ்வகைச் சட்டைகள் அளவில் சிரியதாய் இருப்பதால், பெட்டிகளிலும் நிறைய அடுக்கலாம். எனவே தேவையானவற்றை வாங்கி புத்துணர்வைப் பெறுங்கள். (ஆடைகளைத் தேர்வு செய்யும் போது காற்றோட்டமான பருத்தி ஆடைகள் போன்ற ஆடைகளை வாங்கவும்.)

* தோல்பட்டையை மூடிக்கொள்வதற்கென சால்வை அல்லது தளர்வான ஆடைகளை வாங்கிக் கொள்ளலாம். இவ்வித ஆடைகளை குளிர் பருவத்தில் கழுத்தை சுற்றி கட்டி கொள்ளவும் பயன்படுத்தலாம். இது போன்று செய்வதால், உடலை மிகுதியான வெப்பமோ, குளிரோ தாக்காமலும் அதிகமாக வியர்க்காமலும் காத்துக் கொள்ளலாம்.

* அதிகமாக வியர்க்கும் இடங்களுக்கு செல்லும் பொழுது மாற்றுத் துணிகளை எடுத்து செல்லவும். அவை ஒரு சட்டை, ஒரு ஜோடி அரைக்கால் சட்டை, அல்லது தளர்வான காலணிகளாகவும் இருக்கலாம். இதில் அவசரத் தேவைக்கான பொருட்கள் அடங்கிய கைப்பை (emergency kit) ஒன்றையும் சேர்த்து கொள்ளலாம். அவற்றில்,

- டியோடரண்ட் (அலுமினியம் சேர்க்காதது)
- முகம் துடைப்பதற்கு டிஸ்யூ பேப்பர்
- ஒரு ஜோடி மாற்றுச் சட்டைகள்
- வியர்வைப் பட்டைகள்
- சிறிது சமையல் சோடா

* துவைத்துப் பயன்படுத்தக் கூடிய அல்லது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய வியர்வை அட்டைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக விற்கப்படுகின்றது. அதை இணையம் மூலமாக வாங்கலாம். வை விடுமுறை நாட்களுக்கு மிகவும் ஏற்ற பொருட்கள் என்பதோடு அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் புத்திசாலித்தனமானது. மேலும் இருக்கும் இடத்தில் நீச்சல் குளம் இருந்தால் தயங்காமல் நீந்தலாம். அது புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் அளிக்க வல்லது.

* என்ன சாப்பிடுகிறோம்? எப்போது வெளியே செல்கிறோம்? என்பதை கவனிக்கவும். பூண்டு மற்றும் காரமான மசாலாப் பொருட்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதிகமாக வியர்க்க செய்யும் மது மற்றும் காபி போன்றவற்றை பருகுவதைத் தவிர்க்கவும். நட்பான மற்றும் மனதிற்கு அமைதி நிறைந்த சூழல்களை உருவாக்க வேண்டும். இவை மன அழுத்தம் அடைவதை தவிர்ப்பதோடு, உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் உதவும்.

அழகு நன்மைகள்

க்ரீன் டீ குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்

க்ரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று அனைவருக்குமே நன்கு தெரிந்த விஷயம் தான். மேலும் பல திரையுலக நட்சத்திரங்களின் அழகின் இரகசியம் என்னவாக இருக்குமென்றால் அது க்ரீன் டீயாகத் தான் இருக்க முடியும். பலரிடம் க்ரீன் டீயைப் பற்றி கேட்டால் அனைவரும் சொல்வது, "க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும். அதுமட்டுமல்லாமல், முகம் பொலிவாக இருக்கும்" என்பது தான்.

ஆனால் க்ரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த க்ரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், என்ன மாதிரியான அழகு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!




இளமை தோற்றம்
க்ரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும். அதற்கு க்ரீன் டீயை குடித்தாலோ அல்லது அதனை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தாலோ, அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும்.



பருக்கள்
பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்ஸின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே க்ரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.


சரும பாதுகாப்பு
க்ரீன் டீயை சருமத்திற்கு தேய்த்தாலோ அல்லது குடித்தாலோ, அவை சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். அதுமட்டுமின், இவை சருமத்தின் நிறம் மாறாமலும் தடுக்கும்.




அழகான சருமம்
எப்போது சருமத்தில் டாக்ஸின்கள் அதிகம் இருக்கிறதோ, அப்போது தான் சருமம் பொலிவின்றி காணப்படும். ஆகவே இத்தகைய டாக்ஸின்களை முற்றிலும் போக்கும் திறன் க்ரீன் டீயின் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் க்ரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.


சரும புற்றுநோய்
சருமத்தின் மீது அதிகப்படியான சூரியனின் புறஊதாக்கதிர்கள் பட்டால், சில சமயங்களில் சரும செல்கள் பாதிப்படைந்து, சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே அத்தகைய தாக்கத்தை தடுத்து, சருமத்திற்கு சரியான பாதுகாப்பை க்ரீன் டீ கொடுக்கும்.



எடை குறைவு
க்ரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, செரிமானப் பிரச்சனையை சரிசெய்யும். அதாவது, க்ரீன் டீ, உண்ணும் உணவை சரியாக செரிமானமடைய வைத்து, சாப்பிட வேண்டிய நேரத்தில் மட்டும் சாப்பிட வைக்கும். இதனால் தான் க்ரீன் டீ குடித்தால், உடல் சிக்கென்று ஸ்லிம்மாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.



முடி உதிர்தல்
நீண்ட நாள் பிரச்சனை என்றால் அது முடி கொட்டுவது தான். இத்தகைய பிரச்சனைக்கு க்ரீன் டீ ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். எப்படியெனில் க்ரீன் டீயை வைத்து, தலைக்கு மசாஜ் செய்தால், அவை மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது நரைமுடி ஏற்படுவதையும் தடுக்கும்.