Sunday, February 22, 2015

கவிதை


காற்றைக்கூட
சுகிக்க தெரியாதவனை 
"கவிதை' எழுத செய்தாய்
சிறு கண்ணசைவில்..!!
^
தூக்கத்தில்
பொழுது போக்கியவனை
'நட்சத்திரங்களை'
எண்ண வைத்தாய்..!!
^
சொர்கத்தின் விலாசத்தை
விசாரித்து திரிந்தவனை
"ஸ்பரிசத்தில்தான் சொர்க்கம்" என
சொல்லாமல் உணர்த்தினாய்..!!
^
தோல்விகளில்
தடுக்கி விழுந்த என்னை
வெற்றிகளோடு
கைகுலுக்க செய்தாய்..!!

ANDROID TAMIL LANGUAGE - ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத:




பலர் கேட்டதற்கு இணங்க மீண்டும் பதிவேற்றுகிறேன்
ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத பல அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில,
Tamil Unicode Keyboard (KM Tamil என்பது இன்னொரு பெயர்) (இது தான் நான் பயன்படுத்துகிறேன்)
இன்னும் நிறைய அப்ளிகேசன்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் பாதுகாப்பானவைகள் அல்ல. காரணம் மேலே சொன்ன இரண்டு அப்ளிகேசன்களையும் பயன்படுத்த எந்த அனுமதியும் (Permission) கேட்காது. ஆனால் மற்ற அப்ளிகேசன்கள் தேவையில்லாமல் பல அனுமதிகள் நம்மிடம் கேட்கும். (ஆண்ட்ராய்ட் அனுமதிகள் பற்றி ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா? என்ற பதிவில் பார்க்கவும்).
இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings => Language & input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & input methods என்ற இடத்தில் இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.
பிறகு மொபைலில் நீங்கள் எழுதும் போது திரையின் மேலே Select Input என்று இருப்பதை கீழே Swipe செய்து அதில் நீங்கள் நிறுவியுள்ள அப்ளிகேஷனை தேர்வு செய்ய வேண்டும்.
மீண்டும் இது போன்றே மொபைல் கீபோர்டுக்கு மாறிக்கொள்ளலாம்.
கவனிக்க: இன்டர்நெட் இணைப்பின் அனுமதி கேட்கும் தட்டச்சு அப்ளிகேசன்களால் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை சேகரிக்க முடியும்.

BABY - ஒரு குழந்தை எப்படி உருவாகிறது.........


12 வருடம் உழைப்பில் 15 படங்கள்,,,, எடுத்த வருடம் 1965!!.,,,
-
(அனைத்து படங்களையும் பயப்படாமல் பார்க்கவும்)
-
-
photos taken by... Lennart Nilsson.

  










 












Friday, February 20, 2015

TAMILNADU GOVERNMENT EMPLOYEE RULES REGULATIONS











பக்கவாதத்தை ஏற்படுத்தும் குறட்டை! அலட்சியம் வேண்டாம்



நாம் சுவாசிக்கும் காற்றானது, நுரையீரலுக்கு செல்ல தடைபடும் போது குறட்டை ஏற்படுகிறது.

ஆனால் அந்த குறட்டை தூங்கும் போது ஏன் வருகிறது என்று தெரியுமா, தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன.

அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுகிறது, அதற்கு பெயர் தான் குறட்டை.


குறட்டை வருவதற்கான காரணம்

சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சனை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணங்கள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு.
புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.

ஆபத்துக்கள்

தூங்கிக் கொண்டிருக்கும் போது இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை ஏற்பட பெரும்பாலும் இதுவே காரணமாக அமைகிறது.


அதிக உடல் எடை காரணமாக, வயிறு, கழுத்து அல்லது தொண்டைப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்து விடும்.


இதனால் நுரையீரலால் நாம் ஆக்ஸிஜனை உள்ளிருக்கும் போது தேவையான அளவுக்கு விரிவடைய இயலாமல் போகும். இது மூச்சை உள்ளிழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.


இந்த சமயங்களில் ஒருவரது ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்து, கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.


மேலும் இரவில் தூக்கம் கெட்டுவிடும். காலையில் எழுந்ததும் கடுமையாகத் தலைவலிக்கும்.


பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள், வேலையில் கவனக்குறைவு ஏற்படும், ஞாபக மறதி உண்டாகும்.


இந்த நிலைமை நீடிக்கும்போது, இதயத் துடிப்பில் பிரச்சனை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோர்த்துக் கொள்ளும்.


தடுப்பதற்கு என்ன செய்யலாம்?


1. மல்லாக்க படுக்க வேண்டாம்.
2. உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
3. தேவையில்லாமல் தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
4. தூங்கும் போது தலைப்பகுதியை ஓரளவு உயர்த்திக் கொள்ள வேண்டும்.
5. மது, புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்

BLOOD PURIFICATION METHOD - நம் உடலில் இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி ?




இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் வரும்.

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.


முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.


நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.


இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.


தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.


இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது. 


இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம்.

தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம்.


இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.


ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.


அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.


விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்...

Thursday, February 19, 2015

Mobile to LAPTOP and Tablet internet connection?

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி?
ஒரு ஆன்ராய்டு மொபைல் மூலம் என்னவென்னாலும் இருந்த இடத்திலே இருந்து கொண்டு செய்யமுடியும் என்ற நிலை வந்து கொண்டு இருக்கிறது இன்றைய நவீன தொழில் நுட்பம்.
இந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது நமது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் லேப்டாப்,டேப்லெட் பி.சி மற்றும் டேபிள் கணிணிக்கு எவ்வாறு வைஃப்பி (wi-fi) தொடர்பு மூலம் இண்டர்னெட் இனைப்பு ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.
வேண்டிய அமைவு முறை:
இந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும் அதில் வைஃப்பி மூலம் இணைய இனைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.இதை அறிந்து கொள்ள உங்கள் மொபைல் நிறுவன கைடை பார்க்கவும்.
சரி இனி இதை எவ்வாறு நிறுவுவது என்பதை பார்க்கலாம்.
step--->1 மொபைலில்setting மெனுவுக்கு போகவும்
step--->2 அடுத்து wireless and network செல்லவும்
step--->3 அடுத்து Tethering and portable hotspot செல்லவும்
step--->4 அதில் portable wi-fi hotspot setting என்பது கானப்படும்.அதை கிளிக்
செய்யவும்.
step--->5 இதனுள் இரண்டு மெனுக்கள் கானப்படும்.அதில் configure portable wi-fi
hotspot என்பதை கிளிக் செய்யவும்.
step--->6 அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைல்மாடல் பெயர்
கொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால் உங்கள்
பெயரை வைத்து கொள்ளலாம்.
step--->7 அடுத்த மெனுSecurity இதில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை
யார்வேண்டுமானாலும் பயன்படுத்த open என்பைதை
தேர்தெடுக்கலாம்.குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன் படுத்த
WAP2PSK என்பதைதேர்ந்தெடுத்து பாஸ்வேர்டு அமைத்து
கொள்ளலாம்.பிறகு save கொடுக்கவும்.
step--->8 மேல் புறம் save கொடுத்த பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக்
செய்யவும்.இப்போது சிறிய இடைவெளியுடன் ஒரு புதிய
லோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய ஊதா நிற
சிம்பல் கானப்படும்.அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் ஒரு
இணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட தொடங்கி விட்டது.இனி
உங்கள் லேப்டாப்,டெஸ்க் டாப் கணிணி,டேப்லெட் பி.சி யில்
இணைய இணைப்பை உபயோகிக்கலாம்.

DO u Want a Job in GOOGLE?

google ளில் பொறியாளராக வேண்டுமா? உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவை இவை தான்!!!
யாருக்கு எப்பொழுது எதில் சந்தேகம் வந்தாலும் முதலில் தேடுவது கூகுளில் தான், அந்தளவு உலக பிரபலமாக இருக்கும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற பலரும் வரிசையில் நிற்கின்றனர்.
நீங்களும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா, கூகுள் நிறுவனத்தில் பொறியாளராக உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
கோடு
C++, Java, Python, Consult MIT அல்லது Udacity போன்ற கோடிங் மொழிகளை கற்றிருக்க வேண்டும்
தேர்வு
உங்களுக்கு கோடிங் தெரிந்திருப்பதோடு அவைகளில் இருக்கும் பக்ஸ்களை எடுக்கவும், சாப்ட்வேரை ப்ரேக் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்
சுருக்க கணிதம்
சுருக்க கணிதம் குறித்த தகவல்களும் அதோடு தொடர்புடைய சில பாடங்களிலும் தேர்ந்திருக்க வேண்டும்
இயங்கு தளம்
இயங்கு தளங்கள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்
வரைவியல் தரவுக் கட்டமைப்பு
வரைவியல் தரவுக் கட்டமைப்புகளான stacks, queues மற்றும் bags போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்
குறியாக்க
குறியாக்கம் குறித்து அறிந்திருக்க வேண்டும்
தொகுப்பிகள்
கம்பைலர் குறித்து நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் இதன் மூலம் பெரியளவு கணிணி மொழிகளையும் எளிதாக மொழியாக்கம் செய்ய முடியும் என்று ஸ்டான்போர்டு தெரிவிக்கின்றது.
இணைக் கணிப்பணி
இணைக் கணிப்பணி குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்
நிரலாக்க மொழி
Java Script, CSS, Ruby மற்றும் HTML போன்ற மொழிகளை அறிந்திருக்க வேண்டும்

TOP 25 SOFTWARE FOR WINDOWS

வின்டோஸ் இயங்குதளத்திற்கான 25 அடிப்படை மென்பொருள்கள்
-----------------------------------
1.Good Antivirus:-
3. Registry Cleaners/Tune up Utilities
http://www.tune-up.com/download/
11.Adobe Photoshop/GIMP:
http://www.gimp.org/downloads/
14.Malware Bytes:-
http://filehippo.com/

THYROID ஹைப்பர் தைராய்டு சிகிச்சை



நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் எனப்படும் என்டோக்ரைன் (Endocrine System) சுரப்பியிலேயே பெரிய சுரப்பி தைராய்டு தான். இது நமது கழுத்தின் கீழ் பகுதியில் உள்ளது. இதனுள் தைராக்ஸின் மற்றும் ட்ரியோடோதைரோனைன் எனப்படும் இரண்டு முக்கிய ஹார்மோன்கள் இருக்கின்றன. இதை மருத்துவ பெயரில் T3 & T4 என குறிப்பிடுகின்றனர். தைராய்டை சரிசெய்யும் 13 ஆரோக்கிய உணவுகள்!!! இவைகளின் முக்கிய பணியே உடல் எடையை கட்டுப்படுத்துதல், உடலிற்கு தேவையான சக்தியை உபயோகப்படுத்துதல், நமது உறங்கும் தன்மைக்கு வழிசெய்தல், உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்துதல் போன்றவை ஆகும். தைராய்டு பிரச்சனை ஏற்படும் போது மேல் கூறியவற்றில் எல்லாம் கோளாறுகள் ஏற்பட வாய்புகள் இருக்கின்றன. இந்த கட்டுரையின் மூலமாக, இதுவரை நீங்கள் அறிந்திராத தைராய்டு பிரச்சனைகள் குறித்து தெரியப்படுத்தவிருக்கிறோம்... 

உடல் எடை குறைதல்

 உங்களுக்கு ஹைப்பர் தைராய்டு என்பதை அறிவுறுத்தும் அறிகுறிகளில் ஒன்று உடல் எடை குறைதல். பசியின்மை ஏற்படும் காரணத்தால் உடல் எடை குறைவு ஏற்படும். இதனால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். வியர்வை அதிகரிக்கும், படபடப்பு மற்றும் கை நடுக்கம் ஏற்படும்.

உடல் எடை அதிகரித்தல்

 தைராய்டின் இன்னொரு பிரச்சனை உடல் எடை அதிகரித்தல். அதிலும் ஹைப்போ தைராய்டு உடல் எடையை அதிகரிக்க செய்யும். இது இரண்டு வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வகையில் இதயத்துடிப்பை குறைய செய்கிறது, கைகளில் உணர்வின்மை அடைய செய்கிறது, உங்கள் கழுத்தை பெரிதாய் ஆக்குகிறது. மற்றும் பெண்களுக்கு மாதவிடாயை அதிகரிக்கவும் செய்யும்.

ஆன்டி-தைராய்டு

 ஹைப்போ தைராய்டு பிரச்சனையை கட்டுப்படுத்த, மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கும் மருந்துகளை நேரம் தவறாது உட்கொள்ள வேண்டும். மற்றும் ஹைப்பர் தைராய்டைக் கட்டுப்படுத்த ஆன்டி-தைராய்டு மாத்திரைகளும், கதிரியக்க (Radioactive) அயோடின் சிகிச்சை முறையும் இருக்கின்றன. மற்றும் உங்கள் மருத்துவர் தரும் மாத்திரைகளின் மூலமாக தான் இவற்றின் அறிகுறிகளான இதயத்துடிப்பு அதிகரித்தல், குறைதல் போன்ற கோளாறுகளை சரி செய்ய இயலும்.

தைராய்டு புற்றுநோய் 

உங்கள் தொண்டை பகுதியில் வீக்கம் ஏற்படுதல், சுவாசிக்கும் போதும், சாப்பிடும் போதும் வலி ஏற்படுதல் மற்றும் தொண்டை கரகரப்பு ஏற்படுதல் போன்றவை எல்லாம் தைராய்டு புற்றுநோய்க்கான அறிகுறிகள். இப்படி எதாவது ஏற்படும் போது கதிரியக்க ஐயோடின் சிகிச்சை மூலமாக தைராய்டு பகுதியை அகற்றிவிடுவார்கள்.

நீரிழிவு நோய்

 தைராய்டு காரணமாக டைப் 1 நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது மன அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்கிறது. ஆண்களை விட பொதுவாக பெண்களுக்கு தான் அதிகமாக தைராய்டு பிரச்சனைகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பரிசோதனை 

தைராய்டை கண்டறிய தைராய்டு ப்ரோபைல் (Thyroid Profile) பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஹார்மோனில் தைராய்டின் தூண்டுதல் எந்த அளவு இருக்கிறது என கண்டறியப்படுகிறது. இதில் தைராய்டின் தூண்டுதல் மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது ஹைப்போ தைராய்டு என கூறப்படுகிறது. தைராய்டின் தூண்டுதல் குறைவாக இருக்கும் பட்சத்தில் அது ஹைப்பர் தைராய்டு என கூறப்படுகிறது.

அனைவரும் கட்டாய பரிசோதனை

 முப்பத்து ஐந்து வயதிற்கு மேல் ஒவ்வொருவரும் கட்டாய தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நீங்கள் இந்த பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய அறிகுறிகள் ஏதாவது உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

சிகிச்சை 

உங்களுக்கு தைராய்டு இருக்கிறது என கண்டறியப்பட்டால், மருத்துவர் தரும் மருந்துகளை கட்டாயம் நேரம் தவறாமல் உட்கொள்ள வேண்டும். நீங்கள் சரிவர மருந்துகளை உட்கொள்ளவில்லை எனில், அது இதய பாதிப்புகளையும், மலட்டுத்தன்மையும் ஏற்பட காரணமாகிவிடும்.

ஊட்டச்சத்து உணவு

 தைராய்டினை சரியான நிலையில் கட்டுக்குள் வைக்க, நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். முக்கியமாக, அயோடின் மற்றும் செலினியம் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சைவம் உண்பவர்கள், கீரை, பூண்டு, எள்ளு போன்றவைகளை உணவுக்கட்டுப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றும் மீன், காளான், சோயா பீன்ஸ் போன்றவற்றை சாப்பிட்டால் உடலுக்கு செலினியம் சத்து நிறைய கிடைக்கும்.

எச்சரிக்கை 

இந்திய என்டோகிரினாலஜி (Endocrinology) மாத இதழில் வெளிவந்த கணக்கெடுப்பின் படி, தைராய்டு பிரச்சனையின் காரணமாக ஹைப்போதைராய்டிஸம் இருப்பதாய் கண்டரியப்பட்டவர்களில் 5,376'ல் 10.95% பேர் தான் தப்பிப் பிழைத்துள்ளனர். எனவே, ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி, சரியாக நேரம் தவறாமல் மருந்துகள் உட்கொள்ளவேண்டியது அவசியம்.

Saturday, February 14, 2015

Lama- Mummy - Profesor Ganhugiyn Purevbata



இப்போது நான் சொல்லப் போகும் தகவல் உண்மையானதா? இல்லையா? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நாம் போய்விட வேண்டியதில்லை. அறிவியல் தாண்டிய விதிவிலக்கான அதிசயங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுக்கும் ஏதோவொரு வடிவில் அறிவியல் விளக்கம் இருக்கலாம். நிச்சயம் இருக்கும். அதைக் கணிக்குமளவுக்கு நம்மிடம் அறிவியல் வளராமல் இருக்கலாம். இந்தத் தகவலும், சாத்தியமானதா? உண்மையானதா? என்று தெரியவில்லை. ஒருவேளை சாத்தியமான உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதிசயம்தான். அப்படி இல்லாத பட்சத்தில் தற்போது வெளிவந்த ஒரு தகவலாக மட்டும் இதை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதுசரி…. நான் ஏன் இவ்வளவு சுற்றிவளைத்துப் பேசுகிறேன்…..
காரணம் இருக்கிறது.
விசயம் இதுதான்………
மொங்கோலிய நாட்டின் தலைநகரான 'உளான் படோர்’ (Ulan Bator) இல், 200 வருடங்கள் பழமையான உடலொன்று (Mummy) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவொரு புத்தத் துறவியின உடல். இந்த உடலில் என்ன விசேசம் தெரியுமா?
புத்தத் துறவி பத்மாசனம் (lotus position) இட்டபடி, தியானம் செய்யும் நிலையில், அப்படியே உறைந்த உடலுடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். அதாவது, கால்கள் சப்பனமிட்டபடியும், கைகள் மடியில் குறுக்காக வைத்திருக்கும் நிலையிலும் அந்த உடல் காணப்படுகிறது. இதில் சொல்லப்படும் ஆச்சரியமான விசயம்தான் நான் மேலே அந்த அளவுக்கு எழுதுவதற்குக் காரணமாக அமைந்தது.
அந்தத் துறவி (Lama) தியான நிலையில் குறிப்பிட்ட அமைப்பில் இருப்பதால், அவர் இன்னும் உயிரோடு இருக்கலாமென்று பலமாகச் சந்தேகிக்கிறார்கள். இவர் உயிருடன் இருக்கலாமென்று சொல்பவர் சாதாரணமானவர் இல்லை. மொங்கோலியாவின் புத்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான Profesor Ganhugiyn Purevbata என்பவரே சொல்லியிருக்கிறார். புத்த லாமாக்கள் இப்படிப் பல காலங்களாக மூச்சையடக்கித் தியானத்தில் இருப்பது நிதர்சனமானது என்கிறார் அவர். பேராசிரியர் சொல்வது இதுதான், "Lama is sitting in the lotus position vajra, the left hand is opened, and the right hand symbolises of the preaching Sutra. This is a sign that the Lama is not dead, but is in a very deep meditation according to the ancient tradition of Buddhist lamas”.
இவர் இப்போதும் உயிருடன் இருக்கலாம் என்பதை யாரும் நம்பப் போவதில்லை. நான்கூட. ஆனால் தியானங்களின் மூலம் செய்யமுடியுமென்று காட்சிப்படுத்தப்பட்ட சில செயல்கள் இந்த அவநம்பிக்கையை தகர்த்தாலும் தகர்க்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஒரு குகையில் இந்தப் புத்த லாமா அமர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். இவரின் உடனல் இப்போது பரிசோதனைகளுக்குட்பட்டு வருகிறது.
பிற்குறிப்பு: இதை ஒரு மூடநம்பிக்கையைப் பரப்பும் ஒரு பதிவாகப் பார்க்காமல், ஒரு தகவலாகவே பார்க்கவும்.
-ராஜ்சிவா-
நன்றி: தியாகராஜன் (B.Thiyagarajan).

வெரோனிக்காவின் முக்காடு மூன்றாம் பகுதி

நீண்டகாலமாக 'வெரோனிக்காவின் முக்காடு' தொடரின் மூன்றாம் பகுதியை வெளியிடவில்லை. அதை இங்கு தருகிறேன். படித்துவிட்டு உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள்.
-ராஜ்சிவா-




     நாஸாவினரால் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி எடுக்கப்படும் புகைப்படங்களை ஆராய்வதற்கென்று உருவாக்கப்பட்ட கருவிதான் 'VP8 இமேஜ் அனலைஸர்' (VP8 Image Analyzer) என்பதாகும். மேலே இருந்து எடுக்கப்பட்ட படங்களில், பூமியின் நிலப்பரப்பின் உயர்வு, தாழ்ச்சி என்பவற்றை இந்தக் கருவி கணித்துச் சொல்லும். இந்தக் கருவியில் ஒரு சாதாரண மனிதனின் புகைப்படமொன்றை (2D) வைத்து ஆராய்வோமானால், அந்தப் புகைப்படத்தில் இருக்கும் மனித உருவம் சிதைந்து காணப்படும். அதே நேரம், VP8 இல் ஒரு முப்பரிமாணப் படமொன்றை (3D) வைத்துப் பார்த்தால், அந்தப் படத்தில் உள்ள உருவம், முப்பரிமாணத் தோற்றத்துடன், மேலெழுந்த வடிவத்தில் காணப்படும். நாம் முப்பரிமாணப் படமொன்றை, அதற்குரிய கண்ணாடியை அணிந்துகொண்டு பார்க்கும்போது தெரியும் உருவம்போல அது இருக்கும். இந்த VP8 கருவியில் டூரின் துணியில் தெரிந்த உருவத்தைப் புகைப்படமாக எடுத்ததை வைத்துப் பார்ப்பதற்கு முடிவு செய்தார்கள். அதில் அந்தப் படத்தை வைத்துப் பார்க்கும் போதும், சிதைந்து போன உருவம் தெரியும் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியொன்று காத்திருந்தது. அந்தப் படத்தை VP8 கருவியில் வைத்துப் பார்த்தபோது, அதில் தெரிந்த இயேசுநாதர் என்று கருதப்பட்ட அந்த உருவம் எந்தச் சிதைவும் இல்லாமல், முப்பரிமாண வடிவத்தில் முழுமையான மேலெழும்பிய முகத்துடன் அங்கு காணப்பட்டது. இப்படியொரு அதிசயத்தை அவர்கள் இதற்கு முன்னர் கண்டதேயில்லை. நெகட்டிவான எதிர்மறைப் படம் டூரின் துணியில் இருந்ததை 'செகண்டோ பியா' எடுத்த புகைப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டபோது எவ்வளவு ஆச்சரியமடைந்தார்களோ, அதைவிட அதிகளவு ஆச்சரியம், அந்தப் படம் முப்பரிமாணத் தோற்றத்தின் தகவல்களைக் கொண்டிருக்கின்றது என்ற போதும் ஏற்பட்டது.  



     டூரின் துணியில் காணப்பட்ட சில அதீதத் தன்மைகள், அது இயேசுநாதருடையதுதான் என்று பலர் எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிவிடுவதற்குக் காரணமாக இருந்தன. குறிப்பாகத் துணியில் இருந்த உருவம் மனிதனால் வரையப்பட்ட உருவமல்ல என்பதும், அது எதிர்மறை உருவமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதும், அத்துடன் அது முப்பரிமாணத் தோற்றத்திற்கான தகவல்களைக் கொண்டிருந்தது என்பதும், அதற்கு ஒரு அமானுஷ்யத் தன்மையை ஏற்படுத்தியிருந்தது. விஞ்ஞானம் வளர்ந்து, கணணிகளின் ஆதிக்கம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், இதுபோல ஒரு உருவத்தை மனிதனால் ஒரு துணியில் உருவாக்கியிருக்க முடியலாம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இப்படியொன்றை மனிதனால் உருவாக்கியிருக்க முடியவே முடியாது என்று பலர் நினைத்திருந்தனர். அதனால், இது மனிதனைத் தாண்டிய ஒரு அதிசயச் சக்தியொன்றினாலேயே நடைபெற்றிருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புவதில் ஆச்சரியமில்லை. ஆனால், என்னதான் முடிவுகள் நம்பிக்கையாளர்களுக்குச் சாதகமாக வந்தாலும், அங்கும் பல மழுப்பலான ஓட்டைகள் இருந்ததை, எதிர்ப்பவர்கள் சுலபமாகக் கண்டு கொண்டார்கள். எந்த உருவம், அமானுஷ்யமான சக்தியொன்றினால் அந்தத் துணியில் பதிவாகியது என்று நினைத்தார்களோ, அந்த உருவத்தின் அமைப்பே அது உண்மையானதல்ல என்று மறுப்பதற்கும் வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது.



      இப்போது நான் சொல்லப் போவதை நன்றாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். டுரின் துணியில் காணப்பட்ட உருவத்தின் அமைப்பை நீங்கள் படத்தில் பார்த்தீர்களல்லவா? அது ஒரு மனிதனின் முகத்தை அப்படியே வரைந்தது போலக் காட்சி தருகிறதல்லவா? அது எப்படி உருவாகியது என்று நமக்குச் சொல்லப்பட்டது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு, மரணமடைந்த பின்னர், மூன்று நாட்களுக்கு அந்தத் துணி அவர் உடலில் போர்த்தப்பட்டிருந்தது எனவும், முகத்தின் மேல் அது மூடிக் கட்டப்பட்டது எனவும் பைபிளில் சொல்லப்பட்டிருந்தது அல்லவா? "இயேசுநாதரின் முகத்தின் மேல், மூன்று நாட்களாக அந்தத் துணி இருந்ததால்தான், அவரது முகம் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்றுதானே நாம் நம்புகிறோம். அப்படியிருக்கும் பட்சத்தில், இதைச் சரியாகச் சிந்தித்துப் பாருங்கள். இயேசுநாதரின் முகம், காதிலிருந்து மூக்கு நுனிவரை மேல் நோக்கியபடி முப்பரிமாணத் தோற்றத்தில் உயர்ந்தல்லவா காணப்படும். அப்படிக் காணப்படும் முகத்தில் ஒரு துணியை நாம் போர்த்தினால், ஒரு காதுக்கும், மற்றக் காதுக்கும் இடையேயுள்ள இடைவெளி, போர்த்திய நிலையில் இருக்கும்போது அகலம் குறைந்ததாகவும், அந்தத் துணியை எடுத்து விரிக்கும்போது காதுகளுக்கிடையில் இருக்கும் இடைவெளி அதிகமாகவும் அல்லவா இருக்கும்? நான் சொல்வது புரியவில்லையா? சரி, இதை இப்படிப் பாருங்கள். இரண்டடி அகலமுள்ள சதுரத் துணியொன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் முகத்தின் மேல் அப்படியே போட்டு மூடுங்கள். அது முகத்தில் இருக்கும் நிலையில், உங்கள் காதுகள் இருக்கும் இடங்களை அந்தத் துணியில் அடையாளமிடுங்கள். அப்படியே, உங்கள் கன்னங்கள் இரண்டையும் அடையாளமிடுங்கள். தொடர்ந்து, மூக்கு, நெற்றி, தாடை ஆகியவற்றையும் அடையாளமிடுங்கள். முடிந்ததா? இப்போது துணியை முகத்திலிருந்து எடுத்து விரித்துப் பாருங்கள். உங்கள் நிஜ முகத்தின் அகலத்தை விட, துணியில் இருக்கும் அடையாளங்கள் அதிக இடைவெளிகளில் காணப்படும். அது ஒரு கார்ட்டூன் மனிதனின் முகம்போலக் காட்சி தரும். உங்கள் முகத்தின் முப்பரிமாணத் தோற்றத்தினூடாக அந்தத் துணி போர்த்தப்பட்டுப் பின்னர் விரிக்கப்பட்டதுதான், அதற்குக் காரணம். முகம் அகலமாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லியிருந்தது இப்போதும் புரியாதவர்கள், குழந்தைகளை ஏமாற்றுவதற்கு நாம் அணியும் ரப்பரினால் செய்யப்பட்ட மெல்லிய முகமூடியை வெட்டி விரித்துப் பார்க்கும்போது, என்ன தோற்றம் வரும் என்று சிந்தித்துப் பாருங்கள். முடியாதவர்கள், அதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது அநேகமாகப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். அதனால் நாம் இப்போது டூரின் துணிக்கு வரலாம். டூரின் துணியிலிருக்கும் உருவமும் இயேசுநாதரைப் போர்த்தியதால் ஏற்பட்டது என்றால், அதுவும் அகலமான முக அமைப்பைத்தான் கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆனால், டூரின் துணியில் உள்ள உருவம், படம் ஒன்றை வரைந்ததுபோல அல்லவா காணப்படுகிறது. அந்தத் துணி ஒரு உடலில் போர்த்தப்பட்டிருந்திருக்கலாம். அதனால் இரத்தத் திட்டுகள் அதில் பதிந்திருக்கலாம். ஆனால், முகம் பதிய வேண்டுமானால், அகலமாகத்தானே பதிந்திருக்க வேண்டும்? அப்படி இல்லாமல், மனிதன் ஒருவனை நேரில் பார்க்கும்போது தெரியும் அதே முக அமைப்பில் எப்படிப் பதிந்திருக்க முடியும்? இப்போது, அந்த உருவம் யாராலோ வரையப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுகிறதல்லவா?







     டூரின் துணியில் உள்ள உருவம் இயேசுநாதரின் முகத்தில் படிந்திருப்பதால் பதிவாகியது என்பதில் பெரும் சந்தேகம் உருவாகினாலும், அதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்தும் அது வரையப்பட்ட உருவமல்ல என்றே முடிவுக்குக் கொண்டுவந்திருந்தன. நிச்சயம் அது வரையப்பட்டிருக்க வேண்டும் என்று ஒருபுறம்  முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கையில், அது வரையப்படவில்லை என்ற முடிவுகளும் கிடைத்திருந்தன. இது ஒரு பெருங்குழப்பமாகவே உருவெடுத்தது. இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், 'துணியில் காணப்பட்ட இரத்தத் திட்டுகள் என்ன சொல்கின்றன?' என்ற கேள்வியும் எஞ்சி நின்றது. இரத்தத்தை ஆராய்வதற்கு முன்னரே அது பல சந்தேகங்களைக் கிளப்பியிருந்தது. அந்தச் சந்தேகங்களுக்குக் காரணம், துணியில் காணப்பட்ட அந்த இரத்தத் திட்டுகள் மனிதனின் இரத்தத் திட்டுகள்போல இல்லாமல், சிறிது மாற்றத்துடன் காணப்பட்டதுதான். சாதாரணமாகக் காலம் செல்லச் செல்ல மனிதனின் இரத்தம் சிவப்பு நிறத்தை இழந்து மஞ்சள் நிறமாக மாறும். மேலும் காலம் சென்றால், அது மண்ணிறத்தை அடையும். அதன் பின்னர் அது கருப்பாக மாறும். ஆனால், டூரின் துணியில் காணப்பட இரத்தத் திட்டுக்களில் சில, அப்போதும் சிவப்பு நிறமாகவே காணப்பட்டன. மனித இரத்தமாக இருந்தால், அது நிச்சயம் நிறம் மாறியிருக்க வேண்டும். டூரின் துணியில் இருந்த இரத்தம் சிவப்பாக இருந்ததை, மக்கள் இரண்டு விதங்களில் பார்க்க ஆரம்பித்தனர். அது இயேசுநாதரின் இரத்தம் என்று நம்பியவர்கள், 'இயேசுவின் பரிசுத்த இரத்தம் என்பதாலேயே நிறம் மாறாமல், சிவப்பு நிறத்தில் இப்போதும் காணப்படுகிறது' என்று சொல்லி அதிசயப்பட்டார்கள். ஆனால், அது இயேசுவினுடையது அல்ல என்று மறுப்பவர்களோ, 'இது சிவப்பு நிறத்தில் இப்போதும் இருப்பதால் மனித இரத்தமாக இருப்பதற்குச் சாத்தியமேயில்லை. நிச்சயம் இது சிவப்பு மையினால் வரையப்பட்டிருக்க வேண்டும்' என்று கருதினார்கள். இந்தச் சந்தேகங்களைத் தீர்த்துவிட வேண்டுமென்பதால், துணியில் இருந்த இரத்தத்தின் மாதிரியைப் பரிசோதனை செய்வதென்ற முடிவுக்கு வந்தார்கள். துணியில் இருந்த இரத்தத்திட்டு சுரண்டப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. "சிவப்பு மையா? இல்லை இயேசுவின் இரத்தமா?" என்று ஆவலுடன் காத்திருந்த மக்களுக்குப் பதிலும் கிடைத்தது.



     சந்தேகமே இல்லாமல், டூரின் துணியில் காணப்படுவது ஒது மனிதனின் இரத்தம்தான் என்று பரிசோதனையின் முடிவு தெரிவித்தது. அத்துடன் இன்னுமொரு ஆச்சரியமும் அதில் இருந்தது. அதாவது அந்த இரத்தம் 'AB' வகையைச் சேர்ந்தது என்று சொல்லப்பட்டது. அதன் அர்த்தம், அந்த டூரின் துணியில் இருக்கும் இரத்தம் இயேசுநாதருடையதுதான் என்ற முடிவுக்கு நாம் வருவோமானால், இயேசுநாதருக்கு 'AB' வகையைச் சேர்ந்த இரத்தம் உடலில் ஓடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். இது இரத்த வகைகளில் மிகவும் அரிய வகையானது என்பது உண்மைதான் ('AB' வகை இரத்தம் உள்ளவர்கள் இதனால் கொஞ்சம் பெருமையும் பட்டுக் கொள்ளலாம்). துணியில் இருந்தது மை அல்ல இரத்தம்தான் என்ற முடிவு நம்பிக்கையாளர்களுக்குப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது. அதுமட்டும் இரத்தம் இல்லை, மைதான் என்ற முடிவு வந்திருக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்து போயிருக்கும். அந்த இரத்தம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் 'A', 'B' வகை இரத்தம் இல்லாமல், 'AB' என்னும் அரிய வகையில் இருந்தது நம்பிக்கையாளர்களின் வாதத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் இருந்தது. "பார்த்தீர்களா? அது இயேசுவின் இரத்தம் என்பதால்தான் AB என்னும் அரிய வகையான இரத்தமாக இருக்கிறது" என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்கும் சில உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்று முட்டுக்கட்டையிட்டது. இரத்தமானது காலம் செல்லச் செல்ல அதிலிருக்கும் பிளாஸ்மாக் கலங்களின் ஆண்டிபாடியை (Antibody) இழக்கத் தொடங்கும். பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக அங்கே ஆண்டிபாடீகள் அழிந்து போயிருக்கும். எந்த இரத்த வகையில் பிளாஸ்மாக் கலங்களில் ஆண்டிபாடீ இருக்காதோ, அதையே 'AB' வகை இரத்தம் என்று வரையறுக்கிறார்கள். டூரின் துணியில் இருந்த இரத்தம் 'A' வகை இரத்தமாகவோ அல்லது 'B' வகை இரத்தமாகவோ இருந்திருந்தாலும், அவை பல நூற்றாண்டுகளின் பின்னர் தங்கள் ஆண்டிபாடீயை இழந்திருக்கும். அவற்றைப் பரிசோதனை செய்யும்போது, 'AB' வகை இரத்தம் என்றே நாம் முடிவுக்கு வருவோம் என்று உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது அப்படியில்லை என்று மறுப்பவர்களும் உண்டு.







     இப்போது வேறு வகையில் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. ஒரு சாதாரண மனிதனுக்கு, உடல் கலங்களில், 23 சோடிக் குரோமோசோம்கள் (Chromosome) உண்டு. அதாவது, மொத்தமாக 46 குரோமோசோம்கள் காணப்படும். மனிதன் கருவில் உருவாகும்போது, தாயிடமிருந்து 23 குரோமோசோம்களும், தந்தையிடமிருந்து 23 குரோமோசோம்களும் பெற்றிருப்பான். 22 சோடிக் குரோமொசோம்களுடன், 23வது சோடியில் ஆணென்றால் X,Y குரோமோசோம்களும், பெண்ணென்றால் X,X குரோமொசோம்களும் சோடியாகச் சேர்ந்திருக்கும். இயேசுநாதர் மனிதனாகப் பிறந்தாலும், அவர் தகப்பன் இல்லாமல் தாயின் கர்ப்பத்தில் மட்டுமே உருவாகியவர் என்றே பைபிள் கூறுகின்றது. அதையே கிருஸ்தவர்களும் நம்புகின்றனர். ஒருவர் தகப்பன் இல்லாமல், தாயின் கர்ப்பத்தில் மட்டுமே உருவாகியிருக்க வெண்டுமென்றால், அவருக்குத் தாயின் வழி வந்த 23 குரோமோசோம்களே கிடைத்திருக்கும். எஞ்சிய 23 குரோமோசோம்களும் எப்படி அவருக்குக் கிடைத்தன? என்ற கேள்வி இங்கு முன்வைக்கப்பட்டது. இந்தக் கேள்வி குறிப்பாக இங்கே முன்வைக்கப்பட்டதன் காரணம், டூரின் துணியில் காணப்பட்ட இரத்தம், மனித வகையைச் சார்ந்த AB வகை என்பதால்தான். "கடவுளின் படைப்பில் எந்தவிதமான அதிசயங்களும் நடக்கலாம்" என்ற கூற்று இந்தச் சந்தேகத்திற்கான பதிலாக இங்கு சொல்லப்பட்டது. ஆனாலும் டூரின் துணியில் இருந்த இரத்தத்தில் உள்ள குரோமோசோம்கள் என்ன சொல்கின்றன? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. காரணம் இரத்தம் பல நூற்றாண்டுகள் ஆன பழைய இரத்தமாக இருந்ததால், அதிலுள்ள குரோமோசோம்களும் அழிந்துவிட்டிருந்தன. இது மிகப்பெரியதொரு விவாதத்தை இல்லாமல் செய்திருந்தது.




     டூரின் துணி இயேசுநாதருடையதுதான் என்று ஒரு சாராரும், இல்லையென்று மறு சாராரும் தங்கள் பக்கச் சார்பாகத் தொடர்ச்சியாக விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்தனர். கார்பன் தேதிப் பரிசோதனை செய்ததில் தப்பு இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த நிலையில், அதுவே தங்களுக்குச் சார்பான நிலைப்பாடு என்று நம்புபவர்கள் அமைதியாக இருந்து கொண்டார்கள். ஆனால் மேலும் ஒரு கார்பன் தேதிப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று மற்றவர்கள் விரும்பினார்கள். ஆனால், அதற்குக் கத்தோலிக்க மதபீடம் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. டூரின் துணியின் மேலுமொரு பகுதியை வெட்டியெடுக்க அது சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் இத்தாலியைச் சேர்ந்த புரொபசர் 'லூயிஜி கார்லாசெல்லி' (Luigi Garlaschelli) என்பவர் டூரின் துணியைப் போலவே அச்சு அசலாக ஒரு துணியை, அதில் உள்ள உருவங்களுடன் உருவாக்கிக் காட்டினார். அதாவது டூரின் துணி இயேசுநாதரின் உருவத்தைக் கொண்டதல்ல என்றும், அதைச் சில நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த யாரோதான் உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தான் எப்படி இதை உருவாக்கியிருக்கிறேனோ, அதேபோல அவர்களும் உருவாக்கியிருக்கிறார்கள் என்று அவர் கூறினார். அவர் உருவாக்கிய துணியைப் பார்த்தவர்கள் அதை நம்பவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். அதேபோல, டாக்டர் 'எமிலி கிரெய்க்' (Dr.Emily Craig) என்பவரும் டூரின் துணியில் உள்ள உருவத்தை எப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரைந்திருப்பார்கள் என்று வரைந்து காட்டினார். இவர்களது இந்த நடவடிக்கைகளால், டூரின் துணி இயேசுநாதருடையதுதான் என்னும் நம்பிக்கை பலமிழக்கத் தொடங்கியது. கார்பன் தூசுகளையும், வேறுசில பதார்த்தங்களையும் கொண்டு துணியில் எமிலியால் வரையப்பட்ட படத்தை, நாஸாவின் 'VP8 அனலைசர்' கருவியின் மூலம் பரிசோதனை செய்தபோது, அதிலும் முப்பரிமாணத் தோற்றம் தெரிந்தது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. துணியில் உள்ள உருவத்தைப் பரிசோதித்தபோது, அது மையினால் வரையபட்ட எந்த அடையாளத்தையும் கொண்டிருக்கவில்லை. எனவே, எமிலி எப்படி இந்த உருவத்தை வரைந்தாரோ, அதுபோலச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யாரோ ஒரு ஓவியர் இந்த டூரின் துணியையும் வரைந்திருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியது. ஆனால், அந்த அளவுக்குப் புத்திசாலியும், கெட்டித்தனமும் உள்ள ஓவியர் இருந்திருக்க முடியுமா? என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. 




     இந்த ஆச்சரியங்களுக்கெல்லாம் விடைதரும் அளவுக்கு அதிபுத்திசாலியாகவும், மிகுந்த திறமைசாலியாகவும் ஒரு ஓவியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துதான் இருக்கிறார். அவரின் திறமைகளை அறிய முயற்சித்தால் நாம் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவோம். அவரால் உருவாக்கப்பட்ட பல மர்மங்களை இன்றுகூட விடுவிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். டூரின் துணியின் மர்மத்துக்குப் பின்னாலும் அவர்தான் இருந்தார் என்று திடமாக நம்புகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அவர் யாரென்று தெரிந்தால், நீங்களும் அதை நம்ப ஆரம்பிப்பீர்கள். சமீபத்தில் கூட இயேசுநாதரை மையமாக வைத்து எழுதப்பட்ட பிரபலமான, வில்லங்கமான நாவலொன்றிற்கு இவரது பெயரே சூட்டப்பட்டிருந்தது. அந்த ஓவியர் வரைந்த ஓவியங்களின் மர்ம முடிச்சுகளை வைத்து 'டான் பிரௌன்' (Dan Brown) எழுதிய 'டாவின்சி கோட்' (The Da Vinci Code) என்னும் நாவல் உலகப் பிரசித்திபெற்றது.




     டூரின் துணிக்கு மூல காரணமாகக் கருதப்படுபவர் வேறு யாருமல்ல. பிரசித்தி பெற்ற மொனோலிசா ஓவியத்தைப் படைத்த ' லியனார்டோ டாவின்சி' என்னும் ஓவியர்தான் அவர். அவர்தான் டூரின் துணிக்கான காரணமாக இருப்பவர் என்று சந்தேகிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றையும் நாம் தெரிந்து கொள்ளும்போது அசந்து போய்விடுவோம். அந்த அளவுக்கு ஆச்சரியமானவை அவை. அந்த ஆச்சரியங்கள் ஒவ்வொன்றையும் அடுத்த இதழ்களில் நாம் பார்க்கலாம்.

(தொடரும்)

- ராஜ்சிவா -   

'வெரோனிக்காவின் முக்காடு' தொடரின் நான்காம் பகுதி







     'டூரின் ஷ்ரௌட்' (Shroud of Turin) என்று சொல்லப்படும் 'டூரின் துணி' உண்மையானதுதான் என்பதற்கும், போலியானதுதான் என்பதற்கும் இரண்டுபக்கத் தரப்பிலிருந்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் பலவிதமாகச் சொல்லப்பட்டன. அது இயேசுநாதர் மரித்தபோது மூடிச் சுற்றிக்கட்டப்பட்ட துணிதான் என்று சொல்பவர்கள், அந்தத் துணியில் பதிந்திருக்கும் உருவத்தின் அமைப்பையும், இரத்தத் திட்டுகள் காணப்பட்ட விதங்கள். பைபிளில் அதைப் பற்றிச் சொல்லப்பட்ட குறிப்பு, அதன் பழமை ஆகிவற்றையும் சுட்டிக்காட்டி, 'இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை?' என்று கேட்கிறார்கள். அத்துடன், அதில் காணப்படும் இரத்தம் மனித இரத்தம் என்று நிறுவப்பட்டதையும், உருவம் எதிர்மறை விம்பமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், ஊதா கடந்த ஒளியைச் (Ultraviolet Light) செலுத்திப் பார்த்தபோது வரையப்பட்ட உருவம் தெரியாமல் போனதையும், வேறுசில ஆச்சரியமான தன்மைகளையும் ஆதாரமாகச் சொல்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், 'இந்தத் துணியில் உருவங்கள் தோன்றியது அறிவியலே வளராத பல நூற்றாண்டுகளுக்கு முன்னர். இன்றைய காலங்களிலென்றால் இது போன்ற ஒன்றை அறிவியல் சாத்தியங்களைக்கொண்டு நம்மால் உருவாக்க முடியும். அந்தக் காலங்களில் யாரால் இதை உருவாக்கியிருக்க முடியும்?' என்று எதிர்க் கேள்வியும் கேட்கிறார்கள்.



     ஆனால், டூரின் துணி போலியானது என்று மறுப்பவர்களோ, மேலே இவர்கள் சொன்ன காரணங்களை ஏற்றுக் கொண்டாலும், அவை ஒவ்வொன்றிலுமுள்ள தவறுகளைத் தர்க்க ரீதியாகச் சுட்டிக்காட்டி மறுக்கிறார்கள். அறிவியல் வளராத அந்தக்காலத்தில் இதை எப்படி வரைந்திருப்பார்களென்று அச்சு அசலாக வரைந்தும் காட்டினார்கள். அதில் முக்கியமானவர்களாக, 'எமிலி க்ரெய்க்கும்', 'லூயிஜி கார்லாசெல்லியும்' கருதப்படுகிறார்கள். ஆனாலும், 'இந்தளவுக்குச் சிந்தித்து இப்படியொரு உருவத்தை வரையும் திறமை கொண்டவர் அந்தக் காலங்களில் யார் இருந்திருக்க முடியும்?' என்ற ஆச்சரியமான கேள்வி எழுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. அவர் எப்படிப்பட்ட திறமைசாலியாக இருந்திருந்தாலும், எதிர்மறை விம்பமாகத் துணியில் வரைந்ததும், ஊதாகடந்த ஒளியில் தெரியாத ஏதோவொன்றைப் பயன்படுத்தி அதை வரைந்ததும், 'ஆச்சரியமான மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும்' என்ற முடிவுக்குக் கொண்டுவந்தது. அப்படிப்பட்ட மனிதர் எவராவது கடந்தகால வரலாற்றில் வாழ்ந்தாரா என்று பார்த்தபோது, ஒரேயொருவர்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வந்தார். அவரைத்தவிர இதைச் செய்வதற்கு வேறு யாராலும் இயலாதென்றும் முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் அப்படியொரு முடிவுக்கு வந்ததற்கு நிறையவே காரணங்களும் இருந்தன. அவர்தான் மர்மங்களுக்கும், வியப்புகளுக்குமுரிய மாபெரும் திறமைசாலியான 'லியர்னாடோ டா வின்சி' (Leonardo Da Vinci).






  
     இந்த இடத்தில் நான் டூரின் துணியின் மர்மத்திலிருந்து சற்று விலகிச் செல்ல வேண்டியுள்ளது. டூரின் துணிக்கும், லியர்னாடோ டா வின்சிக்கும் தொடர்புள்ளதா? இல்லையா? என்பதைப் பார்ப்பதற்கு, நாம் டா வின்சி பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை நிறையவே உண்டு. அவற்றை நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் மட்டுமே டூரின் துணிக்கும் அவருக்கும் எப்படித் தொடர்பு இருக்கலாமென்ற முடிவுக்கு நாமும் வரலாம். லியர்னாடோ டா வின்சியைப் பற்றி எழுதும்போது அவரின் பெயரை டாவின்சி.. டாவின்சி.. என்றே அனைவரும் எழுதுவது வழக்கம். ஆனால், டாவின்சி (Davinci) என்று சேர்த்து எழுதுவது தவறு. டா வின்சி (Da Vinci) என்று பிரித்துத்தான் எழுத வேண்டும். அதைவிட முக்கியமாக, 'டா வின்சி' என்பது அவரது பெயரல்ல. இத்தாலி நாட்டிலிருக்கும் 'ஃபுளோரென்ஸ்' (Florence) மாநகரத்தில் அமைந்த ஒரு சிறு நகரத்தின் பெயர்தான் 'வின்சி' (Vinci). Da Vinci என்றால், 'வின்சியிலிருந்து' என்று அர்த்தமாகும். அதாவது வின்சியிலிருந்து வந்த லியர்னாடோ என்பதே 'லியர்னாடோ டா வின்சி' என்பதன் முழு அர்த்தம். வின்சி நகரத்தில் வாழ்ந்து வந்த சட்டத்தரணியான பியரோ டா வின்சி (Piero da Vinci) என்பவருக்கும், கத்தரினா என்பவருக்கும் பிறந்தவர்தான் லியர்னாடோ. மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு நாளில்தான் இவர் பிறந்தார். அதாவது ஏப்ரல் 15ம் தேதி 1452ம் ஆண்டு இவர் பிறந்தார். அதே ஏப்ரல் 15ம் தேதிதான் ராஜ்சிவாவும் பிறந்தார் என்பதால் லியர்னாடோ டா வின்சிக்கு மேலும் ஒரு சிறப்புக் கூடியதென்று வைத்துக் கொள்ளுங்களேன்.



     "டா வின்சி பற்றித் தெரிந்துகொள்ள அப்படி என்னதான் இருக்கிறது? மொனோலிசா ஓவியத்தை வரைந்த மிகவும் திறமை வாய்ந்த ஒரு ஓவியர் அவர். அதைத்தாண்டி வேறுசில ஓவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். இதற்குமேல்  ஒரு ஓவியரைப் பற்றி என்னதான் தெரிந்து கொள்ள முடியும்?" என்று நீங்கள் கேட்டால், வரலாற்றின் தகவல்களை அறியும் தேவைகளை மிகமிகக் குறைவாகப் பெற்றவராக நீங்கள் இருக்கிறீர்களென்று அர்த்தம். 20ம் 21ம் நூற்றாண்டுகளில் ஆச்சரியப்படும்வகையில் புத்திஜீவிகள், கல்வி மேதைகள், இயற்பியல்/கணித மேதைகள், கலை விற்பன்னர்கள், விஞ்ஞானிகளென எத்தனையோ பேர் பூமியில் வாழ்ந்துவிட்டனர், வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், லியர்னாடோ இவர்களெல்லாரையும் விடச் சிறப்பானவர். நாம் அறிந்த 'சுப்பர்மான்' (Superman) பறப்பார், பலசாலியாக இருப்பார், எல்லாம் செய்வார். அவையெலாமே புனைவுகளாக நம்முன் இருப்பவை. ஆனால் நிஜமாக வாழ்ந்த ஒரு சுப்பர்மான் என்றால் அது லியர்னாடோதான். இவர் பறக்கவோ, பலசாலியாக இருக்க மாட்டார். அதையெல்லாம் தாண்டிப் பல திறமைகளைக் கொண்டவர். இதைச் சும்மா பேச்சுக்காகச் சொல்கிறேனென்று நினைத்து விடாதீர்கள். இவர்போலப் பல்துறைகளில் திறமை வாய்ந்த ஒரு மனிதன் இதுவரை பிறக்கவில்லையென்றுதான் சொல்கின்றனர். இவர் கைவைக்காத துறைகளே இல்லையென்று சொல்லலாம். அனைத்துத் துறைகளிலும் இவர் மிகத்திறமை வாய்ந்தவராகவே காணப்பட்டிருக்கிறார். இவர் என்னென்ன துறைகளில் திறமை வாய்ந்தவராக இருந்தார் என்று தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்.





     லியர்னாடோ டா வின்சி ஒரு ஓவியர். அத்துடன் அவர் ஒரு சிற்பியும்கூட. அதுமட்டுமல்ல, அவர் ஒரு கட்டட வரைபட வல்லுனர். பொறியியலாளர், விஞ்ஞானி, உடற்கூற்று அறிஞர், தாவரவியல் அறிஞர், கண்டுபிடிப்பாளர், வானிலை ஆராய்ச்சியாளர், கணிதவியலாளர், புவியியல் வல்லுனர். இவற்றுடன் இவர் ஒரு இசைமேதை, அத்துடன் ஒரு எழுத்தாளர். இதுக்கே உங்களுக்குத் தலை சுற்றுகிறதா? இவை தாண்டி இன்னும் பல திறமைகள் இவரிடம் இருந்தன. இதுவரை பூமியில் தோன்றிய சிந்தனாவாதிகளில் முதன்மையானவர் என்று கருதப்படுபவரும் இவர்தான். இவற்றிலெல்லாம் சாதாரணமான ஒருவராக அவர் இருந்திருக்கவில்லை. அனைத்திலும் மிகத்திறமை வாய்ந்தவராக இருந்திருக்கிறார். மொத்தத்தில் பல்துறை வித்தகர் (Polymath) அவர். 'டா வின்சி' என்று சொன்னாலே 'மோனா லிசா' (Mona Lisa) ஓவியம்தான் நமக்கு ஞாபகம் வரும். மோனா லிசா ஓவியம் வரைந்ததிலும் அவர் உலக சாதனையைத்தான் படைத்திருக்கிறார். உலகிலேயே மிகவும் பெறுமதிவாய்ந்த ஓவியமாக 'மோனா லிசா' ஓவியம் இன்றுவரை திகழ்கிறது. இந்த ஓவியம் விற்பனைக்கு இல்லாததால் அதன் இன்றைய விற்பனைப் பெறுமதி யாருக்கும் தெரியாது. ஆனால் 1962ம் ஆண்டு இந்த ஓவியத்தை நூறு மில்லியன் டாலர்களுக்குக் காப்புறுதி செய்திருந்தனர். அந்த வகையில் அதன் இன்றைய பெறுமதி ஒரு பில்லியன் டாலர்களுக்கு அதிகமாகவே இருக்கலாம் என்கிறார்கள். பிரான்ஸின் தலைநகரமான பாரிஸிலுள்ள 'லூவ்ரெ அருங்காட்சியகத்தில்' (Louvre Museum) பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது மோனா லிசா ஓவியம். ஒவ்வொரு வருடமும் ஆறு மில்லியன் மக்கள் இதை லூவ்ரெ அருங்காட்சியத்தில் கண்டுகளிக்கின்றனர். 'ஒரு ஓவியம் ஏன் இந்தளவுக்கு அதிமுக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?' என்று பார்த்தால் லியர்னாடோ டா வின்சியின் அசத்தலான திறமை அங்கு ஒளிந்திருக்கிறது என்றுதான் அர்த்தமாகிறது. ஆனால், அதற்குக் காரணம் அவரின் திறமை மட்டுமல்ல, அந்த ஓவியத்தில் அவர் ஒளித்து வைத்திருக்கும் மர்மமும்தான் என்று சொல்கிறார்கள்.



     உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம் எதுவெனப் பார்த்தால் அது டா வின்சியின் ஓவியமாக இருக்காது. இதுவரை உலகில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓவியம், இரண்டு ஆண்கள் ஒரு மேசையிலிருந்து சீட்டு விளையாட்டு விளையாடுவதுபோல உள்ள 'The Card Players' என்னும் ஓவியம்தான். இதைப் 'பௌல் செஷன்னெ' (Paul Cezanne) என்னும் ஓவியர் 'Post Impressionism' வகையில் வரைந்திருப்பார். இது இன்றைய நிலையில் 258 மில்லியன் டாலர்கள் பெறுமதியானது. ஆனால் டா வின்சியின் ஓவியங்கள் எதுவும் பொதுவெளியில் விற்பனைக்கு வருவதேயில்லை. அதனால் அவை உலகில் பெறுமதிவாய்ந்த ஓவியங்களாக மட்டும் கணிக்கப்படுகின்றன. உலகின் இரண்டாவது பெறுமதிவாய்ந்த ஓவியமும் டா வின்சியின் ஓவியம்தான். 'கடைசி இரவு உணவு' (The Last Supper) என்று சொல்லப்படும் இயேசுநாதர் தனது சீடர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொள்வதான ஓவியம் அது. அந்த ஓவியம் இத்தாலியின் மிலான் நகரில் உள்ள மரியா கோவிலின் (Santa Maria della Grazie, Milan-Italy) சுவரில் வரையப்பட்டிருக்கிறது. அதனால் அந்த ஓவியத்தை யாரும் வாங்க முடியாது. அதை எந்த அருங்காட்சியகத்திலும் கொண்டுசென்று வைக்கவும் முடியாது. அதனால் அது வரையப்பட்டிருக்கும் இடமே ஒரு அருங்காட்சியகம்போல இருக்கின்றது. உலகில் அதிகளவு விவாதங்களின் பேசுபடுபொருளாக்கப்பட்ட ஒரு ஓவியமது. அந்த ஓவியமும், தன்னுள்ளே பல இரகசியங்களையும், மர்மங்களையும் அடக்கியிருக்கின்றன என்கிறார்கள். டா வின்சி தனது ஓவியங்களில் பல இரகசியச் செய்திகளைக் குறியீடுகளாகவும், அடையாளங்களாகவும், மறைபொருட்களாகவும் மறைத்து வைத்தே வரைந்திருக்கிறார் என்னும் சந்தேகங்கள் உலகில் பலருக்கும் உண்டு. இவற்றை இனங்கண்டுபிடித்து வெளியிடுவதற்கென்றே தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதிகளைச் செலவளித்த, செலவளிக்கும் புத்திஜிவிகளும் அதிகம் உண்டு.







     மேலே சொல்லப்பட்ட டா வின்சியின் இரண்டு ஓவியங்களையும் ஒரு சிலரைத்தவிர உலகில் உள்ள மக்களனைவரும் மிகச்சமீப காலம்வரை புராதன ஓவியங்களென்ற வகையிலேயே பார்த்து வந்தனர். ஆனால் 'டான் பிரௌன்' (Dan Brown) என்ற எழுத்தாளர் எழுதிய 'The Da Vinci Code' என்னும் நாவல் வெளிவந்த பின்னர், இந்த ஓவியங்களை மக்கள் பார்க்கும் தன்மையையே மாறிவிட்டது எனலாம். டான் பிரௌன் எழுதிய நான்காவது நாவல்தான் இந்த 'டா வின்சி கோட்' என்பது. நாவல் வெளிவந்ததும் மதபீடங்களினாலும், மத நம்பிக்கையாளர்களாலும் பலமாக எதிர்ப்புக்குள்ளாகியது. பலவிதமாக அது விமர்சனம் செய்யப்பட்டது. இந்த விமர்சனங்களும், எதிர்ப்புக்களுமே நாவலை 'பெஸ்ட் செல்லர்' என்னும் தரத்துக்குக் கொண்டு சென்றது. போதாதற்கு, நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் உலகின் நாடுகள் அனைத்திலும் பரவலாக அந்தத் திரைபடத்தை வெளியிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டுமென்று எதிர்ப்புக்குரல் எழுந்தது. வழமைபோல அதுவே அந்தப் படத்திற்கான விளம்பரமுமாகியது. உலகமெங்கும் வசூலை அள்ளிக் குவித்த படமாக அது மாறியது. ஒரு பக்கம் நாவலாகவும், மறுபக்கம் திரைப்படமாகவும் வெளிவந்த 'டா வின்சி கோட்' பெரும்பான்மை மக்களுக்கு டா வின்சியின் ஓவியங்களை அறிமுகப்படுத்தியது. அந்த ஓவியங்களில் ஏதோ இருக்கின்றன என்று நம்பவைத்தது.



     'உண்மையிலேயே 'டா வின்சி' தனது ஓவியங்களில் மர்மக் குறியீடுகளை ஒளித்து வைத்துத்தான் வரைந்தாரா?' என்று பார்த்தால், ஆமென்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் டா வின்சியின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஏதோவொரு மர்மத்தை வெளிப்படுத்துவது போலவே அமைந்திருக்கின்றன. ஓவியங்கள் மட்டுமல்ல, அவரால் உருவாக்கப்பட்ட அனைத்துமே மர்மங்களைக் கொண்டவையென்றே நம்ப வேண்டியிருக்கிறது. அவையே 'டூரின் துணியில்கூட இவர்தான் வரைந்திருப்பார்' என்னும் சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது. அதனால்தான் டா வின்சி பற்றிய மர்மங்களைத் தொடர்ச்சியாக நாம் பார்க்கப் போகின்றோம். அவை நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியத்தையே கொடுக்கும். "டூரின் துணிபற்றிச் சொல்வதென்றுவிட்டு இவர் டா வின்சி பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறாரே" என்று கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் அறிந்தேயிருகாத பல மர்மங்கள் மெல்ல மெல்ல வெளிவருவதை நீங்களே அவதானிப்பீர்கள். டா வின்சி பற்றி முழுமையாகச் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்னர், டூரின் துணியை டா வின்சிதான் உருவாக்கியிருப்பார் என்ற சந்தேக முடிச்சு எங்கே போடப்பட்டது என்பதை மட்டும் உங்களுக்குச் சொல்லிவிட்டுத் தொடர்கிறேன்.







     லியர்னாடோ டா வின்சி தன் படைப்புகள் அனைத்தையும், தினமும் குறிப்பேடுகளில் குறித்துக்கொண்டு வரும் பழக்கமுள்ளவர். அந்த வகையில் அவர் மொத்தமாக 13000 பக்கங்களைக் கொண்ட குறிப்புப் புத்தகங்களை உருவாக்கியிருந்தார். அவை அனைத்திலும், அவரது கண்டுபிடிப்புகள், அவர் வரைந்த ஓவியங்கள்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் அவர்குறித்து வைத்திருந்த எழுத்துகளில் பெரியதொரு ஆச்சரியம் காணப்பட்டது. ஆரம்பத்தில் அந்தக் குறிப்புகளைக் கண்டெடுத்தவர்கள், அவற்றைப் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள். அது என்ன விதமான எழுத்து என்றே தெரியவில்லை. ஆனால் போகப் போக அவை என்னவிதமாக எழுதப்பட்டிருந்தன என்று புரிந்தது. தனது குறிப்புகள் அனைத்தையும் டா வின்சி கண்ணாடியொன்றில் தெரியும் எதிர்மறை விம்பம்போல எழுதியிருந்தார். அவரது 13000 பக்கங்களில் பெரும்பான்மையானவை எதிர்மறை விம்ப எழுத்தாகவே காணப்பட்டன. அதாவது அவர் எழுதியவற்றை நீங்கள் ஒரு நிலைக்கண்ணாடிக்கு முன்னால் கொண்டுசென்று பிடித்தால், அதில் தெரியும் விம்பம்தான் நமது சாதாரண எழுத்துப்போலக் காணப்படும். வழக்கமாக வலது கைப் பழக்கமுள்ள நாம் ஒரு காகிதத்தில் எழுதும்போது, இடமிருந்து வலமாக எழுதிக்கொண்டு வருவோம். ஆனால் டா வின்சியோ இடது கைப் பழக்கமுள்ளவர். அதனால் அவர் வலமிருந்து இடமாகக் கண்ணாடி விம்பம் போன்ற எழுத்தை எழுதி வந்திருக்கிறார். இது எவ்வளவு கடுமையானது என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படியே எழுதியெழுதி அவருக்குப் பழக்கமாகியதோ என்னவோ, அவர் எழுதிய அனைத்துமே கண்ணாடி விம்ப எழுத்துக்களாகவேயிருந்தன. 'இவர் ஏன் இப்படி எழுதிக்கொண்டு வந்தார்?' என்ற கேள்விக்கு, அவர் தனது எழுத்துகளையும், குறிப்புகளையும் மிகமிக இரகசியமாகவே வைத்திருக்க விரும்பினார் என்ற காரணம்தான் பதிலாகின்றது. அவர் யாரிடமிருந்து தன் இரகசியங்களைக் காப்பாற்ற விரும்பினார் என்பதெல்லாம் சந்தேகங்கள்தான். அவரின் அரிய கண்டுபிடிப்புகளையும், யோசனைகளையும் மற்றவர்கள் திருடிவிடலாமென அவர் பயந்திருப்பாரெனச் சிலர் சொல்கிறார்கள். மற்றவர்களோ கத்தோலிக்க மதபீடத்துக்குப் பயந்தே அவர் தன் எழுத்துகளை இப்படி மறைத்து எழுதினாரென்று சொல்கிறார்கள். இதில் ஏதாவது ஒன்று உண்மையாகவிருக்கலாம். ஆனால், அவர் கத்தோலிக்க மதபீடங்களுக்குப் பயந்துதான் இதைச் செய்தாரென நாம் எடுத்துக் கொண்டால், அவர்களிடமிருந்து எதை மறைக்க அவர் இப்படியெல்லாம் செய்தாரென்ற கேள்வி எழுகிறது. ஒரு சில பக்கங்களைப் பொழுதுபோக்காக எதிர்மறை விம்பமாகக் குறித்திருந்தால் பெரிதாக அலட்ட்டிக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. ஆனால், இவர் பெரும்பான்மையானவற்றை அப்படி எழுதி வைத்திருப்பதுதான் குழப்பதைக் கொடுக்கிறது. எது எப்படியோ இப்படிக் கண்ணாடி விம்ப எழுத்துகளை இவர் எழுதுவதை வழமையாகக் கொண்டிருந்தது வேறொரு விசயத்தில் சந்தேக வித்தைப் போட்டதென்னவோ உண்மை.



     "டா வின்சி எதிர்மறை விம்பமாக எழுதியது உங்களுக்கு ஏதாவது சந்தேகங்களை ஏற்படுத்தியதா?" இப்போது இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். டூரின் துணியில் காணப்பட்ட உருவமும் எதிர்மறை விம்பமாகவே வரையப்பட்டதை நாம் முன்னர் அவதானித்திருந்தோமல்லவா? அதுபோலச் சித்திரத்திலும் எதிர்மறை விம்பத்தை உருவாக்கும் யோசனை இவருக்கேன் இருந்திருக்கக் கூடாது? அந்தக் காலத்தில் வாழ்ந்த யாருக்குமே இப்படி எதிர்மறையாக எழுதுவதோ, வரைவதோ பழக்கமேயில்லாத நிலையில் 'டா வின்சி' மட்டும் அப்படியொரு விசயத்தைச் செய்திருக்கிறார். அதனால் அவரே டூரின் துணிக்கும் காரணமாக இருக்கலாமல்லவா? "அதெப்படி, அவரின் ஏனைய ஓவியங்களெல்லாம் நேராகத்தானே அவரால் வரையப்பட்டிருக்கின்றன. அவர் ஏன் டூரின் துணியை மட்டும் எதிர்மறை விம்பமாக வரைய வேண்டும்?" என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்வியில் நியாயமும் இருக்கிறது. ஆனால், ஒரு பேச்சுக்கு இப்படி நடந்திருக்கலாமாவெனப் பாருங்கள்.



     இயேசுநாதரின் கல்லறைத் துணியென்று, ஒரு துணி டூரினிலிருந்து சிலரின் கைகளில் கிடைக்கின்றது. அவர்களுக்கு அது இயேசுநாதருடையதுதானென்று நிரூபிப்பதில் சிக்கலேற்படுகின்றது. அதனால் அவர்கள் லியர்னாடோ டா வின்சியின் உதவியை நாடுகின்றர். முன்னர் வெரோனிக்காவின் முக்காட்டில் இயேசுநாதரின் முகம் பதிந்த சம்பவம் அவர்களின் மனதில் நிழலாடுகின்றது. அதனால் அது போன்று ஒரு உருவத்தை டா வின்சி வரைந்து தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றனர். அப்போது இயேசுவின் முகம் மற்றும் உடல் அனைத்தும் அந்தத் துணியில் எப்படி ஏற்பட்டதென்ற காரணத்தைக் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அந்தத் துணியைச் சுற்றுவதற்கு முன்னரே இயேசுநாதர் இறந்துவிட்டிருந்தார். அதாவது அவர் மரணித்த பின்னர்தான் அந்தத் துணி அவரின் மேல் சுற்றிக் கட்டப்பட்டது. அத்துடன், அந்தத் துணியைக் கட்டுவதற்கு முன்னர், இயேசுநாதரின் முகத்தை வேறொரு சிறிய சதுரத் துணியொன்றினால் மூடியிருந்தார்கள். ஆனால், அந்தத் துணியில் அவரின் முகம் பதிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும் அந்தச் சதுரத் துணிக்கும் மேலே சுற்றிக் கட்டிய டூரின் துணியில் உருவம் வர வேண்டும். அதற்குரிய காரணமும் சொல்லப்பட வேண்டும். அதனால், 'டா வின்சி' இப்படிச் சிந்தித்தார். அதாவது, இயேசுநாதர் மரணித்த பின்னர் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தாரல்லவா? அப்படி அவர் உயிர்த்தெழும்போது, அவரது பரிசுத்தமான உயிர் அவரது உடலினுள் புகுந்து கொள்ளுமல்லவா? இயேசுநாதர் உயிர்த்தெழும்போது அவரது உயிர் அவரது உடலினுள் புகுந்து கொண்ட சமயத்தில் அந்த உருவம் டூரின் துணியில் பதிவாகியிருக்கிறது. ஒளிமிகுந்த அவரது பிரகாசமான உயிர் உடலினுள் புகும்போது புகைப்படம் பிடித்ததுபோல உருவம் அந்தத் துணியில் பதிந்தது. அதன்படி டா வின்சி அந்தத் துணியில் இயேசுநாதரின் உருவத்தை எதிர்மறை விம்பமாக வரைந்து கொடுத்தார். எல்லாமே சரியாகப் பொருந்துகிறது அல்லவா? இவையெல்லாம் என் கருத்துகளல்ல. டா வின்சிதான் இந்தத் துணியில் வரைந்தார் என்று சொல்பவர்கள் சுட்டிக்காட்டிச் சொல்லும் கருத்துகள் இவை.



     இப்போது நமக்கு, "இந்த அளவுக்குச் சிந்திப்பதற்கு டா வின்சியால் நவீன அறிவியலைப் புரிந்துகொண்டிருக்க முடியுமா?" என்ற கேள்வி எழலாம். ஆனால் டா வின்சிக்கு நவீன அறிவியலில் எவையெவை தெரிந்திருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்தால் இப்படியெல்லாம் கேள்விகளைக் கேட்கவே மாட்டீர்கள். அவற்றை அறிந்தால் திகைத்தே போவீர்கள். அதன்பின்னர் அவர்தான் இப்படியெல்லாம் சிந்தித்து வரைந்திருப்பாரென்று நீங்களே சந்தேகப்பட ஆரம்பிப்பிர்கள்.



     அப்படி என்ன நவீன அறிவியலை டா வின்சி புரிந்து வைத்திருந்தார் என்பதை அடுத்த பகுதியில் நாம் விரிவாகப் பார்க்கலாம். அத்துடன் டா வின்சியின் தொடர்ச்சியாக மிரட்டும் மர்மங்களையும் பார்க்கலாம்.



(தொடரும்)


- ராஜ்சிவா -   

Wednesday, February 4, 2015

How to Creat Bar Code? Bar codeயை உருவாக்குவது எப்படி


இரகசிய குறியீடு ( Bar codes)நாம் எப்படி உருவாக்குவது?நாம் கடைகளில்பொருட்களை வாங்கும்போது அவற்றில்காந்தக்கோடுகள் எனப்படும் பலதொடர் கோடுகளாலானரகசியக் குறியீடுகள்அச்சிடப்பட்டிருப்பதை நாம்அனைவரும் பார்த்திருக்கின்றோம்.பெரும்பாலானவர்களிற்கு அந்தக் கோடுகள்எதற்க்காக அச்சிடப்பட்டுள்ளது என்றும் அந்தரகசியக்குறியீட்டினுள்அப்படி என்னதான்இருக்கிறது என்றும்தெரிவதில்லை. இந்தரகசியக்குறியீடுகள் பற்றியும்அதன் பயன்பாடுகள் பற்றியும்முழுமையாகஆராய்வதே இந்தப் பதிவின்நோக்கம்.விற்பனைப் பொதிகளில்அச்சிடப்படும் இந்தரகசியக்குறியீடுகள்ஆங்கிலத்தில் Barcodes எனஅழைக்கப்படும். Barcodeஎன்பது குறிப்பிட்டபொருட்களின் மீது அதுபற்றியசில தகவல்களைக் காண்பிக்கும்ஒரு குறியீடாகும்.இவ் Barcodesஇனுள்ளே அது அச்சிடப்பட்டுள்ள உரிய பொருளிற்கானவிலை, உற்பத்தி தேதி ,காலாவதி தேதி ,அப்பொருளை உற்பத்தி செய்யும்நிறுவனத்தின்இணையமுகவரி போன்றதகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.இவற்றை நம் வெறும்கண்ணினால் பார்த்து அறியமுடியாது.இவற்றை BarcodeScanner கள்மூலமாகவே வாசித்து அறியமுடியும்.

இந்த ரகசியக்குறியீட்டினை Barcode Scannerஇற்கு முன்பாக பிடித்தால்போதும், இரகசியக்குறியீட்டிற்குள் ஒழிந்திருக்கும்இரகசிய விடயங்கள்அனைத்தையும்அறிந்துவிடலாம்.ஆனால் தற்போது Barcode Scannerகளைப் போலவே கையடக்கத்தொலைபேசிகளும் இந்தஇரகசியக்குறியீடுகளை இனங்கண்டுகொள்ளபெரிதும் உதவுகின்றன.குறித்த இரகசியக்குறியீட்டினை கையடக்கத்தொலைபேசியின்கமராவினால் Scanசெய்து அதனுள்மறைக்கப்பட்டுள்ளஅனைத்து விடயங்களையும்அறிந்துவிடலாம்.இதற்காகவே பெரும்பாலானகையடக்கத் தொலைபேசிகளில்(Smart Phones) இவ் Barcodeகளை வாசிப்பதற்க்குரியமென்பொருள்காணப்படுவது பயனுடையதொரு விடயமாகும்.
மேலும் கையடக்கத் தொலைபேசியில் இவ்மென்பொருள் இல்லையென்றால் இணையத்திலிருந்து இலவசமாக Downloadசெய்து நிறுவிக்கொள்ளலாம்.இரகசியக்குறியீடுகளை வாசிப்பது பற்றி அறிந்து விட்டோம்,அடுத்ததாக பார்க்கபோகும்விடயம் அனைவரிற்கும்நிச்சயமாகப் பிடிக்கும்.எமதுஅடிப்படை விபரங்களை (பெயர்,தொலைபேசி இலக்கம், முகவரி,மேலும் பலவற்றை)புகுத்தி எமக்கென்று ஒரு இரகசியக்குறியீட்டினை உருவாக்கிக்கொள்ளலாம்.Barcodes பல வகைப்படும்,அவற்றுள் QR Code என்ற Barcodeவகையே பாவனைக்கு இலகுவானதாகும்.எனவே “QR Code Generator” எனGoogle இல் Typeசெய்து தேடினால் இவ் Barcodeஇனை இலவசமாகஉருவாக்கித்தருகின்ற பலஇணையதளங்கள் உங்கள் முன்தோன்றும்.அவற்றில்ஏதாவதொரு இணையதளத்திற்கு சென்று உங்கள்இரகசியக் குறியீட்டினுள் நீங்கள்உள்ளடக்க விரும்பும்விடயங்களை வழங்கினால்போதும், உடனே உங்களிற்குரியஇரகசியக்குறியீடு தயாராகிவிடும்,அதனை நீங்கள் புகைப்படமாகDownloadசெய்து அதனை அச்சிட்டு (Printஎடுத்து) பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ரகசியக்குறியீட்டினை Barcode Scannerஇற்கு முன்பாக பிடித்தால்போதும், இரகசியக்குறியீட்டிற்குள் ஒழிந்திருக்கும்இரகசிய விடயங்கள்அனைத்தையும்அறிந்துவிடலாம்.ஆனால் தற்போது Barcode Scannerகளைப் போலவே கையடக்கத்தொலைபேசிகளும் இந்தஇரகசியக்குறியீடுகளை இனங்கண்டுகொள்ளபெரிதும் உதவுகின்றன.குறித்த இரகசியக்குறியீட்டினை கையடக்கத்தொலைபேசியின்கமராவினால் Scanசெய்து அதனுள்மறைக்கப்பட்டுள்ளஅனைத்து விடயங்களையும்அறிந்துவிடலாம்.இதற்காகவே பெரும்பாலானகையடக்கத் தொலைபேசிகளில்(Smart Phones) இவ் Barcodeகளை வாசிப்பதற்க்குரியமென்பொருள்காணப்படுவது பயனுடையதொரு விடயமாகும்.மேலும் கையடக்கத் தொலைபேசியில்இவ்மென்பொருள்இல்லையென்றால்இணையத்திலிருந்து இலவசமாக Downloadசெய்து நிறுவிக்கொள்ளலாம்.இரகசியக்குறியீடுகளை வாசிப்பது பற்றி அறிந்து விட்டோம்,அடுத்ததாக பார்க்கபோகும்விடயம் அனைவரிற்கும்நிச்சயமாகப் பிடிக்கும்.எமதுஅடிப்படை விபரங்களை (பெயர்,தொலைபேசி இலக்கம், முகவரி,மேலும் பலவற்றை)புகுத்தி எமக்கென்று ஒரு இரகசியக்குறியீட்டினை உருவாக்கிக்கொள்ளலாம்.Barcodes பல வகைப்படும்,அவற்றுள் QR Code என்ற Barcodeவகையே பாவனைக்கு இலகுவானதாகும்.எனவே “QR Code Generator” எனGoogle இல் Typeசெய்து தேடினால் இவ் Barcodeஇனை இலவசமாகஉருவாக்கித்தருகின்ற பலஇணையதளங்கள் உங்கள் முன்தோன்றும்.அவற்றில்ஏதாவதொரு இணையதளத்திற்கு சென்று உங்கள்இரகசியக் குறியீட்டினுள் நீங்கள்உள்ளடக்க விரும்பும்விடயங்களை வழங்கினால்போதும், உடனே உங்களிற்குரியஇரகசியக்குறியீடு தயாராகிவிடும்,அதனை நீங்கள் புகைப்படமாகDownloadசெய்து அதனை அச்சிட்டு (Printஎடுத்து) பெற்றுக்கொள்ளலாம்.

இவ் இரகசிய குறியீட்டினுள்அதிகபட்சமாக 250 சொற்கள்கொண்ட தகவல்களை உள்ளடக்கமுடியும்என்பது பிரமிக்கத்தக்கவொரு விடயமாகும். இந்த Barcode1948 இல் தான் முதன்முதலாகபயன்பாட்டிற்கு வந்தது. Barcodeஆனது பல்வேறு துறைகளில்பயன்படுத்தப்படுகிறது.வைத்தியசாலையில்நோயாளிகளின் மணிக்கட்டுப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் Barcode இன் மூலம்குறித்த நோயாளியின்முழுத்தகவல்களையும்மருத்துவமனையில்பணியாற்றுபவர்களினால்இலகுவாக அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.வாடகை கார்கள், விமானப்பயணப்பெட்டி, அணுக்கருக்கழிவு, அஞ்சல் மற்றும்பொட்டலங்கள் உள்ளிட்டபொருட்களின் நகர்வைக்கண்காணிப்பதிலும்பயன்படுகிறது.

Sunday, February 1, 2015

கொங்கு வேளாளர்கள் திருமண முறைகள் - Posted by Ramesh Balasubramaniam

கொங்கு வேளாளர்கள்

கொங்கு வேளாளர்கள்


கொங்கு வேளாளர்கள் அல்லது கொங்கு வேளிர்கள் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ளனர். பொதுவில் இவர்களைக் கவுண்டர் என்றும் அழைப்பர். இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் குடியேறி வசிக்கின்றனர்.

இவர்களின் மிக முக்கியமான தொழிலாக விவசாயத்தை அமைத்துக் கொண்டனர். கடும் உழைப்பாளிகளான இவர்கள், காடுகளை சீர் செய்து அருமையான விவசாய நிலங்களாக மாற்றி கொண்டனர். 1960ற்கு பிறகு விவசாயம் அல்லாது, தொழில் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்கள்.

கொங்கு வேளாளர் தங்களுக்குள் பல குழுக்களாகப் பிரிந்து, அந்த குழுக்களை குலங்கள் என்றும், கூட்டங்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட தங்கள் குலத்தை (கூட்டத்தை) சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்றும் அழைத்துக் கொண்டனர். இவர்களுக்குள், அதாவது பங்காளிகளுக்குள், திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மையானவை
கொங்கு நிலம் பற்றியும் அப்பகுதி மக்கள் பற்றியும் சங்க இலக்கியக் காலம்தொட்டு கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன. அகழ்வாய்வுத் தரவுகளும் இப்பகுதியின் வாழ்வியல் தொன்மைக்குச் சான்றளிக்கின்றன. இந்நிலையில் நமது பெயரியல் ஒப்பாய்வு வியக்கத்தக்க பல சான்றுகளை வெளிக்கொணர்கிறது. கொங்கு என்ற இடப்பெயர் மட்டுமன்றி தமிழ்நாட்டுக் கொங்கு மண்டலத்தின் வரலாற்று மரபு சார்ந்த நிலப் பிரிவுகளான ஆறை, கோவங்கம், கவைய, கவச, செம்ப, தணக்க, தலைய, அரைய, பழன, வாரக்க, முளசை, காங்கேய, தூர, அண்ட, மன்னி, மண, உருக்கா, வாழவந்தி, படி போன்ற பெயர்களை அப்படியே நினைவுறுத்தும் இடப்பெயர்களைச் சிந்து வெளியிலும் அதற்கு அப்பாலும் உள்ள வடமேற்குப் புலங்களிலும் காண முடிகிறது.

கொங்கு வேளாண் குடிகளின் சமூகவியல் வரலாற்றில் காணி ஊர்களுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.களங்காணி, மானூர், பாப்பிணி, முளசி, தோளூர், பழனி, தூசி, ஆளியார், கொற்றை, கோக்கலி, கோட்டூர், கூகலூர், நவனி, திடுமல், மொஞ்சனூர், பட்டாலி, கத்தேரி மற்றும் இன்ன பிற காணியூர்ப் பெயர்களை முழுக்க ஒத்திருக்கும் பெயர்கள் அப்பகுதிகளில் பயன்பாட்டில் உள்ளன.

கொங்கு வேளாளர்களின் அடிப்படையான குழு அடையாளம் அவர்களது கூட்டம் ஆகும். சிந்து வெளிப்பகுதியிலும் அதற்கு அப்பாலும், கொங்கு வேளாண் குடியினரின் கூட்டப் பெயர்களை (Clan names) நினைவுறுத்தும் இடப்பெயர்கள் வழங்குகின்றன. அந்துவன், ஆதி, அடகர், அழகன், ஆவன், ஆடர், ஓதாளன், கண்ணர், செங்கண்ணி, சேரன், பாண்டியர், பில்லன், ஆடை, ஆவலன், மணியன், மாடை, ஆந்தை, மூலன், மூத்தன், மேதி, வாணி, தூரன், கல்வி, காமன், காடை, கொடியன், கொற்றன், கோவன், சேகன், நாகன், நீலன், பதரி, உண்ணகர், ஓசை, கம்பன், காவலன், காரை, கீரை, கொள்ளி, சோமன், தட்டை, நந்தர், நாரை, நேரியன், பாசை, வேந்தர், வெளியன், ஈஞ்சர், ஒழுக்கர், குழாயர், கூறை, செம்பர், சேடர், பனையர், அவுரியன், பூச்சந்தை, பூசர், பெரியன், பொன்னன், மயிலர், மழவன், வண்ணக்கர், தனஞ்செய், தோடை, பவளர், அவுரியன், ஊரியன், காவூரி, குங்கிலி, கொம்மையர், கோரக்கர், சாத்தந்தை, செழியன், தோயன், நெய்தலி, பணகன், வல்லி, தழிஞ்சி, பயிரன், பதுமன், கொண்டரங்கி, செல்லன், நீருணி போன்ற கொங்கு வேளாளர் கூட்டப் பெயர்களை நினைவுறுத்தும் இடப் பெயர்கள் இதற்குச் சான்றாகும்.

இந்தக் கூட்டப் பெயர்கள் மிகத் தொன்மையானவை. சங்க கால அரசர் பெயர், குறுநிலத்தலைவர் பெயர், புலவர்களின் பெயர்கள், பழங்காலக் கல்வெட்டுகள், மட்பாண்ட ஓடுகளில் குறிக்கப்பட்டுள்ள தனி மனிதர்களின் பெயர்களில் கொங்குக் கூட்டப் பெயர்களில் சிலவற்றின் பயன்பாட்டைக் காண முடிகிறது. இதைக் கொண்டு, இப்பெயர்களின் பயணத்தின் தொன்மையை அளவிட முடியும். இது ஒரு பதச் சான்றாய்வே (Sample Study) ஆகும். பிற தமிழ்க்குடிகள் பற்றிய ஆய்வுகள் இது போன்று மேலும் சான்றளிக்கக் கூடும்.

குலதெய்வம்
கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தனது குலத் தொழிலான விவசாயத்தை பெருக்க பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது, ஆகையால் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கை உறவுகள் மாறிவிடாமல் இருக்க அதாவது உறவு மாறி தனது தங்கையை அல்லது அண்ணன் போன்ற உறவு முறை உள்ளவர்களை திருமணம் செய்யாமல் இருக்கவும் உரிய உறவுமுறை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு கூட்ட முறையை உருவாக்கினர். இதற்கு தங்களது தந்தையர் பெயரை வைத்தனர். அதாவது செல்லன் கூட்டத்தார் செல்லன் வழிவந்தவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து செல்லன் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் செல்லன் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும். ஆகவே ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கூட்டத்தை சேர்த்தவர்களே பங்காளிகள் ஆவர். கவுண்டர்கள் மற்ற இனத்தினரைப் போல் பொதுவான தெய்வத்தை மட்டும் வணங்காமல் தாங்கள் எவ்வழி வந்தனரோ - அதாவது தங்கள் ஆதி தாய் தந்தையரை மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு குலதேய்வமாகும். இங்கு வருடம் ஒருமுறையேனும், ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து ஆதி தாய் தந்தையரை வணகுவதுடன் தனது உறவுகளை சந்தித்து செல்கிறார்கள்.

கொங்கு வேளாளர் திருமண முறைகள்...

கொங்கு வேளாளரின் திருமண சடங்கின் முதற்படி பொருத்தம் பார்த்தல் தான்..... கம்பரின் மங்கள வைத்து பாடலில் கூட ஒன்பது பொருத்தம் என்று கூறப்பட்டுள்ளது.

பிறப்பு குடிமை ஆண்மை ஆண்டோடு

உருவு நிறுத்தகாம வாயில்

நிறையே அருளே, உணர்வோடு திருவென

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே..

என தொல்காப்பியர் பத்து வகை பொருத்தம் பற்றி கூறுகிறார். பிறப்பு என்பது குலம், குடிமை என்பது குடிப்பாடு, நற்குடி பிறத்தல், ஒத்த குலம் என்பது ஒரே குளத்தில் எடுத்தல் இல்லை. ஒரு தகுதியான மற்ற குளத்தின் கண் என்பதாகும். ஆணிற்கு ஆள்வினையும், வலிமையுமாம், பெண்ணிற்கு பெண்நீர்மையாம், ஆண்டேன்பது ஆணிற்கு இருபதும், பெண்ணிற்கு பதினாறுமாம். சிலம்பில் கண்ணகிக்கு ஈராறு வயது, கோவலனுக்கு ஈரெட்டு வயது பொருத்தமற்றது. குலவிப்பருவம் நான்காண்டு கழித்து ஈராறும், ஈரெட்டும் எனக்கொள்ள வேண்டும். இதுவே சரியான உறவு. உறவு என்பது உடல் பொருத்தம். நிருத்தகாம வாயில் என்பது இருவர் மாட்டுத் தோன்றும் அன்பு. நிறை என்பது அடக்கம். அருள் என்பது கருணை, உணர்வு என்பது அறிவு....


கொங்கு வேளாளர் திருமண முறைகள்.
கொங்கு வேளாளர்கள், திருமணத்திற்க்காக பல்வேறு நிலைகளிலும் ஆலோசனை செய்வர், காரணம் இது ஆயிரம் காலத்து பயிர் என்பது அவர்களது கொள்கை, இன்றைய நாகரிக உலகில் திருமணம் என்பது மூன்று மாத குறுவை சாகுபடி போல ஆகிவிட்டது, ஆனால், கொங்கு வேளாளர்களின் திருமணங்கள் அப்படிப்பட்டவை அல்ல... முதலில் குறு பலன் பார்ப்பர், பின்னர் ஜாதகம் பார்ப்பர், இருவரின் பிறந்த ஜாதகம், அல்லது பெண்ணின் பூப்பெய்திய குறிப்பையும் வைத்து பார்ப்பர். செவ்வாய் தோஷம் மிகவும் முக்கியாமாக பார்த்து தான் திருமணம் செய்வர். அவற்றிற்கு பின்னர், சகுனம் பார்த்தலும், தடம் வழி பார்த்தலும் முக்கியம் ஆகும்.

பெண் பார்க்கும் படலம்:

கொங்கு வேளாளர் பெண் பார்த்தலை ஆடம்பரமாக, விமரிசையாக நடத்துவதில்லை. முதல் முறை பெண்ணை நேரில் பார்க்கும்போது, பெண்ணிற்கே தெரியாமல், கோவில், பிற விசேஷ இடங்கள்...திருமண நிகழ்சிகள் ஆகிய இடங்களில் பார்த்து விடுவர். "காட்டுக்கு களை வெட்டினது போலவும் இருக்கணும், வீட்டுக்கு பெண் பார்த்தது போலவும் இருக்கணும்" என்பது இவர்களது பழமொழி... இப்படி, ஒருவருக்கொருவர் அறியாமல் பார்த்துவிட்ட பிறகு, முறைப்படி பெண் பார்த்தல், ஒரு சம்பிரதாயத்திற்காக நடைபெறும், அதை தடம் வழி பார்த்தல் என்பர்...

கொங்கு வேளாளர்கள் திருமண முறைகள் நிச்சயதார்த்தம் :

வண்ணாத்தி வெண்மையான துணியை விரிப்பாக போட்டு வைப்பார்கள், நடுவில் இரண்டு முக்காலி வைக்கப்பட்டு இருக்கும். ஒன்றில் அருமைக்காரர் அமர்ந்திருப்பார், இன்னொன்றில், பெரிய தாம்பாளத்தில், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சந்தானம், குங்குமம், போவோடு, நிச்சய புடவை, மோதிரம் ஆகியன இருக்கும். நிறைநீர் செம்பு அருகில் இருக்கும். அருமைகாரருக்கு இடது பக்கம் பெண் வீட்டாரும், வலது பக்கம் ஆண் வீட்டாரும் அமர்வர். பெண்ணின் தாய் மாமன் சம்மதம் சொன்ன பிறகு தான் நிச்சயம் செய்யப்படும். அங்கேயே தாலிக்கு பொன் கொடுத்தல் நடைபெறும். வெற்றிலை பாக்கு மாற்றிக்கொள்வர். மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த நிச்சய புடவையை பெண்ணிற்கு அருமைக்காரர் கொடுப்பார். பெண் அதை அணிந்து கொண்டு வந்ததும், அருமைக்காரர், பெண்ணிற்கு, சந்தானம், குங்குமம் வைத்து, ஒரு தேங்காய், ஐந்து பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஆகியவற்றை கொடுப்பார்.பெண் அதை வாங்கி மடியில் பத்திரமாக கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பின், பெரியவர்களை அப்பெண் வணங்க வேண்டும். இதன் பின்னர் அனைவருக்கும் விருந்து அளிக்கப்படும். இவை அனைத்தும் பெண் வீட்டில் தான் நடைபெறும்.

கொங்கு வேளாளர்கள் திருமண முறைகள்: தடம் வழி பார்த்தல் நிகழ்ச்சி,

உற்றார், உறவினரோடு மிக சிறப்பாக நடைபெறும். காலையில் பெண் வீட்டிலும், மதியம் மாப்பிள்ளை வீட்டிலும் விருந்து நிகழ்ச்சி நடைபெறும். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்து கொள்வர்... திருமணதிற்கு தேதி குறிப்பது அன்று நடைபெறும்...
" இருபெருங்குரவரும் ஒருபொருநாளால்
மண அணிகான மகிழ்ந்தனர்"
என்று சிலப்பதிகாரமும், நல்ல நாளில் திருமண உறுதி செய்தலை கூறுகிறது.

கொங்கு வேளாளர்கள் திருமண முறைகள்: சகுனம் பார்த்தல்:

கொங்கு வேளாளர்கள், கோவிலில், வீட்டு வாசலில், பள்ளி சகுனம் பார்ப்பர், திருமணம் பற்றி புறப்படும் போது, பறவை, பூனை ஆகிய சகுனங்களையும், எதிரில் விறகு சுமை, அமங்கல மகளிர், ஆசாரி, நாவிதர் ஆகியவர்கள் எதிரில் வந்தால் ஆகாது என்பர். நிறைகுட மகளிர், வண்ணான் துணி கொணர்தல், நல்லது என எண்ணுவர். புறப்படும் போது பிறர் உரையாடலில் நற்சொல் கேட்டால் நல்லது என எண்ணுவர். கோவிலில் பூ கேட்பதும் உண்டு....

கொங்கு வேளாளர்கள் திருமண முறைகள்:

நிச்சயதார்த்ததிற்கு பிந்தைய நிகழ்வுகள்:

கொங்கு வேளாள மக்கள் எந்த ஒரு காரியத்தையும் குலமரபு மாறாமல் தான் செய்வார்கள். எல்லா காரியங்களிலும் உற்றுழி உதவும் குணம் தெற்றென தெரியும். முகூர்த்த நாள் குறித்த பின்னர், விறகு வெட்டுதல், நெல் வேக வைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். அன்றைய நாளில், இதற்க்கெல்லாம் கூலி ஆள் வைக்க மாட்டார்கள். உறவினர்கள் இதற்க்கெல்லாம் உற்றவாறு உதவி செய்வார்கள். ஊருக்கு அருகில், பெரும்பாலும் அவரவர் நிலத்திலேயே, பால் வரும் மரத்திற்கு பூச்சி செய்து முதற்கிளை வெட்டுவார்கள். அருமைக்காரர் தேங்காய், பழம் வைத்து, சூடம், சாம்பிராணி, ஊதுபத்தி மனத்துடன் பூசை செய்து கொடுவாள் எடுத்து கொடுப்பார். இதில் மூன்று கிளை உடைய ஒரு குச்சியை வெட்டி எடுத்து மண வீட்டிற்கு கொண்டு வருவார்கள். இது தான் முகூர்த்த கால். பெண் வீட்டு உறவு முறை ஒரு கிளை, மாப்பிள்ளை வீட்டு உறவு முறை ஒரு கிளை, இது இணைந்து இந்த குடும்பம் மூன்றாவது கிளை விட்டு வளர வேண்டும் என்பதால் தான் மூன்று கிளை உடைய பால் மரம் முகூர்த்த காலாக வைத்தனர்.

இதன் பின்னர் விறகுக்கு வேண்டிய அளவு மரங்களை வெட்டி வருவார்கள். பின்னர் நெல் வேக வைக்கும் நிகழ்வு நடைபெறும். இதனை எழுதிங்கள்கார பெண்மணி தொடங்கி வைப்பார். முதலில் இவர் ஐந்து வள்ளம் நெல் அளந்து அண்டாவில் போட்டு, பூசை செய்து தொடங்கி வைப்பார். கோபகு வேளாளர்கள் எதையும் செய்யும் முன்னர் சகுனம் பார்த்து, பூசை செய்து தொடங்கி செய்வார்கள். "பைய சென்றால் வையம் தாங்கும்" என்ற முதுமொழிக்கு உதாரணமாக செயல்பட்டனர். ஆனால், இன்றைய காலங்களில் இது போன்ற சடங்குகள் நடைபெறுவது இல்லை. மூட பழக்கம் என்று விட்டுவிட்டனர். ஆனால், அன்றைய காலத்தில், ஆலைகள் அதிகம் இல்லாத நாட்களில், திருமணதிற்கு தேவையான நெல்லை தயார் செய்ய, இந்த நெல் குத்தும் சீர் என்ற ஒன்றை வைத்தனர்.

Origianl Post - http://ramesh52500.blogspot.in/2012/07/blog-post_1189.html