Monday, July 25, 2016

பலருக்கும் தெரியாத ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள்!

ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள். அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், உடை, தலைமுடி, நடை என்று கூறுவார்கள். இவை அனைத்தும் நம் கண்களுக்கு புலப்படும் வெளிப்படையான வேறுபாடுகள்.

ஆனால் அதையும் தாண்டி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உடல் வித்தியாசங்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் போல்ட்ஸ்கை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இடுப்புப் பகுதி
ஆண்களை விட பெண்களின் இடுப்புப்பகுதி பெரியது.மேலும் இது குழந்தைப் பிறப்பிற்காக இயற்கை பெண்களுக்கு ஏற்படுத்திய வடிவம். கொழுப்பு சேரும் இடம் பொதுவாக ஆண்களுக்கு கொழுப்புக்களானது வயிற்றில் சேரும். அதனால் தான் பெண்களை விட ஆண்கள் தொப்பையால் கஷ்டப்படுகின்றனர். அப்படியெனில் பெண்களுக்கு கொழுப்புக்கள் எங்கு சேரும் என்று கேட்கலாம். பெண்களுக்கு கொழுப்புக்களானது தொடை மற்றும் இடுப்பின் பின்பகுதியில் சேரும். மேலும் ஆண்களை விட பெண்களின் தொடை பெரியதாக இருப்பதற்கு காரணமும் இதுவே.
இதய துடிப்பு
இதய துடிப்பு என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் இதய துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். அதில் ஆண்களுக்கு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறதெனில், பெண்களுக்கு 80 முறை துடிக்கும்.
செல்கள் வேறுபடும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள செல்களும் வேறுபடும். இதற்கு காரணம் அவர்களின் குரோமோசோம்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இரத்த சிவப்பணுக்கள்
ஆண்களை விட பெண்களின் ரத்தத்தில் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் பெண்களின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும். இதன் காரணமாக பெண்கள் அடிக்கடி இரத்த சோகைக்கு உள்ளாகின்றன.
நுரையீரல்
ஆண்களை விட பெண்களின் நுரையீரல் சிறிதாக இருக்கும். அதில் ஆண்களின் நுரையீரலானது பெண்களின் நுரையீரலை விட 30 சதவீதம் பெரியதாக இருக்கும். இதனால் தான் ஆண்களை விட பெண்கள் எதிலும் விரைவில் சோர்வடைகின்றனர்.
தலை தண்டுவடம் கால்கள்
அதேப் போல் பெண்களை விட ஆண்களின் தலை, தண்டுவடம் மற்றும் கால்கள் போன்றவை பெரியதாக இருக்கும்.
நோய் என்று வரும் போது பெண்களை விட ஆண்கள் தான் அதிக மரணத்தை சந்திக்கின்றனர். அதிலும் மார்பக புற்றுநோய், பிறப்புறுப்பு நோய், கருப்பைக் கட்டிகள் போன்றவற்றைத் தவிர, மற்ற அனைத்து நோய்களாலும் ஆண்கள் மரணத்தை தழுவுகின்றனர்.
வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால்
வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால் ஆகிய மூன்றும் பெண்களை விட ஆண்களுக்கு சிறிதாக இருக்கும்.
பற்கள்
பற்கள் என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் பற்கள் வலிமை குறைவாக இருக்கும். சொல்லப்போனால் பொக்கை வாய் தாத்தாக்களை விட, பொக்கை வாய் பாட்டிகள் தான் உலகில் அதிகம்.
ஆக்ஸிஜன் அளவு
ஆண்களை விட பெண்களின் உடலில் ஆக்ஸிஜன் சற்று குறைவாக இருக்கும். இதற்கு காரணமும் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது தான். சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. அது குறைவாக இருக்கும் போது, பெண்களால் கூட்டம் நிறைந்த இடங்களில் நீண்ட நேரம் இருக்க முடியாமல் மயங்கி விழுகின்றனர்.
(வாட்ஸ் அப் தகவல்)

இந்து மதத்தின் அற்புதங்கள்



நம் கோவில்களில் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம்
வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு
செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம்
கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.

வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.

திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும்
உறிஞ்சப்படுகிறது.

ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில்
நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை
உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும்
போது கருடன் தரிசனம் தருகிறது.

கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருடசேவையின்போது கல்
கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து
வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம்
இன்றும் நடைபெறுகிறது.

முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்
பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக
வருகின்றன.

திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு
தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம்
நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள
தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின்
நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில்
கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும்
அற்புதம் நடக்கிறது.

காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால்
நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார்
கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை
கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு
வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

திருப்பத்தூர் - தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த
நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7
புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்
விட்டு விட்டு சாலை அமைத்தனர்.

வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை
பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக
ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது. கஜினி
முகமது உடைத்து அழித்தான்.

அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக்
கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை,
மகான்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம் செய்தவர்கள்
பெறுகிறார்கள்.

Sunday, July 24, 2016

ஆலயமும் அர்ச்சகர்களும்...



ஆலயத்தைப் பற்றிய இவ்விஷயத்தில் அர்ச்சகரைப் பற்றியும் சொல்ல வேண்டியது அவசியம்.

இறைவனுக்கும், பக்தனுக்கும் நடுவில் தரகரைப் போல அர்ச்சகர் எதற்கு என்று ஒரு சில அறிவு ஜீவிகள் கேள்வி கேட்கிறார்கள். இவர்கள் ஆலயத்தில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் தரகர் என்பவர் ஒரு பொருளை வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையில் செயல்படுபவரே. அப்படியானால் ஆலயத்தில் விற்கப்படும் பொருள் என்ன? விற்பவர் யார்? என்பதெல்லாம் தெரியவில்லை.

மற்றொரு சாரார் அர்ச்சகர்கள் தாங்கள் உலக நன்மையின் பொருட்டு பூஜை செய்கிறோம் என்று கூறுகிறார்கள் அவர்கள். எங்களை காப்பாற்றிக் கொள்ள எங்களுக்கு தெரியும் எங்களுக்காக அர்ச்சகர்கள் பூஜை செய்ய வேண்டாம். நாங்கள் செய்து கொள்கிறோம் என்கிறார்கள். இவர்கள் உலகம் என்பது இவர்கள் மட்டுமே என்று நினைப்பார்கள் போலும்.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற காரணத்தினாலோ என்னவோ? ஆனால் ஆலய வழிபாட்டிற்கு அடிப்படையாக விளங்கும் ஆகமங்கள் அர்ச்சகரைப் பற்றியும்,  ஆலய வழிபாட்டின் நோக்கத்தை பற்றியும் தெளிவாக விளங்குகின்றன.

ஆலய வழிபட்டின் நோக்கம்.

सर्वेशाम् रक्ष्णार्थाय ग्रामाधिशु विसेशध:
स्थापिधम् विढिना लिन्गम् सुरैर्वा मुनिबिर्नरै:
स्वयमुध्बूथ लिन्ग्न्ज प्रथिमान्जैस्वराथ्मकम्
थथ्परार्थम् समाक्याथम् सर्वेशाम् आथ्मन: फलम्.

சர்வேஷாம் ரக்ஷணார்த்தாய, க்ராமாதிஷு விசேஷத:.
ஸ்தாபிதம் விதிநா லிங்கம், சுரைர்வா முநிபிர்நரை:.
ஸ்வயமுத்பூத லிங்கஞ்ச ப்ரதிமாஞ்சேஸ்வராத்மகம்..

பொருள்.

{உலகிலுள்ள} அனைவரின் நல்வாழ்வின் பொருட்டு கிராமம் {நகரம், பட்டணம்} போன்ற இடங்களில் விஷேசமான முறையில் தேவர்களாலோ, முனிவர்களாலோ, அல்லது மனிதர்களாலோ முறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தினையோ. தான் தோன்றியாகிய ஸ்வயம்பு லிங்கத்தினையோ, இறை தன்மை பொருந்திய சிலைகளையோ {பூஜை செய்வது} என்பது பரார்த்தம் எனப்படும். {அந்த பரார்த்த பூஜையின்} பலன் அனைத்து உயிர்களுக்கும் உரியதாகும்.

அர்ச்சகர் யார்? அவரது பணி என்ன?

சிவாலயங்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஆதிசைவர்கள், சிவப்ராஹ்மணர், சிவேதியர், சிவ விப்ரர், சிவாசார்யர் போன்ற பல பெயர்கள் உண்டு. அவர்கள் பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜை செய்தவர்கள் பொருட்டு சிவபெருமானால் நேரடியாக தீக்ஷிக்கப் பெற்ற கௌசிகர் முதலான ரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள் என்றும் பூஜையானது அவர்களாலேயே செய்யப்பட வேண்டும் என்பதும் ஆகமங்களும் பெரிய புராணமும் கூறும் செய்தி.

“பரார்த்த யஜனம் கார்யம், சிவ விப்ரைஸ்து நித்யச:”_சிவாகமம்.

परार्थम् यजनम् कार्यम्, सिव विप्रैस्थु निथ्यस:

பரார்த்த பூஜை எனும் திருக்கோயில் பூஜையானது ஆதிசைவரான சிவவிப்ரராலேயே தினமும் செய்யப்பட வேண்டும்.

எப்போதும் இனியபிரான் இன்னருளால் அதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே,
அப்போதைக் கப்போதும் ஆர்வமிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதற்சைவராம் முனிவர்._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}

தெரிந்துனரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம்
வருங்காலமானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்,
விரும்பியவர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன அப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம் புகழும் பெற்றியதோ._ சேக்கிழார் ஸ்வாமிகள் {பெரிய புராணம்}

மேற்கூறிய கருத்துக்களின் மூலம் அர்ச்சகர் தரகர் அல்ல என்பதும் அவர் சிவபெருமானின் ஆணையால் தான் உலக நன்மைக்கான பரார்த்த பூஜைகளைச் செய்கிறார் என்பதும் தெளிவாக விளங்குகிறது.

இனி ஆலய பூஜையில் அர்ச்சகரின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

திருகோவிலுள் ப்ரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் {விக்ரஹங்கள்} மூன்று காரணங்களால் தெய்வத்தன்மையை அடைகிறது என்று ஆகமங்கள் கூறுகின்றன.

“ அர்சகஸ்ய ப்ரபாவேந அர்சநஸ்யாதி சாயநாத், ஆபிருப்யாச்ச பிம்பாநாம் சிலாபவதி தேவகி"

अर्शकस्य प्रभावेन, अर्शस्याथि सायानाथ्
आभिरुप्यास्स बिम्बानाम्, सिलाभवथि धेवकि.

அர்ச்சகருடைய மனோபாவனையாலும், அர்ச்சனையின் சிறப்பாலும், விக்ரஹத்தின் அழகினாலும் சிலையானது தெய்வத்தன்மை அடைகிறது.

இறைவனது ஸாந்நித்யம் நிலை பெறுவதற்கு ஆச்சார்யனின் தவ வலிமையே காரணம் என்கிறது.

மற்றொரு வாக்யம்

“அர்சகஸ்ய தபோயோகாத், தேவ சாந்நித்ய ம்ருச்சதி:”

अर्शस्य थपोयोगाथ्, धेव सान्निढ्य म्रुछथि.

மூர்த்திகளை {விக்கிரஹங்களை} எண்ணை தேய்த்து, நீராட்டி, வஸ்த்திரம் சாற்றி தன் குழந்தைகயைப் போல கவனிக்கும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பல்வேறு நேரங்களில் எவ்வாறு நினைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

“ஆவாஹனாதி காலேது ஆசார்யோ குரு ரூப த்ருத்
அபிஷேகாத்யலங்காரே ஆசார்யோ மாத்ரு ரூபவாநு,
நைவேத்ய தூப தீபாதௌ அர்ஸ்நே மந்த்ர ரூபவாநு
ஸ்தோத்ர ப்ரதக்ஷிணே காலே ஆசார்யோ பக்த ரூபவாநு. _சிவாகமம்.

आवाहनाथि कालेधु आशार्यो गुरु रूप ध्रुक्
अभिशेकाध्यलन्गारे थ्वाशार्यो माथ्रु रूपवानु
नैवेध्य प्रधक्षिणे कालेथ्वाशार्यो भक्थ रूपवानु.

ஆவாஹனம் முதலான காலத்தில் ஆச்சார்யன் குரு ரூபமாகவும், அபிஷேக, அலங்கார காலத்தில் தாயைப் போலவும், நைவேத்யம் முதலான சமயத்தில் மந்த்ர ரூபமாகவும், ஸ்தோத்ரம், மற்றும் ப்ரதக்ஷிண காலத்தில் பக்தனைப்போலவும் ஆச்சார்யன் {அர்ச்சகர்} தன்னை பாவித்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாக்யமோ இன்னும் ஒரு படி மேலாக 7 வித லிங்கங்களில் அர்ச்சகனும் ஒன்று என்று கூறுகிறது.

“ கோபுரே சிகரே த்வாரே, ப்ராகாரே பலி பீடகே.
அர்ச்சகே மூல லிங்கேச சப்த லிங்கஸ்ய தர்ஸநம்.”

गोबुरे सिखरे ध्वारे प्राकारे बलिपूटके
अर्श्के मूल लिन्गेश सप्थ लिन्गस्य धर्स्नम्.

அதையே "அர்ச்சகஸ்து ஹரஸ்ஸாக்ஷாத்" அதாவது அர்ச்சகர் சிவபெருமானே என்று ஒரு பழமொழி தெளிவு படுத்துகிறது.

இவ்வளவு பெருமை கொண்ட அர்ச்சகர்கள் இன்று கூலிக்கு வேலை செய்பவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அது அவர்கள் பிழை அல்ல. காலத்தின் கோலமே என்பதையும் அதன் காரணத்தையும் கீழ்க்காணும் திருக்குறள் உணர்த்துகிறது.

“ ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்,
காவலன் காவான் எனின்"_திருக்குறள்.

இதையே பாரதியும் சொன்னான்

“ பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்த்திரங்கள்" என்று. அது உண்மையே என்பதை நம்மால் நிதர்சநமாக காணமுடிகிறது. என்ன நடந்தாலும் நடக்கட்டும் ஆண்டவனே துணை என்பதை உணர்ந்து அர்ச்சகர்கள் தன் கடமையை செவ்வனே செய்யட்டும்.

Friday, July 15, 2016

'பேலியோ டயட்' (Paleo diet)

'கீட்டோஜெனிக் டயட்' (Ketogenic diet)', 'லோ கார்ப் டயட்' (Low Carb Diet), 'ஹை ஃபாட் டயட்' (High Fat Diet), 'ஹை புரொட்டீன் டயட் (High Protein diet)' என்னும் உணவுப் பழக்க முறைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையா....? பரவாயில்லை. 'பேலியோ டயட்' (Paleo diet) என்பதை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'முன்னோரின் உணவுமுறை' என்று அழகிய தமிழில் சொல்லப்படும், 'பேலியோ' உணவுமுறையைத் தமிழ் மக்களுக்கு, திரு.செல்வன் அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதை அறிமுகப்படுத்திய திரு.செல்வன் அவர்கள், தன்னை முன்னோர்களுடன் தொடர்புபடுத்தும் ஒரு அடையாளமாகத் தன்னை 'நியாண்டர் செல்வன்' என்னும் பெயரில் வெளிப்படுத்தியிருக்கிறார். நியாண்டர் செல்வன் தமிழர்களுக்குச் செய்திருப்பதை, ஒரு மாபெரும் உதவியாகவும், சேவையாகவுமே நான் கருதுகிறேன்.

நான் லேசில் ஒருவரைப் பாராட்டிவிட மாட்டேன். ஒருவர் சொல்வதை பெரும்பாலும் உடன் நம்பிவிட மாட்டேன். ஒருவர் ஒன்றைச் சொல்லும்போது, அதை அப்போது ஏற்றுக்கொள்வதாகக் காட்டிக் கொள்வேனேயொழிய, பின்னர் அவர்கூறியதைப் பல விதங்களில் ஆராய்வேன். அப்படிப்பட்ட நான், முதன்முறையாக ஒருவரை மனதாரப் பாராட்டுவேனாகில், அது நியாண்டர் செல்வனாகத்தான் இருக்கும். இதில் முக்கியமானது, நியாண்டர் செல்வன் என்றால் யாரென்றே எனக்குத் தெரியாது என்பதுதான். முன்னர் பின்னர் அவரைப் பார்த்ததேயில்லை. அவரில் பட்ட காற்றுக்கூட என்னில் பட்டதில்லை. அப்படியிருக்க அவரை நான் ஏன் பாராட்ட வேண்டும்? காரணம் ஒன்றேயொன்றுதான். 'பேலியோ'. இதுதாண்டி அவர்பற்றி எதுவும் தெரியாதவன்.

நியாண்டர் செல்வன் தமிழர்களிடையே அறிமுகப்படுத்திய 'பேலியோ' என்னும் சொல் சிலரின் அடிவயிற்றில் பேதியைக் கரைக்கிறதோ என்ற அச்சம்தான், இன்று இதை என்னை எழுத வைத்திருக்கிறது. "அதுசரி, இதற்கு நீங்கள் ஏன் பதட்டப்பட வேண்டும்?" என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாம். அதற்கும் நியாயமான காரணம் ஒன்றிருக்கிறது. பல வருடங்கள் நான் அனுபவித்த வலிகள், வேதனைகள், உடல் எடை ஆகியவற்றிலிருந்து இந்தப் பேலியோ உணவு முறையால் விடுதலைபெற்ற ஒரு வாழும் உதாரணம் நான். 

'பேலியோ' என்ற பெயருடன் நடைமுறைக்கு வந்திருக்கும் ஒரு அருமையான உணவுப்பழக்க முறை, ஏன் சிலரால் கொச்சைப்படுத்தப்படுகிறது என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. எப்பொருளையும் யார் யார் வாய்க் கேட்பதில் தப்பு என்ன இருக்கிறது? இதில் நான் கவலைப்படுவதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. எழுத்துத் துறையில் இருக்கும் என் நண்பர்களில் சிலர், இந்தப் பேலியோ எதிர்ப்புக் குரலைச் சன்னமான கேலிக்குரலில் எழுப்பியிருக்கிறார்கள். ஆனாலும், நிச்சயம் அவர்கள் இதை ஒரு நகைச்சுவைக் கலாய்த்தலுக்காக மட்டும்தான் செய்திருப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. காரணம், அவர்கள் எழுத்துத் துறையில் அனுபவமும், எதையும் விரிவாக ஆராயும் மனநிலையும் கொண்டவர்கள். அதனால், நிச்சயம் பேலியோவைத் தப்பாக அவர்கள் சொல்லிவிடவில்லை என்றே நம்புகிறேன். எனவே, இங்கு எழுதுவது அவர்களுக்கானதல்ல. 

பேலியோவைக் கொச்சைப்படுத்தியும், கேலியும் செய்பவர்களிடத்தில் சில கேள்விகளை மட்டும் நான் கேட்க விரும்புகிறேன்.

"நீங்கள் எப்பொழுதாவது அதிக எடை உடலில் ஏறிக் குண்டாக இருந்திருக்கிறீர்களா?
"குண்டாக இருப்பதனால் ஏற்படும் உடல், மன வலிகளை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?"
"விழாக்களில் அல்லது நிகழ்வுகளில் பருமனான உடலுடன் கலந்து கொள்வதால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?"
"உடல் பருமனாய் இருப்பவர்களைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் அவர்களைச் சந்திக்கும்போது கேட்கும் முதல் கேள்வியே, அவர்களது உடல் எடையைப்பற்றித்தான் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால் அவர்கள் உள்ளுக்குள் குறுகிப் போவதால் அடையும் மனவேதனை தெரியுமா?"
"சந்திக்கும் ஒவ்வொருவரும் தேர்ந்த டயட்டீசியன்களைப்போல, ஆளாளுக்கு உடல் மெலிவதற்கு அட்வைஸாக அள்ளி விடுவது தெரியுமா?"
"அதிகம் வேண்டாம், தற்போது பிரபலமாகியிருக்கும் 'செல்ஃபி' போட்டோக்களை அதிகமாக எடுப்பது மெலிந்த உடல்வாகுள்ளவர்களேயொழிய, குண்டானவர்கள் அல்ல என்ற புள்ளிவிவரமாவது தெரியுமா?"
போகட்டும்.

எடை அதிகரிப்பில் உள்ளவர்களைக் காண்பவர்களெல்லாம் அள்ளிவிடும் அட்வைஸ்களில் முதன்மையானது, " ஏன் இவ்வளவு சாப்பிடுகிறாய்? சாப்பாட்டைக் குறைக்கலாம்தானே!"

அடுத்தது, "இந்த உடம்பை வைத்துக்கொண்டு கொஞ்சமாவது எக்சர்ஸைஸ் பண்ணலாமே, தினமும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர்களாவது நடக்கலாமே?" 

அட்வைஸ்கள் நல்லவைதான், தப்பில்லை. ஆனால், இவையெல்லாம் ஏதோவொரு வகையில் சாத்தியப்பட முடியவில்லையென்பதால்தானே அவர்கள் குண்டாக இருக்கிறார்கள். குண்டாக இருக்க வேண்டுமென்று கடவுளிடம் வரம் வாங்கியா வந்திருக்கிறார்கள்? உடல் இளைப்பதற்கு அவர்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்பதை ஒரு கேள்வி மூலமாவது அவர்களிடம் கேட்டுவிட்டு நல்லுரைகளை சொல்லலாமல்லவா? நானே உடல் மெலிவதற்குத் தலையால் மண்கிண்டியிருக்கிறேன். "நாளொரு தொப்பையும் பொழுதொரு கிலோவுமாக அதிகரித்ததேயொழிய, எடை சற்றும் குறையவில்லை. 

குண்டாக ஒருவன் இருப்பதற்கு உணவு அதிகம் உட்கொள்வது மட்டும் காரணம் என்று சொல்வது ரொம்பத் தப்பான கருத்து. அத்துடன், கொழுப்புத்தான் உடல் எடையை அதிகரிக்க வைக்கிறது என்று சொல்வது அதைவிடத் தப்பு. ஒருவன் உட்கொள்ளும் உணவு சமிபாடடையும்போது, எப்படி உடைக்கப்படுகிறது என்பதுதான் இங்கு முக்கியம். அதற்கு நாம் எதை உண்கிறோம், நம் சமிபாட்டு செயல்முறை எப்படி நடைபெறுகிறது என்பவற்றிற்கான தெளிவு தேவை. தவறான உணவை உண்டால் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். அதிகம் உண்டால், அதிக எடை.ப்யார் இல்லையென்றார்கள்? இங்கு மாற்றப்பட வேண்டியது உண்பதையல்ல, உணவை.

தைராய்ட், நிம்மதியற்ற தூக்கம், ஸ்லீப் அப்னியா (Sleep apnea) போன்று பலவகை நோய்களின் தாக்கத்தால், ஒருவரின் எடை அதிகரித்துக்கொண்டே போகும். எடை அதிகரிக்கும்போது, ஒருவரின் BMI அளவும் அதிகரிப்பதினால், மேலும் மேலும் தான் உட்கொள்ளும் உணவை அதிகரித்துக்கொண்டே போவார். இதுவொரு சங்கிலித் தொடர்ச்சி போன்றது. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க உட்கொள்ளும் உணவும் அதிகரித்து மேன்மேலும் உடல் குறுக்காக வளரும். உடல் எடை அதிகரிப்பு என்பது, வளர்பிறை மட்டும்தான்.

'ஏன் இவர்கள் ஸ்போர்ட்ஸ், எக்சர்ஸைஸ் ஏதாவது செய்யலாம்தானே?' என்ற கேள்விகளுக்கான பதிலாக, அவர்களிடம் ஏதோவொன்று இருக்கும். அதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணம் தேடி எங்கும் போகத் தேவையில்லை. என்னையே எடுத்துக் கொள்ளலாம். 'ரூமட்டாய்ட் ஆத்திரட்டீஸ்' (Rheumatoid Arthritis) என்னும் மூட்டுகளில் கொடுமையான வலிகளை ஏற்படுத்தும் நோய் எனக்குண்டு. மூட்டுகளை அளவுக்கு அதிகமாக அசைப்பதால், அங்கு 'இன்ஃபிளமேசன்' (Inflammation) ஏற்பட்டு, மூட்டுகள் வீக்கமடைந்து வலி உருவாகும். அப்படி ஏற்படும் வலி, லாரியொன்று அடித்துவிட்டுச் சென்றதற்கு ஒப்பாக இருக்கும். அந்த மூட்டுச் சார்ந்த பகுதிகளில் நரம்புகள் வெட்டிவெட்டி இழுக்கும். அந்த வலி வரும்போது, தோய்த்துப் போட்ட துணிபோல ஆகிவிடுவேன் நான். எந்த மூட்டுகளுக்கும் ஒரு அளவுக்குமேல் வேலை கொடுக்க முடியாது. கொடுத்தால் போச்சு. வலி மாத்திரைகள் மற்றும் உயர் அளவு 'கார்ட்டிசோன்' (Cortison) மாத்திரையாக அல்லது ஊசியாகக் கொடுப்பதே வலி நீக்கும் ஒரே வழி. ஊசியென்றால், எந்த மூட்டில் வீக்கம் இருக்கிறதோ அங்கே நேரடியாக ஊசியைச் செலுத்துவது. கைவிரல்கள் அல்லது மணிக்கட்டில் வீக்கம் ஏற்பட்டால், அந்த மூட்டெலும்புக்குள் ஊசியைச் செலுத்தி, காரில் கியர் போடுவது போல ஊசியைத் திருப்புவார் டாக்டர். கடவுள் ஒருதரம் கீழே இறங்கிவந்து கண்ணைச் சிமிட்டிவிட்டுச் செல்வார். நான் கடவுளைக் கும்பிடாததற்குத் தண்டனையாம். கொடுமையென்று ஒன்று உண்டென்றால், இதுவே அதன் தலைவன். மகாக்கொடுமை. கையில் வரும் வலியைவிட ஊசிவலி எவ்வளவோ மேல். ஒரேயொரு தடவை நெஞ்சின் நடுவே மார்புக்கூட்டில் இந்த வலி எனக்கு ஏற்பட்டது. மூச்சுவிடவே முடியவில்லை. சுவாசிக்கும் ஒவ்வொரு காற்றும் வலியுடன் இறங்கியது. நண்பனொருவனின் உதவியுடன் ஹாஸ்பிட்டல் சென்று பார்வையாளர் பகுதியில் வைத்து நெஞ்சில் ஒரு ஊசி. 'பச்சக்', அவ்வளவுதான். வலி போயேபோச்சு.

பின்னர், இதில்கூட நான் ஒரு துரதிர்ஷ்டசாலியாகினேன். எனக்கு 'கிளௌகோமா' (Glaucoma) என்னும் கண்ணில் ஏற்படும் உயர் அழுத்த நோய்க்காக, கார்ட்டிசோன் மாத்திரைகள் பயன்படுத்த முடியாமல் போனது. இப்போ நான் என்ன செய்ய முடியும்? கார்ட்ஸ் (Playing Cards) விளையாட்டில் கார்ட்டுகளைக் கலைப்பதனாலேயே விரல்கள் வீங்கிவிடும் எனக்கு. நான் எந்த ஸ்போர்ட்ஸ் அல்லது எக்சர்ஸைஸ் செய்ய முடியும் சொல்லுங்கள்? வீட்டில் எந்த வேலையும் செய்யாமல், பொம்மைபோல அமர்ந்திருப்பேன். விளைவு உடல் எடை அதிகரிப்பு. இதுபோல, ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்.

பேலியோ என்பது எடையிழப்பு க்கு மட்டுமான ஒரு உணவுப்பழக்க முறையல்ல. அதன் பயன்கள் எண்ணிக்கையற்றவை. ஒருபதிவின் மூலம் அவற்றைச் சொல்ல முடியாது. அதைச் சொல்வதற்கு நியாண்டர் செல்வன் இருக்கிறார். பேலியோ நன்மைகளில் எடையிழப்பும் ஒன்று. நாம் மாற்றவே முடியாது என நம்பிக்கொண்டிருகும் பல நோய்களிலிருந்து சற்றே விலகி, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு வழிசெய்து தருவது அது. 

ஒரு மாதத்தில் நீங்கள் ஆரோக்கியமான வழியில், 'டயட்' என்ற பெயரில் பட்டினி கிடக்காமல், வயிறு நிறைய உணைவை உண்டு, குறைந்தது 3 கிலோவை எடையைக் குறைக்க வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? சந்தைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படும் ஏதேதோ பதார்த்தங்களை உண்கிறீர்கள், குடிக்கிறீர்கள். அதனால் ஆயிரக்கணக்கான பணத்தை தண்ணீராகக் கொட்டுகிறீர்கள். இவை எவையுமில்லாமல், உங்கள் உணவுப்பழக்கத்தால் மட்டும் எடையை இழக்கச் செய்வது நல்லது அல்லவா? இதை ஏன் பழிப்புக்குள்ளாக்குகிறீர்கள்?  உங்களால் இந்த உணவுப்பழக்க முறையைக் கையாள முடியவில்லையா? விடுங்கள். செய்பவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். 

தவிர்க்க முடியாத ஏதோவொரு காரணத்தினால், உங்களால் தொடர முடியாத ஒரு உணவு முறையை, தப்பென்று கேலி செய்வதில் என்ன நியாயம் இருக்கு சொல்லுங்கள்?

உடலால் எந்த வேலையும் செய்யாமல், பட்டினி இருக்காமல், திருப்தியான அளவு உணவை உண்டு, கலோரிகள் கணக்குப் பார்க்காமல், அதிக இறைச்சி, அதிக கொழுப்பு, அதிக முட்டைகள் என்று தினமும் உட்கொண்டு, உடல் எடையையும் குறைப்பதோடு, சிலபல நோய்களிலிருந்து விடுதலை கொடுப்பதற்குப் பெயர்தான் 'பேலியோ'.

நாளைய அறிவியலில் இதைவிடச் சிறந்த வேறொரு முறை வரலாம். அப்படி வருவதுதான் அறிவியலின் தன்மையும்கூட. அப்போது இதற்கான மாற்று ஏற்படலாம். ஆனால், இன்றிருக்கும் முறைகளில் சிறந்ததும், வலியதும் பேலியோதான்.

நியாண்டர் செல்வனுக்கு என் நன்றிகள்.

-ராஜ்சிவா-

Tuesday, July 12, 2016

ஹெலன் கெல்லர்- அமெரிக்க மாற்றுத்திறன் சாதனையாளர்




பார்வைத்திறன், பேசும் திறன், கேட்கும் திறனை இழந்தாலும், சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் (Helen Keller) பிறந்த தினம்  (ஜூன் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் அலபாமா மாநிலம் டஸ்கம்பியா நகரில் (1880) பிறந்தார். ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் பறிபோனது. தான் நினைப்பதை மற்றவர்களுக்கு உணர்த்த தெரியாமல் தவித்த குழந்தை, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, முரட்டுத்தனமாக நடந்துகொண்டது.
l எப்படியாவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்று பெற்றோர் படாத பாடுபட்டனர். ‘தி மிராக்கிள் ஒர்க்கர்’ என்று உலகம் போற்றிய ஆசிரியை ஆனி சலிவன் 1887-ல் வந்து சேர்ந்தார். இந்த ஆசிரியை மாணவி உறவு அடுத்த 49 ஆண்டுகாலம் நீடித்தது.
l முதலில் பொருட்களை இவரது கைகளில் கொடுத்தும், மரம், செடி கொடிகளைத் தொடச் செய்தும் அவற்றின் பெயர்களை கையில் எழுதியும் காட்டினார் சலிவன். எதையும் வேகமாக கற்கும் ஆற்றல் பெற்றிருந்த ஹெலன், விரைவில் பிரெய்லி முறையைக் கற்றார். உதடுகளில் கைவைத்து அதன் அதிர்வுகள் மூலம் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையைக் கற்றார்.
l பத்து வயது நிறைவதற்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார். நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதங்கள் எழுதினார். பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்து, ஆசிரியர் வாயிலாகவும் பிரெய்லி முறையிலும் பல நூல்களைப் படித்தார்.
l சத்தம்போட்டு அழுது, சிரிக்கிற ஹெலனால் பேசவும் முடியும் என்பதை 13-வது வயதில் தோழிகள் புரிய வைத்தனர். சாராஃபுல்லர் என்ற ஆசிரியரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார். நியூயார்க்கில் உள்ள காது கேளாதோர் ரைட் ஹுமாஸன் பள்ளியில் பயின்றார். தெளிவாகப் பேச முடியா விட்டாலும், பிறர் புரிந்துகொள்ளும் அளவுக்கு பேசும் திறனை வசப்படுத்திக்கொண்டார். சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
l சுயசரிதையை 23 வயதில் எழுதினார். இது பெண்கள் இதழில் தொடராக வந்து, பிறகு புத்தகமாக வெளிவந்தது. தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது. இதுதவிர, 12 நூல்கள் எழுதியுள்ளார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார்.
l ராட்கிளிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 24-வது வயதில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.
l பார்வையற்றோர் நலனுக்கான அமைப்பை உருவாக்கினார். வாழ் நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அயராமல் பாடுபட்டார். அவர்களுக்கான பள்ளிகளைத் திறக்க வைப்பதற்காக, இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பார்வையற்றோருக்காக தேசிய நூலகம் உருவாக்கி னார்.
l இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘தி மிராக்கிள் ஒர்க்கர்’ திரைப்படத்தில் ஹெலன், ஆனி சலிவனாக நடித்த 2 நடிகைகளும் ஆஸ்கர் விருதை வென்றனர். இவரது சுயசரிதை, நாடகமாகத் தயாரிக்கப்பட்டது.
l உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள், அமைப்புகளிடம் பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்காக இறுதிவரை உழைத்த ஹெலன் கெல்லர் 88-வது வயதில் (1968) மறைந்தார்.

காலபைரவ கர்மா








ஒருவர் இறந்துவிட்டால் அவர் உடலை விட்டு உயிர் பிரிவது என்பது 11லிருந்து 14 நாட்கள் வரையில் மெதுவாகவே நடைபெறுகிறது. அதனால்தான் நம் கலாச்சாரத்தில் இறப்பு சடங்குகள் அத்தனை நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு யோகி இறக்கும்போது தன் உடலில் இருக்கும் எல்லா வாயுக்களும் ஒரே நேரத்தில் உடலைவிட்டு பிரியுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் சாதாரணமாக இறப்பவர்களுக்கு மரணம் பகுதி பகுதியாகத்தான் நிகழ்கிறது, எனவேதான், இந்தக் கலாச்சாரத்தில், இறந்தவர்களுக்காக வெளியிலிருந்து ஒருவர் சில செயல்முறைகள் செய்து, அந்த உயிர் நல்லவிதமாகப் பிரிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்த சடங்குகள் அதன் தன்மையை இழந்து வருகின்றன.
எனவே இறந்தவர்களுக்கான இந்த சடங்குகளை முறைப்படி செய்ய ஈஷா யோகா மையம் முயற்சி எடுத்து வருகிறது, இவை வெறும் சடங்குகளாக, வியாபார நோக்கத்துடன் இல்லாமல், அந்த உயிருக்கு உண்மையாக எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதாக இருக்கும். ஆரம்பத்தில் சில பிரம்மச்சாரிகளையும் சன்னியாசிகளையும் சத்குரு அவர்கள் இதற்காக தயார் செய்தார்கள். தற்போது விருப்பமுள்ள மற்றவர்களுக்கும் இது கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. வாழும்போது தேவையான விழிப்புணர்வும் பயிற்சிகளும் இருந்திருந்தால், இறக்கும்போது அவர்களுக்கு எந்த சடங்குகளும் தேவையில்லை. அவர்களே தங்களைப் பார்த்துக் கொள்வார்கள், ஆனால் அந்த பயிற்சியும் விழிப்புணர்வும் இல்லாதபோது இத்தகைய சேவை மக்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த செயல்முறையைத்தான் காலபைரவ கர்மா என்கிறோம்.
இது இறந்தவர்களுக்கான ஒரு செயல்முறை. அவர்கள் செல்லும் புதிய இடம் ஒரு சிறந்த இடமாக இருப்பதை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டிருக்கிறது. ஒருவர் இறந்தவுடன் தன் நிர்ணயிக்கும் மனதையும் இழந்துவிடுகிறார். எனவே இறக்கும்போது எந்தவிதமான உந்துதல்கள் இருந்ததோ, அவை இப்போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பல மடங்காகப் பெருகும். அவருடைய உந்துதல் இனிமையான உணர்வுடன் இருந்தால், அந்த இனிமை உணர்வு பல மடங்காகும். உந்துதல் சோகமான உணர்வுடன் இருந்தால், சோகமான உணர்வு பல மடங்காகும். எனவேதான், ஒரு மனிதர் இறக்கும்போது, அவரைச் சுற்றி ஒரு இனிமையான சூழ்நிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது.
எனவே அந்த கடைசி நேரத்திலோ, அல்லது அதற்கடுத்த சில குறிப்பிட்ட காலத்திற்குள்ளோ, நாம் அந்த உயிரை அணுகி அது தனக்குள் இனிமையை உணருமாறு பார்த்துக் கொள்ள முடியும். ஒரு சொட்டு இனிமையை அவருக்குள் புகுத்திவிட்டால் கூட, சரி தவறு என நிர்ணயிக்கும் மனம் இல்லாத காரணத்தால், அந்த இனிமை இப்போது அவருக்குள் இலட்சம் மடங்காக பெருகிவிடும். எனவே அந்த உயிருக்குள் இனிமையை ஊட்டுவதைத்தான் நாம் இப்போது ஒரு செயல்முறையாக செய்கிறோம். இதுதான் காலபைரவ கர்மாவின் அடிப்படை. காலபைரவ சாந்தி என்னும் செயல்முறையும் இருக்கிறது. அதை இறந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த செயல்முறைகளுக்காக லிங்கபைரவி திருக்கோவில் சக்தித்தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காலபைரவ கர்மா
காலபைரவ கர்மா, ஒருவர் இறந்த குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட வேண்டிய செயல்முறையாகும்.

தேவையானவை:
இறந்தவரின் புகைப்படம், உடை (உள்ளாடை மற்றும் சேலை தவிர) இந்த செயல்முறைக்கு தேவை. இறந்தபோது அணிந்திருந்த உடை வேண்டாம். இரத்த சம்பந்தமான உறவினர் ஒருவர் இந்த செயல்முறையின் போது அருகில் இருக்க வேண்டும். இந்த செயல்முறைகள் லிங்கபைரவி திருக்கோவிலில் நடைபெறும். பிறகு உறவினர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். (தவிர்க்க முடியாத காரணத்தால் உறவினர்கள் இந்த செயல்முறைக்கு வர இயலவில்லை என்றால் மையத்திற்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்ய இயலும்)

நிபந்தனைகள்:
இயற்கை மரணமாக இருந்தால் 50 வயதுக்கு மேல்- 14 நாட்களுக்குள்
50 வயதுக்கு கீழ் 48 நாட்களுக்குள்
இயற்கை மரணமாக இல்லாமல் விபத்து, தற்கொலை போன்று இறந்திருந்தால் 33 வயதுக்கு மேல் – 48 நாட்களுக்குள்:
33 வயதுக்கு கீழ் – 90 நாட்களுக்குள்
காலபைரவ சாந்தி
காலபைரவ சாந்தி ஒவ்வொரு அமாவாசை அன்றும் நள்ளிரவில் நடைபெறும். (See our Lunar Calendar)

தேவையானவை:
இறந்தவரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி, அனுப்புநரின் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவை இந்த செயல்முறைக்கு தேவை. நன்கொடையை லிங்கபைரவி கோவில் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது “ஷிலீக்ஷீவீ சீஷீரீவீஸீவீ ஜிக்ஷீust” என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாகவோ செலுத்தலாம். காலபைரவ சாந்தியை வருடத்திற்கு ஒருமுறை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது. 10 வருடங்களுக்கு சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். வருட சாந்தி மகாளய அமாவாசையன்று செய்யப்படும்.

பகிர்வுகள்:
நான் என்னுடைய ஒரே மகனை இழக்க நேரிட்டது. என் வாழ்நாள் முழுவதும் நான் வறுமையில், பணத்திற்காக போராடினேன். ஆனால் இன்றோ என்னிடம் எல்லாம் இருக்கிறது, ஆனால் அவன் இல்லை. எனக்கு இது மிகப் பெரிய இழப்பு. நான் தனிமையாய் உணர்கிறேன். இந்த சமயத்தில்தான் நான் என் தம்பி மூலம் காலபைரவ கர்மாவைப் பற்றி அறிந்தேன். எனக்கு அதில் பெரிய நம்பிக்கை இல்லை என்றாலும் என் மகன் அமைதியாய் இருப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். காலபைரவ கர்மா செய்ததன் மூலமாக அவன் ஆத்மா சாந்தி அடைந்ததாய் உணர்கிறேன். எனக்குள்ளும் நான் இப்போது அமைதியாகி விட்டேன். என் குடும்பத்தினர் கூட என்னில் மிகுந்த மாற்றத்தை காண்கின்றனர்.
– திருமதி. அருணா கந்தசாமி, கரூர்

நாங்கள் எங்கள் தாயாரின் ஆத்மா சாந்தியடைய விரும்பினோம். அதனால் காலபைரவ கர்மா செய்வதற்காக ஈஷா யோகா மையம் சென்றோம். அங்கு சடங்குகளை செய்து கொண்டிருந்த போது என் உடலும் மனமும் லேசாவதை உணர்ந்தேன். ஒருவிதமான அதிர்வு என்னுள் ஏற்படுவதை உணர முடிந்தது. பொதுவாக ஒரு ஆண் குழந்தைதான் இறுதி சடங்கை செய்ய முடியும். ஆனால் இங்கோ பெண்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்குகின்றனர். என் தாய்க்கு ஏதோ ஒன்றை செய்த திருப்தியை நான் அடைந்தேன்.
– திருமதி. எல். இலக்ஷ்மி, சென்னை

Sunday, July 10, 2016

108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்



1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :
ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.
இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.
மதுரை அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான

பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,
சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.

http://www.astrosuper.com/2015/08/108.html

Saturday, July 9, 2016

*புற்று நோய்*

*இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.*

*மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.*

*எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*

*கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.*

*சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.*

*அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.*

*இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,*

*அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்.  இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.*

*வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்*
*விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.*
*பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும் பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்*
*நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்*
*பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !*
                                                                     *– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17*

*கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்*
*இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.*

*நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.*

*அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார்,*

*நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.*

*அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.*

*இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்.*

*இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) )  தான் என்றார்.*

*நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்*
*உடனடியாக  அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.* 
*அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,*
*இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.*

*அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.*

*2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில்  வெளியீட்டுள்ளார்.*

*இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*

*பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில்  வெளியிட்டுள்ளார்.  இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.*

*ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை  தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.*

*மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.*

*வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.*

*இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும்.* *முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.*

*இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.*

*நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.*

*எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.*

*வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!*

*நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.*

*இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.*

*இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.*

Friday, July 1, 2016

டெலிபோர்ட்டேசன் Teleportation

‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) படத்தை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். விண்வெளியி அலையும் நம் எதிர்காலச் சந்ததியினரின் கதை அது. அதில், வரும் விண்கலத்தில் பயணம் செய்துகொண்டு இருப்பவர்கள், ஒரு குழாய் போன்ற வடிவமுள்ள ஒரு பகுதிக்குச் சென்று,  ‘டெலிபோர்ட்டேசன்’ (Teleportation) மூலமாக வேறு இடத்துக்குச் செல்வார்கள். நவீன இயற்பியலில் 'டெலிபோர்ட்டேசன்', சாத்தியமான ஒன்றுதான். இந்தச் சாத்தியங்களை, அணுத்துகள்களில் பரிசோதனை செய்து வெற்றியும் கண்டுள்ளார்கள். ஃபோட்டான் துகள்களை, டெலிபோர்ட்டேசன் மூலமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், ஒரு முழுமையான பொருளையோ அல்லது மனிதனையோ அப்படி அனுப்புவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அதிலும், ஒரு மனிதனை முழுமையாக, ஓர் இடத்திலிருந்து இன்னுமோர் இடத்துக்கு அனுப்புவதென்பதை இப்போதுள்ள அறிவியலின்படி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ‘ஃபாக்ஸ்’ (Fax) இயந்திரம் மூலமாக, ஒரு காகிதத்தில் உள்ளவற்றை மின்செய்தியாகக் கடத்தி, இன்னுமொரு இடத்தில் பெறுவதுபோல, டெலிபோர்ட்டேசன் மூலமாக மனிதனையும் அனுப்புவது என்பது சிக்கலான ஒரு விசயம் (ஃபாக்ஸ் இயந்திரத்தை, புரிய வேண்டுமென்பதற்காக ஒரு உதாரணத்துக்காகச் சொன்னேன்).

மனிதனை டெலிபோர்ட்டேசனில் அனுப்ப வேண்டுமாயின், அவன் மூளையிலுள்ள எண்ணங்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும். மனிதன் அணுத்துகளால் ஆக்கப்பட்டிருப்பதால், அவனை அனுப்புவதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவனது எண்ணங்கள், அணுத்துகள்கள் கிடையாது. அவற்றைப் படியெடுக்கும் முறையும் இங்கு அவசியமானது.

ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு அனுப்பப்படும் மனிதனின் ஞாபகங்கள் இல்லாவிட்டால், அவனை அதே நபர் என்று சொல்ல முடியாதல்லவா? இது அறிவியலில் சிக்கலான பிரச்சனையாகவே இப்போது பார்க்கப்படுகிறது.

இன்றிருக்கும் சூழ்நிலையில் சாத்தியமே இல்லாத இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்திருக்கிறது.

ரஷ்யா சமீபத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருகிறது. அதன்படி, ஒரு புதுத் திட்டத்தை 2.1 ட்ரில்லியன் டாலர்கள் செலவில் ரஷ்யா செய்ய இருக்கிறது. 'ஸ்டார் ட்ரெக்' படத்தில் வருவது போலவே ஒரு 'டெலிபோர்ட்டேசன்' கருவியை உருவாக்குவதுதான் ரஷ்யாவின் நோக்கம். இதற்கு 20 வருட கால அவகாசத்தையும் எல்லையாக முடிவு செய்திருக்கிறது.

இந்தத் திட்டம் மட்டும் நடைபெறுமானால், மனிதன் அறிவியலின் அடுத்த படிநிலைக்குச் சென்றுவிடுவான்.

-ராஜ்சிவா-