Thursday, October 30, 2014

பெருங்குடலை சுத்தப்படுத்த சிறந்த வழி

 
அதிகளவில் தண்ணீர் பருகுவது. தினமும் 10 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது அத்தியாவசியமாகும். சீரான முறையில் தண்ணீரை பருகி வந்தால், உடலில் இருந்து இயற்கையான முறையில் தீமையான நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற, உடலுக்கு தேவையான நீரையும் இளக்குதலையும் அளிக்கும்.

    

பெருங்குடலை சுத்தப்படுத்த சிறந்த வீட்டு சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது நற்பதமான ஆப்பிள் ஜூஸ். சீரான முறையில் ஆப்பிள் ஜூஸ் பருகினால் மலம் கழித்தலும், நச்சுப் பொருட்கள் உடைதலும் மேம்படும். மேலும் கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியமும் மேம்படும். 1. வடிகட்டாத ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூசுடன் உங்கள் நாளை தொடங்குங்கள். 2. 30 நிமிடங்கள் கழித்து ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். 3. இந்த செயல்முறையை நாள் முழுவதும் பல முறை செய்யவும். இதனை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு கடைப்பிடிக்கவும். நடுவே ஒரு டம்ளர் உலர்த்தியப் பழச்சாறையும் பருகலாம். இந்த சிகிச்சையை பின்பற்றும் போது திண்ம உணவுகளை தவிர்ப்பது நல்லது.

எலுமிச்சை ஜூஸ்
 
 எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. மேலும் அதிலுள்ள அதிகமான வைட்டமின் சி, செரிமான அமைப்பிற்கு நன்மையாக விளங்குகிறது. அதனால் பெருங்குடலை சுத்தப்படுத்த எலுமிச்சை ஜூஸையும் பயன்படுத்தலாம். அதற்கு ஒரு எலுமிச்சையை பிழிந்து, அதில் சிறிதளவு உப்பு மற்றும் தேன் கலந்து, அதனுடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகவும். இதனால் அதிகளவிலான ஆற்றல் திறன், பிரச்சனையில்லாமல் மலங்கழித்தல் மற்றும் சிறந்த சரும நிலையை பெற இது உதவிடும். 
 
 
   

பச்சை காய்கறி ஜூஸ்
 
 பெருங்குடலை சுத்தப்படுத்துவதற்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சமைக்கப்பட்ட உணவுகளை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு தள்ளி வைத்து விடுவது அவசியமாகும். திண்ம உணவுகளுக்கு பதிலாக, தினமும் பல முறை நற்பதமான காய்கறி ஜூஸை பருகுங்கள். குறிப்பாக பச்சை காய்கறிகளில் உள்ள குளோரோஃபில் நச்சுப் பொருட்களை நீக்க உதவிடும். மேலும் அதிலுள்ள வைட்டமின்கள், கனிமங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகள் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், ஆற்றல் திறனுடனும் வைத்திருக்கும். மூலிகை தண்ணீரை கூட நீங்கள் பருகலாம். ரெடிமேடாக செய்யப்பட்டுள்ள காய்கறி ஜூஸ்களை பயன்படுத்த நாங்கள் அறிவுறுத்த மாட்டோம். அதற்கு காரணம், கழிவு பொருட்களை உடைக்கவும், நீக்கவும் உங்கள் உடலுக்கு உதவிட, பயனுள்ள என்ஸைம்கள் அதில் இருப்பதில்லை. கேரட், பீட்ரூட், சோளம், சீமைப்பூசணி, கீரை, பரட்டைக்கீரை போன்ற காய்கறிகளை கொண்டு வீட்டிலேயே ஜூஸர் அல்லது ப்ளெண்டரை பயன்படுத்தி நற்பதமான காய்கறி ஜூஸ்களை தயார் செய்யலாம்.
 
   

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் 
 
 நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவதால் தீமையான நச்சுப் பொருட்கள் சேர்ந்துள்ள பெருங்குடல் சுத்தப்படுத்தப்படும். மலத்தை மென்மையாக்கி, மலம் கழித்தலை மேம்படுத்த நார்ச்சத்து உதவிடும். இதனால் கழிவு பொருட்களை வெளியேற்ற உடலுக்கு சுலபமாக இருக்கும். அதே நேரம், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கவும் கூட நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உதவுகிறது. ராஸ்ப்பெர்ரி, பேரிக்காய், ஆப்பிள் போன்ற நற்பதமான பழங்கள், பட்டாணி மற்றும் ப்ராக்கோலி போன்ற நற்பதமான காய்கறிகள் மூலமாக அதிகமான நார்ச்சத்தை உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். முழு தானியங்கள், நட்ஸ், பீன்ஸ் மற்றும் விதைகளிலும் கூட போதிய அளவிலான நார்ச்சத்து அடங்கியுள்ளது.

தயிர் 
 
 பெருங்குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சீரான முறையில் நற்பதமான தயிரை உட்கொள்வது ஒரு சிறந்த வழியாகும். தயிர் என்பது ப்ரோபயோடிக் உணவு என்பதால் நல்ல பாக்டீரியாவை குடலுக்குள் அனுப்பி வைக்கும். இதனால் செரிமானம் மேம்படும். மேலும் குடல் அழற்சி நோய்களை எதிர்த்து போராடவும் உதவிடும். கூடுதலாக, இதில் போதிய அளவிலான கால்சியம் உள்ளதால், பெருங்குடல் உட்பூச்சை சுற்றிய அணுக்களின் வளர்ச்சியை தடுக்கும். குடலுக்கு நண்பனாக விளங்கும் தயிர் அஜீரணம், வாய்வு, மலங்கழித்தல் போன்ற பல வயிற்று பிரச்சனைகளையும் தீர்க்கும். தயிரை அப்படியே உண்ணலாம் அல்லது ஆப்பிள், எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும் பெர்ரி போன்ற பழங்களுடன் சேர்த்தும் உண்ணலாம்.

  

ஆளி விதை 
 
ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இயற்கையான நார்ச்சத்துக்கள் வளமையாக உள்ளது. அதனால் ஆளி விதையை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடலை சுத்தப்படுத்த அதுவும் ஒரு சிறந்த வழியாக விளங்கும். தண்ணீரை உறிஞ்சி பெருங்குடலில் விரிவடையும் ஆளி விதை, பெருங்குடலை கடந்து செல்லும் நச்சுப் பொருட்கள் மற்றும் சளியை நீக்க பெரிதும் உதவிடும். மேலும் புற்றுநோய், இதய நோய் மற்றும் சர்க்கரை நோயை தடுக்கவும் ஆளி விதை உதவும். ஆளி விதையை தானியங்கள், தயிர், பழங்கள் மற்றும் இதர ஆரோக்கியமான உணவுகளோடு சேர்த்து உண்ணலாம். துரித பலனை பெறுவதற்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆளி விதையை கலந்து, காலை உணவை உண்ணுவதற்கு முன் மற்றும் இரவு தூங்க செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன் அதனை குடியுங்கள்.

  

உப்பு 
 
1. குடிக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் உப்பை கலந்து கொதிக்க வைக்கவும். 
2. இந்த பானத்தை வெதுவெதுப்பாக அல்லது குளிர வைத்து, காலையில் முதல் வேளையாக குடியுங்கள். 
3. சிறிது நிமிடங்கள் காத்திருந்த பிறகு, கீழே படுத்து கொண்டு, வயிற்றில் குடல் பகுதி பக்கமாக மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது மலங்கழித்தலை ஊக்கப்படுத்தும். மேலும் நச்சுப் பொருட்கள், குவிந்துள்ள மலம், சீரான மலம், ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்களை குடல் பாதையில் இருந்து நீக்க உதவும். இதனை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை வரை செய்யவும். இந்த பானம் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவதால், நாள் முழுவதும் அளவுக்கு அதிகமாக தண்ணீரையும் நற்பதமான பழச்சாறுகளை குடிப்பதும் அவசியமாகும். உங்களுக்கு இரத்த கொதிப்பு அல்லது இதய கோளாறு இருந்தால் இந்த சிகிச்சை முறையை தவிர்க்கவும்.

சோத்துக் கற்றாழை 
 
நச்சுத்தன்மையை அகற்றும் திறன் மற்றும் மலமிளக்கும் மருந்தாக செயல்படும் திறனுக்காக அறியப்படுகிறது சோத்துக் கற்றாழை. அதனால் பெருங்குடலை சுத்தப்படுத்தும் சிறந்த வழியாக இது கருதப்படுகிறது. கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணங்கள் பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தலைவலி, சரும தொற்றுக்கள், வயிற்றுப் போக்கு, வாய்வு வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற இதர உடல்நல பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கும். 1. ஒரு எலுமிச்சையை நற்பதமான கற்றாழை ஜெல்லில் பிழிந்து, அந்த கலவையை ப்ளெண்டரில் போட்டு நன்றாக அடித்து, மென்மையான ஜூஸை தயார் செய்யுங்கள். 2. இந்த ஜூஸை குளிர்சாதன பெட்டியில் 2-3 மணிநேரம் வரை வைத்திருக்கவும். 3. சில நாட்களுக்கு அதனை தினமும் பலமுறை குடியுங்கள்.

  

இஞ்சி
 
 வயிற்றுப் போக்கை குறைத்து, பெருங்குடல் செயல்பாட்டை ஊக்குவித்து, கழிவு மற்றும் தீமையான நச்சுப் பொருட்கள் இல்லாமல் பெருங்குடல் சுத்தமாக இருக்க உடனடியாக உதவிடும் பொருள் தான் இஞ்சி. செரிமான சாறுகள் சுரப்பதை ஊக்குவிப்பதன் மூலமாக செரிமானத்திற்கு இது உதவிடும். 
 
* பெருங்குடலை சுத்தப்படுத்த இஞ்சியை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் - நறுக்கிய அல்லது ஜூஸாக. 
 
* இல்லாவிட்டால், 1 டீஸ்பூன் இஞ்சி சாற்றை 1/4 கப் எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து, இரண்டு கப் தண்ணீரில் கலக்கவும். இது ஒரு சிறந்த தேர்வாக விளங்குகிறது. சுவைக்காக சிறிதளவில் தேனையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக பிரித்து, அதனை நாள் முழுவதும் பருகுங்கள். குறிப்பு: கர்ப்பிணி பெண்களுக்கு இஞ்சி பரிந்துரைக்கப்படுவதில்லை.

100 கிராம் காளானில் 35% புரதச் சத்து உள்ளது

காய்கறிகளின் ராஜாவாக காரட்டைக் குறிப்பிடுகிறார்கள. காய்கறிகளின் இராணியாக காளானைக் குறிப்பிடுகிறார்கள். 100 கிராம் காளானில் 35% புரதச் சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் இருக்கிறது. கொழுப்பும் இருக்கிறது. ஆனால் அவை கொலாஸ்டிரலை இரத்தக் குழாயில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். காளானில் கொழுப்புச்சத்து இல்லை.

எனவே, பயமின்றிக் காளானை நன்கு சாப்பிடலாம். புரதச்சத்தும் உடலுக்குச் தேவையான சக்தியைத் தந்துவிடும். கொலாஸ்டிரல் சேரும் அபாயமும் இல்லை.
இதனால்தான் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதயவியாதி, மலச்சிக்கல், வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி முதலியனவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.

குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணமாக வேண்டும். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியைத் தந்துவிடுகின்றன.

புரதச்சத்து அதிகமாய் இருப்பதால் இராணி என்று வழங்கப்படும் காளானின் இரும்புச்சத்தும், பலவிதமான வைட்டமின்களும் உள்ளன. அதனால் மருத்துவக் குணங்களும் மிக அதிகம். ஏ வைட்டமின் அதிகமாய் இருக்கிறது.

காளானின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத எட்டு வகை அமினோ அமிலங்கள் உள்ளன.

காலரா, அம்மை நோய், விஷக்காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாகக் காளான் சூப் நல்ல பலன் தரும்.

காளானில் உள்ள ஒரு விதமான பொருள் புற்றுநோய் வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையைப் பெற்றுள்ளதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.

வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியன குணமாகக் காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகச் சமைத்துச் சாப்பிடலாம். பிரியாணி செய்தால் காளான், முட்டைகோஸ் பச்சை பட்டாணி ஆகிய மூன்றையும் தவறாமல், சேர்க்க வேண்டும். இது சத்துணவு, உடல் ஆரோக்கியத்துக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.

உடல் நலனில் அக்கறை உள்ள அனைத்து வயதுக்காரர்களும் வாரத்திற்கு இரு நாள்களாவது தக்காளி சூப் போல் காளான் சூப் தயாரித்து அருந்துதல் நலம்.

மட்டன் பிரியர்கள் காளான் சாப்பிட்டால் உடலுக்குச் சக்தி கிடைக்கும். உடலில் கொலாஸ்டிரல் சேராது. இந்தக் காரணத்தால்தான் உலகம் முழுவதும் காளான் உணவு மிகவும் விரும்பிச் சாப்பிடப்படுகிறது.

ஆரஞ்சுப்பழத்தைவிட, 4 மடங்கும், ஆப்பிள் பழத்தைவிட 12 மடங்கும், முட்டைக் கோஸைவிட இரு மடங்கும், புரதச்சத்தும், மருத்துவக் குணங்களும் நிரம்பியது, காளான்.


=================================================

சிப்பிக் காளான் வளர்ப்பு
பருவம் மற்றும் இரகங்கள்
· வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம்
· காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.
· வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை
காளான் குடில்
· 16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை மேயப்பட்ட குடில் போதுமானதாகும். குடிலை, வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்கவும்.
· வித்து பரவும் அறை :25-300சி வெப்பநிலை, நல்ல காற்றோட்டம், இருட்டு இல்லாமல் இருக்க வேண்டும்.
· வளர்ப்பு அறை :23-250சி வெப்பம், 75-80% ஈரப்பதம், மிதமான வெளிச்சம், நல்ல காற்றோட்டம் தேவை.


==============================================================

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.

இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். மேலும் காளானில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

BODY HEAT REDUCE === உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி


 ( பிரச்சினை உள்ள ஆண்களுக்கு குழந்தை வரம் உண்டாக )

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்

தேவையான பொருள்கள் :

1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

செய்முறை:

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

VOTER ID அடையாளச் சான்றுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்று தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை.


தேர்தலில் ஓட்டு போடுவதற்கு அவசியமான சான்றுகளில் ஒன்று. தமிழகத்தில் 1.1.2014 அன்று சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக தற்போதைய வாக்காளர் பட்டியல் 1.10.2013 அன்று வெளியிடப்படும். அதன்பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். அதனால், வாக்காளர் அடையாள அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு எங்கே / எப்படி விண்ணப்பிப்பது?

மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், ஆணையர் அலுவலகம், மண்டல அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம்.
மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (வாக்காளர் பதிவு அலுவலர்), வட்டாட்சியர் அலுவலகம் (துணை வாக்காளர் பதிவு அலுவலர் ) ஆகிய இடங்களில் விண்ணப்பத்தைப் பெற்றுச் சமர்ப்பிக்கலாம்.

உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரத்தை http://elections.tn.gov.in/EPIC_CENTRE_ADDRESS1.pdf இத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்

ஜனவரி 01, 2014 அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடையுமெனில், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் இப்போது விண்ணப்பிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் – 6 ஐ பயன்படுத்தவேண்டும். படிவம்- 6 டன், ஒரு வண்ணப் புகைப்படம் அல்லது கருப்பு வெள்ளை புகைப்படம் இணைக்கவேண்டும்.

பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்

வேறு தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், அல்லது நீக்க வேண்டிய பெயர் ஏதேனும் இருந்தால் இதற்காக, படிவம்-7 – ஐ பயன்படுத்தி தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.

பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம்

உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா – பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தவறான பதிவின் திருத்தத்திற்க்கு படிவம்-8 –ஐ பயன்படுத்துங்கள். அடையாளச் சான்றாக பிறப்பு சான்றிதழின் நகலை சமர்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்கான விண்ணப்பம்

வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டைப் பெற தகுதிகள்:

பதினெட்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டியது அவசியம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 01.01.2014 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ஆம் தேதி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டைப் பெற தேவையான ஆவணங்கள்:

வாக்காளர் அடையாள அட்டை பெற அடையாளச் சான்று, பிறப்புச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆகியவை அவசியம்.
1. முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர், தொலைபேசி, மின்சாரம், எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சான்றாக இணைக்க வேண்டும்.
2. பிறப்புச் சான்றாக மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.
3. அடையாளச் சான்றாக புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக் கொள்ளப்படும்.
4. 4. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

http://eci-citizenservices.nic.in/default.aspx

இந்த இணையதள முகவரிக்குச் சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரியைக் கொடுக்கவும். உங்களுடைய கைபேசிக்கு “verification code” என்ற குறுஞ்செய்தி வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கைப் படிவம் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய செல்பேசிக்கு confirmation செய்தி வரும். பின்னர் “online application” என்பதை கிளிக் செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

http://www.elections.tn.gov.in/eregistration/

 இத்தளத்திலும் உங்களுக்குத் தேவையான விண்ணப்பத்தினைத் தேர்வு செய்து விவரங்களைக் கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பத்து இலக்க எண் தரப்படும். உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பின்னர் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

உங்கள் விண்ணப்பத்தின் நிலையை http://elections.tn.gov.in/apptrack/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

http://www.elections.tn.gov.in/contacts/

இத்தளத்திற்கு சென்று உங்கள் பகுதி அதிகாரியின் தொடர்புஎண்ணைத் தெரிந்துகொள்ளலாம்.
ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் http://www.elections.tn.gov.in/eroll/ இத்தளத்திற்கு சென்று தமது விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலதிக விவரங்களுக்கு: http://www.elections.tn.gov.in/ இத்தளத்திற்கு செல்லவும்.

- இவள் பாரதி
நன்றி – புதிய தலைமுறை

Wednesday, October 29, 2014

SOLAR WATER PUMP

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!-----இந்த செய்தியை அதிக அளவில் பகிர்ந்து விவசாயிகளுக்கு தெரிய படுத்துங்கள் நண்பர்களே!!!
சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.
தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.
கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in
http://www.aed.tn.gov.in/SS_Solar_pumps.htm
http://www.aed.tn.gov.in

EYE TREATMENT கணினியைப் பார்க்கும் கண்களுக்கு



எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

கண்களை பாதுகாக்க:

1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

7. முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.

8. பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

9. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

10. அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

11. மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

12. புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன.

13. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

14. பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

15. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

16. அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

17. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது.

18. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

SOLAR PUMP சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்!!!

சூரிய மின்சக்தி துறையில் ரூ. 5,800 கோடி முதலீடு
சூரிய மின்சக்தி துறையை ஊக்கப்படுத்தும் விதமாக 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5,800 கோடி மதிப்பிலான சூரிய மின் உற்பத்தி திட்டங்களில் மத்திய அரசு உள்ளதால் இது இத்துறைக்கு ஊக்கமளிப்பதாய் அமையும். மேலும் 2015 பட்ஜெட்டில் சூரிய மின் உற்பத்திக்கான ஒதுக்கீடு இருக்கலாம் என இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய மின் தொகுப்புடன் (கிரிட்) இணைந்த 1,000 மெகாவாட் சூரிய மின்னாற்றல் நிலையத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன. இந்தத் திட்டத்துக்கு ஆகும் செலவில் சாத்தியக்கூறு பற்றாக்குறை நிதியாக (விஜிஎப்) ரூ. 1,000 கோடியை மூன்று ஆண்டுகளில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
என்டிபிசி, என்ஹெச்பிசி, ஐஆர்இடிஏ, சிஐஎல் மற்றும் இந்திய ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் இத்திட்டத்துக்கு ஒப்புக் கொண்டு சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்க முன் வந்துள்ளன. இதுதவிர, மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் இந்த திட்டத்தின் கீழ் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. 300 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி ஆலைகளை 2019 க்குள் அமைக்க பாதுகாப்பு அமைச்சகமும் திட்ட
மிட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்கள் மற்றும் வடிவமைப்பாக இருக்கும். இதன் மூலம் சூரிய மின் னாற்றல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 25 சூரிய மின் உற்பத்தி பூங்காக்களை நாடு முழுவதும் அமைப்பதற்கான திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இதன் மூலம் 20,000 மெகா வாட் உற்பத்தி எட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலீடு 4,050 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், உத்திரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஒடிசா மற்றும் மேகாலயா மாநிலங்களில் இந்த சோலார் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்து பேசிய சன்எடிசன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவு தலைவரும், இந்திய பிரிவின் இயக்குநருமான பசுபதி கோபாலன் ‘ 2015 ஆம் ஆண்டு சோலார் மின்சக்தி துறைக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் ஆண்டாக இருக்கும் என்றார். மேலும், கடந்த ஐந்து வருடங்களில் சோலார் மின் உற்பத்தி துறை குறித்த புரிதல் உருவாகியுள்ளது.
எனவே சோலார் மின் உற்பத்தி என்பது புதிய தொழில்நுட்பம் அல்ல என்றார். சோலார் மின்சாரம் என்பது வித்தியாசமானது அல்ல, நம்மிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு என்றார். விவசாயத்துக்கும் பயன்படாத நிலங்களைத்தான் சோலார் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளா
====================================================================
சென்னை,

மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. இதற்காக ஆன்–லைனில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சூரிய மேற்கூரை மின் அமைப்பு
தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார்.
அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் ‘சோலார் பேனல்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:–

ரூ.20 ஆயிரம் மாநில அரசு மானியம்
சூரிய மேற்கூரை ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் மின்கட்டமைப்புடன் கூடிய சூரிய மேற்கூரை அமைப்புகளை நிறுவும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. ‘சோலார் பேனல்’ அமைக்கும் முறையில் 5 ஏக்கர் நிலத்தில் மெகாவாட் கணக்கில் மின்சாரம் உற்பத்தி செய்வது மற்றும் வீட்டு கட்டிடங்களுக்கு 1 கிலோ வாட் முதல் 100 கிலோ வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வது ஆகிய 2 முறைகளில் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. வீடுகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. மாறாக ஏக்கர் கணக்கில் அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் ‘சோலார் பேனல்’ அமைக்க ஆகும் மொத்த செலவில் ரூ.47 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வீட்டு உரிமையாளர்கள் செலவிட வேண்டிவரும். அதற்கு மேல் ஆகும் தொகைக்கு மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்குகிறது.
மீதம் உள்ள தொகைக்கு மத்திய அரசிடமிருந்து 30 சதவீத மானியம் பெற்றுத்தர தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவர் தனது வீட்டுக்கு ‘சோலார் பேனல்’ அமைத்து அதன்மூலம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்–லைனிலேயே விண்ணப்பிக்கலாம். ஒரு வாரத்தில் விண்ணப்பங்கள் பரிசீலித்து அனுப்பப்படுகிறது.

ஆன்–லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் www.teda.in இ–பார்ம்ஸை ‘கிளிக்’ செய்ய வேண்டும். அதில் ‘டொமஸ்டிக் கிளிக்’ செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்–லைனிலேயே அனுப்பப்படும்.
இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள 17 கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும்.

தினமும் 4 யூனிட் மின்சாரம்

ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் அமைக்க நூறு சதுர அடி இடமே போதுமானது. இதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தை கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும். ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்தபிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும்

முறைகேட்டை தடுக்க ஆன்–லைனில் விண்ணப்பம்

வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு மின்கட்டணம் மூலம் கணிசமான பணம் மிச்சமாகும். முறைகேட்டை தடுப்பதற்காகவே ஆன்–லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்துவிட்டால் மொட்டை மாடியை வேறு பயன்பாட்டிற்கு (துணி காயப்போடுதல், அப்பளம் காய வைத்தல்) பயன்படுத்துவது சிரமம். சூரிய சக்தி மின்சாரம் குறித்து போதிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

கோவையை அடுத்து சென்னை

மத்திய அரசு கடந்த 2010–ம் ஆண்டு நாடு முழுவதும் 60 சூரிய மின்சார உற்பத்தி நகரங்களை அமைக்க முடிவு செய்தது. இதில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியை தேர்வு செய்தது. இதற்காக ரூ.50 லட்சம் வரை நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் சென்னை மாநகரையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத்தை சேமிப்பதற்காக வேலூர், திருநெல்வேலி, ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டுக்கு 10 ஆயிரம் சி.எப்.எல். மற்றும் எல்.ஈ.டி. பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நடப்பாண்டு அனைத்து மாவட்டங்களிலும் 30 ஆயிரம் எல்.ஈ.டி. பல்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறியியல் பாடத்திலும் சோலார் பேனல் குறித்து சேர்ப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

=======================================================================
இந்த செய்தியை அதிக அளவில் பகிர்ந்து விவசாயிகளுக்கு தெரிய படுத்துங்கள் நண்பர்களே!!!

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.
ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.

தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் 959 777 1037 என்ற என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உரிய விவரம் கிடைக்கும்!


==================================================================

நண்பரின் பதிவு!


-------------------------------------------------
மறைக்கப்படும்..மர்மங்கள்...(1)
------------------------------------------------
வணக்கம்.. நண்பா்களே... என் வாழ்க்கையின் பாதி நாட்கள் சுற்றுப் பயணங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.. சிறு வயது முதல் தனிப் பயணங்கள்தான் பெரும்பாலும்.. தனிமைதான் சிந்திப்பதற்கும்.. சுதந்திரத்திற்கும்.. ஏதுவாக அமைகிறது.. மேலும் பலவிசயங்களை முழுமையாக புரிந்து கொள்வதற்க்கும் வாய்பபாகிறது.. அதுவே பழகியும்விட்டது... நமது நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும்.. பதினைந்துக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் பல வருடங்களாக சென்று.. பார்த்து.. தங்கி..பழகி...பயிற்சி எடுத்து.. கற்றுக் கொண்டதையும்.அதில் புரிந்து கொண்டதையும்.. அதனால் ஏற்பட்ட அனுபவங்களிலும் .. பல முரண்பாடான விசயங்கள் மனதை நெருடுகிறது.. நம் பேச்சு வழக்கில் கூறுவோமே..“ சொல்வது ஒன்று.. செய்வது ஒன்று.. ஆனால் நடப்பது.. வேறு..“ என்பது போல அனைவருக்கும் உபயோகமான சில விசயங்களை மட்டும் இலை மறை ..காய் மறையாக.. அந்த மறைக்கப்படும்.. மர்மங்களை .. உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ளவே.. இந்த பதிவு... நன்றி.. நண்பா்களே.. தொடர்ந்து பேசுவோம்.. சென்ற வருடம் ஜனவரி கடைசி வாரம்.. மூன்று நாடுகளுக்கு பத்து நாட்கள் சுற்றுப் பயணம்.. என் பெரிய மகளும்.. சில நண்பா்களும்..உடன்.. இங்கே வெய்யில் சுள்ளென்று.. அடிக்கிறது.. துபாயில் குளிர் சுருக்கென குத்துகிறது....பயணத்தின் இடையில் ஒரு நாள்.. என்னுடைய துபாய் கிளை அலுவலகத்தின் (என்னுடைய டிராவல் ஏஜென்சிக்கும் அந்தந்த நாடுகளில் உள்ள டிராவல் கம்பெனிகளுக்குமான டை-அப்..) அவா்களுடைய சொந்த உபயோகத்திற்கான வேனை அந்த கம்பெனி மேலாளரே எடுத்து வந்தார்.. (அவா் சென்னையைச் சோ்ந்த தமிழா்.. எனக்கு மிகவும் நெருக்கமான நண்பரும்கூட..)... இன்று அபுதாபி சென்று வரலாம் என கூறி அவரே வண்டியைச் செலுத்தினார்.. எனது நண்பா்களை விளையாட்டு தீம் பார்க்கில் இறக்கிவிட்டு .. நானும் மகளும்.. ஒரு நண்பரும் அருகில் உள்ள கிராமப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று சொன்னதும் நண்பா் அழைத்துச் சென்றார்.. கண்ணுக்கெட்டிய துாரம் மணல்திட்டுக்கள்.. ஆனால் வழி நெடுக.. பச்சை பசேலென்று பேரிச்சை மற்றும் வேறு மரங்களும்..செடிகளும்.. புல்தரைகளுமாக.. காட்சி அளித்தது.... நண்பா்களே கொழு கொழுவென வேப்பமரங்களை பார்க்க வேண்டுமெனில் அபுதாகிக்கு செல்லுங்கள்.. அப்படி பசுமையாய் வறண்ட பாலைவனத்தில் சொட்டு நீா் பாசனத்தில் வளா்த்து வருகிறார்கள்... இங்கு நாம்....! ஒரு பெரிய வேப்பமரத்தடியில் நாற்காலி போடப்பட்டு நான்கைந்து நபா்கள் அமா்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.. அவா்களைப் பார்த்ததும் நண்பா் வண்டியை நிறுத்தி இறங்கி வணக்கம் தெரிவித்தார்.. அங்கிருந்தவா் நண்பரை பெயா் சொல்லி அழைத்துவிட்டு எங்களையும் வரவேற்றார்.. மரியாதை நிமித்தம் வணக்கம் சொல்லி அமா்ந்தோம்.. அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியதும் பேச்சுக்கள் தொடா்ந்தன.. நிறைய விசங்களை தெளிவாக அறிந்து வைத்திருந்தார்.. விவசாயம் பற்றிய அறிவும் ஆா்வமும் அவரிடம் அதிகம் காணப்பட்டது..என்னைப் பற்றிய விசாரிப்புகளுக்கு இடையில் சூடாக பாதாம் பிஸ்தா போட்ட ஒட்டகப் பால் கொடுத்தார்கள்.. இந்தியாவின் மின்தடங்கல் பிரச்சனை பற்றி பேச்சு எழுந்த போது அவா்கள் நாட்டின் மின்சாரப் பிரச்சனை பற்றி வெகுவாக மிகவும் கவலைப்பட்டார்... எனக்கு ஆச்சரியம்..! நாம்தான் அழுகிறோம் என்றால் அழுகுவண்ணான் குருவியும் எதற்கு சோ்ந்து அழுகிறது..? என்ற சந்தேகத்தில் பார்த்ததும்.. அதை புரிந்து கொண்ட அவா் அருமையான விளக்கம் அளித்தார்... அவா்கள் நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோல் 25 சதவிகிதம் மின்சாரம் எடுப்பதற்க்கே செலவாகி விடுகிறதாம்..இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுவதை புள்ளி விபரமாக எடுத்துச் சொன்னார்.. இன்னும் 50 வருடங்களில் பெட்ரோலிய வளம் தீர்ந்தபின்னா் அவா்களும் சந்ததியினரும் எந்த நாட்டுக்கு செல்வது என வினவியபோது.. ஙே..என விழிக்கத்தான் முடிந்தது.. மேலும் தொடா்ந்த அவா் அதனால்தான் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னரே சூரியசக்தி மின் பலகைகளை முழுவீச்சில் பொருத்த ஆரம்பித்துவிட்டோம் இன்னும் 5 வருடத்திற்க்குள் முழுமையாக மின்உற்பத்தி சூரியசக்தியில்தான்.. என்றபோது..பிரமிப்பாக இருந்தது.. நம்மவா்களை நினைத்துக் கொண்டேன்.. இரண்டு வார அவகாசத்தில் இரண்டு நிமிட நேரத்தில் கட்டிமுடிக்க வேண்டிய கரண்டு பில்லை கடைசி தேதியில் கால்கடுக்க இரண்டு மணிநேரம் வரிசையில் நின்று கட்டுவதுதானே நம் பழக்கம்.. அவ்வளவு முன் யோசனை... ஆனால் 50 வருடத்திற்கு பின் வரும் சந்ததியினருக்காக இன்னும் ஐந்து வருடத்திற்க்குள் மாற்று ஏற்பாட்டை வேகமாக செய்து முடிக்கும் அவா்களுடைய அவசரம்.. அவா்களுடைய பொறுப்பையும் தீர்க்கதரிசனத்தையும் உணா்த்தியது.. மலைத்துப் போனேன்... ஒருவழியாக புறப்படும் நேரம் ...அவரைப்பாா்த்து.. நீங்கள் என்ன தொழில் செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.. என நான் கேட்டபோது.. எனது நண்பா் என் கரங்களைப் பிடித்து ஏதோ சொல்ல வந்தார்.. அதற்க்குள் அவா் என் நண்பரிடம் சைகை காண்பித்துவிட்டு வாருங்கள் சொல்கிறேன் ..என்று அருகில் உள்ள பேரீச்சை தோப்பிற்க்கு அருகே சென்றோம் ..அங்கு நன்கு பழுத்த பழங்களை ஒரு பெட்டியில் போட்டு எங்களுக்கு கொடுத்துவிட்டு ..அவா் துாரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை சுட்டிக்காட்டினார்... பல ஏக்கா் கணக்கில் பரந்துவிரிந்து கிடக்கும் மிகப் பிரமாணடமான மாடமாளிகை அது.. சுற்றிலும் பல்வேறு வகையான மரங்கள்.. சாலை ஓரங்களில் மஞசள் வண்ண சாமந்திப் பூச்செடிகள் கண்ணுக்கு அவ்வளவு ரம்மியமாய் காட்சி அளித்தது.. மனது பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறந்தது.. எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான் நீடித்தது.. அவா் தொடா்ந்தார். “அந்த மாளிகையில் தான் நான் வசித்து வருகிறேன் .எனது தந்தையார் அபுதாபியின் மன்னராக உள்ளார்கள்”.. என்று சொன்னதுதான் தாமதம்.. அதிர்ச்சியில் சிலையாய் உறைந்து போனோம் புன்கையுடன் விடை கொடுத்தார்.. அதிலிருந்து மீள வெகு நேரம் ஆயிற்று..ஒரு நாட்டின் இளவரசரா.. இவ்வளவு சகஜமாக.. எளிமையாய்.. அதுவும் சாலை ஓரத்தில் நம்பமுடியவில்லை..! நம்ம ஊா் வட்டச் செயளாலா் வண்டு முருகனின் ஞாபகமும் மனதிற்குள் வந்து போனது.. பின்னா் பிப்ரவரி மாதம் முதல்வாரம் ஊா் வந்து சோ்ந்தபோதும்.. ஆச்சரியம் விலகவில்லை.. நண்பா்களே.. அதன் பிறகு தமிழ் நாட்டில் மின்வெட்டு மிகக் கடுமையாக இருந்தது.. மழையும் சுத்தமாக இல்லை.. நிலத்தடி நீா்மட்டம் குறைந்து கொண்டே வந்தது .. இருக்கும் கொஞ்ச நீரையாவது பயன்படுத்தி வாடும் பயிரை காப்பாற்ற விவசாயி போராடும் போது மின்சாரம் இல்லை.. வாழ்வாதாரமே பாதிப்படைந்தது.. மீண்டும் உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலை வந்தால் தானியங்களை இறக்குமதி செய்ய பல நாடுகள் கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டிருந்தன.. என்ன செய்வது.. ஏதாவது சிறு துரும்பையாவது கிள்ளிப் போடலாமே என்ற சிந்தனையில் சோலார் பலகை ஞாபகத்தில் வந்தது.. இதன் விலை இந்தியாவில் மிகமிக குறைவாக சொன்னார்கள்.. அரை ஏக்கா் நிலம் உள்ள விவசாயிக்கு கூட கட்டுப்படியாகும் விலைதான் நண்பா்களே.. ஆனை விலை குதிரை விலை கூட இல்லை அஞ்சு ஏக்கா் நிலத்தை விற்றால்கூட 10 கே வி வாங்க முடியாது.. ராக்கெட் விலை.. இதில் மானியம் வேறு 30 சதவீதம்.. ஒரு மண்ணும் புரியவில்லை.. நிறைய இடங்களில் பேசிப் பார்த்தேன் ...ஒன்றும் மசியவில்லை.. அனல் மின்சாரம்.. அணுமின்சாரம் தயாரிப்பதால் சுற்றுச் சூழல் கேடு அதனால் மழை குறைவு.. ஒவ்வொரு தோட்டத்திலும் ஒரு சூரிய விசைப் பலகை மாட்டிவிட்டால் விவசாயிக்கு மின்சாரப் பிரச்சனை தீா்ந்துவிடும்.. அது போல சிறு தொழில் செய்வோர்களுக்கு பெரும் சுமையாக இருப்பது ஷாக் அடிக்கும் மின்சார பில்தான்.. எனவே அவா்களுக்கும் இது ஒரு தீா்வாக இருக்கும் ..என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சோலார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சென்று பார்த்தேன்.. அனைவரும் முக்கியமான பாகம் ஒன்றை மட்டும் இறக்குமதி செய்து இங்கு ஒட்டு வேலை மட்டும் செய்து வந்தார்கள்.. அது என்ன பொருள் என்றால் மிக முக்கியமான நீல நிறத்தில் சதுரம் சதுரமாக இருக்கும் சோலார் செல்.. இது தான் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றி கொடுப்பது .. இது தவிர மீதி இருப்பதெல்லாம்.. பொள்ளாச்சி சந்தையில் கிடைக்கும் பொருட்கள் தான் அது ரேடியோ ஸ்பீக்கருக்கு போடும் ஒயா் பாத்ரும் வெண்டிலேட்டருக்கு போடும் கண்ணாடி ..பனியன் பெட்டிக்கு ஒட்டுகிற பிளாஸ்டிக் டேப் ..குளியல் அறை கதவுக்குப் போடும் அதே அலுமினிய பீடிங்.. சைக்கிளுக்கு மாட்டும் நெட்டு போல்ட்.. மர மேசைக்கு போடும் ஸ்குரு.. கொஞ்கம் பீஸ் கம்பி.. போக டி வி க்கு கனெக்சன் கொடுக்கும் கேபிள் ஒயா்.. அவ்வளவு தான் நண்பா்களே.. வட இந்தியாவில் ஒரு இடத்தில் சோலார் செல் தயாரிக்கிறார்கள் என்று அங்கே சென்றால் எவ்வளவு போராடிப் பார்த்தும் உள்ளே செல்ல அனுமதி இல்லை.. இதற்கு தலைநகரத்தில் அனுமதி வாங்கிச் சென்றும் கூட.. சாி இதை விடக்கூடாது.. எங்காவது வெளிநாட்டிற்கு சென்று இதன் தயாரிப்பு முறைகளை பயிற்சி பெற்று கற்றுக் கொண்டு வந்து இதை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்து இதன் ரகசியத்தை ஊருக்கு நாலு பேருக்கு கட்டணமில்லாமல் சொல்லிக் கொடுத்து விட்டால் ஒவ்வொரு ஊரிலும் தேவைப் படுகிறவா்கள் குடிசைத் தொழில் மாதிரி செய்து கொள்ளட்டும் .. அந்தந்த கிராமங்கள் சுயசார்பு அடையட்டும் என புறப்பட்டேன்.. ஒரு மாத காலம் 5 நாடுகள் (மலேசியா,சிங்கப்பூா், தாய்லாந்து, சைனா, ஹாங்காங்) மொத்தம் 20 நபா்கள் நான்கு குழுக்களாக.. நண்பா்களுடன்..நான் என் மனைவி மட்டும் தனியாக மற்றவா்கள் நான்கு குழுக்கள் ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுலா முடித்துவிட்டு அவா்களை ஊருக்கு அனுப்பிவிட்டு நண்பா்கள் சிலா் சைனாவில் வேலைகள் முடித்துவிட்டு புறப்பட ஒரு நண்பரும்..நானும் என் மனைவி மட்டும் பயிற்சிக்காக சோலார் தயாரிப்பு நிறுவத்துக்கு சென்றோம்.. என்னுடைய சுற்றுலா நிறுவனத்தின் சைனா டை அப் கிளை அலுவலகத்தில் பணிபுரியும் மொழி பெயா்ப்பாளரையும் உடன் அழைத்துச் கென்றிருந்தேன்.. நண்பா்களே.. எங்க ஊரில் ஒரு பழமொழி சொல்லுவாங்க.. “ பசி பசின்னு பூசாரி கோலுயிலுக்கு போனாராமாம்.“ “வரம் கொடுக்கற சாமி ஈச்சம் பாய கட்டிட்டு எதிர்த்தாப்புல வந்துச்சாம்“.. அது போல அங்கே நடந்த சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானவை... எதற்காக இதை சொன்னேன் என்று அடுத்த பதிவில் கூறுகிறேன்.. இப்போது முக்கியமான விசயத்திற்கு வருவோம்.. இதில் “மறைக்கப்படும் மா்மம்“ என்னவென்றால்.. எத்தனை போ் வந்து ஆயிரம் கதை சொன்னாலும்.. எனக்கு என்ன தெரியும் என்று கிண்டல் செய்தாலும்.. சூரிய விசைப் பலகை விற்பனை விலையில் இருந்து.. ஐந்தில் ஒரு பாகம்தான் அதன் தயாரிப்பு அடக்க விலை... இன்னும் கொஞ்சம் எளிதில் புரியும்படி சொல்வது என்றால்.. 5 லட்சம் விலை கொண்ட அந்த மொத்த செட்டின் அடக்கவிலை 1 லட்சம் மட்டும் தான்..அது எந்த நாட்டுத் தயாரிப்பாக இருந்தாலும்.. இதில் 30 சதவீதம் 50 சதவீதம் 70 சதவீதம் என்று விவசாயிகளுக்கு எத்தனை மானியம் கொடுக்கிறார்கள்.. எததனை பேருக்கு கிடைக்கிறது எனக்கு இந்திய கணக்கு ஒன்றும் புரியவில்லை.. இன்னும் நாமே சொந்தமாக சோலார் செல் தயாரிக்கும் போது 5 லட்சம் விலை கொண்டது வெறும் 50 ஆயிரத்திற்கு தயாரிக்க முடியும்.. அதற்கு ஓரிரு வருடம் ஆகும்... ஏனென்றால் அந்த தயாரிப்பு தொழில் நுட்பத்தை முதலில் இங்கு கொண்டு வரவேண்டும்.. நண்பா்களே.. அதை விட பல முக்கியமான சில பணிகள் சில ஆராய்ச்சிகள் எனக்கு கொடுக்கப் பட்டு இருப்பதால் சில காலம் கழித்து சோலார் பக்கம் செல்வோம்.. எங்கள் குழுவினரின் பணிகள் ஒவ்வொன்றாய் முடியும் போது அது பற்றிய செய்தி உங்களுக்கு வந்து சேரும்...

 “மறைக்கப்படும் மா்மங்கள்“ தொடரும்... நன்றி... நண்பா்களே... வெ.சந்துரு..

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...

1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல்.

{இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.}

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

{இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.}

3. குப்பைகளை கொட்டுவது :

{நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.}

4. வரிசையை முந்தியடித்தல் :

{இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.}

5. விட்டு கொடுக்காத பழக்கம் :

{அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.}

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :

நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....

இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான்.

இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

{முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.}

8. ஜாதி வெறி - மத வெறி – இன வெறி:

நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!!

குறிப்பு:- இதை பதிவதன் நோக்கம், நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க்காக அல்ல....

தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்...

என் புருஷன் அடிக்கிறார்... காப்பாத்துங்க...


பெண்களுக்கு உதவும் எண்கள்
04423452365

1091 இந்த எண், தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண். திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம். எங்கோ ஓர் இடத்தில் தனித்துவிடப்பட்டு விட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த நம்பருக்கு தொடர்புகொள்ளலாம்!

இந்த எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-23452365 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! பெண் குழந்தைகள் என்றால் 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதான பெண்கள் என்றால் 1253-ஐ தொடர்புகொள்ளலாம்.
04428551155

குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்திலோ, கல்லூரியிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044-28551155 என்கிற தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் எண்ணுக்கும், 044-25264568 என்ற எண்ணுக்கும் அழைத்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளுவதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வும் காணலாம்.
04426530504, 26530599

மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க 044 - 26530504, 044-26530599- என்கிற எண்களைத் தொடர்புகொள்ளலாம். இது, சென்னை முகப்பேரிலுள்ள பெண்களுக்கான விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் எண்! மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
04426184392, 9171313424

வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள் 044-26184392, 9171313424 என்கிற உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு
எண்ணைத் தொடர்புகொண்டு வாடகைத்தாய் என்றால் என்ன? அவர்களுக்கான உரிமைகள், விதிமுறைகள் என்ன என்பனவற்றை அறியலாம்.
04425353999, 90031 61710

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் புகார் தெரிவிக்க ரயில்வே போலீஸ் நம்பரான 044-25353999, 90031 61710, 99625 00500 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
95000 99100

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் போதும்,உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
04424749002, 04426744445

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் 044-24749002 மற்றும் 044-26744445 என்கிற எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
04428592828, 94454 64748

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால் மாநில நுகர்வோர் புகார்களுக்கான

டோல் ஃப்ரீ எண் 180011400,
94454 64748,
72999 98002,
72000 18001,
044- 28592828
ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.
93833 37639

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு 93833 37639 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

வீடு/வணிகம் மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்


· வீடு அல்லது வணிக மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம்-1-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம் மின்வாரிய பகுதி அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.
· விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்.
· தான் பொறுப்பேற்றுள்ள இருப்பிடத்துக்குச் சொந்தாக்காரராக இல்லாமல் மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர், படிவம்-5-இன் படி சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். அப்படிப்பட்ட சொந்தக்காரர் சம்மதக் கடிதம் தர மறுத்துவிட்டால,சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கானச் சான்றை நுகர்வோர் தரவேண்டும்.மேலும் படிவம்-6-இன்படியான காப்புறுதி பத்திரத்தின் வாயிலாக உரிமதாரருக்கு, பொறுப்பாளருக்கு மின்னிணைப்பு வழங்கலால் உருவாகும் தகராறுகளால் விளையும் இழப்புக்குக் காப்புறுதி தந்து,மேலும் இயல்பான காப்புவைப்புத் தொகையைப் போல இரட்டிப்பு மடங்குத் தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவும் உறுதியேற்க வேண்டும்.
· மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்,
· பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.
· விண்ணப்பித்தனை பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மின் இணைப்புக்கான விண்ணப்பத்தினை பெறப்பட்டவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வு செய்ய ஏதுவாக உள்ள தரைதளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை/மின்னளவி பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்து கொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.
· எல்லா அடுக்கு மாடி கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும் தரைதளத்தில்தான் மின்னளவி, மின்கட்டை போன்றவைகள் பொருத்துவதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.
· மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவுப்பு/கடிதம் அனுப்பப்படும்,
· மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்து கட்டணங்களும் பெறப்பட்ட பிறகே மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
· மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின்கம்பங்கள் நடுவதற்கு விட வேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
· தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து,அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்,
· மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின், உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.



PASSPORT பாஸ்போர்ட் என்பது என்ன?

 ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு (Passport) அவசியம். இது ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது. எனவே இடைத்தரகர்களை அணுகாமல் நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக மற்றும் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து அறிந்துகொள்வோம்.
பாஸ்போர்ட்டின் வகைகள்:
Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நோக்கத்திற்காக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் என நான்குவிதமான பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.
பாஸ்போர்ட் பெறுவதற்கான தகுதிகள்:
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வயதுவரம்பு இல்லை. சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) பாஸ்போர்ட் எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பாஸ்போர்ட் அளிக்கப்படும்.
கட்டண விவரம்:
பாஸ்போர்ட் பெறுவதில் ஆர்டினரி (Ordinary), தட்கல் (Tatkal) என்ற இரண்டு முறைகள் உள்ளன.
10 வருடத்திற்கான 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 1000 ரூ
10 வருடத்திற்கான 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 1500 ரூ
தொலைந்து போயிருந்தாலோ, டேமேஜ் ஆகியிருந்தாலோ 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 2500 ரூ
தொலைந்து போயிருந்தாலோ, டேமேஜ் ஆகியிருந்தாலோ 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் – 3000 ரூ
முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், கணவன்/மனைவி பெயர் சேர்த்தல் போன்றவற்றிற்கு – 1000ரூ
கட்டண விவரங்களை http://passport.gov.in/cpv/FeeStructure.htmஇத்தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
பாஸ்போர்ட் பெற எங்கே விண்ணப்பிப்பது?
புதியதாக நிறுவப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா Passport Seva Kendra (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். விண்ணப்பப்படிவத்தை இந்த தளத்திற்கு சென்றும் பதிவிறக்கிக் கொள்ள வேண்டும். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் நேரில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். சென்னையில் உள்ளவர்கள் ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அப்பாயின்மெண்ட் வாங்குவதற்கும் ஒரு நேரம் உள்ளது.http://passportindia.gov.in/AppOnlineProject/online/appointmentஇத்தளத்தில் நேரத்தை அறிந்து கொள்ளலாம்.
பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சிறு திருத்தங்கள் மேற்கொள்ள, பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2 ஐப் பயன்படுத்த வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட் பெற அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதி சான்று ஆகியன தேவை.
1. அடையாள மற்றும் இருப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இருப்பிடச் சான்றாக ஒருவருடத்திற்கு முன்னர் செலுத்திய மற்றும் கடைசியாக செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் போன்றவற்றின் நகல்களைக் கொடுக்கலாம். இவையெல்லாம் விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும். மேற்கூறியவற்றில் இரண்டு சான்றுகள் அவசியம் கொடுக்க வேண்டும்.
2. பிறந்த தேதிச் சான்றுக்குக் கீழ்கூறுவனவற்றில் ஏதேனும் ஒன்று: (அ) விண்ணப்பதாரர் 26.01.89 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்புச் சான்றிதழ். (ஆ) பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ் (இ) கெஜட்டடு (நோட்டரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வழங்கப்படும் சான்று.
வேறு சான்றிதழ்கள்:
1.
1. 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை எடுத்துச் செல்லவும்.
2. உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
3. பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கண்ட அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும்,
4. மேலும் திருமணச் சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
5. பழைய பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.
6. எட்டாம் வகுப்புக்குக் குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
பாஸ்போர்ட் தொலைந்து போனால்: பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் நிலையத்தில் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதனுடன் தொலைந்த பாஸ்போர்ட்டின் நகல் ஒன்றும் மற்றும் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இதற்கும் கொடுக்க வேண்டும்.
ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஆர்டினரி, தட்கல் என இரு முறைகளிலும் பெறப்படும் பாஸ்போர்ட்டுகள் பத்து ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும். பத்து ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னாலோ அல்லது பத்தாவது ஆண்டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
http://passportindia.gov.in/AppOnlineProject/pdf/
New_Online_Appointment_Booking_Process.pdf இத்தளத்திற்கு சென்று
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி அனுப்புவது என்ற விவரமும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
உங்கள் விண்ணப்பத்தின் நிலையறிய:http://passportindia.gov.in/AppOnlineProject/statusTracker/
trackStatusInpNew இத்தளத்திற்கு சென்று கேட்கும் விவரங்களைக் கொடுத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம். மேலதிக விவரங்களுக்கு:
• அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களைத் தொடர்பு கொள்வதற்கு http://passportindia.gov.in/AppOnlineProject/locatePSK/locatePFCInp இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் பகுதியை அல்லது ஊரை க்ளிக் செய்தால் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் தெரிந்துகொள்ளலாம்.
• பாஸ்போர்ட் சேவை மையத் தொலைபேசி எண்: 1800-258-1800
• மேலும் விவரங்களை அறிந்துகொள்ள http://passportindia.gov.inஇத்தளத்திற்க்குச் செல்லவும்.
இவள் பாரதி
நன்றி – புதிய தலைமுறை

MONEY பணம் என்னடா பணம் பணம்?



அமெரிக்காவின் டேனியல் சோலா, 12 வருடங்களாகப் பணத்தைத் தொடவே இல்லை என்றால்... நம்புவீர்களா?
51 வயது டேனியல் சோலா, டென்வார் நகரைச் சேர்ந்தவர். கடந்த 2000-ல் தன் கையில் இருந்த 30 டாலர் பணத்தை ஒரு போன் பாக்ஸில் வைத்துவிட்டு, மோப் உதக் என்கிற இடத்தில் இருக்கும் குகைகளில் குடியேறிவிட்டார். ஒரு சைக்கிள், நான்கைந்து உடைகள், இரண்டு தகர அடுப்புகள், கத்தி, கிடார், பாட்டில். இவ்வளவுதான் அவரது சொத்து. மீன் பிடித்து, பழங்களைப் பறித்து, இறந்துகிடக்கும் விலங்குகளை உண்டு வாழ்பவர், தற்செயலாகத் தன் வாழ்க்கையைப் பற்றி பிளாக்கில் எழுத, பணம் இல்லா மனிதன் என்கிற பெயரோடு பாப்புலர் ஆகிவிட்டார்.
டேனியலுக்குப் பணத்தின் மீது அப்படி என்ன கோபம் ? ஒரு ஃப்ளாஷ்பேக்...!!
இளம் வயதில் கிறிஸ்துவத்தில் ஈடுபாட்டோடு இருந்தவருக்கு, கல்லூரி வந்ததும் இணையத்தை மேயும் பழக்கம் வந்தது. பலான பக்கங்களைத் தேடாமல், புத்தர், ராமகிருஷ்ணர், காந்தி என்று தத்துவ மேதைகளின் போதனைகளைத் தேடித் தேடிப் படித்தார். அந்த எல்லாத் தத்துவங்களையும் ஒட்டுமொத்தமாக இந்த ஒரே வாழ்க்கையில் பரிசோதித்துப் பார்க்க விரும்பினார் டேனியல். ஒருகட்டத்தில், தனிமையில் இருப்பது, தத்துவமாகப் பேசுவது என்று வித்தியாசமாக வாழ ஆரம்பித்தார்.
டேனியலுக்கு அவ்வளவாக எதிலும் ஸ்பெஷல் திறமை இல்லை. அதனால், நிரந்தரமாக எந்தப் பணியிலும் நிற்க முடியவில்லை. பசி, வயிற்றைக் கிள்ளியது. கிடைத்த வேலையைச் செய்வது, அதில் கிடைக்கும் சம்பாத்தியத்தில் இன்னும் நான்கு புத்தகங்கள் வாங்கிப் படிப்பது, பின் வேலையை விட்டுவிடுவது என இருந்தார். ஆனால், அதுவும் டேனியலுக்குப் போரடித்தது. கொஞ்சம் பீர் அடித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு மேலே ஏறி டாப் கியரில் பள்ளத்தில் பாய்ந்தார். அதிர்ஷ்ட தேவதை அந்த நேரம் டேனியலின் பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். பாறை இடுக்குகளில் முட்டி கார் தொங்கியது. டேனியலுக்குப் போதை தெளிந்தது. பாதை புரிந்தது. சம்பாதித்துக் காசு சேர்த்துக்கொண்டு, நண்பனோடு சேர்ந்து நாடு நாடாகச் சுற்ற ஆரம்பித்தார். பொறுப்புகள், பண டென்ஷன் இந்த இரண்டும் இல்லாத வாழ்க்கையைத் தேடுவதுதான் அவரது ஐடியா. புத்த பிக்குகள் அவருக்குக் கை காட்டிய இடம்... இந்தியா!
போபால் பேரழிவோ, சுனாமி தாக்குதலோ எதையும் காமெடியாக எடுத்துக்கொள்ளும் நாடு அல்லவா... இந்தியாவில் டேனியலுக்குப் பதில் இருந்தது. திபெத் அகதிகளோடு தங்கி இருந்தவர், காடுகளில் வாழும் சாதுக்களைப் பற்றிக் கேள்விப்பட... எகிறிக் குதித்துவிட்டார். மாதாந்திர இலக்கு, பால் பாக்கி, அண்ணாச்சிக் கடை அக்கவுன்ட், பீர்விலை ஏற்றம் போன்ற இல்வாழ்க்கைப் பிரச்னைகள் இல்லாத சாதுக்களின் வாழ்க்கை முறை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. ஐந்து வருடங்களில் 'காயமே இது பொய் யடா... வெறும் காற்றடைத்த பையடா’ என்பதை இங்கிலீஷில் உணர்ந்து, பணம் இல்லாத வாழ்க்கைக்குத் தாவிவிட்டார்.
நாள் முழுக்க இரை தேடிப் பயணம்... இரவில் குகையில் கேம்ப் ஃபயரில் கிடார் ப்ளே... கை வலித்தால் புத்தக வாசிப்பு. இவ்வளவுதான் டேனியலின் ஒரு நாள். இப்படி ஓடிக்கொண்டு இருந்த டேனியலைப் பற்றி மார்க் சன்டீன் என்பவர் புத்தகம் எழுத, இப்போது பரபர பாப்புலராகிவிட்டார் பார்ட்டி. புத்தகம் பரபரப்பாக விற்பனை ஆகி... மார்க்குக்குப் பணம் கிடைத்தது தனிக் கதை.
டேனியலைச் சந்திக்கும் எல்லா நிருபர்களும் தவறாமல் கேட்கும் கேள்வி: ''எப்படிப் பணம் இல்லாமல் வாழ்கிறீர்கள்?''
டேனியலின் பதில்: ''காட்டுக்குள் கழுகு, குதிரை, பாம்பு, பாக்டீரியா எல்லாம் பணம் வைத்துக்கொண்டா வாழ்கிறது? அவற்றைப் போலவே நானும் வாழ்கிறேன்.''
டேனியலைப் பார்க்க பலர் வந்துபோக, அந்த இடமே டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது. 'நாம சொல்றதைக் கேட்கவும் நாலு பேர் இருக்காங்களே!’ என்று நினைத்தாரோ என்னவோ, ஒரு வலைப்பூவையும், ஓர் இணையதளத்தையும் ஆரம்பித்துவிட்டார் டேனியல். ஒரு பயணம் முடிந்ததும் அருகில் உள்ள பிரவுசிங் சென்டருக்குச் செல்வார். வாழ்க்கையைப் பற்றியும் பணத்தைப் பற்றியும் தத்துவக் குத்துக் கருத்துகள் எழுதுவார். ஓனரிடம் சென்று, ''நான் பணம் இல்லா மனிதன். பிரவுசிங் கட்டணத்துக்குப் பதிலாக, ஏதாவது வேலை பார்க்கட்டுமா'' என்பார். பெரும்பாலும் டேனியலை எல்லாருக்கும் தெரியும் என்பதால் விட்டுவிடுவார்கள். இல்லையென்றால், கார் துடைக்க வேண்டியிருக்கும். டேனியல் எதற்கும் அலட்டிக்கொள்வது இல்லை.
டேனியல் பிளாக்கின் முகப்பு வரிகள் என்ன தெரியுமா?
''நான் பணத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என்னைப் பின்பற்றுங்கள் அல்லது பணத்தோடு போராடுங்கள்."
___________________________________________________

இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் 12.36% சேவை வரி செலுத்த வேண்டுமா? சுற்றறிக்கை முழு விபரம்!

அக்டோபர் 14, 2014 அன்று Central Board of Excise and Customs என்ற மத்திய அரசு நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவோர் மத்தியில் இது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் - தங்களது பணத்தை வங்கிகள் மூலமோ, பிற பணம் மாற்றும் நிறுவனங்கள் மூலமோ இந்தியாவிற்கு அனுப்பும் போது, அதற்கு 12.36% சேவை வரி (SERVICE TAX) செலுத்த வேண்டுமோ என்ற கேள்வி - அந்த சுற்றறிக்கையை தொடர்ந்து எழுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பொதுவாக இந்தியாவிற்கு பணம் அனுப்ப - அவர்கள் வாழும் நாட்டில் உள்ள பணம் மாற்றும் நிறுவனத்தை அணுகுவார்கள். உதாரணமாக - துபையில் உள்ள இந்தியர்கள், இந்தியாவிற்கு 1000 திர்ஹம் அனுப்புகிறார்கள் என்றால், அங்குள்ள ஒரு நிறுவனம்/வங்கி மூலம், அதற்கான கட்டணம் (உதாரணம் 20 திர்ஹம்) செலுத்தி இந்தியாவிற்கு பணம் அனுப்புவார்கள்.

இந்தியாவில் அந்த பணத்தை - துபையில் உள்ள நிறுவனம் தொடர்பு வைத்துள்ள இந்திய நிறுவனம்/வங்கி மூலம் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவர் பெறுவார். துபையில் உள்ள நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட அந்த பணத்தை இந்தியாவில் வழங்க, இந்திய நிறுவனம்/வங்கி - சிறு கட்டணம் வசூலிக்கும். 

தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய நிறுவனம்/வங்கி பணத்தை இந்தியாவில் விநியோகம் செய்ய வசூல் செய்யும் கட்டணத்திற்குதான் (COMMISSION/FEE) சேவை வரி விதித்துள்ளது, அனுப்பப்பட்ட மொத்த பணத்திற்கு அல்ல.

உதாரணமாக இந்தியாவிற்கு 100 ரூபாய் அனுப்பப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதனை இந்தியாவில் வழங்க இந்திய நிறுவனம்/வங்கி 10 ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். இந்த சுற்றறிக்கை 10 ரூபாய்க்கு தான் 12.36% சேவை வரி விதிக்கிறது, 100 ரூபாய்க்கு அல்ல.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு - 2011ம் ஆண்டில் 64 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்) வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றறிக்கை முழுமையாக








குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள்

தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள்

அ. ஒருவரை கைது செய்ததற்கான காரணத்தை முடிந்தவரை விரைவாக அவருக்குப் புரியும் மொழியில் தெரிவிக்க வேண்டும். வழக்குரைஞரை அவர் விருப்பப்படி வைத்துக் கொள்ளவும் அவரின் சட்ட உதவியைப் பெறவும் உரிமை உடையவர்.
ஆ. கைது செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் கைது செய்யப்பட்ட உடன் 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள நீதித்துறை நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
இ. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவரை 3 மாத காலத்திற்கு அறிவுரைக் குழுமம் அமைத்து தடுப்புக் காவல் ஆணையை உறுதி செய்ய வேண்டும். எனவே அறிவுறைக்குழுமம் ஆணையில்லாமல் யாரையும் 3 மாதத்திற்கு மேல் தடுப்புக் காவலில் வைக்க முடியாது.
ஈ. தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டவரிடம் சிறை வழியாக எழுத்து மூலம் தனது முறையீட்டை முறையிட கைதி உரிமை படைத்தவர்.
உ. தடுப்புக் காவல் ஆணையை அறிவுரைக் குழுமம் உறுதிப்படுத்தினால் உயர் நீதிமன்றத்தை அணுகி தடுப்புக் காவலில் வைத்தது தவறு எனக் கூறி ஆட்கொணர் மனு தாக்கல் செய்ய கைதி உரிமை உடையவர்.

 நன்றி - கீற்று

சட்டம் சம்மந்தமான (டெக்னிக்கலான ) வார்த்தைகள்!
Will உயில் -- (விருப்ப ஆவணம்)
Testator -- உயில் எழுதியவர்
Executor -- உயில் அமல்படுத்துனர்
Codicil --இணைப்புத் தாள்கள்
Attested -- சரிபார்க்கப்பட்டது.
Probate -- நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி,
உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary / Legatee -- வாரிசு
Intestate -- உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate -- வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act -- இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act -- முஸ்லிம் தனிநபர் சட்டம்
Witness -- சாட்சி
thanks- hello advocate sir

RTI APPLICATION



ஆர்.டி.ஐ. விண்ணப்பம் எழுதுவது எப்படி ?
முகவரி என்ன ?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க சில விதிமுறைகள் உண்டு
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 (Right To Information Act 2005 - RTI) மூலம் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் அரசுத் துறை மற்றும் அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் தகவல் பெற முடியும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தனி நபர் எந்தத் தகவலையும் (விதிவிலக்குகளைத் தவிர) கேட்கலாம்.


ஆர்.டி.ஐ.யின் பயன்:
சுயமரியாதையை இழக்காமல், அலைந்து திரியாமல் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், லஞ்சம் தராமல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனக்கான மத்திய, மாநில அரசின் பயன்களைப் பெறவும், அரசின் திட்டங்களில் முறைகேடுகளைக் களையவும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்கவும் RTI சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.
விண்ணப்பம் எழுதும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
ஆர்.டி.ஐ. சட்டத்தில் விண்ணப்பம் செய்யும்போது பொதுத் தகவல் அலுவலர் உங்கள் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்யமுடியாதபடி விண்ணப்பம் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏன் எப்படி, எப்போது போன்று கேள்வி வடிவம், ஆலோசனை, கோரிக்கை மற்றும் புகார் வடிவில் இருத்தல் கூடாது. அப்படி இருந்தால் பொதுத் தகவல் அலுவலர் தகவல் தரலாம். தராமலும் இருக்கலாம். தகவல் தரவில்லை என்பதற்காக நீங்கள் எடுக்கும் சட்டபூர்வ மேல் நடவடிக்கைகள் எல்லாம் தோற்றுப் போகும் ஆபத்து உள்ளது.
விண்ணப்பிப்பதற்கு ஒரு வெள்ளைத்தாள் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் தேவையில்லை. எழுதும் நோட்டு பேப்பரிலேயே கூட விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தட்டச்சில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கையால் எழுதலாம். விண்ணப்பத்தைப் படித்து புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெளிவான எழுத்துக்களில் எழுத வேண்டும்.
ஒரு விண்ணப்பத்தில் எத்தனை தகவல்கள் வேண்டுமானாலும் கேட்கலாம். இருப்பினும் குறிப்பிட்ட அளவிலும் தொடர்புடைய தகவலாகவும் இருத்தல் நல்லது.
தகவலை சிறு கேள்விகள் மூலம் கேட்கலாம். நீண்ட தகவல்களை ஒரே விண்ணப்பத்தில் கேட்பதைத் தவிர்க்கவும். விண்ணப்பத்தில் உங்கள் பெயர், கையொப்பம் போதுமானது. பதவி மற்றும் இதர பொறுப்புகள் குறிப்பிடத் தேவையில்லை.
தங்களுக்கு எதற்காகத் தகவல்கள் தேவைப்படுகின்றன என்பதைத் தெரிவிக்க அவசியமில்லை.
நேரடியாக ஏன் என்று ஆரம்பமாகும் விண்ணப்பங்கள், தகவல் உரிமைச் சட்டத்தின்படி நிராகரிக்கப்பட ஏதுவாகும். உதாரணமாக, ஏன் அந்தப் பில் அனுமதிக்கப்படவில்லை என்று எழுதுவது கூடாது.
கட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்பத்தின் இறுதியில் தவறாமல் குறிப்பிடவும்.
தாங்கள் பாதிக்கபட்டவராக இருப்பின், பகுதி 4(1)(d)ன்படி நிர்வாக மற்றும் அரசு நீதித்துறையின் முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கேட்கலாம்.
விண்ணப்பத்தை யாருக்கு அனுப்புவது?
எந்தப் பொதுத் தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அவர் முகவரிக்கு விண்ணப்பம் எழுதலாம்.
ஒருவேளை அருகில் உள்ள பொதுத் தகவல் அலுவலரின் முகவரி அறிய முடியவில்லை எனில், மாநில அரசாக இருந்தால் மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் அனுப்பலாம். அந்தத் துறை தலைமை அலுவலர் அதனை அதற்குண்டான தகவல் அலுவலருக்கு அனுப்புவார்.
பொதுத் தகவல் அலுவலரின் பெயரிடாமல் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். ஏனெனில், அலுவலர்கள் பணி இடமாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.
கட்டணம் மற்றும் அதைச் செலுத்தும் முறை:
முதன் முறை விண்ணப்பம் அனுப்புவதற்கு கட்டணம் பத்து ரூபாய், (பின்னர் தகவல்கள் தரும் நகலின் பக்கம் ஒவ்வொன்றிற்கும் 2 ரூபாய். குறுந்தகடுகள் போன்றவற்றிற்கான கட்டணம் 50 ரூபாய் எனக் கட்டணம் வேறுபடும்). வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. ஆனால் இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராப்ட், பாங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்புகள், வரையறுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணத்தைச் செலுத்தலாம்.
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத்துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம் (இதற்கான விண்ணப்பத்தை தலைமைத் தபால் அலுவலகத்தில் இலவசமாக அனுப்பலாம்).
இந்தியக் குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்www.epostoffice.gov.in என்ற இணைப்புக்குள் சென்று, தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பதிவுசெய்து கொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இணையத் தபால் ஆணையை (இ-போஸ்டல் ஆர்டர்) பெறலாம். இதற்கு பிரத்யேகமான எண்கள் வழங்கப்படும். இந்த எண்களை தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்.
30 நாட்களுக்கு மேலாகி விட்டால் தகவலை இலவசமாகத் தரவேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்புவது எப்படி?
நேரடியாக கையில் விண்ணப்பத்தை கொடுத்தல் - உங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்தியமைக்கான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை அனைத்தும் இருக்கின்றனவா என உறுதி செய்து கொள்ளுதல்.
பதிவு அஞ்சலுடனான பதில் அட்டை (AD) - இந்த அட்டையில் உள்ள தபால்துறை முத்திரை, விண்ணப்பம் சென்று சேர்ந்துள்ளமைக்கான உத்தரவாதத்தை அளிக்கிறது. பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்திற்குச் சென்று இவற்றையெல்லாம் சரி செய்து, வாங்கித் தருமாறு கேட்க வேண்டும்.
விரைவு அஞ்சல் (தபால் துறையின் ஒரு சேவை) - உங்கள் விண்ணப்பத்தை விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்தல்.www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம் உரிய அலுவலகத்திற்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான நிலை குறித்து ஓர் அத்தாட்சி பெற்று வைத்துக் கொள்ளவேண்டும்.
சாதாரண அஞ்சல் அல்லது தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. காரணம், விண்ணப்பம் சேர்ந்ததற்கான உத்தரவாதம் எதுவும் கிடைக்காது.
மேல் முறையீடு:
பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை எனில் (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தியளிக்கவில்லை எனில், முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அத்துறையின் முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
முதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை / முடிவை விவரிப்பார். தாமதத்திற்குத் தகுந்த காரணங்களை எழுத்து மூலம் தெரிவித்து விட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக் கொள்ளலாம்.
முதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.
இரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்தி செய்து, இதுவரை கிடைக்கப் பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.
இரண்டாம் மேல் முறையீடு செய்ய மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு:
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 2, தியாகராயர் சாலை,ஆலயம்மன் கோயில் அருகில், தேனாம்பேட்டை, சென்னை 600 018 (அல்லது)
தபால் பெட்டி எண்: 6405 தேனாம்பேட்டை, சென்னை-600 018
Phone : 044 2434 7590, Fax: 044 2435 7580
Email : sicnic.in Web : www.tnsic.gov.in
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு:
CENTRAL INFORMATION COMMISSION,
II floor, August Kranti Bhavan, Bhikaji Kama Place,
NEW DELHI – 110 066.
ஆன்லைனில் ஆர்.டி.ஐ. விண்ணப்பிக்க:
www.rtionline.gov.in/ என்ற தளத்தில் மத்திய அரசின்கீழ் வரும் 37 துறைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தளத்திலேயே முதல் மேல் முறையீடும் செய்யலாம்.www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு / எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
ஆர்.டி.ஐ. குறித்த சந்தேகங்களுக்கு / உதவிக்கு:
www.voiceof Indian.org என்ற தளத்தையோ 94434 89976, 94443 05581 என்ற எண்களையோ தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, October 28, 2014

picaso பிகாசோவின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோவின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• பிறந்தது ஸ்பெயினில். வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது பிரான்ஸில். இவரது ஓவியக் கலை ஈடுபாடு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்பட்டது. இவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘பென்சில்’ என்பதுதானாம். இதை அவரது தாய் பூரிப்போடு சொல்வார். ஓவியப் பள்ளி ஆசிரியரான தந்தையிடம் 7 வயதில் ஓவியப் பயிற்சியைத் தொடங்கினார். 13 வயதிலேயே தந்தையை விஞ்சிய தனயன் ஆனார்.

• பள்ளிப் பருவத்தில், பாடம் என்றாலே இவருக்கு கசப்பு. மோசமான மாணவனாக கருதப்பட்டார். ஒருமுறை சேட்டை அதிகமாகி, தனி அறையில் அடைத்தார்கள். உற்சாகமானவர் நோட்டுப் புத்தகத்தில் வரைய ஆரம்பித்துவிட்டார். ‘‘அந்த தனிமை ரொம்ப பிடித்திருந்தது. நிரந்தரமாக அடைத்து வைத்திருந்தால்கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்’’ என்று பின்னாளில் கூறியிருக்கிறார்.

• பார்சிலோனா நுண்கலைக் கல்லூரி நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் 14 வயது சிறுவன் பிகாசோவுக்கு விதிவிலக்கு அளித்து சேர்த்துக்கொண்டனர். ஆனால், கல்லூரியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வகுப்புகளை ‘கட்’ அடித்துவிட்டு வீதிகளில் சுற்றித் திரிவார். கண்ணில்பட்ட காட்சிகளை மனதில் பதியவைத்து ஓவியங்களாகத் தீட்டுவார். மாட்ரிட் நகரில் உள்ள சான் பெர்னாண்டோ ராயல் அகாடமியில் ஓவியக் கலை பயின்றபோதும் இதேபோலத்தான்.

• பாரம்பரிய ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார்.

• ‘யங் லேடீஸ் ஆஃப் அவென்யூ’ என்ற ஓவியம் மூலம் கியூபிசம் எனப்படும் புதிய பாணியை அறிமுகப்படுத்தினார். 5 பாலியல் தொழிலாளர்களை சித்தரிக்கும் இந்த ஓவியம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது மாறுபட்ட விஷயங்களை உணர்த்தும். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கலை உலகில் புதிய புரட்சியை உருவாக்கியது.

• சிற்பம் வடிப்பது, செராமிக் ஓவியம் தீட்டுவதிலும் தனித்தன்மையுடன் பிரகாசித்தார்.

• அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியவர் இவர்தான்.

• ஸ்பெயினின் கெர்னிகா கிராமத்தை ஹிட்லரின் நாஜிப் படை குண்டு வீசி நாசமாக்கியதைக் கண்டித்து ‘கெர்னிகா’ என்ற ஓவியத்தை தீட்டினார். அது இவரது போர் எதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்தியது.

• இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்களில் ‘தி மிஸ்ட்ரி ஆஃப் பிகாசோ’ திரைப்படம் குறிப்பிடத்தக்கது. இது 1955-ல் வெளியானது.

• 2 ஆயிரம் சிற்பங்கள், 1200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், 3 ஆயிரம் மண்பாண்ட சிற்பங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கலைப் படைப்புகளுக்கு உயிர்கொடுத்த பிகாசோ, 93-வது வயதில் இறந்தார்.
பிகாசோ 10

ஓவியர், சிற்பி, கவிஞர், நாடக ஆசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட பாப்லோ பிகாசோவின்  பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• பிறந்தது ஸ்பெயினில். வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது பிரான்ஸில். இவரது ஓவியக் கலை ஈடுபாடு குழந்தைப் பருவத்திலேயே வெளிப்பட்டது. இவர் முதலில் உச்சரித்த வார்த்தை ‘பென்சில்’ என்பதுதானாம். இதை அவரது தாய் பூரிப்போடு சொல்வார். ஓவியப் பள்ளி ஆசிரியரான தந்தையிடம் 7 வயதில் ஓவியப் பயிற்சியைத் தொடங்கினார். 13 வயதிலேயே தந்தையை விஞ்சிய தனயன் ஆனார்.

• பள்ளிப் பருவத்தில், பாடம் என்றாலே இவருக்கு கசப்பு. மோசமான மாணவனாக கருதப்பட்டார். ஒருமுறை சேட்டை அதிகமாகி, தனி அறையில் அடைத்தார்கள். உற்சாகமானவர் நோட்டுப் புத்தகத்தில் வரைய ஆரம்பித்துவிட்டார். ‘‘அந்த தனிமை ரொம்ப பிடித்திருந்தது. நிரந்தரமாக அடைத்து வைத்திருந்தால்கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்’’ என்று பின்னாளில் கூறியிருக்கிறார்.

• பார்சிலோனா நுண்கலைக் கல்லூரி நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் 14 வயது சிறுவன் பிகாசோவுக்கு விதிவிலக்கு அளித்து சேர்த்துக்கொண்டனர். ஆனால், கல்லூரியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் வகுப்புகளை ‘கட்’ அடித்துவிட்டு வீதிகளில் சுற்றித் திரிவார். கண்ணில்பட்ட காட்சிகளை மனதில் பதியவைத்து ஓவியங்களாகத் தீட்டுவார். மாட்ரிட் நகரில் உள்ள சான் பெர்னாண்டோ ராயல் அகாடமியில் ஓவியக் கலை பயின்றபோதும் இதேபோலத்தான்.

• பாரம்பரிய ஓவிய பாணியில் இருந்து 18 வயதில் முழுவதுமாக விடுவித்துக்கொண்டு புதிய முயற்சிகளில் இறங்கினார்.

• ‘யங் லேடீஸ் ஆஃப் அவென்யூ’ என்ற ஓவியம் மூலம் கியூபிசம் எனப்படும் புதிய பாணியை அறிமுகப்படுத்தினார். 5 பாலியல் தொழிலாளர்களை சித்தரிக்கும் இந்த ஓவியம், வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது மாறுபட்ட விஷயங்களை உணர்த்தும். இந்த ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கலை உலகில் புதிய புரட்சியை உருவாக்கியது.

• சிற்பம் வடிப்பது, செராமிக் ஓவியம் தீட்டுவதிலும் தனித்தன்மையுடன் பிரகாசித்தார்.

• அமைதியின் அடையாளச் சின்னமாக ஆலிவ் இலைகள், புறாவை பிரபலப்படுத்தியவர் இவர்தான்.

• ஸ்பெயினின் கெர்னிகா கிராமத்தை ஹிட்லரின் நாஜிப் படை குண்டு வீசி நாசமாக்கியதைக் கண்டித்து ‘கெர்னிகா’ என்ற ஓவியத்தை தீட்டினார். அது இவரது போர் எதிர்ப்பு மனோபாவத்தை வெளிப்படுத்தியது.

• இவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட சில திரைப்படங்களில் ‘தி மிஸ்ட்ரி ஆஃப் பிகாசோ’ திரைப்படம் குறிப்பிடத்தக்கது. இது 1955-ல் வெளியானது.

• 2 ஆயிரம் சிற்பங்கள், 1200-க்கும் மேற்பட்ட ஓவியங்கள், 3 ஆயிரம் மண்பாண்ட சிற்பங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கலைப் படைப்புகளுக்கு உயிர்கொடுத்த பிகாசோ, 93-வது வயதில் இறந்தார்.