Tuesday, March 31, 2015

கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் - கண் பார்வை அதிகரிக்கும்

If the occurrence of the disease in the eyes pineus atikkaticappittu healed. Katukkayt skin, gooseberry powder daily for two to three grams of dried nuts drop

                                                                                    
 கண்களில் எந்த நோய் தென்பட்டாலும் அன்னாசிப் பழம் அடிக்கடிசாப்பிட்டு வந்தால் குணமாகும். கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.

சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும். சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மைப் போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறையும்.

ஒரு மலைவாழைப்பழம், நான்கு ஆப்ரிகாட் பழம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரை கப் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். முருங்கைக்கீரை, துவரம் பருப்பு இரண்டையையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

Thursday, March 26, 2015

தண்ணீர் விட்டான் கிழங்கு


சித்தர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் வரை ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகளின் வசீகரம் குறைந்தபாடு இல்லை.
அது போலவே அனைத்து நோய்களையும் போக்கும் சர்வரோக நிவாரணிகளை கண்டு பிடிப்பதில் தான் சித்தர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதிகளை பயன்படுத்தினர்.
ஆண்மையை அதிகரிக்கச்செய்வதோடு சர்வரோக நிவாரணியாக அனைத்து நோய்களையும் தீர்க்கும் "தண்ணீர் விட்டான்" கிழங்கின் மகத்துவம் நம்முடைய சித்தர்கள் மட்டுமல்ல வடநாட்டு ஞானிகளும் அறிந்துள்ளனர்.
வளரியல்பு:
அல்லி குடும்ப (Lilliaceae) தாவரமான "தண்ணீர் விட்டான்" கிழங்கின் அறிவியல் பெயர் அஸ்பாரகஸ் ரெசிமோசஸ்(Asparagus Recemouses ) என்பதாகும்.
வேலிகளில் படர்ந்து வளரும் இலைகள் முட்களாகவும், நுனி கிளைகளே இலைகளாகவும் உருமாறியுள்ளன. முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்டவை.
வேர்கிழங்குகள் சதைப்பற்றும் அதிக நீர் தன்மையும் கொண்டவை. வேர்கிழங்குகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனப்பெருக்கம் அடைகின்றன. நிலத்தடியில் கொத்து அவரைக்காய்கள் போல வேர்கள் காணப்படுகிறது.
வடமொழியில் சதாவரி (Shatavari - A Woman's Best Friend) என்று அழைக்கப்படுகிறது.
தண்ணீர் விட்டான் கிழங்கின் இரசாயன அமைப்பு:-
தண்ணீர் விட்டான் கிழங்கின் மருத்துவ குணத்திற்கு காரணன் அவற்றில் காணப்படும் பாலிபீனல் மூலப்பொருள்களும் அசபராஜின் என்ற நைட்ரஜன் காரப்பொருளும் தான்.
மருத்துவ குணங்கள்:-
பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுபடுத்துகிறது.
தாய்பால் சுரத்தலை அதிகப்படுத்துகிறது.
உடலினை உறுதியாக்கி ஆண்மையை அதிகரிக்க செய்கிறது.
உடல் உள்ளுருப்புகளின் புண்களை ஆற்றுகிறது. முக்கியமாக அல்சர் எனப்படும் வயிற்று புண்களுக்கு மிகச்சிறந்த மருந்து தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகும்.
பல்வேறு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதால் தண்ணீர்விட்டாண் கிழங்கை வடநாட்டு ஞானிகள் நூறு நோய்களின் மருந்து எனப் பொருள்படும் சதாவரி (சதா= நூறு , வரி = நோய்களின் மருந்து ) என பெயரிட்டுள்ளனர்.
அழகு தாவரம் தண்ணீர் விட்டன் கிழங்கு.
தண்ணீர் விட்டான் கிழங்கின் வெண்மை நிற பூக்கள் மிகவும் வசீகரமானவை.
சில சிற்றினங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வீட்டிலும் பூங்காவிலும் அழகிற்காக வளர்க்கப்படுகிறது.
அழகிற்காக வளர்க்கப்படும் சிற்றினங்களில் வேர்கள் பெரியதாக காணப்படுவது இல்லை.
தண்ணீர் விட்டான் கிழங்கு ஆரோக்கிய பானம் தயாரிப்பு.
இந்த ஆரோக்கிய பானம் தயாரிப்பு முறை இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட இந்திய மருத்துவ முறைகள் என்னும் நூலினில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளை தோல் நீக்கி, இடித்து சாறு எடுக்க வேண்டும்.
ஒரு கோப்பை சாறுடன் ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும்.
இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும்.
தண்ணீர் விட்டான் கிழங்குகள் பல்வேறு பகுதிகளில் பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.
நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும்.

Wednesday, March 25, 2015

அகத்தியர் அருளிய வர்மக் கலை நூல்கள்

வர்மக் கலை
சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம். தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.

அகத்தியர் அருளிய வர்மக் கலை நூல்கள்


ஒடிவுமுறிவுசாரி

வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார்.இவை “படு வர்மம்”,”தொடு வர்மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு வர்மம்”

உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகள்,

1. தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும், 

2. நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,

3. உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,

4. முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,

5. கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,

6. கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,

7. கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,

8. கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,

9. கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

சித்தர்கள் வளர்த்த வர்மம் எனும் அறிவியல்

உடலில் உள்ள பல சத்திகளை – அவற்றின் இயக்க நுட்பங்களை மக்களுக்கு எளிய 
முறையில் விள்க்கிச் சென்றவர்கள் நம் முன்னோர்கள். அந்த நுட்பங்களின் 
அடிப்படையில் உருவானது தான் அழுத்தும் முறை சிகிச்சைகள்.சில 
ஆண்டுகளுக்கும் முன் தேவேந்திர ஓரா என்பவர் எழுதிய HEALTH IN YOUR 
HANDபுத்தகத்தை படித்தேன். அதில் அழுத்த முறை சிகிச்சை பற்றிய சில பகுதிகள்
 சிறப்பாக இருப்பதை உணர்ந்து பயின்றேன். அழுத்த முறை சிகிச்சை பற்றிய அறிவு
 எளிய முறையில், நோய் அறிவதற்கும், அறிந்த நோயைத் தீர்ப்பதற்க்கும் உதவியது.

 எனது புரிதல் படி அதை தொடர்ந்து பயன் படுத்தியதில் சில நுட்பங்களை அறிய 
முடிந்த்து. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.அந்த படத்தில் உள்ளபடி,

1. மூளை (BRAIN)        

2. மூளை நரம்புகள் (mental nerves)        

3. பிட்யூட்டரி (Pituitary gland)        

4. பீனியல் (pineal gland)        

5. தலை (head nerves)        

6. தொண்டை(throat)        

7. கழுத்துப் பகுதி (neck)        

8. தைராய்டு சுரப்பிகள் (thyroid glands)       

 9. முதுகெலும்பு (spine)     

 10. மூலம் (piles)      

11. புரஸ்த கோளங்கள் (prostate glands)      

12. ஆண் பிறப்புறுப்புகள் (penis)      

13. பெண் பிறப்புறுப்ப (vagina)      

14. கர்ப்ப பை (uterus)      

15. விதைப் பை, சிணை (testicles , ovaries)      

16. நிண நீர் சுரப்பிகள் (lymph glands)      

17. இடுப்பு, முழங்கால்கள் (hip, elbows)      

18. சிறுநீர் பை (urinary bladder)      

19. சிறு குடல் (Small Intestine)      

20. பெருங்குடல் (Large Intestine/colon)     

 21. குடல் வால் (appendicitis)      

22. பித்தப் பை (gall bladeer)     

 23. கல்லீரல் (liver)    

 24. தோள் பகுதி (shoulder)      

25. கணையம் (pancreas)      

26. சிறு நீரகங்கள் (kidney)       

27. வயிறு (stomach)      

28. அட்ரீனல் சுரப்பி (adrenal)      

29. உதர விதாணம் (solar plexus)      

30. நுரையீரல் (lungs)      

31. காதுகள் (ear)      

32. சக்தி தூண்டல் (energy)     

 33. காது நரம்புகள் (ear narves)      

34. குளிர்ச்சி (cold)      

35. கண்கள் (eyes)      

36. இதயம் (heart)      

37. மண்ணீரல் (spleen)      

38. தைமஸ் சுரப்பிகள். (thymus glands)

இப்புள்ளிகளை மிக மென்மையாக அழுத்தித் தொடும் போது அவ்விடத்தில் வலி 
தோன்றுவது அந்த குறிப்பிட்ட பகுதியில்- உறுப்பில் உள்ள நலக் குறைவை 
காட்டுகிறது.இந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் எந்தவிதமான துன்பங்கள்-நலக் 
குறைபாடுகள் இருப்பினும் அதற்கான சத்திப் புள்ளியை மிக மென்மையாகச் சில 
வினாடிகள் தொடுவதன் மூலம் அத் துன்பத்தை நீக்கிக் கொள்ள முடியும். 
குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து உடனடியாகவோ, சில நாட்களிலோ உடல் 
நலம் முழுமையாக கிடைக்கும். 

அ. புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய் (prostate 
glands) / அனைத்து சிறுநீரக கொளாறுகள்
அ. வலது கை மற்றும் இடது கை உட்புற தோற்றம்.
 உள்ளங்கையின் படத்தில் காட்டிய 11 ம் எண் குறிக்கும் இடத்தை மென்மையாகத் தூண்டவும்சிறு பீளை, மற்றும் சிறு நெருஞ்சில் செடிகளை வேருடன் பிடுங்கி நிழலில் காயவைத்துப் பொடியாக்கிக் கொள்க. இரண்டும் சேர்ந்த 100கிராம பொடிக்கு 10 கிராம் மிளகும், 10 கிராம் சீரகமும் பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். காலை, மாலை உணவுக்கு முன் 5கிராம் பொடியை 2 குவளை நீரிலிட்டு அரைக்குவளையாக காய்ச்சி வடித்துக் குடிக்க புரஸ்த கோளங்களின் வீக்கம், புண், புற்று நீங்கி சுகமடைவார்கள்.

ஆ. மூலத்துக்கு (piles)
ஆ வலது, இடது கை உட்புறம் மற்றும் வெளிப்புற தோற்றம்
 படத்தில் 10 ம் எண் குறிக்கும் இடத்தை மென்மையாகத் தூண்டவும்1.  அதிகாலையில், குளிர்ந்த நீரில், நாளும் தலைக்கு குளிக்கும் பழக்கம் வேண்டும்.2.  வாரம் இரண்டுமுறை எண்ணெய் குளியல் தேவை3.  நொறுக்குத் தீனி பழக்கத்தை விட வேண்டும். ( முறுக்கு, பிஸ்கட்) பதிலாக பழங்கள் பயன்படுத்தலாம்.4.  இரவுத் தூக்கம் முக்கியமாக இரவு 9 முதல் 3 மணி வரை ஓய்வெடுத்தல் வேண்டும்5.  புளிப்பு மற்றும் பச்சை மிளகாய், மிளகாய் காரத்தைக் குறைத்துக் கொள்க. மிளகு காரம் சேர்க்கலாம்.6.  காலை, இரவு உணவு 7 மணி முதல் 9 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.7. தாகம் இல்லாத போது தண்ணீர் குடிக்க்க கூடாது. தாகத்தின் அளவறிந்து சுவைத்து குடித்தல் நல்லது.8.  கருணைகிழங்கு சேர்த்துக் கொள்ளவும்.9.  உணவில் நெய், நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.10. இட்லி, தோசை போன்ற உணவை விட்டுவிட்டு நன்கு மென்று சாப்பிடக் கூடிய வகையில் உணவுகளை பயன்படுத்துக.11. உயிர் ஆற்றலை அழிப்பதையே மருத்துவமாக கொண்ட எதிர்முறைய மருந்துகளை எந்த சூழலிலும் பயன்படுத்தல் நலமன்று.12. பொதுவாக மேற்கண்ட பழக்கங்கள் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும். வந்த நோய்கள் அனைத்தையும் நீக்கி சுகமளிக்கும்.குப்பைமேணி எனும் மூலிகையை ஓர் கைப்பிடி அளவெடுத்து கால் லிட்டர் ஆமணக்கெண்ணெயில் வறுத்து எடுத்தெரிந்து விட்டு அந்த எண்ணையை 1 தேக்கரண்டி அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் மூலம், பவுந்தரம் போன்ற நோய்கள் நீங்கி உடல் நலம் பொறலாம். 

இ. கர்ப்ப பை கட்டிகளுக்கு - நோய்களுக்கு (uterus)
இ. கால் பாதங்களில் உள்ள சக்தியூட்டும் புள்ளிகள்.
படத்தில் 11 முதல் 16 வரை உள்ள இடங்கள் மற்றும் 37 ஆகிய சத்தி தூண்டும் இடங்களை மென்மையாகத் தூண்டவும்கறிவேப்பிலை, அம்மான் பச்சரிசி, குப்பைமேனி, சிறு செறுபடை, அருகம் புல் இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்க. உடன் மிளகு, சீரகம் 10 ல் 1 பங்கு கலந்து பொடித்துக் கொள்க. இந்த கலவையை தேவையுள்ளவர்கள் மோரில் 1 தேக்கரண்டி கலந்து - அதிகாலை குளித்த பின் குடித்து வர, கர்ப்ப பை சார்ந்த நொயனைத்தும் தீரும்.

ஈ. இதய நோய்கள் அனைத்துக்கும் (for heart)

 8,28,30,36 ஆகிய இடங்களை மென்மையாக அழுத்திப்பார்த்து வலியிருப்பின் மிக மென்மையாகத் தூண்டி வந்தாலே போதும்1. செம்பரத்தை2. மருதம்பட்டை3. சீந்தில்4. தாமரை5. முளரி (ரோஜா)6. அமுக்காரா7. விஸ்ணு கரந்தை8. நீர் முள்ளி9. வேம்புஎன பல மூலிகைகள் இதயத்துக்கு வலிவு தரும். மேலே கூறியுள்ள மூலிகைகளில் 1 முதல் 7 வரை எடுத்து முறைப்படி சுத்தம் செய்து பொடியாக்கிக் கொள்க. உடன் அளவுப்படி திரிபலா, திரிகடுகு, அதிமதுரம், சிறு நாகப்பூ, கருவாப்பூ, சிறு மணகம் சேர்த்து செய்யும் சூரணங்கள், லேகியங்கள் இதயத்தை வலுப்படுத்தும்.உ. குடல் வால் (apandisis) உள்ளங்கையில் உள்ள 21 எண் பகுதியை மென்மையாக சில விணாடிகள் காலையும் மாலையும் தூண்ட வேண்டும்குடல் வால் பகுதியில் கழிவுகள் தேக்கத்தால் தான் இந்த நிலை இதை சரிசெய்ய அனுபவம் உள்ள பெரியோர் வாழைத்தண்டுச் சாற்றுடன் விளக்கெண்ணெய் கல்ந்து குடிக்கச் சொல்வார்கள். நாள் இடைவெளியில் ஒன்றிரண்டு முறை சாப்பிட்டாலே குடல் வாலில் தேங்கியிருந்த கழிவுப் பொருள் நீங்கிப் புண்ணும் ஆறி விடும்.

சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்


சித்தர்கள் கண்டறிந்த வாதவித்தையே சிறந்த விஞ்ஞான, ரசாயன ஆராய்ச்சியாகும். உலோகங்கள், உப்புக்கள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், விதைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும் பல கடல் பொருட்கள், விலங்குகளின் உடல்களில் இருந்து கிடக்கும், கஸ்தூரி, புனுகு, சலம், சாணம் முதலியவற்றின் குணங்களை எல்லாம் கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்களே. அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.
இவ்வாறு ஆராய்ந்து இவற்றைச் சேர்த்தால் இன்ன மருந்து கிடைக்கும். இன்ன நோய்க்கு இன்ன மருந்து. இந்த மருந்து இன்னின்ன நோய்களுக்குப் பலன் தரும், நுகரும் மருந்து, பூசும் மருந்து, குடிக்கும் மருந்து எனப் பலவகையான மருத்துவ ஆய்வுகளைக் கண்டறிந்தவர்களும் இவர்களே.
இன்று இருப்பது போல விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடங்கள் இல்லாத அந்தக்காலத்தில் காட்டிலும் , மலையிலும், குகையிலும் வாழ்ந்த இந்த பேரறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தி ஒவ்வொன்றின் மருத்துவப் பண்புகளை கண்டறிந்து மக்களுக்கு தெரிவித்துள்ளது வியப்பளிக்கும் செய்தியாகும்.
இதேபோல வானவியல், சோதிடம், மருத்துவம் என எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தெளிவான முடிவுகளை அறிவித்தே உள்ளனர்.
ஆகவே சித்தர்களை உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றும், விஞ்ஞானத்தின் முன்னோடிகள் என்று கூறலாம். மனிதனும், நாடும், உலகமும், நலம் பெற, முன்னேற பல்வேறு அறிவுரைகளை நமக்கு அளித்துச் சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள், இக் காலத்தில் உள்ளது போன்று பல்வேறு உபகரணங்கள் இல்லாத அக்காலத்தில் மனித சமூகம் வளம்பெற, உடல் நலம்பெற, ஆன்மிகம் தளைத்தோங்க, மருத்துவ இயல், வானவியல், போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டறிந்து அவற்றை தம் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் பாடி சென்றுள்ளனர். இது யாராலும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.
ஆகவே,
சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள் என்றால் அது மிகைப் படுத்தல் அல்லவே.

Sanskrit சம(ஸ்)கிருதம்!


சம=சமன்=equal / கிருதம்=மொழி=language
தமிழுக்குச் சமாந்தரமாக ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக சித்தர்களால் உருவாக்கப்பட்ட மொழியே சம(ஸ்)கிருதம். தமிழே காலத்தால் மூத்த ஞானமொழி
ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்களின் மொழிகளே. சம=சமமாக, கிருதம்=மொழி. தமிழுக்குச் சமமாக ஞானிகளால் ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக உருவாக்கப்பட்ட மொழிதான் சம(ஸ்)கிருதம். தமிழே ஆதிமொழி. தமிழே சித்தர்களின் உயர் ஞானமொழி.
இலக்கண அடிப்படையில் ஹிந்தி, உருது போன்ற மொழிகளைவிட தமிழுக்கும் சம(ஸ்)கிருதத்திற்குமே நிறையப் பொதுப்பண்புகள் உண்டு. ஹிந்தி, உருது போன்ற மொழிகள் சம(ஸ்)கிருத சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன தவிர இலக்கண அடிப்படையில் பொதுப்பண்புகள் தமிழை விடக் குறைவே.
சம(ஸ்)கிருதம் நம் தமிழ்ச்சித்தர்கள் உருவாக்கிய மொழியே. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்கள் மொழியே. ஆதலால்தான் எம் முன்னோர் சம(ஸ்)கிருதத்தை கோவில் வழிபாட்டு மொழியாக ஏற்றுக்கொண்டனர். நம் பெயர்களில் சம(ஸ்)கிருதம் யாரும் திணித்ததால் வரவில்லை. சித்தர் மொழிகளை நம்மொழியாக ஏற்றுக்கொண்டதனால் வந்தது. ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி.
நிறையப்பேர் இந்தி, உருது போன்ற வடமொழிகள் சம(ஸ்)கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியின் மூல மொழி துருக்கி. அதில் சமஸ்கிருதம், உருது, அரபி போன்ற மொழிச்சொற்களும் சேர்ந்து உருவானதுதான் இந்தி. உண்மையில் சம(ஸ்)கிருதம் மற்ற மொழிகளில் எவ்வாறு கலந்திருக்கிறதோ அது போலவே இந்தியிலும் அதிகமாகக் கலந்துள்ளது.
குருகுலம் இருந்தபோது அனைத்துத் தரப்பு மக்களும் தமிழ், சம(ஸ்)கிருதம் இரண்டுமே கற்றனர். காலப்போக்கில் பூசாரிகளே சம(ஸ்)கிருதம் கற்றனர். சாதாரண மக்களுக்கு அதனால் பயனில்லாததால் கற்பதைத் தொடரவில்லை. இன்று தமிழ்நாட்டில் தமிழ் பயன்பாடு குறைந்து ஆங்கிலம் வளர்வது போல, மக்கள் தமக்கு எதனால் பயன்பாடு உள்ளதோ அதனையே கற்றனர்.
சித்தர் தமிழை நிறைவாகக் கற்றோனே கசடு அறக் கற்றவன். வள்ளுவப் பெருமான் மாபெரும் சித்தர். இதை வெகுவிரைவில் பாரறியும். தமிழ் சித்தன் மொழி. மெஞ்ஞான சூட்சுமங்கள் நிறைந்த நிறைமொழி. சித்தர்கள் அழிய மாட்டார்கள். ஆதலால், அவர்கள் மொழியான தமிழ் என்றுமே அழியாது. வருங்காலத்தில் உலகமாந்தரே தமிழ் கற்பர். ஏனெனில் சித்தர் மொழியான தமிழைக் கற்றாலே வரப்போகும் ஊழிக்கூத்திலிருந்து உலகமாந்தர் தம்மைக் காக்க முடியும்.
2037க்கு முன் ஞானச்சித்தர் காலம் பிறக்கும். மீண்டும் சித்தர்கள் இம்மண்ணில் எம்முன்னே நடமாடுவர். உலகமாந்தரெல்லாம் தம்மைக் காத்துக்கொள்ளும் பொருட்டு சித்தநெறியை நாடுவர். சித்தநெறியிலுள்ள மறைபொருளையறிய வேண்டி தமிழ் கற்பர். ‪#‎சித்தர்வாக்கு‬
நம்மால் ஆதாரம் தர முடியவில்லை. இருந்தும் ஒரு தகவலாகத் தருகிறேன். அதாவது, சித்தர் ஓலைக் குறிப்புகளின் படி தமிழ் பல அண்டங்களில் பேசப்படுகின்றது.
சித்தர்கள் மொழியான தமிழ் காலம் வரையறுக்கப்பட முடியாத ஆதிமொழி. மூத்தகுடி தமிழ்க்குடி . இதோ ஒரு சான்று:
http://www.bibliotecapleyades.net/esp_galacticdiplomacy_02.…
The Pleiades is an open star cluster consisting of 254 stars and many times that in planetary bodies. Many of the stars are very young. The Pleiades is located in the constellation of Taurus. The Pleiadian and Earth alphabets are both very similar. This was noted about 11,157 years ago. The script form was developed here on Earth and carried back to the seven sisters. The original script form is the parent of most of our present day alphabets. All of Earths languages are derived from a ancient Pre-Sumerian language called Tamil which was spoken in Lyra and latter in the Pleaides.
http://www.bibliotecapleyades.net/esp_galacticdiplomacy_02.…
REFS:
Turkey the birthplace of Hindi, English: study
http://phys.org/…/2012-08-turkey-birthplace-hindi-english.h…
his proposed research center may be defined as an academic research section of any university, with the prime object to unearth and to bring to light, the linguistic, cultural, scientific and medical heritage of the Tamil people as recorded by the Germans over the past 300 years and also to investigate and estimate the Tamilo=German interactions in these areas.
http://www.germantamilology.com/research_centre.htm
Do you know that Thiruvachagam and Thiruppavai are sung during the annual coronation ceremony for the King in Thailand?
http://www.indiadivine.org/…/131559-tiruppavai-thailand.html
Of the one-lakh odd inscriptions in India, about 60,000 were in Tamil Nadu. And of the 60,000 inscriptions, only about 5 per cent were in other languages such as Telugu, Kannada, Sanskrit and Marathi; the rest were in Tamil, T. Sathyamurthy, Superintending Archaeologist of ASI, Southern India, said.
http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm
மேலும் தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

Tamil Words in Sanskrit
These words are taken from the book ‘A Dravidian Etymological Dictionary’ by T. Burrow and M.B. Emeneau.
Dr. T. Burrow was a professor Sanskrit in the University of Oxford, England. Dr. Ememeau was a professor of Sanskrit at University of California, Berkeley. They are both Dravilian language scholars as well.
அகத்தி – Skrit agasti
அகில் – Skrit aguru, agaru
அக்கா – Skrit akka, Prak akka
அங்கம் (battle) – Skrit anka
அங்காடி – Skrit angana
அடு (cook – அடுப்பு comes from this) – Skrit atta
அடை (shut) – Skrit addana (shield), Prak adda
அட்டம் (terraced roof) – Skrit atta, attala
அத்தன் (father) root for அத்தை, அத்தான் – Skrit atta (mother, mothers sister, elder sister), Prak atta (mother, mother-in-law, father’s sister’s husband
அம்மா – Skrit ambaa, ambaada, ambaala, ambi, ambaalikaa, Prak ammo, ammahe
அரக்கு – Skrit laaksaa
அல (suffer) – Skrit alasa, lampata
அலங்கு – Skrit alaka
அலங்கோலம் – Skrit kallola
அல்குல் (part below the stomach) – Skrit alga
அவணம் (a measure of 20 thousand areca nuts) – Skrit armana
அழல் – Skrit arajf, alaji
அழிஞ்சில் (sage-leaved alangium) – Skrit ankota
ஆமாந்தம் ஆமணக்கு – Skrit aamanda
ஆர் (ஆரவாரம்) – Skrit rat (to howl, yell, roar)
இருவேரி (அறுகு – cuscuss grass) – Skrit hrivera
ஈந்து (date palm) – Skrit hintala, Prak sindhi
உக்கம் (waist) – Skrit ukha
உடுக்கை – Skrit hudukka
உலக்கை – Skrit ulukhala
உருவை (a kind of fish) – Skrit ulupin (porpoise)
உளு (rotten) – Skrit luta
எலும்பு – Skrit eduka
ஐயா (sound of astonishment) – Skrit aye (sound of excitement)
ஒட்டு (to wager, noun ஒட்டம்) – Prak huddaa
கசடு (dregs) – Skrit kaccara
கச்சை – Skrit kaksya
கடம்பை (hornet, wasp) – Skrit kanabha, gandhall, gandholi
கடாரம் கிடாரம் (copper boiler) – Skrit kataha
கடு (throbbing pain) – Skrit katu, katuka
கட்டில் – Skrit khatva
கட்டு (harden) – Skrit kathina, kathara, kathura
கட்டை (dead body) – Skrit kata
கணவீரம் (red oleander) – Skrit karavira, Prak karavira
கணை – Skrit kana
காப்பு – Skrit kavasa
காப்பு – கவ்வு – Skrit kavala
கம்பு (millet) – Skrit kambu
கய (கசப்பு) – Skrit kasaya
கர (to steal) – Skrit khar
கரடி – Prak karada (tiger)
கரடி (கரடிப்பறை, drum) – Skrit karata
கரடு – Skrit karata, karkara, karkasa Prak karakaya
கல் (learn, கலை came from this) – Skrit kala
கல – to mix
கலங்கு – Skrit kalaha
கலம் – Skrit kala (boat), kalasa
கவண் – Skrit gophana
கவுளி (lizard) – Skrit godha
கழல் (loosen) – Skrit cancalaksi
கழுத்து – Skrit kandha
கள் (களவு, rob) – Skrit khala
கள் (toddy, alcohol) – Skrit kad (to be intoxicated)
களம் – Skrit khala
களி – Skrit kali
கற – Skrit kara, kaara (to squeeze out tax)
கறு (black) – Skrit karpari
கனம் – Skrit ghana
கனல் – Skrit kanala (shining), kanaka (gold)
கா (கம்பு, pole) – Skrit kaaca, kaajam Prak kaa, kaava, kavada
கா (forest) – Skrit kanana
காக்கை (crow) – Skrit kaka
காசு – Skrit karsa
காண் – Skrit kaana
கால் (கால்வாய்) – Skrit khalla, Prak khalla, khaala
கார் (black) – Skrit kaala
கின்னேணல், கிணி – Skrit kinkini, Prak kinikininta
கீல் (hinge) – Skrit kila
கீறு – Skrit kiraka
குச்சு (tuft) – Skrit kurca, gucha, gulucha
குடசம் – Skrit kutaja
குடம் – Skrit kuda
குடி (to drink, intoxicated by drinking) – Skrit kudi (intoxicated by drinking)
குடுகுடு (rattle) – Skrit gudagudayana (grumbling of belly), gurguri (hookah)
குடை – Skrit utkuta
குட்டம் (pond) – Skrit kunda
குட்டு – Skrit kuttayaati
குந்தாலி (pick-axe) – Skrit kuddaala
குயில் – Skrit kokila
குருள் (curl) – Skrit kurula, kurala
குரை (dog bark) – Skrit kurkura
குழை (soften) – Skrit kunapa (dead body, rotting)
குளகம் (grain measure) – Skrit kudava, kudapa
குளம் – Skrit kula
குறிஞ்சி – Skrit kuranta, kurantaka
குன்றி (crab’s eye) – Skrit kuncika, gunja
கூ (bird cry) – Skrit ku, kuj
கூம்பு (குவளை comes from this) – Skrit kuvalaya, kuvala, kuvela
கூம்பு (ship mast) – Skrit Kupaka, Prak kuvaya
கூழ் – Skrit kura
கெண்டை (ankle) – Skrit ganda, gandu
சென்னி (head) – Skrit kenaara (temples, upper part of cheek)
சேம்பு (கிழங்கு) – Skrit kemuka, kecuka, kevuka, kacu, kacvi
சேறு – Skrit kedaara (field under water)
கோடாலி – Skrit kuthaara
கொடி (flag, banner) – Skrit koti, kuta
கொடு (curved, bent) – Skrit kutila
கொட்டகை – Skrit gostha
கொதி – Skrit kutuka, kutuhala
கொக்கு – Skrit kanka
கொழுந்து – Skrit koraha, kora, kunaka (new born animal)
கோணல் – Skrit kona
கோணி (sack) – Skrit goni
கோலம் (raft) – Skrit kola
கோவணம் – Skrit kaupina
சடசடஎனல் – Skrit catacatayaayate
சடை – Skrit jada
சட்டுகம் (சட்டுவம்) – Skrit catuka
செண்பகம் – Skrit chempaka
சதி – Skrit chad
சதுர் (skill) (ancient Tamil dance சதிராட்டம் comes from this word) – saduvaari
சந்தம் (beauty) – Skrit chanda
சப்பட்டை – Skrit carpata
சப்பை (tasteless) – Skrit capata
அரவு (snake) – Skrit saraahaya
சல்லடம் (short drawers) – Skrit candaataka, calanaka (short petticoat)
சரக்க (quickly) – Skrit sraak
சலி (to sieve) – Skrit sal
சா (சாவு) – Skrit sava (corpse)
சாய் (சாயம், brilliance) – Skrit chaaya
சிட்டிகை (snap fingers) – Skrit chotikaa
சிப்பி (shell) – Skrit sippi
சிமிர், இமை – Skrit smil
சூப்பு – Skrit coop
சீரை, சீலை – Skrit cela (clothes, garments)
சுண்டன், சுண்டெலி – Skrit sundi-musaka, cucundari, chucchundara
சுலவு (easy) – Skrit sulabha
சூடகம் (bracelet) – Skrit cuda, Prak cuda
சூடு (to wear) – Skrit cuda
சுட்டு (private parts) – Skrit cuta, cuti, cyuti
செடி (light, splendor) – Skrit tadit
எய், எய்பன்றி (porcupine) – Skrit sedhaa
சொகுசு (refinement) – Skrit coksa
நாஞ்சில் – Skrit langala
தமதமவென (drum sound) – Skrit dam (drum sound)
தகரம் – Skrit tamara
தசை – Skriti tharasa
தடு (hinder) – Skrit tadaga
தட்டி (screen) – Skrit thatti
தட்டி (drawers) – Skrit dhati
தண் (cool) – Prak tannaaya
தண்டு – Skrit thankaka
தமுக்கம் – Skrit thamaanga
தமிழ் – Skrit Dravida
தளர் – Skrit tarala
தாத்தா – Skrit thaatha
தாமரை – Skrit taamarasa
தார், தாரம் (rope) – Skrit davara (string), doraka (rope)
தாழ் (bolt) – Skrit tadaka
து (துண்ணு) – Skrit tuppa (ghee)
துகில் – Skrit dukula
தும்பி (ebony tree) – Skrit tumburu
துழாய், துளசி, துளவம், துளவு (holy basil) – Skrit thulasi
துறு (crowded) – Skrit turumba
தூவல் (feather), தூய் (cotton) – Skrit tuva (cotton)
தூற்று – Skrit surpa
தெப்பம் – Skrit tarpa, Prak tappa
தெரிவை (young women) – Skrit taruna
தொண்டை (creeper) – Skrit tundi
தோசை – Skrit dhosaka
நகர் (big house, street, mansion, palace) – Skrit nagara (city)
நந்து (flourish) – Skrit nand (to rejoice)
நல் – Skrit nala
நாத்தனார் – Skrit naanandr, nandini, nandaa
நீர் – Skrit nira (water, juice, liquor)
நுதல் – Skrit nithaala
நேர் (straightforward)- Skrit nerimi (knowledge)
நொச்சி (vitex negundo tree) – Skrit nirgundi
பட்டி (lawless) – Skrit patu
பட்டி (cow stall), பட்டம், பட்டு (small town) – Skrit pattana (city)
பண்டி (cart) – Skrit bhandi
பண்டி (belly), பண்டம் – Skrit phanda
பப்படம், அப்பளம் – Skrit parpaata
பரு (coarse) – Skrit parusa
பலவு, பலா (jackfruit tree) – Skrit panasa, palasa, phanasa
பல்லி – Skrit palli, pallika
பவளம், பளகம் – Skrit pravaala
பழு, பழம் – Skrit phala
பாதிரி (trumpet flower) – Skrit paatala, paatali
பாலம் – Skrit paali
பிச்சு (bile) – Skrit pitta
பிழி (squeeze), பிண்டி (oil cake) – Skrit pinyaka (oil cake)
பிள்ளை – Skrit pillika
பீலி – Skrit piccha
புழு – Skrit pilu (vermin), pulava (worm), Hindi pillu (worm), phul (maggots)
புழுங்கு (parboiled) – Skrit pulaaka (a lump of rice)
புழுகு (arrowhead) – Skrit punkha (shaft or feathered part of arrow)
புழுதி – Skrit bhuti
பூசு – Skrit pusta
பெட்டி – Skrit petaka, petika
பெண் – Skrit panda, pandaka
பேடி – Skrit potaa
போத்து (male animals, tender branch) – Skrit pota (young animal)
மணி – Skrit mani
மத (anger) – Skrit mad
மலை – Skrit malaya
மல்லம் (bowl) – Skrit malli, mallaka
மா (mango) – Skrit maakanda
மேடை – Prakrit maadia
மால் (confused) – Skrit malaka (intoxicating drink)
மாலை – Skrit maala
மாலர் (child of brahmin mother and sudra father) – Skrit maala
மீன் – Skrit meena
முகிர் (bud) – Skrit mukula
மூங்கா (mongoose) – Skrit magdusa, Prakrit mamgusa, muggasa, Hindi mugus
மூசரு, மோரு – Skrit morata, morana
முட்டு – Skrit mut
முதலை – Skrit maacala
முத்து – Skrit muktha, prakrit muttaa
முரள் (sound), முர, முரழல், முரவம் – Skrit murali (flute), muraja (drum)
முரவு – Prakrit muriya
முருங்கை – Skrit murungi, muangi
முல்லை – Skrit mallika
முள்ளங்கி – Skrit mullaka
மூடை – Skrit mutaaka
மேதி, வெந்தயம், மெந்தியம் – skrit mantha, methi
மை – Skrit masi
மொட்டை – Skrit munda
வசம், வசம்பு – Skrit vasaa
வம்பு (curved bamboo) Skrit bambu
வலை – Skrit val (turn around), valaya (circle)
விளையாட்டு – Skrit vilaasa
வீசு (fan) – Skrit vij, vyaj
வெருகு (tom cat) – Skrit biraara, billaala, bidaala
விளாம், வெளில் – Skrit bilva

யோகா முத்திரைகள்:


முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.

-நிலா-

அருட்பிரகாச வள்ளலார் எண்ணற்ற பல சித்துகளை செய்து காட்டி

அருட்பிரகாச வள்ளலார்
=====================
19ம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஞானியான அருட்பிரகாச வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க அடிகள் எண்ணற்ற பல சித்துகளை செய்து காட்டியுள்ளார். இருப்பினும் அடிக்கடி அதை செய்து காட்ட அவருக்கு எள்ளளவும் நாட்டம் இருக்கவில்லை.
பாதரசத்தை உள்ளங்கையில் ஊற்றி மூடிவைத்து விட்டு திறந்தபோது அது ரசமணியாக மாறியிருந்தது.
வந்த பக்தர்களுக்கு உணவு பரிமாற (பிக்ஷாண்டர்) இறைவனை வேண்ட, பாத்திரத்தில் அன்னம் குறையாமல் வந்தது. எல்லோரும் உண்டதுபோக மீதமும் இருந்ததாம். விளக்கில் எண்ணை இல்லாதுபோக தண்ணீர் விட்டு ஏற்றியுள்ளார். தில்லைக்கு போகாமலே இந்த சித்தி வளாகத்தின் உள்ளே தர்மசாலையில் ஒரு சீலை கட்டி தொங்க விட்டு, அதில் சிதம்பர ரகசியத்தை காண்பித்தார்.
அவருக்கு திருவொற்றியூர் வடிவுடை நாயகியும் தியாகேசரும் அளவில்லா அருள் பொழிந்தனர். முன்னொரு சமயம் சென்னையில் அண்ணன் வீட்டில் இருக்கும்போது சிறுவயதில், வீட்டிற்கு தாமதமாய் ஓர் இரவில் வந்தபோது வடிவுடை அம்மானே இவர் அண்ணியாக வந்து இவருக்கு அன்னமிட்டாள். இன்னொரு சமயம் வடலூரில் மழையில் எல்லோரும் நினைந்திருக்க இவர்மேல் ஒரு சொட்டு விழவில்லை.
வடலூர் சித்தி வளாகம் உள்ளே சுவாமிகள் ஏற்றிய தீபமும் தர்மசாலையில் உணவுசாலையில் ஏற்றிய அடுப்பின் தணலும் இன்றுவரை அணையாமல் காத்து வருகின்றனர். அவர் எழுதிய அருட்பா பெரிய சைசு கணக்கு புத்தகம் முழுதும் அடித்தல் திருத்தலின்றி முத்துமுத்தாக முழுமூச்சாக எழுதியுள்ளார். அதை நோட்டுபுத்தகத்தை திறந்து கண்ணாடி பேழைக்குள் வைத்துள்ளனர். இவற்றை எல்லாம் சில ஆண்டுகளுக்குமுன் அடியேன் அவற்றை சென்று தரிசித்து பரவசப்பட்டேன்.
சென்னையை சேர்ந்த மாசிலாமணி முதலியார் என்ற புகைப்படக்காரர் முன்னொரு சமயம் படம் எடுக்க அழைக்கப்பட்டார். அவர் எட்டு முறை எடுத்தபோதும் நெகடிவ்வில் வெண்ணிற ஆடை மட்டும் பதிவானது முகம் மற்றும் கை கால்கள் தெளிவாக இருக்கவில்லை. 'பதிவாகவில்லை என்றால் இதுவே சித்த ஞானிக்கு அடையாளம்' என்பாராம்வள்ளலார்.
அவருடைய தேகமே ஒளிரூபமாய் இருந்தபடியால் அவர் உடலுக்கு நிழல் விழாது, சூரிய ஒளியோ செயற்கை ஒளியோ அவர் உடலுக்குள் ஊடுருவியது. இவரைப்பற்றி இன்னும் சொல்லிகொண்டே போகலாம். அத்தனையும் அற்புதம்.
பிறகு அவர் அருளோடு படம் எடுக்க அதற்குப்பின் திருவொற்றியூரில் உள்ள மடத்தில் இதை வைத்து வண்ண ஓவியம் தீட்டப்பட்டது. இதுதான் பிற்பாடு உபயோகத்திற்கு வந்தது. இன்றும் அதைதான் பார்க்கிறோம். முதன் முதலில் ஏடுத்த அந்த அபூர்வ கருப்பு வெள்ளை படம் இங்கே உள்ளது. அவருடைய கையொப்பமும் இங்கே கொடுத்துள்ளேன். அருட்பெருஞ் சோதியை சிந்தையில் வைத்து தியானிப்போம்.
-- எஸ். சந்திரசேகர்

கடவுள் வருகின்ற தருணம் நம்முள் நடக்கும் அற்புதம்

அருட்பெரும்ஜோதி கடவுள் வருகின்ற தருணம் நம்முள் நடக்கும் அற்புதம் என்ன என்ன ?
=====================================================
1.மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்து விடும் 
வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்து விடும் 
கொதித்த லோகம் ஆசாரம் கொதிப்பெல்லாம் ஒழிந்தது விடும் 
கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது விடும்
==============================================
2. குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கி விடும்
குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கி விடும்
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது விடும்
விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது விடும்
==================================================
3.. கோபமும் காமமும் குடிகெட்டுப் போயி விடும்
கொடிய ஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆகி விடும்
தாபமும் சோபமும் தான்தானே சென்றது விடும்
தத்துவம் எல்லாம் தன வசம் நின்றத விடும் .
=====================================================
4.கரையாத நம் மனக் கல்லும் கரைந்தது விடும்
இறைவனோடு கலந்து கொள்ள நம் கருத்தும் விரைந்து விடும் .புரையா நிலையில் நம் புந்தியும் தங்கி விடும் .
பொய்படாக் காதல் ததும்பி மேல் பொங்கி அருட்பெரும்ஜோதி உடன் கலந்து விடுவோம் .
=================================================
ஆதாலால் அருட்பெரும்ஜோதி இறைவன் நம்முள் கலக்கும் வருகைக்காக ஏங்குவோம் ! அழுவோம் ! காத்திருப்போம் அன்பர்களே !
====================================================
மேற்கண்ட விளக்கம் வள்ளலார் அருளிய ,,ஆறாம் திருமுறை ,"இது நல்ல தருணம் " பதிகத்திலிருந்து எடுத்து இங்கே கையாளப்பட்டது .
==================================================
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி.
========================================================

A Day and Night of Brahma யுகம் என்றால் என்ன?


யுகம் என்றால் என்ன? எதை கொண்டு அவை நிர்ணயிக்கப்படுகிறது? அவற்றுக்கு அடிப்படை என்ன? எதை கொண்டு அவை பிரிக்கப்படுகிறது? மொத்தம் எத்தனை யுகங்கள் உள்ளது?
இவை அனைத்திற்கும் விடை “பிரம்மனின் காலம்”. சரி பிரம்மனின் காலம் என்றால் என்ன? யுகங்கள் எவ்வாறு பிரம்மனுடன் தொர்பு உடையதாகிறது?
இதை பற்றி ஒவ்வொருவரும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நம் புராணங்களும் இதிகாசங்களும் இந்த பிரம்மனின் கால அளவை கொண்டே நிகழ்வுகளை குறிக்கிறது. எனவே இதை பற்றி சற்று விரிவாக அலசலாம்.
மனிதர்களின் கால அளவும், தேவர்களின் கால அளவும் வேறுபடும். நமக்கு ஒரு வருடம் என்பது 12 மாதங்கள். ஆனால் தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருடம் என்பது ஒரு நாள்.
1 மனித வருடம் = 1 தேவ நாள்.
360 மனித வருடம் = 1 தேவ வருடம்.
இப்போது தேவர்களின் கால கணக்கை துவங்குவோம்.....
12000 தேவ வருடம் = 1 சதுர்யுகம் (43,20,000 மனித ஆண்டுகள்).
1 சதுர்யுகம் என்பது 4 யுகங்களை கொண்டது. அதாவது 12000 தேவ வருடங்களை நான்கு யுகங்களாக பிரிக்கலாம்.
கிருத யுகம் 17,28,000 மனித வருடம் / 4800 தேவ வருடம்.
திரேதாயுகம் 12,96,000 மனித வருடம் / 3600 தேவ வருடம்.
துவாபரயுகம் 8,64,000 மனித வருடம் / 2400 தேவ வருடம்.
கலியுகம் 4,32,000 மனித வருடம் / 1200 தேவ வருடம்.
அதாவது ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 மனித ஆண்டுகள் அல்லது 12,000 தேவ வருடங்கள். சதுர்யுகத்தை மஹாயுகம் என்றும் அழைப்பர்.
71 மகாயுகங்கள் = 1 மனுவந்தரம்.
மொத்தம் 14 மனுவந்திரங்கள் உள்ளன அவை :
1.சுவயம்பு
2.சுவாரோசிஷம்
3.உத்தமம்
4.தாமசம்
5.ரைவதம்
6.சாக்சூசம்
7.வைவசுவதம்
8.சாவர்ணி
9.தக்ச சாவர்ணி
10.பிரம்ம சாவர்ணி
11.தர்ம சாவர்ணி
12.ருத்திர சாவர்ணி
13.ரௌசிய தேவ சாவர்ணி
14.இந்திர சாவர்ணி
இப்போது நாம் இருப்பது 7 வது மனுவந்திரம்.
1 மனுவந்திரம் என்பது ஒரு மனுவின் ஆட்சிகாலம் என்பதை மட்டும் இப்போது நினைவில் வைத்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களை கட்டுரையின் கீழ் காண்போம்.
கல்ப காலம்:
ஒரு கல்பகாலம் என்பது பிரம்மனின் ஒரு பகலை மட்டும் குறிக்கும். எனினும் பகலுக்கு சமமான இரவும் பிரம்மனுக்கு உண்டு.பிரம்மனின் இரவு காலத்தில் எந்தவித படைப்பும் நிகழ்வும் இருக்காது. எனவே பிரம்மனின் பகலை மட்டும் பிரம்மனின் ஒரு நாள் என்று பேச்சு வழக்கில் வந்தது.
பிரம்மனின் கல்பகாலத்தில் 14 மனுவந்திரங்கள் அடங்கும். அதாவது ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் 1 மனு மற்றும் 1 இந்திரன் வீதம், 14 மனுக்கள் மற்றும் 14 இந்திரன்கள் தோன்றி மறைவார்கள் (இந்திரன் என்பது ஒரு பட்டம் மட்டுமே. ஒவ்வொரு மனுவந்திரத்திர்க்கும் ஒவ்வொரு இந்திரன் இருப்பார். இப்போது இருக்கும் இந்திரனின் பெயர் புரந்தரா).
2 மனுவந்திரத்திர்க்கு இடையில் ஒரு சிறு இடைவேளை காலம் இருக்கும்.
இந்த காலத்தின் பெயர் “ஸந்தியா காலம்”. ஸந்தியா காலத்தின் அளவு நான்கு கலியுகம் அளவு. அதாவது, 432000 X 4 = 1728000 மனித வருடங்கள்.
இதேபோல் 14 மனுவந்திரத்திர்க்கு பின்பு மீண்டும் ஒரு பெரிய இடைவேளை இருக்கும். அதுவே பிரம்மனின் இரவு.
எனவே பிரம்மனின் ஒரு பகலில், 71 X 14 மகாயுகங்களும்,15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.
14 மனுவந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 = 2,59,20,000 மனித ஆண்டுகள்.
2,59,20,000 = 6 மஹாயுகங்கள். ( 43,20,000 X 6 = 2,59,20,000).
ஆக பிரம்மனின் 1 பகல் என்பது 1000 சதுர்யுகம் ஆகும் (994 + 6 சதுர்யுகங்கள்). இதையே பிரம்மனின் நாள் என்றும் கல்பம் என்றும், கல்பகாலம் என்றும் கூறுவர்.
இவ்வாறு 360 நாள் (அ) 360 கல்பம் (அ) 360 X 1000 சதுர்யுகம் என்பது பிரம்மனின் ஒரு வருடம்.
பிரம்மனின் 100 வருடம் = ஒரு பிரம்மனின் ஆயுள்.
அதாவது பிரம்மனின் ஆயுள் என்பது 155,520,000,000,000 மனித வருடங்கள்.
அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும் இறைவனிடம் ஒடுங்குவார்.
ஸ்ஸ்ஸ்ஸ்..... இப்பவே கண்ணை கட்டுதே....
யுகங்கள் என்றால் என்ன.... அவை எப்படி பிரம்மனோடு தொடர்பு கொண்டுள்ளது என்று ஓரளவிற்கு விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்பம் அல்லது பிரம்மாவின் பகலுக்கு 'சுவேத வராஹ கல்பம்' என்று பெயர். இக்கல்பத்தினுள், 7-வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 28-வது மகாயுகத்தில், கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது. கி.பி.2015 என்பது கலியுக வருடம் 5116 – 17 என்பதை குறிக்கின்றது.
நவீன கால விஞ்ஞானம் இந்த உலகத்தில் உயிரினம் தோன்றிய காலத்தை கணித்து 1,972,944,456 வருடங்கள் என்று கூறுகிறது. மேலே உள்ள நமது யுகங்களின் கணக்கை வைத்து பார்க்கும் போது தற்போதைய பிரம்மனின் ஆயுள் சரியாக 1,972,944,456 வருடங்கள் என்பது தெளிவாகிறது. பிரம்மாவிற்கு இப்போது 51 வயது நடந்து கொண்டிருக்கிறது. பிரம்மாவின் ஆயுள் 100 என்றால், அதன் பின் பிரளயம் ஏற்பட்டு படைப்புகள் அழியும் என்றால் இன்னும் ஜீவராசிகள் உயிர்வாழ 49 பிரம்மா ஆண்டுகள் பாக்கியுள்ளன. அதாவது 76,20,48,00,000,000 வருடங்கள் இன்னும் பாக்கியுள்ளது. நவீன அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் மீதம் உள்ள ஆயுள் என்று கணக்கிட்ட வருடங்களும் கிட்டத்தட்ட இதுவே... ஆச்சரியமாக இருக்கிறதா? நம்பிக்கை இல்லாவிட்டால் கூகிள் செய்து பாருங்கள்.....
நமது வேதங்களை மிஞ்சும் எந்த விஞ்ஞானமும் இவ்வுலகில் இல்லை என்பதை பெருமையுடன் சொல்லுவோம்.


(காலோத்திர ஆகமம்) திருமந்திரம்


 ஆறு ஆதாரம்

1704. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம்கண்டு ஆங்கே முடிந்து முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.
பொருள் : அக நிலைகள் ஆறும் வருமாறு: நான்கு இதழ்கள் உள்ள மூலமும் (மூலாதாரம்), ஆறு இதழ்கள் உள்ள கொப்பூழும் (சுவாதிட்டானம்), பத்து இதழ்கள் உள்ள மேல்வயிறும் (மணிபூரகம்), பன்னிரண்டு இதழ்கள் உள்ள நெஞ்சமும் (அனாகதம்), பதினாறு இதழ்கள் உள்ள மிடறும் (விசுத்தி), இரண்டு இதழ்கள் உள்ள புருவநடுவும் (ஆஞ்ஞை), ஆகிய ஆறு இடங்களும் ஆறு ஆதாரங்கள் எனப்படும். இந்நிலைக் களங்களின் நினைந்து வழிபடக் காலத்தைத் தோற்றுவித்துத் தொழிற்படுத்தும் சிவபெருமானின் திருவடி காணலாகும்.
1705. ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசக்தி
போதா லயத்துஅ விகாரந் தனிற்போத
மேதாதி ஆதார மீதான உண்மையே
பொருள் : ஓசைமெய்யாகிய நாத தத்துவத்தின்கண் பன்னிரு கலைகளோடு கூடியது சூரிய மண்டலம்; பதினாறு கலைகளோடு கூடியது திங்கள் மண்டலம் நிலமுதல் நாதம் ஈறாகச் சொல்லப்பட்ட முப்பத்தாறு மெய்களும் மேலாகப் பேராற்றலாகிய திருவருள் அம்மை வீற்றிருந்தருள்வன். இயற்கை உணர்வின் இருப்பிடமாகிய தனிமுதற் சிவன் அதற்குமேல் காணப்படுவன். இவற்றிற்கு எல்லாம் சார்பு நிலைக்களமாக வுள்ளதும் அச்சிவனேயாவன்.
1706. மேல்என்றும் கீழ்என்று இரண்டறக் காணுங்கால்
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகிநின் றானே.
பொருள் : மேல் கீழ் என்னும் பாகுபாடுகள் நீங்கி ஆராயுமிடத்துத் தான், யான், நீ என்னும் மூவிடப் பெயர்களும் அவன், அவள், அது என்னும் திணைபாற் பெயர்களும் கூடிப் பெயர்த்தன்மை ஆறாகும். நிலவுலகம் எங்கணும் பரந்து நிறைந்த முழுமுதற் தனிப்பொருளாம் சிவன் வேண்டாமை கொடுத்தலின் காரும், வேண்டக் கொடுத்தலின் கற்பகமும் ஆகி நின்றருள்கின்றனன். மேகத்தையும் கற்பகமரத்தையும் ஒப்பாகக் கொடுப்பவன் என்க: (கேட்காமல் கொடுப்பது - மேகம் கேட்டுக் கொடுப்பது - கற்பகம்)
தொடரும் .....

விபூதியை எப்படி பூசிக்கொள்வது?


விபூதியை எடுக்க உங்கள் மோதிர விரலையும் கட்டைவிரலையும் பயன்படுத்த வேண்டும். இதற்குக் காரணம், உங்கள் உடலில் உண்மையிலேயே மிக முக்கியமான பகுதி என்று சொன்னால், அது உங்கள் மோதிர விரல்தான். அதிகபட்ச நன்மைகளைப் பெற, விபூதியை நீங்கள் உங்கள் உடலில் இட்டுக்கொள்ள வேண்டிய இடங்கள், புருவமத்தி, தொண்டைக்குழி, விலா எலும்புகள் சேரும் மார்புப் பகுதி. இவ்விடங்களில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும் என்பதை காலம்காலமாக இந்தியாவில் அறிந்திருக்கிறார்கள். இவ்விடங்களில் விபூதி இட்டால், இவ்விடங்களின் உள்வாங்கும் திறன் அதிகரிக்கும். இதனால் கிடைக்கும் பலன்கள்:
1. அனாஹத சக்கரம் (விலா எலும்புகள் சேருமிடத்தில், நெஞ்சுக்குழியில்) –
இவ்விடத்தில் விபூதி அணிந்தால், வாழ்வை அன்பாக உணர முடியும்.
2. விசுத்தி சக்கரம் (தொண்டைக் குழி) – இவ்விடத்தில் விபூதியை பூசுவது உங்களை சக்திமிக்கவராக மாற்றும். சக்தி என்றால் உடலளவிலோ, யோசிக்கும் திறத்திலோ அல்ல. பல்வேறு வழிகளில் ஒரு மனிதன் சக்திசாலியாக இருக்க முடியும். உங்கள் சக்தி உறுதி பெறும்போது, மிக வலிமையாக இருக்கும்போது, நீங்கள் இருப்பதே ஒரு சூழ்நிலையை மாற்றும் வல்லமை கொண்டிருக்கும். நீங்கள் ஏதும் செய்யவோ பேசவோ கூடத் தேவையிராது. நீங்கள் சும்மா அமர்ந்திருந்தாலே அந்த சூழ்நிலை மாறிவிடும். இதுபோன்ற சக்தியாய் நீங்கள் வாழ்வை உணர, தொண்டைக்குழியில் விபூதி வைக்க வேண்டும்.

3. ஆக்ஞா சக்கரம் (புருவமத்தி): – வாழ்வை
 ஞானமாகப் பெறுவதற்கு ஆக்ஞா சக்கரத்தில் விபூதி இட வேண்டும். 

4. இது தவிர, இரண்டு காதுமடல்களுக்குப் பின்னும் உள்ள எலும்பின் கீழ் இருக்கும், சிறு குழியிலும் விபூதி வைக்கலாம். 

5. ஆண்கள் விபூதியை உங்கள் வலது கால் பெருவிரலிலும் வைக்கலாம். பெண்கள் விபூதியை உங்கள் இடது கால் பெருவிரலில் வைக்கலாம். விபூதியைப் பயன்படுத்துவது ஒரு ஆழமான விஞ்ஞானம். 

ஆனால் இன்றோ, அதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல், நெற்றியில் வெறுமனே பட்டையிட்டுக் கொள்கிறோம். இது போதாதென்று, ஒரு வகையில் பூசிக் கொள்பவன், வேறு விதத்தில் பூசிக் கொள்பவனுடன் ஒத்துப்போக மாட்டான். இது முட்டாள்த்தனம். விபூதியை சிவனோ, இந்தக் கடவுளோ, அந்தக் கடவுளோ கொடுத்ததல்ல. இது மூடநம்பிக்கையும் அல்ல. நம் இந்தியக் கலாச்சாரத்தில், ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு விபூதியை ஒரு கருவியாகப் பார்த்தார்கள். இந்த விஞ்ஞானத்தை மீண்டும் உயிர்பெறச் செய்து, நாம் பயன்பெறுவோமாக.

காகபுசுண்டர் பிரான் தீர்க்கதரிசனம்

பல்லவி
கூவுதையா சேவல் கூவுதையா
கொக்கரித்துக் கூத்தாடிக் கூவுதையா
அனுபல்லவி
கூவுகின்ற சத்தமத்தின் குறிப்பறி யாதவர்க்குக்
கொடிய னரகமென்றும் கூவுதையா
சரணம்
கணபதி வந்தாரென்றும் கூவுதையா - அவர்
கலியுக வரதரென்றும் கூவுதையா
தேவர்கள் வந்தாரென்றும் கூவுதையா - இந்தச்
செகமெல்லாம் ஓர் குடைக்குள் கூவுதையா
அரசாள வந்தாரென்று கூவுதையா - ஈசன்
அவதாரம் செய்தாரென்றும் கூவுதையா
மும்மூர்த்தி வந்தாரென்றும் கூவுதையா - இந்த
மூவுலகும் கொக்கரித்துக் கூவுதையா
ஏகபரா பரவஸ்து வாகி - இங்கே
ஏசுவும் வந்தாரென்றும் கூவுதையா
ஈசாஅ லைகிஸ்ஸலாம் வந்தாரென்றே
இன்கிதமாய்க் கொக்கரித்துக் கூவுதையா
மகதிஅ லைகிஸ்ஸலாம் வருவாரென்றும்
வகைவகையாய்க் கொக்கரித்துக் கூவுதையா
திசாலும் வந்தாரென்றும் கூவுதையா - இந்தச்
செகமெல்லாம் கொக்கரித்துக் கூவுதையா
வீரபோக வசந்தரேன்று சொல்லினித்தம்
விதவிதமாய்க் கொக்கரித்துக் கூவுதையா
னீதிக்கொடி நாட்டவேன்று தேவரெல்லாம்
னீணிலத்தில் வந்தார்என்றும் கூவுதையா
சாஸ்திரங்கள் சொன்னபடி தவராதிங்கு
சகலரும் வந்தாரென்றும் கூவுதையா
ஆகாய மாய்ப்பறந்தும் கூவுதையா - எண்ணி
அண்டமெல்லாம் சுற்றிவந்தும் கூவுதையா
இரவும்ப கலுமாய்க் கூவுதையா - அதே
ஏகாந்த மாயிருந்தும் கூவுதையா
அற்புதங்கள் காட்டியுமே கூவுதையா - னித்தம்
அந்தரமாய் னின்றுகொண்டும் கூவுதையா
வேதங்கள் சொல்லியுமே கூவுதையா - னல்ல
வேதாந்தம் காட்டியுமே கூவுதையா
சாத்திரங்கள் சொல்லியுமே கூவுதையா - உலகில்
சகலருக்கும் தோணும்படிக் கூவுதையா
மானிட ரூபம்கொண்டு தேவரெல்லாம்
வையகத்தில் வந்தாரென்றும் கூவுதையா
பொய்கொலை களவுகள் கூடாதென்றும்
பொருந்தவே கொக்கரித்து கூவுதையா
துஷ்டர் மடிவாரென்றும் கூவுதையோ - இன்னம்
சொற்பனா ளிருக்குதென்றும் கூவுதையா
உலகம் அழியுமென்றும் கூவுதையோ - னிலையாய்
உத்தமர் இருப்பாரென்றும் கூவுதையா
வேதம்த வறுகின்ற மானிடர்க்கு - னல்ல
வீரவாள் வந்ததென்றும் கூவுதையா.
விளக்கம்:
காகபுசண்டர் அல்லது காகபுருடர் அல்லது காகபுஜண்டர் என்பவர் சித்தர்களில் ஒருவர். இவர் ரோமச முனிவரின் தந்தை. இவர் மாயூரத்தில் (மயிலாடுதுறை) பிறந்தார். மயூரநாதனின் அருளால் சாகா வரம் பெற்று காகமாக பல ஆண்டுகள் வாழ அருள் பெற்றதால் காகபுசுண்டர் என்ற பெயர் பெற்றார். காகபுசுண்டர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.இவர் வாழ்ந்த காலம் தோராயமாக 5000 ஆண்டுகளுக்கு முன்னர்,அதாவது கலியுக தொடக்கத்திற்கும் முன்னாள். அந்த காலத்திலேயே அவர் பாடல்களில் தீர்க்கதரிசனமாக இயேசு பிரானின் வரவையும்,கடைசி அவதாரமாகிய மகதி அலைகிஸ்ஸலாம்(கல்கி) பற்றியும்.ஈசனே அந்த அவதாரம் செய்தாரென்றும்.தேவர்களெல்லாம் இந்த கலியை அழிக்க இந்த பூலோகத்தில் பிறவி எடுப்பார்கள் என்றும், மானிட ரூபம்கொண்டு தேவரெல்லாம் வையகத்தில் வந்தாரென்றும், பொய்கொலை களவுகள் கூடாதென்றும், துஷ்டர் மடிவாரென்றும், உலகம் அழியுமென்றும், உத்தமர் இருப்பாரென்றும், வேதம்த வறுகின்ற மானிடர்க்கு வீரவாள்(தீர்ப்பு) வந்ததென்றும் இந்த யுகத்தில் நடை பெற்றும், பெற்றுக்கொண்டும், பெறவும் இருக்கும் விஷயங்களை தெள்ளத் தெளிவாக விளம்புகின்றார்.
இந்த பாடலில் அவர் மெய் பாரவான்கள் அனைவரையும் பற்றி பாடுகின்றார். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்". மதம் என்ற ஒன்று கிடையாது .மனிதனாக தனக்குள் பிரிவை ஏற்படுத்திக் கொண்டு அதில் தத்தளிக்கின்றான்

வில்வம்

 சிவ அடையாலம்களில் பிரசாதமாக வரும் மற்றவை வில்வம் .
இதை ஏன் சிவ பெருமானுக்கு மட்டும் உரியது என்றும் ,பிடித்தது என்றும் தெரிந்து கொள்வோம் .

விஸ்வம் என்றால் புறத்தில் நிறைந்து இருப்பது என்று பொருள் .அதாவுது வெளியே எங்கும் நிறைந்து நிற்பது ,உதாரணம் விஸ்வ நாதம் --எல்லாவற்றிலும் நிறைந்த நாதம் .

வில்வம் என்பது அகத்தில் நிறைந்து நிற்பது என்று பொருள் .அதாவது உள்ளே நிறைந்து நிற்பது என்று பொருள் .

நம்முடைய பூமியில் பல விதமா தாவிரம்கள் உள்ளது என்று நாம் அறிவோம்
இங்கே வில்வ மரத்தை ஏன் பெருமனருக்கு தேர்வு செய்தார்கள் .
வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும் .
வில்வமரம் நெருப்பு அம்சம்(பனி கட்டி ) உடையது .இதில் உள்ள ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது .
இதை வேறு விதமாக கவனிக்க வேண்டும் .

சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும் .
சிவ பெருமான் தொழிலே தவறான செயல்களை அழிப்பது தான் .
நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது .அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல் .

கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும் ,இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும் .
ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனிமலையில் உள்ள வெப்பம் .
சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவபெருமான் மறைமுக நெருப்பு ,
சக்தி தேவி வெளி நெருப்பு சிவ பெருமான் உள்ளுக்குள் நெருப்பு .
பனிக்கட்டிகளை கைகளில் வைத்து இருந்தாலும் உள்ளே வெப்பம் உண்டாகும் நெருப்பு கதிர்களை கைகளில் பிடித்து கொண்டால் வெளியே
வெப்பம் உண்டாகும் .

சித்தர்கள் வில்வ மரத்தை பற்றி சொல்லும் சிவ வழிபாடு செய்த அசுரர்கள் சைவர்களாக மாறி சிவகதி அடைந்து சதுர மலை தலத்தில் வில்வமாக மாறி பெருமானுக்கு சேவை செய்வதாய் சொல்கிறார்கள் .
இவர்களை வழிபாடு செய்து விட்டு இலைகளை பறிக்க சொல்லி உள்ளார்கள்
சில விதி முறைகள் வில்வ இலைகளை பறிக்க உண்டு .
பௌர்ணமி /அம்மாவாசை / அஷ்டமி அன்று பறிக்ககூடாது.முன் நாட்களில்
பறித்து கொள்ள வேண்டும் .

எங்கு வில்வமரம் அதிகம் உள்ளதோ அங்கு பனிமலை தன்மைகள் உண்டாகும் .
108 வில்வமரத்தை நட்டு வைத்து அவைகளை வளர்த்தல் சிவ ஆசிகளை எளிமையாக பெறமுடியும் .
ஒரு நாளைக்கு ஒரு இலை என்று 48 வது நாளில் 48 (எண்ணிக்கை ) இலைகளை உன்ன உடலில் உள்ள அக நோய்கள் நீங்கும் என்று அகத்திய
பெருமான் சொல்கிறார் .

மிகுந்த குளிர் தன்மைகளை உடைய பெருமாளான நாராயணர்
ஸ்ரீ ரெங்கத்தில் தண்ணீரின் நடுவில் படுத்து இருக்கும் பொழுது வெப்பம் தேவை என வில்வ மரத்தில் அடியில் படுத்து இருக்கிறார் .
ஆம் இங்கே வில்வம் தல விருட்சம் என்று புரிந்து கொள்வோம்