Wednesday, March 25, 2015

கடவுள் வருகின்ற தருணம் நம்முள் நடக்கும் அற்புதம்

அருட்பெரும்ஜோதி கடவுள் வருகின்ற தருணம் நம்முள் நடக்கும் அற்புதம் என்ன என்ன ?
=====================================================
1.மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்து விடும் 
வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்து விடும் 
கொதித்த லோகம் ஆசாரம் கொதிப்பெல்லாம் ஒழிந்தது விடும் 
கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது விடும்
==============================================
2. குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கி விடும்
குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கி விடும்
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது விடும்
விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது விடும்
==================================================
3.. கோபமும் காமமும் குடிகெட்டுப் போயி விடும்
கொடிய ஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆகி விடும்
தாபமும் சோபமும் தான்தானே சென்றது விடும்
தத்துவம் எல்லாம் தன வசம் நின்றத விடும் .
=====================================================
4.கரையாத நம் மனக் கல்லும் கரைந்தது விடும்
இறைவனோடு கலந்து கொள்ள நம் கருத்தும் விரைந்து விடும் .புரையா நிலையில் நம் புந்தியும் தங்கி விடும் .
பொய்படாக் காதல் ததும்பி மேல் பொங்கி அருட்பெரும்ஜோதி உடன் கலந்து விடுவோம் .
=================================================
ஆதாலால் அருட்பெரும்ஜோதி இறைவன் நம்முள் கலக்கும் வருகைக்காக ஏங்குவோம் ! அழுவோம் ! காத்திருப்போம் அன்பர்களே !
====================================================
மேற்கண்ட விளக்கம் வள்ளலார் அருளிய ,,ஆறாம் திருமுறை ,"இது நல்ல தருணம் " பதிகத்திலிருந்து எடுத்து இங்கே கையாளப்பட்டது .
==================================================
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி.
========================================================

No comments:

Post a Comment