Sunday, November 30, 2014

ஒகர வரிவடிவத்தின் சிறப்பு



ஒ என்ற உயிர்எழுத்தானது தெய்வீகத்தன்மை
வாய்ந்தது. உள் உறுப்புக்களின் வடிவம், மூளைக்கருக்கள் போன்றவற்றை ஒப்பிடும்போது காணலாம். இவை பக்கச்சார்பான வரலாற்றை காட்டுவதாக உள்ளது.

SOLAR PAINT வண்ணக் கலவையில் சூரிய மின்சக்தி


சூரிய ஒளி மின்சாரம்
SOLAR POWER SUPER POWER
தமிழ்நாட்டை சூரிய ஒளி மின்சார மாநிலம் ஆக்குவோம்!
மின் மிகை மாநிலம் ஆக மாற்றுவோம்!!!!!
ஒவ்வொரு வீட்டிலும் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டால் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்து மின்னாற்றல் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளலாம். இதை முன்னெடுக்க வேண்டும் என அரசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவதில் ஒருவிதமான சுணக்கம் நிலவுகிறது. சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்குப் பொருளாதாரச் சிக்கல் தடையாக உள்ளது எனக் கூறப்படுகிறது.
இதனாலேயே சூரிய சக்தி மின்சாரம் என்னும் சுற்றுச்சூழல் சார் மின் உற்பத்தி இன்னும் பரவலாகாமல் உள்ளது. இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவுவது போன்ற ஒரு தொழில்நுட்பம் கட்டுமானத் துறையில் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானத் துறையில் ஹாட் டாப்பிக்காகப் பேசப்படும் அந்தத் தொழில்நுட்பம் திரவ நிலையில் உள்ள சோலார் பேனல்களே.
அதாவது, வழக்கமாக சோலார் மின்சார உற்பத்திக்கு சூரியசக்தி மின் தகடுகள் பயன்படும். இவை திட நிலையில் காணப்படும் ஆனால் சோலார் பெயிண்டுகள் திரவ நிலையில் காணப்படும் இவற்றிலிருந்து சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கலாம் என்னும் உத்தியே கட்டுமானத் துறையில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூரியக் கதிர்களில் வெளிப்படும் ஒளி ஆற்றலிலிருந்து மின்சாரத்தை உருவாக்கும் முறையில் இதுவரை சூரிய சக்தி மின்தகடுகளே பயன்பட்டுவந்தன. ஆனால், இத்தகைய சூரிய சக்தி மின்சார உற்பத்திக்குத் திரவ நிலையில் சோலார் பேனல்கள் உருவாகும் காலம் மிகச் சமீபத்தில் வந்துள்ளது என்கிறார்கள். தளங்களிலும்,சுவர்களிலும் சோலார் பேனலாகச் செயல்படும் வகையிலான பெயின்டைப் பூசும்போது அதிலிருந்து மின் சக்தியை உற்பத்தி செய்ய இயலும் என்று தெரிவிக்கின்றனர் அறிவியலாளர்கள்.
திரவத் தகடு
ஒளி ஆற்றலை மின்னாற்றலை மாற்றும் திறன் கொண்ட சோலார் செல்களின் தொகுப்பே சோலார் பேனல் எனச் சொல்லப்படுகிறது. பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகான் என்னும் வேதிப்பொருளைப் பயன்படுத்தித்தான் இத்தகைய சூரிய சக்தி மின் தகடுகளை உருவாக்குகின்றனர். மெல்லியதாக இந்தச் சூரியசக்தி மின் தகடை உற்பத்தி செய்ய அதிகச் செலவு பிடிக்கும் என்கிறார்கள். இந்தச் செலவைக் குறைத்து சூரியசக்தி மின் தகடை உருவாக்கும் முயற்சிகளும் உலகெங்கிலும் நடந்துவருகின்றன. இந்த முயற்சியின் விளைவாக, பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகைப் பொருட்களைச் சூரியசக்தி மின் தகடாகப் பயன்படுத்தினால் அதிக அளவிலான மின் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதற்கு ஆகும் செலவும் மிகவும் குறைவு என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இது திரவ வடிவில் காணப்படுவதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சூரியசக்தி மின் தகடைச் சுவர், தரை என எந்தப் பகுதியிலும் வண்ணம் போல எளிதில் பூச முடியும். சூரிய ஒளி படும் அனைத்து இடங்களிலும் இதைப் பூசினால் அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூழல் உருவாகும். இது மட்டுமன்றி, கார்பனை அடிப்படையாகக் கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மெல்லிய பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்கும் செலவு குறைவாகவே ஆகும் என நம்பப்படுகிறது.
சோலார் கொடிகள்
இந்நிலையில் சோலார் கொடிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கண்டுபிடிப்புக்கும் வெற்றி கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அநேக செயற்கை இலைகளைக் கொண்டு கொடிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ள இதற்கு ‘சோலார் ஐவி’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் கொடிகளை வீட்டின் வெளிப்புறத்திலுள்ள சுவர்களில் படர்த்திவிட்டால் போதும் அவற்றில் படும் சூரிய ஒளியிலிருந்து, அவை மின்னாற்றலைப் பிரித்து மின்சாரம் உற்பத்தி செய்ய உதவும். இயற்கையான கொடிகளைப் போன்று கண்ணைக் கவரும் விதமாக அழகாகப் படர்ந்திருக்கும். 

வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் உற்பத்தி செய்துகொள்ளலாம். இதில் போட்டோவோல்டெய்க் பேனல்கள் எனப்படும் நுட்பமான மெல்லிய தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. நமக்கு எவ்வளவு மின்சாரம் தேவையோ அதற்கு ஏற்ப இத்தகைய கொடிகளைப் படரவிடலாம். பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் இத்தகைய கொடிகள் கிடைக்கின்றன. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள். இறுதிக்கட்ட ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், இது பயன்பாட்டுக்கு வந்துவிடும் எனக் கூறுகிறார்கள்.

Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை அறிய வழி

உங்கள் Facebook பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள்.
கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும்.
முதலில் உங்களுடைய facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள்.
தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும்.
இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் {“list” அல்லது
friendslist என்று Type செய்து Enter செய்யவும்.
நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும்.
இது மாதிரி {“list””1000011 345400-2″, “10000043254566 -3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும். அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய
fecebook account number ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு.
மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கையாகும் .
இப்பொழுது new tab-ல் www.facebook.com/ என்று type செய்து அதன் அருகில் fecebook account number ஐ copy செய்து
past செய்யவும். இப்பொழுது Enter கொடுக்கவும் உங்களின் profile ஐ நோட்டமிட்டவரின் profile ஓபன் ஆகும்..!

SAFETY APPS for ur Children உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க / கண்காணிக்க ஒரு இலவச ஆப்ஸ்.

பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில்
மடியில் நெருப்பு கட்டி கொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும்
புது வகை ஆப்பை ஆன்ட்ராயிட் / ஆப்பிள்பிளாட்பாரத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளின் மொபைல் ஃபோனில் இதை இன்ஸ்டால்
செய்து விட்டால் – கொஞ்சம் கவலை இல்லாமல்
இருக்கலாம்.
இதன் மூலம் உங்களின் பிள்ளைகளை நீங்கள் துல்லியமாக கண்காணிக்க முடியும். அவர்கள் எங்கு இருக்கின்றனர் எங்கு செல்கின்றனர் – ஏதாவது ஒரு இடத்தில் அதிக நேரம் நடமாட்டம் இல்லாமல்
இருக்கிறார்களா என்று வீட்டின் கணனியில் நீங்கள்
அவர்கள் இருக்கும் ஊர் – தெரு – கதவிலக்கம் முதற் கொண்டு பார்க்க முடியும்.
அது போக இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்திருக்கும்
பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவாது விபரீதம்ஏற்படுகிறது என உணர்ந்தால் இதில் உள்ள கார்டியன் அலர்ட் – “Guardian Alert” என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு அவர்கள் ஆபத்தில் உள்ளார்கள் என இலவசமாக தகவல் வரும்.
இந்த அலெர்ட் வசதி பெற்றோர் அல்லது பலநண்பர்களுக்கு கூட ஒரே நேரத்தில் தெரிவிக்க இயலும். சில சமயம் நீங்கள் ஒரு இடத்தில் மாட்டிகொண்டீர்கள் அல்லது அங்கிருந்து யாரும் சந்தேகபடாமல் தப்பிக்கவும் இதில்
இன்னொரு வசதி உண்டு அது தான் ஃபேக் கால் – “Fake Call” – மொபைலை நோண்டுவது போல் இந்த பட்டனை அழுத்தினால் உங்க ஃபோனுக்கு சிக்னல் இல்லைனா கூட கால் வரும் – உடனே நீங்களும் உங்களுக்கு கால் வந்திருக்கிறது – எக்ஸ்கியூஸ் மீன்னு எஸ் ஆகிடலாம் – இது பிள்ளைகள் மற்றும் தனியே வேலைக்கு செல்லும் பெண்கள், இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மிகப்பெரிய
வரப்பிசாதாமக அமையும்.
உடனே தயக்கம் என்ன – மொபைல் இல்லாத வளர்ந்த
பிள்ளைகளே இல்லை என்னும் இந்த காலத்தில் இந்த
வசதியை இலவசமாய் செய்து கொடுங்கள்
உங்களின் பிள்ளைகளின் கவலையை அடியோடு மற்ந்து விடுங்கள்.
இதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் ந்டவடிக்கையை கூட
நீங்கள் கண்கானிக்க முடியும். இது பல மாணவ /
மாணைகளின் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க
முடியும். என்ன மகிழ்ச்சி தானே பெற்றோர்களே!?
Apple Patrons FREE Download Link - https://itunes.apple.com/in/
app/bsafe-personal-safety-app/id459709106?mt=8
Android Achubichus FREE Download Link - https://
play.google.com/store/apps/details?
id=com.bipper.app.bsafe&hl=en, நன்றி - தோழி சியாமளா

ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம் நவம்பர் 30:

ரேடியோவை கண்டுபிடித்தது யார் ?

 அவரின் வாழ்க்கை இணையில்லாத உழைப்பு,அளவில்லாத தன்னம்பிக்கை,கூடவே மார்க்கோனியின் துரோகம் ஆகியவற்றால் இணைந்து உருவானது. அந்த வலி தரும் கதையை தெரிந்து கொள்வோம்

ஜகதீஷ் சந்திர போஸின் அப்பா ஆங்கிலேய அரசில் உயர் பதவியில் இருந்தவர், ஆனாலும்,வித்தியாசமான நபர். ஏழைகளுக்கு தொடர்ந்து உதவுகிற காரியங்களை செய்து கொண்டிருந்தார் ; மக்களுக்கு உதவ தன் சொத்துக்களை பெருமளவில் செலவிட்டார். எளியவர்கள் உயரவேண்டும் என்பது மட்டுமே அவர் மனதில் இருந்தது. ஆங்கிலப்பள்ளிக்கூடங்களில் தன் மகனை படிக்க அனுப்பாமல் தாய்மொழியான வங்கமொழியில் எளியவர்களின் பிள்ளைகளோடு போஸை படிக்க வைத்தார். இயற்பியலில் போஸ் பட்டம் பெற்றதும் அவரின் பிள்ளையை இங்கிலாந்துக்கு படிக்க அனுப்ப முடிவு செய்தார். கண்டிப்பாக சிவில் சர்வீஸ் வேலைக்கு தன் மகன் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். காரணம் அது எளியவர்களிடம் இருந்து அவனை பிரித்துவிடும் என்கிற உறுதியான நம்பிக்கை அவரிடம் இருந்தது. மக்களுக்கு சேவை செய்யப்பயன்படும் மருத்துவம் படிக்ககொடுமையான வறுமைக்கு நடுவிலும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அனுப்பினார். அங்கே போய் பிணவறைகளின் நாற்றம் பொறுக்காமல் இயற்கை அறிவியல் மற்றும் அறிவியலில் பட்டம் பெற்று போஸ் திரும்பினார்.

ரிப்பன் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார். இந்தியர்களை மனிதர்களாக நடத்தியவர் அவர். மாநில கல்லூரியில் போஸ் பேராசிரியர் ஆகியிருந்தார். அவருக்கு முழுச்சம்பளத்தை இந்தியர் என்பதால் தர மறுத்தார்கள். மூன்று வருடம் சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் சிறப்பாக நடத்தினார் இவர். அசந்து போய் மூன்று வருட பாக்கியோடு ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளம்
தந்தார்கள்.இந்திய கல்வித்துறை பணிக்கு நியமனம் செய்வதாக உறுதியளித்தார் ரிப்பன். கடும் போராட்டத்துக்கு பின் அவரை அப்பதவிக்கு கொண்டு வந்தார் ரிப்பன்.

முப்பத்தைந்து வயது வரை பாடங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருந்த போஸுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று தோன்றியது. மாக்ஸ்வெல் மின்காந்த அலைகள் பற்றி குறித்திருந்தார் ; அவற்றை உருவாக்கி காட்டியிருந்தார் ஹெர்ட்ஸ். இருபத்தி நான்கு அடி மட்டுமே அளவு கொண்ட சிறிய அறையில் எந்த அறிவியல் உபகரணங்களோ,வழிகாட்டியோ இல்லாமல் இதுசார்ந்த ஆய்வில் தானே இறங்கினார் போஸ். லாட்ஜின் ஹெர்ட்ஸ் மற்றும் அவருக்கு பின்வந்தவர்கள் என்கிற புத்தகம் தந்த உந்துதலில் இயங்கினார். கொஹரர் என்கிற கருவியை ஏற்கனவே பான்லி என்கிற அறிஞர் உருவாக்கி இருந்தார் அதன் மூலம் ரேடியோ அலைகளை கண்டறிய முடியும் என்று அதை செம்மைப்படுத்திய லாட்ஜ் சொன்னார். ஆனால்,அந்தக்கருவி நிறைய குறைபாடுகளோடு இருந்தது. அதனால் சீராக எந்த ரேடியோ அலைகளையும் உணரமுடியவில்லை. போஸ் நிறைய மாற்றங்களை அந்த கருவியில் கொண்டுவந்தார் .

இன்னமும் குறித்து சொல்வதென்றால் அதை முழுமையாக மாற்றியமைத்தார். பாதரசத்தை அதில் சேர்த்தார் ; சுருள் வடிவ ஸ்ப்ரிங்குகளை இணைத்தார்.கூடவே டெலிபோனை பயன்படுத்தினார். கூடவே குறைகடத்தி படிகத்தை கருவியில் இணைத்து பார்த்தார். வெறுமனே அலைகள் இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டிருந்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து,மீண்டும் அதை திரும்பப்பெறுகிற மாயத்தை செய்தது. அந்த அற்புதம் அப்பொழுது தான் நிகழ்ந்து. ஐந்து மில்லிமீட்டர் அளவில் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு மைக்ரோவேவ் என்று அறியப்படுகின்றன. மின்காந்த அலைகளின் எல்லா பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ். கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்த முதல் ஆளுமை ஆனார். அதைக்கொண்டு ஒரு பெல்லை ஒலிக்க வைத்து வெடிமருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ். கூடவே அதைக்கொண்டு சில மைல் தூரத்துக்கு ரேடியோ கொண்டு சென்று மீண்டும் பெறவும் செய்து சாதித்து காண்பித்தார் போஸ். அதாவது உலகின் முதல் ரேடியோ எழுந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்க்கோனி ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாக சொன்னார்.


ஜகதீஷ் சந்திர போஸ் பயன்படுத்திய கொஹரரை மார்க்கோனிக்கு இத்தாலிய கடற்படையில் இருந்த அவரின் நண்பர் சோலாரி அறிமுகப்படுத்தினார். அப்படியே அதை எடுத்து தன்னுடைய கருவியில் பொருத்தினார் மார்க்கோனி. ஒரே ஒரு மாற்றம் U வடிவத்தில் போஸ் அமைத்திருந்த பாதரச ட்யூபை நேராக மாற்றினார். S என்கிற மோர்ஸ் குறியீட்டை தான் அனுப்பியதாக வேறு அறிவித்தார். அதை பதிவு செய்த ஆவணங்கள் இல்லை என்பது தனிக்கதை. போஸ் செய்த ஒரு தவறு தான் கண்டுபிடித்த கொஹரர் கருவியை பேடன்ட் செய்ய மறுத்தார் ; “என் தந்தையைப்போல நானும் மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் எனக்கில்லை” என்றார். அந்த போஸ் கண்டுபிடித்த கருவியை தான் கண்டுபிடித்தேன் என்று வெட்கமே இல்லாமல் பதிவும் செய்துகொண்டார் மார்க்கோனி.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் போஸ் செய்த உதவி அளவில்லாதது என்று ஒன்றரை பக்கம் எழுதிவைத்த மார்க்கோனிதான் திருடியதை பற்றி ஒரு வரி கூட மறந்தும் சொல்லவில்லை. இந்த பாதரச கொஹரர் என்று யாரேனும் கேள்வி கேட்டாலே பேய் முழி முழித்தார் அவர். ஒரு காலத்துக்கு பிறகு அப்படியே ரேடியோவை தான் தான் கண்டுபிடித்தேன் என்று உலகம் ஏற்றுக்கொண்டு நோபல் பரிசு கொடுத்த பிறகு இரும்பு கொஹரர் என்று மாற்றிக்கொண்டு கச்சிதமாக சமாளித்தார். உண்மையில் அவருக்கு மின்காந்த அலைகளை பற்றி தெரிந்தே இருக்கவில்லை என்று அவரே ஒரு நேர்முகத்தில் ஒப்புக்கொண்டார். அறிவியல் அறிவே இல்லாமல் இருபத்தி இரண்டு வயதில் போஸின் படைப்பை அப்படியே திருடி அவர் ரேடியோவை உருவாக்கியதாக சொன்னார் . போஸ் பெயரை மறந்தும் கூட வெளியே விடவில்லை அவர்கள்,

போஸ் தான் அதைக்கண்டுபிடித்தார் என்று வருங்காலத்தில் வந்த அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். மார்க்கோனி ஏமாற்றியது ஊர்ஜிதமானது. உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. மார்க்கோனி தான் ரேடியோவை கண்டுபிடித்தார் என்று இனிமேல் யாரவது சொன்னால் தலையில் கொட்டி அதை கண்டுபிடித்தது இந்தியன் போஸ் என்று சொல்லுங்க..

- பூ.கொ.சரவணன்

RTI தகவல்களை தேர்ந்தெடுத்து வழங்குவது


ஒரு அலுவலகத்தில் தகவல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும், வழங்குவது (supply the information available in any material form) என்பது பொது தகவல் அலுவலரின் கடமையாகும். ஆனால் பிரிவு 2(i)-ல் வரையறை செய்யப்பட்ட பதிவுரு (Record)-ல் இருந்து தகவல்களை திரட்டி/தேர்ந்தெடுத்து (ஆராய்ச்சி செய்து) வழங்குவது என்பது பொது தகவல் அலுவலரின் கடமைக்கு அப்பாற்பட்டது. உதாரணமாக, ஒரு பல்கலைக்கழகத்தில் ஐநூறு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு மனுதாரார் கீழ்கண்ட கேள்விகளை சட்டத்தின் மூலமாக கேட்கிறார்
1)எத்தனை மாணவர்கள் இறுதி செமஸ்டர் ஆங்கிலத் தேர்வு எழுதினார்கள்?
2)எத்தனை மாணவர்கள் இறுதி செமஸ்டர் ஆங்கிலத் தேர்வில் 50 மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளார்கள்?
மேலே கோரிய வினாக்களில், முதல் வினா அந்த தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை சார்ந்த பொருண்மையை (Question of fact) பற்றியது. எத்தனை மாணவர்கள் ஆங்கிலத் தேர்வு எழுதினார்கள் என்ற விபரம் தேர்வுத்துறையிடம் உள்ளதால், அதை மனுதாரரருக்கு பொது தகவல் அலுவலர் வழங்க கடமைபட்டவராவார்.
இரண்டாவது வினாவிற்கு, மனுதாரார் கேட்ட தகவல்களானது மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஆங்கிலத் தேர்வில் 50 மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை அறியவேண்டும் என்றால், பொது தகவல் அலுவலர் தேர்வு எழுதிய 500 மாணவர்களின் மதிப்பெண்களையும் ஆராய்ந்து அதாவது பதிவுருகளிலிருந்து (மதிப்பபெண் பட்டியலில்) இருந்து தகவல்களை திரட்டி/தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும் என்பதால், இவ்வாறு தேர்ந்தெடுத்து தகவல் வழங்குவது என்பது பொது தகவல் அலுவலரின் கடமை அல்ல.
ஆனாலும், மேல் கண்ட சூழ்நிலைகளில் மனுதாரார் கோரிய தகவல்கள் இல்லை என்று மறுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மனுதாரருக்கு ‘ஐநூறு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை மொத்தமாக ரூ.1000 கட்டணம் செலுத்தி’ பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் மனுதாரரர் கோரிய தகவல்கள் ‘மதிப்பெண் பட்டியல்’ என்ற வடிவத்தில் பதிவுருவாக பொது அதிகார அமைப்பிடம் உள்ளது. அதாவது பொது தகவல் அலுவலர், ஆராய்ச்சி செய்து தகவல்களை, ஆவணங்களில் இருந்து (மதிப்பெண் பட்டியல்) தேர்ந்தெடுத்து தரவேண்டிய அவசியமில்லை. ஆனால் அந்த தகவல்கள இருக்கும் பதிவுருகளை (மதிப்பெண் பட்டியல்) வழங்க கடமைபட்டவராவார்.
ஒரு குடிமகனுக்கு எவ்வாறு ஒரு பொது தகவல் அலுவலரை ஆராய்ச்சி செய்து தகவல்களை தேர்ந்தெடுத்து வழங்க நிர்பந்தப்படுத்த அதிகாரமில்லையோ அதுபோலவே ஒரு பொது தகவல் அலுவலருக்கும் ஒரு குடிமகனை, தகவல்கள் எந்த வடிவத்தில் பொது அதிகார அமைப்பில் இருக்கின்றது என்று ஆராய்ச்சி செய்து, அதன் பின்னர், தகவல்கள் இருக்கும் வடிவத்தில் மட்டுமே தகவல்களை கேட்கவேண்டும் என்று நிர்பந்தப்படுத்த அதிகாரமில்லை. மேல் கண்ட உதாரணத்தில், ஐநூறு மாணவர்களின் ‘மதிப்பெண் பட்டியலை’ மனுதாரார் நேரடியாக கேட்கவில்லையென்றாலும், மனுதாரார் கேட்ட வடிவத்தில் தகவல்கள் இல்லை என தகவல்களை வழங்க மறுப்பதற்கு பொது தகவல் அலுவலருக்கு அதிகாரமில்லை.
ஆகவே, பொது அதிகார அமைப்பிடம், ஒரு இந்திய குடிமகன் தகவல்களை கோரும்போது, அது எந்த வடிவத்தில் இருந்தாலும் பொது தகவல் அலுவலர் வழங்கவேண்டும் ஆனால் தகவல்கள் பிரிவு 2(i)-ல் வரையறுக்கபட்டவைகளில் இருந்து தேர்ந்தெடுத்து வழங்க வேண்டியவாறு அமைந்தால், எந்த வடிவத்தில (பதிவுருக்களில்) இருந்து அந்த தகவல்கள் தேர்ந்தெடுத்து வழங்கவேண்டியது உள்ளதோ, அந்த அனைத்து பதிவுருகளையும் தகுந்த கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கவேண்டும். மாறாக, குடிமகன் கேட்கும் தகவல்கள் பொது அதிகார அமைப்பின் கைவசம் இருந்தும், குடிமகன் கேட்கும் வடிவத்தில் தகவல்கள் இல்லை என்ற காரணத்திற்காக ‘No such information is available in the office as seek by the informant under the RTI Act” என்று குடிமகனின் மனுவை நிராகரிக்க பொது தகவல் அலுவலருக்கு அதிகாரமில்லை. 

Thanks – Mr. Leenus advocate

Saturday, November 29, 2014

ஏழை மனிதனின் தாஜ்மஹால்!

தாஜ்மஹால்னா, அது ஆக்ராவில் உள்ளது என்றுதானே சொல்வீர்கள். அது, ஷாஜஹான் தன் காதல் மனைவிக்குக் கட்டிய நினைவுச் சின்னம். ஆனால், மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத்தில் இருக்கும் தாஜ்மஹாலோ, மன்னர் ஆஜம்ஷா, தன் அம்மாவுக்குக் கட்டிய நினைவுச் சின்னம்.
மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் மகன்தான் இந்த ஆஜம் ஷா. 1651 முதல் 1661 வரை மன்னராக இருந்த காலத்தில், தாத்தா ஷாஜஹான் மும்தாஜுக்குக் கட்டிய தாஜ்மஹாலைப் பார்த்து ரொம்பவும் அசந்துபோய், அதேபோல் அச்சு அசலாக, தன்அம்மாவுக்குக் கட்ட ஆசைப்பட்டார். அந்தக் கல்லறைக்கு பீபீ கா மக்பாரா (Bibi Ka Maqbara) என்று பெயர் சூட்டினார். (இதற்கு, 'லேடி கல்லறை' என்று அர்த்தம்).
தாஜ்மஹாலைப் போலவே இருக்கும் என்று எண்ணிய ஆஜம் ஷாவிற்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. திறமையான தொழிலாளர்கள் அமையாததால், தாத்தாவின் தாஜ்மஹால் போல அழகாக அமையவில்லை. பளபளப்பாக தோன்றவில்லை. காரணம், தாஜ்மஹாலுக்கு உபயோகித்த தூய வெள்ளை சலவைக் கற்களை, இந்த பீபீ கா மக்பாராவிற்கு உபயோகிக்கவில்லை.
மக்பாரா கட்ட, அப்போது ஆன செலவு, 7,00,000 ரூபாய். ஆனால், தாஜ்மஹால் கட்ட ஆன செலவு, 32 மில்லியன். அதனால்தான் இந்த மக்பராவை, 'ஏழை மனிதனின் தாஜ்' என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால்,தாஜ்மஹாலுக்கு இணையாக சொல்லமுடியாவிட்டாலும் கூட  இந்த நினைவுச் சின்னத்தின் உள்ளே இருக்கும் அழகிய வடிவங்கள், பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது. அங்கு அமைந்துள்ள தோட்டம், மொகலாயர்களை நினைவூட்டும் விதமாக உள்ளது.

Thursday, November 27, 2014

பத்திர (பதிவு) ஊழல் துறை


போலி ஆவணங்களை ஒழிக்க வில்லங்க சான்றிதழ் வழங்குகையில் புதிய நடைமுறையினை பின்பற்ற வேண்டுமென்று பத்திரப்பதிவு துறைக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஆலோசனை கூறியுள்ளதாக இன்றைய நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் எத்தனையோ ஊழல்கள் நடைபெறுகின்றன. அவைகளை பட்டியலிட்டால் இந்த பதிவில் அடங்காது. ஆனால் பதிவுத்துறையில் நடைபெறும் ஊழல் இருக்கின்றதே அதை விட கொடுமை எதுவும் இருக்காது. இதர ஊழல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி பாதிப்பு இருக்காது. ஆனால் போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் ஊழல் இருக்கின்றதே, அதனால் பாதிக்கப்பட்டவருக்கு எத்தகைய பாதிப்பு என்பது அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும். பதிவுத்துறை, வருவாய் துறை, காவல்துறை, நீதிமன்றம் என்று பல்வேறு துறைகளுக்கு அலைக்கழிக்கப்படுவதோடு, பண விரயம், நேர விரயம், மன உளைச்சல்.... இதெல்லாம் யாருக்கு ? அப்பாவி உரிமையாளருக்கு. எவனோ ஒரு மோசடிப்பேர்வழி, போலி ஆவணம் தயாரித்து, சொத்தை அபகரிக்க முயற்சி செய்வான். சொத்திற்கு உரியவர் படாத பாடு பட்டு அதை மீட்பதற்கு பிரம்ம பிரயத்தன்ம் செய்ய வேண்டும். இறுதியில் சொத்து அவருடையது என்று தீர்ப்பு வருகையில் ஒன்று அவர் உயிருடன் இருக்க மாட்டார் அல்லது சொத்தில் பாதிக்கு மேல் வழக்கறிஞர் கட்டணம், நீதிமன்ற செலவு இதயாதி, இத்யாதி என்று அவர் இழந்திருப்பார். மோசடி புரிந்தவன், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, மிகச்சுலபமாக தப்பித்துவிடுவான்.

எங்களுடைய பரம்பரை இல்லத்தினை, ஏழு தலைமுறைகளாக இன்றளவும் நாங்கள் வசித்து வரும் இல்லத்தினை ஒரு மோசடிக்கும்பல் எங்களுக்குத் தெரியாமலேயே, ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து வில்லங்கங்கள் ஏற்படுத்தி, அதாவது ஓரிரு வருடத்திற்குள்ளேயே பல்வேறு விற்கிரய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, இறுதியில், விற்கிரய பதிவு ஒன்றினை பதிவு செய்து, அப்பதிவினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர்கள் நாங்கள் வசித்து வரும் வீட்டினை விலைக்கு வாங்கி விட்டதாகவும், அதில் வசித்து வரும் வாடகைதாரர்களாகிய நாங்கள் (இது எப்படி இருக்கு ?) காலி செய்ய மறுப்பதாகவும் கூறி, எங்களை காலி செய்யும்படி உத்திரவு வேண்டி நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கும் வரை சென்றார்கள். மிகத்தாமதாக, ஆனால் சரியான நேரத்தில் விவரம் அறிந்த நான், பதிவுத்துறை தலைவரை நேரில் சந்தித்து விவரம் தெரிவித்தேன். என் கதையை கேட்ட அவர், ஆமாம், ஆமாம், இதுபோல் நிறைய நடக்கின்றது என்று சொன்னதும் வந்ததே எனக்கு கோபம். நேரடியாக அவரிடம் கேட்டே விட்டேன். ஐயா, ஆமாம், ஆமாம், இதுபோல் நிறைய நடக்கின்றது என்று சொல்வதற்கா அரசு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியினை நியமிக்கின்றது ? இதுபோல் நடக்கிறதென்றால் அதை தடுத்து நிறுத்துவதற்கு அரசுக்கு பதிவுத்துறையில் சட்ட சீர்திருத்தம் கொண்டு வர அரசுக்கு ஆலோசனை கூற வேண்டியது உங்கள் கடமையில்லையா என்று கேட்டவுடன், அவரும் பதிலுக்கு, சொத்து உன்னுடையது தானே, பின் நீ ஏன் காவல் துறையில் புகார் செய்யவில்லை என்று திருப்பி கேட்டார், அதற்கு நான், ஐயா, காவல் துறையில் நான் புகார் அளிக்காமல் இல்லை. ஆனால் காவல் துறை இது சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதை நீதி மன்றம் தான் விசாரிக்க முடியும் என்று சொல்லி, என் புகாரை ஏற்க மறுக்கின்றார்கள் என்று கூறினேன். அதற்கு அவர், என்னுடைய நிலையும் அதுதான், பதிவை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கே இல்லை, நீங்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்க வேண்டியது தான் என்று கூறி என்னை திருப்பி அனுப்பி விட்டார்.
பதிவுத்துறையால் மோசடிப்பதிவுகளை மட்டுமே செய்ய முடியும் என்பதனை அறிந்து, உயர் நீதி மன்றத்தில் காவல் துறையின் மெத்தனத்தை எடுத்துரைத்து வழக்கு பதிவு செய்ய் அறிவுறுத்தி ஆணை வழங்குமாறு கோரி ஒரு வழக்கு தொடுத்தேன். என் மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதி மன்றம், அதனின் உண்மையினை அறிந்து காவல் துறை விசாரணைக்கு உத்திரவிட்டது. இதற்காக நான் செலவு செய்தது அரை லட்சத்திற்கும் மேல்.

சார்-பதிவாளரின் பொறுப்பற்ற செயலினை கண்டித்து, சார்-பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளர் மீது நானும் நீதிமன்றத்தில் எனக்கு நீதி உடனே கிடைக்கும் என்று நம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சார்-பதிவாளரின் தவறான அணுகுமுறையினை எடுத்துரைத்தேன். ஆனால் மெத்தப்படித்த நீதி அரசரோ, என்ன உத்திரவு வழங்கினார் தெரியுமா மக்களே ! சார்-பதிவாளர், தன் கடமையைத்தான் செய்தார், பதிவுத்துறை சட்டத்தில் கூறியுள்ளதைத்தான் செய்துள்ளார். ஒரு அசையா சொத்தினை விற்பனை செய்கையில் அதன் உரிமையாளரை சரி பார்க்கும் அதிகாரம் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படவில்லை. ஆகவே, சார்-பதிவாளரை குற்றம் சொல்ல முடியாது. வாதி, நியாயம் கோரினால், கீழமை நீதி மன்றத்தில் உரிமை மனு தாக்கல் செய்யலாம் என்று கூறி தீர்ப்பளித்தார். எனக்கு ஒரு சந்தேகம், நீதி மன்றங்களில் வழக்கு எண்ணிக்கை குறைவாக உள்ளதோ, அதற்காக. வழக்கு எண்ணிக்கையினை அதிகரிக்கும் நீதிபதிக்கு ஊக்கத்தொகை என்று அரசு அறிவித்திருக்கின்றதோ என்ற் சந்தேகம். இதற்காக நான் செலவு செய்தது அரை லட்சத்திற்கும் மேல்.

இத்தனைக்கும், சார்-பதிவாளர் அலுவலகம், எங்கள் வீட்டிற்கு எதிரில் கல் எறியும் தூரத்தில் உள்ளது. சர்ர்-பதிவாளர் அலுவலகமும், எங்கள் இல்லமும் அமைந்துள்ள சாலை எங்களின் முப்பாட்டனாரின் பெயரில் உள்ளது. சார்-பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள இடம், எங்களின் முன்னோர்களால் இனாமாக வழங்கப்பட்ட இடம். உயர் நீதி மன்றம் சொன்ன பிறகு என்ன செய்வது ? விதியை நொந்துகொண்டு மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நான்கு ஆண்டுகளாகின்றது. என்னிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தும் மிக உறுதியாக இருந்த போதிலும், இன்னும் வழக்கு முடிவுக்கு வந்த பாடில்லை. இத்தனைக்கும், வழக்கில் சேர்க்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளில் ஒருவரும் வழக்கிற்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கிற்கான செலவு தனி.
நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததோடு நில்லாமல், இணையத்தில் பதிவுத்துறை சட்டத்தினை தரவிறக்கம் செய்து, ஒரு வரி விடாமல் படித்தேன். பதிவுத்துறை சட்டம் 1908 –ம் ஆண்டு ஆங்க்கிலேயர் காலத்தில் அப்பொழுதிருந்த சமூக நிலைக்கேற்ப இயற்றப்பட்டது. காலத்திற்கேற்ப அதில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். அரசு அவ்வப்போது உப்பு சப்பில்லாத மாற்றங்கள் கொண்டு வந்தாலும், போலி ஆவணங்கள் மூலம் பதிவினை தடுக்கும் வழிமுறைகளை ஏனோ இதுவரை கருத்தில் கொள்ளவில்லை. .

பதிவுத்துறை சட்டம் 1908 –ன் படி ஒரு பதிவினை பதிவு செய்கையில், விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகள் அடையாளம் காணப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எப்படி அடையாளம் காணப்படவேண்டுமென்று கூறப்படவில்லை. அதாவது, அவர்களின் குடும்ப அட்டையை வைத்தா, வாக்காளர் அடையாள அட்டையை வைத்தா, கடவுச்சீட்டின் (PASS PORT) மூலமாகவா, வங்கி கணக்கு புத்தகத்தின் மூலமாகவா என்று கூறப்படவில்லை. சொத்தின் உரிமையாளரை சரி பார்க்கும் அதிகாரம் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படவில்லை என்று கூறும் பதிவுத்துறை அதிகாரிகள், விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகள் அடையாளம் காணும் முறையினை மட்டும் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படாத நிலையில் எவ்வாறு கையாளலாம் ?
மோசடிப்பதிவின் மீது புகார் அளிக்கப்படும் நிலையில் அதனை விசாரித்து, காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யலாம் என்று பதிவுத்துறை சட்டத்தில் கூறியுள்ள நிலையில், நானும், எனது குடும்பத்தினரும் அளித்த பல்வேறு புகார் கடிதத்திற்கு, பதிவுத்துறை சட்ட விதி முறைகளின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்துவிட்டு, ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமலிருந்தார்க:ள். இதற்கிடையே, பதிவுத்துறை தலைவருக்கு, பதிவுத்துறை சட்டத்தில் கூறியிருக்கும் விதிகளை சுட்டிக்காட்டி, என் புகாரின் மீது என்ன நடவடிக்கை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்ட பிறகு, 2011 –ம் வருடம் பதிவுத்துறை தலைவர் 03-11-2011 நாளிட்ட சுற்றறிக்கை எண் 67 –ஐ வெளியிட்டு, மோசடிப்பதிவின் மீது புகார் அளிக்கப்பட்டால் அதனை விசாரித்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்று ஆணையிடுகின்றார். நமது மோசடிப்பேர்வழிகள் சும்மா இருப்பார்களா ? நீதி மன்றங்கள் எதற்கு இருக்கின்றது ? உடனடியாக, பதிவினை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது, பதிவுத்துறை சட்டத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்து ஏறக்குறைய ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலோ வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அளிக்க அதிக காலம் எடுத்துக்கொள்ள இதில் என்ன உள்ளது ? ஒரு சட்டம் இயற்றப்படுவது பொது மக்களின் நலன் கருதியே. அதை கருத்தில் கொள்ளாமல் 1908 –ம் வருடம் கூறப்பட்டுள்ளதையே பின்பற்றப் படவேண்டுமென்று கூறுவது முற்றிலும் மடமையாகும்.

சரி, பதிவுத்துறை சுற்றறிக்கியினை மேற்கோள் காட்டி பதிவுத்துறையில் புகார் அளித்தால் என்ன கூறுகின்றார்கள் தெரியுமா ? வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறுகின்றார்கள். அப்பாவி மக்களும் தங்களின் விதியை நொந்து கொண்டு திரும்பி செல்கின்றார்கள். மக்களே ! புகாரை ஏற்க மறுக்கும் பதிவுத்துறையினை கேளுங்கள் 1) இந்த புகாரின் மீது நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதா ? 2) நீதி மன்றம் உத்திரவு அளிக்கும் வரையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கலாகாது என்று நீதி மன்றம் ஆணையிட்டுள்ளதா என்று
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேளுங்கள்.

இன்றைய வழக்கில் அதாவது வில்லங்க சான்று வழங்குகையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்று கூறி வழங்கியதால் வாங்குபவர் தெரியாமல் வாங்கிவிட்டதாகவும் அதனால் தனக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டுமென்றும் கோருகின்றார். உண்மையாகவும் இருக்கலாம்., ஆனால் பாதிப்பு யாருக்கு ? யாரால் ? பதிவுத்துறையின் பொறுப்பற்ற தனத்தினால் தானே ? இதற்கு பதிவுத்துறை தலைவரின் பதில் என்ன தெரியுமா ? தவறு ஏற்படுவது தவிர்க்க இயலாதது, தற்போதைய புல எண்ணும், பழைய புல எண்ணும் மாறுபடுவதாலும், எல்லைகள் மாறுபடுவதாலும் வில்லங்கங்கள் சரிவர தெரிவிக்க முடிவதில்லை என்பதே. இன்றைய கணிணி உலகில் இத்தகைய பதில் ஏற்புடையதல்ல என்று நீதியரசர் கூறியிருப்பினும், எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

எங்களுடைய இல்லத்தின் மீது ஐந்து வில்லங்கங்கள் உள்ளது என்கின்ற நிலையில் ஒரு வருடம் கழிந்த நிலையில், மேற்கொண்டு புதியதாக வில்லங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ள, பழைய காலத்துடன், புதிய காலத்தையும் சேர்த்து இணைய தளம் மூலமாக வில்லங்க சான்றிதழ் கோரினேன். நேரில் சென்று பெறுகையில், ஒரு வில்லங்கமும் இல்லை என்று சான்றளிக்கப்பட்டதனை கண்டு, இதற்கு முன் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழை காண்பித்து கேட்கையில் என்ன பதில் அளித்தார்கள் தெரியுமா மக்களே ! சார், அது வந்து, கம்ப்யூட்டரில் தகவல்கள் பதிவேற்றப்படவில்லை, நீங்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பித்ததால் அது போல் சான்றிதழ் வந்துள்ளது, இந்தாருங்கள் என்று பழைய நிலை சான்றிதழை பைசா வாங்காமல் வழங்கினர். ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கின்றது. இது தான் பதிவுத்துறை லட்சணம். இப்பொழுது சொல்லுங்கள், பத்திரப்பதிவுத்துறையா அல்லது பத்திர ஊழல் துறையா ! 

லஞ்ச ஒழிப்பு துறையில், தகவல் சட்டத்தை எப்படி பயன்படுத்தலாம்?




லஞ்ச ஒழிப்பு வழக்குகள், சில நேரம் அந்த காவலரால், “technicality” என கைவிடபடுவது உண்டு. அல்லது அந்த வழக்குகளில், சிலர் தலையீட்டால், மிக மெதுவாக, ஆமை போல நகரும். நீங்கள் தகவல் சட்டம் மூலம், இதற்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்.

நீங்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் எந்த அரசு துறை பற்றியும் விவரம் கேட்கலாம். உங்களுக்கு தெரியாவிட்டாலும், லஞ்ச ஒழிப்புத்துறை, நீங்கள் தகவல் கேட்பதை வைத்து, அந்த துறை மேல் ஒரு கண் வைத்து, அவர்கள் செய்யும் ஊழலை கண்காணிக்க தொடங்குவார்கள்.

நீங்கள் பொது தகவல் அலுவலருக்கு, கீழ்கண்டவாறு, விவரம் கேட்டு, மனு செய்யலாம்.

1. உங்கள் அலுவகத்தில், யார் மேல் எல்லாம் லஞ்ச புகார் வந்துள்ளதோ, அவர்கள் பட்டியல், _____________ காலம் முதல் ______________ காலம் வரை கொடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

2. அந்த புகார்களின் நகல்களை கொடுங்கள்.

3. மேலே சொன்ன வழக்குகளில், எந்த வழக்கு என்ன காரணத்திற்காக கை விடப்பட்டது? நான் அந்த சம்பந்தப்பட்ட file கலை, பார்வையிட விரும்புகிறேன்.

4. நான் எந்த நேரம், தங்கள் அலுவகத்திற்கு வந்தால், அந்த file களை பார்வையிட முடியும் என்று தேதியும், நேரமும் சொல்லுங்கள்.

5. இது தவிர, மீதமுள்ள வழக்குகளில் என்ன நடவடிக்கை தங்கள் துறையால் எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தருக.

Generally, cases of corruption are either dropped on some “technicality” or the progress in these cases is very slow due to some influence. Because of this, corrupt officials go free! You can put an end to this. Use RTI!
You can seek details from the “vigilance wing” of any government department. Incase you don’t know, the “vigilance wing” is supposed to keep an eye out and investigate into all malpractices, frauds etc.
You can send an application to the PIO and ask for the following details:

1. Please give a list of all the officials against whom any complaint of corruption was received from any quarter during the period ________ to _______.

2. Please give copies of all these complaints.

3. Out of the above, which of the cases have been dropped and why? I would like to inspect all these files. Please intimate the date and time when I can come to inspect these files.

4. Please indicate the progress being made in the rest of the cases.

Thanks – www.indiahowto.com

அசல் இந்திய சாட்சிய சட்டம் 1872 Sec 70


ஒரு நபர், ஒரு xerox மீது, தானாகவே, இது அசல் என்று சான்றிதழ் என்று சான்றொப்பம் செய்யலாம். அது சட்டப்படி ஏற்புடையது.

உதாரணம், ஜாதி சான்றிதழில், நகலில், இது அசல் என்று எந்த அரசு அலுவலர், நோட்டரி பப்ளிக் கையெழுத்து இல்லாமல், அவரே, அசல் என்று சான்றொப்பம் செய்யலாம். சட்டப்படி இது செல்லும். 

Self attestation is lawful under Indian Evidence Act 1872 Sec 70. 
Section 70 - Admission of execution by party to attested document 
The admission of a party to an attested document of its execution by himself shall be sufficient proof of its execution as against him, though it be a document required by law to be attested.

புருஸ் லீ


தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த
சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும்  தொடர்ந்து   வம்புக்களில்  ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ
அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்" என்று கேட்க ,"கலை எல்லாருக்கும் பொதுவானது தானே " என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். "அப்படியில்லை ! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும் ? நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால்  நீ குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ; நீ வென்றால் நான் குங் பூ என்கிற பெயரைக்கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன் ! என்னோடு சண்டையிடு என்னோடு சண்டையிடு " என்றார் அவர்.

இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங்
பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார் .ஆனால்,அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்கசெயதது .
தானே இன்னும் பல மாற்றங்களை உருவாக்கினார்.அவர் படித்த தத்துவம் அவருக்கு அதீத அமைதியை தந்தது,எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். "நீர் போல அமைதியாக ஓடிக்கொண்டு ,சலனமற்று இருக்கிறேன் ,மூங்கிலை போல வளைந்து கொள்கிறேன்.ஆழ்ந்த அமைதி என்னை எப்பொழுதும் வழி நடத்துகிறது" என்ற அவர் டிவி ஷோக்களில் கலக்கிய பின் சீட்டின் முனைக்கே கொண்டுசெல்லும் சண்டைகாட்சிகள் மூலம் ஹாலிவுட்டில் கலக்கினார்.
புரூஸ் லீ ஒரு கவிஞர் என்பதை தாண்டி ஒரு தீர்க்கமான தத்துவ ஞானம் மிக்கவராக இருந்தார் என்பதே சரி. "எதிரி என்று ஒருவன் இல்லவே இல்லையே ; எல்லாமே பிம்பங்கள்,பிரதிபிம்பங்கள். அவற்றை நொறுக்கிவிட்டால் போதும். எதிரிகள் என்று யாருமில்லை என உணர்வீர்கள் !" என்றார் அவர்.  ஜென் அவரைத் தொடர்ந்து செலுத்தியது. பேரமைதி அவரிடம் குடிகொண்டு இருந்தது,ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் "ஏன் இப்படி ?" என்று கேட்ட பொழுது ,"நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !" என்று மட்டும் சொன்னார். வீரம்  என்பது
சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என
உணர்ந்து  நடப்பதிலும் இருக்கிறது.
நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து "வெறுமையாக இருக்கிற பொழுது தான்,அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !" என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் . மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ. அதுவே அவரின் அசரவைக்கும் சண்டைக்காட்சிகளுக்கு அடிப்படை.
நம்பினால் நம்புங்கள் புருஸ் லீக்கு உடலில் குறைபாடு ஒன்றிருந்தது. அவரின் வலது கால் இடது காலை விட நான்கு சென்டிமீட்டர் உயரம் குறைவு. ஆனால்,உங்கள் தலையில் ஒரு நாணயத்தை வைத்தால் அதை உங்கள் தலைமுடியைக்கூட அசைக்காமல் அவரால் எடுக்க முடியும். கேட்ட பொழுது ,"நாணயம் மட்டும் தான் என்னுடைய கண்களில் தெரியும். அதில் மூழ்கிப்போவது தானே குங்பூ !" என்றார்
அவரின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால் ஒரு காட்சிக்கு நொடிக்கு இருபத்தி நான்கு பிரேம்கள் அவரின் வேகத்தை பிடிக்க போதாமல் கூடுதலாக பத்து பிரேம்கள் தேவைப்பட்டன ! இருந்தாலும் அதை ஆழ்ந்த அமைதியோடு செய்கிற சமநிலை புரூஸ் லீக்கு இருந்தது. அவர் பட்டப்படிப்பு படித்தது
தத்துவத்தில் என்பது அவரின் ஆழ்ந்த தேடலை உணர்த்தும் . முப்பத்தி மூன்று வயதில் இறந்து போனாலும் இன்னமும் ஆக்ஷனில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அத்துணை பாடங்கள்.
அவரின் ஒரு கவிதை தான் அவரின் வாழ்வானது :
மேற்கே காற்றை
எல்லாம் தங்கமயமாக்கி
கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்
கரைந்துருகும் பனித்துளிக்கு
வெகுதூரம் தள்ளி
மலையுச்சியின் மீது
தங்க டிராகன்
தனித்து தன் கனவுகள்
வெளிச்ச மேற்கில் தேய,மறைய
சலனமில்லாமல் நிற்கிறது !

APPLE STICKER

Aப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker???
எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது....

அது என்னனு தான் தெரிஞ்சு கொள்வோமே...
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:
* PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது...
* PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
* PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்...
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்துட்டு சாப்பிடுங்க..!!

Wednesday, November 26, 2014

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்றால் என்ன‍? இந்த சட்டம்், பெண்கள் மீதும் பாயுமா?

குடும்ப வன்முறை

=============== உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாக வோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் கு டும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப் பது, தள்ளுவது, கையில் கி டைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல் லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான குடும்ப வன்மு றை. இது கணவன் – மனை வி இடையில் மட்டுமே நடக்க வேண்டுமெ ன்பதில்லை. மற்ற உறவினர்களுக்கு இடையிலும் நடக்கலாம். சந்தேகப் படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப் படுத்துவது போன்ற வை மன ரீதியான வன்முறைகள். தேவை யில்லாமல் தொட்டுப் பேசுவது, முத்த மிடுவது, கட்டியணை ப்பதில் தொடங்கி வல்லுறவு வரை செல் வது பாலியல் ரீதியான வன்முறைகள்.

இந்தச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?

============================== இந்தியாவில் 70 சதவிகித பெண்கள் குடும்ப வன்முறையா ல் துன்புறுத் தப்படுவதாக புள்ளி விவரம் சொன்னதை அடுத்து மத்திய மகளிர் மற் றும் குழந் தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குடும்ப வன்முறை பெண் கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற ப்பட்டு அது 2005ம் ஆண்டு அமலு க்கு வந்துவிட்டது.
இதன்படி கணவன் தன் மனைவியை அடித்தா லோ அல்லது அவமானப் படுத்தி துன்புறுத்தி னாலோ இருபதாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண் டு சிறை தண்டனையும் கிடைக்கும்.

பெண்கள் மீதும் இந்தச் சட்டம் பாயுமா?

============================== குடும்ப வன்முறை புகார் என்றால் அது ஆண்கள் மீதுதான் பாய வேண் டு ம் என்று அவசியமில்லை. பெண்கள் மீதும் பாயும். சில மாதங்களுக் கு முன்பு மும்பை உயர் நீதிமன்றம் இதை உறுதி செய்திருக்கிறது.
‘பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத் தைப் பார்க்க வேண்டும். அவர்க ளுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற் றுப் போய்விடும். வன்முறைக்கு ஆளான பெண், அதைத் தொடுத்த ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண் களும் பெண்களு க்கு எதிராக புகார் செய்யலாம்’ என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பி ல் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சட்டம் பயனுள்ளதா?

=========================== நிச்சயமாக. ஆனால், குழந்தைத் தொழி லாளர் ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங் போ ன்ற சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டு விட்டன. அவை அமலுக்கு வந்தும் ஆண்டுகள் பலவாகி ன்றன. ஆனால், இன்றும் குழந்தைத் தொ ழிலாளர்கள் இருக்கிறார்கள். வரதட்சணை கொடுமை பல சமூகங்களில் நடை முறை யில் வெளியே தெரியாதவாறு இயங்குகி ன்றன. குழந் தைத் திருமணம் குறிப்பிட்ட சில சமூகங்களிலும், வட மாநிலங்களி லும் நிலவுகின்றன. ஈவ் டீசிங் தொட ர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் போல வே குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்ட மும் ஏட்டளவில்தான் உயிர் வாழ்கிறது.

இதற்கு என்ன காரணம்?

================== உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், கணவனை சிறைக்கு அனு ப்பிவிட்டு, தான் மட்டும் குழந்தைக ளுடன் நிம்மதியாக வாழ எந்த நடுத் தர, கீழ் நடுத்தர, ஏழைப் பெண்களும் விரும்புவதில்லை. அதற்கு அவர் களது வளர்ப்பு முறையும் இடம் தர வில்லை. இந்திய கலாசாரம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்தும் இதற்கு இடம் தருவ தில்லை. எனவே பெரும்பாலான பெண்கள் புகார் தருவதில்லை. அத னால் இந்தச் சட்டம் வெறும் பேப்பரில் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாக இருக்கிறது.

தமிழகத்தின் நிலைமை என்ன?

========================== கடந்த ஆண்டு குடும்ப வன்முறை குறித்து இந்தியா முழுவதிலும் இரு ந்து பதிவான புகார்களின் எண்ணிக்கை 4,547. அதில் தமிழகத்தில் மட்டு மே பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் ஒட்டு மொத்தமாக பதியப்பட்டிருக்கும் புகார் களில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக தமிழகத்தில்தான் பதியப்பட்டிருக் கிறது. இந்த புள்ளி விவரத்தை சொன்னது அல்லது வெளியிட்டது எந்த தன்னார்வ அமைப்பும் அல்ல. கடந்த மாதம், அதாவது, ஆகஸ்ட் 6 அன்று, கேள்வியொன்றுக்கு நாடாளுமன்ற த்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவல் இது.

அப்படியானால் மற்ற மாநிலங்களில் வசிக்கும் பெண்கள் கொடுமைக்கு ஆளாவதில்லையா?

===================================== அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேச ம், பீகார், சட்டீஸ்கர், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேச ம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிஸோர ம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கா ளம், அந்தமான் நிக்கோபார், தில்லி ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் எவ்வளவு புகார் கள் பதியப்பட்டன என்று தெரியவி ல்லை. உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அட்டவணையில் இந்த விவரங்கள் இல்லை. தகவல் கிடைக்கவில்லை என்கிற பதிலைத்தான் நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ் நாடு ஆகிய ஐந்து மாநிலங்க ளின் தகவல்கள் தான் மத்திய அரசிடம் இருக்கின்றன. இதனடி ப்படையில்தான் கடந்த ஆண்டு இந்தியா முழு வதிலும் இருந்து பதிவான புகார்களின் எண்ணிக் கை 4,547 என்று சொல்கிறார் கள். கர்நாடகாவில் நான்கே நான்கு வழக் குகள்தான் கடந்த ஆண்டு பதிவாகியிருக்கிறதாம். உத்ச்ரப்பிரதேசத்தில் ஒரு வழக் கு கூட பதிவாகவில்லையாம். (ஆதாரம்: லி.ஷி. ஹிஷி.னி.ழி ளி. 388 திளிஸி 06.08.2013).

புள்ளி விவரங்கள் உணர்த்தும் பாடம் என்ன?

=============================== மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த விவரங்களை வைத்து மற்ற மாநிலப்பெண்கள் மகிழ்ச்சியாக வாழ் வதாக பொருள்கொள்ள முடியாது. நாகரீக சமூகத்துக்கு சவால்விடும் வகையில்தான் இந்தியாவில் குடும்பங் கள் இயங்கி வருகின்றன. ஆணாதிக்க சமூகம் என்பதற்கான முழு பொருளை யும் நடைமுறையில் உணர்த்தி வருவது இந்தியக் குடு ம்பங்கள். பெண்களுக்கு சம உரிமை, பேச்சுரிமை, பொருளாதார உரி மை, கல்வி உரிமை ஆகியவை இன்னும் முழு வீச்சில் செயலுக்கு வர வில்லை. வெற்று கோஷங்களாகத்தான் காற்றில் கரைகின்றன. ஆண்க ளை சார்ந்து வாழ்வதே பெரும்பாலான பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற து. சொல்லப்போனால் இதை எதிர்க் க வேண்டும் என்று கூட பல பெண் கள் நினைக்கவில்லை. அந்தளவு க்கு அறியாமையில் வாழ்கிறார் கள்.

தமிழகம் முன்னுதாரணமா?

=============================== ஆமாம். நாட்டிலேயே அதிகளவு புகார்கள் தமிழகப் பெண்களால்தான் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதை எதிர்மறையில் எப்படி இந்தியாவி லே யே தமிழகத்தில்தான் பெண்கள் மீதான கொடுமைகள் அதிகளவு இருக்கின்றன என்று பார்க்கிறோ மோ அதே போல் நேர்மறையில் இன்னொரு விஷயத்தையும் பார்க் கலாம். அணுகலாம். அதாவது, தமிழகப் பெண்கள் துணிச்சலுடன் ஆண்கள் மீது புகார் கொடுக்க முன் வந் திருக்கிறா ர்கள் என்பதுதான் இது. இந்த துணிச்சல் ஒரே இரவில் பெண்களுக்கு வந்து விடவில்லை. தந் தை பெரியாரில் தொடங்கி பல திராவிட இயக்க முன்னோடிகளும், சமூக ஆர்வ லர்களும் தொடர்ச்சி யாக போராடி வந் ததன் விளைவைத்தான் இந்தத் தலை முறையை சேர்ந்த பெண்கள் அனுபவிக் கிறார்கள். தெளிவுடன் இருக்கிறார்கள். தங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். மறுக்கப்படுவ தை கேட்டுப் பெறு கிறார்கள்.

இதற்கு காவல்துறை தோள் கொடுக்கிறதா?

============================= இல்லை என்றுதான் வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இந் த முடி வுக்கு வரவும் மத்திய அரசு தாக்கல் செய் திருக்கும் விவரங்கள் தான் காரணம். சென்ற ஆண்டு தமிழகத்தில் குடும்ப வன் முறை பெண் கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. ஆனால், இவற்றில் காவல்துறை யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டவை வெறும் 9 புகார்களுக்குத்தான். அதே போல் குடும்ப வன் முறைக்கு தண்டிக்கப்பட்டவர்களும் வெறும் 11 பேர்தான். அதாவது, கு டும்ப வன்முறைக்கு ஆளாகும் போது காவல்துறையிடம் புகார் தெரி விக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாக தமிழகப் பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வன்முறையை மேற் கொண்டவர்களுக்குத் தண்ட னை வாங்கித் தரவேண்டும் என்ற அக்கறை காவல்துறைக்கு இல்லை.பின்தங்கிய மாநிலம் என்று கருதப்படுகிற ஜார்கண்டி ல் கூட இந்த நிலை இல்லை.
கடந்த ஆண்டு அங்கு பதிவான குடும்ப வன்முறை புகார்களின் எண்ணி க்கை 552. இதில் 108 பேர் தண்டனை பெற்றி ருக்கிறார்கள். அதாவது, மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில், மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற் கே நேரம் சரியாக இருக்கும் அந்த மாநிலத் தி ன் காவல்துறை, அதையும் மீறி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பதிவான புகார் களையும் விசாரித்திருக்கிறது. இதுபோல் தமிழக காவல் துறையும் குடும்ப வன்மு றையின் கீழ் பதிவாகும் புகார்களை விசாரி த்து சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நீதி கிடை க்க வழிவகை செய்தால் நன் றாக இருக்கும். ஏனெனில் இந்தியாவிலேயே முதன் முறை யாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப் பட்டது தமிழகத்தில் தான். இப் போது நம் மாநில த்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளி ர் காவல் நிலையங்கள் இருக்கின்றன. சுமார் 250 ஐபிஎஸ் அதி காரிகள், ஒரு லட்சம் காவலர்கள் பணியாற்றுகிறார்கள். இயற்றப்பட்ட எல்லா சட்ட ங்களையும் போல், இந்த குடும்ப வன்முறை பாது காப்புச் சட்டத்துக்கு உயிர் கொடுக்கும் பொறுப்பும் இவர்களிடமே இருக்கின்றன. ஆவனச் செய்வார் கள் என்று நம்புவோம்.

- கே.என்.சிவராமன், தினகரன்

Tuesday, November 25, 2014

சுயபால் விரும்பிகளும், அவர்களின் மாற்றுக் கருத்தாளர்களும் (பகுதி 2)




உலகில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள், வேண்டுமென்றே தவறாக புரியவைக்கப்பட்டுக் கொள்ளப்படுபவர்கள் என்று சொன்னால் அது 'ஹோமோ செக்ஸுவல்ஸ்' (Homosexuals) என்றழைக்கப்படும் சுயபால் விரும்பிகள்தான். மனிதனோ, விலங்குகளோ தங்கள் பாலுறவு இச்சைகளைத் தீர்ப்பதற்கு மூன்று விதமான நடைமுறைகளை வைத்திருக்கின்றன. அவை, 1.எதிர்ப்பால் உறவு (Straight Sexuality), 2.சுயபால் உறவு (Homosexuality), 3.இருபால் உறவு (Bisexuality) என்னும் மூன்றுமாகும்.

Straight sex (எதிர்ப்பால் உறவு) - ஆண் பெண் என எதிர் எதிர்ப்பாலுள்ளவர்கள் உறவில் ஈடுபடுவது 'ஸ்ட்ரெய்ட்' என்று சொல்லப்படுகிறது. அதாவது மிகவும் சாதாரணமாக, மனிதர்களிடையே நடைமுறையில் இருக்கும் பாலியல் உறவு இதுதான். தொன்னூறு விழுக்காடுகளுக்கு (90%) அதிகமானவர்கள் இந்த இச்சையைக் கொண்டிருப்பவர்கள்தான். இதுவே இயற்கையானது என்று மதங்களும், கலாச்சார அமைப்பினர்களும் சொல்லிவருகின்றனர்.  

Homosex (சுயபால் உறவு) - ஆண்கள் ஆண்களுடனும், பெண்கள் பெண்களுடனும் விதிவிலக்கான ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டு உறவு வைத்திருப்பது. இதைத் தகாத உறவு என்றும், இயற்கைக்கு முரணான செயற்பாடு எனவும், இதில் ஈடுபடுபவர்கள் மனப்பிறழ்வு உள்ளவர்கள் எனவும், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் விமர்சிக்கப்படுகிறது. இந்த இச்சை உள்ளவர்கள் உலக மக்களின் விகிதாசாரத்தில் வெறும் ஐந்து விழுக்காடு (5%) உள்ளவர்கள்தான். ஆனால் இப்படிப்பட்டவர்கள் மிக மிக அதிகமான விழுக்காடுகள் இருக்கின்றனர் என்று கற்பிதம் செய்யப்படுகிறது.

Bisex (இருபால் உறவு) - மனநிலைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப ஆண்-பெண் இருபாலினருடனும் பாலுறவு வைத்திருக்கக் கூடியவர்கள். எண்பது விழுக்காடுகளுக்கு (80%) அதிகமான மனிதர்கள் இந்தவிதமான இச்சையைக் கொண்டிருப்பவர்கள் அல்லது கொண்டிருந்தவர்கள்தான். ஆனால் இவர்களில் பலர் சுயபால் உறவினர் என்னும் தப்பான அடையாளத்தில் புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.

ஆண்களும், பெண்களும் பிறந்ததிலிருந்து ஒரு குறித்த வயது வரும்போது, பாலிச்சை உணர்வினால் தூண்டப்படுகிறார்கள். இயற்கையின் நியதியான இனப்பெருக்க விதியின் அடிப்படையில், நமது மரபணுவில் (Gene) பதிந்து வைத்திருக்கும் செய்தியாக, ஆண் என்பவன் பெண்ணாலும், பெண் என்பவள் ஆணாலும் கவரப்படுகிறார்கள். இதை நாம் இயற்கை என்று மிகச்சாதாரணமாக சொல்லிவிடுகிறோம். ஆனால் இது ஒரு சாதாரண நடவடிக்கையே அல்ல. ஒரு உயிரினம் இயற்கை அழிவுகள் போன்றவற்றைச் சந்தித்து அழிந்துபட்டாலும், அதனிலிருந்து எஞ்சியவர்கள் தப்பி மேலும் மேலும் வளர்ந்து தழைக்க வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்ட சிக்கலான மெக்கானிசம் இது. கிட்டத்தட்ட ஒரு விதி (Law) போன்றதாகும். ஆணும் பெண்ணும் உறவில் ஈடுபட வேண்டும் என்ற செய்திகளும், அவற்றுக்குத் தேவையான இச்சையைத் தூண்டும் ஹார்மோன்களைச் சுரந்து, இயக்கும் முறைகளும் நமது மரபணுவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனடிப்படையிலேயே ஆண்-பெண் இருவரும் சந்திக்கும் போது, பாலுறவைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு, காமக் கவர்ச்சியில் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், நமது மூளையினால் அந்த உணர்வு கொஞ்சம் மழுப்பப்பட்டு, காமம் அல்ல அது, காதல் எனப் புரிந்து கசிந்து கண்ணீர் மல்கின்றோம். இது காதலா? இல்லை காமமா? என்னும் விவாதம் இங்கு வேண்டியதில்லை என்பதால் இந்த நிலையில் இதை விட்டுவிடலாம்.

மனிதர்கள் எந்த இனத்தவர்களானாலும், எந்த மொழியினரானாலும் இந்தப் பாலுறவு இச்சை (Straight) பொதுவானது. உலக நியதியில் இருக்கும் பெரும்பான்மையான விதிகளுக்கு, 'விதிவிலக்கு' என்னும் ஒரு எதிர்நிலையும் தோன்றிவிடுகிறது. இடது பக்கம் புரியுள்ள சங்குகள்தான் எப்போதும் இயற்கையாக உருவாவவை. இதுவே சங்குகள் உருவாவதற்கான பொது விதியுமாகும். ஆனால், விதிவிலக்குகளாக வலம்புரியுள்ள சங்குகளும் உருவாகிவிடுகின்றன. பாம்புகளுக்கு எப்போதும் ஒரு தலைதான் உண்டு. ஆனால் விதிவிலக்குகளாக இரண்டு தலைகள் கொண்ட பாம்புகளும் உண்டு. இப்படி விதிவிலக்கான அமைப்புடனும், தோற்றத்துடனும் இருப்பவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம். இதில் ஒரு முரண்பாட்டு நகைச்சுவையும் உண்டு. சங்கு ஒன்று இயற்கைக்கு மாறாக உருவம் பெறும்போதும், பாம்பு இருதலையைப் பெறும்போதும், வெள்ளைக் காகம், வெள்ளை மயில் போன்றவற்றைக் காணும்போதும், இவையெல்லாம் இயற்கைக்கு முரணானவை என்று சொல்லி நாம் அவற்றை விலக்கி வைப்பதே இல்லை. அவையெல்லாம் விசேசமானவை எனக் கருதிக் கொண்டாடுகிறோம். மாறாக மிகக்குறைந்த விழுக்காடு உள்ள சிலருக்கு பாலியல் இச்சை சம்மந்தமாக விதிவிலக்கான ஈடுபாடுகள் உருவாகிவிடுகின்றன. அவர்களை நாம் கொண்டாடத் தேவையில்லை. கொடுமையானவர்கள் என்று சொல்லி விலக்கி வைக்காமல் இருக்கலாமல்லவா? அவர்களையும் சகமனிதர்களாகவே பார்க்கலாமல்லவா?

ஆண் ஆணுடனும், பெண் பெண்ணுடனும் ஈக்கப்படும் சுயபால் ஈடுபாட்டுக் கவர்ச்சியை பெரும்பாண்மையான மேலைத்தேய நாடுகளில், 1977ம் ஆண்டு வரை ஒருவித மனநோய் என்ற வகையிலேயே பார்த்து வந்தனர். மிருகங்களுடன் புணர்ச்சி இச்சை (Zoophilia), சிறுவர்களுடன் புணர்ச்சி இச்சை (Pedophilia), பிணங்களுடன் புணர்ச்சி இச்சை (Necrophilia) என்னும் மிகமோசமான மனநோயாளர்கள் போல, சுயபால் புணர்ச்சி இச்சையுள்ளவர்களும் மனநோயாளிகளே என்று நினைக்கப்பட்டனர். வாழும் சூழ்நிலை, பழகும் நண்பர்கள், கிடைக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம் ஒருவன் சுயபால் விரும்பியாக மாற்றப்படுகிறான் அல்லது மாறுகிறான் என்று நம்பி வந்தனர். சுயபால் விருப்பம் என்பது  ஒரு தெரிவு நிலையே (Choice) அல்லாமல் இயற்கையாக இவர்களுக்கு உருவானதல்ல என்றும் கூறி வந்தனர். இது மனநோய் என்பதால், முறையான வைத்திய சிகிச்சை மூலம் குணப்படுத்தக் கூடியதுதான் என்றும் நம்பிவந்தனர். ஆனால் 1977ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் உருவாகியது. அமெரிக்காவின் மனவியல் ஆராய்ச்சியாளர்களும், உடலியல் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும், வைத்தியர்களும் முறையான ஆராய்ச்சிகள் மூலம், இது தேர்வு நிலை கொண்டதல்ல என்பதைக் கண்டு கொண்டனர். இதுவும் இயற்கையானதே என்று ஒப்புக் கொண்டனர். மனிதனின் மரபணுவில் ஏற்பட்ட மாற்றமே இப்படிப்பட்டவர்கள் உருவாவதற்குக் காரணம் என்று கண்டுகொண்டனர். அதுமட்டுமில்லாமல், மரபணுவுடன் சேர்ந்து மூளையில் உள்ள 'ஹைபோதாலமஸ்' (Hypothalamus) பகுதியில் ஏற்படும் மாற்றங்களும் இவற்றைக் கட்டுப்படுத்துகின்றன் என்ற முடிவுக்கும் வந்தனர். இது சம்மந்தமான ஆராய்ச்சிகள் நிறையவே நடந்தன. அறிவியலில் வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில், இது மனிதனால் சுயமாக தீர்மானிக்கும் விசயமல்ல என்னும் முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். ஆனாலும், 'இல்லை, இது மரபணுவால் வருவதில்லை. ஒவ்வொருவரும் சொந்தமாகத் தாமே தெரிவு செய்வது இது, இதை மாற்ற நினைத்தால் மாற்றலாம். மாற்ற விரும்பாதவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்' என்று மதங்களும், சில அமைப்புகளும் இப்போதும் கூறி வருகின்றன. விஞ்ஞானிகளும், மனவியல் நிபுணர்களுமே சொல்லிவிட்ட பின்னரும் இவர்கள் இந்த அளவுக்கு ஏன் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று யோசிக்கும் போதுதான், அவர்களிலும் தப்பு இல்லை, அவர்களின் சில புரிதல்களில்தான் தப்பு உண்டாகியிருக்கிறது என்பது தெரியவந்தது. இங்குதான் உலகத்தில் உள்ள அனைத்து சுயபால் விரும்பிகள் (homosexualist) தப்பாக புரியப்படக் காரணமாக் இருக்கும் முன்றாம் வகையான இருபால் விரும்பிகள் (Bisexuals) பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் இருபால் விரும்பியாகவே இருக்கிறான் என்பதுதான் உண்மை. அதாவது ஏதாவது ஒரு சமயத்தில் சுயபால் உறவில் பெரும்பாண்மையான மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். சிறு வயதிலோ, காலேஜ் ஹாஸ்டல்களிலோ, வேறு சந்தர்ப்பங்களிலோ அவர்ளுக்கு இந்த ஹோமோ செக்ஸுவல் தொடர்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்புகள் உண்டு. அப்படி சுயபால் உறவில் முன்னர் ஈடுபட்டவர்கள், அதிலிருந்து மாறி 'ஆண் பெண்' உறவுமுறையில் இப்பொழுது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கலாம். அந்த அனுபவத்தின் மூலமாக, 'அட! நானே சுயபால் இச்சையிலிருந்து மாறியிருக்கிறேன், இவர்களால் ஏன் மாறமுடியாது?" என்னும் கேள்வி உள்ளுக்குள் எழுந்து, அது ஆத்திரமாக மாறுவது நியாயமான ஒன்றுதானே! ஆனால், இதில் அவர்கள் புரிந்து கொள்ளாத ஒன்று என்னவென்றால், அவர்கள் சுயபால் இச்சை கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருபால் இச்சை கொண்டவர்களாக இருக்கிறார்கள். சிறுவயதிலும் கூட சுயபாலுறவில் ஈடுபடாமல் சிலர் இருக்கிறார்கள். நாகரீகப்படுத்தப்பட்ட முறையிலும், கட்டுப்பாடான வளர்ப்புகளின் மூலமும், அதற்கென சந்தர்ப்பங்கள் உருவாகாத நிலையிலும், சுயபால் உறவில் ஈடுபடாமல் இவர்கள் காப்பாற்றப்படுகின்றனர். இப்படிக் காப்பாற்றப்பட்டதால், தான் சுயபால் உறவில் ஈடுபடவில்லை என்னும் ஒரு இறுமாப்புடன் அடுத்தவரைக் காயப்படுத்துகின்றனர். அதனாலேயே தாங்களும் இருபால் இச்சையுள்லவர்கள் என்பதே தெரிந்து கொள்ளாமல் வாழ்கின்றனர். நான் இதைச் சொல்லும் போது, என்மேல் உங்களுக்கு நிச்சயம் கோபம் வரும். 'நான் அதுபோல ஒரு உறவில் ஈடுபட்டதுமில்லை. எனக்கு அப்படி ஒரு இச்சை உருவானதுமில்லை' என்று நினைத்து என் மேல் உங்கள் கோபத்தைக் காட்டவும் முயல்வீர்கள். இன்று குடும்பமும், குழந்தையுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு அந்த நினைப்பு வருவதில் தப்பும் இல்லை. ஆனால் உண்மை அதுவல்ல. ஒன்று நீங்கள் இருபாலிச்சை உள்ளவர். அல்லது நீங்களும் ஒரு விதிவிலக்கானவர். இதை ஒரு சின்ன உதாரணம் மூலம் புரிய வைக்கப் பார்க்கிறேன்.

உணவு, செக்ஸ் இரண்டும் மனிதனுக்கு எப்போதும் தேவைப்படும் அடிப்படைத் தேவைகள். இந்த அடிப்படைத் தேவைகள் நமக்குக் கிடைக்காமல் தடுக்கப்படும் போது, தடைகளை உடைத்தாவது அதைப் பெறும் நிலைமைக்கு நாம் தள்ளப்படுவோம். சீனாவில் கரப்பான் பூச்சிகளையும், புழுக்களையும் குவியல் குவியல்களாக சந்தையில் விற்பதைப் படமாகப் பார்க்கும் போது, நமக்கு குமட்டிக் கொண்டு வருவது இயல்பானது. 'அதை நாங்கள் உண்டால் என்ன?' என்று நினைத்தாலே வாந்திதான். அதிகம் ஏன், தமிழ்நாட்டிலேயே காய்கறி மட்டும் உண்ணும் சில தொகுதி மக்களுக்கு, கறியையோ, மீனையோ அருகில் கொண்டு வைத்தால் குமட்டிக் கொண்டு வரும். தாராளமாக உணவு கிடைத்துக் கொண்டு வரும் நமக்கு, ஒரு மாறுதலான கட்டாய நிலையில், இவற்றை உண்ணவேண்டி வந்தால், கட்டாயம் உண்ணுவோம் என்பதை ஏற்றுக்கொள்ள மனமே வராது. ஆனால் உணவு கிடைக்காமல் உயிர் போகக்கூடிய கட்டத்தில் அது சீனாக்காரனின் கரப்பான் பூச்சியாயிருந்தாலென்ன? மீனாக இருந்தாலென்ன? அவை பற்றிக் கவலைப்படவே மாட்டோம். அந்த நேரத்தில் நமக்குத் தேவை பசிக்கான உணவு. அதைப் பெற்றுக் கொள்வது மட்டுமே பிரதானமாக இருக்கும். இதை நீங்கள் நம்பாவிட்டால், 1972ம் ஆண்டு நடந்த ஒரு விமான விபத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.

1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி உருகுவே நாட்டுக்குச் சொந்தமான ஒரு விமானம் அந்தீஸ் மலைத் தொடர் ஒன்றில் விபத்துக்குள்ளாகி விழுந்தது. 45 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தில் தப்பியவர்கள் 16 பேர் மட்டுமே. இவர்கள் எப்பொழுது காப்பாற்றப்பட்டார்கள் தெரியுமா? இரண்டு மாதங்களின் பின்னர். அதாவது 23ம் தேதி டிசம்பர் மாதம் 1972ம் ஆண்டு அன்றுதான் காப்பாற்றப்பட்டார்கள். அதுவரை பனிமூடிய அந்தீஸ் மலை உச்சியில், குளிரில் உணவேதும் இல்லாமல் வாடிக் கொண்டிருந்தார்கள். காப்பாற்றுவதற்கு உதவி வரும், உதவி வரும் என்று இரண்டு மாதங்களுக்கு மேல் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, ஒரு கட்டத்தின் பின்னர் உயிரைக் காப்பாற்றி வைத்திருக்க வேண்டிய அவசியம் உருவானது. உயிரைக் காப்பாற்ற உணவு தேவை. கொண்டுவந்த உணவு எல்லாம் எப்போதோ தீர்ந்த நிலையில் அவர்களுக்கு உணவாக இருந்தது என்ன தெரியுமா? உடன் பயணம் செய்து இறந்துவிட்டிருந்த மனிதர்களின் இறைச்சிதான். பனியினால் சூழப்பட்ட அந்தீஇஸ் மலைத்தொடரில் விமானம் விழுந்ததால் எங்கும் பனியே சூழ்ந்திருந்தது. விபத்தில் இறந்திருந்த உடல்கள் பனிகளுக்கிடையில் இருந்ததால் எதுவுமே கெட்டுப் போயிருக்கவில்லை. மனிதர்களின் உடலின் பகுதிகளை ஒவ்வொன்றாக வெட்டி சாப்பிட்டுக் கொண்டுவந்தனர் அவர்கள். யாருமே கற்பனை செய்ய முடியாத, உலகையே உலுக்கிப் போட்ட சம்பவம் இது. உயிர் வாழ வேண்டுமென்ற இறுதிக்கட்ட நிலையில் இயற்கை, விதி, கட்டுப்பாடு, மதம், உணவுப்பழக்கம் என எதையும் கவனத்தில் எடுக்காமல் உண்பதென்பதே முக்கியம் என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். அந்த நிலையில் உணவு என்பது எதுவாகவும் இருக்கலாம். உண்பதுதான் தேவை. உண்டே ஆகவேண்டும். இவர்கள் காப்பாற்றப்பட்ட பின்னர், மனித இறைச்சியை உண்டதால் சர்ச்சுகளிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற எதிர்குரல்கள் எழுந்த கூத்தும் நடந்தது. இது போலத்தான் பாலுறவு இச்சையும் ஒரு கட்டத்தைத் தாண்டிய பின்னர் மனிதனை வேறுவிதமாக ஆட்டி வைக்கிறது.

குடும்பமாய் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஒரு ஆண், ஏதோ ஒரு கணத்தில் தோன்றும் பழி நோக்கத்தில் ஒரு கொலையைச் செய்துவிட, அவனுக்கு 40 வருடங்களுக்கு மேலாகச் சிறைத் தண்டனை கிடைக்கிறது. அவனது வாழ்க்கையே சிறைச்சாலையில் முடிந்துவிடப்போகிறது என்னும் நிலை. அங்கு எத்தனை வருடங்கள் அவன் தன்னையே அடக்கிக் கொண்டு பாலுறவில் ஈடுபடாமல் இருக்க முடியும்? அவன் ஏற்கனவே ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்த ஒருவனகாத்தான் இருந்தான். ஆனால் அந்த வாசல்கள் அனைத்தும் அடைபட்டுப் போன நிலையில், சிறைக்குள் தன்னை சுயபால் புணர்ச்சிக்கு உள்ளாக்குகிறான் அலவா? இதே மனிதனிடம், அவன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த போது, "நீ ஆண்களுடன் உறவில் ஈடுபடுவாயா?" என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால், அதை நினைத்து வாந்திதான் எடுத்திருப்பான். ஆனால் சிறையில் தனது தேவைக்கேற்ப அவன் நிலை மாறிவிடுகிறது. இவையெல்லம் இருபால் இச்சையாளர்களாகத்தான் நாம் ஒவ்வொருவரும் இருக்கின்றோம் என்பதற்கு உதாரணம்.ஆனால், நாம் அந்தக் கட்டாயங்கள் வரும்வரை அவற்றைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால், சிறுவயது இளைஞர்களாக ஹாஸ்டல்களிலோ இல்லை வேறு இடங்களிலோ ஒன்றாக இருக்கும் போது, சுயபால் இச்சையில் ஈடுபடுவது மேலே சொல்லப்பட்ட சிறைவாழ்வு போன்ற கட்டாயமான நிகழ்வுகளுக்குள் அடங்குவதில்லை. அதனால் அவை தவிர்க்கப்படுதலே எப்போதும் சிரந்த முடிவாக இருக்கும்.

இருபால் விரும்பிகளையும், சுயபால் விரும்பிகளையும் நாம் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம். இரண்டும் ஒன்றுதான் என்று நினைத்துவிடுவதால் வரும் குழப்பங்கள்தான் இவை. ஒரு சுத்தமான, மார்ட்டினைப் போன்ற சுயபால் விரும்பிகள் எப்போதும் மாறாதவர்கள். மார்ட்டின் போன்றவர்கள் நூறு சதவீதம் ஹோமோ செக்ஸுவல் பிரிவினர். இவர்களுக்கு எந்த விதமான வைத்திய சிகிச்சை கொடுத்தாலும் மாற்றவே முடியாதவர்கள். ஒரு பேச்சுக்கு, வைத்திய சிகிச்சை மூலம் பெண் ஒருத்தியை விரும்பும் வகையில் மார்ட்டினை மாற்றுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்படி மார்ட்டின் மாறினால் அவன் ஒரு ஹோமோ செக்ஸுவலிஸ்ட்டே கிடையாது, அவன் இருபால் விரும்பி (Bisex) வகையினன். எவனொருவனை நாம் மாற்ற முடியும் என்று சொல்லி மாற்றிக் காட்டுகிறோமோ, அவனெல்லாம் சுயபால் விரும்பி வகைக்குள் முன்னரே இருந்தவனில்லை, இருபால் விரும்பி வகைக்குள்தான் இருந்திருக்கிறான். அதனால் சுயபால் விரும்பி என்பவனை உங்களால் ஒருபோதும் மாற்றவே முடியாது. என்ன புரிகிறதா?

சுயபால் விரும்பிகளும், அவர்களின் மாற்றுக் கருத்தாளர்களும் (பகுதி 1)




சுயபால் விரும்பிகளின் (Homosexualist) ஈடுபாடுகளை அடிப்படையாக வைத்து, சமீபத்தில் மிகப்பெரியதொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. நமது கலாசார வாழ்க்கை முறையை, இந்த சுயபால் விரும்பிகளின் நடைமுறை சீரழிக்குமெனக் கருதி, 'இந்த நடவடிக்கைகள் மிகவும் தவறானவை' என்னும் எதிர்ப்புக் குரல்கள் உரக்கக் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. அதே நேரம் 'இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவகாரம். அதில் தலையிட நமக்கென்ன உரிமையிருக்கிறது?' என்ற ஆதரவான குரல்களும், எதிக் குரல்களுக்கு  நிகராகவே ஒலித்துக் கொண்டிருக்கிறன. இந்த இரண்டு எதிர் எதிர் குரல்களையும் உற்றுக் கவனிக்கும் போது, இரு சாராருமே இந்தப் பிரச்சனையை மேலோட்டமான ஒரு பார்வையிலேயே அணுகுகிறார்களோ என்ற சந்தேகம்தான் நமக்கு உருவாகிறது. காத்திரமான அடிப்படைத் தகவல்கள் எவற்றையும் ஆராயாமல் கருத்துச் சொல்கிறார்களோ என்றும் தோன்றுகிறது. இந்த நிலையில், ஏதோ ஒரு பக்கம் சார்ந்தோ அல்லது தனி விருப்பு சார்ந்தோ நானும் இங்கே என் கருத்துகளைச் சொல்லிவிட முடியாது. மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சனை இது. இதை மிகத்தெளிவான, தனித்தன்மையுள்ள, அறிவியல் சார்ந்ததொரு கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே விளங்கிக் கொள்ள முடியுமென்று நினைக்கிறேன். அதனால், அந்த ஆராய்ச்சிக்குள் உங்களையும் அழைத்துக் கொண்டு, நானும் நுழையலாம் என்று விரும்புகின்றேன். அப்படி நுழைவதற்கு முன்னர் ராஜ்சிவாவாகிய எனக்கு, நேரடியாகவே நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டுச் செல்லலாம்.  

பல வருடங்களுக்கு முன்னர் இது நடந்தது. ஜேர்மனியில் என் வாழ்கையை ஆரம்பித்த காலகட்டங்களில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் பணிகளுக்கென தனியான ஒரு அறை எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மிகவும் இயல்பாகப் பழகக் கூடிய என்னை, அங்கு பணிபுரிந்த அனைவருக்கும் நன்றாகப் பிடித்துக் கொண்டது. சகதொழிலாளர்கள் சகஜமாகவே என்னுடன் பழகுவார்கள். அனைவரும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள். என் அறைக் கதவை திறந்தால் நீண்டிருக்கும் பெரிய ஹாலில் பாரிய இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். அவற்றை இயக்கும் அனைவரும் என்னுடன் அன்புடன் பழகுவார்கள். ஜேர்மன் நாட்டினர் இனத்துவேசம் நிறைந்தவர்கள் என்னும் ஒரு பேச்சு உலகெங்கும் பரவலாகவே இருந்து வருகிறது. அப்படி இனத்துவேசத்துடன் சிலர் இருப்பதென்னவோ உண்மைதானென்றாலும், அவர்கள் வெகு சொற்பமான தொகையினர்தான். நம்மிடையே காணப்படும் மதத் துவேசம், ஜாதித் துவேசங்களுடன் ஒப்பிடும் போது, இவர்கள் ஒன்றுமேயில்லை எனலாம். என்னுடன் பணிபுரிந்த அனைவரும் என்னுடன் அன்புடன் பழகுவதற்கு என் வேற்று நிறமும் ஒரு காரணம். ஆபிரிக்கர்கள் போல ரொம்பக் கறுப்புமில்லாமல், அவர்களைப் போல வெள்ளையுமில்லாமல், அவர்கள் விரும்பி உண்ணும் சாக்லேட் நிறத்துடன் இலங்கையிலிருந்து பலர் ஜேர்மனிக்கு அந்தக் காலகட்டங்களில்தான் குடியேறியிருந்தோம். துருக்கியர் தவிர்ந்து வேறு நாட்டவர்கள் ஜேர்மனிக்கு வந்திருக்காத காலம் அது.

உடன் பணிபுரிபவர்கள் அப்பப்போ கிடைக்கும் காபி இடைவேளைகளில் என் அறையை நோக்கி வந்து என்னுடன் காப்பியருந்திச் செல்வார்கள். இதற்கேற்றாற் போல, எனது அறைக்கு அருகிலேயே காப்பி உருவாக்கும் தானியங்கி இயந்திரமும் அமைக்கப்பட்டிருந்தது. என்னுடைய அறைக்கு வந்து காபி குடித்துப் பேசிச் செல்லும் நண்பர்களில் 'மார்ட்டின்' என்னும் ஜேர்மனியனும் இருந்தான். ஆறடிக்குக் குறையாத வளர்ச்சியும், ஒரு தேர்ந்த விளையாட்டு வீரனின் உடல்வாகும் கொண்டவன் மார்ட்டின். ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிக் கச்சிதமாக, கட்டுமஸ்தாக இருப்பான். அவன் கண்ணசைவில் மயங்குவதற்கு பெண்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய உருவமைப்பு கொண்டவன். நான் அந்தக் தொழிற்சாலையில் சேர்ந்த சில வாரங்களிலேயே, மார்ட்டினின், 'அடுத்தவருக்கு உதவும் இயல்பு' பற்றி கேள்விப்பட்டிருந்தேன். தொழிற்சாலையில் யாருக்கு என்ன நடந்தாலும் முன்னுக்கு நின்று உதவிசெய்யும் பண்புடையவன் அவன். ஒருமுறை, இயந்திர விபத்தில் சிக்கி சக தொழிலாளி ஒருவன் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததால், தூக்கி உதவி செய்யப் பலர் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் (எய்ட்ஸ் பயம்), மார்ட்டின் அவனை அவதானமாகத் தூக்கி, முதலுதவிகள் அளித்து அம்புலன்ஸ் வண்டி வரும்வரை அருகிலிருந்து பாதுகாத்தான். ஒரே வார்த்தையில் சொல்லப் போனால், 'மார்ட்டின் ஒரு அற்புதமான மனிதன்'. ஒருநாள் காலை என் அறைக்கு வந்த மார்ட்டின், 'சிவா, கொஞ்சம் பொறு நான் காப்பி எடுத்து வருகிறேன்' என்று சொல்லிச் சென்றான். சென்றவன் ஐந்து நிமிடத்துக்கு மேலாகியும் வரவில்லை. அப்போது மேலதிகாரியிடமிருந்து, 'தன்னை வந்து சந்திக்கும்படி' எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. என் மேலதிகாரியின் அறைக்கு, காபி இயந்திரத்தைத் தாண்டித்தான் நான் செல்ல வேண்டும். சரி அப்படியே மார்ட்டினிடம், 'காபியை என் அறையில் வைத்து விடு' என்று சொல்லிச் செல்லலாம் என்று புறப்பட்டேன். காபி இயந்திரம் இருக்குமிடத்தை அண்மிக்கும் போது, மார்ட்டின் காபி இயந்திரம் மறைக்கும் இடத்தில் எனக்கு முதுகைக் காட்டியபடி யாருடனோ பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். 'அட! இவன் இங்கிருக்கிறானே!' என்று நினைத்து அவனருகில் சென்றேன். அப்போதுதான் மார்ட்டின் யாரையோ கட்டியணைத்தபடி முத்தமிட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. நான் வருவதைக் கண்ட அவர்கள், முத்தமிட்டபடியே சற்றுத் தலையைத் திருப்பி என்னைப் பார்க்க, நானும் அவர்களை முழுமையாக பார்க்கக் கூடியதாக இருந்தது. 

அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் என் உடம்பு பதறலுடன் தூக்கிப் போட்டது. கைகால்களில் ஒரு இனம் புரியாத நடுக்கம் பற்றிக் கொள்ள, சற்று முன்னர் சாப்பிட்ட காலைச் சாப்பாடு குமட்டிக் கொண்டு வாய்க்கு வருவது போல ஜாலம் காட்டியது. அந்த இடத்தை விட்டு உடன் நகர்ந்து எனது அறைக்குள் ஓடிச் சென்றேன். என் வாழ்நாழில் அப்படி ஒரு அருவெறுப்பான காட்சியை அன்றுதான் கண்டேன். மார்ட்டின் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தது ஒரு இளைஞனை. என் பக்கம் அவர்கள் முத்தமிட்டபடி திரும்பும் போது, மார்ட்டினும், அந்த இளைஞனும் வாயில் வாயை வைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கணத்தில் அவர்கள் நாக்கு சுழன்றபடி வெளியே வந்த காட்சியை என்னால் பல நட்கள் மறக்க முடியாமல் இருந்தது. அப்படியொரு அதிர்ச்சியை, அதுவும் மார்ட்டினைப் போல அழகான ஒரு ஆண்மகனிடமிருந்து நான் எதிர்பார்க்கவேயில்லை. இலங்கையில் கட்டுப்பாடான கலாச்சாரத்தில் வளர்ந்துவிட்டுத் திடீரென ஜேர்மனிக்கு வந்து, சில மாதங்களில் இப்படியொரு காட்சியை கண்ணுக்கு முன்னால், அதுவும் என்னுடன் பழகியவ ஒருவன் மூலமாகக் கண்டது அதிர்ச்சியாக இருந்தது. மேலதிகாரி என்னை அழைத்ததைக் கூட நான் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அப்படியே என்னுடைய இருக்கையில் பல நிமிடங்கள் இருந்துவிட்டேன். திடீரென அறைக் கதவு திறந்து கொண்டது. மார்ட்டின் கையில் காபியுடன், அதே கனிவான, நட்பான சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால் என் முகமோ மூன்று லாரிகள் ஒன்றாக மோதியது போல, பல கோணங்களாக மாறி, இருண்டு கிடந்தது. "சாரி சிவா, என் காதலர் திடீரென என்னைப் பார்க்க வந்துவிட்டார். அவரது கம்பெனியின் பணி நிமித்தமாக மூன்று நாட்கள் பேர்லின் சென்றுவிட்டு இன்று காலைதான் திரும்பினார். வந்தவுடன் என்னிடம் வீட்டுச் சாவியைப் பெற்றுச் செல்ல வந்தார். அதனால்தான் காபி லேட்டாகிவிட்டது". எதுவுமே நடக்காதது போல சொல்லிக் கொண்டிருந்தான். 'எனக்கு முன்னால் முத்தமிட்டது தவறு' என்று சொல்லி என்னிடம் பேச்சுக்காவது ஒரு மன்னிப்பைக் கேட்பான் என்று எதிர்பார்த்தேன். ஊஹூம்.... மார்ட்டின் அப்படி ஒரு விசயம் நடக்கவே இல்லை என்பது போலச் சென்றுவிட்டான். 

நான் விரும்பிச் சுவைக்கும் காபி, தன் மணத்தைப் பரப்பியபடி மேசையில் இருந்தது. ஆனால், அதைத் தொடவே அருவெறுப்படைந்தேன். என்னால் நடந்த எதையும் ஜீரணிக்க முடியவில்லை. ஆண்களையே விரும்பும் ஒரு காமுகனுடனா நான் இவ்வளவு நாட்களும் சிரித்துப் பேசியிருந்திருக்கிறேன் என்று நினைக்க எனக்கே அழுகை வந்தது. என்னுடன் பேசும் போதெல்லாம் என்ன என்ன என விதமான கெட்ட நினைப்பில் இவன் என்னைப் பார்த்திருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். அடிபட்ட பறவை போல அறைக்கு வெளியே செல்லாமல் அப்படியே இருந்தேன். இந்த நினைப்புகள் எல்லாம் எனக்குள் சிரிப்பையும் வரவைக்கத் தவறவில்லை. சற்று நேரத்தில் ஜோஹான் என்னும் இன்னுமொரு நண்பன் அறைக்குள் வந்தான். இவனும் என்னுடன் மிக நன்றாக பழகக் கூடிய ஒரு நண்பன். அறைக்குள் வந்து என் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே ஏதோ பிரச்சனை என்பதைக் கண்டு கொண்டான். "என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்?" என்று கேட்ட ஜோஹானிடம், தயக்கத்துடன் நான் கண்ட காட்சியைச் சொல்ல ஆரம்பித்தேன். "அது வந்து...., காபி மெசினுக்கு அருகில் மார்ட்டின் இன்னுமொரு ஆணைக் கட்டியணைத்து முத்தமிட்டபடி இருப்பதைக் கண்டேன்" என்று நான் ஆரம்பிக்கும் போதே, "ஆமா! அந்த்ரே வந்திருந்தானே. நானும் கண்டேன். அவன்தான் மாட்டினின் காதலன். சொல்லப் போனால், அவர்கள் இருவரும் கணவன் மனைவிகள். அந்த்ரே ரொம்ப நல்ல பையன். நீ கட்டாயம் அவனுடன் பேச வேண்டும். அவன் அடிக்கடி இங்கு வருவான். ஆமா..! நீ என்னவோ சொல்ல வந்தாயே! என்ன நடந்தது?" என்று கேட்டான். மார்ட்டினிடம் இருந்த அலட்சியத்தை விட இவனிடமிருந்த அலட்சியம் அதிகமாயிருந்தது. "அடப்பாவிகளா! இரண்டு ஆண்கள் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது உங்களுக்குப் பிரச்சனை இல்லையா?" என்று வெளியே கேட்காமல் மனதுக்குள் அலறினேன். "இல்லை.... அவர்கள் இப்படி முத்தமிடுவது பிரச்சனை இல்லையா?" பலகீனமான குரலில் கேட்டேன். "அவர்கள் இருவரும் முத்தமிடுவதில் நமக்கென்ன பிரச்சனை சிவா?" என்று எதிர்க் கேள்வி கேட்டான் ஜோஹான். பின்னர் இது எனக்கு பழக்கமில்லாத ஒன்று என்பதைப் புரிந்து கொண்டவனாக, "என் மனைவியை நான் முத்தமிடுவதற்கு யாருடைய அனுமதியையும் நான் பெறவேண்டியதுமில்லை. அப்படி முத்தமிடுவது ஒரு பெரிய விசயமுமில்லை. அதுபோல அவர்கள் இருவரும் கணவன் மனைவிகளாக முத்தமிடுவதால் எங்களுக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது? அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையல்லவா அது!" எனக்கு புரிய வைக்க முயன்றான் ஜோஹான்.

அன்றும் அதற்குப் பின் சில காலங்களுக்கும் மார்ட்டினின் இந்தச் செய்கையை ஏற்க முடியாதவனாகவே கழித்தேன். மார்ட்டினுடன் பழகுவதில் கூட எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் என் எந்தச் செயற்பாட்டிலும் நான் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. என்றாவது ஒருநாள் மார்ட்டின் என்னுடன் தப்பாக நடக்கலாம், அல்லது தப்பான கண்ணோட்டத்தில் என்னைப் பார்க்கலாம் என்ற பயம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது (இப்போதுதான் நான் உடல் பருமனாகி, ஒரு மாதிரியான உடலமைப்புடன் இருக்கிறேன். அப்போதெல்லாம் மிகவும் மெலிந்த இறுக்கமான உடல்வாகுடன் அழகாக இருந்தேன் என்றுதான் ஞாபகம்). என் எந்த எதிர்பார்ப்புகளையும் மார்ட்டின் நிறைவேற்றவேயில்லை. செக்ஸ் விசயத்தில் ஒரு பொருட்டாகவே அவன் என்னை மதிக்கவில்லை. என்னை மட்டுமில்லை, வேறு எவரையும் அவன் தப்பாகப் பார்த்ததும் இல்லை. தப்பாக நடந்து கொண்டதுமில்லை. அதே கனிவான, அன்பான மார்ட்டினாகவே கடைசிவரை இருந்தான். அதன்பின் இருபது வருடங்களுக்கு மேலாக மார்ட்டினுடன் நான் பணிபுரிந்தேன். ஜேர்மனியில் நான் வாழ்ந்த வாழ்கையும், அதன் கலாச்சார அமைப்பும், மார்ட்டினுடனான என் பணி அனுபவங்களும் என்னைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டன. அந்த்ரேயையும், மார்ட்டினையும் முத்தமிடும் கோலத்தில்  பலநூறு தடவைகள் அதன் பின்னர் நான் பார்க்க நேர்ந்திருக்கிறது. அவற்றை மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்வு என்று எடுத்துக் கொள்ளக் கூடிய அனுபவப் பக்குவம் எனக்குள் நிறைந்திருந்தது. அவை ரொம்பச் சாதாரண நிகழ்வுகள்தான் என்பதை எனக்கு அறிவுறுத்த ஜோஹான் போன்றவர்களின் உதவி தேவையிருக்கவில்லை. மார்ட்டினின் நண்பன் (காதலன்) அந்த்ரே எனக்கு நண்பனாகியதும் சில மாதங்களிலேயே நடந்தது. அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாகப் பார்க்கும் பக்குவம் என்னுள் வந்துவிட்டிருந்தது. காலப் போக்கில் மார்ட்டினிடமே, ஒருபாலீர்ப்புப் பற்றிய என் சந்தேகங்கள் அனைத்தையும் மெல்ல மெல்லக் கேட்டுத் தீர்த்தேன். அவன் கூறிய பதில்கள் எனக்குள் இருந்த முட்டாள்தனமான சிந்தனைகள் அனைத்தையும் சிதறடித்தன. 

உயிர்மைக்கு என்றோ எழுதப் போகும் 'ஒருவன்', அன்றே எனக்குள் ஒளிந்திருந்தானோ தெரியவில்லை. மார்ட்டினுடன் பேசும்போது, அனைத்தையும் விரிவாகக் கேட்டறிந்தேன். ஒருநாள் நேரடியாகவே அவனிடம் கேட்டேன், "மார்ட்டின், ஒரு ஆண் இன்னுமொரு ஆணை முத்தமிடுவதைப் பார்க்கும்போது எங்களுக்கு என்னவோ செய்கிறதே, அப்படி முத்தமிடும் உங்களைப் போல உள்ளவர்களுக்கு அது அருவெறுப்பாக இருப்பதிலையா?" அப்போதுதான் அவன் அந்த உறவு நிலையின் தாற்பரியங்களை முழுமையாக எனக்குப் புரிய வைத்தான். அவன் கூறியவறை அவனது வார்த்தைகளாகத் தராமல், தொகுத்த நிலையில் என் வார்த்தைகளாகவே தருகிறேன். 

மார்ட்டின் சிறுவனாக இருந்து பாலுணர்வு தோன்றும் வயதை எட்டும் போது, மற்றப் பையன்கள் போல அல்லாமல் தான் வித்த்தியாசமானவன் என்பதை உணர ஆரம்பித்தான். சக நண்பர்களாக இருந்த சிறுவர்கள் பெண்களைப் பற்றிப் பேசும்போது, இவனுக்கு அதில் கலந்துகொள்ளும் நாட்டம் கொஞ்சமும் இல்லாமல் இருந்தது. சொல்லப் போனால் நண்பர்கள் தங்கள் நண்பிகளை முத்தமிடுவதைக் காணும்போது, ஒருவித அருவெறுப்புத்தான் இவனுக்கும் தோன்றியிருக்கிறது. ஆனால் இவனுக்குள்ளும் பாலுணர்வும், காதலுணர்வும் தோன்றத்தான் செய்தன. அவையெல்லாம் ஒரு ஆணை நோக்கித்தான் இருந்ததேயொழிய, ஒரு பெண்ணை நோக்கியல்ல. ஆண் பையன்களுடன் இருக்கும் போது, ஒருவித பரவச நிலையை தான் அடைவதை மார்ட்டின் உணரத் தொடங்கினான். மிகவும் நம்பிக்கையுள்ள சர்ச்சுக்கு செல்லும் கட்டுப்பாடான கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவன். தான் ஒரு ஆணில் கவரப்படும் நினைப்பு, தப்பு என்று தன் உணர்வுகளைக் கட்ட்டுப்படுத்தி வந்திருக்கிறான். தன் சக சிறுவர்களிடன் காதலைச் சொல்லும் துணிச்சலும் அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் இவையெல்லாம் இளைஞனாக மாறும்வரைக்கும்தான் அவனுக்குப் பிரச்சனைகளாக இருந்தன. இளைஞனாக மாறிய மார்ட்டினுக்கு, சுலபமாக ஒரு ஆண் நண்பன் கிடைத்தான். தனது இந்தச் சுயபால் விருப்ப நிலையை தன் பெற்றோர்களிடமும் மறைக்க மார்ட்டின் விரும்பவில்லை. ஒருநாள் மாலை உணவு அருந்தும் வேளை, தன் பெற்றோர்களிடம், தன் நிலையைப் புரியக் கூடிய வகையில் சொன்னான். அதைக் கேட்டவுடன் பெற்றோர்கள் முதலில் திகைத்துப் போனாலும், அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆரம்பத்தில் பெண்களின் பக்கம் தன்னைச் செலுத்தி மாற்றிக் கொள்ள மார்ட்டின் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறான். கௌரவமான தன் குடும்பத்துக்கும், தனக்கும் கூட, அவமானங்கள் இதனால் ஏற்படும் என்று நினைத்து, பாடசாலையின் மூலம் உருவாக்கிக் கொடுக்கப்படும் சைக்காலஜி சிகிச்சையைக் கூடச் செய்து பார்த்திருக்கிறான். அவை எதுவுமே பலனளிக்காத நிலையில்தான் தனது நிஜத்தைப் புரிந்திருக்கிறான். அந்த நிஜத்துடனே வாழவும் பழகியிருக்கிறான். மற்றவர்கள் சொல்வது போல, சுயபால் இச்சை உடையவர்கள் விரும்பி இந்த நிலையை அடைவதில்லை. இந்த நிலைக்கு அவர்கள் வரும்போது மிகவும் அவமானப்படுகிறார்கள். மற்றவர்களால் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இந்த அவமானங்களையெல்லாம் வெற்றி கொண்டுதான் இந்த நிலையை வெளிப்படையாக நடைமுறைப்படுத்துகிறார்கள். மொத்தத்தில் சொல்லப் போனால், மார்ட்டின் போன்ற சுயபால் இச்சையினர் மாற்றப்பட முடியாதவர்கள். ஆனால் கொடுமை என்னவென்றால், அவர்களை மாற்றலாம், சிகிச்சை கொடுத்தால் மாறிவிடுவார்கள் என்று அடுத்தவர்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதற்குக் காரணம், Bisexuals என்று சொல்லப்படும் இருபால் விரும்பிகளையும், இவர்களையும் போட்டு அனைவரும் குழப்பிக் கொள்வதுதான். 

இதன் தொடர்ச்சி இரண்டாம் பகுதியில்........

-ராஜ்சிவா-

கஞ்சா அரிய வகை மூலிகை: அமெரிக்கா தரும் அதிர்ச்சி!

க்கள் எதை நோக்கிப் போகிறார்களோ, அதை வருமானத்துக்கான வழியாக மாற்றுவது அமெரிக்க அரசுக்கு கைவந்த கலை. 
அமெரிக்காவின் வாஷிங்டன், கலிபோர்னியா, அரிசோனா,மெக்ஸிகோ என 23 மாநிலங்களில் சொந்தப் பயன்பாட்டுக்காக கஞ்சா வைத்திருப்பதும் அதை பயன்படுத்துவதும் குற்றமில்லை. பிற மாநிலங்களிலும் மேற்சொன்ன மாநிலங்களைப் போல தடையை நீக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துகொண்டிருகின்றன.

ஆல்கஹால் போல் பக்கவிளைவுகள் பெரிய அளவில் இல்லாமல் இருப்பதும், இது வலி நிவாரணியாக மருத்துவ பயன்பாட்டுக்கும் உதவுவதாலும், ஒட்டு மொத்த அமெரிக்காவிலும் தடையை நீக்க கோரிக்கை எழுந்துள்ளது. சில மாநிலங்களில் வீடுகளில் சொந்த பயன்பாட்டுக்கு வளர்த்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த அமெரிக்க பாடகர் பாப் மார்லி வெளிப்படையாக கஞ்சாவை ஆதரித்தவர். உபயோகித்தும் வந்தவர். 1981-ல் சாகும்போது மார்லிக்கு 11 குழந்தைகள்.1966-ல் இருந்து பல நாடுகளில் தன்னுடைய இசைக்குழுவுடன் பயணித்து நிகழ்ச்சிகள் செய்த மார்லிக்கு ஏகப்பட்ட சொத்துகள்.
இருந்தும் அமெரிக்காவில் தற்போது பரவி வரும் கஞ்சா ( கன்னாபிஸ் அல்லது வீட் அல்லது மார்ஜுவனா ) மோகத்தை கணக்குப்போட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், பாப் மார்லியின் பெயரில் புதிய கஞ்சா பிராண்டை  'மார்லி நேச்சுரல்ஸ் '  என்ற பெயரில், பாப் மார்லியின் வாரிசுகள் சிலருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு  விற்பனைக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளனர்.

இப்போதெல்லாம் எதையும் ஆர்கானிக் (ரசாயன உரமற்றது) முறையில் உருவாக்கியதா என பார்த்து வாங்கும் சமூகம் என்பதால், கஞ்சாவையும் ஆர்கானிக் முறையில் விற்பனைக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளனர் மார்லி நேச்சுரல்ஸ் நிறுவனத்தார்.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்க மக்களின் முன்னோர்கள் உபயோகித்த மூலிகை (!) இது என்று சொல்கின்றனர்.

அழகு சாதன ஏரியாவிலும் கல்லா கட்ட முடிவு செய்து, கஞ்சா எண்ணையிலிருந்து பெண்களுக்கான லோஷனும் உற்பத்தி செய்துகொண்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.

'அதெல்லாம் சரி, நீங்க மார்க்கெட்டிங் செய்வதற்காக கஞ்சா அரிய மூலிகைனு சொல்றீங்க, ஆனா  பாப் மார்லியே ஓவரா கஞ்சா அடித்து 36 வயதில் செத்துப் போனவர்தானே'ன்னு  ஒரு சில நல்லவய்ங்க கேள்வி கேட்காம இல்லை.
'மார்லி நேச்சுரல்ஸ்' நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலைகளின் மீடியா பலத்தாலும், அமெரிக்காவெங்கும் இதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பாலும் எதிர்ப்பு குரல்கள் வெளியே கேட்கவில்லை என்பதே உண்மை.


- கணேஷகுமாரன்

 

Monday, November 24, 2014

ஆண்....






ஆண் அழத் தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்.

அன்பில்லாதவன் அல்ல. அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்.

வேலை தேடுபவன் அல்ல. தன் திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.

பணம் தேடுபவன் அல்ல. தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்.

சிரிக்கத் தெரியாதவன் அல்ல. நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்.

காதலைத் தேடுபவன் அல்ல. ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்.

கரடுமுரடானவன் அல்ல. நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன்.