Wednesday, September 30, 2015

"Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...


"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...


“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...


நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
  
19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்...
ஆரோக்கியமாக வாழுங்கள்...         
நன்றி.

Wednesday, September 23, 2015

Important links

🔘 GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES 🔘

*Obtain:
🔴1.  Birth Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1

🔴2.  Caste Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4

🔴3.  Tribe Certificate
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8

🔴4.  Domicile Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5

🔴5.  Driving Licence
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6

🔴6.  Marriage Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3

🔴7.  Death Certificate
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2

Apply for:
🔴1.    PAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15

🔴2.     TAN Card
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3

🔴3.     Ration Card
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7

🔴4.     Passport
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2

🔴5.     Inclusion of name in the Electoral Rolls
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10

Register:
🔴1.    Land/Property
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9

🔴2.    Vehicle
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13

🔴3.    With State Employment Exchange
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12

🔴4.    As Employer
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17

🔴5.    Company
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19

🔴6.    .IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18

🔴7.    GOV.IN Domain
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25


Check/Track:
🔴1.    Waiting list status for Central Government Housing
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9

🔴2.     Status of Stolen Vehicles
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1

🔴3.    Land Records
http://www.india.gov.in/landrecords/index.php

🔴4.    Cause list of Indian Courts
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7

🔴5.    Court Judgments (JUDIS )
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24

🔴6.    Daily Court Orders/Case Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21

🔴7.    Acts of Indian Parliament
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13

🔴8.    Exam Results
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16

🔴9.    Speed Post Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10

🔴10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6

Book/File/Lodge:
🔴1.     Train Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5

🔴2.     Air Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4

🔴3.     Income Tax Returns
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12

🔴4.     Complaint with Central Vigilance Commission (CVC)
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14

Contribute to:
🔴1.      Prime Minister's Relief Fund
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11

Others:
🔴1.      Send Letters Electronically
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20

Global Navigation
🔴1.     Citizens
http://www.india.gov.in/citizen.php

🔴2.     Business (External website that opens in a new window)
http://business.gov.in/

🔴3.     Overseas
http://www.india.gov.in/overseas.php

🔴4.     Government
http://www.india.gov.in/govtphp

🔴5.     Know India
http://www.india.gov.in/knowindia.php

🔴6.     Sectors
http://www.india.gov.in/sector.php

🔴7.     Directories
http://www.india.gov.in/directories.php

🔴8.     Documents
http://www.india.gov.in/documents.php

🔴9.     Forms
http://www.india.gov.in/forms/forms.php

🔴10.    Acts
http://www.india.gov.in/govt/acts.php

🔴11.  Rules
http://www.india.gov.in/govtmoo/rules.php

PLS FORWARD TO ALL GROUPS AND FRIENDS.
Keep ds msg handy...u may need it anytime

Saturday, September 19, 2015

பாரம்பரிய நெல் திருமணப்பாடல்


  
மாப்பிள்ளை சம்பா நெல்லுக்கும்,
தூயமல்லி நெல்லும்க்கும்,
கல்யாணமாம் கல்யாணம்.

மணக்கோல பந்தலிலே
குடைவாழை கட்டி இருக்கு
மணம் பார்க்க வந்தாருக்கு
கிச்சிலி சம்பா சோறிருக்கு!

வாடன்சம்பா வாசல் நின்று
வணக்கம் சொல்லி அழைத்தது.
கப்பசம்பா கலியன் சம்பா
சாப்பாடு போட்டது.

தங்கசம்பா நீலசம்பா
தங்கநகை தந்தது.
சீரகச்சம்பா சேலம் சம்பா
சீர்வரிசை தந்தது.

செங்கல்பட்டுச் சிறுமணி
ஜில்லுஜில்லு வைகுண்டா.
புழுதிசம்பா, குரங்கு சம்பா
குதிரைவால் சம்பா,
சம்பா சம்பா மோசனம்.

கார் சம்பா... காட்டுசம்பா
கார்த்திகை சம்பா...!

சன்னச் சம்பா, ஒன்றைச் சம்பா
அறுபதாம் சம்பா

அரியான் நெல்லு, இறவை பாண்டி...
கண்டசாலி, கருங்குறுவை,கருத்தக்கார்
கருப்பு நெல்லு,கல்லுருண்டையான்...

சொர்னவார்,சொர்னவாலி,
வைகுண்டா,செம்பாள,
கூம்பால,குழியடிச்சான்,
கல்லிமடையான் காடகழுத்தான்
காட்டுக்குத்தாலம்,அறுபதாம்கோடை.

பிசினி,தின்னி திடக்கால்
நொருங்கன்,பட்டர் பிசின்!
மகத்தே, மதிமுடி,மரநெல்
ரசகடம்,லட்சுமி காஜல்!

மட்டக்குறுவை,கோனக்குறுவை,
சூரன்குறுவை,வெள்ளக்குறுவை,
வெள்ளக்கரியன்,வீதிவடங்கான்,
வரப்புகுடைஞ்சான், வெள்ச்சி,ஜிர்குடை
வெள்ள சித்திரைக்கார்.

மட்டகார், பட்டகார், புழுதிக்கார்,
புழுதிக்கால், சித்திரைக்கார்.
சிவப்புகுழி அடிச்சான்.

கெளனிநெல்லு, கல்லுருண்டை,பிச்சவாரி,
பெரியவாரி,சடகாடு,குந்தாலி...!
முட்டக்காடு, குள்ளக்காரு,
கப்பக்காரு, பெருங்காரு,
வெள்ளக்காரு, சிவப்பு குருவிக்காரு,

அத்தனை பேரும் வந்தாங்க
அன்பு வாழ்த்துப் சொன்னாங்க.
வாழ்க வாழ்க வாழ்கவென்று
வாழ்த்திச் சொன்னங்க.!


துரை பச்சையப்பன்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு :

இதில் உள்ள பாடல் வரிகள் எழுதிவர்கள் வேறு. 

இது எனக்கான சேமிப்பு தளம் ஆகும்.

இதில் உள்ள தகவல்களுக்கு அதை எழுதியவர்களே உரிமை உடையவர்கள் 



Harivarasanam lyrics-bakthi paadal varigal / சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா



மூலம் & நன்றி : http://tamil-paadal-varigal.blogspot.in/2009/03/harivarasanam-lyrics-bakthi-paadal.html



ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
மூலம் & நன்றி : http://maduraiyampathi.blogspot.in/2007/12/blog-post.html

விளக்கம் :


ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே



மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,
தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன். 
--------------------------------------------------------------------------------------------------------------------


 குறிப்பு :இதில் உள்ள விளக்கம் மற்றும் பாடல் வரிகள் எழுதிவர்கள் வேறு. அவர்கள் தள முகவரி முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எனக்கான சேமிப்பு தளம் ஆகும்.

இதில் உள்ள தகவல்களுக்கு அதை எழுதியவர்களே உரிமை உடையவர்கள்.


நண்பர்களே!!! உங்கள் சந்தேகங்களை மின்னஞ்சல் முகவரி அல்லது சமூக வலைதளத்தின் முகவரியுடன் பதிவு செய்யுங்கள் ....

Rail engine Details

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

======================================
ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?
WDP 3A
முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2
இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி

இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.
YG

மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)

G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்

சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!
WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).

எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.

அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.
WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.

-மணி நெல்லை


Monday, September 14, 2015

இன்சுலினும் நாய்களும்


உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாம்பழ விதையை ஊன்றி வைக்கிறீர்கள். மாஞ்செடியும் வளர்கிறது. சில ஆண்டுகள் கழித்து, அது மரமான பின்னர் அம்மரத்தின் கிளைகளில் ஒட்டுண்ணிக் கொடிகள் முளைக்கின்றன. அவை மரத்தின் உயிராற்றலைச் சிறிதளவு பாதிக்கும். அதை நீங்கள் வெட்டி எறிகிறீர்கள். நீங்கள் விதைத்தது முளைத்தது. அதனோடு வேறு ஒரு கொடியும் முளைத்துவிட்டது. இது பக்கவிளைவு. அதாவது நீங்கள் எதிர்பாராமல் விளைந்தது.

உங்கள் மாமரம் காய்க்கத் துவங்குகிறது. அதன் பழங்கள் எட்டிக்காய்போல் கசக்கின்றன. அதை உண்டவர்கள் சில காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தே போகின்றனர். பின்னர்தான் தெரிகின்றது, அந்த மாம்பழங்களில் நஞ்சு கலந்துள்ளது எனும் செய்தி. இது நீங்கள் எதிர்பாராத விளைவு மட்டுமல்ல, நீங்கள் விரும்பாத விளைவு. இது பக்க விளைவு அல்ல, நேர் எதிர் விளைவு.

அலோபதி மருத்துவத்தில் ஒரு சொல்லை வெகு தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ’பக்க விளைவு’ (side effect) எனும் சொல் அது. ஒரு நோய்க்காக அலோபதி மருந்தினை உட்கொண்டால், ஒன்று அந்த நோய் முற்றிலும் தீர வேண்டும் அல்லது அந்த மருந்தினால் வேறு எதிர்விளைவுகள் நேராமலாவது இருக்க வேண்டும். அலோபதி மருந்துகள் பெரும்பாலான நோய்களைத் தீர்ப்பதே இல்லை. ஆனால், எதிர் விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன. அலோபதிக்காரர்கள் அழகாக இந்த எதிர்விளைவுகளை ‘பக்கவிளைவுகள்’ என்பார்கள். இது வார்த்தைகளால் நடத்தப்படும் அரசியல். உண்மையில் அவை எதிர்விளைவுகள்.

பயோக்ளைடோசோன் எனும் மருந்தினை சர்க்கரை நோய்க்காக உட்கொண்டால், அம்மருந்து சர்க்கரை நோயை குணப்படுத்துவதில்லை. ஆனால், அதே மருந்து புற்று நோயையும், இதய நோய்களையும், உடல் பருமனையும் விளைவிக்கிறது. இதன் பெயர் பக்க விளைவு என்றால், அது மோசடி அல்லவா.

இந்தப் புரிதலோடு இன்சுலினைப் பற்றியும் உங்களோடு உரையாட விரும்புகிறேன்.

இன்சுலினும் நாய்களும்:
நாய்களுக்கும் இன்சுலினுக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. முதன்முதலில் இன்சுலினைப் பற்றிய ‘ஆராய்ச்சியை’ அலோபதிக்காரர்கள் துவங்கியது நாய்களை வைத்துத்தான். 1889 ஆம் ஆண்டு, ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி, ஜோசப் வான்மெரிங் ஆகிய இருவரும் ஒரு நாயின் வயிற்றைக் கிழித்து அதன் கணையத்தை மட்டும் அறுத்து எடுத்து மீண்டும் நாயின் வயிற்றைத் தைத்து விட்டார்கள். கணையம் இல்லாத நாயின் சிறுநீரைச் ‘சோதனை’ செய்து பார்க்கையில், அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. அந்த நாயின் சிறுநீரை ஈக்களும் மொய்த்தன. ஆகவே, அவர்கள் ‘ஆய்வின்படி’ கணையம் இல்லாவிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்கும் எனும் முடிவு எடுக்கப்பட்டது.

1916 ஆம் ஆண்டு, பேராசிரியர் நிக்கோல் பாலேசு என்பவர், கணையத்தின் திசுக்களை வெளியே வளர்த்து அவற்றின் சாரத்தை ‘சர்க்கரை நோய்’ ஏற்பட்ட நாய்களுக்குக் கொடுத்தார். இதில், நாய்களின் சர்க்கரை குறைந்தது.

1921 ஆம் ஆண்டு, மருத்துவர்கள் பிரடரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகிய இருவரும் இணைந்து, ஒரு நாயின் கணையத்தை அகற்றி அதற்கு சர்க்கரை நோய் வரவழைத்தார்கள். பின்னர் நாயின் கணையத்தினை கூழாக அரைத்து ஊசி மூலம் அதே நாய்க்குச் செலுத்தினார்கள். இதன் வழியாக, அந்த நாயின் சர்க்கரை அளவு மட்டுப்பட்டது. இந்த தொடர் ’வெற்றிகளை’த் தொடர்ந்து மாட்டுக் (cow) கணையத்திலிருந்து ’இன்சுலின்’ முதன் முதலாக தயாரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுவரை, இன்சுலின் மனிதர்கள் மீது ஆய்வு செய்யப்படவும் இல்லை; மனிதர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவும் இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

1922 ஆம் ஆண்டு லியோனார்ட் தாம்சன் எனும் 14 வயதே நிரம்பிய சிறுவனுக்கு முதன் முதலாக இன்சுலின் கொடுக்கப்பட்டது. அந்தச் சிறுவன் அலோபதி முறைப்படி, முதல் வகை (type 1) சர்க்கரை நோயாளி. இவ்வகையில் ’இயற்கையாகவே உடலில் இன்சுலின் சுரப்பு இருக்காது’ என்பது அலோபதியின் கண்டுபிடிப்பு. லியோனார்ட் தாம்சனுக்குக் கொடுக்கப்பட்ட இன்சுலின் வெற்றிகரமாக வேலை செய்தது என்பது அலோபதி உலகினால் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், இன்சுலினை மனிதர்களுக்கும் வழங்கத் துவங்கினார்கள்.

மனிதர்களும் இன்சுலினும்:
லியோனார்ட் தாம்சன் தொடர்ந்து இன்சுலின் ஏற்றிக் கொண்டு தனது இருபத்து ஏழாவது வயதில் மரணமடைந்தார். அதாவது, தொடர்ந்து 13 ஆண்டுகள் இன்சுலின் குத்திக்கொண்ட பின்னர் அவர் இறந்துபோனார். அவரது மரணத்திற்குக் காரணம் என்ன என்றும் அலோபதிக்காரர்கள் காரணம் கூறியிருக்கிறார்கள். அது மிக வினோதமான காரணம். லியோனார்ட் தாம்சன் ’நிமோனியா காய்ச்சல்’ வந்து இறந்துபோனார். அதாவது, சர்க்கரை நோயிலிருந்து ’காப்பாற்றப்பட்ட’ அந்தச் சிறுவன் சாதாரண ‘காய்ச்சலால்’ இறந்துபோனான்.
இப்போதும், தொடர்ந்து இன்சுலின் குத்திக்கொள்ளும் நம் சமூகத்தினர் எண்ணற்ற உடல் தொல்லைகளுக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து இன்சுலின் குத்திக்கொண்டவர்களுக்கு மரணம் நேரிடும்போது, எந்த மருத்துவராவது இந்த மரணத்திற்கு ’இன்சுலின்’ குத்திக்கொண்டது காரணம் எனக் கூறுகிறார்களா?
1996 ஆம் ஆண்டு முதல் இன்சுலின் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. விலங்குகளில் இருந்துதான் முதலில் இன்சுலின் தயாரிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு முதல் ’மனித இன்சுலின்’ (human insulin) உருவாக்கப்பட்டது. இதிலும் பல எதிர்விளைவுகள் கண்டறியப்பட்டதால், எலி லில்லி எனும் நிறுவனம் மனித இன்சுலினையே மரபணு மாற்றம் செய்து சந்தைக்குக் கொண்டுவந்துவிட்டது.
சாதாரண தக்காளி, கத்தரிக்காயில்கூட மரபணு மாற்றம் செய்யப்பட்டால் மிக மோசமான உடல்நலக் கேடுகள் விளையும் என்பதை நாம் உணர்ந்துவிட்டோம். ஆனால், இரத்ததில் நேரடியாகக் கலக்கும் ஒரு மருந்தை மரபணு மாற்றம் செய்து கொடுப்பதை இன்னும் அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறோம்.

உங்களுக்கோ உங்கள் உற்றாருக்கோ வழங்கப்படுவது, மரபணு மாற்றப்பட்ட இன்சுலினா அல்லது விலங்கு இன்சுலினா அல்லது மனித இன்சுலினா என்ற தகவலையாவது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இன்சுலின் குறித்த தனது அறிவிப்பில் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அமைப்பு (NHS),
’ The NHS has always allowed patients to have an informed choice of treatment before they make their treatment decisions and this includes information about risks and benefits. In recent years, greater emphasis has been placed on informed choice as a result of NHS policy which puts patients at the centre of care and encourages involvement in their treatment decisions so that in the ideal world, patients and their doctors make decisions jointly.
The treatment of diabetes is no exception and therefore people with insulin-requiring diabetes, whether Type 1 or Type 2 diabetes should have an informed choice of insulins and should be given information about risks and benefits.’ என்கிறது.
அதாவது, ’எந்த வகையிலான சிகிச்சை தனக்குத் தரப்படுகிறது, எந்த வகை இன்சுலின் தனக்கு பரிந்துரைக்கப்படுகிறது, தனக்குத் தரப்படும் இன்சுலின் மற்றும் பிற மருந்துகளால் விளையும் நன்மைகள், இடர்ப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி ஒவ்வொரு நோயாளியும் அறிந்திருக்க வேண்டும். இந்த செயல்பாட்டில் மருத்துவர்களும் நோயாளிகளும் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும்’ என்கிறது பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அமைப்பு.

இந்திய அரசின் சட்டங்களின்படியும் மேற்கண்ட செய்திகளை அலோபதி மருத்துவர்கள் தங்களிடம் வரும் மக்களிடம் வெளிப்படையாகக் கூற வேண்டும்.
இங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!
இன்சுலின் குத்திக் கொள்ளும் அளவினை எந்த நேரமும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்பதுதான் உலகளவிலான அலோபதி அமைப்புகள் செய்யும் எச்சரிக்கை. அவ்வாறு கவனிக்காமல், அளவுக்கு அதிகமான இன்சுலினை குத்திக்கொண்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்கிறது கீழேயுள்ள பட்டியல்:
”மன அழுத்தம், சோர்வு, மிகையான தூக்க உணர்ச்சி, அதீத அயற்சி, தலைவலி, பசி, எதிலும் கவனம் செலுத்த இயலாத நிலை, எரிச்சலான உணர்ச்சி, குமட்டல், நரம்புத் தளர்வு, ஆளுமையில் மாற்றம் ஏற்படுதல், அதிவேகமான இதயத் துடிப்பு, நிதானமின்மை, நிம்மதியான தூக்கமின்மை, குழறியபடி பேசுதல், வியர்வை, கூச்ச உணர்வு, நடுக்கம், செயல்பாடுகளில் / அசைவுகளில் நிதானமற்ற நிலை”
மேலே உள்ளவை பொதுவான ’இன்சுலின் அளவு அதிகரித்தால்’ ஏற்படுபவைதான். இன்சுலின் அளவு மிகவும் கூடுதலாகிவிட்டால் என்னென்ன ஏற்படும் என்பது கீழே உள்ள பட்டியல்:
”ஆழ் மயக்கம் (coma), தன்னிலையிழத்தல், தோல் வெளிறிப் போகும் நிலை, வலிப்பு”
மேற்கண்ட பட்டியல்கள் ஏதோ மரபுவழி மருத்துவர்களின் கண்டுபிடிப்பு அல்ல. பிரிட்டனில் இயங்கும் diabetes.co.ukஎனும் மிகப் பெரிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை.
ஒருவர் சர்க்கரை நோய்க்காக அலோபதி மருத்துவரை அணுகினால், ஒன்று அந்த நோயைத் தீர்க்கும் மருந்தைத் தர வேண்டும் அல்லது ’எங்களிடம் மருந்து இல்லை’ என்று ஒப்புக்கொள்ள வேண்டும். மாறாக, அவரது நோயையும் தீர்க்காமல், சர்க்கரையைக் காட்டிலும் மிகக் கொடுமையான எண்ணற்ற நோய்களை உருவாக்கும் மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்கள் அலோபதிக்காரர்கள். இதற்குப் பெயர்தான் ‘நவீன மருத்துவம்’!
இதைக் கேள்வி கேட்பவர்கள் ‘பிற்போக்குவாதிகள்’ , ‘அறிவியலே தெரியாதவர்கள்’.
இன்சுலின், பயோக்ளைடோசோன் உள்ளிட்ட மருந்துகளினால் விளைபவை பக்க விளைவுகளா (side effects) ? நேர் எதிர் விளைவுகளா (adverse effects)? என்பதை இப்போதாவது நம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
மரபுவழிகளைப் பொறுத்தவரை, ’உடலின் இயற்கை ஆற்றலுக்கு மீண்டும் இன்சுலின் சுரக்கும் ஆற்றல் உண்டு’ என்பதுதான் கோட்பாடு. பெரும்பாலான மரபுவழிகள், உடலின் இயற்கை ஆற்றலைத் தூண்டும் மருந்துகளையும், செயல்முறைகளையும் மட்டும்தான் கொண்டுள்ளன. ஆகவேதான், பல ஆயிரம் ஆண்டுகளாக, நம் முன்னோர் சர்க்கரை நோயைக் கண்டு அஞ்சாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்துவந்தனர்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற அலோபதி முறை, ஆலமரங்களாக நிலைத்து நிற்கும் மரபுமுறைகளை வீசி எறிய முயற்சித்து மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டுள்ளது. எதற்கெடுத்தாலும் செயற்கையான வழிமுறைளைக் கண்டறிந்து, உடலின் இயற்கை ஆற்றலை, இயல்பான மனநிலையை அழித்து மரணப் பெட்டிக்கு அனுப்பும் கொள்கையுடன் இருக்கிறது அம்முறை.
ஒருபுறம் எளிய தீர்வுகள், மறுபுறம் மக்களின் உயிர்களுடன், பொருளாதாரத்துடன் சூதாட்டம் நடத்தும் மருத்துவ முறை இவை இரண்டையும் கண்டு மனம் பொறுக்காத உங்களில் நானும் ஒருவன். தீய வழிகளைப் புறக்கணித்து, எளிய தீர்வுகளை சமூகத்தின் முன்னே கொண்டு நிறுத்தும் இயற்கையின் பிள்ளைகளாக செயல்படுவோம்