Friday, April 22, 2016

எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம்

தமிழ்நாட்டின் கால்நடை சந்தைகள் : 



எந்த  நாளில் எங்கு  சென்றால் நாட்டு பசுவை  வாங்கலாம்  என்ற  தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது முடிந்தால்  பயன்படுத்தி  கொள்ளுங்கள் நண்பர்களே 
ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்,  இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், நம் தெய்வங்கள் (நாட்டு பசுக்கள் )வெட்ட  படுவதற்கு  விற்பனை  செய்யும்  இடம் முடிந்தால்  தடுத்து  பாரம்பரியத்தை  காத்திடுங்கள். 

வ.எண்-- மாவட்டம்-- தாலுக்கா--சந்தை கூடும் இடம்--சந்தை நாள் 
1-- கோயமுத்தூர்-- அவினாசி--அவினாசி--ஆண்டு தோறும் (ஏப்ரல் 15-25) 
2-- கோயமுத்தூர்-- கோயமுத்தூர் (வடக்கு)--துடியலூர்--திங்கள் 
3-- கோயமுத்தூர்-- கோயமுத்தூர் (தெற்கு)--பூளூவபட்டி--வெள்ளி 
4-- கோயமுத்தூர்-- மேட்டுப்பாளையம்--காரமடை--ஆண்டுதோறும் (பிப்ரவரி 11-22) 
5-- கோயமுத்தூர்-- மேட்டுப்பாளையம்--மேட்டுப்பாளையம்--- 
6-- கோயமுத்தூர்-- பல்லடம்--பல்லடம்--திங்கள் 
7-- கோயமுத்தூர்-- பொள்ளாச்சி--பொள்ளாச்சி--வியாழன் 
8-- கோயமுத்தூர்-- திருப்பூர்--பெரமநல்லூர்--சனி 
9-- கோயமுத்தூர்-- திருப்பூர்--மங்கலம்--சனி 
10-- கோயமுத்தூர்-- உடுமலைபேட்டை--பூலவாடி--வெள்ளி 
11-- கோயமுத்தூர்-- உடுமலைபேட்டை--உடுமலைபேட்டை--திங்கள் 
12-- கோயமுத்தூர்-- அவினாசி--அன்னூர்--- 
13-- கூடலூர்-- ---சின்னசேலம்--வியாழன் 
14-- கூடலூர்-- ---குள்ளஞ்சவாடி--ஞாயிறு 
15-- கூடலூர்-- ---மூங்கில்துரைப்பட்டு--ஞாயிறு 
16-- கூடலூர்-- ---தியாகதுர்கம்--சனி 
17-- கூடலூர்-- சிதம்பரம்--சேத்தியாதோப்பு--புதன் 
18-- கூடலூர்-- சிதம்பரம்--புவனகிரி--புதன் 
19-- கூடலூர்-- கூடலூர்--காரமணிக்குப்பம்--திங்கள் 
20-- கூடலூர்-- கட்டுமனனார்கோவில்--லால்பேட்டை--செவ்வாய் 
21-- கூடலூர்-- திட்டகுடி--திட்டகுடி--புதன் 
22-- கூடலூர்-- விருதாச்சலம்--வேப்பூர்--வெள்ளி 
23-- கூடலூர்-- விருதாச்சலம்--விருதாச்சலம்--வியாழன் 
24-- கூடலூர்-- விருதாச்சலம்--அத்தியூர்--செவ்வாய் 
25-- தர்மபுரி-- --- பல்லாபள்ளி--திங்கள் 
26-- தர்மபுரி-- ---பெட்டாரைய சுவாமி--ஆண்டு தோறும் 13-16) 
27-- தர்மபுரி-- ---குடிச்செட்லு--ஆண்டு தோறும் (பிப்ரவரி 23-25) 
28-- தர்மபுரி-- ---பாத்தகோட்டா--ஆண்டு தோறும் 4 நாட்கள் 
29-- தர்மபுரி-- தென்கன்னிகோட்டை--கீழமங்கலம்--ஞாயிறு 
30-- தர்மபுரி-- தென்கன்னிகோட்டை--மடகோண்டப்பள்ளி--ஆண்டு தோறும் (பிப்ரவரி 18-20) 
31-- தர்மபுரி-- தர்மபுரி--நல்லாம்பள்ளி--செவ்வாய் 
32-- தர்மபுரி-- ஹரூர்--கோபிநாத்தம்பட்டி--புதன் 
33-- தர்மபுரி-- ஹரூர்--கம்பியநல்லூர்--வெள்ளி 
34-- தர்மபுரி-- ஒசூர்--பாகலூர்--வியாழன் 
35-- தர்மபுரி-- ஒசூர்--ஒசூர்--புதன் 
36-- தர்மபுரி-- ஒசூர்--சப்பரப்பள்ளி--ஆண்டு தோறும் (பிப்ரவரி- மார்ச்) 
37-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--ஒரப்பம்--புதன் 
38-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--குண்டரப்பள்ளி--வெள்ளி 
39-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--காவேரிப்பட்டினம்--சனி 
40-- தர்மபுரி-- பாலக்கோடு--கரிமங்கலம்--செவ்வாய் 
41-- தர்மபுரி-- பப்பிரேடிப்பட்டி--கடத்தூர்--ஞாயிறு 
42-- தர்மபுரி-- போச்சம்பள்ளி--போச்சம்பள்ளி--ஞாயிறு 
43-- தர்மபுரி-- உத்தன்கரை--சிங்காரப்பேட்டை--திங்கள் 
44-- தர்மபுரி-- உத்தன்கரை--உத்தன்கரை--திங்கள் 
45-- திண்டுக்கல்-- ---நரிக்கால்பட்டி--வியாழன் 
46-- திண்டுக்கல்-- திண்டுக்கல்--அம்மாப்பட்டி--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15) 
47-- திண்டுக்கல்-- திண்டுக்கல்--ஆத்தூர்--வெள்ளி 
48-- திண்டுக்கல்-- நிலக்கோட்டை--நிலக்கோட்டை--சனி 
49-- திண்டுக்கல்-- ஒட்டன்சத்திரம்--எஸ்.ஆத்திக்கோம்மை--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15) 
50-- திண்டுக்கல்-- ஒட்டன்சத்திரம்--விருப்பாச்சி--வியாழன் 
51-- திண்டுக்கல்-- பழனி--தொப்பம்பட்டி--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 10) 
52-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--வடமதுரை--ஞாயிறு 
53-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--வடசுந்தர்--ஞாயிறு 
54-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--கலவர்ப்பட்டி--ஞாயிறு 
55-- ஈரோடு-- ---கன்னபுரம்--ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரம் 
56-- ஈரோடு-- ---சலிப்புதூர்--திங்கள் 
57-- ஈரோடு-- பவானி--அந்தியூர்--திங்கள் 
58-- ஈரோடு-- பவானி--குருநாட்டசாமிகோவில் மாட்டுத்தாவரி--ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5-15 
59-- ஈரோடு-- பவானி--வெள்ளித்திருப்பூர்--ஆண்டு தோறும் மே 
60-- ஈரோடு-- தாராபுரம்--தாராஊரன்--வியாழன் 
61-- ஈரோடு-- தாராபுரம்--கன்னிவாடி--வெள்ளி 
62-- ஈரோடு-- தாராபுரம்--குண்டடம்--சனி 
63-- ஈரோடு-- தாராபுரம்--முலனூர். ஆர்.எஸ்.--புதன் 
64-- ஈரோடு-- ஈரோடு--முனிசிபல் காலனி--தினசரி சந்தை 
65-- ஈரோடு-- ஈரோடு--சிவகிரி--வெள்ளி 
66-- ஈரோடு-- ஈரோடு--ஈரோடு--திங்கள் 
67-- ஈரோடு-- கோபிசெட்டிபாளையம்--மொடச்சூர்--வியாழன் 
68-- ஈரோடு-- கோபிசெட்டிபாளையம்--சிறுவலூர்--செவ்வாய் 
69-- ஈரோடு-- காங்கயம்--முத்தூர்--சனி 
70-- ஈரோடு-- காங்கயம்--நத்தக்கடையூர்--புதன் 
71-- ஈரோடு-- காங்கயம்--காங்கேயம்--திங்கள் 
72-- ஈரோடு-- பெருந்துறை--வலயப்பாளையம்--- 
73-- ஈரோடு-- பெருந்துறை--பெருந்துறை--ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரம் 
74-- ஈரோடு-- பெருந்துறை--குன்னத்தூர்--ஞாயிறு 
75-- ஈரோடு-- சத்தியமங்கலம்--புஞ்சைபுயிளம்பட்டி--வியாழன் 
76-- காஞ்சிபுரம்-- ---வலஜாபேட்டை--திங்கள் 
77-- காஞ்சிபுரம்-- செய்யாறு--அணைக்கட்டு--வெள்ளி 
78-- காஞ்சிபுரம்-- மதுரான்தகம்--அச்சரபாக்கம்--ஞாயிறு 
79-- காஞ்சிபுரம்-- தாம்பரம்--பல்லாவரம்--வெள்ளி 
80-- காஞ்சிபுரம்-- திருக்கல்குன்றம்--திருக்கழுக்குன்றம்--வியாழன் 
81-- காஞ்சிபுரம்-- உத்திரமேரூர்--மனம்பதி--வியாழன் 
82-- கன்னியாகுமரி-- ---மார்த்தாண்டம்--செவ்வாய் 
83-- கன்னியாகுமரி-- ---திங்கள் சந்தை--திங்கள் 
84-- மதுரை-- ---செக்கனூரனி--- 
85-- மதுரை-- மதுரை (வடக்கு)--வீரபாண்டி--வருடாந்திரம் 8 நாட்கள் 
86-- மதுரை-- மதுரை (தெற்கு)--திருப்பரங்குன்றம்--வெள்ளி 
87-- நாகப்பட்டினம்-- ---செம்பகராயநல்லூர்--சனி 
88-- நாகப்பட்டினம்-- ---திருத்துறைப்பூண்டி--வெள்ளி 
89-- நாகப்பட்டினம்-- சீர்காழி--கொல்லிடம்--திங்கள் 
90-- நாமக்கல்-- ---கொங்கனபுரம்--சனி 
91-- நாமக்கல்-- ---மோர்பாளையம்--வெள்ளி 
92-- நாமக்கல்-- நாமக்கல்--புதன்சந்தை--புதன் 
93-- நாமக்கல்-- ராசிபுரம்--முத்துக்கள்ளிப்பட்டி--தைபூசம் (ஆண்டு தோறும் 10 நாட்கள்) 
94-- நாமக்கல்-- திருச்செங்கோடு--எடப்பாடி--புதன் 
95-- நாமக்கல்-- திருச்செங்கோடு--பள்ளக்காபாளையம்--திங்கள் 
96-- பெரம்பலூர்-- ---மீன்சுருட்டி--ஞாயிறு 
97-- பெரம்பலூர்-- அரியலூர்--அரியலூர்--ஞாயிறு 
98-- பெரம்பலூர்-- உடையார்பாளையம்--உடையார்பாளையம்--சனி 
99-- புதுக்கோட்டை-- ஆழங்குடி--ஆலங்குடி--வியாழன் 
100-- புதுக்கோட்டை-- அரந்தாங்கி--அறந்தாங்கி--செவ்வாய் 
101-- புதுக்கோட்டை-- மனமேல்குடி--மனமேல்குடி--ஞாயிறு 
102-- புதுக்கோட்டை-- புதுக்கோட்டை--புதுக்கோட்டை--வெள்ளி 
103-- புதுக்கோட்டை-- திருமயம்--பொன்னமரவாதிக்கரையூர்--திங்கள் 
104-- இராமநாதபுரம்-- பரமக்குடி--பரமக்குடி--வியாழன் 
105-- சேலம்-- ---செட்டிப்பட்டி--- 
106-- சேலம்-- ---சின்னப்பம்பட்டி--ஞாயிறு 
107-- சேலம்-- ---சின்னதிருப்பதி--சனி 
108-- சேலம்-- ---மீனம்பள்ளி--- 
109-- சேலம்-- ---முத்துநாயக்கண்பட்டி--வெள்ளி 
110-- சேலம்-- ---சேவாபேட்டை--செவ்வாய் 
111-- சேலம்-- ஆத்தூர்--ஆத்தூர்--ஞாயிறு 
112-- சேலம்-- ஆத்தூர்--பொத்தநாயக்கன்பாளையம்--வியாழன் 
113-- சேலம்-- எடபாடி--எடப்பாடி--- 
114-- சேலம்-- கங்காவல்லி--வீரகனூர்--- 
115-- சேலம்-- மேட்டூர்--மேச்சேரி--புதன் 
116-- சேலம்-- மேட்டூர்--கொளத்தூர்--வெள்ளி 
117-- சேலம்-- மேட்டூர்--நங்கவள்ளி--- 
118-- சேலம்-- ஓமலூர்--ஓமலூர்--சனி 
119-- சேலம்-- ஓமலூர்--தாரமங்கலம்--வியாழன் 
120-- சேலம்-- சேலம்--பனமரத்துப்பட்டி--திங்கள் 
121-- சேலம்-- சேலம்--பாப்பாரபட்டி--- 
122-- சேலம்-- சங்ககிரி--மெக்.டொனால்ட் செளத்ரி--ஆண்டு தோறும் - அக்டோபர் 
123-- சேலம்-- வாலப்பாடி--அயோத்தியாப்பட்டணம்--திங்கள் 
124-- சேலம்-- வாலப்பாடி--பேலூர்--திங்கள் 
125-- சிவகங்கை-- தேவகோட்டை--தேவகோட்டை--ஞாயிறு 
126-- சிவகங்கை-- மானாமதுரை--மானாமதுரை--வெள்ளி 
127-- சிவகங்கை-- மானாமதுரை--திருப்புவனம்--புதன் 
128-- சிவகங்கை-- சிவகங்கா--சிவகங்கை--புதன் 
129-- தஞ்சாவூர்-- ---மொடுக்கூர்--ஞாயிறு 
130-- தஞ்சாவூர்-- கும்பகோணம்--நீரத்தநல்லூர்--வருடம் - ஏப்ரல் 20 நாட்கள் 
131-- தஞ்சாவூர்-- ஒரத்தநாடு--திருவோணம்--ஞாயிறு 
132-- தஞ்சாவூர்-- பட்டுக்கோட்டை--பட்டுக்கோட்டை--திங்கள் 
133-- தஞ்சாவூர்-- பேரவூரணி--பேராவூரணி--செவ்வாய் 
134-- தஞ்சாவூர்-- திருயைாறு--திருக்காட்டுப்பள்ளி--வியாழன் 
135-- தேனி-- ஆண்டிப்பட்டி--உசிலம்பட்டி--- 
136-- தேனி-- பெரியகுளம்--டி.வாடிப்பட்டி--- 
137-- திருவள்ளூர்-- ---திருவோட்டியூர்--- 
138-- திருவள்ளூர்-- ---நெல்வாய்--புதன் 
139-- திருவள்ளூர்-- உத்துக்கோட்டை--உத்துக்கோட்டை--தினசரி சந்தை 
140-- திருவண்ணாமலை-- ---அம்மாபாளையம்--திங்கள் 
141-- திருவண்ணாமலை-- ---பழகையூர்--வெள்ளி 
142-- திருவண்ணாமலை-- ---நாச்சியார்கோவில்--செவ்வாய் 
143-- திருவண்ணாமலை-- ---தெப்பநாண்டால்--சனி 
144-- திருவண்ணாமலை-- ஆரணி--ஒன்னுபுரம்--வியாழன் 
145-- திருவண்ணாமலை-- ஆரணி--ஆரணி--ஞாயிறு 
146-- திருவண்ணாமலை-- ஆரணி--தேவிகாபுரம்--திங்கள் 
147-- திருவண்ணாமலை-- சேன்கம்--செங்கம்--புதன் 
148-- திருவண்ணாமலை-- சேன்கம்--தண்டாரம்பேட்டை--சனி 
149-- திருவண்ணாமலை-- செய்யாறு--செய்யாறு--ஞாயறு 
150-- திருவண்ணாமலை-- செய்யாறு--கொறுக்காதூர்--திங்கள் 
151-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--மல்லவாடி--ஞாயிறு 
152-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--திருவண்ணாமலை--புதன் 
153-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--தன்டாரை--புதன் 
154-- திருவண்ணாமலை-- வந்தவாசி--தெல்லார்--ஞாயறு 
155-- திருவண்ணாமலை-- வந்தவாசி--பெரனமல்லூர்--திங்கள் 
156-- திருவண்ணாமலை-- வந்தவாசி--மருதாடு--புதன் 
157-- திருவாரூர்-- மன்னார்குடி--மன்னார்குடி--செவ்வாய் 
158-- திருவாரூர்-- திருத்துறைப்பூண்டி--முத்துப்பேட்டை--புதன் 
159-- திருநெல்வேலி-- ---எட்டையபுரம்--சனி 
160-- திருநெல்வேலி-- ---கழுகுமலை--செவ்வாய் 
161-- திருநெல்வேலி-- ---கயத்தாறு--வியாழன் 
162-- திருநெல்வேலி-- ---மேலப்பாளையம்--வியாழன் 
163-- திருநெல்வேலி-- ---நாகலாபுரம்--வியாழன் 
164-- திருநெல்வேலி-- ---பாம்புகோயில்--- 
165-- திருநெல்வேலி-- ---புடியம்புத்தூர்--புதன் 
166-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--பாப்பாகுடி--ஞாயிறு 
167-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--முக்கூடல்--வெள்ளி 
168-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--கடயம்--திங்கள் 
169-- திருநெல்வேலி-- நங்குநேரி--நங்குநேரி--ஞாயிறு 
170-- திருநெல்வேலி-- பாளையம்கோட்டை--வி.ரெட்டியார்பட்டி--- 
171-- திருநெல்வேலி-- பாலட்நஜிட்டு--சீவலபேரி--வருடம்(ஆகஸ்ட்-செப்டம்பர்) (14-30) 
172-- திருநெல்வேலி-- ராதாபுரம்--வள்ளியூர்--- 
173-- திருநெல்வேலி-- ராதாபுரம்--திசயன்வில்லை--- 
174-- திருநெல்வேலி-- சங்கரன்கோவில்--திருவேங்கடம்--- 
175-- திருநெல்வேலி-- சிவகிரி--இனம்கோவில்பட்டி--திங்கள் 
176-- திருநெல்வேலி-- தென்காசி--நைனார் அகரம்--- 
177-- திருநெல்வேலி-- தென்காசி--பாவூர்சத்திரம்--- 
178-- திருச்சிராப்பள்ளி-- ---உப்பிடமங்கலம்--ஞாயிறு 
179-- தூத்துக்குடி-- ---மைனர் அக்ரஹாரம்--சனி 
180-- வேலூர்-- ---காமதிலி--சனி 
181-- வேலூர்-- ---ராணிபேட்டை--வெள்ளி 
182-- வேலூர்-- ---விம்மியம்பதி--வியாழன் 
183-- வேலூர்-- அரக்கோணம்--நெமிலி--திங்கள் 
184-- வேலூர்-- காட்பாடி--சோலிங்கர்--புதன் 
185-- வேலூர்-- திருப்பத்தூர்--நாட்ராம்பள்ளி--திங்கள் 
186-- வேலூர்-- திருப்பத்தூர்--ஜோலார்பேட்டை--புதன் 
187-- வேலூர்-- வானியம்பாடி--வானியம்பாடி--சனி 
188-- வேலூர்-- வேலூர்--ஒடுக்கத்தூர்--வெள்ளி 
189-- வேலூர்-- வேலூர்--பொய்கை--வியாழன் 
190-- வேலூர்-- வேலூர்--ஆம்பூர்--வெள்ளி 
191-- விழுப்புரம்-- ---செட்டிபாளையம்--வெள்ளி 
192-- விழுப்புரம்-- ஜின்ஜீ--ஆல்வார்பேட்டை--ஞாயிறு 
193-- விழுப்புரம்-- ஜின்ஜீ--மேலோகடகூர்--செவ்வாய் 
194-- விழுப்புரம்-- ஜின்ஜீ--வாலதி--ஞாயிறு 
195-- விழுப்புரம்-- திண்டிவனம்--கோட்டேரிபட்டை--ஞாயிறு 
196-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--கண்டச்சிபுரம்--சனி 
197-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--முகையூர்--வியாழன் 
198-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--தீவனூர்--வெள்ளி 
199-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--வீரபாண்டி--வியாழன் 
200-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--திருக்கோயிலூர்--செவ்வாய் 
201-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--மணலூர்பேட்டை--சனி 
202-- விழுப்புரம்-- உளுந்தூர்பேட்டை--உளுந்தூர்பேட்டை--- 
203-- விழுப்புரம்-- உளுந்தூர்பேட்டை--மடப்பட்டு--ஞாயிறு 
204-- விழுப்புரம்-- விழுப்புரம்--செங்கீதமங்கலம்--ஞாயிறு 
205-- விழுப்புரம்-- விழுப்புரம்--பிரம்மதேசம்--புதன் 
206-- விருதுநகர்-- ---கன்னிசேரிபுதூர்--ஆண்டு தோறும் - மே-ஜீன் 15 நாட்கள் 
207-- விருதுநகர்-- கரியப்பட்டை--காரியாபட்டி--சனி 
208-- விருதுநகர்-- கரியப்பட்டை--தொனுக்கள்--வியாழன் 
209-- விருதுநகர்-- ராஜபாளையம்--இராஜபாளையம்--வியாழன் 
210-- விருதுநகர்-- திருச்சுழி--வீரசோழம்--திங்கள்

Thursday, April 21, 2016

இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர்  சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். 
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும். 
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். 
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும். 
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக். 
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். 
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும்,  மூலவரின் தரிசனம் கிட்டும்போது,  அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி. 
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..

Sunday, April 17, 2016

உயிரை அதன் பயணத்தில் முதன் முதலில் முடிக்கிவிட்டது யார்?

புலன்கள்                                                             =======
🤔மனத்தை மிகத் தொலைவில் அலையவிட்டவன் யார்? 
🤔உயிரை அதன் பயணத்தில் முதன் முதலில் முடிக்கிவிட்டது யார்?
🤔யாருடைய திருவுளத்தால் நாம் இவ்வார்த்தைகளை இயம்புகின்றோம்?
🤔நம் கண்களையும் காதுகளையும் இயக்குகின்ற அந்தப் பரம்பொருள் யாது? 

அதுவே செவியின் செவி, மனத்தின் மனம், வார்த்தைகளின் வார்த்தை, உயிரின் உயிர், கண்ணின் கண், ஆத்மாவைப் பிரித்தறிந் தோராய் பொறிகளும் மனமும் தாம் 

அது என்று கொள்ளும் பொய்யான கொள்கையை விடுத்து, ஆத்மாவே பிரம்மன் என அறிந்தோராய் - இவ்வுலகத்தைத துறந்த ஞானியர் அமரத்துவம் எய்துகின்றனர். 
எதனை வார்த்தைகளால் பேசமுடியாதோ, ஆனால் எதனால் வார்த்தைகளை பேசப் படுகின்றனவோ அதுவே பிரம்மன் என்றறிக.  இவ்வுலகத்தாரால் இங்கே எது 

தொழுது வழிப்படப்படுகின்றதோ அது பிரம்மன் இல்லை. 

எதனை மனத்தால் நினைக்க இயலாதோ, ஆனால் எதனால் மனம் நினைக்கின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. 
இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது வழிப்படப் 

படுகின்றதோ அது பிரம்மன் இல்லை. 

எதனை கண்ணால் பார்க்க முடியாதோ ஆனால், எதனால் கண்பார்கின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது வழிப்படப் 

படுகின்றதோ அது பிரம்மன் இல்லை. 

எதனை செவியால் கேட்க இயலாதோ, ஆனால் எதனால் செவி கேட்கின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது வழிப்படப் 

படுகின்றதோ அது பிரம்மன் இல்லை. 

எதனை மூச்சால் உள்ளிழுக்க முடியாததோ, ஆனால் எதனால் மூச்சு உள்ளிழுக்கப்படுகின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது 

வழிப்படப் படுகின்றதோ அது பிரம்மன் இல்லை. 

பேரின்பத்திற்கான பாதை ஆங்குண்டு பொறிகளால் அனுபவிக்கும் இன்பத்துக்கான பாதையும் உண்டு. இரண்டும் ஆத்மாவைக் கவர்ந்திழுகின்றன.  முன்னதைப் 

பின்பற்றுவோன் நன்மையை எய்துகிறான்.  ஆனால் பொறிகளின் இன்பத்தைப் பின்தொடர்வோன் இறுதிப் பயனை எய்துவதில்லை.

இரண்டு பாதைகளும் மனிதனுக்கு முன்னர் இருப்பனவே.  அவைகளைப் பற்றி நன்கு சிந்தனை செய்து ஆராய்ந்து, பேரின்பத்துக்கான பாதையை, ஞானி 

தேர்ந்தெடுக்கின்றான்.  மூடனோ பொறிகளின் இன்பத்துக்கான பாதையில் போகிறான்.   

Thursday, April 14, 2016

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?


தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நமது பெரியோர்கள் சொன்ன மேலும் சில விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்!
ஆண்டு என்பது மாதம், வாரம் மற்றும் நாள் ஆகிவற்றால் ஆனதால் இவைபற்றி பார்ப்போம்.

காலத்தை அளவு செய்வதன் அளவுகோல் வானவியலை சார்ந்தது. பருப்பொருள்களின் நகர்தலினால்தான் காலம் என்பதே உருவானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் நமது பாரம்பரிய வானசாஸ்த்திரம் வான் கோள்களின் மாறாத இயக்கத்தை காலக்கடிகாரத்தின் முற்களாய் கொண்டு அளந்தது. நாள், வாரம், திங்கள்,வருடம் எல்லாம் கோள்களின் சுழற்சியினால் கணிக்கப்படுவது. நாளின் மணித்துளிகளை ஹோரை என்றனர் (இதுவே Hour ஆனது). நாழி, விநாழி (தமிழில் வினாடி ஆனது) என்பன நேரத்தின் அளவுகோல்கள்.

நமது வானசாஸ்த்திரம் அனைத்து வகையான காலப்பகுதிகளுக்கும் கோள்களின்/கிரஹங்களின் பெயரைச் சூட்டியது. எனவேதான் கிழமைகளின் பெயர்கள் ஞாயிறு மற்றும் ஏனைய கிரஹங்களின் பெயரில் அமைந்தது. [கிரஹிக்கும் அதாவது ஈர்க்கும் சக்தியினால் (Gravitation) இயங்குவதால் கிரஹம் என்றனர். எனவேதான் சூரியனும் ஜோதிட நோக்கில் மையத்தில் உள்ள ஒரு கிரஹம்தான், நவகிரஹங்களில் காண்பது போல். (சுய ஒளி உடையது நட்சத்திரம், பூமி முதலியன கோள்கள்/கிரஹங்கள் என்பது சமீபகாலத்தில் நம் பள்ளிகளில் எழுதப்பட்டது).

ராகு கேது ஆகியன வெறும் நிழற்கோள்களானதால் அவை கிழமைகளில் இல்லை. திதி என்பது தமிழில் தேதி என ஆனது. பனிரெண்டு ராசிகளால் பனிரெண்டு மாதங்களாயின. இந்தப் பதிவின் முக்கியமான விஷயம் கிழமைப்பெயர்களைப் போன்று தமிழ் மாதங்களின் பெயர்களும் வானவியலை சேர்ந்தது என்பதும் அதில் சித்திரைதான் வருடத்தின் முதல் மாதமாக வைக்கப்பட்ட காரணங்களும் இதனை மாற்றக்கூடாததிற்கான காரணங்களைப் பற்றி விவரிப்பதற்காகவும்.
சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்(விவரம் கீழே காண்க). எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.
ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான்.
எனவே முதல் மாதமாக சித்திரை தவிற வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். எப்படி அர்த்தமே இல்லாமல் தை முதல் மாதமாகமுடியும்?
ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ்மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். மட்டுமல்லாது அன்றைய தினம் விஷேச தினமாகவும் இருக்கும். சித்திரை மாதம் பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வரும். எனவே மாதத்தின் பெயர் சித்திரையானது. அந்நாளும் சித்ராபெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]
விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]
அனுசம் = ஆனி
பூராடம் - பூராடி = ஆடி
சிரவணம் - ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]
பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]
அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]
கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]
மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி
பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]
மகம் - வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]
உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].
ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமியன்று அதற்குரிய நட்சத்திரம் வருவதை காணலாம். இந்த நட்சத்திரப் பெயர்கள் ஏதோ வலிந்துபொருத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்டவை அல்ல. சித்திரையில் தொடங்கி பிற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக 30 அல்லது 31 நாட்சுழற்சியில் வரும். சித்திரையிலிருந்து 31 வது நாள் விசாக(வைசாக) நட்சத்திரம் மற்றும் இதுபோல. மேலும் வைகாசி விசாகம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மாதத்தின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காணலாம்.

இன்னும் அனேகவிஷயங்கள் உள்ளன. இப்படி காலஅளவுகள் நமது பெரியோர்களால் வானசாஸ்த்திரத்தில் அறிவியல் பூர்வமாக கணித்து வழக்கத்தில் உள்ள வருடத்தின் முதல் நாளை மாற்றுவது தவறு.

முடிவாக, மாதங்களின் பெயர் சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும்போது, சூரியன் சித்திரையில் நம்மீது நேராக பிராகசிக்கும் வரை சித்திரை தான் வருடத்தின் முதல் மாதமாக இருக்கமுடியும்

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

- திருமந்திரம் (திருமூலர்)

தமிழ் வருட பிறப்பு ஒரு கண்ணோட்டம்.

இன்று நாம் கலியுக மன்மத வருடத்தை கடந்து  கலியுக துன்முகி ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழர்கள் கணக்கு படி 5118வது வருடம். 

தமிழர்களின் ஜோதிட கணிப்புப்படி, 60 ஆண்டுகள் ஒரு வட்டமாக கருதப்படுகிறது. ஆனால் நாம் பெரும்பாலும் ஆண்டுகளை பெரிதாக கருதுவது கிடையாது. இந்த 60 வருடங்களையும் 3ஆக  பிரித்து, (20 வருடங்கள்)
1. உத்தம ஆண்டுகள்
2. மத்திம ஆண்டுகள்
3. அதம ஆண்டுகள்.

60 வருடங்களின் பெயர்கள் பின்வருமாறு.
1. பிரபவ  - (1987-88)
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. முக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம - (2000-01)
15. விஷு
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி - (2010-11)
25. கர
26. நந்தன
27. விஜய 
28. ஐய - (2014-15) 
29. மன்மத - (2015-16) 
30. துன்முகி (2016-17) 
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி - (2020-21)
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. செளமிய
44. சாதாரண - (2030-31)
45. விரோதகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள 
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரெளத்திரி - (2040-41)
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய.
இதை சுழற்ச்சி முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள். 
மேலும்,
சூரிய மாதம், சந்திர மாதம் என வருடத்தில் 2  உண்டு. 
சூரியமாதம், சந்திர மாதம்.
1. மேழம், சித்திரை
2. விடை, வைகாசி
3. ஆடவை, ஆனி
4. கடகம், ஆடி
5. மடங்கல், ஆவணி
6. கன்னி, புரட்டாசி
7. துலை, ஐப்பசி
8. நளி, கார்த்திகை
9. சிலை, மார்கழி
10. சுறவம், தை,
11. கும்பம், மாசி
12. மீனம், பங்குனி.
 நாம் சந்திர மாத ஆண்டுகளையே பின்பற்றுகிறோம்.  நம் முன்னோர்கள் பூமியின் சுழற்சியை வைத்து,என்றோவரும் அம்மாவாசை, பெளர்ணமி மிக எளிதாக கணக்கிட்டு சொல்லிவைத்தார்கள். 
மேலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது.
 கால கணித வாய்ப்பாடு.
1 கற்பகம் = 1000 சதுர்யுகம்.
1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்.
1 சதுர் யுகம் = 4 யுகம் 43,20,000 ஆண்டு
1 யுகம்  = --------
1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டு.
1 ஆண்டு = 12 மாதம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி 15 தற்பரை)
1 நாடி = 1440 விநாடி/24 நிமிடம்
1 விநாடி = 60 தற்பரை.

கிருத யுகம் 4*432000= 17,28,000 ஆண்டுகள்.
திரேதா யுகம் 3*432000= 12,96,000 ஆண்டுகள்.
துவாபர யுகம் 2*432000 = 8,64,000 ஆண்டுகள்.
கலியுகம் 1*432000 = 4,32,000 ஆண்டுகள்.

இவை அனைத்தும் தமிழ் புத்தாண்டின் சுருக்கமான விளக்கமே.

தமிழ் வருடப்பிறப்பு
==================
இன்று சுழல் ஆண்டுகளில் மன்மத ஆண்டு முடிந்து, துன்முகி ஆண்டு பிறக்கிறது. தொடர் ஆண்டு முறையில், கலியுக ஆண்டு 5118 பிறக்கிறது. தமிழ் வருடப்பிறப்பை பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.

வருடையில் தொடங்குகிறது புது வருடம்...
=====================================
நமது வான் மண்டலத்தில் உள்ள நட்சத்திர கூட்டங்களை பன்னிரு இராசிகளாக பிரித்தனர் நம் முன்னோர். அந்த பன்னிரு இராசிகளில் முதல் இராசி மேடம். இதனை வருடை இராசி என்று சங்கத்தமிழ் நூலான பரிபாடல் கூறுகிறது. வருடையில் ஆண்டு பிறப்பதால் வருடைப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் வருடப்பிறப்பானது...

வருடப்பிறப்புக்கு என்ன செய்வது?
============================
ஆண்டின் முதல் நாளான இன்று ஒரு தாம்பூலத்தட்டில், தமிழர்களின் முக்கனிகளான மா,பலா,வாழை ஆகியவற்றுடன் வெற்றிலைப்பாக்கு, தேங்காய், பூ, பணம், அரிசி,பருப்பு ஆகியவற்றை ஒரு நிலைக்கண்ணாடியின் முன் வைத்துவிட வேண்டும்.  புத்தாண்டு அன்று இதன் முன் கண் விழிக்க வேண்டும். அப்படி செய்வதனால் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

பிறகு மருந்துநீரில் குளித்து, புத்தாடை உடுத்தி, கோவிலுக்கு சென்று பஞ்சாங்கம் படிப்பதை கேட்க வேண்டும்.

பெரியோரிடம் ஆசி வாங்கி, தான தருமங்கள் செய்ய வேண்டும்.

வீட்டில் பொங்கல் வைத்து, மாங்காய் பச்சடி, நீர்மோர்,பருப்பு வடை ஆகியவற்றை செய்து படைக்க வேண்டும்...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பூத்தது புது வருடம்
பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்

நடந்து முடிந்தது முடிந்தது - இனி
நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.

எதிர்காலத்தை திட்டமிடுவோம்
எண்ணங்களை வசப்படுத்துவோம்

கடந்த வருடம்- நம்
கஷ்டங்களை கொண்டு போகட்டும்

புது வருடம் – பல
புதுமைகள் காண உதவட்டும்

நினைவுகளாய் இருக்கும் கனவுகள்
நிஜமாய் மாறட்டும்

இன்னொரு ஜென்மம் உண்டென்றால்
இந்த சொந்தங்கள் தொடரட்டும்

நம் வீட்டு சொந்தங்கள்
நலம் வாழ நாளும் பிராத்திப்போம்

ஆண்டுப் பெயர்கள் தமிழில்



1 நற்றோன்றல் - பிரபவ

2 உயர்தோன்றல் - விபவ

3 வெள்ளொளி - சுக்கில

4 பேருவகை - பிரமோதூத

5 மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி

6 அயல்முனி - ஆங்கிரச

7 திருமுகம் - ஸ்ரீமுக

8 தோற்றம் - பவ

9 இளமை - யுவ

10 மாழை - தாது

11 ஈச்சுரம் - ஈஸ்வர

12 கூலவளம் - வெகுதான்ய

13 முன்மை - பிரமோதி

14 நேர்நிரல் - விக்ரம

15 விளைபயன் - விஜ_

16 ஓவியக்கதிர் - சித்ரபானு

17 நற்கதிர் - சுபானு

18 தாங்கெழில் - தாரண

19 நிலவரையன் - பார்த்திப

20 விரிமாண்பு - விய

21 முற்றறிவு - சர்வசித்

22 முழுநிறைவு - சர்வதாரி

23 தீர்பகை - விரோதி

24 வளமாற்றம் - விக்ருதி

25 செய்நேர்த்தி - கர

26 நற்குழவி - நந்தன

27 உயர்வாகை - விசய

28 வாகை - சய

29 காதன்மை - மன்மத

30 வெம்முகம் - துன்முகி

31 பொற்றடை - ஏவிளம்பி

32 அட்டி - விளம்பி

33 எழில்மாறல் - விகாரி

34 வீறியெழல் - சார்வரி

35 கீழறை - பிலவ

36 நற்செய்கை - சுபகிருது

37 மங்கலம் - சோபகிருது

38 பகைக்கேடு - குரோதி

39 உலகநிறைவு - விசிவாவசு

40 அருட்டோற்றம் - பராபவ

41 நச்சுப்புழை - பிலவங்க

42 பிணைவிரகு - கீலக

43 அழகு - சௌமிய

44 பொதுநிலை - சாதாரண

45 இகல்வீறு - விரோதிகிருது

46 கழிவிரக்கம் - பரிதாபி

47 நற்றலைமை - பிரமாதீச

48 பெருமகிழ்ச்சி - ஆனந்த

49 பெருமறம் - இராட்சச

50 தாமரை - நள

51 பொன்மை - பிங்கள

52 கருமைவீச்சு - காளயுத்தி

53 முன்னியமுடிதல் - சித்தார்த்தி

54 அழலி - ரௌத்ரி

55 கொடுமதி - துன்மதி

56 பேரிகை - துந்துபி

57 ஒடுங்கி - ருத்ரோத்காரி

58 செம்மை - ரக்தாட்சி

59 எதிரேற்றம் - குரோதன

60 வளங்கலன் - அட்சய

Monday, April 11, 2016

லாவோட்சூ சொல்கிறார்



தெரிந்தவர் பேசுவதில்லை 
பேசுகிறவருக்கு தெரிவதில்லை 

பொருட் சார்புடையது பற்றிப் பேசும் வரையிலும் மொழி பயன் படுகிறது 

ஆனால் அகத்தைப் பற்றி பேசும் போது மொழி பயன் அற்றதாகிறது 

மொழி சத்தியத்தை சொல்லி விட முடியாது ஏனென்றால் சத்தியம்
பயன் பாடல்ல 

சத்தியம் ஒரு பொருளல்ல உனக்கு 
வெளியே இருப்பது அல்ல 

அது உன் இருப்பின் ஆழத்தில் நடுவில் நிகழ்வது 

சத்தியம் என்ன என்று சொல்லி விட முடியாது 

ஆனால் எது சத்தியம் அல்ல என்று சொல்லி விட முடியும் 

சாத்திரங்கள் அனைத்தும் கடவுள் யாராக இல்லை என்பதைத் தான் சொல்கின்றன 

தவறானதை விலக்கி
கொண்டே போகும் போது ஒருநாள் சத்தியம் திடீரென வெளிப்படும் 

ஆனால் அது மொழியால் வெளிப்படுவதில்லை 
மௌனத்தில் வெளிப்படுகிறது 

கடவுள் என்ற வார்த்தை கடவுள் அல்ல 

வார்த்தைகளால் அக அனுபவத்தை சொல்லி விட முடியாது 

வார்த்தைகளில் மயங்கி விடாதே 
சத்தியத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது 

மொழி மனதினுடையது அனுபவம் நெஞ்சத்தினுடையது 

மனம் அவ்வப்போது நெஞ்சத்தை எட்டிப் பார்க்கிறது 

அதனால் தான் கவிதை ஓவியம் இசை சாத்தியமாகிறது 

மனம் நெஞ்சத்தை அடுத்து மூன்றாவது தளம்தான் உன் இருப்பின் அடித்தளம் 

அதுதான் உன் இருத்தல் ஜீவிதம் 

மனம் சிந்திக்கிறது 
நெஞ்சம் உணர்கிறது 
ஜீவிதம் இருப்பாக இருக்கிறது 

கடவுள் பரவசம் நிர்வாணா ஞானம் இவைகள் இருப்பினுடையவை 

நெஞ்சம் கொஞ்சம் இருப்பிற்குள் எட்டிப் பார்க்கிறது நெஞ்சத்தின் மொழி அன்பு 

யேசு நெஞ்சத்தோடு நெஞ்சத்தின் மொழியில் பேசிக் கொண்டிருந்தார் 

அதைத் தான் அவர் அன்பே கடவுள் என்றார் 

" தெரிந்தவர் பேசுவதில்லை 
பேசுகிறவர்க்கு தெரிவதில்லை 
அதன் துளைகளை நிரப்பி விடு " 

மனதில் நிறைய துளைகள் உள்ளன 

அவற்றின் வழியே மனம் நிரம்புவதும் கொட்டிப் போவதும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது 

கண்கள் வழியாக தகவல் ஏதாவது கிடைக்குமா என்று மனம் பார்த்துக் கொண்டே இருக்கிறது 

எது கிடைத்தாலும் அதை வாங்கி வைத்துக் கொள்கிறது 

அறிவுதான் மனதின் உணவு மனம் அறிவின் மூலம் வளர்கிறது 

கண்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றன 

காதுகள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன 

மனம் அறிவைத் தேடி தேடி ஓடும் துளைகள்தான் இந்தப் பொறிகள் 

எந்தப் பயனும் இல்லாத அறிவைத் தேடி மனம் ஓடுகிறது 

மௌனம் சாத்தியமாக வேண்டுமானால் பொறிகளின் துளைகளை மூடி விடு 

உன்னுடைய கண்களை காலியாக வைத்திரு 

வெறுமையான கண்களோடு உலகத்தைப் பார் 

ஒரு ஞானி கண்களால் பார்க்கிறார் என்றாலும் அவர் எதையும் பார்ப்பதில்லை 

அவர் மனம் எதையும் சேர்த்து வைப்பதில்லை !!


Thursday, April 7, 2016

பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை!

குளியல் !
--------------

            உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. 

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம். 

சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.

இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது. 

சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம். 

வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை, 

எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி. 
நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது..

சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது. 

நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது. 

சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது. 

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது. 

நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். 

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை. 

எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும். 

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். 

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும். 

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும். 

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.

வியக்கவைக்கிறதா... !  நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும். 

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். 

புத்தி பேதலிப்பு கூட சரியாகும். 

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம். 

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க. 

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

நலம் நம் கையில்

நன்றி

ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா !!!. இயற்கையே மருந்து

🙏🌻



ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.

பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

 அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. 

மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. 

திரு மணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. 

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. 

இது ஒரு நல்ல பயிற்சி.

கம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. 

மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.

இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். 

தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. 

சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். 

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். 

வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.

வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. 

சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. 

இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

ஊஞ்சல்கள் பலவகை:

சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.

நவீன வகை ஊஞ்சல்கள் “சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.

தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.

மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது. 

மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. 

குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. 

காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.

கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. 

ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.

"இயற்கையே மருந்து" !

Saturday, April 2, 2016

எண்பது வகை வாதங்களும் குணமாகும்

வாத எண்ணெய்


இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது 
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் 
என்ற உன்னத நோக்கில் 
இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
 வெளிப் படுத்தி உள்ளோம்
 எண்பது வகை வாதங்களும் 
அனைத்து சூலை நோய்களும்
 மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

வாத எண்ணெய்

௧) எண்ணெய்கள்
நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி
௨)காடி நீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )
௩)மருந்துப் பொருட்கள்
சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை
௪)மருந்து சாப்பிட
நாட்டுப் பசும்பால்
வாத எண்ணெய் செய்யும் முறை
அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
 சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும்  பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து 
சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ)இந்த சூரணத்தில்  
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து 
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி 
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

இ)வாணலியை அடுப்பிலேற்றி 
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் 
வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்
 விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்
நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச் 
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் 
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும்
நுரை அடங்கி வரும்

நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்

இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்

இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
 வாத எண்ணெய் என்று பெயர்

ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை

உள் மருந்தாக  
நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து 
இறக்கி 
குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
அந்தப் பாலுடன் 
 அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து

 உணவுக்குப் பின் 
அரை மணி நேரம் கழித்து 
காலை மாலை என 
தினமும் இரண்டு வேளை குடித்து  வர வேண்டும்

வெளி மருந்தாக
இந்த வாத எண்ணெயை 
தினமும் இரவில் 
கை கால்களில் தேய்த்து
 மென்மையாக மசாஜ் செய்து 
மறு நாள் காலையில் 
இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்

இவ்வாறு தினமும் செய்து வர 
எண்பது வகை வாதங்களும் 
அனைத்து சூலை நோய்களும் 
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

நடுக்கு வாதம் 
முடக்கு வாதம் 
கீல்வாதம்
 நரித்தலைவாதம் 
ஆமைவாதம் 
பக்கவாதம்
 கைகால்கள் வீக்கம் 
வலி 
போன்ற அனைத்து வாத நோய்களும் 
அனைத்து சூலை நோய்களும் குணமாகும்

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்

இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது 
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
 என்ற உன்னத நோக்கில் 
இந்த இரகசிய மருந்து 
தயாரித்துப் பயன்படுத்தும் முறையை 
வெளிப் படுத்தி உள்ளோம்

தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்