Saturday, December 28, 2013

“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!




வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர்.
வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.
ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான்.
ஆஃப்ரிக்காவைப் பொறுத்தவரை பெண்கள்தான் எல்லாமே. ஆண்களைவிட அவகள் கடினமாக உழைக்கிறார்கள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும்.
என் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது.
எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, ‘கல்யாணமாகாதவள்’ என்கிற பேச்சுக்கே இடமில்லை. பாடையோ, பரதேசியோ! எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அதுதான் அவர்களின் வாழ்க்கை லட்சியம்.
பெண்களைப் பொறுத்தவரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதே…
அப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம்.
அம்மா என்னிடம் வந்து, ‘‘உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்’’ என்றார்.
அன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.
‘‘பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி’’ -அம்மா அறிவுரை சொன்னாள்.
சாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சந்தோஷமாக படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்துவிட்டேன்.
‘‘வாரிஸ்’’
அம்மா திடீரென்று எழுப்பினாள்.
நாங்கள், தூரத்துல் தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
‘‘இப்படி உக்காருவோம். அவ வருவா.’’ என்றார் அம்மா.
வானம் நன்கு விடிந்திருந்தபோது, ‘சர்க், சர்க்’ என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள்.
படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ‘‘அங்க போய் உக்காரு’ என்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.
பிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள்.
‘‘இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அதுபோல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.’’
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.
பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.
பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.
‘த்துப்..’
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.
நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி…
‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.
‘அய்யோ…!’ -நரக வேதனை.
அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.
‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’
ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.
தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.
காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும்.
முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்… திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது.
மரண வேதனை.
இதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது.
என் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன்.
நாட்கள் ஓடின.
நான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘‘வாரிஸ்! இங்க வாம்மா’’ -அப்பா அன்போடு அழைத்தார்.
தன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.
‘‘ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனா… உன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு’’
அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார்.
‘அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ!’
நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு,
‘‘அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்’’ என்றேன்.
அவர் என் முகத்தை திருப்பி,
‘‘எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்!’’ என்றார்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
‘‘அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.’’
நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன்.
அடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன்.
‘‘வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ…’’ அப்பா அழைத்தார்.
அவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.
அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு.
‘‘வாரிஸ்! வந்திருக்கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.’’
‘‘வணக்கம்.’’
நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது. அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்துவிட்டது.
சிரித்தவாறே… ‘‘சரி, சரி, போய் வேலையைப் பாரு’’ என்று சமாளித்தார்.
நான் மீண்டும் பால் கறக்க போய்விட்டேன்.
மறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார்.
‘‘வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்.’’
‘‘அப்பா! அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்’’
‘‘அதுதாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா! உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா? மாப்ள நமக்கு… அஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு’’ அப்பா, வாயை பிளந்துகொண்டு பெருமை பேசினார்.
அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.
‘த்தூ..
இந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.’ -ஒரு முடிவுக்கு வந்தேன்.
அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.
நான் அம்மாவை நெருங்கி,
‘‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.’’ என்றேன்.
‘‘அடிப்பாவி. எங்க ஓடுவ?’’
‘‘மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.’’
‘‘முதல்ல போய் படு’’ -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள்.
நான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.
அம்மாதான்.
‘‘அந்தாள் முழிச்சிக்கிறதுக்குள்ள எழுந்து ஓடு’’ -கிசுகிசுத்தாள்.
நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை. நான் எழுந்து அவளை அணைத்துக்கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.
‘‘எதுக்கும் கவலைப்படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே’’ என்றாள்.
‘‘சத்தியமா’’
சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.
பாலைவனம் முழுக்க ஒரே கும்மிருட்டு.
எவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கமில்லாத கரடு முரடான பாலைவனம் அது.
அந்தப் பயணம், முடிவில்லாத ஒன்றாக எல்லையற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்தபோது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்துபோய் இருந்தது.
‘’வாரிஸ், வாரிஸ்’’
திடீரென்று என் தந்தையின் குரல் கேட்பதை உணர்ந்தேன். பயத்தில் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னை அவர் பிடித்துவிட்டால்?
இப்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும்.
நான் ஓடத் துவங்கினேன். பயம், என் ஓட்டத்தை வேகப்படுத்தியது. அதி பயங்கரமாக ஒரு துரத்தல் காட்சி அது. பல மணி நேரங்களுக்கு இது தொடர்ந்தது. சூரியன் மறையும்வரை நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் அட்ரினல் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்திருக்கவேண்டும்.
அப்பா தோற்றுவிட்டார்.
சூரியன் வேகமாக மறையத் தொடங்கியது.
ஆனால், இது நேற்றைய இரவைப்போல் இல்லை. பசி, வயிற்றை எரிக்க ஆரம்பித்தது. சோர்வும் மயக்கமும் ஒருசேர, அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தேன். மெல்ல என் கால்களை எடுத்துப் பார்க்கிறேன்…
‘உஃஃப், உஃஃப்…’
வெப்பத்தில் கொப்பளித்து, பாறைகளில் மோதி, ரத்தச் சகதியாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது கால்கள்.
அப்படியே தூங்கிவிட்டேன்.
சூரியன் கண் திறந்திருக்கவேண்டும். என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல.
நடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெல்லாம் தெரியாது. பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போதெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் பயணத்தை நிறுத்திவிடுவேன். வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன்.
அப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக்கிடந்தேன். அருகில் யாரோ குரட்டைவிடுவதுபோல் இருந்தது.
‘அப்பாவாக இருக்குமோ?!’
பதறியடித்து எழும்பினால், ‘கடவுளே..! அது ஒரு சிங்கம்.’
என்னை முறைத்தபடி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி என் கால்களை பலவீனமாக்கி இருந்தது. கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்ந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக்குப்புற விழுந்தேன்.
நீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.
இப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன்.
‘‘வா! வந்து என்னைச் சாப்பிடு.’’ -சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன்.
எச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ! ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப்போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந்தேன்.
‘ஹ.. ஹ…’ என்ன நினைத்ததோ, சிங்கம் பின்வாங்கிவிட்டது.
சந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள்.
அப்படியானால்?
கடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்கவேண்டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார்.
‘அது என்னவாக இருக்கும்?’
நம்பிக்கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.
வீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்றுதான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப்பால்தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம். நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பிவிடுவேன். வழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன். ஆடுகளை வழிநடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக்குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும்.
வீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார்.
அப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவைவிட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை. கருப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம்போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிடுவாள்.
மொகாதிஷுவில் செல்வாக்குமிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அம்மா. மாறாக, எப்போதும் பாலைவனத்தில் அலைந்து திரியக்கூடிய நாடோடி, என் அப்பா. அம்மாவை கல்யாணம் செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்தபோது, ‘வாய்ப்பே இல்லை’ என்று என் பாட்டி விரட்டிவிட்டாராம். எப்படி இருந்தால் என்ன? அம்மாவுக்கு 16 வயதாகும்போது, அவரும் வீட்டைவிட்டு ஓடி வந்துதான் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறார்.
அம்மா எப்போதும் என்னை ‘அவ்டஹொல்’ என்றுதான் கூப்பிடுவார். அவ்டஹொல் என்றால், ‘சின்ன வாய்’ என்று அர்த்தம். ஆனால், ‘வாரிஸ்’ என்பதுதான் என் உண்மையான பெயர். வாரிஸ் என்றால் ‘பாலைவனப் பூ’ என்று அர்த்தம்.
நான் ஓடி வந்த கதையை விட்டுவிட்டேனே! சுமார் 300 மைகள் கடந்து, புண்ணாகிப்போன கால்களுடன் ஒரு வழியாக நான் மொகாதிஷுவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது, இந்தியப் பெருங்கடலில் ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை சுற்றி நிறைய பனைமரங்களும் கலர் கலரான பூச்செடிகளும் இருந்தன. அங்கிருந்த வீடுகளும் கொள்ளை அழகு. அவற்றில் பெரும்பாலானவை இத்தாலியர்களால் கட்டப்பட்டிருந்தன. மொகாதிஷு ஒரு காலத்தில் இத்தாலியர்களின் தலைநகரமாக இருந்ததே இதற்குக் காரணம். ஒரு கொக்கு மாதிரி கட்டடங்களை எட்டி, எட்டி பார்த்துக்கொண்டு நடந்தேன்.
ஒரு மார்கெட் வந்தது. அங்கிருந்த பெண்களிடன் ‘எங்க அக்கா அமென் தெரியுமா?’ என்று விசாரித்தேன்.
‘‘உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!’’ -யோசித்த ஒரு பெண்மணி, தன் மகனை அழைத்து,
‘‘இவளைக் கொண்டுபோய் அமென் வீட்டில் விடு’’ என்றாள்.
நான் அக்கா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
நல்லவேளையாக அவளுக்கு நல்லதொரு கணவன் கிடைத்திருந்தான். அவர்கள் தமது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நான் வீட்டு வேலைகள் முழுவதையும் பார்த்துக்கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நான்தான் அவளையும் பார்த்துக்கொண்டேன். அதன் பிறகு அக்காவுக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு முதலாளிபோல் என்னிடம் நடந்துகொண்டாள்.
மொகாதிஷுவில் எனக்கு வேறு சில சொந்தங்களும் இருந்தன.
நான் என் சித்தி வீட்டுக்குப் போய், ‘‘கொஞ்ச நாள் இங்கேயே தங்கிக்கவா?’’ என்றேன்.
எதிர்பார்த்ததைவிட அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள்.
‘தாராளமா தங்கிக்கோ. உனக்கு இங்க ஒரு பிரண்டுகூட இருக்கா.’ என்றார்கள்.
வழக்கம்போல், அங்கேயும் நான்தான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டேன்.
அம்மாவை தனியாக விட்டுவிட்டு வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. பாவம்! எல்லா வேலைகளையும் அவள் ஒருத்திதான் செய்தாக வேண்டும்.
‘நான் ஏதாவது செய்தாகவேண்டும். பணம் சம்பாதித்து அவளுக்கு அனுப்பவேண்டும்.’ என்று தீர்மானித்தேன்.
பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், வேலைக்குப் போகவேண்டுமே. தேடினேன். ஒரு இடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. ரொம்பவும் கடினமான வேலை. எல்லோரும் நான், ஓடிப்போய்விடுவேன் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், கடுமையாக உழைத்தேன். 60 டாலர்கள் கிடைத்தது.
நாட்கள் ஓடியது…
ஒரு நாள் சித்தி வீட்டில், வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். ஊரிலிருந்து முகம்மது சித்தப்பா வந்திருந்தார். என் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர்.
‘‘அடுத்த நாலு வருஷமும் லண்டன்லதான் இருக்கப்போறேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும். யாராவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு’’ -முகம்மது சித்தப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர்.
நான், மெல்ல என் சித்தியை கூப்பிட்டு,
‘‘நான் வேணும்னா, அவர் வீட்டுக்கு போறேனே.. ப்ளீஸ்’’ என்று கெஞ்சினேன்.
சித்தி, ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ‘‘ஏன் நீங்க வாரிஸை கூட்டிட்டுப் போகக்கூடாது. இவ ரொம்ப சுத்தமா வேலை செய்வா.’’ என்றார்.
சித்தப்பா என்னை உற்றுப் பார்த்தார்.
‘‘ஓகே. நாளைக்கு மதியம் ரெடியா இரு. நாம லண்டன் கிளம்பறோம்.’’
மறுநாள், என்னுடைய பாஸ்போர்ட் வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம்! முதன் முதலாக என்னுடைய பெயர் அச்சில் வார்க்கப்பட்டிருந்தது.
ஒரு வழியாக லண்டன் வந்தாகிவிட்டது. ஆடம்பரமான மாளிகைகள், வெள்ளை வெளேர் மனிதர்கள், விழுகின்ற வென் பனி என முற்றிலும் புதிதாக, முழுவதும் அந்நியமாக இருந்தது லண்டன். சித்தப்பாவுக்கும் அழகான ஒரு மாளிகை ஒதுக்கப்பட்டிருந்தது.
மரியம் சித்தி, என்னை முகம் மலர வரவேற்றார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க எண்ணினேன். ஆனால், அவரது நவநாகரீக உடை என்னை அச்சம் கொள்ளச் செய்தது. சித்தி எனக்கு பெட்ரூமை திறந்து காட்டினாள். ‘அம்மாடி!’ அவ்வளவு பெரிய படுக்கை அறையை நான் கனவிலும் கண்டதில்லை. என் வீட்டைவிட பெரியதாக இருந்தது. சொகுசான மெத்தை. அப்படியொரு சொகுசை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அன்றிரவு சொர்க்கத்தில் உறங்கினேன்.
அடுத்த நாள்…
பெருக்குவது, துடைப்பது, துவைப்பது, கழுவுவது என்று வழக்கம்போல் என் வேலைகள் தொடர்ந்தன. எப்படி சமைக்கவேண்டும் என்பதை சித்தி எனக்கு கற்றுக்கொடுத்தாள்.
எனக்கு 16 வயது இருக்கும்போது, முகம்மது சித்தப்பாவின் சகோதரி இறந்துபோய்விட, அவளது மகள் எங்களோடு வந்துவிட்டாள். நான்தான் அவளை கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன். ஒருநாள் ஸ்கூல் வாசலில் வைத்து ஒரு ஆள், என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு சுமார் 40 வயசு இருக்கும். இப்படி முறைத்துப் பார்ப்பது குறித்து அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.
நான், குழந்தையை ஸ்கூலில் விட்டுட்டு திரும்புகிறேன், திடீரென்று அந்த ஆள் என் பக்கத்தில் நிற்கிறார். எனக்கோ ஆங்கிலம் தெரியாது. அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. நான் பயந்துகொண்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஆளின் மகளும் அதே ஸ்கூலில்தான் படித்தாள்.
பிறகு, எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் சிரித்து வைப்பார். ஒரு நாள், தன் விசிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினார். நான் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்.
வீட்டுக்கு வந்ததும், என் சித்திப் பெண்ணிடம் காட்டி, ‘‘என்னதிது?’’ என்றேன்.
‘‘இதுவா? இந்த ஆள் ஒரு போட்டோகிராபராம்’’
‘போட்டோகிராபருக்கு நம்மகிட்ட என்ன வேலை?’
ம்ம்… நான் அதை மறந்துவிட்டேன்.
இதற்கிடையே சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்திருந்தது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோமாலிய அரசாங்கம் சொல்லிவிட்டது. சித்தப்பா, குடும்பத்துடன் மறுநாளே ஊருக்குத் திரும்பியாகவேண்டும். இதை நினைக்கும்போதே, எனக்கு அடி வயிறு கலங்கியது.
‘‘சித்தப்பா! என் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன்’’ -நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன்.
பயணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’’ சித்தப்பா கோபப்பட்டார்.
‘‘பரவாயில்லை சித்தப்பா. நீங்க கிளம்புங்க. நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்’’
என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக சித்தப்பா என்னை விட்டுவிட்டுக் கிளம்பினார்.
‘யாருமற்ற அநாதையாய், லண்டனை எதிர்கொள்ளவேண்டும்’
எனக்குள் பயம் பரவத் தொடங்கியது.
அடுத்த நாள் கடை வீதி ஒன்றில் ‘ஹல்வு’வைச் சந்தித்தேன். உயரமாக, கவர்ச்சியாக இருந்தாள்.
‘‘என்ன பண்ற வாரிஸ். எப்படி இருக்கே?’’ என்றாள் சோமாலியில்.
நாங்கள் முன்பின் அறிமுகமானவர்கள் இல்லை.
‘‘என்னத்தைச் சொல்ல! என் சித்தப்பா தூதரக அதிகாரியா வேலை பார்த்தார். இத்தனை நாள் அவரோடுதான் இருந்தேன். இப்போ அவர் வேலை முடிஞ்சு சோமாலியா போய்ட்டார். எங்க தங்கறது, எப்படி சாப்பிடுறதுன்னு இப்பவரை தெரியலை’’
ஹல்வு, என்னை அமைதியாகப் பார்த்தாள்.
‘‘ஒய்.எம்.சி.ஏ-ல எனக்கு ஒரு ரூம் இருக்கு. இன்னிக்கு ராத்திரி அங்கேயே தங்கிக்கோ’’
இப்போது, நானும் ஹல்வுவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தோம்.
‘‘மெக் டொனால்டில் வேலைக்குப் போறியா?’’ -ஹல்வு கேட்டாள்.
‘‘சான்ஸே இல்லை. எனக்கு இங்கிலிஷ் தெரியாது. என்கிட்ட வொர்க் பெர்மிட்டும் இல்லை’’
ஹல்வு என்னை விடவில்லை. என்னை மெக்டொனால்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவதுதான் என் வேலை.
வார இறுதியில், ஹல்வு என்னை டிஸ்கொதேவுக்கு அழைத்துச் சென்றாள். அதுதான், கட்டுப்பட்டியான ஆஃப்ரிக்க வளர்ப்பிலிருந்து நான் வெளியேற உதவியது. கருப்பு, வெள்ளை, ஆண், பெண் எல்லோரிடமும் பேசினேன். ஜஸ்ட் பேசினேன். அவ்வளவுதான். இந்தப் புதிய உலகில் எப்படி வாழ்வது என்பதை ஹல்வு மூலமாக கற்றுக்கொண்டேன்.
இனிதான், என் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பம்.
‘‘இந்த ஆளுக்கு என்னதான் வேணுமாம்?’’ ஓய்வு நேரம் ஒன்றில், போட்டோகிராபரின் விசிட்டிங் கார்டை காட்டி ஹல்வுவிடம் கேட்டேன்.
‘‘அதை அவர்கிட்டயே கேளு. போனைப் போடு’’
‘‘நான் பேசுறது மொக்க இங்கிலீஷ். நீயே பேசு’’
‘‘‘மைக் கோஸ்.’ அவர்தான் அந்த அன்புக்குரிய போட்டோகிராபர். அன்று, மைக்கின் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தபோது, நான் வேறொரு உலகத்தில் விழுந்ததுபோல் உணர்ந்தேன். சுவர் முழுக்க அழகழகான பெண்கள் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.
மைக் என்னிடம், ‘‘யூ ஹேவ் தெ மோஸ்ட் பியூட்டிஃபுல் ப்ரொஃபைல். நான் உன்னை போட்டோ எடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.
‘‘இதைப் போலவா? இந்த பொண்களைப் போலவா?’’
‘‘ஆமாம்’’
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘‘எவ்ளோ பணம் தருவீங்க?’’
‘‘ஹ.. ஹ..! வா, இப்படி வந்து நில்லு’’ மைக், தன் காமிராவை கையில் எடுத்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு… ஸ்பான்ச், பிரஷ், க்ரீம், பெயின்ட், பவுடர். எல்லாம் என் முகத்தில் விளையாட ஆரம்பித்தன. எனக்கு மேக்கப் போட்ட பெண், சற்று பின் நகர்ந்து சென்று என்னை பார்த்தாள்.
‘‘ஒகே. போய் கண்ணாடியைப் பார்’’
‘‘வாவ்…! நானா இது?’’ பட்டுப்போன்ற மேனி, பளபளக்கும் கன்னம்… அங்கிருந்த வெளிச்சத்தில் நான் தங்கம்போல மின்னினேன்.
‘‘ஓகே வாரிஸ். லிப்ஸை இப்படி வச்சிக்கோ, இங்க பார்… க்ளிக், க்ளீக், க்ளிக்…’’ -மைக்கின் விரல்கள் க்ளிக்கொண்டே இருந்தன.
வேலைக்கார வாரிஸ், இப்படியாகத்தான் ஒரு மாடல் அழகியாக மாறினாள்.
சில நாட்களுக்குப் பிறகு… ஒரு மாடலிங் ஏஜென்சி என்னை அழைத்திருந்தது. அழகழகான பெண்கள் அங்கே கூடியிருந்தனர்.
‘‘இங்கே என்ன நடக்குது?’’
‘‘பைரேலி காலண்டர்’’
‘‘ஓ… சூப்பர். அப்டினா, என்ன?’’
போட்டோகிராபர் ‘டெரன்ஸ் டொனோவன்’தான் கடந்த ஆண்டுக்கான பைரேலி காலண்டரை என் முன் எடுத்துப் போட்டார்.
‘ஸ்டன்னிங் பியூட்டிஃபுல்.’
ஒவ்வொரு பக்கத்திலும், துக்கிச் சாப்பிடக்கூடிய அழகிகள் ஆக்கிரமித்திருந்தார்கள்.
‘‘இந்த வருடம், வித்தியாசமா ஒரு ஆஃப்ரிக்கன் மாடலை வைத்துச் செய்யப்போகிறோம். நீதான் அந்த மாடல்’’ –டெரன்ஸ், ஒவ்வொன்றாக என்னிடம் விளக்க ஆரம்பித்தார்.
ஷூட்டிங் முடிந்தபோது என் படம் ‘அட்டை’க்குத் தேர்வாகி இருந்தது.
ஒரு மாடலாக, நான் வேகவேகமாக வளர்ந்தேன். பாரிஸ், மிலன், நியூயார்க் என்று பறந்தேன். பணம், மழைபோல் கொட்ட ஆரம்பித்தது. மிகப்பெரிய கமர்ஷியல் விளம்பரங்கள் தேடி வந்தன. ‘ரெவ்லான்’ விளம்பரத்தில் சின்டி கிராவ்ஃபோர்டு, கிளாடியா ஸ்கிஃபர், லாரன் ஹுட்டன் ஆகியோருடன் காட்சியளித்தேன். எல்லீ, கிளாமர், இத்தாலியன் வாக்ய் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கன் வாக்ய் போன்ற உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகைகளில் இடம் பிடித்தேன். ஜேம்ஸ்பான்ட் படத்தில்கூட நடித்தேன்.
ஆனால், வெற்றிகரமான இந்த வாழ்க்கைப் பயணத்தில், என் பழைய தழும்புகள் எதுவும் மறையவில்லை. எல்லாம் அப்படியே இருந்தன. அந்த சின்னஞ்சிறிய துவாரம் வழியே ஒரு சொட்டு யூரின் மட்டுமே வெளியேறியது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் எனக்கு பத்துப் பதினைத்து நிமிடங்கள் தேவைப்பட்டது. மாதவிடாய் நேரம் என்றால், இந்தக் கொடுமை பலமடங்கு வீரியத்தோடு இருக்கும். படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு இரவும், ‘தூக்கத்தின்போதே செத்துவிட்டால் தேவலாம்’ என்று நினைப்பேன்.
முன்பு ஒருநாள் சித்தப்பா வீட்டில் இருந்தபோதே, மாதவிடாய் நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். சித்திதான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், உண்மைக் காரணம் என்னவென்பதை நான் டாக்டரிடம் சொல்லவில்லை.
‘‘உதிரப்போக்கை நிறுத்தணும்னா, கர்ப்பத்தடை மாத்திரை ஒண்ணுதான் தீர்வு. வேற வழியில்லை’’ என்றார் டாக்டர்.
எல்லா டாக்டர்களும் இதையேதான் சொன்னார்கள்.
இந்த மாத்திரைகள் எனக்குள் வேறு மாதிரியான விளைவுகளை உண்டு பண்ணியது. என் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கின. உடல் எடை கூடியது.
‘இந்த வேதனைக்கு, உதிரப்போக்கையே தாங்கிக்கலாம்’ என்று தோன்றியதால், மாத்திரைகளை நிறுத்தினேன்.
மீண்டும் வலி.
‘‘சித்தி! ஸ்பெஷல் டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்’’
‘‘பார்த்து? என்னன்னு அவர்கிட்ட சொல்வே?’’
சித்தியின் கேள்விக்கு என்ன அர்த்தம் என்பது தெரியும்.
‘ஆஃப்ரிக்க பழங்குடிப் பெண், தன் அந்தரங்கத்தைப் வெள்ளைக்காரனிடம் காட்டுவதா? எவ்வளவு பெரிய குற்றம்!’
காலங்கள் உருண்டோடின. இப்போது நான் சொந்தக் காலில் நிற்கிறேன். ஒய்.எம்.சி.ஏ தோழியை அழைத்துக்கொண்டு டாக்டர் ‘மேக்ரே’வை சந்தித்தேன்.
‘‘டாக்டர். நான் சோமாலியாவில் இருந்து வர்றேன். எனக்கு…’’ அடுத்த வாக்கியத்தை முடிக்கவில்லை.
‘‘இட்ஸ் ஓகே. சரி பண்ணிடலாம். போய் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா’’ என்றார்.
நர்ஸை கூப்பிட்டு, ‘‘இங்க, சோமாலி தெரிஞ்ச லேடி இருக்காங்கல்ல. அவங்களையும் கூட்டிட்டு வாங்க.’’ என்றார்.
ஆனால், வந்தது லேடி இல்லை ஆம்பிளை.
அவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.
‘‘உண்மையிலேயே உனக்கு விருப்பம்னா, இவங்க திறந்து விடுவாங்க. ஆனா, இது நம்ம பன்பாட்டுக்கே விரோதம். இது உங்க வீட்டுக்கு தெரியுமா?’’ என்றான்.
‘‘தெரியாது’’
‘‘முதல்ல அவங்ககிட்ட பேசு.’’ -அவன் ஒரு அக்மார்க் சோமாலியன். போய்விட்டான்.
கடந்த வருடமே நான் இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்கவேண்டும். ஆனால், அப்போது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. டாக்டர். மேக்ரே மிகவும் நல்லவர். அவருக்கு நான் எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.
‘‘நீ மட்டும் இல்லை வாரிஸ். குடும்பத்துக்குத் தெரியாமல் எகிப்திலிருந்தும், சூடானிலிருந்தும், சோமாலியாவிலிருந்து ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். பாவம், சில பெண்கள் கற்பமாகக்கூட இருப்பார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம்’’ என்றார்.
சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருக்கும்.
ஒருநாள், டாய்லெட்டில் உட்கார்ந்து நான் சிறுநீர் கழித்தபோது…
‘உஷ்ஷ்ஷ்ஷ்…’
ஆஹா! என்ன ஒரு அற்புதம். நான் அடைந்த மகிழ்ச்சியை, அந்த சுதந்திரத்தை… வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த உலகில் இதைவிட மகிழ்ச்சியான ஒரு அனுபவம் இருக்கவே முடியாது.
1995-ம் ஆண்டு. என்னுடைய வாழ்க்கையை ஆவணமாக்குவதென்று பி.பி.சி தீர்மானித்தது.
‘‘நல்லது. ஆனால், சோமாலியாவுக்குச் சென்றதும் என் அம்மாவைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவவேண்டும்’’ -டைரக்டர் கெரி பொமிராயிடம் கோரிக்கை வைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார்.
என் குடும்பம் நகர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் பி.பி.சி குழுவினர் தேடத் துவங்கினர்.
சிலர், ‘நான்தான் உன் அம்மா’ என்று வந்தனர்.
‘‘உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்கள்னு சிலது இருக்கும். அது என்னன்னு யோசி’’ என்றார் கெரி.
‘‘ஓ… ஆமால்ல! என்னை ‘அவ்டஹொல்’னு எங்க அம்மா கூப்பிடுவாங்க’’
‘‘இந்தப் பேரை அவங்களுக்கு ஞாபகம் இருக்குமா?’’
‘‘நிச்சயமா’’
இப்போது அவ்டஹொல் என்கிற வார்த்தை சீக்ரட் பாஸ்வேர்டாக கொண்டு செல்லப்பட்டது. ஒருநாள் பி.பி.சி ஊழியர்கள் என்னை அழைத்து, ‘‘அநேகமா உங்க அம்மாவை கண்டுபிடிச்சிட்டோம்னு நினைக்கிறோம். அந்தம்மாவுக்கு அவ்டஹோல் என்கிற வார்த்தை மறந்துபோச்சு. ஆனா, தனக்கு வாரிஸ்னு ஒரு பொண்ணு இருந்ததாகவும், அவ லண்டன் தூதரகத்துல வேலை பார்த்தாகவும் சொல்றாங்க’’ என்றனர்.
நாங்கள் உடனடியாக எத்தியோப்பியா பறந்தோம். அங்கிருந்து சிறியரக விமானம் ஒன்றில், ‘கலாடி’க்கு பயணம். எத்தியோப்பிய&சோமாலிய எல்லை கிராமமான அங்குதான், உள்நாட்டுப் போரிலிருந்து உயிர்காத்துக்கொள்ள அகதிகள் முகாம் அமைத்து இருந்தனர்.
கடைசியில் அது என் அம்மாவே இல்லை.
ஆனால், நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அந்த கிராமத்தை அங்குலம் அங்குலமாக அலசினோம். அப்போதுதான் அந்த வயதான மனிதர் வந்தார்.
‘‘என்னை தெரியுதா? நான்தான் இஸ்மாயில். உங்க அப்பாவோட நெருங்கிய நண்பர். எனக்கு காஸ் வாங்க பணம் தந்தா, நான் உங்கம்மாவை கண்டுபிடிச்சித் தர்றேன்’’ என்றார்.
பி.பி.சி குழு ஒப்புக்கொண்டது.
மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் அம்மா வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அடுத்த நாள் காலை, ஜெரி என்னிடம் வந்து,
‘‘நீ நம்பப்போறதில்லை. அந்த ஆள் வந்துட்டார். அது உங்க அம்மாதான்’’ என்றார். நான் அவள் முகத்தைக்கூட பார்க்கவில்லை. முக்காடு அணிந்தபடி ட்ரக்கில் இருந்து இறங்கும்போதே தெரிந்துவிட்டது.
‘‘அம்மா…’’
ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டேன்.
ட்ரக் வந்தபோது அப்பா தண்ணீர் தேடச் சென்றுவிட்டாராம். ஆனால், என் சின்னத் தம்பி அலி வந்திருந்தான். நானும் அம்மாவும் பல விஷயங்களைப் பேசினோம்.
‘‘அப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. கண் பார்வையும் சரியா தெரியல. அவருக்கு ஒரு கண்ணாடி வாங்கித் தந்தா நல்லா இருக்கும்’’ என்றார் அம்மா.
திடீரென்று, அலி என்னைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
‘‘டேய்! நான் சின்னக் குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகப்போவுது. விட்றா!’’ என்றேன்.
‘‘என்னது கல்யாணமா? உனக்கு என்ன வயசு?’’
‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, கல்யாணம் பண்ற வயசு’’
ஒரு வழியாக அலி, சமாதானம் ஆனான்.
‘‘எனக்கும் பேரப் பிள்ளையை பார்க்கனும்னு ஆசையா இருக்கு’’ என்றார் அம்மா.
அன்றிரவு நானும் அலியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி குடிசைக்கு வெளியே தூங்கினோம். அவன் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டான். எனக்கு பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பின. நான், மிகுந்த சந்தோஷமாகவும் மிக அமைதியாகவும் உணர்ந்தேன்.
மறுநாள் காலை… விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
‘‘அம்மா! போதுமான அளவுக்கு நீ உழைச்சிட்டே. இனிமே நீ ஓய்வெடுத்தாகணும். கிளம்பு என்கூட.’’ என்றேன்.
‘‘இல்லை. உங்க அப்பா இங்கதான் இருக்கார். அவரை நான்தான் பாத்துக்கணும். அவர் இருக்கிற இடம்தான் எனக்கு வீடு, நாடு எல்லாமே. முடிஞ்சா ஒண்ணு செய். சோமாலியாவுல எங்களுக்கு ஒரு வீடு வாங்கிக்கொடு. அது போதும்.’’
நான் அவளை இறுக அணைத்துக்கொண்டேன்.
‘‘அம்மா! நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். உன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன். இதை மறந்துடாதே.’’
இப்போது நான் லண்டன் திரும்பிவிட்டேன். ஆனால், வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்தே இருந்தது. உலகத்தைப் பொறுத்த அளவில் நான், பிரபலமான ஒரு மாடல்.
மாதங்கள் உருண்டன. ஆண்டு, 1997. உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ உலகின் முன்னணி மாடல் அழகியான வாரிஸை பேட்டி காண வந்தது.
‘‘சொல்லுங்கள். எப்போது உங்கள் போட்டோகிராபரை சந்தித்தீர்கள்? அதுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லையா?’’
‘‘இல்லை’’
‘‘என்ன?’’
‘‘ஆமாம். நீங்கள் நினைப்பதல்ல என் வாழ்க்கை. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை லாரா. ஆனால், மாடலிங் பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதியிருப்பீர்கள். நான் சொல்ல நினைப்பது அதுவல்ல. எனக்கு சத்தியம் செய்து கொடுத்தால், நான் உங்களுக்கு உண்மைக் கதையைச் சொல்கிறேன்.’’
ரிப்போர்ட்டர் ‘லாரா ஸிவ்’வின் கண்கள் அகல விரிந்தன.
‘‘ஐ டூ மை பெஸ்ட்’’ சொல்லிக்கொண்டே டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார்.
நான் என் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.
லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு கதையை கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். என் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத உண்மையை, இப்போது உலகமே தெரிந்துகொண்டுவிட்டது.
‘‘ஆனால், செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.
3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூமையான பாறைக் கற்கள்தான்.
நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?
மத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்றுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்!’’
-பேட்டி வெளியான பிறகு வந்த அழைப்புகளை அடுத்து, ஐ.நா. அரங்கில் இப்படித்தான் பேசினேன். இப்போது, பெண் உறுப்பு சிதைத்தலுக்கு எதிரான இயக்கத்தின் சிறப்புத் தூதுவராக ஐ.நா என்னை நியமித்திருக்கிறது.
அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரியும். முதலில், அந்தக் கிழவனிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றினார். பிறகு சிங்கத்திடமிருந்து. அவர் என்னை உயிரோடு வைத்திருப்பதற்கான காரணம் இதுதான். ஒரு நாள், இந்தக் கொடுமையிலிருந்து அணைத்துப் பெண்களும் வெளியேறி சுதந்திரம் பெறுவார்கள்.
வாரிஸ், அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறாள்.

Mobile phone emergency numbers


நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!

1.அவசர உதவி அனைத்திற்கும்————–911
2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
4.மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
5.போலீஸ் SMS :- ———————————-9500099100
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
7.போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
8.போலீஸ் : —————————————–100
9.தீயணைப்புத்துறை :—————————-101
10.போக்குவரத்து விதிமீறல——————–103
11.விபத்து :——————————————–100, 103
12.ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
13.பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
14.குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
16.முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
19.ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919
21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
22.நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!

IMAGE : இஸ்ரேலிய ராணுவ
தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீன
தந்தையும் மகனும்

உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்..
உடுத்த உடையிருந்தால்..
தலை மேல் கூரையிருந்தால்..
உறக்கம் கொள்ள இடமிருந்தால்..
உலகின் 75 சதவிகித மக்களை விட நீங்கள் மேலானவரே!
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்..
உங்கள் பர்சில்
சிறிது சில்லறை இருந்தால்..
உலகின் முதல் 8 சதவிகித
பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!
நோய், நொடியின்றி,
புத்துணர்ச்சியோடு உங்கள்
பொழுது புணர்ந்தால்..
அதே நாளில் இறக்கப் போகும்
கோடி மக்களை விட நீங்கள் அதிகம்
ஆசீர்வதிக்கப்பட்டவரே!
நீங்கள் போரின் அனுபவம்
பெறாதிருந்தால்..
எந்த வித சித்திரவதைக்கும்
உள்ளாகாதிருந்தால்..
தினம் தினம் செத்துப் பிழைக்கும்,
கோடானு கோடி மக்களை விட நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே!
மேற்கூறியவைகளை தங்களால்
படித்துப் பார்க்க முடிந்தால்..
பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக
மனிதர்களை விடவும் நீங்கள் அதிகம்
கொடுத்து வைத்தவர்களே!!!

Thursday, December 26, 2013

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?



என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..
நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்

Monday, December 23, 2013

Phone missing?

உங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா? கவலையை விடுங்கள். இலகுவாக கண்டுபிடித்து விடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் ஜிமெயில் லாகின் செய்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் ஈசியாக எடுத்து விடலாம்.
குறிப்பு :உங்க மொபைலை யாரும் திருடி இருந்தால் அதை கண்டுபுடிக்க முடியாது ஏன் என்றால் உடனே வேற சிம் மாற்றி விடுவார்கள் (சிம் மட்டும் மாற்றினால் கூட நான் சொன்ன முறையில் கண்டு புடிக்கலாம்)
உதாரணமாக வீட்டில் வைத்த மொபைலை காணவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். அதுவும் silent mode.. சைலென்ட் வைக்காமல் இருந்திருந்தால் கூட ஈசியாக அந்த மொபைல்க்கு கால் செய்து எடுத்து விடலாம் ஆனால் சைலென்ட் வைத்து உள்ளோம் பிறகு என்ன?
வீடு முழுவதும் கஷ்டபட்டு தேடி நம்ம மொபைலை கண்டுபுடிப்போம் அல்லவா? நான் சொல்வதை முயற்சி செய்து பாருங்கள் சைலென்ட் silent வைத்து இருந்தாலும் ரிங் குடுக்க முடியும் உங்களுக்கு,
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
வாங்க பதிவுக்கு போகலாம்
முதலில் கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்
குறிப்பு :உங்கள் கணினி அல்லது நண்பர்கள் கணினி அல்லது மொபைலில் காணமல் போன ஆண்ட்ராய்ட்டு மொபைலில் ஜிமெயில் லாகின் செய்த அதே
ஜிமெயில் முகவரியை லாகின் செய்து விட்டு கிழே உள்ள தளத்திற்கு
செல்லவும் https://www.google.com/android/devicemanager?u=0
உங்கள் மொபைல் மாடல் மற்றும் கடைசியாக எந்த இடத்தில் அந்த மொபைல் லாகின் செய்தது என்ற தகவல் இருக்கும் வலது பக்கத்தில் மேப் யிலும் வரைபடத்தில் அந்த இடத்தை பார்க்கலாம்.
அல்லது ரிங் என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல்க்கு ரிங் குடுக்க முடியும்!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பகிரவும்..!

LOVE YOUR WIFE!

மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க !


* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களைமனைவியுடன்மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

* முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

* எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை’ போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூடபலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும்பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள்என்று அர்த்தம் இல்லை. உங்கள்குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

* பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள்அன்பானமனைவிக்குவாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.
* சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்தஸ்வீட்டையும்வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களதுமனைவி அடை யும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
* உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாகநடந்துகொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.
* உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்’ என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள்இப்படிகேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.


* மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள்மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம்அன்பாகஇருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காத லனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்! அதனால் காதலியுங்கள், மனைவியை..

BUSINESS நான்-ஓவன் தயாரிப்புகள்!

பணம் கொட்டும் தொழில்கள்: நான்-ஓவன் தயாரிப்புகள்!
இந்தத் தொழிலுக்கு போட்டி இல்லை என்பது பெரிய ப்ளஸ்பாயின்டாக உள்ளது!
ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதான விழிப்பு உணர்வு அதிகரித்துவரும் சூழலில், நான்-ஓவன் தயாரிப்புகள்தான் அந்த இடத்தைப் பிடித்துவருகிறது.
கேரி பேக் முதல் பலவிதமான பொருட்களை இதன் மூலம் உருவாக்க முடியும். ப்ளாஸ்டிக்கைபோல இலகுவானது, உறுதியானது; அதேசமயம், காகிதப்பை போல காற்று, நீர்புகும் தன்மை கொண்டது. மறுசுழற்சி கொண்டது என்பதால் இப்போது அனைத்துத் தேவை களுக்கும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த நான்-ஓவன் மூலம் கேரிபேக், தாம்பூலப்பை தவிர, தலையணை உறை, சீட்கவர், கம்ப்யூட்டர் கவர், மாஸ்க், ஏப்ரான், கிளவ்ஸ் போன்ற பலவகைகளில் பொருட்களை செய்யமுடியும். தற்போது மெடிக்கல் சென்டர்களில் ஸ்கேன் ரிப்போர்ட் கவர், ட்ராவல்ஸ் நிறுவனங்களில் சீட் கவர் போன்றவை இந்த நான்-ஓவன் மெட்டீரியல்களுக்கு வந்துவிட்டன. வழக்கமாக ஒரே தயாரிப்பாக இல்லாமல், புதிய புதிய டிசைன்களில் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு என்பதால் வருமானத்துக்கு பஞ்சமிருக்காது.
ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகைகள் உள்ளன. செமி ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் மூலம் குறிப்பிட்ட வகைகள் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதால், நாம் ஆட்டோமேட்டிக் இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யும் திட்டத்தைப் பார்ப்போம்.
திட்ட அறிக்கை!
முதலீடு விவரம்:
வாடகை: அந்தந்தப் பகுதி நிலவரப்படி
இயந்திரங்கள் : 31,97,249
இதில் கட்டிங் மெஷின், ஸ்லிட்டிங் மெஷின், ப்ரின்டிங் மெஷின், கம்ப்ரஸர், ஸ்டெபிலைஸர் என அனைத்து இயந்திரங்களும் அடக்கம்.
நமது பங்கு 5% = 1,59,862
மானியம் 25% = 7,99,312
வங்கிக் கடன் 70% = 22,38,075
(அ) ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள்.ஒருநாளின் ஒரு ஷிப்டுக்கு 350 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தேவையான நான்-ஓவன் பேப்ரிக் ரோல் ஒரு கிலோ 150 ரூபாய். பலவித கலர்களில், அழுத்தங்களில் (ஜி.எஸ்.எம்) வாங்கிக்கொள்ளலாம். (350X150X25 = 13,12,500)

Friday, December 20, 2013

பிரதோஷ காலத்தில் இப்படித்தான் வலம் வரவேண்டும்


ஸ்ரீ ஸ்ரீ ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ காலத்தில் இப்படித்தான் வலம் வரவேண்டும்

HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?


உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.

Thursday, December 19, 2013

FIRST AID அவசர கால முதலுதவி முறைகள்...!




வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :

உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.
வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.
வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

Wednesday, December 18, 2013

EXPORT PART 3 paypal

பே பால் மூலமாக ஏற்றுமதி பணம்

இதுவரை ஈகாமர்ஸ் இணையதளங்களின் மூலம் விற்கும் போது 500 டாலர் வரையே பே பால் மூலமாக பெறமுடியும் என்ற தடை இருந்தது. அதாவது 500 டாலருக்கு மேல் இ பே போன்ற இணையதளங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பொருட்களுக்கு பணம் பே பால் மூலமாக வாங்க முடியாது என்று இருந்ததை, தற்போது 3000 டாலராக ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.


Paypal சில பயன்மிக்க தகவல்கள்..!

பேபால்.. இணையத்தில் நாம் அடிக்கடி பார்க்கும், கேள்விப்படும் வார்த்தை. பேபால் என்றால் என்ன? இது எதற்குப் பயன்படுகிறது? யார் யாரெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும். இந்நிறுவனம் எங்கிருக்கிறது? இதனுடைய தோற்றம் என்ன? என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பேபால் என்றால் என்ன?

(What is paypal)
இது ஒரு இணையத்தள வங்கி. இத்தளத்தின் மூலம் பணத்தை எடுக்கலாம். பணத்தை மற்றவர் கணக்குகளில் போடலாம். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இணையதளங்களின் மூலம் வாங்கும் பொருட்களுக்குரிய பணத்தை இத்தளத்தின் மூலம் செலுத்தலாம்.

நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்க கூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். முந்தைய கால Checqe, Demand draf, Money order போன்ற முறைகளுக்கு ஒரு மாற்றாக இணையத்தில் அமைந்த ஒரு Digital முறையில் பணப்பட்டுவாடா செய்ய பயன்படும் E-commerce நிறுவனமே paypal.

Paypal நிறுவனத்தின் தொடக்கம்:
(beginning of Paypal company)
Paypal நிறுவனம் 2000ம் ஆண்டில்தான் நிறுவபட்டது. இந்நிறுவனம் 2002ம் வருடம் E-Bay நிறுவனத்தின் துணை நிறுவனமாக Subsidiary மாறிற்று. இணைய தள மோசடிகளை Internet Frauds தடுக்கும் வகையில் 2008ம் ஆண்டு ப்ராடு சயன்சஸ் என்னும் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டு பலம்பெற்றது. இன்று வரை பேபால் நிறுவனம் 15 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து 200 க்கும் மேற்பட்ட சந்தைகளில் இணைந்து தன்னுடைய வர்த்தகத்தை தொடர்ந்து பாதுகாப்பாக செய்து வருகிறது.

200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. Paypal பத்தொன்பதுக்கும் மேற்பட்ட currency யில் கணக்கை வைத்துக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது. (அதாவது இந்தியாவின் rupee, அமெரிக்காவின் dollar போன்று).

ஒரு நாட்டு கரன்சி மதிப்பிலிருந்து மற்றொரு நாட்டிற்கான கரன்சி மதிப்பிற்கு மாற்றி பணத்தை நமது கணக்கில் பணத்தைச் சேர்க்கும் வசதியைப் பெற்றிருப்பதே பேபாலின் முக்கியமான பயனாகும். மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதியை இது அளிக்கிறது. இந்நிறுவனத்தில் Security key இதற்கு ஒரு சரியான உதாரணம் ஆகும்.

விரைவாக , மிக எளிமையாவும் பணத்தை இணையத்தளம் வழியாக பணம் பரிவர்த்தனை அல்லது பணப் பரிமாற்றம் செய்வதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது. தற்போது சில தளங்கள் இணையப் பண பரிவர்த்தனை வசதிகளைக் கொடுத்தாலும், Paypal நிறுவனத்திற்கு ஈடாக எதுவும் இன்னும் வரவில்லை. துல்லியம், பாதுகாப்பு, பயன்பாட்டில் எளிமை ஆகிய விஷயங்களில் Paypal-க்கு Paypal தான். இந்நிறுவனம் தனது சேவைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த Paypal நிறுவனம் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது.

Paypal மூலம் பணத்தை செலுத்தும் முறை:

பேபால் மூலம் நீங்கள் பணத்தைச் செலுத்த உங்களிடம் கிரடிட் கார்ட், Internet banking வசதி கொண்ட வங்கிக் கணக்கு, டெபிட் கார்ட்(Debit Card) போன்ற ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் பேபால் கணக்கில் பணத்தைச் செலுத்த முடியும். சில நாடுகளிலிருந்து வங்கி காசோலை மூலம் கூட பேபால் மூலம் பணத்தை செலுத்த முடியும்.

Paypal மூலம் பணத்தை பெறும் முறை:
(Receive money through Paypal system:)
Paypal மூலம் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றவும் முடியும். உங்களுக்கு பேபால் வழியாக உங்கள் வாடிக்கையாளரோ, உறவினரோ, நண்பரோ வெளிநாட்டிலிருந்து பணத்தை பரிமாறிக்கொள்ள முடியும். உங்கள் பேபால் கணக்கில் பணம் சேர்ந்தவுடன் அதை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றி நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு பண பரிமாற்றம், பண பரிவர்த்தனைகளுக்கு பேபால் நிறுவனம் ஒரு சிறு தொகையை கமிசனாக பெற்றுக்கொள்கிறது.

ஒரு பேபால் கணக்கை துவங்குவது எப்படி?
(How to start a PayPal account?)
Paypal Account தொடங்குவது மிக எளிதான ஒன்று தான். உங்களிடம் முறையான வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.

உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card வைத்திருக்க வேண்டும்.

கூடவே இந்திய அரசு வழங்கும் Pan Card-ம் அவசியமாக வைத்திருக்க வேண்டும்.

பேபால் கணக்குத் துவங்க Paypal.com என்ற முகவரிக்கு செல்லவும். அதில் signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கதில் தேவையான விபரங்களைக் கொடுக்கவும். select your country and region from the list என்பதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து உங்களுக்கு தேவையான கணக்கு முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இணையத்தில் மூலம் பொருட்களை விற்பவர் எனில் business Account -ஐத் தேர்ந்தெடுக்கவும். சாதாரணமாக பண பரிவர்த்தனை மட்டுமே என்றால் personal என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

இணையதளத்தில் வர்த்தகம் செய்ய விரும்பினால் கட்டாயம் Busines or Permium வகைக் கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிறகு தேவையான உங்களுடைய தகவல்களை படிவத்தில் நிரப்புங்கள். நீங்கள் நிரப்பும் உங்களுடைய சொந்த தகவல்கள் உண்மையாகவும், வங்கி கணக்கில் உள்ள விபரங்களுடன் ஒத்துப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொன்று. குறிப்பாக சொல்வதெனில் உங்களுடைய பெயரின் எழுத்துகள்(Name Letters), இனிஷியல் (Initial), தொலைபேசி (cell number, phone number)எண் மற்றும் Email address ஆகியவை மிகச் சரியாக எழுத்துப் பிழை இல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இணையத்தின் மூலம் அதிக பண பரிவர்த்தனை(Money Exchange), பண பரிமாற்றம் (Money transfer) செய்யும் நபர்கள் தங்களுடைய கடன் அட்டை விபரங்களையும் (Credit Card Details)கொடுக்க வேண்டியது கட்டாயம். இத்தளம் மிகச்சிறந்த பாதுகாப்பை அளிப்பதால் நம்பி விபரங்களைக் கொடுக்கலாம்.

அனைத்து விபரங்களையும் கொடுத்த பிறகு உங்களு paypal அக்கவுண்ட் தொடங்குவது உறுதி செய்வதற்கான மின்னஞ்சல் வந்தடையும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கு விபரங்களை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

Paypal மூலம் பணம் எடுப்பது எப்படி?

Paypal மூலம் பணம் எடுக்க முறையே மூன்று வழிகள் உள்ளன. இது நாட்டிற்கு நாடு மாறுபடும். உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து, withdraw option தேர்ந்தெடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கிற்கு பேபாலிலிருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.

ஒரு சில நாடுகளில் cheque, debit card, credit card மூலமாகவும் பணம் எடுப்பதற்கான வசதிகளைக் கொடுத்திருக்கின்றனர். அதிக பட்சமாக ஐந்து நாட்களுக்குள் இந்த பணப்பட்டுவாடா முடிந்துவிடும். ஒரு பேபால் கணக்கிலிருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். personal Paypal Account மூலம் பணபரிமாற்றம் செய்ய குறைந்த அளவே கமிஷனாக கட்டம் பெறப்படுகிறது.

பேபால் கணக்கின் முக்கிய பயன்கள்:
(The main benefits of the PayPal account:)
பேபால் கணக்கின் மூலம் நீங்கள் இணையத்தின் மூலம் உலகில் எந்த மூலையிலிருந்து, வேண்டியவருக்கு பணத்தை அனுப்ப முடியும். அதோபோல எங்கிருந்தும் பணத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இணையதளத்தின் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கும்போது மிகப் பாதுகாப்பாக உங்கள் பணத்தை இந்த தளத்தின் மூலம் செலுத்த முடியும்.
எப்படி எனப் பார்ப்போம்.

நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்கும்போது விற்பனையாளர்களுக்கு(Dealer) நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைப் பற்றி விபரங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. credit card number, Bank account number, போன்ற அதி முக்கியத் தகவல்களை விற்பனையாளருக்கோ, அத்தளத்திற்கோ கொடுக்க வேண்டிய அவசியமேற்படாது. இதனால் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. உங்களுடைய personal data பாதுகாக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் money transaction மிகப் பாதுகாப்பாக நடைபெறுகிறது. எனவே எதற்கும் நாம் பயபட வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.

இனி என்ன ? நீங்களும் உங்களுக்கான பேபால் அக்கவுண்ட்டை கிரியேட் செய்துகொள்ள வேண்டியதுதானே?

பேபால் அக்கவுண்ட் கிரியேட்(தொடங்க) செய்ய www.paypal.com செல்லவும்.

Photo: Paypal சில பயன்மிக்க தகவல்கள்..!

பேபால்.. இணையத்தில் நாம் அடிக்கடி பார்க்கும், கேள்விப்படும் வார்த்தை. பேபால் என்றால் என்ன? இது எதற்குப் பயன்படுகிறது? யார் யாரெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும். இந்நிறுவனம் எங்கிருக்கிறது? இதனுடைய தோற்றம் என்ன? என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பேபால் என்றால் என்ன?

(What is paypal)
இது ஒரு இணையத்தள வங்கி. இத்தளத்தின் மூலம் பணத்தை எடுக்கலாம். பணத்தை மற்றவர் கணக்குகளில் போடலாம். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இணையதளங்களின் மூலம் வாங்கும் பொருட்களுக்குரிய பணத்தை இத்தளத்தின் மூலம் செலுத்தலாம்.

நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்க கூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். முந்தைய கால Checqe, Demand draf, Money order போன்ற முறைகளுக்கு ஒரு மாற்றாக இணையத்தில் அமைந்த ஒரு Digital முறையில் பணப்பட்டுவாடா செய்ய பயன்படும் E-commerce நிறுவனமே paypal.

Paypal நிறுவனத்தின் தொடக்கம்: 
(beginning of Paypal company)
Paypal நிறுவனம் 2000ம் ஆண்டில்தான் நிறுவபட்டது. இந்நிறுவனம் 2002ம் வருடம் E-Bay நிறுவனத்தின் துணை நிறுவனமாக Subsidiary மாறிற்று. இணைய தள மோசடிகளை Internet Frauds தடுக்கும் வகையில் 2008ம் ஆண்டு ப்ராடு சயன்சஸ் என்னும் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டு பலம்பெற்றது. இன்று வரை பேபால் நிறுவனம் 15 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து 200 க்கும் மேற்பட்ட சந்தைகளில் இணைந்து தன்னுடைய வர்த்தகத்தை தொடர்ந்து பாதுகாப்பாக செய்து வருகிறது.

200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. Paypal பத்தொன்பதுக்கும் மேற்பட்ட currency யில் கணக்கை வைத்துக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது. (அதாவது இந்தியாவின் rupee, அமெரிக்காவின் dollar போன்று).

ஒரு நாட்டு கரன்சி மதிப்பிலிருந்து மற்றொரு நாட்டிற்கான கரன்சி மதிப்பிற்கு மாற்றி பணத்தை நமது கணக்கில் பணத்தைச் சேர்க்கும் வசதியைப் பெற்றிருப்பதே பேபாலின் முக்கியமான பயனாகும். மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதியை இது அளிக்கிறது. இந்நிறுவனத்தில் Security key இதற்கு ஒரு சரியான உதாரணம் ஆகும்.

விரைவாக , மிக எளிமையாவும் பணத்தை இணையத்தளம் வழியாக பணம் பரிவர்த்தனை அல்லது பணப் பரிமாற்றம் செய்வதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது. தற்போது சில தளங்கள் இணையப் பண பரிவர்த்தனை வசதிகளைக் கொடுத்தாலும், Paypal நிறுவனத்திற்கு ஈடாக எதுவும் இன்னும் வரவில்லை. துல்லியம், பாதுகாப்பு, பயன்பாட்டில் எளிமை ஆகிய விஷயங்களில் Paypal-க்கு Paypal தான். இந்நிறுவனம் தனது சேவைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த Paypal நிறுவனம் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது.

Paypal மூலம் பணத்தை செலுத்தும் முறை: 

பேபால் மூலம் நீங்கள் பணத்தைச் செலுத்த உங்களிடம் கிரடிட் கார்ட், Internet banking வசதி கொண்ட வங்கிக் கணக்கு, டெபிட் கார்ட்(Debit Card) போன்ற ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் பேபால் கணக்கில் பணத்தைச் செலுத்த முடியும். சில நாடுகளிலிருந்து வங்கி காசோலை மூலம் கூட பேபால் மூலம் பணத்தை செலுத்த முடியும்.

Paypal மூலம் பணத்தை பெறும் முறை: 
(Receive money through Paypal system:)
Paypal மூலம் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றவும் முடியும். உங்களுக்கு பேபால் வழியாக உங்கள் வாடிக்கையாளரோ, உறவினரோ, நண்பரோ வெளிநாட்டிலிருந்து பணத்தை பரிமாறிக்கொள்ள முடியும். உங்கள் பேபால் கணக்கில் பணம் சேர்ந்தவுடன் அதை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றி நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு பண பரிமாற்றம், பண பரிவர்த்தனைகளுக்கு பேபால் நிறுவனம் ஒரு சிறு தொகையை கமிசனாக பெற்றுக்கொள்கிறது.

ஒரு பேபால் கணக்கை துவங்குவது எப்படி? 
(How to start a PayPal account?)
Paypal Account தொடங்குவது மிக எளிதான ஒன்று தான். உங்களிடம் முறையான வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.

உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card வைத்திருக்க வேண்டும்.

கூடவே இந்திய அரசு வழங்கும் Pan Card-ம் அவசியமாக வைத்திருக்க வேண்டும்.

பேபால் கணக்குத் துவங்க Paypal.com என்ற முகவரிக்கு செல்லவும். அதில் signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கதில் தேவையான விபரங்களைக் கொடுக்கவும். select your country and region from the list என்பதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து உங்களுக்கு தேவையான கணக்கு முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இணையத்தில் மூலம் பொருட்களை விற்பவர் எனில் business Account -ஐத் தேர்ந்தெடுக்கவும். சாதாரணமாக பண பரிவர்த்தனை மட்டுமே என்றால் personal என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

இணையதளத்தில் வர்த்தகம் செய்ய விரும்பினால் கட்டாயம் Busines or Permium வகைக் கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிறகு தேவையான உங்களுடைய தகவல்களை படிவத்தில் நிரப்புங்கள். நீங்கள் நிரப்பும் உங்களுடைய சொந்த தகவல்கள் உண்மையாகவும், வங்கி கணக்கில் உள்ள விபரங்களுடன் ஒத்துப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொன்று. குறிப்பாக சொல்வதெனில் உங்களுடைய பெயரின் எழுத்துகள்(Name Letters), இனிஷியல் (Initial), தொலைபேசி (cell number, phone number)எண் மற்றும் Email address ஆகியவை மிகச் சரியாக எழுத்துப் பிழை இல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இணையத்தின் மூலம் அதிக பண பரிவர்த்தனை(Money Exchange), பண பரிமாற்றம் (Money transfer) செய்யும் நபர்கள் தங்களுடைய கடன் அட்டை விபரங்களையும் (Credit Card Details)கொடுக்க வேண்டியது கட்டாயம். இத்தளம் மிகச்சிறந்த பாதுகாப்பை அளிப்பதால் நம்பி விபரங்களைக் கொடுக்கலாம்.

அனைத்து விபரங்களையும் கொடுத்த பிறகு உங்களு paypal அக்கவுண்ட் தொடங்குவது உறுதி செய்வதற்கான மின்னஞ்சல் வந்தடையும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கு விபரங்களை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

Paypal மூலம் பணம் எடுப்பது எப்படி? 

Paypal மூலம் பணம் எடுக்க முறையே மூன்று வழிகள் உள்ளன. இது நாட்டிற்கு நாடு மாறுபடும். உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து, withdraw option தேர்ந்தெடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கிற்கு பேபாலிலிருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.

ஒரு சில நாடுகளில் cheque, debit card, credit card மூலமாகவும் பணம் எடுப்பதற்கான வசதிகளைக் கொடுத்திருக்கின்றனர். அதிக பட்சமாக ஐந்து நாட்களுக்குள் இந்த பணப்பட்டுவாடா முடிந்துவிடும். ஒரு பேபால் கணக்கிலிருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். personal Paypal Account மூலம் பணபரிமாற்றம் செய்ய குறைந்த அளவே கமிஷனாக கட்டம் பெறப்படுகிறது.

பேபால் கணக்கின் முக்கிய பயன்கள்: 
(The main benefits of the PayPal account:)
பேபால் கணக்கின் மூலம் நீங்கள் இணையத்தின் மூலம் உலகில் எந்த மூலையிலிருந்து, வேண்டியவருக்கு பணத்தை அனுப்ப முடியும். அதோபோல எங்கிருந்தும் பணத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இணையதளத்தின் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கும்போது மிகப் பாதுகாப்பாக உங்கள் பணத்தை இந்த தளத்தின் மூலம் செலுத்த முடியும்.
எப்படி எனப் பார்ப்போம்.

நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்கும்போது விற்பனையாளர்களுக்கு(Dealer) நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைப் பற்றி விபரங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. credit card number, Bank account number, போன்ற அதி முக்கியத் தகவல்களை விற்பனையாளருக்கோ, அத்தளத்திற்கோ கொடுக்க வேண்டிய அவசியமேற்படாது. இதனால் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. உங்களுடைய personal data பாதுகாக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் money transaction மிகப் பாதுகாப்பாக நடைபெறுகிறது. எனவே எதற்கும் நாம் பயபட வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.

இனி என்ன ? நீங்களும் உங்களுக்கான பேபால் அக்கவுண்ட்டை கிரியேட் செய்துகொள்ள வேண்டியதுதானே?

பேபால் அக்கவுண்ட் கிரியேட்(தொடங்க) செய்ய www.paypal.com செல்லவும்.

நன்றி நண்பர்களே..!

EXPORT PART 2


ஏற்றுமதிக்கான ஆவணங்கள் (Export Documents)

Export Order

ஏற்றுமதி ஆணை என்பது ஏற்றுமதியாளருக்கும், இறக்குமதியாளருக்கும் முதல் முக்கிய வர்த்தக ஆவணமாகும். இந்த ஆவணம் ஏற்றுமதியாளருக்கும், இறக்குமதியாளருக்கும் மட்டும் முக்கியாமனவை அல்ல இரு நாட்டிற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இது இருநாட்டின் அந்நிய செலவாணியில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஏற்றுமதியாளர் இந்த ஆவணத்தை பல்வேறு வர்த்தக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவை,

பல்வேறு அரசு அலுவலகம்.
நிதித் துறை.
கட்டுப்படுத்தப்பட்ட பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் அதற்கான உரிமத்தை பெறும் போது சமர்ப்பிக்க வேண்டும்.
முன் பணம் பெறும் போது.
சுங்கத்துறையிடம்.
பொருட்களை பரிசோதிக்கும் பொழுது.
காப்பீட்டு அலுவலகம்.
இன்னும் பல அலுவலகத்தில் இந்த ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும்.

Order Acceptance

ஏற்றுமதிக்கான ஆணையை பெற்றவுடன் ஏற்றுமதியாளர் ஏற்றுமதிக்கான ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களுக்கு ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் ஏற்றுமதியாளரால் தயாரிக்கப்படும் ஒரு முக்கிய ஆவணம் இதுவாகும். இதில் அவசியம் ஏற்பட்டால் இறக்குமதியாளரின் கையொப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஆவணத்தில் இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, பொருட்களை பெறும் நபரின் பெயர் மற்றும் முகவரி, ஏற்றுமதி செய்யப்படும் இடம், பொருள் இறுதியாக சென்றடையும் இடத்தின் முகவரி, பொருளை பற்றி விவரம், பொருட்களின் விலை மற்றும் எடை, பேக்கிங் மற்றும் குறிப்பு சீட்டின் முறை, பணப்பட்டுவாடா முறை மற்றும் பொருட்களுக்கான காப்பீடு ஆகிய விவரங்கள் உள்ளடங்கி இருக்கும்.

Letter of Credit

Letter of Credit என்பது ஏற்றுமதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை பெற்றுக்கொள்ள, இறக்குமதியாளரின் வங்கி, பணத்திற்கான உறுதியை அளிக்கும் ஒரு ஆவணமாகும். இதனைப்பற்றிய விரிவான விவரங்களை நாம் ஏற்கனவே படித்துள்ளோம்.

Mate\'s Receipt

Mate\'s Receipt என்பது பொருட்களை கப்பலில் ஏற்றப்பட்ட பின் கப்பலின் தலைமை மாலுமியால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். கப்பலின் பெயர், ஏற்றப்பட்ட இடம், பொருள் சென்றடையும் இடம், பொருளின் முழு விவரம், எடை மற்றும் மதிப்பு, பொருள் ஏற்றப்பட்ட கண்டெய்னரின் விவரம் இந்த Mate\'s Receipt - ல் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த Mate\'s Receipt - ஐ பெற்றவுடன் கப்பலின் அலுவலகம் அல்லது முகவரிடம் கொடுத்து Bill of Lading - ஐ பெற்றுக் கொள்ள வேண்டும்.

Bill of Lading

Bill of Lading என்பது பொருட்களை கடல் வழியாக கொண்டு செல்லும் போது கப்பலின் அலுவலகம் வழங்கும் ஒரு ஆவணமாகும். பொருட்களை கப்பலில் ஏற்பட்டதிற்கு ஆதாரமாக கப்பலின் தலைமை மாலுமியால் வழங்கப்பட்ட Mate\'s Receipt - ஐ பெற்றுக்கொண்டு Bill of Lading - ஐ கப்பலின் அலுவலகம் வழங்கும்.

Post Parcel Receipt

Post Parcel Receipt என்பது அஞ்சல் வழியாக பொருட்களை அனுப்ப அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் ஆவணமாகும். அவ்வாறு அனுப்பப்படும் பொருளை நேரடியாக இறக்குமதியாளரின் முகவரிக்கு அனுப்பினால் இறக்குமதியாளர் பொருட்களை பெற்றுக்கொண்டு பணத்தை செலுத்த தவறலாம். அதனால் பொருட்களை அனுப்பும் பொழுது இறக்குமதியாளரின் வங்கி முகவரிக்கு அனுப்புவது சிறந்ததாகும்.

Insurance Policy / Certificate

பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது ஏற்படும் பலவகையான ஆபத்தால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க பொருட்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேருவதின் மூலம், காப்பீட்டு கழகத்தால் வழங்கும் ஆவணமாகும்.

Certificate of Origin

Certificate of Origin என்பது பொருட்கள் இந்நாட்டில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று Champers of Commerce - ஆல் வழங்கப்படும் ஒரு சான்றிதழ் ஆகும். இந்த சான்றிதழை வழங்க பல வகையான அலுவலகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Manufacturer Certificate

சில குறிப்பிட்ட நாடுகளுக்கு தயாரிப்பு சான்றிதழ் ( Manufacturer Certificate ) தேவைப்படுகிறது. அதாவது பொருட்கள் முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டதா ? என்பதை விளக்கும் சான்றிதழ் ஆகும்.

GSP Certificate ( Generalized System of Preferences )

இந்தியா போன்ற வளரும் நாடுகளால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு EEC நாடுகளால் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரிச்சலுகையை பெற GCP Certificate மிக முக்கியமாகும்.

Certificate of Inspection

தரக்கட்டுப்பாட்டால் பொருட்களை ஏற்றுமதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் பரிசோதித்து வழங்கப்படும் ஒரு ஆவணமாகும்.

Anriquity Certificate

பழமையான பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தால் வழங்கப்படும் ஒரு சான்றிதழ் Anriquity Certificate ஆகும்.

Packing List / Note

Packing List / Note என்பது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, இன்வாய்ஸ் எண், ஆர்டர் எண், கப்பலின் விவரம், பில் ஆப் லேடிங் ( Bill of Lading ) எண், பொருட்களின் விவரம் போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணமாகும்.

Certificate of Measurement

பொதுவாக பொருட்களை வாகனத்தில் ஏற்றிச் செல்ல ஏற்றுமதியாளர் தெரிவிக்கும் பொருட்களின் மொத்த எடை அல்லது அளவுகளின் அடிப்படையில் தான் வாடகை வசூலிக்கப்படும். இருப்பினும் Champer of Commerce - ல் அல்லது அனுமதி பெற்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழில் கப்பலின் பெயர், சரக்கு சென்றடையும் இடத்தின் விவரம், சரக்கின் மொத்த எடை, நீளம், அகலம் மற்றும் ஆழம் ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்.

Shipping Order

Shipping Order என்பது பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்வதற்கு முன்பதிவு அவசியமாக செய்யும் பொருட்டு கப்பலின் அலுவலகம் வழங்கும் ஆவணமாகும்.

Commercial Invoice

Commercial Invoice என்பது ஏற்றுமதியாளரால் தயார் செய்து வழங்கப்படும் ஆவணமாகும். இதில் பொருட்களின் விவரம், ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, பொருளை பெறுபவரின் பெயர் மற்றும் முகவரி, கப்பலின் பெயர் மற்றும் முகவரி, பில் ஆப் லேடிங் எண் மற்றும் தேதி, ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் பெயர், பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பு சீட்டு விவரம், பொருட்களின் மொத்த விலை வாடகை மற்றும் காப்பீட்டின் விவரம் அடங்கியிருக்கும்.

Custom Invoice

USA , கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு Custom Invoice தேவைப்படுகிறது. இது ஏற்றுமதியாளரால் வழங்கும் சான்றிதழ் ஆகும்.

Legalised Invoice

சில நாடுகளுக்கு Legalised Invoice தேவைப்படுகிறது. இதற்கென்று தனி படிவம் கிடையாது. Commercial Invoice - ஐ பொருட்களை அனுப்பப்படும் நாட்டின் Embassy யிடம் காண்பித்து அதில் கையொப்பம் பெற வேண்டும்.

Shipping Advice

Shipping Advice என்பது பொருட்களை கப்பலில் ஏற்றப்பட்டு விட்டதை இறக்குமதியாளருக்கு தெரிவிக்க பயன்படுத்தும் ஆவணம் ஆகும் , இதில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளின் மொத்த எண்ணிக்கை,ஏற்றப்பட்ட இடம் மற்றும் தேதி, கப்பலின் பெயர், கப்பல் பயணிக்கும் நாட்களின் விவரம் Invoice எண் மற்றும் தேதி, பில் ஆப் லேடிங் எண் மற்றும் தேதி போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.

Shipping Bill

Shipping Bill என்பது ஏற்றுமதியாளர் சுங்கத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஒரு மிக மிக முக்கியமான ஆவணமாகும். இதில் பொருட்களின் விவரம், ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, பொருளை பெறுபவரின் பெயர் மற்றும் முகவரி, கப்பலின் பெயர் மற்றும் முகவரி, பில் ஆப் லேடிங் எண் மற்றும் தேதி, ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் பெயர், பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பு சீட்டு விவரம், பொருட்களின் மொத்த FOB விலை, பணப்பட்டுவாடா முறை, வாடகை மற்றும் காப்பீட்டின் விவரம் அடங்கி இருக்கும்.

Freight Declaration

இறக்குமதியாளர் கப்பலின் வாடகையை செலுத்தி விடுவதாக உறுதியளிக்கும் ஆவணம் இதுவாகும். ஏற்றுமதியாளர் வாடகையை செலுத்தி விடுவதாக இருந்தாலும் கூட இந்த ஆவணத்தின் மூலம் தான் தெரிவிக்க வேண்டும்.

Health Certificate

உணவு வகைகள், விதைகள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி செய்ய Health Department - ல் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

Certificate of Value

பொதுவாக பொருளின் Commercial Invoice - ல் குறிப்பிடப்பட்டிருக்கும் இருப்பினும் சில நாடுகளுக்கு தனியாக Certificate of Value தேவைப்படுகிறது.






போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய
வேண்டுமா... இதைப்படியுங்கள்...!

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல்
முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால்
மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல்
முகவரிகள்
சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ
நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல்
முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும்
சென்று சேராது. இதற்கு காரணம்
ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்திருக்கலாம்
அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல்
விட்டதால் செயலிழந்து இருக்கலாம்.
இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம்
போலியான மின்னஞ்சல்
முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட
மின்னஞ்சல் முகவரி சரியாக
வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத
கண்டறிய நமக்கு ஓர் இணையதளம்
உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க்.

http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த
நீங்கள் அதிக தொழில்நுட்ப
அறிவு பெற்றிருக்க வேண்டிய
அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில்
சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள
காலி கட்டத்தில்,
நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify
Email என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள்
கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா,
இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.
குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால்
அது Valid என்றும், இல்லை என்றால் not Valid
என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட
மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க
தெரிந்து கொள்ள முடியும்.
Photo: போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய
வேண்டுமா... இதைப்படியுங்கள்...!

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல்
முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால்
மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல்
முகவரிகள்
சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ
நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல்
முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும்
சென்று சேராது. இதற்கு காரணம்
ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்திருக்கலாம்
அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல்
விட்டதால் செயலிழந்து இருக்கலாம்.
இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம்
போலியான மின்னஞ்சல்
முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட
மின்னஞ்சல் முகவரி சரியாக
வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத
கண்டறிய நமக்கு ஓர் இணையதளம்
உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க்.

http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த
நீங்கள் அதிக தொழில்நுட்ப
அறிவு பெற்றிருக்க வேண்டிய
அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில்
சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள
காலி கட்டத்தில்,
நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify
Email என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள்
கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா,
இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.
குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால்
அது Valid என்றும், இல்லை என்றால் not Valid
என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட
மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க
தெரிந்து கொள்ள முடியும்.

more information click here
https://www.facebook.com/VgpInternational?fref=ts


ஏற்றுமதி-இறக்குமதி

நம் நாட்டில் தாராளமாக விளையும் அல்லது கிடைக்கும் பொருட்களை வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்வது ஏற்றுமதி ஆகும்.
வெளிநாடுகளில் இருந்தோ அல்லது விலை குறைவாக உள்ள பகுதிகளில் இருந்து நம் தேவைக்காக வாங்குவது இறக்குமதி ஆகும். - இவ்வாறு பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்து கொள்ள உறுதுணையாக இருப்பது கப்பல் போக்குவரத்து ஆகும்.

இந்த கப்பல் துறையினை சேர்ந்த முக்கிய தொழில்கள் :

1. கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்சி (சி.எச்.ஓ)
2. ஷிப் லைனர் (கப்பல் லைனர்)
3. பிரைட் பார்வர்டிங்
4. கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட், ஆகியனவாகும்.

1. கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்சி (CHA):

CHA என்பது சுங்கவரி தொடர்பான நிறுவனம் ஆகும். ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ ஏற்றுமதி (அ) இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் இந்த நிறுவனத்திடம் அனுமதி சான்றிதழ் பெற்றுத்தான் செய்ய முடியும்.

அனுமதி சான்றிதழ் என்பது வாணிபத்தின் போது என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள், அவற்றின் அளவு என்ன, எந்த வகையைச் சேர்நத பொருள் என அனைத்தையும் சரி பார்த்து ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள். அந்த அனுமதி சான்றிதழின்படி பொருட்கள் இருக்கின்றனவா என சரி பார்த்த பின்னர் அந்த பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். இது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய தொழில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் கடத்தல் பொருட்கள் இடம் பெற்றுவிட வாய்ப்புண்டு. அது மாதிரியான பொருட்கள் இடம்பெற்றால் அதற்கு அனுமதி சான்றிதழ் வழங்கிய நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், நிறுவனத்தின் உயர் அதிகாரியாக சுங்க வரித்துறை நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றவரை மட்டுமே நியமிக்க வேண்டும். ஏனெனில் ஏற்றுமதி,இறக்குமதி தொடர்பான அனுமதி சான்றிதழில் இவருடைய கையொப்பம் மட்டுமே இருக்க வேண்டும். இவ்வாறிருந்தால் மட்டுமே CHA நிறுவனம் தொடங்க சுங்கவரித்துறை அனுமதி அளிக்கும்.

2. ஷிப் லைனர் (கப்பல் லைனர்):

பல கப்பல்களை வைத்திருக்கும் ஒருவர், அவற்றை எல்லாம் தானே நிர்வகிக்க இயலாத காரணத்தால்,எனவே உரிமையாளரைப் போல் ஒருவரை நியமிக்க எண்ணுவார். உரிமையாளரைப் போல் அவற்றை நிர்வகிக்கும் பணியை ஏற்று நடத்தும் தொழில் தான் ஷிப் லைனர் தொழில்.

வெளிநாட்டு நிறுவனத்தின் கப்பல்களை நிர்வகிக்க பொறுப்பேற்றுள்ள நிறுவனம், அந்நிறுவனத்தின் கப்பல்கள் தன் நாட்டின் எந்த துறைமுகத்திற்கு வந்தாலும் இவர்களே முழு பொறுப்பேற்று சரக்குளை ஏற்றம் இறக்கும் செய்ய வேண்டும், அத்துடன் கலங்கரை விளக்கு கட்டணம், பைலட்டேஜ் சார்ஜ், போர்ட்யூஸ் சார்ஜ், பெர்த்ஹயர் சார்ஜ் என பல வகை கட்டணங்களை கப்பல்துறைக்கு செலுத்தியாக வேண்டும். இத்தகைய பணிகளை நிர்வகிக்க தேவையான கட்டணங்களை வெளிநாட்டு நிறுவனத்திடமே பெற்றுக் கொள்ளலாம். இத்தொழிலில் கப்பல் ஒருநாள் துறைமுகத்தில் கூடுதலாக நின்றாலும், அதற்கான கட்டணத்தை நிர்வகிக்கும் நிறுவனம் கூடுதலாக செலுத்தியாக வேண்டும். எனவே, இத்தொழில் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய தொழிலாகும்.

3. பிரைட் பார்வர்டிங்:

இத்தொழிலை அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

நம் நாட்டில் விளையும் பொருட்களை, வேறு நாட்டவர் ஒருவர் இறக்குமதி செய்ய நினைத்தால் அதற்கான முழு பொறுப்பையும் பிரைட் பார்வர்டிங் செய்யும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து விடுவார். பொறுப்பேற்ற நிறுவனமே நம் நாட்டு பொருட்கள், இறக்குமதியாளரை சென்று சேரும் வரை உள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும். இத்தகைய பணிகளை செய்வதே பிரைட் பார்வர்டிங் தொழிலாகும்.

4. கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட்:

ஏற்றுமதி இறக்குமதியின் போது சரக்குப் பெட்டிகளை, துறைமுகத்திலிருந்து தொழிற்சாலை கிடங்கிற்கோ அல்லது தொழிற்சாலையிலிருந்து துறைமுகத்திற்கோ கொண்டு செல்வதற்கு சரக்கு பெட்டிகளை ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரிகள் இன்றியமையாதவை. இத்தகைய லாரிகளை வைத்து செய்யப்படும் தொழில் கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட் ஆகும். இது ஏற்றுமதி,இறக்குமதியில் முக்கியமான பணியாகும்.

இந்த முக்கியத் தொழில்கள் தவிர்த்து லாரி மற்றும் டிரெய்லர் வாடகைக்கு விடும் தொழில், கிரேன் தயாரித்தல் மற்றும் அவற்றை வாடகைக்கு விடுதல், கார்கோ கூரியர், பணியாளர் தேர்வு செய்து தருதல் போன்ற எண்ணற்ற தொழில்கள் உள்ளன.


---------------------------------------------------------------------------------------------------------------------------

தென்னை நார் ஏற்றுமதி தொழில் !

சிறுவயதிலேயே பிசினஸ் மீதான ஆர்வத்தால், தென்னை நார் ஏற்றுமதி தொழிலில் வெற்றி பெற்ற, நேருமதி: நான், பட்டுக்கோட்டையை சேர்ந்தவள். பிளஸ் 2 வரை மட்டுமே படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே ஒரு, "பிசினஸ் பெண்மணி'யாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம் திருமணம் முடிந்த பின்னும் குறையவில்லை. ஒரு முறை பேருந்தில் சென்ற போது, வழியில், தேங் காய் நார் உதிர்க்கப்பட்ட தூளை, காயவைத்து கொண்டிருந்தனர். இதில், என்ன தொழில் செய்வர் என்ற ஆர்வத்தால், மறுநாள் அதே இடத்திற்கு சென்றேன். அத்தூளை செங்கல் வடிவத்திற்கு மாற்றி வெளி நாடுகளுக்கு, "எக்ஸ்போர்ட்' செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்தது. உடனே, அந்த முதலாளி வீட்டிற்கு சென்று, அத்தொழில் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டேன். கணவர் உதவியுடன், நார் துண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கினேன். தேங்காய் மட்டையை உடைத்து, கயிறு திரிப்பதற்கான நாரை எடுத்த பிறகு கிடைக்கும் தூளை, இயந்திரத்தில் கொட்டி நன்கு, "பிரஷர்' கொடுத்து அழுத்தினால், செங்கல் துண்டுகள் போன்ற வடிவத்தில் கிடைக்கும். ஒவ்வொரு துண்டும், 5 கிலோ எடை இருக்கும். விவசாய நிலத்தில், இந்த துண்டுகளை உதிர்த்து போட்டு தண்ணீர் பாய்ச்சினால், ஒரு துண்டு, 80 முதல், 90 லிட்டர் நீரை உறிஞ்சி, தன்னுள் வைத்துக் கொள்ளும். இதனால் செடிகளுக்கு, ஆறு மாதத்திற்கு தண்ணீரே தேவைப்படாது. இத்துண்டுகளை, வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடை காலத்தில், மாதத்திற்கு, ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடியும். மழை காலங்களில், சிறு தொய்வு இருக்கும். நார் தயாரிப்பிற்கான அனைத்து வேலைகளையும், பெண்களே செய்கிறோம்; கடந்த, 10 ஆண்டுகளாக இத்தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.


---------------------------------------------------------------------------------------------------------------------- 


ஏற்றுமதி-இறக்குமதி --- அந்நியச் செலாவணியின் பங்கு

அந்நியச் செலாவணி என்றால் என்ன?

இந்தியாவில், நாம் செலவு செய்யும் போது, வெகு சுலபமாக நமது இந்திய ரூபாயில் மதிப்பிட்டு, கணக்கிடுகிறோம். இதே மாதிரி அயல் நாடுகளிடையே வணிகப்பரிமாற்றத்தின் போது ஏற்படும்

நாணய மதிப்பீடே ‘அந்நியச் செலாவணி’ என அழைக்கப் படுகிறது. இந்த அந்நியச் செலாவணியின் மதிப்பீடு ஓவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும். இது நிலையாக இருப்பதில்லை. அன்றாட உலக வர்த்தகத்திற்குத் தகுந்தாற் போல மதிப்பு ஏறும். அல்லது இறங்கும்.

சாதாரணமாக, தனி ஒரு நபரினை இது பாதிப்பது இல்லை. ஆனால், ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப் பட்ட வணிக நிறுவனமாக இருப்பின், நமது ரூபாயின் மதிப்பு மாறுபடுமானால், மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

சில சமயங்களில், நன்றாக நடந்து கொண்டிருந்த வர்த்தகம் நலிவடைந்த நிறுவனமாக மாற நேரிடும்.

ஏற்றுமதி அல்லது இறக்குமதி போன்ற வியாபாரங்கள் பெரும்பாலும், அறிமுகமில்லாத நிறுவனங்களுக்கிடையே நடைபெறுவதில்லை. ஏதாவது ஒரு வகையில் உத்திரவாத அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. இவற்றில் முக்கிய பங்குவகிப்பவர்கள்:

இடைத் தரகர்கள்

சகோதர நிறுவனங்கள் (அவர்களுக்குள் ஏற்கெனவே பரிச்சயமாகி இருந்தால்)

வங்கிகள்

மேற்கண்டபடி வியாபார ஒப்பந்தத்தில் சரக்குகளின் அளவு, தரம், விலை, மற்றும் காலவரம்பு முதலியன தீர்மானிக்கப்பட்டு வரையறுக்கப்படுகின்றது.

சரக்குகள் தயாரான பிறகு, தேவையான அடிப்படை டாகுமென்டுகள் என்னென்ன?
Bill of Exchange எனப்படுகிற உண்டியல் (இது ஒண்ணும் கோயில்களில் காணிக்கை போடுகிற உண்டியல் இல்லீங்க) இதில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள், சரக்குகளுக்கான மதிப்புத் தொகையை கொடுபட வேண்டியதற்கான ஓலை.

Invoice -இதில் அனுப்பும் சரக்கின் அளவு, விலை, தரம், எடை போன்ற தகவல்கள் குறிக்கப் பட்டு,மொத்த சரக்கின் மதிப்பும் கணக்கிட்டு காட்டப் பட்டிருக்கும்.

Certificate of Origin.

Bill of Lading or AirwayBill -அதாவது சரக்கினை கப்பலிலோ அல்லது விமானத்திலோ ஏற்றி அனுப்பியதற்கான அத்தாட்சிச் சான்றிதழ்.

சரக்குகளின் மதிப்புக்குத் தக்கான காப்பீடு சான்றிதழ்

இந்த நிறுவனங்கள் தமது அயல் நாட்டு வர்த்தகங்களை முழுக்க முழுக்க வங்கிகளையே நம்பி ஈடுபடுகிறார்கள். சரக்குகளை ஏற்றுமதி செய்தாலும், அவற்றை வங்கிகளின் ஒப்புதல் இருந்தால்தான், வெளியே எடுத்து வர இயலும். இதற்குத்தான் மேலே சொன்ன டாகுமென்டுகள் உதவுகின்றன.

ஏற்றுமதிகள் இரு வகைகளில் நடைபெறுகிறது. முதலாவது நம்பிக்கையின் பேரில், இரு நிறுவனமும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி சரக்குகளை அனுப்புதல்.

அடுத்தது, Letter of credit அடிப்படையில் அனுப்புவது.

இருவகைகளிலும், சரக்குகளை ஏற்றுமதி செய்த பிறகு, தயாராக இருக்கும் டாகுமென்ட்களை வங்கிகள் மூலமாக அனுப்புவதுதான் சிறந்தது. இதுதான் நடைமுறையிலும் இருக்கிறது. அப்போதுதான், 100% பணத்தினை வரவு செய்ய முடியும்.

முதலாவது வழியில் (அதாவது ஒப்பந்தத்தின் படி) ஏற்றுமதி செய்தால், டாகுமென்டுகளை வங்கி கணக்கில் எடுத்த நாளிலிருந்து 30 நாட்களில் பணம் வந்து விடும்.

Letter of credit ன் அடிப்படையில் ஏற்றுமதி செய்தால், டாகுமென்டுகள் சரியாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக, பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். ஆனால் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு அன்றைய நிலவரப்படி பணமாற்று நிர்ணயிக்கப்படும். இது உலக சந்தையில் நமது ரூபாயின் மதிப்பைப் பொறுத்து அமையும்.

ஏற்றுமதியாளர்களின் பெருங்கவலை, இந்த அந்நியசெலாவணி பணமாற்றம் தான். அது அவர்களுக்கு அனுகூலமாக அமைந்தால் மகிழ்ச்சிதான். (நான் பல ஏற்றுமதியாளர்களின் மலர்ந்த முகங்களை எனது பணியின் போது பார்த்திருக்கிறேன்).

அன்றாட மதிப்பு வேறுபாடு, அந்நிய செலாவணியில் தவிர்க்க முடியாத ஒன்று. இதிலிருந்து மீளும் முகமாகத்தான், “Forward Contract” என்று சொல்லப்படுகின்ற வருங்கால மதிப்பு மாறுபாட்டுக்கான காப்பு வசதியினையும் வங்கிகள் ஏற்படுத்தித் தருகின்றன. இது அந்நிய செலாவணி மதிப்பு மாறுபாட்டால் ஏற்படுத்தும் எதிர்பாராத இழப்பிலிருந்து ஏற்றுமதி/இறக்குமதியாளர்களைக் காக்கின்றது.

அந்நிய செலாவணி நிலவரம் சாதகமாவது போல இருந்தால், அந்த சமயத்திற்குத் தக்கபடி, தம்முடைய செயல்பாட்டினை மாற்றிக்கொள்ளும் நிர்வாகத்திறமையும் அவசியமாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------

ஏற்றுமதி/இறக்குமதி - வங்கிகள் பங்கு என்ன?

சாதாரணமாக, நாம் ஏதாவது ஒரு பொருளை (துணிவகைகள், ப்ரிட்ஜ், டிவி, மிக்ஸி இது போல) வாங்க வேணுமானால், அதற்கான மதிப்பினை, பணமாகவோ, காசோலையாகவோ, கிரெடிட்கார்டு மூலமாகவோ அல்லது கடனிலோ ஈடு செய்கிறோம். இவற்றில் இரண்டாவதாகச் சொன்ன காசோலை கொடுத்து,(தற்போது இது அதிகம் பயன்படுவது இல்லை) பொருட்களை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இந்த மாதிரியான வர்த்தகத்தில், கடைக்காரருக்கு காசோலை பணமாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் வரையில் உத்திரவாதமில்லை. இந்த காசோலை பணமில்லாத காரணத்தினால், திரும்ப நேரிட்டால், அதற்கு உரிய காப்பு நடவடிக்கைகளைச் சட்டப்படி எடுக்க இயலும். (Negotiable Instrument Act - என்ற ஓன்று காசோலைகளின் பரிவர்த்தனைகளைக் கட்டுப் படுத்துகின்றது).

இதே போன்று, வர்த்தக நிறுவனங்களிடையே செய்யப்படுகிற வியாபாரங்களுக்கு ஆதாரமாக இருப்பது டாகுமென்டுகளே. எப்படி காசோலைகளுக்கென்று ஒரு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோ, அதே போன்று, இந்த மாதிரியான வர்த்தகப் பரிமாற்றங்களுக்காகவே,
“Uniform customs and Practice “ எனப்படும் நெறிமுறையினை வங்கிகள் பின்பற்றுகின்றன. இதில், ஏற்றுமதி/இறக்குமதி, எதுவாயினும், ஆதாரமான டாகுமென்டுகள் எப்படி இருக்க வேண்டும், அவை எப்படி நிறுவனங்களையும், சார்ந்துள்ள வங்கிகளையும் கட்டுப்படுத்துகின்றன போன்றவைகள் குறிப்பிடப் பட்டிருக்கும்.

இந்த டாகுமென்டுகள் பெரும்பாலும் சரக்குகளை வாங்கும் நிறுவனத்தின் பேரில்தான் வரையப்படும். எனவே, இதனை, சரக்குகள் ஏற்றுமதி செய்த பிறகு, நேரிடையாக அந்த நிறுவனத்துக்கே அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அயல் நாட்டில், இந்த நிறுவனமானது, டாக்குமென்டுகள் வந்து சேர்ந்ததுமே, சரக்குகளை வெகு சுலபமாக துறைமுகத்திலிருந்து தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு விடும்.அதன் பிறகு, அவர்கள் மனம் வைத்து சரக்குகளுக்கான மதிப்புத்தொகையை, ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்பினால்தான் உண்டு.
இது, எவ்வாறு நிச்சயம்? சரக்குகளைக் கைப்பற்றிய பிறகு, எந்த நிறுவனம் பணத்தை செட்டில் (settle) செய்ய முன் வரும்?
ஆகவே, ஏற்றுமதியோ அல்லது, இறக்குமதியோ எதுவாக இருந்தாலும், டாகுமென்டுகளை வங்கிகள் மூலம் அனுப்புவதே சிறந்த முறையாகும்.

வங்கிகள் மூலம் அனுப்புவதால் என்ன பயன்? வங்கிகள் இந்த டாகுமென்டுகளை எப்படி கையாளுகின்றன?

இந்தியாவிலிருந்த, ஒரு ஏற்றுமதி நிறுவனம் (A)என்று குறிப்பிடுவோம்.
அயல் நாட்டு நிறுவனத்தை (B) என்று கொள்வோம்.
A நிறுவனம், ஒப்பந்தத்தின் பேரில், சரக்குகளைத் தயார் செய்து, அவற்றை Bயின் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த உடன், அதற்கான டாக்குமென்டுகளை, தனது வங்கியிடம் ஒப்படைக்கிறது.
வங்கியில் இந்த டாக்குமென்டுகளை, தனது புத்தகத்தில் அதற்குரிய பிரிவிற்கேற்ப தொடர்ச்சி எண்களை பதிவு செய்கிறது. கூடவே சம்பந்தப்பட்ட எல்லா டாக்குமென்டுகளிலும் தனது வங்கி முத்திரையைப்பதித்து, அந்த எண்ணினை அவற்றில் குறிப்பிடுகின்றது. இவ்வாறு செய்வதால், டாக்குமென்டுகளில் அந்த வங்கியின் அதிகாரம் இல்லாமல் எவரும் எதுவும் செய்ய இயலாது. குறிப்பாக,சரக்குகளை ஏற்றுமதி செய்ததற்கான டாகுமென்டில் (Shipping bill – Bill of lading or Air way bill) வங்கியின் ஒப்புதல் இருந்தால்தான், B நிறுவனமானது சரக்குகளை, துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.

ஆகவே, B நிறுவனமானது, சரக்குகளின் மதிப்பு மற்றும் வங்கிகள் குறிப்பிடும் இதர சிலவுகளுக்கான தொகையையும் சேர்த்து செலுத்திய பிறகே, டாகுமென்டுகளை சரியான வகையில் வங்கிகளின் ஒப்புதல் பெற்று, சரக்குகளைக் கைப்பற்ற முடியும். அவ்வாறு B நிறுவனம் செலுத்திய
பணமானது, வங்கிகளிடையே புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டு, வங்கிகள் மூலமாகவே, ஏற்றுமதி
செய்த A நிறுவனத்தின் கணக்கில் கொண்டுவரப் படுகிறது.

ஏற்றுமதி/இறக்குமதி, இவ்விரண்டிலுமே டாக்குமென்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உடலுக்கு உயிர் போல, டாக்குமென்டுகள் செயல்படுகிறது. டாக்குமென்டுகளில், ஏதாவது
தவறு இருந்தால், வங்கிகளும், தொடர்புடைய நிறுவனங்களும், சரக்குகளுக்கான மதிப்புத்
தொகையை தருவதில் சிக்கல்கள் ஏற்படும். அதனால்தான், வங்கிகள் தமது வாடிக்கையாளரின் நலனை மனதில் கொண்டு, தம்மிடம் ஓப்படைக்கப்படுகின்ற டாகுமென்டுகளை, மிக கவனத்துடன் பரிசீலனை செய்து அவற்றில் தவறுகளோ அல்லது மேலும் ஏதாவது டாகுமென்டுகள் தேவையானாலோ, தகுந்த ஆலோசனைகளைக் கூறி, ஆரம்பக் கட்டத்திலேயே நிவர்த்தி செய்கின்றனர்.





விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி?

பொதுவாக அரசாங்கம் மக்களுக்கும் வழங்கும் சலுகைகைகள்,நல திட்டங்கள் போன்றவைகள் மக்களுக்கு சரியாக சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு,இதற்கு மக்களின் அறியாமையும்,அதிகாரிகளின் அலட்சிய போக்கும் தான் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தான் நம் ஆட்கள் முக்கியமான விஷயங்களில் கோட்டை விட்டு விட்டு,கலர் டிவி வாங்கவும்,வேட்டி சேலை வாங்கவும் முண்டியடித்து முதலிடம் பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி மக்களின் அறியாமையாலும், அரசு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறியதாலும் தான் மத்திய அரசால் 1986-ம் தொடங்கப்பட்ட “விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவி பொருட்கள் ஏற்றுமதி அமைப்பு” (APEDA The Agricultural and processed food products export development Authority ” என்ற ஒன்றே இருப்பது நமது மக்கள் பலருக்கு தெரியாமல் போய்விட்டது. உற்று கவனித்து இருந்தால், கருப்பு வெள்ளை விளம்பரமாக தினசரி செய்திதாள்களின் ஏதவாது ஒரு மூலையில் இதை பற்றிய செய்தி இருக்கும்.
21 - vazhikatti produts
தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்புவோர் தங்கள் வைத்துள்ள பொருட்களை பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்து வைத்துகொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட பொருள்களுக்கான தேவையோடு ஏதவாது வெளிநாட்டு நிறுவனங்கள் இவர்களை தொடர்பு கொண்டால் ,இவர்கள் நம்மை தொடர்புகொண்டு வைத்துள்ள பொருள், அளவு ,தரம் போன்றவற்றை பரிசோதித்து ,பிறகு பொருள்களை ஏற்றுமதி செய்யவும் உதவி செய்வார்கள்.

ஏற்றுமதிக்கு புதிதாக உள்ள நபர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும்படியாக மானிய தொகைகளும் வழங்கபடுகிறது.காய்கறி,பழங்கள் ,பூக்கள்,பதபடுதபட்ட பழச்சாறுகள்,அரிசி,கோதுமை,நிலகடலை,வெல்லம், பால் பொருட்கள்,தேன் , உலர் பழங்கள் போன்றவைகளின் தேவைகள் எந்தெந்த நாடுகளில் உள்ளது போன்ற தகவல்களை இந்த அலுவலகத்தை அணுகி தகவல் பெறலாம்.

இதன் அலுவலகங்கள் மும்பை, கொல்கத்தா ,ஐதராபாத்,பெங்களூர் போன்ற இடங்களில் இயங்கி வருகிறது.தமிழ்நாடு, கேரளா மாநில மக்களுக்கு தொடர்புக்கு பெங்களூர் அலுவலகம்

முகவரி

Regional Incharge,
Agriculture and processed food products,
Export development authority,
12/1/1, Palace cross road,

bangalore – 560 020

Telephone : 080-23343425

080-23368272

ஏற்றுமதி தொடர்பான அனைத்து தகவல்களையும் மேலே சொன்ன தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு பெறலாம்.


--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய திராட்சைக்குநெதர்லாந்தில் கிராக்கி

புதுடில்லி:இந்தியாவின் சுவை மிகுந்த திராட்சைகள், நெதர்லாந்து மக்களை வசியப்படுத்தி உள்ளன. அவர்கள், சந்தைகளில், இந்திய திராட்சைகளை விரும்பிக் கேட்டு வாங்கிச் செல்கின்றனர். இதனால், வர்த்தகர்கள், அதிக அளவில் இந்திய திராட்சைகளை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளனர்.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து, 325 கோடி ரூபாய் மதிப்பிலான திராட்சைகளை, நெதர்லாந்து இறக்குமதி செய்துள்ளது.
அதே சமயம், மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் திராட்சை ஏற்றுமதியில், நெதர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.இரண்டாவது இடத்தை, ஐக்கிய அரபு நாடுகளும் (157 கோடி ரூபாய்), மூன்றாவது இடத்தை, இங்கிலாந்தும் (156 கோடி ரூபாய்) பிடித்துள்ளன.அடுத்த இடங்களில், ரஷ்யா (131 கோடி), சவுதி அரேபியா (67 கோடி), வங்கதேசம் (61 கோடி), தாய்லாந்து (34 கோடி), ஸ்வீடன் (34 கோடி), எகிப்து (23 கோடி), இலங்கை (21 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.
இந்தியாவின் திராட்சை ஏற்றுமதி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் திராட்சை ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 1,259 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, முந்தைய 2011-12 மற்றும் 2010-11ம் நிதியாண்டுகளில், முறையே, 603 கோடி ரூபாய் மற்றும், 428 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.


-----------------------------------------------------------------------------------------------------------------------

ஏற்றுமதிக்கு உதவும் நண்பன்

ஏற்றுமதிக்கு மிகவும் உதவுவது வாங்குபவர், விற்பவர் சந்திப்பு தான். கன்பெடரேஷன் ஆப் இந்தியன் இண்டஸ்டிரி அடிக்கடி இது போல வாங்குபவர், விற்பவர் சந்திப்புக்களை நடத்துக்கிறது. அதில் நீங்களும் கலந்து கொண்டால் அது உங்கள் வியாபாரத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும். சி.ஐ.ஐ. யின் மேற்கு பிராந்திய பிரிவு சென்ற வருடம் மட்டும் 5 சந்திப்புக்களை நடத்தியுள்ளது, 400 குறுந்தொழில் செய்பவர்கள் பங்கு பெற்றனர். அடிக்கடி இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள், வெற்றி பெறுங்கள்.


--------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி

நாங்கள் இறக்குமதி செய்த பொருளை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றோம். எங்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்?

பதில்

நீங்கள் இறக்குமதி செய்த பொருளைத் அப்படியே ஏற்றுமதி செய்தால், இறக்குமதி செய்த போது கட்டிய கஸடம்ஸ் டியூட்டியை திரும்ப பெறலாம். இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு தான் எக்சைஸ் டியூட்டி கட்ட வேண்டும். நீங்கள் இறக்குமதி செய்த பொருளை இந்தியாவில் உபயோகப்படுத்தாமல் அப்படியே ஏற்றுமதி செய்தால் எக்சைஸ் டியூட்டியும் கட்ட வேண்டாம்.


----------------------------------------------------------------------------------------------------------------

      கேள்வி
ஆங்கில பேப்பர்களில் அமெரிக்க டாலரின் மதிப்பை போடும் போது பல மாதிரி குறிப்பிடுகின்றனர். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது. எந்த ரேட் நமக்கு கிடைக்கும்?

பதில்:
ஏற்றுமதி செய்து பணத்தை நீங்கள் பெற்றிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு டி.டி. பையிங் என்ற ரேட் வழங்கப்படும். அதாவது உங்களுக்கு டெலிகிராப் டிரான்ஸபராக (டி.டி) வந்துள்ள டாலரை அவர்கள் (பையிங்) செய்து கொள்கிறார்கள் என்று அர்த்தம். இது தவிர பில் பையிங் என்று ஒன்று இருக்கும். அதாவது நீங்கள் ஏற்றுமதி டாக்குமெண்டை சமர்பிக்கும் போதே வங்கியில் டிஸகவுண்ட் செய்து பணத்தை கேட்டால் அப்போது பில் பையிங் ரேட் அப்ளை செய்வார்கள். உங்கள் ஏற்றுமதி பணம் கரன்சியாக உங்களிடம் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு கரன்சி பையிங் ரேட் அப்ளை செய்வார்கள்.


---------------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி
சென்ற வார கேள்வியை தொடர்ந்து, ஏற்றுமதி பணம் டிமாண்ட் டிராப்டாக அல்லது செக்காக வரும் போது என்ன ரேட் தருவார்கள் வங்கியில் என்று பலர் கேட்டுள்ளார்கள். நல்ல கேள்வி.

பதில்

ஏற்றுமதிக்கு பணம் சாதாரணமாக வங்கி மூலம் டி.டி. (டெலிகிராபிக் டிரான்ஸ்பர்) ஆகத்தான் வரும். டிமாண்ட் டிராப்ட் அல்லது செக்காக வரும் பட்சத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது, அது போலியாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே, அந்த டிமாண்ட் டிராப்ட் அல்லது செக் மாறி உங்கள் அக்கவுண்டில் பணமாக வரும் வரை சரக்குகளை ஏற்றி அனுப்பி விட வேண்டாம். அப்படி பணமாக மாறி உங்கள் அக்கவுண்ட்க்கு வரும் பட்சத்தில் உங்களுக்கு டி.டி. பையிங் (அதாவது டெலிகிராபிக் டிரான்ஸ்பர் பையிங்) என்ற ரேட்டே கிடைக்கும்.


---------------------------------------------------------------------------------------------------------------------

ஏற்றுமதி இன்ஸபெக்ஷன்

ஏற்றுமதி இன்ஸ்பெக்ஷன் செய்வதற்கு இந்தியாவில் பல அரசாங்க இன்ஸ்பெக்ஷன் நிலையங்கள் இருக்கின்றன. சில சமயம் பல வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் வெளிநாட்டை சேர்ந்த இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சிகளை குறிப்பிடுவார்கள். இதில் இரண்டு ஏஜென்சிகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று SGS, இன்னொன்று Lloyd's Register Inpsection Agency. இவை இரண்டும் உலகப் புகழ் பெற்ற இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சிகள். இவை இந்தியாவில் பல இடங்களில் தங்கள் அலுவலகத்தை வைத்துள்ளன.


---------------------------------------------------------------------------------------------------------------------