Wednesday, December 18, 2013

EXPORT PART 2


ஏற்றுமதிக்கான ஆவணங்கள் (Export Documents)

Export Order

ஏற்றுமதி ஆணை என்பது ஏற்றுமதியாளருக்கும், இறக்குமதியாளருக்கும் முதல் முக்கிய வர்த்தக ஆவணமாகும். இந்த ஆவணம் ஏற்றுமதியாளருக்கும், இறக்குமதியாளருக்கும் மட்டும் முக்கியாமனவை அல்ல இரு நாட்டிற்கும் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இது இருநாட்டின் அந்நிய செலவாணியில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஏற்றுமதியாளர் இந்த ஆவணத்தை பல்வேறு வர்த்தக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவை,

பல்வேறு அரசு அலுவலகம்.
நிதித் துறை.
கட்டுப்படுத்தப்பட்ட பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் அதற்கான உரிமத்தை பெறும் போது சமர்ப்பிக்க வேண்டும்.
முன் பணம் பெறும் போது.
சுங்கத்துறையிடம்.
பொருட்களை பரிசோதிக்கும் பொழுது.
காப்பீட்டு அலுவலகம்.
இன்னும் பல அலுவலகத்தில் இந்த ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும்.

Order Acceptance

ஏற்றுமதிக்கான ஆணையை பெற்றவுடன் ஏற்றுமதியாளர் ஏற்றுமதிக்கான ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களுக்கு ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் ஏற்றுமதியாளரால் தயாரிக்கப்படும் ஒரு முக்கிய ஆவணம் இதுவாகும். இதில் அவசியம் ஏற்பட்டால் இறக்குமதியாளரின் கையொப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த ஆவணத்தில் இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, பொருட்களை பெறும் நபரின் பெயர் மற்றும் முகவரி, ஏற்றுமதி செய்யப்படும் இடம், பொருள் இறுதியாக சென்றடையும் இடத்தின் முகவரி, பொருளை பற்றி விவரம், பொருட்களின் விலை மற்றும் எடை, பேக்கிங் மற்றும் குறிப்பு சீட்டின் முறை, பணப்பட்டுவாடா முறை மற்றும் பொருட்களுக்கான காப்பீடு ஆகிய விவரங்கள் உள்ளடங்கி இருக்கும்.

Letter of Credit

Letter of Credit என்பது ஏற்றுமதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை பெற்றுக்கொள்ள, இறக்குமதியாளரின் வங்கி, பணத்திற்கான உறுதியை அளிக்கும் ஒரு ஆவணமாகும். இதனைப்பற்றிய விரிவான விவரங்களை நாம் ஏற்கனவே படித்துள்ளோம்.

Mate\'s Receipt

Mate\'s Receipt என்பது பொருட்களை கப்பலில் ஏற்றப்பட்ட பின் கப்பலின் தலைமை மாலுமியால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். கப்பலின் பெயர், ஏற்றப்பட்ட இடம், பொருள் சென்றடையும் இடம், பொருளின் முழு விவரம், எடை மற்றும் மதிப்பு, பொருள் ஏற்றப்பட்ட கண்டெய்னரின் விவரம் இந்த Mate\'s Receipt - ல் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த Mate\'s Receipt - ஐ பெற்றவுடன் கப்பலின் அலுவலகம் அல்லது முகவரிடம் கொடுத்து Bill of Lading - ஐ பெற்றுக் கொள்ள வேண்டும்.

Bill of Lading

Bill of Lading என்பது பொருட்களை கடல் வழியாக கொண்டு செல்லும் போது கப்பலின் அலுவலகம் வழங்கும் ஒரு ஆவணமாகும். பொருட்களை கப்பலில் ஏற்பட்டதிற்கு ஆதாரமாக கப்பலின் தலைமை மாலுமியால் வழங்கப்பட்ட Mate\'s Receipt - ஐ பெற்றுக்கொண்டு Bill of Lading - ஐ கப்பலின் அலுவலகம் வழங்கும்.

Post Parcel Receipt

Post Parcel Receipt என்பது அஞ்சல் வழியாக பொருட்களை அனுப்ப அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் ஆவணமாகும். அவ்வாறு அனுப்பப்படும் பொருளை நேரடியாக இறக்குமதியாளரின் முகவரிக்கு அனுப்பினால் இறக்குமதியாளர் பொருட்களை பெற்றுக்கொண்டு பணத்தை செலுத்த தவறலாம். அதனால் பொருட்களை அனுப்பும் பொழுது இறக்குமதியாளரின் வங்கி முகவரிக்கு அனுப்புவது சிறந்ததாகும்.

Insurance Policy / Certificate

பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது ஏற்படும் பலவகையான ஆபத்தால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க பொருட்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேருவதின் மூலம், காப்பீட்டு கழகத்தால் வழங்கும் ஆவணமாகும்.

Certificate of Origin

Certificate of Origin என்பது பொருட்கள் இந்நாட்டில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று Champers of Commerce - ஆல் வழங்கப்படும் ஒரு சான்றிதழ் ஆகும். இந்த சான்றிதழை வழங்க பல வகையான அலுவலகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Manufacturer Certificate

சில குறிப்பிட்ட நாடுகளுக்கு தயாரிப்பு சான்றிதழ் ( Manufacturer Certificate ) தேவைப்படுகிறது. அதாவது பொருட்கள் முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டதா ? என்பதை விளக்கும் சான்றிதழ் ஆகும்.

GSP Certificate ( Generalized System of Preferences )

இந்தியா போன்ற வளரும் நாடுகளால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு EEC நாடுகளால் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரிச்சலுகையை பெற GCP Certificate மிக முக்கியமாகும்.

Certificate of Inspection

தரக்கட்டுப்பாட்டால் பொருட்களை ஏற்றுமதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் பரிசோதித்து வழங்கப்படும் ஒரு ஆவணமாகும்.

Anriquity Certificate

பழமையான பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால் தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தால் வழங்கப்படும் ஒரு சான்றிதழ் Anriquity Certificate ஆகும்.

Packing List / Note

Packing List / Note என்பது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, இன்வாய்ஸ் எண், ஆர்டர் எண், கப்பலின் விவரம், பில் ஆப் லேடிங் ( Bill of Lading ) எண், பொருட்களின் விவரம் போன்ற விவரங்கள் அடங்கிய ஆவணமாகும்.

Certificate of Measurement

பொதுவாக பொருட்களை வாகனத்தில் ஏற்றிச் செல்ல ஏற்றுமதியாளர் தெரிவிக்கும் பொருட்களின் மொத்த எடை அல்லது அளவுகளின் அடிப்படையில் தான் வாடகை வசூலிக்கப்படும். இருப்பினும் Champer of Commerce - ல் அல்லது அனுமதி பெற்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழில் கப்பலின் பெயர், சரக்கு சென்றடையும் இடத்தின் விவரம், சரக்கின் மொத்த எடை, நீளம், அகலம் மற்றும் ஆழம் ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்.

Shipping Order

Shipping Order என்பது பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்வதற்கு முன்பதிவு அவசியமாக செய்யும் பொருட்டு கப்பலின் அலுவலகம் வழங்கும் ஆவணமாகும்.

Commercial Invoice

Commercial Invoice என்பது ஏற்றுமதியாளரால் தயார் செய்து வழங்கப்படும் ஆவணமாகும். இதில் பொருட்களின் விவரம், ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, பொருளை பெறுபவரின் பெயர் மற்றும் முகவரி, கப்பலின் பெயர் மற்றும் முகவரி, பில் ஆப் லேடிங் எண் மற்றும் தேதி, ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் பெயர், பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பு சீட்டு விவரம், பொருட்களின் மொத்த விலை வாடகை மற்றும் காப்பீட்டின் விவரம் அடங்கியிருக்கும்.

Custom Invoice

USA , கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு Custom Invoice தேவைப்படுகிறது. இது ஏற்றுமதியாளரால் வழங்கும் சான்றிதழ் ஆகும்.

Legalised Invoice

சில நாடுகளுக்கு Legalised Invoice தேவைப்படுகிறது. இதற்கென்று தனி படிவம் கிடையாது. Commercial Invoice - ஐ பொருட்களை அனுப்பப்படும் நாட்டின் Embassy யிடம் காண்பித்து அதில் கையொப்பம் பெற வேண்டும்.

Shipping Advice

Shipping Advice என்பது பொருட்களை கப்பலில் ஏற்றப்பட்டு விட்டதை இறக்குமதியாளருக்கு தெரிவிக்க பயன்படுத்தும் ஆவணம் ஆகும் , இதில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருளின் மொத்த எண்ணிக்கை,ஏற்றப்பட்ட இடம் மற்றும் தேதி, கப்பலின் பெயர், கப்பல் பயணிக்கும் நாட்களின் விவரம் Invoice எண் மற்றும் தேதி, பில் ஆப் லேடிங் எண் மற்றும் தேதி போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.

Shipping Bill

Shipping Bill என்பது ஏற்றுமதியாளர் சுங்கத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஒரு மிக மிக முக்கியமான ஆவணமாகும். இதில் பொருட்களின் விவரம், ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, பொருளை பெறுபவரின் பெயர் மற்றும் முகவரி, கப்பலின் பெயர் மற்றும் முகவரி, பில் ஆப் லேடிங் எண் மற்றும் தேதி, ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் பெயர், பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பு சீட்டு விவரம், பொருட்களின் மொத்த FOB விலை, பணப்பட்டுவாடா முறை, வாடகை மற்றும் காப்பீட்டின் விவரம் அடங்கி இருக்கும்.

Freight Declaration

இறக்குமதியாளர் கப்பலின் வாடகையை செலுத்தி விடுவதாக உறுதியளிக்கும் ஆவணம் இதுவாகும். ஏற்றுமதியாளர் வாடகையை செலுத்தி விடுவதாக இருந்தாலும் கூட இந்த ஆவணத்தின் மூலம் தான் தெரிவிக்க வேண்டும்.

Health Certificate

உணவு வகைகள், விதைகள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி செய்ய Health Department - ல் இருந்து சான்றிதழ் பெற வேண்டும்.

Certificate of Value

பொதுவாக பொருளின் Commercial Invoice - ல் குறிப்பிடப்பட்டிருக்கும் இருப்பினும் சில நாடுகளுக்கு தனியாக Certificate of Value தேவைப்படுகிறது.






போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய
வேண்டுமா... இதைப்படியுங்கள்...!

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல்
முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால்
மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல்
முகவரிகள்
சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ
நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல்
முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும்
சென்று சேராது. இதற்கு காரணம்
ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்திருக்கலாம்
அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல்
விட்டதால் செயலிழந்து இருக்கலாம்.
இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம்
போலியான மின்னஞ்சல்
முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட
மின்னஞ்சல் முகவரி சரியாக
வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத
கண்டறிய நமக்கு ஓர் இணையதளம்
உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க்.

http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த
நீங்கள் அதிக தொழில்நுட்ப
அறிவு பெற்றிருக்க வேண்டிய
அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில்
சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள
காலி கட்டத்தில்,
நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify
Email என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள்
கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா,
இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.
குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால்
அது Valid என்றும், இல்லை என்றால் not Valid
என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட
மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க
தெரிந்து கொள்ள முடியும்.
Photo: போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய
வேண்டுமா... இதைப்படியுங்கள்...!

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல்
முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால்
மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல்
முகவரிகள்
சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ
நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல்
முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும்
சென்று சேராது. இதற்கு காரணம்
ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்திருக்கலாம்
அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல்
விட்டதால் செயலிழந்து இருக்கலாம்.
இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம்
போலியான மின்னஞ்சல்
முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட
மின்னஞ்சல் முகவரி சரியாக
வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத
கண்டறிய நமக்கு ஓர் இணையதளம்
உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கான லிங்க்.

http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த
நீங்கள் அதிக தொழில்நுட்ப
அறிவு பெற்றிருக்க வேண்டிய
அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில்
சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள
காலி கட்டத்தில்,
நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல்
முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify
Email என்ற பட்டனை அழுத்தவும்.
நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள்
கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா,
இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.
குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால்
அது Valid என்றும், இல்லை என்றால் not Valid
என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட
மின்னஞ்சல்
சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க
தெரிந்து கொள்ள முடியும்.

more information click here
https://www.facebook.com/VgpInternational?fref=ts


ஏற்றுமதி-இறக்குமதி

நம் நாட்டில் தாராளமாக விளையும் அல்லது கிடைக்கும் பொருட்களை வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்வது ஏற்றுமதி ஆகும்.
வெளிநாடுகளில் இருந்தோ அல்லது விலை குறைவாக உள்ள பகுதிகளில் இருந்து நம் தேவைக்காக வாங்குவது இறக்குமதி ஆகும். - இவ்வாறு பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்து கொள்ள உறுதுணையாக இருப்பது கப்பல் போக்குவரத்து ஆகும்.

இந்த கப்பல் துறையினை சேர்ந்த முக்கிய தொழில்கள் :

1. கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்சி (சி.எச்.ஓ)
2. ஷிப் லைனர் (கப்பல் லைனர்)
3. பிரைட் பார்வர்டிங்
4. கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட், ஆகியனவாகும்.

1. கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்சி (CHA):

CHA என்பது சுங்கவரி தொடர்பான நிறுவனம் ஆகும். ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ ஏற்றுமதி (அ) இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் இந்த நிறுவனத்திடம் அனுமதி சான்றிதழ் பெற்றுத்தான் செய்ய முடியும்.

அனுமதி சான்றிதழ் என்பது வாணிபத்தின் போது என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள், அவற்றின் அளவு என்ன, எந்த வகையைச் சேர்நத பொருள் என அனைத்தையும் சரி பார்த்து ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள். அந்த அனுமதி சான்றிதழின்படி பொருட்கள் இருக்கின்றனவா என சரி பார்த்த பின்னர் அந்த பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். இது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய தொழில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் கடத்தல் பொருட்கள் இடம் பெற்றுவிட வாய்ப்புண்டு. அது மாதிரியான பொருட்கள் இடம்பெற்றால் அதற்கு அனுமதி சான்றிதழ் வழங்கிய நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், நிறுவனத்தின் உயர் அதிகாரியாக சுங்க வரித்துறை நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றவரை மட்டுமே நியமிக்க வேண்டும். ஏனெனில் ஏற்றுமதி,இறக்குமதி தொடர்பான அனுமதி சான்றிதழில் இவருடைய கையொப்பம் மட்டுமே இருக்க வேண்டும். இவ்வாறிருந்தால் மட்டுமே CHA நிறுவனம் தொடங்க சுங்கவரித்துறை அனுமதி அளிக்கும்.

2. ஷிப் லைனர் (கப்பல் லைனர்):

பல கப்பல்களை வைத்திருக்கும் ஒருவர், அவற்றை எல்லாம் தானே நிர்வகிக்க இயலாத காரணத்தால்,எனவே உரிமையாளரைப் போல் ஒருவரை நியமிக்க எண்ணுவார். உரிமையாளரைப் போல் அவற்றை நிர்வகிக்கும் பணியை ஏற்று நடத்தும் தொழில் தான் ஷிப் லைனர் தொழில்.

வெளிநாட்டு நிறுவனத்தின் கப்பல்களை நிர்வகிக்க பொறுப்பேற்றுள்ள நிறுவனம், அந்நிறுவனத்தின் கப்பல்கள் தன் நாட்டின் எந்த துறைமுகத்திற்கு வந்தாலும் இவர்களே முழு பொறுப்பேற்று சரக்குளை ஏற்றம் இறக்கும் செய்ய வேண்டும், அத்துடன் கலங்கரை விளக்கு கட்டணம், பைலட்டேஜ் சார்ஜ், போர்ட்யூஸ் சார்ஜ், பெர்த்ஹயர் சார்ஜ் என பல வகை கட்டணங்களை கப்பல்துறைக்கு செலுத்தியாக வேண்டும். இத்தகைய பணிகளை நிர்வகிக்க தேவையான கட்டணங்களை வெளிநாட்டு நிறுவனத்திடமே பெற்றுக் கொள்ளலாம். இத்தொழிலில் கப்பல் ஒருநாள் துறைமுகத்தில் கூடுதலாக நின்றாலும், அதற்கான கட்டணத்தை நிர்வகிக்கும் நிறுவனம் கூடுதலாக செலுத்தியாக வேண்டும். எனவே, இத்தொழில் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய தொழிலாகும்.

3. பிரைட் பார்வர்டிங்:

இத்தொழிலை அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே சிறப்பாக மேற்கொள்ள முடியும்.

நம் நாட்டில் விளையும் பொருட்களை, வேறு நாட்டவர் ஒருவர் இறக்குமதி செய்ய நினைத்தால் அதற்கான முழு பொறுப்பையும் பிரைட் பார்வர்டிங் செய்யும் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து விடுவார். பொறுப்பேற்ற நிறுவனமே நம் நாட்டு பொருட்கள், இறக்குமதியாளரை சென்று சேரும் வரை உள்ள அனைத்து வேலைகளையும் கவனிக்க வேண்டும். இத்தகைய பணிகளை செய்வதே பிரைட் பார்வர்டிங் தொழிலாகும்.

4. கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட்:

ஏற்றுமதி இறக்குமதியின் போது சரக்குப் பெட்டிகளை, துறைமுகத்திலிருந்து தொழிற்சாலை கிடங்கிற்கோ அல்லது தொழிற்சாலையிலிருந்து துறைமுகத்திற்கோ கொண்டு செல்வதற்கு சரக்கு பெட்டிகளை ஏற்றிச்செல்லும் கன்டெய்னர் லாரிகள் இன்றியமையாதவை. இத்தகைய லாரிகளை வைத்து செய்யப்படும் தொழில் கன்டெய்னர் டிரான்ஸ்போர்ட் ஆகும். இது ஏற்றுமதி,இறக்குமதியில் முக்கியமான பணியாகும்.

இந்த முக்கியத் தொழில்கள் தவிர்த்து லாரி மற்றும் டிரெய்லர் வாடகைக்கு விடும் தொழில், கிரேன் தயாரித்தல் மற்றும் அவற்றை வாடகைக்கு விடுதல், கார்கோ கூரியர், பணியாளர் தேர்வு செய்து தருதல் போன்ற எண்ணற்ற தொழில்கள் உள்ளன.


---------------------------------------------------------------------------------------------------------------------------

தென்னை நார் ஏற்றுமதி தொழில் !

சிறுவயதிலேயே பிசினஸ் மீதான ஆர்வத்தால், தென்னை நார் ஏற்றுமதி தொழிலில் வெற்றி பெற்ற, நேருமதி: நான், பட்டுக்கோட்டையை சேர்ந்தவள். பிளஸ் 2 வரை மட்டுமே படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே ஒரு, "பிசினஸ் பெண்மணி'யாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வம் திருமணம் முடிந்த பின்னும் குறையவில்லை. ஒரு முறை பேருந்தில் சென்ற போது, வழியில், தேங் காய் நார் உதிர்க்கப்பட்ட தூளை, காயவைத்து கொண்டிருந்தனர். இதில், என்ன தொழில் செய்வர் என்ற ஆர்வத்தால், மறுநாள் அதே இடத்திற்கு சென்றேன். அத்தூளை செங்கல் வடிவத்திற்கு மாற்றி வெளி நாடுகளுக்கு, "எக்ஸ்போர்ட்' செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்தது. உடனே, அந்த முதலாளி வீட்டிற்கு சென்று, அத்தொழில் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டேன். கணவர் உதவியுடன், நார் துண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கினேன். தேங்காய் மட்டையை உடைத்து, கயிறு திரிப்பதற்கான நாரை எடுத்த பிறகு கிடைக்கும் தூளை, இயந்திரத்தில் கொட்டி நன்கு, "பிரஷர்' கொடுத்து அழுத்தினால், செங்கல் துண்டுகள் போன்ற வடிவத்தில் கிடைக்கும். ஒவ்வொரு துண்டும், 5 கிலோ எடை இருக்கும். விவசாய நிலத்தில், இந்த துண்டுகளை உதிர்த்து போட்டு தண்ணீர் பாய்ச்சினால், ஒரு துண்டு, 80 முதல், 90 லிட்டர் நீரை உறிஞ்சி, தன்னுள் வைத்துக் கொள்ளும். இதனால் செடிகளுக்கு, ஆறு மாதத்திற்கு தண்ணீரே தேவைப்படாது. இத்துண்டுகளை, வெளிநாடுகளுக்கே அதிகம் ஏற்றுமதி செய்கிறோம். மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடை காலத்தில், மாதத்திற்கு, ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடியும். மழை காலங்களில், சிறு தொய்வு இருக்கும். நார் தயாரிப்பிற்கான அனைத்து வேலைகளையும், பெண்களே செய்கிறோம்; கடந்த, 10 ஆண்டுகளாக இத்தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்.


---------------------------------------------------------------------------------------------------------------------- 


ஏற்றுமதி-இறக்குமதி --- அந்நியச் செலாவணியின் பங்கு

அந்நியச் செலாவணி என்றால் என்ன?

இந்தியாவில், நாம் செலவு செய்யும் போது, வெகு சுலபமாக நமது இந்திய ரூபாயில் மதிப்பிட்டு, கணக்கிடுகிறோம். இதே மாதிரி அயல் நாடுகளிடையே வணிகப்பரிமாற்றத்தின் போது ஏற்படும்

நாணய மதிப்பீடே ‘அந்நியச் செலாவணி’ என அழைக்கப் படுகிறது. இந்த அந்நியச் செலாவணியின் மதிப்பீடு ஓவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும். இது நிலையாக இருப்பதில்லை. அன்றாட உலக வர்த்தகத்திற்குத் தகுந்தாற் போல மதிப்பு ஏறும். அல்லது இறங்கும்.

சாதாரணமாக, தனி ஒரு நபரினை இது பாதிப்பது இல்லை. ஆனால், ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப் பட்ட வணிக நிறுவனமாக இருப்பின், நமது ரூபாயின் மதிப்பு மாறுபடுமானால், மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

சில சமயங்களில், நன்றாக நடந்து கொண்டிருந்த வர்த்தகம் நலிவடைந்த நிறுவனமாக மாற நேரிடும்.

ஏற்றுமதி அல்லது இறக்குமதி போன்ற வியாபாரங்கள் பெரும்பாலும், அறிமுகமில்லாத நிறுவனங்களுக்கிடையே நடைபெறுவதில்லை. ஏதாவது ஒரு வகையில் உத்திரவாத அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. இவற்றில் முக்கிய பங்குவகிப்பவர்கள்:

இடைத் தரகர்கள்

சகோதர நிறுவனங்கள் (அவர்களுக்குள் ஏற்கெனவே பரிச்சயமாகி இருந்தால்)

வங்கிகள்

மேற்கண்டபடி வியாபார ஒப்பந்தத்தில் சரக்குகளின் அளவு, தரம், விலை, மற்றும் காலவரம்பு முதலியன தீர்மானிக்கப்பட்டு வரையறுக்கப்படுகின்றது.

சரக்குகள் தயாரான பிறகு, தேவையான அடிப்படை டாகுமென்டுகள் என்னென்ன?
Bill of Exchange எனப்படுகிற உண்டியல் (இது ஒண்ணும் கோயில்களில் காணிக்கை போடுகிற உண்டியல் இல்லீங்க) இதில் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள், சரக்குகளுக்கான மதிப்புத் தொகையை கொடுபட வேண்டியதற்கான ஓலை.

Invoice -இதில் அனுப்பும் சரக்கின் அளவு, விலை, தரம், எடை போன்ற தகவல்கள் குறிக்கப் பட்டு,மொத்த சரக்கின் மதிப்பும் கணக்கிட்டு காட்டப் பட்டிருக்கும்.

Certificate of Origin.

Bill of Lading or AirwayBill -அதாவது சரக்கினை கப்பலிலோ அல்லது விமானத்திலோ ஏற்றி அனுப்பியதற்கான அத்தாட்சிச் சான்றிதழ்.

சரக்குகளின் மதிப்புக்குத் தக்கான காப்பீடு சான்றிதழ்

இந்த நிறுவனங்கள் தமது அயல் நாட்டு வர்த்தகங்களை முழுக்க முழுக்க வங்கிகளையே நம்பி ஈடுபடுகிறார்கள். சரக்குகளை ஏற்றுமதி செய்தாலும், அவற்றை வங்கிகளின் ஒப்புதல் இருந்தால்தான், வெளியே எடுத்து வர இயலும். இதற்குத்தான் மேலே சொன்ன டாகுமென்டுகள் உதவுகின்றன.

ஏற்றுமதிகள் இரு வகைகளில் நடைபெறுகிறது. முதலாவது நம்பிக்கையின் பேரில், இரு நிறுவனமும் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி சரக்குகளை அனுப்புதல்.

அடுத்தது, Letter of credit அடிப்படையில் அனுப்புவது.

இருவகைகளிலும், சரக்குகளை ஏற்றுமதி செய்த பிறகு, தயாராக இருக்கும் டாகுமென்ட்களை வங்கிகள் மூலமாக அனுப்புவதுதான் சிறந்தது. இதுதான் நடைமுறையிலும் இருக்கிறது. அப்போதுதான், 100% பணத்தினை வரவு செய்ய முடியும்.

முதலாவது வழியில் (அதாவது ஒப்பந்தத்தின் படி) ஏற்றுமதி செய்தால், டாகுமென்டுகளை வங்கி கணக்கில் எடுத்த நாளிலிருந்து 30 நாட்களில் பணம் வந்து விடும்.

Letter of credit ன் அடிப்படையில் ஏற்றுமதி செய்தால், டாகுமென்டுகள் சரியாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக, பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். ஆனால் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு அன்றைய நிலவரப்படி பணமாற்று நிர்ணயிக்கப்படும். இது உலக சந்தையில் நமது ரூபாயின் மதிப்பைப் பொறுத்து அமையும்.

ஏற்றுமதியாளர்களின் பெருங்கவலை, இந்த அந்நியசெலாவணி பணமாற்றம் தான். அது அவர்களுக்கு அனுகூலமாக அமைந்தால் மகிழ்ச்சிதான். (நான் பல ஏற்றுமதியாளர்களின் மலர்ந்த முகங்களை எனது பணியின் போது பார்த்திருக்கிறேன்).

அன்றாட மதிப்பு வேறுபாடு, அந்நிய செலாவணியில் தவிர்க்க முடியாத ஒன்று. இதிலிருந்து மீளும் முகமாகத்தான், “Forward Contract” என்று சொல்லப்படுகின்ற வருங்கால மதிப்பு மாறுபாட்டுக்கான காப்பு வசதியினையும் வங்கிகள் ஏற்படுத்தித் தருகின்றன. இது அந்நிய செலாவணி மதிப்பு மாறுபாட்டால் ஏற்படுத்தும் எதிர்பாராத இழப்பிலிருந்து ஏற்றுமதி/இறக்குமதியாளர்களைக் காக்கின்றது.

அந்நிய செலாவணி நிலவரம் சாதகமாவது போல இருந்தால், அந்த சமயத்திற்குத் தக்கபடி, தம்முடைய செயல்பாட்டினை மாற்றிக்கொள்ளும் நிர்வாகத்திறமையும் அவசியமாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------

ஏற்றுமதி/இறக்குமதி - வங்கிகள் பங்கு என்ன?

சாதாரணமாக, நாம் ஏதாவது ஒரு பொருளை (துணிவகைகள், ப்ரிட்ஜ், டிவி, மிக்ஸி இது போல) வாங்க வேணுமானால், அதற்கான மதிப்பினை, பணமாகவோ, காசோலையாகவோ, கிரெடிட்கார்டு மூலமாகவோ அல்லது கடனிலோ ஈடு செய்கிறோம். இவற்றில் இரண்டாவதாகச் சொன்ன காசோலை கொடுத்து,(தற்போது இது அதிகம் பயன்படுவது இல்லை) பொருட்களை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இந்த மாதிரியான வர்த்தகத்தில், கடைக்காரருக்கு காசோலை பணமாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் வரையில் உத்திரவாதமில்லை. இந்த காசோலை பணமில்லாத காரணத்தினால், திரும்ப நேரிட்டால், அதற்கு உரிய காப்பு நடவடிக்கைகளைச் சட்டப்படி எடுக்க இயலும். (Negotiable Instrument Act - என்ற ஓன்று காசோலைகளின் பரிவர்த்தனைகளைக் கட்டுப் படுத்துகின்றது).

இதே போன்று, வர்த்தக நிறுவனங்களிடையே செய்யப்படுகிற வியாபாரங்களுக்கு ஆதாரமாக இருப்பது டாகுமென்டுகளே. எப்படி காசோலைகளுக்கென்று ஒரு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோ, அதே போன்று, இந்த மாதிரியான வர்த்தகப் பரிமாற்றங்களுக்காகவே,
“Uniform customs and Practice “ எனப்படும் நெறிமுறையினை வங்கிகள் பின்பற்றுகின்றன. இதில், ஏற்றுமதி/இறக்குமதி, எதுவாயினும், ஆதாரமான டாகுமென்டுகள் எப்படி இருக்க வேண்டும், அவை எப்படி நிறுவனங்களையும், சார்ந்துள்ள வங்கிகளையும் கட்டுப்படுத்துகின்றன போன்றவைகள் குறிப்பிடப் பட்டிருக்கும்.

இந்த டாகுமென்டுகள் பெரும்பாலும் சரக்குகளை வாங்கும் நிறுவனத்தின் பேரில்தான் வரையப்படும். எனவே, இதனை, சரக்குகள் ஏற்றுமதி செய்த பிறகு, நேரிடையாக அந்த நிறுவனத்துக்கே அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அயல் நாட்டில், இந்த நிறுவனமானது, டாக்குமென்டுகள் வந்து சேர்ந்ததுமே, சரக்குகளை வெகு சுலபமாக துறைமுகத்திலிருந்து தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு விடும்.அதன் பிறகு, அவர்கள் மனம் வைத்து சரக்குகளுக்கான மதிப்புத்தொகையை, ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்பினால்தான் உண்டு.
இது, எவ்வாறு நிச்சயம்? சரக்குகளைக் கைப்பற்றிய பிறகு, எந்த நிறுவனம் பணத்தை செட்டில் (settle) செய்ய முன் வரும்?
ஆகவே, ஏற்றுமதியோ அல்லது, இறக்குமதியோ எதுவாக இருந்தாலும், டாகுமென்டுகளை வங்கிகள் மூலம் அனுப்புவதே சிறந்த முறையாகும்.

வங்கிகள் மூலம் அனுப்புவதால் என்ன பயன்? வங்கிகள் இந்த டாகுமென்டுகளை எப்படி கையாளுகின்றன?

இந்தியாவிலிருந்த, ஒரு ஏற்றுமதி நிறுவனம் (A)என்று குறிப்பிடுவோம்.
அயல் நாட்டு நிறுவனத்தை (B) என்று கொள்வோம்.
A நிறுவனம், ஒப்பந்தத்தின் பேரில், சரக்குகளைத் தயார் செய்து, அவற்றை Bயின் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த உடன், அதற்கான டாக்குமென்டுகளை, தனது வங்கியிடம் ஒப்படைக்கிறது.
வங்கியில் இந்த டாக்குமென்டுகளை, தனது புத்தகத்தில் அதற்குரிய பிரிவிற்கேற்ப தொடர்ச்சி எண்களை பதிவு செய்கிறது. கூடவே சம்பந்தப்பட்ட எல்லா டாக்குமென்டுகளிலும் தனது வங்கி முத்திரையைப்பதித்து, அந்த எண்ணினை அவற்றில் குறிப்பிடுகின்றது. இவ்வாறு செய்வதால், டாக்குமென்டுகளில் அந்த வங்கியின் அதிகாரம் இல்லாமல் எவரும் எதுவும் செய்ய இயலாது. குறிப்பாக,சரக்குகளை ஏற்றுமதி செய்ததற்கான டாகுமென்டில் (Shipping bill – Bill of lading or Air way bill) வங்கியின் ஒப்புதல் இருந்தால்தான், B நிறுவனமானது சரக்குகளை, துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.

ஆகவே, B நிறுவனமானது, சரக்குகளின் மதிப்பு மற்றும் வங்கிகள் குறிப்பிடும் இதர சிலவுகளுக்கான தொகையையும் சேர்த்து செலுத்திய பிறகே, டாகுமென்டுகளை சரியான வகையில் வங்கிகளின் ஒப்புதல் பெற்று, சரக்குகளைக் கைப்பற்ற முடியும். அவ்வாறு B நிறுவனம் செலுத்திய
பணமானது, வங்கிகளிடையே புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டு, வங்கிகள் மூலமாகவே, ஏற்றுமதி
செய்த A நிறுவனத்தின் கணக்கில் கொண்டுவரப் படுகிறது.

ஏற்றுமதி/இறக்குமதி, இவ்விரண்டிலுமே டாக்குமென்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உடலுக்கு உயிர் போல, டாக்குமென்டுகள் செயல்படுகிறது. டாக்குமென்டுகளில், ஏதாவது
தவறு இருந்தால், வங்கிகளும், தொடர்புடைய நிறுவனங்களும், சரக்குகளுக்கான மதிப்புத்
தொகையை தருவதில் சிக்கல்கள் ஏற்படும். அதனால்தான், வங்கிகள் தமது வாடிக்கையாளரின் நலனை மனதில் கொண்டு, தம்மிடம் ஓப்படைக்கப்படுகின்ற டாகுமென்டுகளை, மிக கவனத்துடன் பரிசீலனை செய்து அவற்றில் தவறுகளோ அல்லது மேலும் ஏதாவது டாகுமென்டுகள் தேவையானாலோ, தகுந்த ஆலோசனைகளைக் கூறி, ஆரம்பக் கட்டத்திலேயே நிவர்த்தி செய்கின்றனர்.





விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வது எப்படி?

பொதுவாக அரசாங்கம் மக்களுக்கும் வழங்கும் சலுகைகைகள்,நல திட்டங்கள் போன்றவைகள் மக்களுக்கு சரியாக சென்று சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு,இதற்கு மக்களின் அறியாமையும்,அதிகாரிகளின் அலட்சிய போக்கும் தான் முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தான் நம் ஆட்கள் முக்கியமான விஷயங்களில் கோட்டை விட்டு விட்டு,கலர் டிவி வாங்கவும்,வேட்டி சேலை வாங்கவும் முண்டியடித்து முதலிடம் பிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி மக்களின் அறியாமையாலும், அரசு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறியதாலும் தான் மத்திய அரசால் 1986-ம் தொடங்கப்பட்ட “விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவி பொருட்கள் ஏற்றுமதி அமைப்பு” (APEDA The Agricultural and processed food products export development Authority ” என்ற ஒன்றே இருப்பது நமது மக்கள் பலருக்கு தெரியாமல் போய்விட்டது. உற்று கவனித்து இருந்தால், கருப்பு வெள்ளை விளம்பரமாக தினசரி செய்திதாள்களின் ஏதவாது ஒரு மூலையில் இதை பற்றிய செய்தி இருக்கும்.
21 - vazhikatti produts
தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்புவோர் தங்கள் வைத்துள்ள பொருட்களை பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்து வைத்துகொள்ள வேண்டும். பதிவு செய்யப்பட்ட பொருள்களுக்கான தேவையோடு ஏதவாது வெளிநாட்டு நிறுவனங்கள் இவர்களை தொடர்பு கொண்டால் ,இவர்கள் நம்மை தொடர்புகொண்டு வைத்துள்ள பொருள், அளவு ,தரம் போன்றவற்றை பரிசோதித்து ,பிறகு பொருள்களை ஏற்றுமதி செய்யவும் உதவி செய்வார்கள்.

ஏற்றுமதிக்கு புதிதாக உள்ள நபர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும்படியாக மானிய தொகைகளும் வழங்கபடுகிறது.காய்கறி,பழங்கள் ,பூக்கள்,பதபடுதபட்ட பழச்சாறுகள்,அரிசி,கோதுமை,நிலகடலை,வெல்லம், பால் பொருட்கள்,தேன் , உலர் பழங்கள் போன்றவைகளின் தேவைகள் எந்தெந்த நாடுகளில் உள்ளது போன்ற தகவல்களை இந்த அலுவலகத்தை அணுகி தகவல் பெறலாம்.

இதன் அலுவலகங்கள் மும்பை, கொல்கத்தா ,ஐதராபாத்,பெங்களூர் போன்ற இடங்களில் இயங்கி வருகிறது.தமிழ்நாடு, கேரளா மாநில மக்களுக்கு தொடர்புக்கு பெங்களூர் அலுவலகம்

முகவரி

Regional Incharge,
Agriculture and processed food products,
Export development authority,
12/1/1, Palace cross road,

bangalore – 560 020

Telephone : 080-23343425

080-23368272

ஏற்றுமதி தொடர்பான அனைத்து தகவல்களையும் மேலே சொன்ன தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு பெறலாம்.


--------------------------------------------------------------------------------------------------------------------------

இந்திய திராட்சைக்குநெதர்லாந்தில் கிராக்கி

புதுடில்லி:இந்தியாவின் சுவை மிகுந்த திராட்சைகள், நெதர்லாந்து மக்களை வசியப்படுத்தி உள்ளன. அவர்கள், சந்தைகளில், இந்திய திராட்சைகளை விரும்பிக் கேட்டு வாங்கிச் செல்கின்றனர். இதனால், வர்த்தகர்கள், அதிக அளவில் இந்திய திராட்சைகளை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளனர்.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து, 325 கோடி ரூபாய் மதிப்பிலான திராட்சைகளை, நெதர்லாந்து இறக்குமதி செய்துள்ளது.
அதே சமயம், மதிப்பின் அடிப்படையில், இந்தியாவின் திராட்சை ஏற்றுமதியில், நெதர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.இரண்டாவது இடத்தை, ஐக்கிய அரபு நாடுகளும் (157 கோடி ரூபாய்), மூன்றாவது இடத்தை, இங்கிலாந்தும் (156 கோடி ரூபாய்) பிடித்துள்ளன.அடுத்த இடங்களில், ரஷ்யா (131 கோடி), சவுதி அரேபியா (67 கோடி), வங்கதேசம் (61 கோடி), தாய்லாந்து (34 கோடி), ஸ்வீடன் (34 கோடி), எகிப்து (23 கோடி), இலங்கை (21 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.
இந்தியாவின் திராட்சை ஏற்றுமதி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் திராட்சை ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 1,259 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, முந்தைய 2011-12 மற்றும் 2010-11ம் நிதியாண்டுகளில், முறையே, 603 கோடி ரூபாய் மற்றும், 428 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.


-----------------------------------------------------------------------------------------------------------------------

ஏற்றுமதிக்கு உதவும் நண்பன்

ஏற்றுமதிக்கு மிகவும் உதவுவது வாங்குபவர், விற்பவர் சந்திப்பு தான். கன்பெடரேஷன் ஆப் இந்தியன் இண்டஸ்டிரி அடிக்கடி இது போல வாங்குபவர், விற்பவர் சந்திப்புக்களை நடத்துக்கிறது. அதில் நீங்களும் கலந்து கொண்டால் அது உங்கள் வியாபாரத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும். சி.ஐ.ஐ. யின் மேற்கு பிராந்திய பிரிவு சென்ற வருடம் மட்டும் 5 சந்திப்புக்களை நடத்தியுள்ளது, 400 குறுந்தொழில் செய்பவர்கள் பங்கு பெற்றனர். அடிக்கடி இவர்களின் இணையதளத்தை சென்று பாருங்கள், வெற்றி பெறுங்கள்.


--------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி

நாங்கள் இறக்குமதி செய்த பொருளை ஏற்றுமதி செய்ய விரும்புகின்றோம். எங்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும்?

பதில்

நீங்கள் இறக்குமதி செய்த பொருளைத் அப்படியே ஏற்றுமதி செய்தால், இறக்குமதி செய்த போது கட்டிய கஸடம்ஸ் டியூட்டியை திரும்ப பெறலாம். இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பொருளுக்கு தான் எக்சைஸ் டியூட்டி கட்ட வேண்டும். நீங்கள் இறக்குமதி செய்த பொருளை இந்தியாவில் உபயோகப்படுத்தாமல் அப்படியே ஏற்றுமதி செய்தால் எக்சைஸ் டியூட்டியும் கட்ட வேண்டாம்.


----------------------------------------------------------------------------------------------------------------

      கேள்வி
ஆங்கில பேப்பர்களில் அமெரிக்க டாலரின் மதிப்பை போடும் போது பல மாதிரி குறிப்பிடுகின்றனர். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கிறது. எந்த ரேட் நமக்கு கிடைக்கும்?

பதில்:
ஏற்றுமதி செய்து பணத்தை நீங்கள் பெற்றிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு டி.டி. பையிங் என்ற ரேட் வழங்கப்படும். அதாவது உங்களுக்கு டெலிகிராப் டிரான்ஸபராக (டி.டி) வந்துள்ள டாலரை அவர்கள் (பையிங்) செய்து கொள்கிறார்கள் என்று அர்த்தம். இது தவிர பில் பையிங் என்று ஒன்று இருக்கும். அதாவது நீங்கள் ஏற்றுமதி டாக்குமெண்டை சமர்பிக்கும் போதே வங்கியில் டிஸகவுண்ட் செய்து பணத்தை கேட்டால் அப்போது பில் பையிங் ரேட் அப்ளை செய்வார்கள். உங்கள் ஏற்றுமதி பணம் கரன்சியாக உங்களிடம் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு கரன்சி பையிங் ரேட் அப்ளை செய்வார்கள்.


---------------------------------------------------------------------------------------------------------------------

கேள்வி
சென்ற வார கேள்வியை தொடர்ந்து, ஏற்றுமதி பணம் டிமாண்ட் டிராப்டாக அல்லது செக்காக வரும் போது என்ன ரேட் தருவார்கள் வங்கியில் என்று பலர் கேட்டுள்ளார்கள். நல்ல கேள்வி.

பதில்

ஏற்றுமதிக்கு பணம் சாதாரணமாக வங்கி மூலம் டி.டி. (டெலிகிராபிக் டிரான்ஸ்பர்) ஆகத்தான் வரும். டிமாண்ட் டிராப்ட் அல்லது செக்காக வரும் பட்சத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது, அது போலியாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே, அந்த டிமாண்ட் டிராப்ட் அல்லது செக் மாறி உங்கள் அக்கவுண்டில் பணமாக வரும் வரை சரக்குகளை ஏற்றி அனுப்பி விட வேண்டாம். அப்படி பணமாக மாறி உங்கள் அக்கவுண்ட்க்கு வரும் பட்சத்தில் உங்களுக்கு டி.டி. பையிங் (அதாவது டெலிகிராபிக் டிரான்ஸ்பர் பையிங்) என்ற ரேட்டே கிடைக்கும்.


---------------------------------------------------------------------------------------------------------------------

ஏற்றுமதி இன்ஸபெக்ஷன்

ஏற்றுமதி இன்ஸ்பெக்ஷன் செய்வதற்கு இந்தியாவில் பல அரசாங்க இன்ஸ்பெக்ஷன் நிலையங்கள் இருக்கின்றன. சில சமயம் பல வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் வெளிநாட்டை சேர்ந்த இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சிகளை குறிப்பிடுவார்கள். இதில் இரண்டு ஏஜென்சிகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று SGS, இன்னொன்று Lloyd's Register Inpsection Agency. இவை இரண்டும் உலகப் புகழ் பெற்ற இன்ஸ்பெக்ஷன் ஏஜென்சிகள். இவை இந்தியாவில் பல இடங்களில் தங்கள் அலுவலகத்தை வைத்துள்ளன.


---------------------------------------------------------------------------------------------------------------------

  


1 comment:

  1. புதிய தகவல் ! நன்றி !

    http://indiawebsiteready.in

    ReplyDelete