Monday, December 21, 2015

பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மண விழா காணும் பாக்கியம்

ஷஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகங்கள் போன்ற சடங்குகளை நடத்திக் கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மண விழா காணும் பாக்கியம் அமைகிறது.

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாக்க் கொண்டே அமைகின்றன. சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும். நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்து சென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்

பூஜையின் போது 64 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 64 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய அக்னி, சூரியன், சந்திரன், வாயு ஆகில நால்வரையும் சேர்த்துக் குறிப்பதற்காகத்தான் 64 கலசங்கள் என்பது ஐதீகம். பிரபவ முதல் விரோதிகிருது வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும், ஆங்கிரஸ முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும், ஈஸ்வர முதல் துன்பதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும், சித்திரபானு முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள். தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்து தான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர்

அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை. இப்படி அனைத்திலும் இறைவனை – அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையைஒரு மனிதன் 80 வயதில் பெறும் போது தான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறான்.

Sunday, December 13, 2015

இயற்கையில உள்ள காற்று எப்படி உருவாகுது ?



முதல் காற்று எப்படி உருவானதுன்னு யோசிப்போம்.

அது புவி பிறந்த காலம். சுமார் 4,540 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து 4,000 மில்லியன் வருடங்களுக்கு முன் வரை. அந்தக் காலத்தை ஹேடியன் காலம்னு (Hadean eon) சொல்வோம்

அதுக்கு முன்னாடி புவித்தோற்றக் காலத்தை மில்லியன் ஆண்டுகளில் வரிசைப்படுத்துனதைப் பார்த்துருவோமா.

1. Hadean Eon (4500-4000)
2. Archean Eon (4000-2500)
..........a. Eoarchean Era (4000-3600)
..........b. Paleorchean Era (3600-3200)
..........c. Mesoarchean Era (3200-2800)
..........d. Neorchean Era (2800-2500)
3. Proterozoic Eon (2500-500)
..........a. Paleoproterozoic Era (2500-1600)
..........b. Mesoproterozoic Era (1600-1000)
..........c. Neoproterozoic ERa (1000-541)
4. Phanerozoic Eon (500-Present)
..........a. Paleozoic Era (541-252.2)
..........b. Mesozoic Era (252-66)
..........c. Cenozoic Era (66-Present)

அந்த ஹேடியென் காலத்துலயே காற்று உருவாகி விட்டது. ஆனா, இப்ப இருக்குற மாதிரியான காற்று இல்லை. அப்பொழுதெல்லாம் பூமிக்கு அப்படியொன்றும் வலிமையான ஈர்ப்பு விசை கிடையாது. அதனால் தண்ணீர் மூலக்கூறுகள் கூட தப்பி விண்வெளிக்குச் சென்றுவிடும். ஹைட்ரஜன், ஹீலியம் இவற்றையெல்லாம் சொல்லவே வேண்டாம். ஒரே கொதிப்பும் வெடிப்பும்தான் பூமியில் அப்பொழுது. எங்கு பார்த்தாலும் எரிமலைகள்தான். குழம்புகள்தான். மெதுவாக இறுகத் துவங்கின.

இந்தக் காலத்தில்தான் பூமிக்கு ஒரு பெருமோதல் ஒன்னு நிகழ்ந்தது. இதை Great Impact Hypothesis-GIHனு சொல்வாங்க. செவ்வாய் கிரகம் அளவு பெரிதான ஏதோ ஒன்று (Theia-a protoplanet) பூமியை மோதிச் சென்றிருக்கவேண்டும். அதன் காரணமாக லேசாக இறுகிக்கொண்டிருந்த பூமிப் பந்தின் ஒரு சிறு பகுதி சிதறுண்டு போய் தனித்து இறுகி இன்றைக்கு அது நிலவாக இருக்கின்றது. 

அப்படி பூமியிலிருந்து சிதறுண்டு போனால் பூமியில் ஒரு பகுதி குறைவு பட்டிருக்க வேண்டுமல்லவா? அதுதான் இன்றைய பசிபிக் பெருங்கடல். இந்தோனேஷியாவில் இருந்து கொலம்பியா வரையில் இதன் தொலைவு19,800 கிலோமீட்டர்கள். இது நிலவின் விட்டத்தை விட 5 மடங்கு அதிகம். மொத்தப் பரப்பளவு 165.2 மில்லியன் சதுரகிலோமீட்டர்கள். நாம் அறிந்த ஆழம் 10லிருந்து 12 கிலோ மீட்டர் வரைக்கும். அந்த இடத்திற்குப் பெயர்தான் மரியானா அகழி (Mariana Trench).

சரி, அப்படியொரு மோதல் நிகழ்ந்ததும் இறுகிக்கொண்டிருந்த பொருட்களெல்லாம் மோதலினால் ஏற்பட்ட அதிவெப்பத்தில் மீண்டும் குழம்புகளாகின. எப்படியென்றால், குழம்புகளின் சிறுபகுதி ஆவியாகிப் போகுமளவிற்கு. அதிஉயர் வெப்பம். பாறைகள் ஆவியாகிப் பூமியைச் சூழ்ந்திருந்தன. இரண்டாயிரம் வருடங்களில் அந்தப் பாறை ஆவிகள் குளிர்ந்து படிந்தன. அப்பொழுது எடைகூடிய கார்பன்டையாக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் நீராவிகள் தோன்றின. எடைகூடிய கார்பன்டையாக்சைடு வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக நீராவிகள் அழுத்தப்பட்டு நீராக மாறி பெருங்கடல்கள் உருவாகின. அப்பொழுதே ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினம் இருந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.

அடுத்து வரும் காலம் ஆர்க்கியென் காலம். இந்தக் காலத்தில்தான் Cyanobacteria என்ற நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெற்று உயிர் வாழ்ந்திருக்கின்றன. விடுபொருளாக ஆக்சிஜனை வெளியேற்றியிருக்கின்றன. இவையே பூமிக்கு ஆக்சிஜனை அதிகளவில் தந்திருக்கின்றன. இந்த நுண்ணுயிரிகளின் படிமங்கள் Stromatolites படிமங்களாகக் கடற்படுகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு காலமும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் ப்ரொட்டரஸோவிக் (Proterozoic) காலத்தில்தான் ஆக்சிஜன் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. காரணம் புவியின் முதல் மேம்படுத்தப்பட்ட ஒரு செல் உயிரினம் Eukaryote.

மேற்சொன்ன இந்த மூன்று காலங்களையும் ஒரே தொகுப்பாக Precambrian Supereon என்பார்கள். (தமிழில் இதனை நீள்காலம் எனலாமா?) ஏனெனில், இக்காலங்களில் புவி மாறுதல்கள் மிக மெதுவாகவே நிகழ்ந்து வந்தன. மெதுவாக என்றால்... நம் எதிர்பார்ப்பில் மெதுவாக; அடுத்த காலமான ஃபெனெரஸோவிக் (Phanerozoic) காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒப்பிடும்பொழுது அது மிக மெதுவாக என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த நீள்காலத்தில்தான், Cyanobacteria நுண்ணுயிரியால் புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தாவரங்கள் தோன்றி ஒளிச்சேர்க்கையில் ஆக்சிஜனை வெளிவிட்டதும் அந்த நீள்காலத்தில்தான்.

தற்போதைய வளிமண்டலத்தில் வாயுக்களின் இருப்பு
..........நைட்ரஜன் - 78.084%
..........ஆக்சிஜன் - 20.947%
..........ஆர்கான் (argon) - 0.934%
..........கார்பன்டையாக்சைடு - 0.033%
..........இதர வாயுக்கள் - 0.002%

காற்றில் ஆக்சிஜனின் சதவீதம் 19.5க்குக் கீழே போனால் நமக்கு உளவியல் பிரச்சனைகள் ஏற்படும். 16 சதவீதத்திற்குக் கீழே போனால், நம் வாழ்க்கை மட்டுமல்ல ஏனைய உயிரிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறிதான்.

இப்பொழுது எப்படி இந்தக் கலவை நிலைப்படுத்தப்படுகின்றது என்றால், நம் வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக நைட்ரஜன் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. தாவரங்கள் மிருகங்கள் அழிந்துபட்டு மண்ணில் மட்கிப்போகும்பொழுது அல்லது எரிக்கப்படும்பொழுது எரிமலை வெடிப்புகள் என்றெல்லாம். ஆனால், அப்படி அதிகரிக்கும் நைட்ரஜன், சில உயிரினங்கள் அதனை உட்கொண்டும், மழை மற்றும் பனிப்பொழிவுகள் காற்றிலுள்ள நைட்ரஜனை கழுவித் துடைத்தும் சமன் செய்யப்பட்டு விடுகின்றது.

ஆக்சிஜன் அளவு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்பொழுது வெளிவிடப்படுகின்றது. அதே சமயத்தில் பெரும்பாலான உயிரினங்கள் அதனை உட்கொண்டு சமன் செய்து விடுகின்றன. 

உயிரினங்கள் வெளிவிடும் கார்பன்டையாக்சைடு தாவரங்களால் உட்கொள்ளப்பட்டு சமன்செய்யப்படுகின்றது.

இயற்கையில உள்ள காற்று எப்படி உருவாகுது ?



முதல் காற்று எப்படி உருவானதுன்னு யோசிப்போம்.

அது புவி பிறந்த காலம். சுமார் 4,540 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து 4,000 மில்லியன் வருடங்களுக்கு முன் வரை. அந்தக் காலத்தை ஹேடியன் காலம்னு (Hadean eon) சொல்வோம்

அதுக்கு முன்னாடி புவித்தோற்றக் காலத்தை மில்லியன் ஆண்டுகளில் வரிசைப்படுத்துனதைப் பார்த்துருவோமா.

1. Hadean Eon (4500-4000)
2. Archean Eon (4000-2500)
..........a. Eoarchean Era (4000-3600)
..........b. Paleorchean Era (3600-3200)
..........c. Mesoarchean Era (3200-2800)
..........d. Neorchean Era (2800-2500)
3. Proterozoic Eon (2500-500)
..........a. Paleoproterozoic Era (2500-1600)
..........b. Mesoproterozoic Era (1600-1000)
..........c. Neoproterozoic ERa (1000-541)
4. Phanerozoic Eon (500-Present)
..........a. Paleozoic Era (541-252.2)
..........b. Mesozoic Era (252-66)
..........c. Cenozoic Era (66-Present)

அந்த ஹேடியென் காலத்துலயே காற்று உருவாகி விட்டது. ஆனா, இப்ப இருக்குற மாதிரியான காற்று இல்லை. அப்பொழுதெல்லாம் பூமிக்கு அப்படியொன்றும் வலிமையான ஈர்ப்பு விசை கிடையாது. அதனால் தண்ணீர் மூலக்கூறுகள் கூட தப்பி விண்வெளிக்குச் சென்றுவிடும். ஹைட்ரஜன், ஹீலியம் இவற்றையெல்லாம் சொல்லவே வேண்டாம். ஒரே கொதிப்பும் வெடிப்பும்தான் பூமியில் அப்பொழுது. எங்கு பார்த்தாலும் எரிமலைகள்தான். குழம்புகள்தான். மெதுவாக இறுகத் துவங்கின.

இந்தக் காலத்தில்தான் பூமிக்கு ஒரு பெருமோதல் ஒன்னு நிகழ்ந்தது. இதை Great Impact Hypothesis-GIHனு சொல்வாங்க. செவ்வாய் கிரகம் அளவு பெரிதான ஏதோ ஒன்று (Theia-a protoplanet) பூமியை மோதிச் சென்றிருக்கவேண்டும். அதன் காரணமாக லேசாக இறுகிக்கொண்டிருந்த பூமிப் பந்தின் ஒரு சிறு பகுதி சிதறுண்டு போய் தனித்து இறுகி இன்றைக்கு அது நிலவாக இருக்கின்றது. 

அப்படி பூமியிலிருந்து சிதறுண்டு போனால் பூமியில் ஒரு பகுதி குறைவு பட்டிருக்க வேண்டுமல்லவா? அதுதான் இன்றைய பசிபிக் பெருங்கடல். இந்தோனேஷியாவில் இருந்து கொலம்பியா வரையில் இதன் தொலைவு19,800 கிலோமீட்டர்கள். இது நிலவின் விட்டத்தை விட 5 மடங்கு அதிகம். மொத்தப் பரப்பளவு 165.2 மில்லியன் சதுரகிலோமீட்டர்கள். நாம் அறிந்த ஆழம் 10லிருந்து 12 கிலோ மீட்டர் வரைக்கும். அந்த இடத்திற்குப் பெயர்தான் மரியானா அகழி (Mariana Trench).

சரி, அப்படியொரு மோதல் நிகழ்ந்ததும் இறுகிக்கொண்டிருந்த பொருட்களெல்லாம் மோதலினால் ஏற்பட்ட அதிவெப்பத்தில் மீண்டும் குழம்புகளாகின. எப்படியென்றால், குழம்புகளின் சிறுபகுதி ஆவியாகிப் போகுமளவிற்கு. அதிஉயர் வெப்பம். பாறைகள் ஆவியாகிப் பூமியைச் சூழ்ந்திருந்தன. இரண்டாயிரம் வருடங்களில் அந்தப் பாறை ஆவிகள் குளிர்ந்து படிந்தன. அப்பொழுது எடைகூடிய கார்பன்டையாக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் நீராவிகள் தோன்றின. எடைகூடிய கார்பன்டையாக்சைடு வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக நீராவிகள் அழுத்தப்பட்டு நீராக மாறி பெருங்கடல்கள் உருவாகின. அப்பொழுதே ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினம் இருந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.

அடுத்து வரும் காலம் ஆர்க்கியென் காலம். இந்தக் காலத்தில்தான் Cyanobacteria என்ற நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெற்று உயிர் வாழ்ந்திருக்கின்றன. விடுபொருளாக ஆக்சிஜனை வெளியேற்றியிருக்கின்றன. இவையே பூமிக்கு ஆக்சிஜனை அதிகளவில் தந்திருக்கின்றன. இந்த நுண்ணுயிரிகளின் படிமங்கள் Stromatolites படிமங்களாகக் கடற்படுகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு காலமும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் ப்ரொட்டரஸோவிக் (Proterozoic) காலத்தில்தான் ஆக்சிஜன் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. காரணம் புவியின் முதல் மேம்படுத்தப்பட்ட ஒரு செல் உயிரினம் Eukaryote.

மேற்சொன்ன இந்த மூன்று காலங்களையும் ஒரே தொகுப்பாக Precambrian Supereon என்பார்கள். (தமிழில் இதனை நீள்காலம் எனலாமா?) ஏனெனில், இக்காலங்களில் புவி மாறுதல்கள் மிக மெதுவாகவே நிகழ்ந்து வந்தன. மெதுவாக என்றால்... நம் எதிர்பார்ப்பில் மெதுவாக; அடுத்த காலமான ஃபெனெரஸோவிக் (Phanerozoic) காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒப்பிடும்பொழுது அது மிக மெதுவாக என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த நீள்காலத்தில்தான், Cyanobacteria நுண்ணுயிரியால் புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தாவரங்கள் தோன்றி ஒளிச்சேர்க்கையில் ஆக்சிஜனை வெளிவிட்டதும் அந்த நீள்காலத்தில்தான்.

தற்போதைய வளிமண்டலத்தில் வாயுக்களின் இருப்பு
..........நைட்ரஜன் - 78.084%
..........ஆக்சிஜன் - 20.947%
..........ஆர்கான் (argon) - 0.934%
..........கார்பன்டையாக்சைடு - 0.033%
..........இதர வாயுக்கள் - 0.002%

காற்றில் ஆக்சிஜனின் சதவீதம் 19.5க்குக் கீழே போனால் நமக்கு உளவியல் பிரச்சனைகள் ஏற்படும். 16 சதவீதத்திற்குக் கீழே போனால், நம் வாழ்க்கை மட்டுமல்ல ஏனைய உயிரிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறிதான்.

இப்பொழுது எப்படி இந்தக் கலவை நிலைப்படுத்தப்படுகின்றது என்றால், நம் வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக நைட்ரஜன் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. தாவரங்கள் மிருகங்கள் அழிந்துபட்டு மண்ணில் மட்கிப்போகும்பொழுது அல்லது எரிக்கப்படும்பொழுது எரிமலை வெடிப்புகள் என்றெல்லாம். ஆனால், அப்படி அதிகரிக்கும் நைட்ரஜன், சில உயிரினங்கள் அதனை உட்கொண்டும், மழை மற்றும் பனிப்பொழிவுகள் காற்றிலுள்ள நைட்ரஜனை கழுவித் துடைத்தும் சமன் செய்யப்பட்டு விடுகின்றது.

ஆக்சிஜன் அளவு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்பொழுது வெளிவிடப்படுகின்றது. அதே சமயத்தில் பெரும்பாலான உயிரினங்கள் அதனை உட்கொண்டு சமன் செய்து விடுகின்றன. 

உயிரினங்கள் வெளிவிடும் கார்பன்டையாக்சைடு தாவரங்களால் உட்கொள்ளப்பட்டு சமன்செய்யப்படுகின்றது.

Tuesday, December 8, 2015

Cryogenic Sleeping உறைநிலைக்குளிர் உறக்கம் Walt Disney

க்ரையோஜெனிக் உறக்கம், தமிழ்ல சொல்றதுன்னா... உறைநிலைக்குளிர் உறக்கம் அல்லது கடுங்குளிர் உறக்கம்னு சொல்லலாமா? ஏன்னா, க்ரையோஸ் (kryos) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு உறைநிலைக்குளிர்னு (icy cold) பொருள். இப்போதைக்கு நாம க்ரையோஜெனிக் உறக்கம்னே ஒலிபெயர்த்துக்குவோம். நுட்பப்படி இதனை Cryonic Suspensionனு சொல்வார்கள். 





 

இப்படி ஒரு முறை இருக்குன்னு நமக்கு திரைப்படங்கள் வாயிலாகத்தான் தெரியவந்துருக்கு. அதுவும் கடந்த 2014ம் வருடம் வெளிவந்த Interstellar திரைப்படத்துல இருந்துதான் பெரும்பாலானோர் இதைப்பத்தி பேசுறாங்க. 1993ல் நான் கல்லூரியில் படிக்கும்பொழுது Demolition Man என்றொரு படம் வந்தது. அதில் இந்த நுட்பம் குறித்துக் காட்டியிருப்பார்கள். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பே 1992ல் Forever Young என்றொரு திரைப்படத்திலும் இதனைக் காட்டியிருப்பார்கள். இப்படியொரு நுட்பம் இருக்கின்றது என்று காட்டிய முதல் திரைப்படம் இதுதான்.

அதன் பின்னர் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஏலியன், பேட்மேன், ஜேஸன் எக்ஸ், கேப்டன் அமெரிக்கா, அண்டர்வேர்ல்டு என்று பல திரைப்படங்களிலும் இதனைக் காட்டியிருப்பார்கள். 1819ல் வாஷிங்டன் இர்வின் என்பார் எழுதிய ரிப் வான் விங்க்கிள் என்ற புத்தகத்தில் கூட இது போன்றதொரு உறக்கத்தினை கோடிகாட்டியிருப்பார்.

க்ரையோனிக் சஸ்பென்ஷன் பயன் என்ன?

தற்போதைய மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத, ஆனால், குணப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் ஆய்வுகள் அதி தீவிரமாக இருக்கும்பொழுது நோயாளியை இந்த முறையைக் கொண்டு உறைந்து போகச் செய்து வைத்து விட்டால், பின்னர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் கண்டறிந்த காலத்தில் அவரை மீண்டும் உயிர்ப்பித்து அந்நோயைக் குணப்படுத்திக் கொண்டு வாழ வைக்கலாம்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி உயிருள்ள ஒருவரை அப்படி Cryonic Suspensionல் வைக்க சட்டம் அனுமதிப்பதில்லை. சட்டப்படி இறந்துவிட்டார் அதாவது Clinical Death என்று மருத்துவர் அறிவித்து விட்டால் அவரை க்ரையோனிக் சஸ்பென்ஷனில் வைக்கலாம். இறந்து போனவரை அப்படி வைத்து என்ன பயன்?

Clinically Death என்பது இதயம் தன் பணியை நிறுத்திக்கொள்வதுதான். அதுவே முழுமையான மரணம் என்று சொல்லிவிடமுடியாது. அதன் பின்னரும் நம் மூளையின் செயல்பாடுகள் உயிர்ப்புடன்தான் இருக்கும்.

நம் உடல் அழிந்துபட்டுப் போவது என்பது நம் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது. நம் செல்கள் சிதைவடைவதை நிறுத்தி வைக்க முடிந்தால் நம் அழிவும் நிறுத்திவைக்கப்படும். அப்படியொரு செயல்பாடுத்தான் இதில் மேற்கொள்ளப்படுகின்றது.

சரி, க்ரையோனிக் சஸ்பென்ஷன் என்றால் என்ன? எப்படிச் செய்கிறார்கள்?

க்ரையோனிக் சஸ்பென்ஷன் என்பது, உடலின் வளர்சிதை மாற்றத்தினை சடாரென்று நிறுத்தி வைப்பது. ஒருவர் இறந்துவிட்டார் என்று மருத்துவரால் அறிவிக்கப்பட்டவுடன், க்ரையோனிக் சஸ்பென்ஷன் முறைக்கு எடுத்துச் செல்லப்படும் வரைக்கும், மூளைக்குத் தேவையான ஆக்சிஜனும் இரத்தமும் தொடர்ந்து செலுத்தப்படும். அதன் பின்னர் Heparin என்னும் மருந்து உடலினுள் ஏற்றப்படும். இது இரத்தத்தை உறையச் செய்வதிலிருந்து தடுக்கும் (Anticoagulant).

இனிதான் உண்மையான உறைய வைத்தல் துவங்கும். உடலையும் சடாரென்று குளிர்நிலைக்குக் கொண்டு போய்விடமுடியாது. காரணம், உடல் செல்களில் இருக்கும் நீர் குளிர்நிலைக்குப் போனால், அது உறையத் துவங்கும். உறைந்தால் விரிவடையும். அதனால் செல்கள் சிதைவுறும். அதனால் என்ன செய்வார்கள் என்றால், செல்களில் இருக்கும் நீரை நீக்கிவிட்டு Cryoprotectant எனப்படும் க்ளிசரால் (Ethylene Glycol போன்று) அடிப்படையிலான ஒரு வேதியற்கலவையை உட் செலுத்துவார்கள். ஆர்க்டிக் மற்றும் அண்டார்ட்டிகாவில் இருக்கும் சில பூச்சிகள், மீன்கள் மற்றும் நீர்நிலவாழ்வி (Ambibians) தாங்களே தங்கள் உடலில் இந்த Cryoprotectantயை உற்பத்தி செய்து கொள்ளும்.

க்ளைகால்ஸ் (Glycols) எனப்படுபவை குறைந்த பட்சம் இரண்டு ஹைட்ராக்சில் தொகுப்புகள் உள்ள ஆல்கஹால் ஆகும். எத்திலின் க்ளைக்கால் (Ethylene Glycol), ப்ரோப்பிலின் க்ளைக்கால் (Propylene Glycol) மற்றும் க்ளிஸரால் (Glycerol) போன்றவை அதற்கு உதாரணங்களாகும்.

எத்திலின் க்ளைக்கால் ஆட்டோமொபைலில் உள்எரி எஞ்சின்களில் குளிர்விப்பானாக தண்ணீருக்குப் பதிலாகவோ அல்லது தண்ணீருடன் கலந்தோ பயன்படுத்தப்படும். இது குளிர்காலங்களில் தண்ணீர் உறைந்து அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றது. இது சற்று ஆபத்தானது.

ப்ரொப்பிலின் க்ளைக்கால் மேற்சொன்ன எத்திலின் க்ளைக்காலை விட ஆபத்து வெகுவாகக் குறைந்தது. ஆபத்தற்ற உறைநிலைத்தடுப்பான் என்று பெயரிட்டே விற்பனைக்கும் வரும். எத்திலின் க்ளைக்கால் பயன்படுத்த முடியாத இடங்களில் இதனைப் பயன்படுத்துவார்கள். உணவுத் தயாரிப்பில் இது பயன்படும். குறிப்பாக பனிக்குழைவு (Ice Cream) தயாரிப்பில் பனிக்கட்டிகள் (Ice) உருவாகிடாமல் அது குழைவாகவே இருப்பதற்காக இதனைச் சேர்ப்பார்கள்.

இருப்பினும், இது காற்று மற்றும் வெப்பத்தோடு வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்யும். இதனைச் சரியாக சமநிலைப்படுத்தப்படவில்லை என்றால் அரிக்கும் (Corrossive) தன்மையுடையதாக இருக்கும்.

மேற்சொன்ன இரண்டையும் விட பாதுகாப்பானதும் மிகக்குறைந்த உறைநிலையையும் கொண்ட க்ளிசராலே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. க்ரையோனிக் சஸ்பென்ஷனில் உடல் செல்களில் உள்ள நீருக்குப் பதிலாக இதனையும் பயன்படுத்துவார்கள்.

எதைப் பயன்படுத்தினாலும், நோக்கம் என்னவென்றால், உறைநிலைக் குளிரில் செல்கள், திசுக்கள், உறுப்புகளுக்குள் பனிப்படிகங்கள் (Ice Crystals) உருவாவதைத் தடுப்பதுதான். இப்படி ஏதேனும் ஒரு உறைநிலைக் கலவைக்குள் (திரவ நைட்ரஜன்) உடலைக் கொண்டு செல்லும் முன் ஆழ்குளிர் நிலைக்கு (Deep Cooling without Freezing) உட்படுத்தி வளர்சிதை மாற்றம் நிகழ்வதில் இருந்து நிறுத்தி வைக்கும் முறைக்குப் பெயர்தான் Vitrification.

அதன் பின்னர், -130°Celcius அளவிலான வெப்பநிலையை எட்டும் வரைக்கும் உடலை உலர்பனிக் கட்டியில் (Dry Ice) வைப்பார்கள். இத்தோடு Vitrification செயல்பாடு முடிகின்றது. அதற்குப் பின்னர் -196°Celcius வெப்பநிலையளவில் திரவ நைட்ரஜன் நிரப்பப் பட்ட ஒரு பெரிய உருளைக்குள் உடலைத் தலைகீழாக நுழைத்து வைத்து விடுவார்கள். ஏன் தலைகீழாக என்றால், ஒரு வேளை உருளையில் ஏதேனும் கசிவு இருந்தால், தலைப்பகுதியில் இருக்கும் மூளை மட்டுமாவது இறுதி வரை பாதுகாப்பான குளிர்நிலையில் பத்திரமாக இருக்கட்டும் என்பதற்காக.

அவ்வளவுதான் க்ரையோனிக் சஸ்பென்ஷன். ஆனால், திருப்பி உயிர்ப்பிக்கும் நுட்பம்தான் இன்னும் நமக்குக் கைவரப்பெறவில்லை. அண்மைய எதிர்காலத்தில் அதனை எதிர்பார்க்கவும் முடியாது என்று விஞ்ஞானிகளும் கூறிவிட்டனர். மீளுயிர்ப்பிப்பதில் என்னவொரு கடினம் என்றால், சரியான வெப்பநிலைக்கு படிப்படியாக உடல் செல்களைக் கொண்டு வராவிட்டால், பனிப்படிகங்கள் உருவாகி செல்களை விரிவடையச் செய்து சிதைத்துவிடும் என்பதுதான்.

ஆனால், நானோ தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டால், மிக நுணுக்கமாக அணுஅளவிலே போய்க்கூட செல்களைப் பாதுகாப்பாக மீளுயிர்க்கச் செய்ய முடியும் என்று கருதுகிறார்கள்.

அப்படி எவரேனும் க்ரையோனிக் சஸ்பென்ஷனில் வைக்கப்பட்டிருக்கின்றார்களா....? ஆம், சிலர் அவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

1. Dr. James Bedford, உளவியல் பேராசிரியர்
2. Dick Clair Jones, தொலைக்காட்சி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்
3. Thomas K Donaldson, கணிதவியலார்
4. Fereidoun M. Esfandiary (FM-2030), எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் மீவுமனிதத்துவச் சிந்தனையாளர் (Transhumanist Philosopher)
5. Dora Kent, Alcor Life Extension Foundationன் ஒரு உறுப்பினரான Saul Kent என்பாரின் தாய்.
6. Jerry Leaf. Alcor Life Extension Foundationன் துணைத் தலைவர்
7. Ted Williams, பேஸ்பால் விளையாட்டு வீரர்
8. John Henry Williams, Ted Williamsன் மகன், இவரும் பேஸ்பால் விளையாட்டு வீரர்.
9. Walt Disney, கார்ட்டூனிஸ்ட், திரைப்படத் தயாரிப்பாளர், அசைபடத் தயாரிப்பாளர், குரல் நடிகர் மற்றும் தொழிலதிபர்

படம் எடுக்கப்பட்ட தளம் : http:// transhumanity. net/wp-content/uploads/2014/09/Cryonics.jpg


thanks to BABU PK

Saturday, November 28, 2015

சோலார் பேனல் விலை குறைந்து விட்டது

சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் குறித்த ஆலோசனை மற்றும் தகவல்களுக்கு:

தற்போது அதிரடி சலுகையாக ஒரு கிலோ வாட் உற்பத்தி செய்ய கூடிய தரமான  சோலார் பேனல் 67000 ரூபாய் மட்டுமே! இதன் மூலம் ஒரு வீட்டுக்கு தேவையான ஏ‌சி, மிக்சி, கிரைண்டர், டி‌வி,ஃபிரிஜ்,வாஷிங் மெஷின்,ஃபேன்,அயர்ன் பாக்ஸ், 1 HP மோட்டார் இன்னும் இது போன்ற அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் இயங்கும் வகையில், நம் தமிழக அரசு 50000 ரூபாய் மானியம் உடனுக்குடன் கொடுத்து உதவுகின்றது என்பதை எமது வாசகர்களுக்கு இந்த இணையதளத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்!

1KW சோலார் பேனல் - 1,17,000 ரூபாய்
மானியம்                     -  50,000   ரூபாய்
செலுத்தும் தொகை     -  67,000   ரூபாய் மட்டுமே

நீங்கள் ஒரு மாதம் 500 ரூபாய் வீதம் மின்சார கட்டணம் செலுத்துபவராக இருந்தால், பத்து வருடத்தில் நீங்கள் கட்டிய தொகை மின்சார கட்டணத்தில்  மீதம் ஆகும்! 

- 9597771037 (DINESH)

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் .....

இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும், ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாடு நாடு முழுவதும் உடனே செயல்படுத்த வேண்டியது அவசியம்மும் அவசரமும் ஆகும். மாறாக தாமதித்தால் மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு அனைத்து துரைகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.




நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்தடை பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட், இரண்டு கிலோ வாட், ஐந்து கிலோ வாட், பத்து கிலோ வாட் சோலார் பவர் பேக்' திட்டம் தற்போது வீட்டு உபயோகத்திறகு கைகொடுக்கிறது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் தற்போது "இன்வெர்ட்டர்கள்' பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மூன்று மணி நேரம் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த ஒரு கிலோ வாட்க்கு Rs - 67500/-* ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு ஐந்து யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின்சார பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த 80-100 சதுர அடி இடம் தேவை. சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவை ஒப்பிடுகையில், சோலார் அமைப்பை ஏற்படுத்திய ஐந்து ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பை பராமரிப்பதும் எளிது. சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதும்.

முற்றிலும் மின் வாரியத்தின் தேவையிலிருந்து விலகலாம். மின்தட்டுப்பாடு என்ற பிரச்னையே ஏற்படாது. மின்சேமிப்பு. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டுமணி நேரம் சூரியசக்தியை ஈர்க்க முடியும். ஒருமுறை போட்டோ செல் பேனல்களை கழுவி துடைத்தால், சூரிய ஒளி ஈர்க்கும் திறன் குறையாது. இயக்க யாரும் தேவையில்லை.
தமிழ்நாட்டை சூரிய ஒளி மின்சார மாநிலம் ஆக்குவோம்! மின் மிகை மாநிலம் ஆக மாற்றுவோம்!

 CONTACT : 959 777 1037
GREEN HITECH SOLUTIONS

 {SOLAR POWER SUPER POWER]
All Leading Company : UPS , Inverter , PCU & SOLAR Panels , SOLAR Hybrid Sinewave(DSP Based) Inverters /UPS/PCU , Petrol Pump Inverter , Water Pumping Systems , SOLAR Charging Controllers , Battery Charger , SOLAR LED Street Light, SOLAR Water Heater, ALL SOLAR Products , ALL LED Lights, All Batteries & ALL GPS VEHICLE TRACKING SYSTEM

Thursday, November 19, 2015

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்…



1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக…

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு..!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். 

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும். 

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

உணவே மருந்து

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும். 

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

மருந்தே வேண்டாம்

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.

லப்… டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கிட்னியைக் கவனியுங்கள்….

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி…!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
கிட்னி
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு..!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.வைத்தியசாலை

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை. 

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

நோயாளிகள் தங்கும் இடம்

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை 

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது.

Saturday, November 7, 2015

இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும்.

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்...!!!

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.

அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது.

செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.

ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.

ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.

ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.

அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.

இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.

இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.

எனவே, ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வழி வேளாண்மைக்கு வித்திட்டால் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க முடியும்.

நன்றி: தினமணி

Tuesday, November 3, 2015

குழந்தை ஆணா பெண்ணா..?!



தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் ஒரு கரு உருவான சில வாரங்களிலேயே அந்தக் கருவின் பால் என்ன என்பதை அறிந்து விட முடியும். வேண்டியபடி ஆண் அல்லது பெண் குழந்தைக்கு உரிய மரபு அணுக் கூறுகள் உடைய விந்தினை பெண்ணின் கருப்பை முட்டையுடன் சேர்ப்பதன் வழி விரும்பிய குழந்தையைப் பெறலாம் என்று கூறும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.எனினும் இந்த முயற்சிகள் எல்லாமே முழு வெற்றி அடைவதில்லை.பொருத்தமான அணுக்கூறுகளைச் சேர்த்து வைத்தாலும் அது முழுக் குழந்தையாக உருவாகும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. மொத்தத்தில் ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பது விதிப்படி நடக்கும். ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்று உரைக்கும் தமிழ்ப் பண்பாட்டில் இதற்கொரு வழி நிச்சயம் இருக்க வேண்டும். சித்தருள் பெருஞ் சித்தர் திருமூலர் சில வழிகள் காட்டியிருக்கிறார். அவர் தந்த திருமந்திரத்தின் கரு உற்பத்தி என்னும் பகுதியில் ஒரு பாடல்;

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண்டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகுமாகில் தரணி முழுதாளும்
பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே

பொருள்: கரு தரிக்கும் காலத்தில் ஆணுக்கு வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் அதே சமயம் பெண்ணுக்கு இடது நாசியில் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்கும் உயிர் ஆணாகும். மாறாக பெண்ணுக்கு வலப்பால் மூச்சும் ஆணுக்கு இடப்பால் மூச்சும் மிகுந்து சென்றால் தரிக்கும் உயிர் பெண்ணாகும். இரண்டு பேருக்கும் ஒரே பக்க மூச்சு ஒத்திருந்தால் பிறக்குமுயிர் அலியாகும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுந்தால் பிறக்குமுயிர் சிறப்பாகும். அகப் பயிற்சியால் கட்டுப் படுத்தினால் கரு தரிக்காது. மூச்சு மிகுதல் என்றால் என்ன? மூக்கின் இரு ஓட்டைகளில் வலது பக்க ஓட்டை வல நாசி என்றும் இடது பக்க ஓட்டை இட நாசி என்றும் குறிக்கப்படும். நீங்கள் எந்த நேரத்தில் சோதித்துப் பார்த்தாலும் இரு நாசிகளுள் ஏதேனும் ஒன்றில் மட்டும்தான் மூச்சுக்காற்று மிகுந்திருக்கும். மற்றதில் மிகக் குறைவாக மூச்சு ஓடும். சற்று நேரத்துக்கொருமுறை இயற்கையாகவே இந்த மிகுந்த மூச்சு ஒரு நாசியிலிருந்து மற்றதுக்கு மாறும். ஒரு பக்கத்து நாசியை அடைத்து விட்டால் அடுத்த நாசியில் மூச்சு நடைபெறும். குழந்தை பெற விரும்பும் தம்பதியர் கரு தரிக்கும் வேளையில் உரிய மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் விரும்பிய வண்ணம் குழந்தை பிறக்கலாம் என்கிறது திருமந்திரம். நடைமுறையில் இதனைப் பின்பற்ற, தகுந்த யோக ஆசிரியரிடம் பயிற்சி பெற வேண்டும். பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி அவசியம். இன்னொரு வழிமுறை, தாய் மாதவிலக்கான நாளை முதல் நாள் என்றும் அடுத்த நாளை இரண்டாம் நாள் என்றும் தொடர்ந்து கணக்கிட்டு 5,7,9,11,13,15 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் குழந்தை தரிக்குமானால் அது பெண்ணாகும். 6,8,10,12,14,16 போன்ற இரட்டைப்படை நாட்களில் குழந்தை தரிக்குமானால் ஆணாகும். இங்கு ஒரு நாள் என்பது விடியற்காலை 5 மணி வாக்கில் சூரிய உதயத்தோடு தொடங்குவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மறுநாள் காலை 5 மணிவரை ஒரு நாள் நீடிக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு நாளைத் தொடங்கும் மேனாட்டு முறைக் கணக்கு இங்கு செல்லாது. இந்த வழிமுறை ஞானவெட்டி,பாகவதம் முதலிய பல பழைய நூல்களில் உள்ளது. இத்தகைய வழிகளைப் பின்பற்றியே அந்தக் காலத்தில் தமிழ் மன்னர்கள், பேரரசர்கள் போன்றோர் விரும்பிய வண்ணம் வாரிசுகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு ஆலோசனை கூற அருகிலேயே ஞானிகள்,யோகியர் இருந்திருக்கிறார்கள். திருமந்திரத்தின் கரு உற்பத்தி அதிகாரத்திலிருந்து இன்னுமொரு பாடல். 

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

இங்கு கால் என்றால் (மூச்சுக்) காற்று என்று பொருள். கரு தரிக்கும் வேளையில் தந்தையின் வலது நாசியில் காற்று மிகுந்து வந்தால் குழவி (குழந்தை) ஆணாகும். இடது என்றால் பெண்ணாகும். மலக் காற்றாகிய அபானன் எதிர்த்து வருமானால் இரட்டைப் பிள்ளைகள் பிறப்பார்கள். தாய்க்கும் தந்தைக்கும் மூச்சுக்காற்று ஒத்து வருமானால் பிறப்பது ஆணுமின்றி பெண்ணுமின்றி அலியாகும். இந்த மூச்சுக் காற்று இயற்கையாக சுமார் ஒன்றரை மணி நேரத்தில் ஒரு நாசியிலிருந்து இன்னொன்றுக்கு மாறும். உடனடியாக மாற்ற விரும்பினால் இடது புறம் சற்றுத் திரும்பி படுத்தால் போதும், மூச்சு வலது நாசிக்குச் சென்று விடும். வலப்பக்கம் சற்று நேரம் படுத்திருந்தால் மூச்சு இடது நாசியில் செல்லத் தொடங்கும். சிலர் ஒரு நாசித் துவாரத்தை பஞ்சு வைத்து அடைப்பதன் மூலம் மற்ற நாசியில் மூச்சு ஒடச் செய்வர். முறையாக யோகாசிரியர் ஒருவரிடம் பயிற்சி பெற்ற பின்னரே இத்தகைய வழி முறைகளைக் கையாளலாம். அதன்வழி பிரச்சினையைத் தவிர்க்கலாம்.

Sugar சர்க்கரை நோய் - (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்

இன்சுலின் சுரக்க… !!!

சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் உள்ள இரண்டாவது 
நாடு இந்தியா. பெயரில் சர்க்கரை இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்தத் தவறினால், சில ஆண்டுகளில் இந்த நோய்ப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துவிடுவோம் என, கசப்பான செய்தியைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். பச்சிளம் குழந்தைகளுக்குக்கூட, டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது என்பது துயரம்தான். வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம் காரணமாக 25-35 வயதிலேயே பலருக்கும் டைப் 2 சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. 
நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அதைக் கட்டுக்குள் கொண்டுவர, மூளை கணையத்துக்கு ஆணையிடும். உடனே, இன்சுலின் சுரந்து திசுக்கள் அந்த குளுக்கோஸைப் பயன்படுத்தத் துணைபுரியும். இன்சுலின் சுரப்பு இல்லாமல் போனாலோ, குறைந்தாலோ, வீரியம் குறைந்தாலோ, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதையே, சர்க்கரை நோய் என்கிறோம். நம் உடலில் சர்க்கரையின் அளவு 80-120 வரை இருப்பதுதான் சராசரி அளவு. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து பரிசோதனை செய்யும்போது, 180-க்கு கீழ் இருக்க வேண்டும் 
உடல் பருமனானவர்கள், தொப்பை உள்ளவர்கள், அதிக மாவுச்சத்து, குறைந்த நார்ச்சத்து உணவுகளை உட்கொள்பவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், மரபியல் காரணங்கள் போன்றவற்றால், இன்சுலின் சுரப்பு பாதிக்கும். 
இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய, உணவுப் பழக்கத்திலும், வாழ்வியல் பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம். இதற்கு மூன்று “இ” (Exercise, Eating, Emotional (உடற்பயிற்சி, உணவு முறை, மனநிலை) மிகவும் அவசியம். மூன்றில் ஒருவர் மட்டுமே இந்த மூன்று ‘இ’ யையும் சரியாகப் பின்பற்றுகின்றனர். மற்றவர்கள் இதில் இரண்டைக்கூட பின்பற்றுவது இல்லை. 
கணையத்தை பலப்படுத்தும் உணவுகள் 
காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக்கூடியவையே. 
150 மி.லி நீரில், 100 கிராம் அன்று பூத்த, ஆவாரம் பூவைப் போட்டு, மூடிவைத்து நீர் 100 மி.லி-யாக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும். ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு எடுக்க வேண்டும். நெல்லிச் சாற்றையும், ஆவாரம் பூ டிகாக்ஷனையும் தலா 50 மி.லி கலந்து, சிறிது தேன் கலந்து பருக வேண்டும். 
இது, கணையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர, இன்சுலின் சுரப்பு சீராகும். ஆவாரம் பூவில் கேசைன் (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இந்த ரசாயனம் புத்தம்புதிய ஆவாரம் பூவில்தான் இருக்கும். மேலும், ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆவாரம்பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும். 
நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், வீக்கம், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும். இந்தக் கஷாயத்தைத் தினமும் எடுத்துக்கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்த மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை. 
சர்க்கரை நோய் வராமல் தடுக்க… 
அனைவருக்கும் உடல் உழைப்பு அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும். 
உணவில் மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்தும் புரதமும் அதிகமாகவும் இருக்க வேண்டும். கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளில் இந்த மூன்று சத்துக்களும் சரியான அளவில் இருக்கின்றன. இதைப் பிரதான உணவாக மாற்றிக்கொண்டால், சர்க்கரை அதிகமாக உடலில் சேராது. சாப்பிட்ட உணவு மெதுவாக செரிமானம் ஆவதால், இன்சுலின் தேவை அதிகம் இருக்காது. 
கஞ்சி, கூழ், பழச்சாறு எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே, திரவ உணவை, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், களி அடையாகச் செய்து சாப்பிடலாம். 
உணர்வுகள் நேர்மறையாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றோ, வந்துவிடுமோ என்றோ பயந்து, கவலைப்பட்டு, நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தக் கூடாது. பயத்தை விரட்டி எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நோயை எதிர்கொண்டு சரிசெய்யுங்கள். ஆல் தி பெஸ்ட்! 

-ambikarthikeyan
http://tamilnanbargal.com/node/61771

Friday, October 30, 2015

அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன?


 

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம்.

அதே போல் தான் நாட்களின் பெயர்களும்
பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமை என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சக்ர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது?

அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள்.

என்றேன் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர்.

இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். 
க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்
றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்?

இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம்.

பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம்,கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்)

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது
(10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது
அல்ல(4நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை

(2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை
(3 முக்கால்)

தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமை



Thursday, October 29, 2015

ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள்... சாத்தியமா?



மூன்று சூரியன்கள் சாத்தியமில்லை ஆனால், சூரியனின் பிம்பங்கள் சாத்தியம். புவியில் இருந்து பார்க்கையில் அது மூன்று சூரியன்களைப் போன்று நமக்குத் தெரிவதால் அப்படிச் சொல்லிக் கொள்கிறோம்.

இது ஒரு வளிமண்டலத்து ஒளியியல் தோற்றப்பாடு (Atmospheric Phenomenon). ஆங்கிலத்தில் Sun Dog என்று சொல்வார்கள். அறிவியலில் அதனை  Parhelion என்பார்கள். பன்மையில் சொல்வதென்றால் Parhelia.

சமயங்களில் இட வலமாக இரண்டு சூரிய பிம்பங்களோடு ஒளி வட்டமும் சேர்ந்து தோன்றும். அந்த ஒளிவட்டத்தினை 22° Halo என்பார்கள். தமிழில் பரிவேடம். இது சூரியன், நிலா இரண்டைச் சுற்றியும் ஏற்படும். சூரியனைச் சுற்றிச் சற்றே பெரிய அளவில் ஏற்படும் ஒளிவட்டத்தினை அகல்வட்டம் என்று சொல்வார்கள். அப்படி அகல்வட்டம் ஏற்பட்டால் மழை பெய்யும் என்று சொல்வார்கள். அகல்வட்டம் பகல்மழை என்ற சொற்றொடர் அதனை உறுதி செய்யும்.

இந்த நிகழ்வு ஒன்றும் ஆச்சர்யப்படக்கூடியவை அல்ல. உலகின் பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அரிஸ்டாட்டில் காலம் தொட்டு அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ 320 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இது அவதானிக்கப்பட்டுள்ளது. வானை நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத நமக்குதான் இது ஆச்சர்யமளிக்கக்கூடும்.

இனி அறிவியல் விளக்கம். இந்நிகழ்வு சூரியன் உதிக்கும்போதோ அல்லது மறையும் போதோதான் நிகழும். அதாவது சூரியன் அடிவானத்தில் இருக்க வேண்டும். அதற்கு இணையான தளத்தில் பார்வையாளரும் இருக்க வேண்டும்.

முக்கியமாக வளிமண்டலத்தில் குருள் மேகங்களில் (Cirrus Clouds) தட்டைவடித்தில் அறுங்கோன பனிப்படிகங்கள் (Plate Shaped Hexagonal Ice Crystals) இருக்க வேண்டும்.  இந்தப் படிகங்கள் ஒரு முப்பட்டகத்தினைப் போலச் செயல்பட்டு, அதற்குள் பாயும் சூரிய ஒளியினை 22° அளவில் ஒளிவிலகள் ஏற்படச் செய்கின்றன.

இந்தப் படிகங்கள் ஒழுங்கற்று அமைந்திருந்தால் சூரியனைச் சுற்றி பரிவேடம் ஏற்படும். மாறாக, செங்குத்தாக ஒரே சீராக அமையுமானால் முச்சூரியத் தோற்றம் (Sun Dog) ஏற்படும்.

ஆக, சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், அந்த அறுங்கோணப் படிகங்களில் பட்டு பிரதிபலிக்கப்பட்டு வரும் ஒளிக்கதிர்களும் நம்மை வந்து அடையும்பொழுது சூரியனுக்கு வலமும் இடமுமாக மேலும் இரண்டு சூரியன்கள் இருப்பதைப் போன்று நமக்குத் தோற்றமளிக்கும்.

படங்கள் எடுக்கப்பட்ட தளங்கள் :
http:// apollo. lsc.vsc.edu/classes/met130/notes/chapter19/graphics/sundogs_schem.jpg
http://www. islandnet .com/~see/weather/graphics/photos/sundog.gif

கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்.

நம் உடலில் 

கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்.

1. மரபணு மாற்றப்பட்ட உணவு:
DNA MODIFIED FOODS/HYBRID:
அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).

2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (ACT-II)
 MICROWAVED POPCORN.

3. கேன் செய்யப்பட்ட உணவு: 
 (CANNED, PACKAGED DRINKS):
 REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை பாதிக்கும்.

4.எரிக்கப்பட்ட இறைச்சி:
GRILLED MEATS: அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது.

5.வெள்ளை சக்கரை:
REFINED SUGAR: கரும்பில் இருந்து எடுக்கும் சக்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சக்கரையை 'மந்த விஷமாக' மாக மாறுகிறது. வெள்ளை சக்கரைக்கு பதில் நாட்டு சக்கரை, பனைவெல்லம், தேன் போன்றவைகளை தேர்ந்தெடுங்கள்.

6. விற்பனைக்கு வரும் உப்பிட்ட உணவுகள், ஊறுகாய் வகைகள்:
 (SALTED, PICKLED FOODS):
விற்பனைக்கு வரும் உப்பிட்டு பாடம் செய்யப்பட்ட உணவுகள், ஊறுகாய் வகைகளில் நிச்சயம் NITRATE செய்யப்பட்ட பதனசரக்கு சேர்க்கப்பட்டிருக்கும். இவைகளை நீண்ட நாள் உபயோகத்தில் பதனசரக்குகள் நமக்கு விஷத்தன்மை வாய்ந்த NITRATES ஐ உடலில் செலுத்தி வளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

7. சோடா மற்றும் கரியமிலம் ஊட்டப்பட்ட பானங்கள்:
கோக் முதல் போவோண்டோ அனைத்திலும் மேல சொன்ன வெள்ளை சக்கரை வகைதான் அதிகம். ஒரு சில பானங்களில் வெள்ளை சக்கரையை விட கொடூரமான சோளச்சக்கரை (CORN SYRUP) சேர்கிறார்கள். இது நம் உடலில் அதிகபடியானவளர்ச்சிதை மாற்றங்களை உருவாகிறது.

8. சுத்திகரிக்கப்பட்டு வெள்ளை ஆக்கப்பட்ட மாவு வகைகள்: REFINED WHITE FLOURS:
மைதா, ATTA, தோசா MIX போன்ற மாவு வகைகள் தான். கடையில் விற்கப்படும் 80% மாவு வகைகளில் சுத்திகரிக்க CAUSTIC SODA முதல் BROMIDE வரை கலப்பார்கள். அதனால் தான் சப்பாத்தி கூட பூரி போல உப்பும்...

9.பண்ணை மீன்கள்:
FARMED FISH: பண்ணை மீன்கள் ஒரே தொட்டியோ குட்டையில் வளர்க்க படுவதால் தொற்றும் அதிகம், தொற்று வராமல், பரவாமல் இருக்க ஒவ்வொரு மீனுக்கும் ANTIBIOTIC ஊசி போடப்படும், அதைவிட PESTICIDE செய்யப்பட்ட நீரில் தான் வளர்கிறது. விலை மலிவில் கேன்சர் செல்கள் தூண்ட காரணமான ரசாயனங்களை மறைமுகமாக வாரம் ஒரு முறை நாம் எடுக்கிறோம். மீனில் இருந்து பெறவேண்டிய ஒமேகா-3 FATTY ACIDS வளர்ப்பு மீன்களில் 1% கூட இருக்காது. எப்பொழுதும் பிரெஷ் கடல் மீன் தான் சிறந்தது.

10.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்:
Hydrogenated & Refined Oils: விதைகள், காய் கறிகளில் இருந்து எண்ணெய்களை எடுக்க கம்பெனிகள் கையாளும் முறையில் பல ரசாயனங்கள் உட்படுத்தப்படுகிறது. உடல் சற்றும் ஏற்றுக்கொள்ளாத வகையில் பல இரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட எண்ணைகளில் தான் நாமும் நம் குடும்பநபர்களும் பல உணவுகளை சமைத்து உண்கிறோம். அருகில் கிடைக்கும் செக்கில் ஆட்டிய தேங்காய், கடலை எண்ணைகளை வாங்கி உபயோகிக்கவும்.

மேல் சொன்ன உணவுகள் தான் நாம் தினமும் உபயோகிப்போம். நல்ல தரமான பொருள் நம் அருகிலேயே கிடைக்கும். தேடிப்பிடித்துதான் வாங்க வேண்டும்.

முடிந்த வரை - "SUGAR FREE", "DIET", "LITE", "FAT FREE" போன்று அச்சிடப்பட்ட பொருள்களை தவிர்த்தால் கேன்சர் வர காரணமான ரசாயனத்தையும் தவிர்க்கலாம்.


Monday, October 26, 2015

மண் வகைக்கு ஏற்ற மர வகைகள்



இந்தியாவில்  எந்தெந்த மண்ணில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

கரிசல் மண்:
புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி ,சவுக்கு ,வேம்பு ,வாகை

வண்டல் மண்:
தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் ,சவுண்டல் ,புளி

களர்மண்:
குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை

உவர் மண் :
சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு

அமில நிலம் :
குமிழ்,சில்வர் ஒக்

சதுப்பு நிலம் , ஈரம் அதிகம் உள்ள நிலம் :
பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை ,புங்கன்

வறண்ட மண் :
ஆயிலை , பனை ,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்

களிமண் :
வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேல்

சுண்ணாம்பு படிவம் உள்ள மண்:
வேம்பு, புங்கன் ,புளி, வெள்வேள் சுபாபுல்

குறைந்த அழமான மண் :
ஆயிலை ,ஆச்சா , வேம்பு,புளி,வகை,பனை

இந்த மண் வகைகளை பயன்படுத்தி மரக்கன்றுகள் (saplings) வளர்க்கலாம்.

இவ்வாறு வளர்க்கப்படும் மரங்கள் அனைத்தும் வளமுடன் காணப்படும்.

{ மரம் வளர்ப்போம் வாருங்கள் }

Sunday, October 25, 2015

ரசாயன உரமா விஷமா?


முதன் முதலாக ரசாயன உரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டபோது விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

தொழு உரம், தழையுரம், சாண உரம் என்று தேடியலைய வேண்டியதில்லை. காசைக் கொடுத்தால் விதவிதமான ரசாயன உர மூட்டைகள் வீட்டில் வந்து இறங்கிவிடும். எந்தப் பயிருக்கு, எந்த உரத்தை எவ்வளவு இட வேண்டும் என்பதையெல்லாம் விவசாயிகளுக்குப் பாடம் நடத்தின உர நிறுவனங்கள்.

முதல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு விளைச்சல் அபரிமிதமாகத்தான் இருந்தது. மேலும் மேலும் அதிக அளவில் ரசாயன உரங்களைப் போட்டால் இன்னும் அதிக அளவில் விளைச்சல் வருமென்று எண்ணிக் கடன்பட்டுக்கூட ரசாயன உரங்களை வாங்கி வயல்களில் கொட்டினார்கள். அடுத்து விளைச்சல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. மண்ணின் இயற்கை வளம் குறைந்துபோயிற்று. வயலில் போட்ட முதலைக்கூட மீட்க முடியாமல் விவசாயிகள் இழப்புக்கு ஆளானார்கள். உலகம் முழுவதிலும் இதே மாதிரியான பிரச்சினைகள் தலைதூக்கின.

இயற்கை உரங்களின் நன்மைகள் 

உலகெங்கிலும் உள்ள விவசாய விஞ்ஞானிகள் செயற்கையான ரசாயன உரங்களால் ஏற்பட்ட விளைவுகளைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினார்கள். பிரான்ஸில் உள்ள இன்செர்ம் எனும் உடல் நல மருத்துவ ஆய்வு நிலையம் தொழு உரம், இலையுரம் போன்ற இயற்கையான நைட்ரஜன் அடங்கிய உரங்களைப் பயிர்களுக்கு வழங்குவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுகிறது.

லெட்டூஸ் செடிகளுக்கு இயற்கை உரங்களை இடும்போது அவற்றின் எடை, விளைச்சலின் அளவு மற்றும் புரத உள்ளடக்கம் ஆகியவை குறைவதில்லை. ஆனால், அவற்றில் தீமை செய்கிற நைட்ரேட் எச்சங்களின் அளவு மிகவும் குறைந்துவிடுகிறது. இதற்கு மாறாக, செயற்கை ரசாயன உரங்கள் ஊட்டி வளர்க்கப்பட்ட லெட்டூஸ் இலைகளில் உட்கவரப்படாத நைட்ரேட் சத்துகள் அதிக அளவில் போய்த் தேங்கிவிடுகின்றன.

பிரான்ஸ் ஆய்வர்கள் ஆமணக்குப் பிண்ணாக்கை ஒரு பாத்தியில் உள்ள லெட்டூஸ் செடிகளுக்கு இட்டார்கள். அதே அளவான இன்னொரு பாத்தியிலுள்ள செடிகளுக்கு அதே அளவு நைட்ரஜன் சத்தைத் தருகிற அளவிலான அம்மோனியம் நைட்ரேட், சோடியம் நைட்ரேட் ஆகிய ரசாயன உரங்களைப் போட்டார்கள். இயற்கை உரத்தை உண்டு வளர்ந்த செடிகளில் இருந்ததைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமான நைட்ரேட் எச்சங்கள் செயற்கை உரமிடப்பட்ட செடிகளின் இலைகளில் காணப்பட்டன.

குடிநீரில் நைட்ரேட் நச்சு 

வயல்களில் தூவப்படும் ரசாயன உரங்களின் கணிசமான விகிதம் பாசன நீரில் கரைந்து அடித்துச் செல்லப்பட்டு வெளியேறி, நிலத்தடி நீரிலும் அருகிலுள்ள நீர் நிலைகளிலும் போய்ச் சேர்ந்துவிடுகிறது. இதன் காரணமாக அவற்றில் நைட்ரேட் செறிவு பாதுகாப்பான அளவைவிடக் கூடுதலாகிவிடுகிறது. பிரான்ஸின் குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சினை. எந்த ஒரு ஊரிலிருந்தும் குடிநீரில் நைட்ரேட் நச்சு அளவுக்கு மீறிப் போய்விட்டதாக நுகர்வோர் அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வழக்குத் தொடர ஆயத்தமாக இருக்கிறார்கள்.

நீர்நிலைகளில் ரசாயனங்கள் கலப்பது நீரை மாசுபடுத்தி,(Water runoff) அதில் வாழும் உயிரினங்களுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனின் செறிவையும் குறைத்துவிடுகிறது. நீர்த்தாவரங்களும் மீன்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. அந்த நீரைப் பருகும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் உண்டாகும் நீலநிறக் குழந்தை நோய் மற்றும் ரத்த சோகைக் கோளாறுகள் தோன்றுகின்றன.

Courtesy: Hindu

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உட்கவர்ந்துகொண்டு அதை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்சென்று விநியோகிக்கிறது. ரத்தத்தில் நைட்ரேட்டுகள் புகுந்துவிட்டால் ஹீமோகு ளோபின் மெட்ஹீமோகுளோபினாக மாற்றப்படும். அதற்கு ஆக்சிஜனுடன் இணைகிற திறன் இராது. எனவே, உடலுக்குள் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு, உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்.

நீலநிற ரத்தம் 

நல்ல ரத்தமுள்ள குழந்தைகள் ரோஜா நிற உடலுடன் இருக்கும். மெட்ஹீமோகுளோபின் ரத்தத்தில் அதிகமாகிப்போனால், அவை நீல நிறமுள்ளதாகிவிடும். இதயம் சரியாகச் செயல்படாதபோதும் இதே போன்ற கோளாறு ஏற்படும். நைட்ரேட்டுகள் ஜீரண மண்டலத்தில் புகுமானால், அவை நைட்ரோசமைன்கள் என்ற கூட்டுப்பொருளாக மாறும். அது உடலில் புற்றுநோயை உண்டாக்கக்கூடும். ஐரோப்பிய பொதுச்சந்தை அமைப்பு, குடிநீரில் லிட்டருக்கு 50 மில்லி கிராமுக்கு மேல் நைட்ரேட்டுகள் இருக்கக் கூடாது என்று விதித்திருக்கிறது. பிரிட்டனில் இந்த உச்சவரம்பு 100 மில்லி கிராமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயலுக்கு இடப்படும் நைட்ரேட் உரத்தில் எவ்வளவு விகிதம் தாவரங்களால் உட்கவரப்படுகிறது, அது எந்த வகையில் உட்கவரப்படுகிறது, மீதமுள்ள விகிதம் என்னவாகிறது, அது நீர்நிலைகளிலும் நிலத்தடி நீரிலும் எந்த அளவில், எவ்வாறான காரணிகளின் பங்களிப்புடன் கலக்கிறது, நைட்ரேட்டுகள் விஷமற்ற கூறுகளாகச் சிதைய எவ்வளவு காலம் பிடிக்கிறது என்பன போன்ற பல விஷயங்கள் இன்னமும் உறுதியாக விளங்கிக்கொள்ளப்படவில்லை. நைட்ரஜன் சுழல் என்ற தாவரவியல் நிகழ்வும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.

தாவரவியல் முறையில் நைட்ரஜனை உட்கவர்கிற பயறு, உளுந்து, மொச்சை போன்ற இரு வித்திலைப் பயிர்கள் காற்றிலுள்ள நைட்ரஜனை உட்கவர்ந்து, தமது வேர் முடிச்சுகளில் சேமிக்கின்றன.

மண்ணில் நைட்ரஜன் சத்தைக் கூட்டுவதில் இது மற்றெல்லா முறைகளையும் விடப் பத்திரமானது. ஆனால், விவசாயிகளுக்கு ரசாயன உரங்களைத் தூவுவதுதான் சுலபமாகத் தோன்றுகிறது. பிரான்ஸ் ஆய்வகம் சம அளவிலான ஆறு பாத்திகளில் வெவ்வேறு ரசாயன உரங்களையும், ஆமணக்குப் பிண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களையும் இட்டு லெட்டூஸ்களை வளர்த்தது. ஏழாவதாக ஒரு பாத்தியில், எந்த உரமும் இடாமல் லெட்டூஸ் வளர்க்கப்பட்டது.

எல்லாப் பாத்திகளிலும் அறுவடைக்குப் பின் விளைச்சல் அளவு, பயிரில் புரதச் சத்து அளவு, கனிமச் சத்துகளின் அளவு மற்றும் வகைகள், உருளை வடிவத்தில் கிடைத்த லெட்டூஸ்களின் எண்ணிக்கை, பயன்படாத சக்கைப் பகுதியின் அளவு போன்ற அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. ஆனால், செடிகளில் நைட்ரேட் எச்சங்களின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டன. உரமிடப்படாத செடிகளில் மில்லியனில் 159 பங்கு என்ற அளவில் நைட்ரேட்டுகள் இருந்தன.

ஹெக்டேருக்கு 120 கிலோ அளவில் பிண்ணாக்கு ஊட்டப்பட்ட லெட்டூஸ்களில் மில்லியனுக்கு 319 பங்கு என்ற அளவிலும் ஹெக்டேருக்கு 200 கிலோ அளவில் பிண்ணாக்கு ஊட்டப்பட்ட லெட்டூஸ்களில் மில்லியனுக்கு 217 பங்கு என்ற அளவிலும் நைட்ரேட்டுகள் தென்பட்டன.

அம்மோனியம் நைட்ரேட் குறைவாகப் போடப்பட்ட லெட்டூஸ்களில் நைட்ரேட் அளவு மில்லியனுக்கு 534 பங்கு என்ற அளவிலும் உரம் அதிகமாகப் போடப்பட்ட லெட்டூஸ்களில் மில்லியனுக்கு 802 பங்கு என்ற அளவிலும் இருந்தது. சோடியம் நைட்ரேட்டைக் குறைவாகப் போட்ட பாத்திகளில் விளைந்த லெட்டூஸ்களில் நைட்ரேட் அளவு மில்லியனுக்கு 698 பங்காகவும், அதிகமாகப் போடப்பட்ட பாத்திகளில் விளைந்த லெட்டூஸ்களில் 991 பங்காகவும் இருந்தது.

இவ்வாறு இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் விளைச்சல் குறைந்துவிடாது; பயிர்களில் நச்சுக் கூட்டுப்பொருள்களின் அளவும் குறைவாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

– கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).        

Thursday, October 8, 2015

மறக்கப்பட்ட மரங்கள் - மரபை மீட்டெடுப்போம்

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்

‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?
ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோண்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல். இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறது ‘பழனிமலை பாதுகாப்புக் குழு’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு.
‘‘தமிழனோட நாகரிகம் தாவரத்தோட இணைஞ்சே இருந்திருக்கு சார். ஊர்ப் பெயர்கள்ல கூட மரங்களின் பெயரை வச்சு அழகு பார்த்திருக்காங்க நம் முன்னோர்கள். 

மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு இருந்திருக்கு. ஆனா, இன்னைக்கு அப்படி ஒரு மரம் இருந்துச்சா?ன்னு கேட்கற மாதிரி ஆகிருச்சு. மரங்களை இழந்து நாம மழையையும் இழந்துட்டோம்’’ – வருத்தத்தோடு ஆரம்பிக்கிறார் பழனிமலை பாதுகாப்புக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்திரன் கண்ணன்.
‘‘தமிழ்நாட்டுல இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பத்தி ஒரு அகராதியே போடலாம். அவ்வளவு செழிப்பா இருந்த பூமி இது. ‘உசில்’ மரங்கள் நிறைஞ்சு இருந்த இடம்தான் உசிலம்பட்டி. ‘இலுப்பை’ மரங்கள் நிறைஞ்ச பகுதி இலுப்பையூர், ‘விளாமரம்’ இருந்த இடம் விளாத்திகுளம், ‘வாகை’ மரங்கள் செழித்த பகுதி வாகைகுளம்… இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து இப்படி பல ஊர்ப் பெயர்கள்ல மரங்கள் இருக்கு. ஆனா, இன்னைக்கு அந்தந்த ஊர்கள்லயே அந்த மரங்களைக் காணோம்.

அதுக்கெல்லாம் பதிலா, ‘தைல’ மரம், ‘சீமைக் கருவேலம்’, ‘யூஃபோடீரியம்’, ‘தூங்குமூஞ்சி’ன்னு விதவிதமா வெளிநாட்டு மரங்கள் இங்க ஆக்கிரமிச்சிடுச்சு. இந்த மரங்கள் சீக்கிரமே வளர்ந்துரும். அதிகளவு நீரையும் உறிஞ்சும். இதனால, புல்வெளிகளுக்கு நீர் கிடைக்காம அழிய, அதை நம்பி வாழுற கால்நடைகளும் குறைஞ்சு, உயிர்ச் சுழற்சியே மொத்தமா மாறிடுச்சு. பார்த்தீனியம் செடிகள் நீர்நிலைகளையும் அழிச்சிருச்சு. இப்படி வளர்ற மரங்கள்ல காய்கள், பழங்கள்னு எதுவுமே வராது. அதனால பறவைகளும் இல்லாம போயிருச்சு’’ என ஆதங்கப்படுகிறவர், நம்மால் மறக்கப்பட்ட மரங்களின் மருத்துவ மகத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.

‘‘ உசில்" மரம் வறட்சியைத் தாங்கி வளரும். எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும். 

"வேங்கை" மரம் இன்னைக்கு அரிதாகிப் போச்சு. இந்த மரத்துல ஒரு குவளை செஞ்சு, அதுல தண்ணி ஊத்தி வச்சா, கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியைக் குடிச்சா சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேதத்தில் இதைப் பயன்படுத்துறாங்க. மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைத் தடுக்கும் மருந்து தயாரிக்கற ஆராய்ச்சி நடக்குது.

"இலுப்பை" மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய், தமிழர் கலாசாரத்துல ரொம்பக் காலமா விளக்கேத்த பயன்பட்டிருக்கு. இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது. 

"தோதகத்தி" மரத்துல எந்தப் பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள்ள மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்துல கண்டுபிடிச்சாங்க. அங்க தோதகத்தி மரத் துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க. ஆனா, இப்ப இது அரிதாகி வர்ற மரம்ங்கிறதால, தமிழக அரசு இதை வெட்ட தடை செஞ்சிருக்கு.

இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் குறுஞ்செடிகள்னு நம்ம ஊர்ல நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு. இதுல ‘துத்தி’ன்னு ஒரு செடி… மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளர்ற இடத்துல வச்சா, தொடர்ந்து பார்த்தீனியம் வளராது’’ என்கிறார் அவர் உற்சாகம் பொங்க. 1988ம் ஆண்டு தொடங்கி இப்படிப்பட்ட அரிதான மரங்களை வளர்த்து, அந்தக் கன்றுகளை மக்களுக்கு வழங்கி வருகிறது பழனிமலை பாதுகாப்புக் குழு.
‘‘ஆரம்பத்துல அரிதான மரங்கள், மூலிகை மரங்கள்னுதான் இதையெல்லாம் நினைச்சோம். அவற்றின் தாவரவியல் பெயர் சொல்லித்தான் மக்கள்கிட்டேயும் கொடுத்தோம். அப்புறம்தான் இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுப் பாரம்பரியம்னு தெரிய வந்துச்சு. அதனால இன்னும் இன்னும் நிறைய மரங்களைத் தேடி வனங்களுக்குப் போனோம். இன்னைக்கு எங்க நாற்றங்காலில் 65 வகையான மரக் கன்றுகள் இருக்கு. எல்லாமே பழமையான அரிதான மர வகைகள்.

புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்னைகளை இந்தத் தலைமுறையில் நாம சந்திச்சுக்கிட்டு இருக்கோம். வீட்டுக்கு ஏ.சியைப் போட்டு தங்களைக் குளிர்ச்சியா வச்சிக்க நினைக்கறவங்க, ஒரு பாரம்பரிய மரம் நட்டா இந்த பூமியும் குளிர்ச்சியாகும்னு நினைக்கணும். மழையை அதிகப்படுத்தி, நீர்வளத்தை தக்க வச்சு, இந்த பூமியை வளப்படுத்தவும் இது மாதிரி மரங்களைத்தான் நாம நம்பியாகணும்!’’ என்கிறார் அவர் அழுத்தமான குரலில்.

மரங்கள் தருதே ஷாம்பு:
* உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாகப் பயன்படுத்தலாம்.
* ‘வழுக்கை மரம்’ எனப்படுகிற ‘தடசு’ மரத்தின் பட்டையை சுடுநீரில் போட்டால், வழுவழு ஷாம்பு ரெடி. இந்த இரண்டு ஷாம்புக்களுக்கும் மருத்துவ குணங்கள் உண்டு.
* மருத மரத்தின் பட்டையைக் காய வைத்து, கஷாயம் பண்ணிக் குடித்தால், உடலில் கொழுப்புச் சத்து குறையும்.
* தாண்டி மரத்தில் காய்கிற தாண்டிப் பழம், மூலத்தைக் குணப்படுத்தக் கூடியது. சளி, வயிற்றுப் போக்கையும் இது கட்டுப்படுத்தும்.