Sunday, August 31, 2014

நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ?

சட்டம் என்ன சொல்கிறது

காப்பீடு (mediclaim) :

ஏற்கனவே உள்ள வியாதியை மறைச்சுட்டாறு, பாலிசி எடுத்தவர் அப்டின்னு இன்சூரன்ஸ் கம்பெனி சொல்லி, அதை அவங்க நிரூபிக்க முடியாம போய்டுச்சு ......... மக்கள் நமக்கு இந்த வியாதி இருக்குன்னு, நாள் கணக்கா, மாச கணக்கா, வருஷ கணக்கா, தெரியாமலே உயிர் வாழுறாங்க. பெரும்பாலும், திடீர்னுதான், உனக்கு இந்த வியாதி இருக்குன்னு தற்செயலா கண்டுபிடிக்கிறாங்க, மெடிக்கல் செக் up போகும்போது ......... கண்ணா, இன்சூரன்ஸ் கம்பெனி பணம் குடுக்கணும் கண்ணா........
III (2014) CPJ 373 (NC)


ஷாம்பூ போட்டு குளிக்கிறீங்க, ஆனா, அந்த ஷாம்பூ, நல்ல கண்டிஷன்ல இல்ல, ஷாம்பூ ஒரு சின்ன பாக்கெட் லதான் வாங்கி இருக்கீங்க, பில் இல்ல, நீங்க, நுகர்வோரா ? கண்டிப்பா. III (2014) CPJ 169
கிராமத்துல இருக்கீங்க, பஞ்சாயத்துக்கு வரி கட்டுறீங்க, அப்போ, நீங்க நுகர்வோரா ? ஆமா !!
III (2014) CPJ 427 (NC)

ஷாம்பூ, காலாவதி ஆகி, அஞ்சு வருஷம் ஆச்சு - முடி எல்லாம் போச்சு - அந்த முடி எல்லாம் சரி செஞ்ச சின்ன பொண்ணுக்கு, அஞ்சு வருஷம் அலைய விட்டு, Rs. 25,000 குடுத்தாங்க.
III (2014) CPJ 219 (NC)

கல்வி – பள்ளிக்கூடம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி இல்ல, பையனுக்கு இந்த ஸ்கூல் வேணாம்னு முடிவு பண்ணிட்டீங்க........ அப்போ, கட்டின பீஸ் ? சர்வீஸ் டாக்ஸ், கல்வி வரி தவிர எல்லாம் திரும்ப வாங்கலாம்.
III (2014) CPJ 191

மின்சார வாரியம் – மீட்டர் தப்பா ஓடுதுப்பா...... பில் தப்பு...... அதை தப்புன்னு சொல்லி, மன உளைச்சல், வழக்கு செலவு எல்லாம் குடுக்கலாம்........
III (2014) CPJ 169

மின்சாரம் தாக்கி சாவு – மின்சார வாரியம்தான் மின் இணைப்பு லைன் ஐ, சரியா வச்சுக்கணும் – இல்லாட்டி, அவங்கதான் தண்டம் அழனும்........... தப்பு, அவங்க மேலதான்......
III (2014) CPJ 387 (NC)

மருத்துவ சேவை குறைபாடு – தவறான அணுகுமுறை — முறைப்படி மருத்துவம் பார்க்காததால், நோயாளி இறந்து போகிறார் – மருத்துவமனை ரூபாய் பத்து லட்சம் நஷ்டி வழங்க வேண்டும்.
III (2014) CPJ 282 (NC)

வண்டி பைனான்சில் எடுத்து, நீங்க பணம் கட்டாம கம்பனிகாரன் தூக்கி, வண்டிய ஏலத்துல வித்துட்டா, கம்பெனி சர்வீஸ் ல எந்த குறையும் கிடையாது.
III (2014) CPJ 333 (NC)

நீங்க வீடு வாங்கி இருக்கீங்க. ஆனா, உங்க இடத்து சொந்தகாரங்களுக்கும், கட்டி குடுத்த பில்டர்க்கும் பிரச்சினை, அதனால, உங்களுக்கு கிரைய பத்திரம் பதிஞ்சு தர மாட்டேங்கிறாங்க............. நேரா நுகர்வோர் நீதிமன்றம் போங்க........ பத்திரம் பதிஞ்சு குடுப்பாங்க...... என்ன வெல்லாடுரான்களா?
III (2014) CPJ 248 (NC)

இன்சூரன்ஸ் – தற்காலிக premium இல்லாட்டி, நிபந்தனை premium வாங்கி, பாலிசி கேட்டா, பரிசீலனையில் இருக்குன்னு கம்பெனி சொல்லுது. நீங்களும் சரின்னு விட்டுறீங்க........ திடீர்னு ஒரு நாள், வண்டி காணோம், விபத்து எற்பட்டுடுச்சு, கிளைம் கொடுங்கன்னு கேட்டா, வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லன்னு சொல்றாங்கன்னு வச்சுக்க............. நேரா, கன்சூமர் கோர்ட் தான்.........யாரு, எங்க கிட்டவேயா ?
III (2014) CPJ 213 (NC)

எல் ஐ c, எல் ஐ c அப்டின்னு agent வராங்க.......... பாலிசி கேக்குறாங்க...... பணமும் கட்டுறோம்...... ஆனா, agent வாங்கி வாய்ல போட்டுட்டு போயட்டங்கன்னு வைங்க.......... யார் நம்ம காசுக்கு பொறுப்பு ? agent –ஆ ? இல்ல கம்பெனிகாரனா ? முதல்ல, agentக்கு கம்பெனி அதிகாரம் குடுத்திருக்கான்னு பாருங்க......... இல்லியா, நம்ம பணம், திருப்பதி உண்டியல்ல கோவிந்தா........ கோவிந்தா......... lic பணம் தர மாட்டாங்களாம்......
III (2014) CPJ 161

ஆயுள் காப்பீடு எடுக்குறீங்க,,,,,,,,,, ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, நாலு பாலிசி,,,,,,,, செத்து போய்ட்டாங்க..... அப்போ, பழைய பாலிசி இருக்கிறத என் மறைசீங்கன்னு இன்சூரன்ஸ் கம்பெனி கேட்டா, பழச வேணும்னே மறச்சா, அத காமிச்சா வேற பாலிசி போட விட மாட்டாங்கன்னு வேணும்னே மறைச்சா மட்டும்தான், கிளைம் கிடைக்காது. இல்லாட்டி, குடுக்கணுமாம்.
III (2014) CPJ 340 (NC)

— சட்ட விரோத கமிஷன் — இது நுகர்வோர் நீதிமன்றத்தில் வராது, ஏன்னா, லஞ்சம் ஊழல் சம்பந்தமா இங்க விசாரிக்க மாட்டாங்க......... போங்க, போங்க......... உரிய கோர்ட் க்கு
III (2014) CPJ 266 (NC)

மருத்துவ குறைபாடு – சிகிச்சை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டதால், நுகர்வோர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை ஏற்க முடியாது.
III (2014) CPJ 390 (NC)

பலவித நடவடிக்கைகள் — சட்டப்படி செல்லாது — கம்பெனி எடுத்து சென்ற வண்டி, மிக குறைந்த விலைக்கு விற்கப்பட்டது — ஏற்கனவே சிவில் நீதிமன்றம் முடிவு செய்து விட்டதால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது. 
III (2014) CPJ 241 (NC)

பதினைந்து கோடிக்கும் மேலான கூட்டு நிரந்தர வைப்பு நிதி பிரச்சினை – அதிக ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டி இருப்பதால் நுகர்வோர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரிக்க முடியாது. 
III (2014) CPJ 230 (NC)

பொது PROVIDENT FUND ACCOUNT — கூட்டு கணக்கு — முதிர்வுக்கு பிறகு வட்டி வழங்கப்படவில்லை — போஸ்ட் மாஸ்டர், கணக்கு தொடங்கும்போதே, அது முறையாக PPF scheme விதி 3 இன் படி ஆரம்பிக்கபட்டுள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும், இல்லாவிட்டால், தண்டம் அழ வேண்டும், தவறு, போஸ்ட் ஆபீஸ் மீதே.

இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு எது பெஸ்ட்?


இது இன்ஷூரன்ஸ் ஸ்பெஷல். இன்ஷூரன்ஸ் தொடர்பான பல கட்டுரைகளை இந்த இதழ் முழுக்கத் தரப்பட்டுள்ளது. முதலில் ஆன்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லதா அல்லது ஆஃப்லைன் மூலம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லதா? என்பதைப் பார்த்துவிடுவோம்.

எண்டோவ்மென்ட், யூலிப் போன்ற பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களைவிட டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி அதிக பயன் தரக்கூடியது. குறைந்த பிரீமிய தொகையில் அதிக ஆயுள் கவரேஜ் கிடைப்பது டேர்ம் ப்ளானின் மிக முக்கிய பாசிட்டிவ் அம்சம்.

ஆனால், நம்மவர்கள் ஆயுள் காப்பீட்டை ஒரு முதலீடாகவே பார்ப்பதால், முதிர்வுத் தொகை எதுவும் கிடைக்காத டேர்ம் ப்ளானை அதிகம் விரும்புவதில்லை. இப்போது இந்த அணுகுமுறையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு டேர்ம் பாலிசிகளையும் எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள் பலர்.
டேர்ம் பாலிசியை ஆன்லைனில் எடுக்கும்போது பிரீமியம் கணிசமாக குறையும் என்றாலும், சரியான பாலிசியைத் தேர்வு செய்கிறோமா என்கிற குழப்பமும் இருக்கவே செய்யும். எனவே, ஏஜென்ட்கள் மூலம் பாலிசி எடுப்பதிலும், ஆன்லைன் மூலம் பாலிசி எடுப்பதிலும் உள்ள சாதக, பாதகங்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வோம்.

::::::::::::::::::::ஏஜென்ட்கள் மூலம்..!:::::::::::::::::

சாதகம்!

இன்ஷூரன்ஸ் விஷயத்தில் ஏஜென்ட்களின் வழிகாட்டுதல் அவசியமானது. நம் வருமானம், வேலை/தொழிலின் தன்மையைப் பொறுத்து எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுத்துக்கொள்ளலாம் என்பதை ஏஜென்டிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியும். மேலும், பல காப்பீட்டுத் திட்டங்கள் இருப்பதால் கூடுதல் பலன் தரக்கூடிய வகையில் எந்த பாலிசி எடுப்பது என்பதை ஏஜென்டிடம் கேட்கலாம்.
பிரீமியம் கட்ட ஏஜென்ட் நினைவுபடுத்துவார். இதனால் பாலிசி காலாவதி ஆவது தவிர்க்கப்படும்.
பாலிசி எடுக்கத் தேவையான ஆவணங்கள், தேவை எனில் மருத்துவப் பரிசோதனை போன்றவற்றுக்கு ஏஜென்ட் வழி காட்டுவார்.
பாலிசி க்ளைம் செய்யும்போது தேவையான ஆவணங்களைக் கேட்டு வாங்கி அவரே முன்நின்று அனைத்து வேலைகளையும் முடிப்பார். மேலும், எந்தெந்த காரணத்தினால் பாலிசி க்ளைம் கிடைப்பதில் தாமதம் ஆகும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால் க்ளைம் பெற்றுத் தருவதில் கவனமாக இருப்பார்.


பாதகம்!

சில காப்பீட்டு நிறுவனங்களில் குறிப்பிட்ட டேர்ம் ப்ளான்தான் நடைமுறையில் இருக்கும். அதில் பிரீமியம் அதிகமாக இருக்கும். அந்த பாலிசியையே ஏஜென்ட் பரிந்துரைத்தால் அதிக பிரீமியம் கட்டவேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, பாலிசி முதிர்வில் கட்டிய பிரீமியத்தைத் திரும்பக் கிடைக்கிற மாதிரியான டேர்ம் பாலிசிக்கு பிரீமியம் அதிகம்.
ஏஜென்ட் வேறு வேலைக்கு மாறியிருந்தால் பாலிசி சேவை கிடைக்காமல் போகும்.
பாலிசி விண்ணப்பத்தில் ஏஜென்ட் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டுவிடும் நடைமுறைதான் காணப்படுகிறது. இதனால், உடல்நலம் தொடர்பான சில விஷயங்கள் இடம்பெறாமல் போகலாம். இதனால் க்ளைமின்போது சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு.
::::::::::::::::::::::ஆன்லைன் மூலம்..!:::::::::::::::::::

சாதகம்!

ஏஜென்ட் கமிஷன் இல்லாமல் பாலிசி விற்கப்படுவதால் குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொண்ட பாலிசியை எடுக்கலாம். ஏஜென்ட்களிடம் எடுக்கும் பாலிசிக்கான பிரீமியத்தைவிட, ஆன்லைன் மூலம் எடுக்கும் காப்பீட்டின் பிரீமியம் 30 - 50% வரை குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு, 30 வயதுடைய ஒருவர் 50 லட்சம் ரூபாய்க்கு ஏஜென்ட் மூலம் டேர்ம் பாலிசி எடுக்கிறபோது ஆண்டுக்கு 14,000 ரூபாய் வரை பிரீமியம் செலுத்தவேண்டும். ஆனால், ஆன்லைன் மூலம் பாலிசி எடுத்தால் பிரீமியம் தொகை சுமார் ரூபாய் 7,000 மட்டுமே!
தேவைப்பட்டால் பாலிசி தொடர்பான விவரங்களைக் காப்பீடு வழங்கும் நிறுவனத்தின் கிளையில் நேரடியாக கேட்டுப் பெறலாம்.
தேவையான ஆவணங்கள், நடைமுறைகள், மருத்துவப் பரிசோதனைக்கு அருகிலுள்ள மருத்துவமனைகள் போன்ற விவரங்கள் ஆன்லைன் மூலமாகவும், காப்பீடு நிறுவனத்தின் கால்சென்டர் மூலமாகவும் பெறலாம்.
பல நிறுவனங்கள், ஒருவர் எவ்வளவு தொகைக்கு டேர்ம் ப்ளான் எடுக்கவேண்டும் என்பதைக் கணக்கிடும் கால்குலேட்டரை அதன் இணையதளத்திலே வைத்திருக்கின்றன. அதன் மூலம் பாலிசி தொகையை எளிதாக முடிவு செய்துகொள்ள முடியும்.
நமக்குப் பொருத்தமான பாலிசி எது, எவ்வளவு தொகைக்கு காப்பீடு எடுக்கலாம் என்கிற விவரங்களை நாமே தீர்மானிக்கலாம்.
பாலிசி விண்ணப்பத்தை நாமே பூர்த்தி செய்வதால் உடல்நலம் தொடர்பான விஷயங்கள் எல்லாம் இடம் பெற்றுவிடும். இதனால், க்ளைம் சுலபமாக இருக்கும்.

பாதகம்!

நமக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் திட்டம் எது என்பதை முடிவெடுப்பதில் சிக்கல் வரலாம்!
ஏகப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து எதை தேர்வு செய்வது என்கிற குழப்பம் இருக்கும். காப்பீடு எடுக்க நினைக்கும் எல்லோரும் அதுகுறித்த விழிப்பு உணர்வு உள்ளவர்கள் என்று சொல்ல முடியாது.
பாலிசிகள் குறித்து ஏற்படும் சந்தேகங்கள் விளக்கங்களுக்கு கால் சென்டரைத்தான் நம்பவேண்டும். சில நேரங்களில் மொழிப் பிரச்னையும் வரும்.
ஆன்லைனில் இன்ஷூரன்ஸ் எடுக்க கணினி மற்றும் இணையதள அறிவு அவசியம். மேலும், இணையதளம் மூலமாக பணம் கட்டுவதற்கு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது ஆன்லைன் பேங்கிங் வசதி உங்களுக்கு இருப்பது அவசியம்.
பாலிசியில் ஏதாவது பிரச்னை என்றால் அருகிலுள்ள கிளைக்கு சென்றுதான் சரிசெய்ய வேண்டும். ஆனால், ஆன்லைன் டேர்ம் ப்ளான் வழங்கும் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் கிளை எல்லா ஊர்களிலும் இருக்கும் என்று சொல்ல முடியாது. இது தேவையற்ற அலைச்சலை தரும்.
ஆன்லைனில் பாலிசி எடுக்கிறோம் எனில், எப்போது பிரீமியம் கட்டவேண்டும் என்பதை நாம்தான் கவனிக்கவேண்டும். சில நிறுவனங்கள் பிரீமியம் கட்டுவதை நினைவூட்டி எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் அனுப்பினாலும், இதை கவனிக்காமல்விட்டால் பாலிசி முடிவுக்கு வரும்.
ஆன்லைன் மூலம் பாலிசி விற்பனை வந்து சில வருடங்களே ஆவதால் க்ளைம் நடைமுறைகள் எந்த அளவிற்கு பாலிசிதாரருக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
க்ளைம் செய்வதற்கு தரும் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஒருவர் குறை இருந்தால், க்ளைம் பெறுவது தாமதம் ஆகலாம்.
பொதுவாக, ஏஜென்ட்கள் மூலம் எடுக்கப்படும் டேர்ம் ப்ளான்களின் சராசரி கவரேஜ் 18 முதல் 20 லட்சம் ரூபாயாக உள்ளது. இதுவே ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் டேர்ம் ப்ளான்களில் சராசரி கவரேஜ் 40 முதல் 50 லட்சம் ரூபாயாக உள்ளது. இதற்கு காரணம், சுயமாக முடிவு செய்து டேர்ம் ப்ளான் எடுப்பதால் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கிறது.

thanks - tamilmanifest
Sree Paramasivan's photo. 
Sree Paramasivan's photo.
Sree Paramasivan's photo.

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது....

தோடு : மூளையின் செயல்  றன்அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் : பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் : கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.

வங்கி : கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிரதுலம்பாடி
பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல் : வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம்
தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் : ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலுவடையும்.

மூக்குத்தி : மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு : கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான
அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம்தீர்க்கலாம் .

மெட்டி : மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்




பொட்டு : பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது....

தோடு : மூளையின் செயல் றன்அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .
நெற்றிச்சுட்டி : நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் : பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.
செயின் , நெக்லஸ் : கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்.

வங்கி : கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உருதிபடுதப்படிருகிரது.
லம்பாடிபெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல் : வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம்
தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் : ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலுவடையும்.

மூக்குத்தி : மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு : கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான
அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம்தீர்க்கலாம் .

மெட்டி : மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்

Saturday, August 30, 2014

படித்ததில் பிடித்த தத்துவங்கள் ....


1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.

3. வெளியே போனவள் இன்னும் வீடு திரும்பவில்லையே!
: இது பெற்றோர் கவலை
வீட்டிற்குள் போனவள் இன்னும் வெளியே வரவில்லையே!
: இது காதலனின் கவலை

4. பெண்கள் எதையும் அவ்வுளவு சீக்கிரம் நம்ப மாட்டார்கள், ஆனால் பெண்கள் அழகு என்று சொன்னால் மட்டும் உடனே நம்புகிறார்கள். . .

5.வெறும் அழகினால் ஆணின் உண்மையான
அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் ,
முட்டாள்.

6 அழகான பெண்ணிடம் அடக்கம் இல்லை ! அடக்கமான பெண்ணிடம் அழகில்லை ! இரண்டும் இருக்கும் பெண்ணை பார்த்ததில்லை !

7. காதல் ஒரு கைக்குட்டை போல சிலர் முகம் துடைக்கின்றன
பலர் கை துடைக்கின்றனர்,ஒருசிலர் மடித்து கடைசிவரை
ஒளித்தேவைத்துவிடுகின்றனர்

8. வாகிங்க் ,கூட்டிட்டு போகாத நாய்க்கும்
ஶாபிங்க் ,கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் ,
கண்டிப்பா ஒரு நாள் .வெறி பிடிக்கும் ,
.கஷ்டத்த பாக்காம கூட்டிட்டு போங்க

9.மனைவியுடனான சண்டையில் தோற்றுவிடுங்கள்,அதுதான் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான குறுக்கு வழி!!

10. எதை எல்லாம் நடக்கக்கூடாது
என்று எண்ணுகிறாயோ...அதெல்லாம் நடப்பது தான்
வாழ்க்கை!
படித்ததில் பிடித்த தத்துவங்கள் ....

1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.

3. வெளியே போனவள் இன்னும் வீடு திரும்பவில்லையே!
: இது பெற்றோர் கவலை
வீட்டிற்குள் போனவள் இன்னும் வெளியே வரவில்லையே!
: இது காதலனின் கவலை

4. பெண்கள் எதையும் அவ்வுளவு சீக்கிரம் நம்ப மாட்டார்கள், ஆனால் பெண்கள் அழகு என்று சொன்னால் மட்டும் உடனே நம்புகிறார்கள். . .

5.வெறும் அழகினால் ஆணின் உண்மையான
அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் ,
முட்டாள்.

6 அழகான பெண்ணிடம் அடக்கம் இல்லை ! அடக்கமான பெண்ணிடம் அழகில்லை ! இரண்டும் இருக்கும் பெண்ணை பார்த்ததில்லை !

7. காதல் ஒரு கைக்குட்டை போல சிலர் முகம் துடைக்கின்றன
பலர் கை துடைக்கின்றனர்,ஒருசிலர் மடித்து கடைசிவரை
ஒளித்தேவைத்துவிடுகின்றனர்

8. வாகிங்க் ,கூட்டிட்டு போகாத நாய்க்கும் 
ஶாபிங்க் ,கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் ,
கண்டிப்பா ஒரு நாள் .வெறி பிடிக்கும் ,
.கஷ்டத்த பாக்காம கூட்டிட்டு போங்க

9.மனைவியுடனான சண்டையில் தோற்றுவிடுங்கள்,அதுதான் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான குறுக்கு வழி!!
10. எதை எல்லாம் நடக்கக்கூடாது 
என்று எண்ணுகிறாயோ...அதெல்லாம் நடப்பது தான் 
வாழ்க்கை!

பத்திர பதிவு அலுவகங்களில், மோசடி செய்தால் என்னென்ன தண்டனைகள் ?







பத்திர பதிவு அலுவகங்களில், மோசடி செய்தால் என்னென்ன தண்டனைகள் ?
அரசு ஊழியர் : 

பதிவு ஏடுகளில் திருத்தல், சேர்த்தல் போன்ற மோசடிகள் செய்யும் அரசு ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் வரை சாதாரண அல்லது கடும்காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம் - இந்திய தண்டனை சட்ட பிரிவு 167 - (ஏழு ஆண்டுகள் வரை - பதிவு சட்டம் பிரிவு 81)                     

பொதுமக்கள் : 

 பதிவின் பொது பதிவாளர் முன் பொய் வாக்கு மூலம் கொடுத்தல், போலி தகவலை எழுதுதல், போலி ஆவணம் வரைபடம் தாக்கல் செய்தல், ஆள் மாறாட்டம் செய்வது போன்ற குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சாதாரண அல்லது கடும் காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். (இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 191,192,193,419,467,471 மற்றும் பதிவு சட்டம் பிரிவு 82)

ஆள் மாறாட்டம் –

தன்னை பத்திர பதிவு செய்தவர் என்று கூறி நடித்து பத்திரத்தை திரும்ப வாங்கி செல்வதும் ஆள் மாறாட்ட குற்றம்தான் – 
(பேரரசர் எதிர் கௌசல்யா, 5. பாம்பே எல். ஆர் 138 )

சாட்சி உடந்தை – 
வேறு ஒருவராக பதிவு அலுவலகத்தில் நடிப்பவரை உண்மையானவர் என அடையாளம் காட்டும் சாட்சியும் பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் தண்டனைக்குரியவர். 
(நீலகாந்தாராவ் சந்தாப்புல் எதிர் பேரரசர் – ஏ ஐ ஆர் 1922 – நாக்பூர் 86)

நல்ல உள்நோக்கம் இருந்தாலும் குற்றம், குற்றமே !

நல்ல உள்நோக்கத்துடன் ஒருவர் வேறு ஒருவர் போல் நடித்தாலும், அது குற்றம்தான். பிரிவு 82 இன் கீழ் தண்டிக்கப்பட கெட்ட உள்நோக்கம் (motive) அவசியமில்லை. ஆள்மாறாட்டம் மட்டுமே போதுமானது – 
(அரசி எதிர் லூத்திபேவா, 2 பெங்கால் எல் ஆர் 25 கிரிமினல் )

சகோதரி வேடம் :
ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். முதாலமவர் சொத்தினை அபகரிக்க மற்ற இருவரும் விற்பனை ஆவணம் தயாரித்தனர். அதில் ஒருவர் முதலாமவர் போல் நடித்து ஆவணம் பதிவு செய்யப்பட்டது. இந்த இருவருக்கும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 மற்றும் பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் தண்டனை வழங்கப்பட்டது 

(கங்கா திவ்யா எதிர் பேரரசர், ஏ ஐ ஆர் 1943 பாட்னா 227 @ பக்கம் 229)

கொடிது கொடிது உடந்தை கொடிது :

பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் அவரை ஏவி விட்டவரை விட கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – (அரசி எதிர் பிரசாத் ஜெயின் 8 W.R. (Cr) 16)

போலிகள் உருவாக்கத்துக்கு ஆயுள் தண்டனை - 

பண மதிப்புள்ள படிவ வடிவிலான அவ்வனங்களுக்கும் உயில்கள், தத்து அதிகார ஆவணங்கள் ஆகியவற்றுக்கும் நேரடி போலி ஆவணங்கள் அல்லது மின்னணு வடிவ போலி ஆவணங்கள் தயாரிப்பவர்களுக்கு பத்தாண்டுகள் வரை அல்லது ஆயுள் தண்டனை வரை சாதாரண, கடும் காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் – இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000)


அரசு ஊழியர் :

பதிவு ஏடுகளில் திருத்தல், சேர்த்தல் போன்ற மோசடிகள் செய்யும் அரசு ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் வரை சாதாரண அல்லது கடும்காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம் - இந்திய தண்டனை சட்ட பிரிவு 167 - (ஏழு ஆண்டுகள் வரை - பதிவு சட்டம் பிரிவு 81)

பொதுமக்கள் :

பதிவின் பொது பதிவாளர் முன் பொய் வாக்கு மூலம் கொடுத்தல், போலி தகவலை எழுதுதல், போலி ஆவணம் வரைபடம் தாக்கல் செய்தல், ஆள் மாறாட்டம் செய்வது போன்ற குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சாதாரண அல்லது கடும் காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். (இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 191,192,193,419,467,471 மற்றும் பதிவு சட்டம் பிரிவு 82)
ஆள் மாறாட்டம் –
தன்னை பத்திர பதிவு செய்தவர் என்று கூறி நடித்து பத்திரத்தை திரும்ப வாங்கி செல்வதும் ஆள் மாறாட்ட குற்றம்தான் –
(பேரரசர் எதிர் கௌசல்யா, 5. பாம்பே எல். ஆர் 138 )
சாட்சி உடந்தை –
வேறு ஒருவராக பதிவு அலுவலகத்தில் நடிப்பவரை உண்மையானவர் என அடையாளம் காட்டும் சாட்சியும் பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் தண்டனைக்குரியவர்.
(நீலகாந்தாராவ் சந்தாப்புல் எதிர் பேரரசர் – ஏ ஐ ஆர் 1922 – நாக்பூர் 86)
நல்ல உள்நோக்கம் இருந்தாலும் குற்றம், குற்றமே !
நல்ல உள்நோக்கத்துடன் ஒருவர் வேறு ஒருவர் போல் நடித்தாலும், அது குற்றம்தான். பிரிவு 82 இன் கீழ் தண்டிக்கப்பட கெட்ட உள்நோக்கம் (motive) அவசியமில்லை. ஆள்மாறாட்டம் மட்டுமே போதுமானது –
(அரசி எதிர் லூத்திபேவா, 2 பெங்கால் எல் ஆர் 25 கிரிமினல் )

சகோதரி வேடம் :

ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். முதாலமவர் சொத்தினை அபகரிக்க மற்ற இருவரும் விற்பனை ஆவணம் தயாரித்தனர். அதில் ஒருவர் முதலாமவர் போல் நடித்து ஆவணம் பதிவு செய்யப்பட்டது. இந்த இருவருக்கும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 மற்றும் பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் தண்டனை வழங்கப்பட்டது
(கங்கா திவ்யா எதிர் பேரரசர், ஏ ஐ ஆர் 1943 பாட்னா 227 @ பக்கம் 229)
கொடிது கொடிது உடந்தை கொடிது :
பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் அவரை ஏவி விட்டவரை விட கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – (அரசி எதிர் பிரசாத் ஜெயின் 8 W.R. (Cr) 16)
போலிகள் உருவாக்கத்துக்கு ஆயுள் தண்டனை -
பண மதிப்புள்ள படிவ வடிவிலான அவ்வனங்களுக்கும் உயில்கள், தத்து அதிகார ஆவணங்கள் ஆகியவற்றுக்கும் நேரடி போலி ஆவணங்கள் அல்லது மின்னணு வடிவ போலி ஆவணங்கள் தயாரிப்பவர்களுக்கு பத்தாண்டுகள் வரை அல்லது ஆயுள் தண்டனை வரை சாதாரண, கடும் காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் – இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000)

வறட்சியான பகுதிகளில் கற்றாழை சாகுபடி

வறட்சியான பகுதிகளில் கற்றாழை சாகுபடி
=====================================
by VINAYAGAM MURUGESAN 
நன்றி -  விகடன்

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருத்துவச் செடி. அழகுசாதன, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. எனவே, இந்தத் திட்ட அறிக்கையில் கற்றாழை சாகுபடி மற்றும் அதிலிருந்து ஜெல் பிரித்து எடுப்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, சொந்த நிலம் உள்ள விவசாயிகள் மேற் கொள்ள ஏதுவான தொழில் என்றாலும், குத்தகை நிலம் மூலமும் இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியும்.

வணிக ரீதியாக பயிரிட்டால் நல்ல வருமானம் நிச்சயம் என்றாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதால் கற்றாழை சாகுபடி குறித்து யோசிப்பதில்லை. வேளாண்மைத் துறை வழிகாட்டுதல்கள் மற்றும் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பவர்களுடன் கூட்டுவைத்துக் கொள்ளும்போது நல்ல வருமானம் கிடைக்கும் என்பது உண்மை.

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்தின் ஈரத் தன்மையைப் பாதுகாத்து சருமத்துக்கு கூடுதல் பொலிவையும் தருகிறது என்பதால் இதன் ஜெல்லை ஷேவ் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. தவிர, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக் காயங்கள் ஆகியவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

ரகங்கள்
-------------

கற்றாழையில் குர்குவா, சாகோட்ரின், கேப் என மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் முதல் இரண்டு வகைகள் பார்பலோயின் (Barbaloin) மற்றும் அலோ எமோடின் ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றி லிருந்து வலி நிவாரணி மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. கேப் கற்றாழை கால்நடை மருத்துவத்துக்குப் பயன்படுகிறது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை
-------------------------------------------------

வறட்சியான தட்பவெப்பத்தில் அதாவது 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளரும். எனினும் 25 – 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளிலும் பயிர் செய்யலாம். தமிழ்நாட்டில் ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்வதற்கு ஏற்றது. தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும், எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையைச் சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.

விதையும் விதைப்பும்
-----------------------------------

தாய்ச் செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து வாங்க வேண்டும். இந்தக் கன்றுகள் அனைத்தும் ஒரே அளவில் இருந்தால்தான் செடிகள் சீராக வளர்ந்து ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். பக்கக் கன்றுகளை வாங்கிவந்து அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடம் நனைத்தபிறகு நடவு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செடி அழுகல் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

கற்றாழையைத் தனிப் பயிராக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும். வளர்ந்த செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்து இருக்கும் என்பதால் காய் மற்றும் விதைகள் வராது. இதனால் கற்றாழையைப் பக்கக் கன்றுகள் மூலமாகத்தான் பயிர்ப்பெருக்கம் செய்ய வேண்டும்.

சாகுபடி பருவம்
-------------------------

வருடத்துக்கு இரண்டு பருவங்களில், அதாவது ஜூன் – ஜூலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. இலைகள் முதிர்ச்சி பெறும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். அப்போதுதான் இலையி லிருந்து தரமான ஜெல் கிடைக்கும். இதற்காக செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. என்றாலும், கூடுதல் நிலம் உள்ளவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஓர் அறுவடை எடுப்பதுபோல சுழற்சி முறையிலும் மேற்கொள்ளலாம்.

நிலம் தயாரித்தல்
-----------------------------

நிலத்தை இரண்டுமுறை உழவேண்டும். ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, நிலத்தைச் சமன் செய்து சிறிய சிறிய பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். செடிகள் வாளிப் பாக வளர்வதற்கு ஏற்ப ஒவ்வொரு செடிக்கும் மூன்று அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.

உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு
-----------------------------------------------

வளமான நிலம் எனில் தொழு உரம் மட்டும் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து உரம் கொடுக்க வேண்டும். இதனால் செடிகள் வாளிப்பாக வளர்வதுடன் அதிக ஜெல் கொண்ட இலைகள் கிடைக்கும்.

கற்றாழையை மானாவாரிப் பயிராக வும் பயிர் செய்யலாம். அதன் மொத்த பயிர் காலத்தில் ஐந்து முறை நீர்த் தேவையைக் கவனித்துக் கொண்டால் போதும். கற்றாழை செடியில் அதிகப் பூச்சிநோய் தோன்றுவதில்லை. நீர் தேங்கும் நிலமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே, நன்கு வடிகால் வசதி வேண்டும்.

மகசூல்
-----------

ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும். இலையில் 80-90% நீர் உள்ளதால் விரைவாக வாடிவிட வாய்ப்புள்ளது. இதனால் அறுவடை செய்த உடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து ஜெல்லைப் பிரித்தெடுக்க வேண்டும்.

அதாவது, செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்த ஆறு மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்த எடுத்துச் செல்ல வேண்டும். நடவு நட்ட காலத்திலிருந்து 7-8 மாதங்களில் மகசூல் எடுக்கலாம்.

செலவுகள் (ரூ)

நிலம் உழுதல் : 2,500
உரம் : 15,000
கற்றாழை கன்று : 70,000
(ஒரு கன்று ரூ.7)
நடவுக் கூலி : 10,000
பராமரிப்பு : 20,000
அறுவடை கூலி : 10,000
இதர செலவுகள் : 10,000
மொத்த செலவுகள் : 1,37,500

விற்பனை வரவு
-------------------------

செடிகளை அறுவடை செய்து அப்படியே விற்பனை செய்யும்பட்சத்தில் விற்பனை வருமானம் குறைவாகத்தான் கிடைக்கும். அதாவது, அறுவடை செய்த கற்றாழை செடிக்கு கிலோ ரூ.15 – ரூ.20 வரைதான் கிடைக்கும். அதே சமயத்தில் ஜெல் பிரித்து விற்பனை செய்கிறபோது, ஒரு கிலோ ஜெல்லுக்கு ரூ.75 – 100 வரை கிடைக்கும்.

ஜெல் எடுக்கத் திட்டமிடுகிறபோது 25% வரை கழிவு போகும். ஒரு கிலோ கற்றாழை ரூ.18 என சராசரியாக வைத்துக்கொண்டாலும் நமது உற்பத்தி 15 டன் என்கிறபோது, மொத்த விற்பனை வரவு ரூ.2,70,000. (15000
X 18=2,70,000) ஜெல் எடுத்து விற்பனை செய்வதற்கேற்ப ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறபோது விற்பனை வரவு கூடுதலாகும்.

லாபம்
----------

மொத்த விற்பனை :  ரூ. 2,70,000
மொத்த செலவு       :  ரூ. 1,37,500
லாபம்                        :  ரூ.1,32,500

(இந்த வருமானம் 8 மாதங்களுக்கு. இதுவே கூடுதல் நிலம் வைத்து சுழற்சிமுறையில் செய்தால், ஒவ்வொரு மகசூலுக்கும் இந்த வருமானம் பார்க்க முடியும். இந்தத் தொழிலுக்கு மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் மூலம் மானியம் கிடைக்கும். தவிர விவசாயக் கூட்டுறவு சங்கம் மூலமாக மாநில அரசின் விவசாயக் கடன்கள் பெற முடியும்).










=====================================
by VINAYAGAM MURUGESAN
நன்றி - விகடன்

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருத்துவச் செடி. அழகுசாதன, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. எனவே, இந்தத் திட்ட அறிக்கையில் கற்றாழை சாகுபடி மற்றும் அதிலிருந்து ஜெல் பிரித்து எடுப்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, சொந்த நிலம் உள்ள விவசாயிகள் மேற் கொள்ள ஏதுவான தொழில் என்றாலும், குத்தகை நிலம் மூலமும் இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியும்.
வணிக ரீதியாக பயிரிட்டால் நல்ல வருமானம் நிச்சயம் என்றாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதால் கற்றாழை சாகுபடி குறித்து யோசிப்பதில்லை. வேளாண்மைத் துறை வழிகாட்டுதல்கள் மற்றும் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பவர்களுடன் கூட்டுவைத்துக் கொள்ளும்போது நல்ல வருமானம் கிடைக்கும் என்பது உண்மை.
கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்தின் ஈரத் தன்மையைப் பாதுகாத்து சருமத்துக்கு கூடுதல் பொலிவையும் தருகிறது என்பதால் இதன் ஜெல்லை ஷேவ் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. தவிர, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக் காயங்கள் ஆகியவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
ரகங்கள்
-------------
கற்றாழையில் குர்குவா, சாகோட்ரின், கேப் என மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் முதல் இரண்டு வகைகள் பார்பலோயின் (Barbaloin) மற்றும் அலோ எமோடின் ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றி லிருந்து வலி நிவாரணி மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. கேப் கற்றாழை கால்நடை மருத்துவத்துக்குப் பயன்படுகிறது.
மண் மற்றும் தட்பவெப்பநிலை
-------------------------------------------------
வறட்சியான தட்பவெப்பத்தில் அதாவது 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளரும். எனினும் 25 – 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளிலும் பயிர் செய்யலாம். தமிழ்நாட்டில் ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்வதற்கு ஏற்றது. தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும், எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையைச் சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
விதையும் விதைப்பும்
-----------------------------------
தாய்ச் செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து வாங்க வேண்டும். இந்தக் கன்றுகள் அனைத்தும் ஒரே அளவில் இருந்தால்தான் செடிகள் சீராக வளர்ந்து ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். பக்கக் கன்றுகளை வாங்கிவந்து அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடம் நனைத்தபிறகு நடவு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செடி அழுகல் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
கற்றாழையைத் தனிப் பயிராக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும். வளர்ந்த செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்து இருக்கும் என்பதால் காய் மற்றும் விதைகள் வராது. இதனால் கற்றாழையைப் பக்கக் கன்றுகள் மூலமாகத்தான் பயிர்ப்பெருக்கம் செய்ய வேண்டும்.
சாகுபடி பருவம்
-------------------------
வருடத்துக்கு இரண்டு பருவங்களில், அதாவது ஜூன் – ஜூலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. இலைகள் முதிர்ச்சி பெறும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். அப்போதுதான் இலையி லிருந்து தரமான ஜெல் கிடைக்கும். இதற்காக செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. என்றாலும், கூடுதல் நிலம் உள்ளவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஓர் அறுவடை எடுப்பதுபோல சுழற்சி முறையிலும் மேற்கொள்ளலாம்.
நிலம் தயாரித்தல்
-----------------------------
நிலத்தை இரண்டுமுறை உழவேண்டும். ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, நிலத்தைச் சமன் செய்து சிறிய சிறிய பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். செடிகள் வாளிப் பாக வளர்வதற்கு ஏற்ப ஒவ்வொரு செடிக்கும் மூன்று அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு
-----------------------------------------------
வளமான நிலம் எனில் தொழு உரம் மட்டும் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து உரம் கொடுக்க வேண்டும். இதனால் செடிகள் வாளிப்பாக வளர்வதுடன் அதிக ஜெல் கொண்ட இலைகள் கிடைக்கும்.
கற்றாழையை மானாவாரிப் பயிராக வும் பயிர் செய்யலாம். அதன் மொத்த பயிர் காலத்தில் ஐந்து முறை நீர்த் தேவையைக் கவனித்துக் கொண்டால் போதும். கற்றாழை செடியில் அதிகப் பூச்சிநோய் தோன்றுவதில்லை. நீர் தேங்கும் நிலமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே, நன்கு வடிகால் வசதி வேண்டும்.
மகசூல்
-----------
ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும். இலையில் 80-90% நீர் உள்ளதால் விரைவாக வாடிவிட வாய்ப்புள்ளது. இதனால் அறுவடை செய்த உடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து ஜெல்லைப் பிரித்தெடுக்க வேண்டும்.
அதாவது, செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்த ஆறு மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்த எடுத்துச் செல்ல வேண்டும். நடவு நட்ட காலத்திலிருந்து 7-8 மாதங்களில் மகசூல் எடுக்கலாம்.
செலவுகள் (ரூ)
நிலம் உழுதல் : 2,500
உரம் : 15,000
கற்றாழை கன்று : 70,000
(ஒரு கன்று ரூ.7)
நடவுக் கூலி : 10,000
பராமரிப்பு : 20,000
அறுவடை கூலி : 10,000
இதர செலவுகள் : 10,000
மொத்த செலவுகள் : 1,37,500
விற்பனை வரவு
-------------------------
செடிகளை அறுவடை செய்து அப்படியே விற்பனை செய்யும்பட்சத்தில் விற்பனை வருமானம் குறைவாகத்தான் கிடைக்கும். அதாவது, அறுவடை செய்த கற்றாழை செடிக்கு கிலோ ரூ.15 – ரூ.20 வரைதான் கிடைக்கும். அதே சமயத்தில் ஜெல் பிரித்து விற்பனை செய்கிறபோது, ஒரு கிலோ ஜெல்லுக்கு ரூ.75 – 100 வரை கிடைக்கும்.
ஜெல் எடுக்கத் திட்டமிடுகிறபோது 25% வரை கழிவு போகும். ஒரு கிலோ கற்றாழை ரூ.18 என சராசரியாக வைத்துக்கொண்டாலும் நமது உற்பத்தி 15 டன் என்கிறபோது, மொத்த விற்பனை வரவு ரூ.2,70,000. (15000
X 18=2,70,000) ஜெல் எடுத்து விற்பனை செய்வதற்கேற்ப ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறபோது விற்பனை வரவு கூடுதலாகும்.
லாபம்
----------
மொத்த விற்பனை : ரூ. 2,70,000
மொத்த செலவு : ரூ. 1,37,500
லாபம் : ரூ.1,32,500
(இந்த வருமானம் 8 மாதங்களுக்கு. இதுவே கூடுதல் நிலம் வைத்து சுழற்சிமுறையில் செய்தால், ஒவ்வொரு மகசூலுக்கும் இந்த வருமானம் பார்க்க முடியும். இந்தத் தொழிலுக்கு மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் மூலம் மானியம் கிடைக்கும். தவிர விவசாயக் கூட்டுறவு சங்கம் மூலமாக மாநில அரசின் விவசாயக் கடன்கள் பெற முடியும்).