Monday, August 11, 2014

முகம் பார்த்த குளத்தில் கல்லெறிந்த வினாடி..


 
 

மதர்ப்பான தோளில்
தினவெடுத்தது காமம்,
தினமும் தின்றுத் தீர்த்த
மனையாளின் மார்பில்
சதையுண்டு மாற்றமில்லை..
மோகம் தலைக்கேறி
மதுவின் துணைகொண்டு
மந்திரப்புன்னைகையாளிடம்
விலை பேசி மடிந்தது
இன்றைய இரவுக்கான காமம்
மதர்ப்பான மார்பும்
மல்லிகை வாசமும்
நிலையற்ற சூறாவளி மனமெங்கும்
வேட்கை தீர புணர்ந்து
வெற்றி புன்னைகையுடன்
அவள் முகம் நோக்க
வந்து சேர்ந்தது “அவ்வளவுதானா” என்ற
ஒற்றைவார்த்தையில்
ஒரு நாளும் என் மனைவி
தெரிவித்திடாத
என் இயலாமை..
ஆடையணிய மனமின்றி
அம்மணமாய் வீடு சேர்ந்தேன்.

No comments:

Post a Comment