Monday, June 29, 2015

TAMILNADU DIFFERENT TOURISUM PLACES

ஊட்டி - அவலஞ்சி - எமெரால்ட் ஏரி: 
 
ஊட்டிக்கு தென்மேற்காக அமைந்துள்ள அவலஞ்சி அணை வழியாக மலையேற்றம் மேற்கொள்வது சுலபமானது என்பதுடன் தூரத்தில் தெரியும் முக்கூர்த்தி தேசிய பூங்கா, பனிச்சரிவு ஏரி மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவை கண்களுக்கு விருந்து படைக்கும்.

மேலும் இப்பகுதியில் இரவில் தங்குவதற்காக வனத்துறை விருந்தினர் இல்லங்களை ஏற்பாடு செய்துகொடுக்கிறது. எனவே இரவு ஓய்வெடுத்து விட்டு அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் பயணத்தை துவங்கலாம். பின்பு காலையில் புகழ்பெற்ற பிக்னிக் ஸ்தலமான மேல் பவானி அணையிலிருந்து மலையேற்றத்தை தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். இந்த அணையின் வடக்கே ஊட்டியின் உயரமான சிகரங்களில் ஒன்றான கொல்லரிபெட்டா அமைத்துள்ளது. இங்கிருந்து ஊட்டிக்கு திரும்பும் வழியில் அமைந்துள்ள எமெரால்ட் எனும் அழகிய கிராமத்தை நீங்கள் தவற விட்டுவிடக்கூடாது.


நீலகிரி மலைகளில் வருடம் முழுக்க மலையேற்றம் மேற்கொள்ளலாம் என்றாலும் குளிர் காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபடுவது அற்புதமான அனுபவமாக அமையும் எனினும் மலையேற்றத்தில் ஈடுபடும் முன் தகுந்த திட்டமிடலும், திடீர் ஆபத்துகளை சமாளிக்க முன்னேர்ப்பாடுகளும் அவசியம். எனவே இப்போதே சிலிர்ப்பூட்டும் நீலகிரி மலையேற்றத்துக்கு தயாராகுங்கள்!

கொடைக்கானல் - தொப்பித் தூக்கிப் பாறை - பெரியூர் - பெரியகுளம்:


கொடைக்கானலிலிருந்து பெரியகுளம் வரையிலான இந்த 19 கி.மீ பாதையில் மலையேற்றம் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேரமாவது பிடிக்கும். முதல் முறை மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களும் சுலபத்தில் கடக்கும்படியாகவே இந்த பாதை அமைந்திருக்கிறது. மேலும் சாகச மலையேற்றத்தின் போது பாதையில் இருக்கும் காப்பித்தோட்டங்களில் இருந்து வரும் நறுமணமே நமக்கு புத்துணர்வை ஊட்டும்.

ஏலகிரி மலையேற்றம்:
  

 சந்தேகமே இல்லாமல் தமிழ்நாட்டில் ட்ரெக்கிங் போக சிறந்த இடம் என்றால் அது ஏலகிரிதான். ஏலகிரி மலையின் ஊடாக ட்ரெக்கிங் செல்கையில் நாம் இயற்கை அழகு ததும்பும் காட்சிகளையும், அருவிகளையும், பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிக்கலாம். இங்கு ட்ரெக்கிங் செல்ல தேர்ந்தெடுக்க நமக்கு ஏழு பாதைகள் உள்ளன.


ஏலகிரி மலையேற்றம்:
அவற்றுள் அங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் பாதை 14 கி.மீ. தூரமுள்ளதாகும். அதேபோல புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் இங்கு உள்ளது. இந்த இரண்டு பாதைகளும் பலராலும் விரும்பப்படுவதோடு இவை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து ஏலகிரி மலையின் மொத்தத் அழகையும் தரிசிக்கலாம்.


நீர் சார்ந்த சாகச விளையாட்டுகள்:
 சர்வ காலமும் வாட்டியெடுக்கும் வெய்யிலின் காரணமாகவோ என்னவோ நம் மக்களுக்கு தண்ணீரில் விளையாட்டு என்றாலே மனம் குஷியாகி விடும். உலகத்தில் இருக்கும் மிகச்சிறந்த கடற்கரைகளில் ஒன்றான சோழ மண்டல கடற்கரையை கொண்டிருக்கும் தமிழகத்தில் நீர் சார்ந்த சாகச விளையாட்டுகளான ஸ்க்குபா டைவிங், வின்ட் ஸர்பிங் , கயாக்கிங் எனப்படும் துடுப்பு படகு சவாரி போன்ற விளையாட்டுகள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. அவற்றை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

 

பாண்டிச்சேரி - ஸ்குபா டைவிங்: 
பாண்டிச்சேரிக்கு 'பல' விஷயங்களுக்கு அடிக்கடி போகும் நம்மில் எத்தனை பேருக்கு அங்கே ஸ்குபா டைவிங் என்னும் அற்புதமான ஒரு விஷயம் இருக்கிறது தெரியும். ஆம், நம்ம ஊர் பாண்டிச்சேரியில் ஸ்குபா டைவிங் விளையாட்டு நடத்தப்படுகிறது

பாண்டிச்சேரி - ஸ்குபா டைவிங் : 
இந்த தனியார் பயிற்சி நிறுவனங்களில் முதல் முறை ஸ்குபா டைவிங் செய்பவர்களுக்கு என்றே பிரத்தேயகமான ஒரு நாள் பயற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் கடற்கரையில் இருந்து படகில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பயணித்து ஸ்குபா டைவிங் செய்யும் இடத்தை அடைந்து அங்கிருந்து கடலுக்கு அடியில் 6-12 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதியில் ஆழ்கடல் மூழ்குதல் சாகசத்தில் ஈடுபடலாம். நவம்பர் முதல்

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5168

கோவளம் கடற்கரையில் வின்ட் ஸர்பிங்:
 இந்தியாவிலேயே வெகு சில இடங்களில் மட்டுமே இருக்கும் வின்ட் ஸர்பிங் எனப்படும் சாய் மர படகு சாகச விளையாட்டு சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கும் கோவளம் கடற்கரையில் உள்ளது. சறுக்கு பலகை ஒன்றின் மீது நின்றவாறு சீறிப்பாயும் கடல் அலைகளையும், கடல் காற்றையும் எதிர்த்து அலைச்சறுக்கில் ஈடுபடுவது மிக சவாலாக இருக்கும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5169

கோவளம் கடற்கரையில் வின்ட் ஸர்பிங்:
 கோவளம் கடற்கரையில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் முட்டுக்காடு என்ற இடத்திலும் இந்த சாய் மர படகு சாகசம் நடக்கிறது. இந்த விளையாட்டுக்கு எந்த முன் அனுபவமும் தேவையில்லை. மேலும் தமிழக சுற்றுலாத்துறையே இந்த சாகசத்தில் ஈடுபட தேவையான கருவிகளை வாடகைக்கு தருகிறது. அடுத்த முறை கிழக்கு கடற்க்கரை சாலையில் பயணம் செல்கையில் நிச்சயம் இந்த சாய்மர படகு சவாரியை ஒரு முறையேனும் முயற்சி செய்து பாருங்கள்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5170 


ஹெங் கிளைடிங்: 
 கேள்விப்பட்டிராத ஒன்றாக இருக்கிறதல்லவா?ஹெங் கிளைடிங் எனப்படுவது கூம்பு வடிவிலான பாராசூட் போன்ற ஒன்றை பிடித்துக்கொண்டு உயரமான மலைச்சிகரத்தில் இருந்து குதித்து பறக்கும் ஒரு விளையாட்டு ஆகும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5171  

ஹெங் கிளைடிங்: 
 வெளிநாட்டில் மட்டுமே பிரபலமான இந்த சாகச விளையாட்டு தற்போது சென்னை, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற மலைவாசஸ்தளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக துவங்கியிருக்கிறது. மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டம் இந்த விளையாட்டில் ஈடுபட சிறந்ததாகும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5172 


ஹெங் கிளைடிங்: 
 
 சென்னையில் புனித தாமஸ் மலையிலும், ஊட்டியில் கல்ஹாட்டி அருவிக்கு பக்கத்திலும் இந்த விளையாட்டு நடக்கிறது. தமிழக சுற்றுலாத்துறையும் மற்ற சில தனியார் நிறுவனங்களும் இந்த விளையாட்டை அளிக்கின்றன. பறவை போல வானில் பறக்க நினைப்பவர்கள் இந்த சாகச விளையாட்டில் நிச்சயம் ஈடுபட வேண்டும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5173   

பாராகிளைடிங் : 
ஹெங் கிளைடிங் போன்றே வானில் பறக்கும் சாகச விளையாட்டு தான் பாராகிளைடிங்கும். இது வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஏலகிரியில் நடத்தப்படுகிறது. உயரமான இடத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதிப்பதே இந்த விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டில் முன் அனுபவம் இல்லாதவர்கள் 'டேன்டம் க்ளிடிங்' என்ற முறைப்படி ஏற்க்கனவே நன்கு பயிற்சி பெற்ற ஒருவருடன் சேர்ந்து பாராசூட் உதவியுடன் பறக்கலாம். ஆபத்து குறைவான அதே சமயம் சுவாரஸ்யம் நிறைந்த விளையாட்டு இது.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5174  


ஸ்கை டைவிங் : 
நம்ப முடியவில்லை அல்லவா?. நம்மூர் பாண்டிச்சேரியிலும் இப்போது காகினி என்னும் தனியார் நிறுவனத்தால் ஸ்கை டைவிங் ஆரம்பிக்கப்படுள்ளது. வார விடுமுறையை கொண்டாட பாண்டிச்சேரி செல்பவராக இருந்தால் இந்த சாகசத்தையும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். அழகு நிறைந்த பாண்டிச்சேரியை வானத்தில் இருந்த ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த ஸ்கை டைவிங்கையும் டேன்டம் முறைப்படி செய்யலாம்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5175  


ஸ்கை டைவிங் :
 'ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி' என சொல்பவரா நீங்கள்? அப்படியெனில் மேலே குறிப்பிட்டுள்ள இந்த சாகச விளையாட்டுகளை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5176  


Friday, June 26, 2015

திருமந்திரம் :: 3.7. தாரணை


நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.


1. பிராண வாயுவானது மூலத்தின்மேல் தொடர்ந்து ஓங்கி பன்னிரண்டு அங்குலம் வெளிப்பையும்.

2. அபானன் வாயு மல சலத்தை அறிந்து போக்கும்.


3. வியானன் வாயு உண்ட சாரத்தைப் பிரித்தெழுப்பி எழுபத்தீராயிரம் நாடிக்கு ஊட்டும்.


4. உதானன் வாயு அவற்றை செரிப்பிக்கும்.


5. சமானன் வாயு அவற்றை சரிப்படுத்தும்.


6. நாகன் வாயு விக்கல், சோம்பல் இவைகளை உண்டாக்கும்.


7. கூர்மன் வாயு கண்ணில் நின்று இமைக்க செய்யும்.


8. கிரிகரன் வாயு - கோபத்தை உண்டாக்கும்


9. தேவதத்தன் வாயு கொட்டாவி, சிரிப்பு முதலியவைகளை உருவாக்கும்.


10.தனஞ்சயன் வாயு - உச்சி வாழ்ந்து அத்துமம் அடங்கிய பின் சிரசின் வழியாகப் போகும். அதுவரை உயிரை பாதுகாக்கும்.


"பிராணாயாமம்" முறைப்படி பயிற்சி செய்து இவை பத்தும் சீர் செயவும். மணமான குரங்கை நிலை நிறுத்தி ஜெயம் அடைவீர்

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி !




எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச்
சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்


மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″  குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும்.

நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும். மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம்.
முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிரான முத்திரையில் நடக்கலாம். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது
கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள்

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும்.முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.

முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு
உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.
இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர
வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
தினமும் எட்டுநடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ
முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க
வளமுடனும் நலமுடனும்.

எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?




புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம்.
எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.

✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திறக்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.

✔ சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.

முதல் நாள்:

✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.

✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப்புரூட் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் கிரேப்புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக இருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.

✔ மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.


✔ இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது. இது உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன்பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமில்லாமல் குடிக்கலாம்.

✔ இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றவும்.

அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.

✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.

✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்

அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும்




உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டுவிடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.

தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
அத்திப் பழத்தை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சாப்பிடுவதால் ஏராளமான நோய்களுக்கு மருந்தாகின்றது.

குணமாகும் நோய்கள்:

🌰மலட்டுத்தன்மை
🌰மூலம்
🌰வயிற்றில் தோன்றும் நோய்கள்
🌰இரத்தசோகை
🌰மலச்சிக்கல்
🌰இரத்தத்தில் மிகுந்த கொழுப்பு
🌰மூச்சுக்குழாய்/நுரையீரல் அழற்சி
🌰ஆஸ்த்துமா

இத்துடன் வயிற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கவும், வயிற்றில் தோன்றும் அல்சருக்கும் நல்ல மருந்தாக திகழ்கிறது.
இப்பொழுது ஆலிவ் எண்ணையுடன் அத்திப்பழ மருந்தை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை:

40 உலர்ந்த அத்திப்பழங்கள்
1 லிட்டர் ஆலிவ் எண்ணெய்

செய்முறை:

ஒரு கண்ணாடி ஜாடியில் அத்திப்பழங்களை இடவும். மேலாக ஆலிவ் எண்ணையை ஊற்றவும். இந்தக் கலவை 40 நாட்கள் ஊறவிட வேண்டும். 40 நாட்கள் ஊறியவுடன் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கு முன் ஒன்று வீதமாக குறைந்தது மூன்று அத்திப்பழங்களை சாப்பிட வேண்டும். இது தீருவதற்க்கு முன்பாக அடுத்த செட்டை தயாராக்கிக் கொள்ளவும். மறக்காமல் கண்ணாடி ஜாடியை வெளிச்சம் இல்லாத குளிர்ந்த இடத்தில் வைக்கவும்
உலர்ந்த அத்திப்பழங்களில் கால்சியம், செம்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற மினரல்கள் நிறைந்து உள்ளன். பழுத்த அத்திப்பழங்களைக் காட்டிலும் உலர்நத பழங்களில் புரதம், சரக்கரை, மினரல்கள் அதிகமாக உள்ளது.

புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.
உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.
அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும்.

வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும்.

சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பலமேறும்.