Saturday, June 13, 2015

கல்லறையில் தூங்கும் மனிதா!



                           

                                                                                

   பொது + ஆனது

 

கல்லறையில் தூங்கும் மனிதா!
நீர் கண்ட கனவு தான் என்ன? என்ன? என்ன?
நீல கடல் மீது பறந்தும் பல தொழில்கள்...
செய்யவும் ஆசை கொண்டாயோ!
நீண்ட கடல் நீரில் பயணம் செய்தும்
(பேயாக?) காசு + பணம் சேர்க்கவும் பேராசை கொண்டாயோ!.....
எத்தனையோ கோடி + ஈஸ்வரர்கள்
இன்று எல்லாம் கல்லறையில் தூங்குகிறார்கள்!
கருவோடும் குழந்தையும் சிதைந்து போகும்....
சாதனை புரிந்தவர்களுக்கும் சாவு உண்டு....
இந்த பூமியில் சரித்திரம் கொண்டவர்களுக்கும் மரணம் உண்டு!
சாதாரண ஏழையும் சவக்குழியில் தூங்குகிறான்...
இந்த பூமியில் சாக வரம் பெற்ற   
மனிதர்கள் எவரும் இல்லை!
இனி பிறக்கப்போவதும் இல்லை...
மண்ணில் இருந்து விண்ணையும்
இன்று வரை எவரும் தொட்டதும் இல்லை...
விண்ணில் இருந்து மண்ணில் எவரும் பிறப்பதும் இல்லை!
ஒரு தாயின் கருவில் இருந்து கண்விழிக்கிறான்!
நம் கண்ணுக்கும் தெரியாத காற்று,
உனக்கும் எனக்கும் ஒரு நாள் பகையானால்....
இந்த மண்ணில் உனக்கும் வேலையில்லை எனக்கும் வேலையில்லை..
மரணம் என்பது உனக்கும் எனக்கும் பொது+ஆனது..
என்பதையும் மறந்து விடாதே மனிதா... மனிதா... 


தேதி: 12/06/2015                            என் கவிதை     : 110
நேரம்: 16:30                                          கவிஞர்    : மே.கோ.ப
                                                                Mobile Number              :  9489940065

No comments:

Post a Comment