Thursday, January 29, 2015

Asset Partition - பாகப்பிரிவினை






பாகப்பிரிவினை
*****************************
தந்தை வழி சொத்தில் வாரிசுக ளுக்குக் கிடைக்கும்
சொத்துரிமைதான் பாகப்பிரிவினை. அதா வது, குடும்பச்சொத்து உடன்படிக் கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாக வோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாகப் பிரித்துக்கொள்ள முடியும்.

பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாக ப் பிரிக்கப் படாத பட்சத்தில் அல்லது அவர்களி ல் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந் தால் பாகப் பிரிவினை யை எதிர்த்து நீதிமன்ற த்தில் வழக்குத் தொடர லாம்.

ஒருவருக்கு நான்கு வா ரிசுகள் இருந்து, அதில் மூன்று
வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப் பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தா ல், அந்தப் பாகப்பிரிவினை செல்லா து என அவர் நீதிமன்றத்தை நாடலாம்.

தான பத்திரம்..!
**********************
சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறி ப்பாக, நெருங்கிய குடும்ப உறவுக ளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்து கொள்ளும் போது இந்த முறையைக் கையாளலாம்.

ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண் டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூல ம்மாற்றும்போது விற்பனை என்று ஆகாது. அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவரு க்கு தானமாகக் கொடுக்கலாம். இ ப்படி செய்வதன் மூலம் முத்திரைத் தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ள லாம்.

ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்ட ணம் சொத்து வழி காட்டி மதிப்பில் 1 சத விகிதம் அல்லது அதிகபட்சம் ப‌த்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.

உயில்..!
***************
இது விருப்ப ஆவணம்: சொத்தை தனிப்பட்ட முறையில், தனதுவிருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரு ம் முறைதான் உயில் எனப்படும். ஒரு வர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத் துக்களை தனது இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல் லாமல் போய்சேர வேண்டும் என்பதற் காக தனது சுயநினைவோ டு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.

தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லா த மூன் றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியு ம். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என் றால், சம்பந்தப்பட்ட வாரிசுக ளுக்கு சொத்து சேர்ந்துவி டும்.

மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழு தப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படு மாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

பெண்களுக்கான சொத்துரிமை!
*************************************************

பெற்றோர்கள் வழிவரும் பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரி மை உள்ளது. ஒருவேளை பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தி ல் பங்கு தேவையில்லை என்கிறபட்சத்தில், அதை இதர வாரிசுகள் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், திரு மணமான பெண்களுக்கான சொத்துஉரிமையி ல் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

2005-ம்ஆண்டு சட்டதிருத்தத்தி ன்படி, பெண்கள் தனது தந்தை ன் காலத்திற்குப் பிறகு அவரது பூர்வீகச் சொத்தில் உரிமை கோ ரமுடியும். மேலும், 25.3.1989-க் குமுன்பு திருமணம்செய்து கொ ண்ட ஓர் இந்துப் பெண் பூர்வீகச் சொத்தில் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்குபிறகு திரு மணம் செய்துகொ ண்ட பெண் தனது தந்தையின் பூர்வீகச் சொத் தில் உரிமை கோர முடியும். அதேவேளையில், சொத்து 25.3.89-க்கு முன்னர் பாகப் பிரிவினை செய்யப்பட்டிருந்தால், பாகப்பி ரிவினை கோர முடியாது. ஒரு வேளை அந்த சொத்து விற்கப் படாமல் அல்லது பாகம் பிரிக் கப்படாமல் இருந் தால் உரிமை கோர முடியும்.

வாரிசுச் சான்றிதழ்..!
*********************************

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட்போன்றவற்றில் முதலீடு செய் திருந்து எதிர்பாராமல் இறக் கும் பட்சத்தில் நாமினிகளிட த்தில் இந்த சொத்துக்கள் ஒப் படைக்கப்படும். ஆனால், நாமி னி இல்லாதபட்சத்திலோ அல் லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்ப ட்சத்திலோ வாரிசுச் சான்றித ழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம். ஆனால், ஒன் றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சா ன்றிதழ் அடிப்படையில் சொ த்துக்கள் ஒப்படைக்கப்படும்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனை த்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்க ப்படும் பாகப்பிரிவினை செல்லாது. நீதிமன்றத்தில் இதை மறைத் து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரிய வரும் போது அந்த தீர்வு ரத்து செய்ய ப்படும்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திரும ணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்க வில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”

பொதுவாக, சொத்து பாகப் பிரி வினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவ னித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என
இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்து
கொள்ளலாம்.

Wednesday, January 28, 2015

Car ஏசியை இயக்கி ஜன்னலை மூடக்கூடாது



இன்றைய நவநாகரீக உலகில் பெரும்பாலானவர்கள் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், தற்போது சந்தைக்கு வரும் அனைத்து கார்களும் ஏசி வசதியுடனே உள்ளன.

"ஜன்னலை திறந்து பின் மூடுவது சிறந்தது"

பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள டேஷ்போர்டு, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்தும் பெரும்பாலும் பிளாஸ்டிக்கினால் ஆனவை. இந்த பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம். ஆனால், வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும். அதே சமயம் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும்.

இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம். அதிலும் ஏசி காரை பயன்படுத்தும் போது, ஜன்னலை மூடுவதால் காருக்குள் இருக்கும் பென்சீன் வெளியேற முடியாமல் அப்படியே இருக்கும். அதனை சுவாசிக்கும் போது, உடலுக்குள் செல்லும் பென்சீனால் கேன்சர், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

அதனால், எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் ஏசியை இயக்கி ஜன்னலை மூடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஒரு சில நிமிடங்களுக்கு ஜன்னலை திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் ஏசி- யை இயக்கவேண்டும் என்றும் அறிவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தங்களுடைய சொத்து மதிப்பு இதில் குறிப்பிடப் பட்டுள்ளது Guide Line Value



கீழ்கண்ட இணையதளத்திற்கு செல்லுங்கள். தங்களுடைய ஊர், கிராமம், தெருவின் அரசாங்க சொத்து மதிப்பு இதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை
www.tnreginet.net

இதில் Guideline Valueக்கு செல்லவும். பிறகு Guideline Values from 2012 ஐ கிளிக் செய்யவும். பிறகு தங்களது மாவட்டம், வட்டம், கிராமம், தெருவின்படி உள்ளே செல்லவும்.

உங்கள் தெருக்கான அரசாங்க சொத்து மதிப்பிற்கு,
Click here to view Guideline value for Streets என்ற லிங்கை அழுத்துங்கள்.

உங்கள் சொத்தின் சர்வே நம்பருக்கான சொத்து மதிப்புக்கு
Click here to view Guideline value for Survey Number என்ற லிங்கை அழுத்துங்கள்.

இதே இணையதளத்தில் தங்களுடைய திருமணப்பதிவு, அரசாங்க பத்திரங்களை விற்பனை செய்யும் செண்டர்களின் முகவரி மற்றும் போன் நம்பர் கிடைக்கும்.

மேலும் இதே இணையதளத்தில் தாங்கள் வாங்கவிருக்கும் அல்லது விற்கவிருக்கும் சொத்துக்களின் வில்லங்க சான்றிதழுக்கும் விண்ணப்பிக்கலாம்.

Salt Water Car



ஜெர்மன்:

 சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஓர் புதிய ஸ்போர்ட்ஸ் காரை நானோ ஃப்ளைசெல் என்ற ஜெர்மன் நாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் உப்புத் தண்ணீரில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரை சாலைகளில் வைத்து பரிசோதனைகள் நடத்தவும், இயக்குவதற்கும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு அனுமதி வழங்கியது. இதன் வடிவம் 5.25 மீட்டர் நீளமும், 2.2 மீட்டர் அகலமும் கொண்டது. கல்விங் ஸ்டைலிலான கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 22 இஞ்ச் வீல்கள் கம்பீரமான தோற்றத்தை கொடுக்கின்றன.

மேலும் இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 4 பேர் செல்லும் இருக்கை வசதி கொண்டது. தொழில்நுட்பத்தில் இந்த ஸ்போர்ட்ஸ் கார் ஹைட்ரஜனில் இயங்கும் கார்களை போன்றே தொழில்நுட்பம் கொண்டது. ஆனால், உப்புத்தண்ணீரை ஒரு சவ்வு வழியாக செலுத்தி அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த காரில் 200லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு டேங்கில்  உப்புத் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும்.

இந்த உப்புத் தண்ணீர் மூலம் 600 கிமீ வரை செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கார் 2,300 கிலோ எடை கொண்டது.  இந்த கார் வெறும் 2.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை அடைந்து விடும்.  அதிகபட்சமாக மணிக்கு 380 கிமீ வேகம் வரை செல்லும். இந்த காரின் விலை  1.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழுக்கு நீரை குடிநீராக மாற்றும் சூப்பர் தொழில்நுட்பம்




மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் தற்போது அழுக்கு நீரை குடிநீராக மாற்றும் சோலார்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

Desolenator எனப்படும் இச்சாதனமானது சோலர் தொழில்நுட்பம் மூலம் நீரை வெப்பமேற்றுவதன் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகின்றது.

இதில் சேமிப்பு மின்கலம் மற்றும் LCD திரையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தற்போது விளம்பரப்படுத்தலுக்காக Indiegogo தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இதன் விலையானது 479 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pendrive Write Protected ERROR?



பென்டிரைவில் write protected பிழையை நீக்குவது எப்படி?

இன்று நாம் பயன்படுத்தும் கணினிச் சார்ந்த டிவைஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பென்டிரைவ் என்றால் அது மிகையாது. காரணம் இதன்மூலம் நமக்கு வேண்டிய தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தில் எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதே.
மேலும் தற்போதுள்ள நவீன பென்டிரைவ்களில் (New Type of Pendrive) கோப்புகளின் அளவை மேலும் நீடித்து வைத்துக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.. அதாவது பென்டிரைவில் 1GB, 2GB, 4GB, 6GB, 8 GB, என ஆரம்பித்து, தற்பொழுது 64 GB கொள்ளவு கொண்ட பென்டிரைவ்களும் இருப்பதாக கேள்விப்படுகிறோம்.இத்தகையப் பயன்மிக்க பென்டிரைவ்(pendrive) அல்லது மெமரிகார்ட்(memory card) போன்ற ரீமூவபிள் டிவைஸ்களை நாம் பயன்படுத்தும்பொழுது சில சமயம் cannot copy files and folder, drive is write protected. remove write protection or use another disk என்பன போன்ற பிழைச் செய்திகளைக் காட்டும்.

இவ்வாறான பிழைச் செய்திகளை(Error) வருவதற்கு வைரஸ் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களே(Virus Program) காரணமாக இருக்கும்.
இதுபோன்ற பிழைச்செய்திகள் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உங்கள் கணினியில் உள்ள Registry கோப்பில் வைரஸ்கள் 'கை' வைப்பதுதான். அதனாலேயே பெரும்பாலான பிழைச்செய்திகள் இவ்வாறு தோன்றும்.

write protected பிழைச் செய்தி காட்டினால் என்ன செய்வது?

1.உங்களுடைய கணினியில் Start பட்டன் அழுத்துங்கள்
2.Run விண்டோவை திறவுங்கள்.
3.அதில்
reg add "HKLM\System\CurrentcontrolSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /vWriteProtect /f/d 0

என கொடுத்து ok பட்டனை அழுத்துங்கள்.
இப்பொழுது உங்களுடைய கணினியில் உள்ள பென்டிரைவை எடுத்துவிட்டு மீண்டும் கணினியில் இணைத்து புணிபுரியத் தொடங்கலாம். இப்பொழுது Write Protected பிழைச்செய்தி தோன்றாது

Screen Capture

SCREEN RECODE மற்றும் காணொளிகளை தொகுக்க சில மென்பொருட்கள்

 

Screen Recording மற்றும் Video Editing செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் பயன்படுகின்றன.அவற்றில் ஒரு சில மென்பொருட்கள் இலவசமாகவும், ஒரு சில கட்டண மென்பொருட்களாகவும் கிடைக்கின்றன.
சிறந்த ஸ்கிரீன் ரெக்கார்டிங்மற்றும்வீடியோ எடிட்டிங் சாப்டவேர்கள்கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையானதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1. EzvidEzvid
என்பது ஒரு screen recorder program ஆகும். இதன் மூலம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடைபெறும் இயக்கங்களை ரெக்கார்ட் செய்யலாம்.
1.இப் புரோகிராமுடன் in-built video editor-ம் இணைந்துள்ளது.
2.இதன் மூலம் ரெக்கார்ட் செய்த வீடியோவை, உங்களுடைய விருப்பத்திற்கேற்ப தேவையான இடங்களில் எடிட் செய்துகொள்ளமுடியும்.
3.வீடியோவை இருபகுதிகளாக பிரித்து, இடையே தேவையான இடங்களில் Text -ஐ சேர்த்துக்கொள்ளலாம்.
4.slideshow effect களை உருவாக்கலாம்.
5.இப்புரோகிராமின் மூலம் உருவாக்கப்பட்ட videoக்களை YouTubeக்கு அப்லோட் செய்துகொள்ள முடியும்.
Ezvid screen recorder program
பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.ezvid.com/
2. BlueBerry FlashBack Express Recorder
இது ஒரு வீடியோ ரெக்கார்டர் மென்பொருள் ஆகும். இதன் மூலம் உங்களுடைய வெப் கேமைப் பயன்படுத்தி வீடியோவை ரெக்கார்ட் செய்துகொள்ள முடியும்.
ரெக்கார்டிங்கை நிறுத்தியவுடன் இது தானாகவே FBR கோப்பொன்றை உருவாக்குகிறது. இந்த வீடியோ கோப்புகளை, இதனுடன் இணைந்திருக்கும் வீடியோ எடிட்டரைப் பயன்படுத்தி அவற்றை எடிட் செய்துகொள்ள முடியும்.
Blue Berry FlashBack Express Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.bbsoftware.co.uk/BBFlashBack_FreePlayer.aspx
3. Screenr
Screenr என்பது online வழியாக Screen Record செய்யப்பயன்படும்ஒரு மென்பொருள் ஆகும். உங்களுடைய கம்ப்யூட்டரில் மென்பொருளை நிறுவ தேவையில்லை.இப்புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் செயல்பட கண்டிப்பாக Java நிறுவியிருக்க வேண்டும்.
உங்களுடைய கம்ப்யூட்டர் திரையில் ரெக்கார்ட் செய்வதற்கான area -வைத் தேர்ந்தெடுத்துவிட்டு, ஸ்கீரீன் ரெக்கார்டிங்கை தொடங்கலாம்.அதிக பட்சமாக 5 நிமிடங்கள் இந்த முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும்.
ரெக்கார்ட் செய்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர, லிங்க் கொடுக்கப்படும். தேவையெனில் MP4 ஆக எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அங்கிருந்தே Youtube -லும் அப்லோட் செய்துகொள்ள முடியும். ரெக்கார்ட் செய்யப்படும் வீடியோக்கள் உங்களுடைய அக்கவுண்டிலேயே சேமிக்கப்படும்.
Screenr Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
https://www.screenr.com/?_e_pi_=7%2CPAGE_ID10%2C1627297555
4. Rylstim Screen Recorder
Rylstim Screen Recorder -ல் Start Record பட்டனை அழுத்தியவுடன் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆரம்பமாகிவிடுகிறது. கம்ப்யூட்டரில் ஏற்படும் நிகழ்வுகளை காட்சிப்படுத்திக்காட்ட இந்த ரெக்கார்டிங் மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதில் Audio Recording செய்வதற்கான வசதி இல்லை.
Rylstim Screen Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.sketchman-studio.com/rylstim-screen-recorder/
5. CamStudio
CamStudio வீடியோ எடிட்டிங் புரோகிராம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. மௌஸ் கர்சரைenable அல்லது disable செய்யும்வசதி, மைக்ரோ போன் அல்லது இந்த புரோகிராமின் மூலம் sounds Record செய்யும் வசதி மற்றும் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டிய ஸ்கிரீன் அளவினை நம் வசதிக்கு தகுந்தாறு மாற்றிக்கொள்ளும் வசதி என்பன போன்ற பல்வேறு வசதிகளை இப்புரோகிராம் உள்ளடக்கியுள்ளது.
CamStudio Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://camstudio.org/
நன்றி,
soft shop

Monday, January 26, 2015

kasa kasa-கசகசா

fdகசகசா... நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது.

சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இப்படி தண்டனைக் கொடுக்கும் அளவுக்கு, என்னதான் கசகசாவில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.

இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. ‘கசகசாவினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’ என்கிறது சித்தர் பாடல்.
sd
காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.

weqwமதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது. போதைபொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். இதனால் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப்படும் செடியின் விதை என்பதால், தடை செய்துள்ளார்கள். காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும். அதனால்தான், கசகசாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. கசகசாவுக்காக பயிர் செய்யப்படும் செடிகளிலிருந்து சட்ட விரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கசகசாவை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thaanks to

Vikatan

அதிர்ச்சியான இந்திய அறிவியல் கழக மாநாடு - SCIENTIST

இப்படி ஒரு மிகப் பெரிய அணுகுண்டை போட்டு தாக்கப் போகிறார்கள் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

அந்த அதிர்ச்சியான வெடிச் சம்பவம் நடந்தது, சாதாரண சந்துமுனை அல்ல.

இந்தியாவின் மிகப் பெரிய விஞ்ஞானிகளும், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியும் கூடி இருந்த உன்னதமான மண்டபத்தில்தான் இந்த வேட்டு வெடித்தது.

இந்தியாவில் விஞ்ஞானத்தை எந்த அளவு முன்னோக்கி எடுத்துச் செல்வது? இதற்கு ஆக்கப்பூர்வமான யோசனைகள் என்ன? என்று உச்சமான ஆய்வு நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த மாநாடு, நம்மை பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று அதலபாதாளத்தில் தள்ளி விட்டது என்று பலரும் அங்கலாய்க்கும் அவலநிலை ஏற்பட்டுவிட்டது.

அப்படி என்னதான் நடந்தது?


கடந்த மாதம் 5–ந் தேதி மும்பையில் இந்திய அறிவியல் கழக மாநாடு நடைபெற்றது.

இந்திய அறிவியல் கழகம் என்ற அமைப்பு 1914–ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்த அமைப்பு தொடங்கப்பட்டதற்கான நோக்கம் உன்னதமானதுதான்.

இதுவரையும் அதே பாதையில் தான் இந்த மாநாடு பயணித்துள்ளது.

ஆண்டிற்கு ஒரு முறை கூடும் இந்த மாநாட்டில், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளும், உலகில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் சிலரும் பங்கேற்று ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள்.

இது, இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருப்பதாகக் கருதப்பட்டது.

முக்கிய நகரங்கள் என்ற வரிசையில் சென்னையிலும் இந்த மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது.

ஆனால், இந்த மாநாடு மூலமாக கடந்த 101 ஆண்டுகளில் ஏற்படாத சலசலப்பு இந்த முறை அரங்கேறி இருக்கிறது.

‘மத்தியில் பாரதீய ஜனதா தலைமையிலான மோடி அரசு இருப்பதால், இந்த மாநாட்டின் மீது காவி நிறம் படர்ந்துவிட்டது; அதன் விளைவுதான் மாநாட்டில் தேவையில்லாத சர்ச்சை உருவாகிவிட்டது’ என்பது ஒரு சிலரின் குற்றச்சாட்டு.

காரணம், மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கை மிகப்பெரிய விவாதப் பொருளாகி விட்டது.

‘‘7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் வாழ்ந்த நமது முன்னோர்கள் 40–க்கும் மேற்பட்ட வகையிலான விமானங்களை தயாரித்து இருந்தார்கள். அந்த விமானங்களைக் கொண்டு பல இடங்களுக்குப் பறந்து சென்றார்கள். ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சென்றார்கள்; ஒரு கிரகத்தில் இருந்து வேறு ஒரு கிரகத்துக்கு அந்த விமானங்கள் மூலம் பயணம் ஆனார்கள்.....’’ என்ற போக்கில் செல்லும் சூறாவளி அறிக்கைதான் இப்போது பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

‘‘7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாம்... விமானமாம்... கிரகங்களுக்கு இடையே பயணமாம்.. என்னயா இது? 21–ம் நூற்றாண்டில் உட்கார்ந்துகொண்டு இப்படி மடத்தனமாக கதை விடுகிறீர்களே..’’ என்று ஒரு சாரார் குமைந்து தள்ளிவிட்டார்கள்.

உடனே மற்றொரு பிரிவினர், ‘‘நமது முன்னோர்களின் அளப்பரிய – மகோன்னதமான சாதனைகளை பழித்துப் பேசாதீர்கள், நாக்கு வெந்துவிடும்...’’ என்று சாபமிடும் வகையில் குரலை உயர்த்தி இருக்கிறார்கள்.

இந்த சர்ச்சை காரணமாக, ‘தந்தி’ டி.வி. ஆயுத எழுத்து பாணியில், நமது முன்னோர்களைப் பற்றிய வாத, பிரதி வாதங்கள் இப்போது அனைத்து மேடைகளிலும் அனல் பறக்கத் தொடங்கி விட்டன.

இந்த ஆவேச சர்ச்சைக்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை முதலில் விரிவாகப் பார்க்கலாம்.

மும்பையில் ஜனவரி 5–ந் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த 102–வது இந்திய அறிவியல் மாநாட்டில் ஒரு கருத்தரங்கு இடம் பெற்றது. ‘‘சமஸ்கிருத மொழி அடிப்படையில் நமது பழங்கால விஞ்ஞானம்’’ என்பது அந்த கருத்தரங்கின் தலைப்பு.

அதில், விமான பைலட்டுகளுக்கான கல்லூரியின் ஓய்வு பெற்ற பிரின்சிபால் கேப்டன் ஆனந்த் ஜே போதாஸ் மற்றும் அமேயா ஜாதவ் ஆகியோர் சேர்ந்து ஒரு கட்டுரை சமர்ப்பித்தார்கள். இதன் மீது கேப்டன் ஆனந்த ஜே போதாஸ் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டார்:–

‘‘...... அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் 1904–ம் ஆண்டு விமானத்தை இயக்கி காட்டியதைத்தான் வரலாறு பதிவு செய்து இருக்கிறது. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ரிக் வேதத்தில் விமானம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த பரத்வாஜ் மகரிஷி, ஒரு நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கும், ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்துக்கும் சென்ற விமானங்கள் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறியுள்ளார்.  அந்த விமானங்களைச் செய்வதற்கு பயன்படுத்திய உலோகம் பற்றியும் அவர் கூறி இருக்கிறார்....’’

‘‘... அந்த விமானங்கள் 60 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்டதாக ‘ஜம்போ’ விமானங் களாக இருந்தன...’’

‘‘... 40 வகையான விமான என்ஜின்களை நமது முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். தற்போதைய ரேடார் கருவியில் விமானங்களை காட்டுவதற்கு புள்ளிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நமது முன்னோர்கள் பயன்படுத்திய ரேடார் கருவியில் விமானத்தின் படமே தெரிந்துள்ளது...’’

‘‘...பயணத்தின் போது விமானிகள் விசேஷ உணவை சாப்பிட்டுள்ளனர். கடலுக்கு அடியில் வளரும் ஒரு வகை தாவரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட விசேஷ ஆடையை அணிந்து இருந்தார்கள்...’’

இவ்வாறு கேப்டன் ஆனந்த் ஜே போதாஸ் தொடர்ந்து பல தகவல்களைக் கூறி பேசிய போது சிலர் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள்.

ஆனால் பலர் வாய் விட்டு சிரிக்க முடியாமல் வாயை மூடிக் கொண்டார்கள்.

இந்த விவகாரம் தான், மாநாடு முடிந்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் விவாதம் என்ற அளவில் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறது.

இணையதளத்திலும் இது எதிரொலிக்கிறது.

அந்த விவாதங்களை நாமும் கொஞ்சம் கையில் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த விவாதங்களில் யார் எந்தக் கட்சி என்று பார்ப்பதைவிட, பழங்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த நமது முன்னோர்களுக்கு உண்மையிலேயே இந்த அளவு வியக்கத்தக்க விஞ்ஞான அறிவு இருந்ததா? இல்லையா? என்பதை ஆதாரங்களுடன் பார்க்கலாம்.

மாநாட்டில் கேப்டன் ஆனந்த் ஜே போதாஸ் பேசியது போன்று, ‘அந்தக் காலத்தில் விமானங்கள் இருந்தன என்பதை ஏற்க முடியாது’ என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

அவர்கள் கூறும் காரணங்கள்–

பரிணாம வளர்ச்சி என்ற அடிப்படையில் இருந்து இதை பார்க்கலாம்.

நமது வரலாறு தெளிவாக கூறும் காலத்தில் இருந்து, மக்கள் பயணத்திற்கு முதலில் தங்களது கால்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பின்னர் குதிரை போன்ற விலங்குகளின் மீது சவாரி செய்தனர். சக்கரம் கண்டு பிடிக்கப்பட்டது முதல், வண்டிகளில் பயணித்தார்கள். அதுவே பின்னர் சைக்கிள் எனப்படும் இரு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. எரி பொருள் மூலம் வாகனங்களை இயக்கலாம் என்பது கண்டுபிடிக்கப்பட்டபின், கார், மோட்டார் சைக்கிள், லாரி ஆகியவை தோன்றின. அந்த எரிபொருளைக் கொண்டு பறவை போல பறக்க முயன்றதால் விமானம் உருவானது. அதன் பின் வேறு கிரகங்களுக்குச் செல்ல ராக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தான் படிப்படியான, உண்மையான விஞ்ஞான பரிணாம வளர்ச்சி.

இந்த கண்டுபிடிப்புகள் பற்றி எத்தனை ஆண்டுகள் கடந்த பின்பு யார் கூறினாலும், அப்போது இருப்பவர்கள் இவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால், கேப்டன் ஆனந்த் ஜே போதாஸ் கூறிய வரலாற்றில் இந்த பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமே இல்லை.

பல ஆயிரம் ஆன்டுகளுக்கு முன்பு கால்களால் நடந்து சென்ற மக்கள், திடீர் என்று விமானத்தை கண்டு பிடித்து வானத்தில் பறந்தார்கள் என்றால், அந்தப் புயல் வேக வளர்ச்சி, யாரும் நம்பும்படி இல்லை.

மேலும் இதுவரை எத்தனையோ இடங்களில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், பூமியை தோண்டி, கற்காலம் முதல் உலோக காலம் வரையில், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பழங்கால ஆயுதங்களை எல்லாம் கண்டு பிடித்துள்ளனர். ஆனால், பறப்பதற்கு பயன்பட்டதாகக் கூறும் எந்த கருவியின் ஆதாரத்தையும் அவர்கள் இதுவரை தோண்டி எடுக்கவில்லை. இது நமது முன்னோர்கள் விமானங்களை பயன்படுத்தினார்கள் என்பதை நம்புவதற்கு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறும் அதேசமயம், நமது முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்று கூறப்படுவதையும் முற்றிலுமாக ஏற்பதற்கு இல்லை என்பதற்கும் பல ஆதாரப்பூர்வமான சான்றுகள் கிடைத்து இருக்கின்றன.

அந்தக் காலத்தில், பொழுது போக்குவதற்கு, இப்போது இருப்பது போன்ற செல்போன், இணையதளம், டெலிவிஷன், சினிமா ஆகியவை எல்லாம் இல்லை என்பதால் அவர்களுக்கு அதிகப்படியான நேரம் படிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் கிடைத்து இருந்தது.

அந்த நேரத்தை அவர்கள் மிகவும் பயனுள்ள வகையில் செலவழித்து பல ஆய்வுகளை நடத்தி வெற்றி கண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் பிரத்யட்சமாகப் பார்க்க முடிகிறது.

உதாரணமாக பச்சிலை வைத்தியத்தை எடுத்துக் கொள்ளலாம்.

உலகில் கோடிக்கணக்கான தாவரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தாவரத்திலும் உள்ள இலை, தண்டு, பூ, காய், கனி, வேர் ஆகியவற்றுக்கு வெவ்வேறுவிதமான குணங்கள் இருக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் எதற்கு மருந்தாகும் என்பதை கண்டுபிடிப்பதென்றால், அது லேசுப்பட்ட காரியமா? இதற்காக லட்சக்கணக்கான பரிசோதனைகளை நடத்தி இருக்க வேண்டும் அல்லவா?

நமது முன்னோர்கள் அனைத்துப் பச்சிலைகளின் குணத்தையும் தெளிவாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

பாம்பு கடிக்கு குறிப்பிட்ட ஒரு வேரை பயன்படுத்தினால் விஷம் இறங்கி விடுகிறது. பாம்பு கடி மருந்தான இந்த வேரை கண்டுபிடிக்க, எத்தனை ஆயிரம் விதமான சோதனைகளை நடத்திப் பார்த்திருக்க வேண்டும் என்பதை கணக்கிட்டால், வியப்பு விண்ணளவு விரிகிறது.

நமது உடலில் எத்தனை விதமான நரம்புகள் ஓடுகின்றன என்பதை அந்தக் காலத்திலேயே துல்லியமாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதை கண்டுபிடிக்க அவர்கள் எவ்வளவு ஆய்வு நடத்தி இருக்க வேண்டும்?

நமது நாசியில் இரண்டு துவாரங்கள் இருக்கின்றன. இவை இரண்டின் மூலமாக நாம் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மை அது அல்ல என்பதை நமது முன்னோர்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் இடது நாசி துவாரம் வழியாகவும், மற்ற சமயத்தில் வலது நாசி துவாரம் வழியாகவும் மூச்சுக் காற்று சென்று வருகிறது.

இந்த மூச்சுக் காற்றின் சுவாச போக்கு, நமது அப்போதைய குணங்களுக்கு தக்கபடி எவ்வாறு மாறுகிறது என்பதையும் கண்டுபிடித்துக் கூறி இருக்கிறார்கள்.

இதே போல வேறு பல துறைகளிலும் நமது முன்னோர்களின் சாதனை அளப்பரியது.

நமது முன்னோர்கள் அறிவியலில் உயர்ந்த ஞானம் பெற்று இருந்தார்களா? இல்லையா? என்பது பற்றி இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் விவாதங்களுக்கு இடையே, நமது முன்னோர்களின் உண்மையான கண்டுபிடிப்புகள் பற்றியும் அவற்றுக்கு ஆதாரம் என்ன என்பது பற்றியும் அவை பற்றி தற்போதைய விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதையும் அடுத்த வாரத்தில் இருந்து விரிவாக அலசலாம்.

(ஆராய்ச்சி தொடரும்)

Thanks to Dhina thanthi

Republic Day REASON

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

FACEBOOK உருவான கதை



இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.

அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார்.முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்டஎவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமானபணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது.அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது.இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி.

தற்போது ஃபேஸ்புக் கைபேசி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக தற்போதுஇல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள்.உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணையதளங்கள்.இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப்பரிமாறிக் கொள்ளலாம்.

நன்றி,
ஜீனியஸ்

RARE MEDICINAL PLANTS


"Lakshmi Narasimha Singhi " 



 

Karu Nochhi


Karinocchi is dark black in colour .The herbal leaves are powerfull enough to ward off negative issues.It is extensively used in Asian contries.
 
This is called karu nocchi mooligai this will do wonders. this mooligai is not available even in KOLLI MALAI BUT IT IS AVAILABLE IN PLENTY IN KERALA AT CHALAKUDI. it does wonders some politicians and high officials are said to be holding this divine mooligai . this molligai is available with private agriculturis . this is being soldfor a high cost. the test for the mooligai is to put some leves in the milk, misx it in the hot rise. theywillturnblack. even water also will turn black
Black Vitex Negundo (Male Leaves)

Black Vitex Negundo
Black Vitex Negundo is a Medicinal Plants with Antimicrobial Activity. The latin name in tamil Karunochi leaves , also called as Nirgundi. The details of this plant are as follows:Scientific Name Vitex Negundo, Vitex agnus-castus is an herbal supplement which has various effects upon the reproductive systems of both men and women. Vitex has been used throughout history to actually reduce the sex, Vitex negundo nochi is mixed with milk and orallyadministered to women for improving fertility. The bark and seeds are effective. Local medicated steam fomentation is given of decoctions of Erand mool root of Ricinus communis, Rasna Pluchea lanceolata, Dashmool Ten Herbal Roots and Nirgundi Vitex negundo  Leaves-anti-parasitical, alterative, aromatic, vermifuge, pain reliever.Root-tonic, febrifuge, expectorant, diuretic.Fruit-nervine, cephalic, emmanagogue.Dried fruit-vermifugeVitex is useful for the treatment of:Amenorrhea, Catarrh, Cholera, Colic, Diarrhea,Dysmenorrhea, Dyspepsia, Ear disordersEndometriosis, Fever, Fibrocystic Breast 



This is the Sarpagandha plant. It is mostly available in Amejan forests and in kerala state in india. Actually its root will be held in the hand by the the snake charmers at the time of catching sankes. It is used for heart ailments by Allopathy doctors



This root is called Sarpgandha. It is said that it is used in allopathy treatment for removing or relieving from heart pain. That allopathy name is sabitrate .It is a medicinal plant and people believe that this root will save the people who cary it in forest from snake bite.




 People call it argimony. psychological therapy plant
 





சோரியாஸிஸ் - வீட்டு வைத்தியம்.



சமுதாயத்தில் அவர்கள் நடத்தப்படுகின்ற விதமும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் தாழ்வு உணர்ச்சியும் எவர் மனதையும் இளகச் செய்யும்.
தடித்துச் சிவந்த நிறத்தில் சாம்பல் பூத்தது போன்ற செதில் செதில்களாக மூடப்பட்ட படை அல்லது பற்று போன்ற இச் சரும நோய் தலை, பிடரி, முழங்கையின் பின்புறம், முழங்கால் மற்றும் இடுப்பின் பின் பகுதி போன்ற இடங்களில் தோன்றித் தொல்லை தரும்.

பல நேரங்களில் இது பொடுகு, படை, எக்ஸிமா என்று தவறாகக் கூறி மருத்துவம் செய்யப்படுவதுமுண்டு.

சோரியாசிஸ் நோய்க்கு வீட்டு வைத்தியம்:

1⃣ வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

2⃣ தினமும் இருவேளை இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி (5 கிராம்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து குடித்து வரவும்.

3⃣ இந்த வேப்பிலை பொடியுடன் மஞ்சள் பொடியையும் (அரை தேக்கரண்டி அளவில்) வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வரவும்.

4⃣ காரமான மசாலா உணவுகளை தவிர்க்கவும்.

5⃣ தயிரையும் தவிர்க்கவும்.

6⃣ கடலுப்புக்கு பதில் பாறை உப்பை பயன்படுத்தவும்

6⃣ வெளிப்பூச்சுக்கு புங்க தைலம் சிறந்தது.

7⃣ குளிக்கும் தண்ணீரில் வேப்பிலைகள் சேர்த்து சூடு செய்யவும்.

8⃣ குளிக்கும் முன் மஞ்சள் பொடி + வேப்பிலை சேர்த்து அரைத்த களிம்பை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி பின் குளிக்கவும்.

9⃣ நெய்யில் பொரித்த மெல்லியதாக நறுக்கிய வெங்காய வளையங்களை உட்கொள்ளலாம்.

Onion Treatment - உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம் :-



தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.
காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.

அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.
விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.

தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும்.

வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.

வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்.

ரத்த மூலம்,இருமல்,அரிப்பு,வயிற்றுவலிக்கு -அகத்தை காக்கும் சீரகம்...


சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

எடையும் குறையும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் குடித்தால் வயிற்றுவலிக்கு உடனடியாக தீர்வு தரும். 

சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். 

சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும். 

சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நின்றுவிடும். 

Thanks to

Dhinakaran

Pragnanat Ladies - எளிய இயற்கை வைத்தியம்:-



* குழந்தை பெற்ற பெண்களுக்கு தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது.

* கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.


* தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும்.
 

* உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. ஆகையால்தான் கரையாத கொழுப்பு சத்து உள்ள மாமிச உணவு சமைக்கும்போது பூண்டை அவசியம் சேர்க்கின்றனர்.
 

* இரவு உணவுடன் பச்சையாகவோ அல்லது பாலிலோ மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். கனவுத் தொல்லை இருக்காது.
 

* பூண்டிற்கு ரத்த அழுத்தத்தைக் கண்டிக்கும் சக்தி உண்டு. அதனோடு இதய தசைகளையும் ரத்தக் குழாய் தசைகளையும் வலுப்படுத்தும் சக்தி பூண்டிற்கு உண்டு.
 

* பூண்டு ஒரு நார்சத்து மிகுந்த உணவு என்பதால் மலச்சிக்கலை அகற்றும் குணம் பூண்டிற்கு உண்டு.
 

* பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்கள் பூண்டு மாத்திரைகளை சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்பிசம் நீங்கி, தொப்பை குறையும் வாய்ப்பு அதிகம்.

துளசி மல்லி கஷாயம்

துளசி - 2 கைப்பிடி,
சுக்கு - 1 துண்டு,
வெள்ளை மிளகு - 20,
ஏலக்காய் - 5,
தனியா - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த திராட்சை - 20, பனங்கல்கண்டு
அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.

சுக்கு, வெள்ளை மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.
பொதுவாக தூதுவளைதான் கபம் போக்கும். வெயில் காலத்தில் தூதுவளையின் சூட்டைத் தவிர்க்கவே இங்கே துளசி சேர்த்திருக்கிறோம். உணவின் மூலம் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் கஷாயம் இது. மாலை 6 முதல் 9 மணிக்குள் குடிக்கலாம். சளி பிடிக்காமல் தடுக்கும்

Alovera Medical Uses

சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.

தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க் உதவும்.இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

கண்நோய், கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம், வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி, சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து, ஈரப்பதம் அளிக்கும்.

இத்தகைய கற்றாழை இளம் தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்.

Here Free International call - சர்வதேச அழைப்புகளை இலவசமாக மேற்கொள்வது எப்படி ?

நம்பர்டேன்க் ( Numbertank )

நம்பர்டேன்க் இமையதளம் மூலம் சுலபமாக சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்த தளம் மூலம் நாள் ஒன்றைக்கு 30 நிமிடங்களுக்கு மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.


 

கூகுள் வாய்ஸ்

 கூகுள் நிறுவனத்தின் கூகுள் வாய்ஸ் மூலம் கணினியில் இருந்து சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள சிறந்த சேவையாக இருக்கும். எனினும் அமெரிக்க காலர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.


 

ஐகால்

சர்வதேச அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ள சிறந்த தளமாக ஐகால் விளங்குகின்றது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஐகால் செயளி வடிவிலும் கிடைக்கின்றது, இந்த செயளியானது ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களுக்கு கிடைக்கின்றது. ஆனால் இந்த தளம் மூலம் இலவச அழைப்புகளை நாள் ஒன்றுக்கு 5 நிமிடங்களுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். 


 

கால் டூ ப்ரென்ட்ஸ் (Calltofriends)

 இந்த தளம் மூலம் சர்வேத அழைப்புகளை நீண்ட நேரம் மேற்கொள்ள முடியாது

 
கல்ஃப்சிப் (GULFSIP)

 சர்வதேச அழைப்புகளை கணினியில் இருந்து மொபைல்களுக்கும், கணினியில் இருந்து கணினிக்கும் மேற்கொள்ள சிறந்த தளமாக இருக்கின்றது. மேலும் இதன் மூலம் குருந்தகவல்களையும் அனுப்ப முடியும். 




How-return-products-purchased-on-amazon



ஆர்டர் முதலில் அமேசான ஆர்டர் பக்கம் செல்லுங்கள்


 

கட்டம்
 
 அனைத்து ஆர்டர்களும் கட்ட வடிவில் பாக்ஸில் இருக்கும், நீங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய கட்டத்தை வரும் வரை பக்கத்தின் கீழ் செல்லுங்கள்


 
ரிட்டர்ன் 
 
திருப்பி கொடுக்க வேண்டிய பொருட்களுக்கு வலது புறத்தில் இருக்கும் ரிட்டர்ன் என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்


 

செக்மார்க்
 
 இதே போன்று திருப்பி கொடுக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் க்ளிக் செய்யுங்கள்


 
 
காரணம் 
 
திருப்பி கொடுக்க வேண்டியதற்கான காரணத்தை தேர்வு செய்த பொரு்களுக்கு வலது புறத்தில் இருக்கும் அதற்கான இடத்தில் நிரப்ப வேண்டும்

 
 
சரியான காரணம் 
 
திருப்பி கொடுப்பதற்கான முழுமையான காரணத்தை ட்ராப்-டவுன் பாக்ஸ் மெனுவில் நிரப்ப வேண்டும். இந்த மெனு திருப்பி கொடுக்க வேண்டிய பொருளை தேர்வு செய்தவுடன் காணப்படும்.

 

க்ளிக் 
 
அடுத்து Continue என்ற பட்டனை அழுத்த வேண்டும்.


 

தீர்வு


அடுத்த பக்கத்தில் உங்கள் பிரச்சனைக்கான தீர்வை அமேசான் அளிக்கும், இந்த கட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் Refund என்ற ஆப்ஷன் மட்டுமே காணப்படும், இங்கு Continue என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.


இடம்:
 
இதை அடுத்து திருப்பி கொடுக்க வேண்டிய இடம் மற்றும் தேதியை நிரப்ப வேண்டும்.


 

முகவரி 
 
 நீங்கள் திருப்பி கொடுக்க வேண்டிய இடம் தானாக இடம் பெற்றிருக்கும், ஒரு வேலை மாற்ற விரும்பினால் Change address என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.


 
 
ஒப்படைத்தல் 
 
பொருளை திருப்பி கொடுப்பதை உறுதிபடுத்த Submit என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதையடுத்து அமேசான் தரப்பில் இருந்து யாரேனும் உங்கள் பொருளை எடுத்து செல்வர், பொருளை எடுத்து செல்பவர்கள் கொடுக்கும் சீட்டை பணம் திரும்ப பெறும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.


 


iPhone Unlock Method

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி
பெரும்பாலும் ஐபோன் குறித்த பல விஷயங்கள் மர்மமாகவே இருக்கும்.
ஐபோன் பயன்பாடு சற்று சிரமமாக இருக்கின்றது என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே இருந்து வருகின்றது. அந்த வகையில் ஐபோனை அன்லாக் செய்வது என்று பாருங்கள்...
 
விற்பனை

வெளிநாடுகளில் வாங்கும் போன்கள் பெரும்பாலும் லாக் செய்யப்பட்டே விற்பனைக்கு வரும் அந்த வகையில் அதனை அன்லாக் செய்ய முதலில் விற்பனை செய்த கேரியர் நிறுவனத்தை அனுகலாம்.

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி



இணையம்

இதனை சில நிறுவனங்கள் இணையம் மூலமாகவும் வழங்குகின்றன.
ஐபோனை அன்லாக் செய்வது எப்படி
மேற்சொன்ன முறையை தவிர்த்து இணையங்களிலும் அன்லாக் செய்ய முடியும், இதை மேற்கொள்ள பணம் செலுத்த வேண்டியிருக்கும்.


    
ஐபோனை அன்லாக் செய்வது எப்படி   

பணம்

பணம் செலுத்தும் முந் தேர்வு செய்த நிருவனம் குறித்து ஆய்லு செய்வது முக்கியமானதாகும்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி 
குறியீட்டு எண்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி 
IMEI எனப்படும் சர்வதேச குறியீட்டு எண்னை குறிப்பிட வேண்டும்

பணம்

ஐபோனை அன்லாக் செய்வது எப்படி 
அடுத்து பணம் செலுத்தும் தளத்தில் பணம் தெலுத்த வேண்டும்

 குருந்தகவல்:
 
ஐபோனை அன்லாக் செய்வது எப்படி
 
அன்லாக் செய்யப்பட்டதற்கான குருந்தகவல் போனில் வந்தவுடன் போனை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.