Thursday, November 2, 2017

ஏன் வழுகட்டாயமாக மோடி அவர்களை இஸ்லாமிய எதிரியாகவே உருவாக்குகிறார்கள்???

பிஜேபி, இந்துதுவா என்றால் இஸ்லாமியருக்கு எதிரி, கிருஸ்தவத்திற்கு விரோதி? இந்தவிதம் மக்கள் மத்தியில் இருக்கும் கருத்து பற்றி உங்கள் பதில் என்ன மாரிதாஸ்?{கேள்வி: கார்த்திக்}
இது மிக சிக்கலான கேள்வி.
இந்தியா என்ற இந்த மண்ணை, இதன் வரலாற்று புனிதத்தை தனது உயிருக்கும் மேலாக நேசிக்கும் எவரும் இந்து தான். இந்த மண்ணின் புனிதம் உணர்ந்த எவரும் இந்துவே. இந்துகளின் தேசமாக பாகபிரிவினை நடந்து பாக்கிஸ்தான் கொடுத்துவிட்ட பின்பும் இதுவே இந்து,இந்தியா என்பதற்கு அடையாளம்.
இந்துதுவா என்றால் "இஸ்லாமிய வெறுப்பு என்றும் , கிருஸ்தவர்கள் அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்" என்ற தோற்றத்தை திட்டமிட்டு இந்த கம்யூனிஸ்ட், திராவிட கழகங்கள், காங்கிரஸ் இவர்கள் நடத்தும் பத்திரிக்கைகள் பரப்பும் உண்மைக்கு மாறான செய்தி..
RSS என்பது இந்துதுவாவாதிகள் தான். அவர்கள் ஏன் பத்திரிக்கைகள் முன்வருவது இல்லை? எல்லா மீடியாக்களையும் விட்டு ஏன் விலகி நின்றார்கள்? நேரு புகழ் பாடவும், கம்யூனிஸ்ட் புகழ்பாடவும் தான் புதிய சுதந்திரம் வாங்கிய இந்தியாவில் ஆட்கள் இருந்தனர். நேருவின் விருப்பமானவர்கள் அனைவரும் தான் எல்லா மேல்தட்டு பதவியிலும் அமர்ந்தார்கள்.
கோட்சே காந்தியை கொலை செய்த பழியை அப்படியே இந்துதுவாவின் மீது போட்டு மொத்தமாக அழுத்தி ஒடுக்கினார் நேரு. அவருக்கு அதில் அரசியல் ரீதியாக வெற்றிகிடைத்தது. ஒருபக்கம் நேதாஜி ஆதரவாளர்களை ஒடுக்கிவிட்டு , இன்னொருபக்கம் இந்துதுவாவை ஒடுக்க , காங்கிரஸ் என்ற கட்சியை தன் குடும்ப சொத்தாக மாற்றி இந்தியாவை அனைத்து தளத்திலும் தனது ஆதரவாளார்களை அமர்த்த பத்திரிக்கைகளும் நேரு புகழ்பாட???? என்ன இங்கே நியாயம் கிடைக்கும்???
எனவே அன்று முதல் இன்று வரை மீடியாவை விட்டு முழுமையாக விலகி நிற்கிறார்கள் இந்துதுவாவாதிகள். பிஜேபி கட்சி வழியாக சிலர் பேசினாலும். பிஜேபியே கூட முழு இந்துதுவாவாதியாக அங்கிகரீக்க மாட்டார்கள் இந்துதுவாவை முழுமையாக நேசிக்கும் பலர். ஒரு அரசியல் இயக்கமாக பிஜேபியை அங்கிகரீக்கிறார்கள் அவ்வளவே.
------------------------------------
பிரதமர் மோடி?
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (Union Minority Affairs Ministry)வெளிப்படையாகவே புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் மோடி அரசு பதிவிக்கு வந்த பின்னர் எப்படியாக திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று தகவல் கிடைக்கும். தாராளமாக தேடி படிக்கவும்.
காங்கிரஸ் அரசு 2012-13ல் 3135 கோடி ஒதுக்கிய இந்த துறைக்கு மோடி அரசு 3,827.25கோடி ஒதுக்கீடு செய்கிறது. அதாவது நீங்கள் சொல்லும் ஹிந்துதுவாவாதி எதற்கு நிதியை அதிகபடுத்த வேண்டும்?
இந்த நிதி கொண்டு Maulana Azad Education Foundationக்கு தேவையான நிதி , National Minorities Development & Finance Corporation (NMDFC) மூலம் சிறுபான்மை மக்கள் தொழில் தொடங்க உதவித்தொகை , Azad National Fellowship மூலம் சிறுபான்மையினருக்கு உதவிதொகைகள் , Interest Subsidy on Educational Loans for overseas studies என்று ஆரம்பித்து Pre-matric scholarship, Post-matric scholarship, Merit-Cum-means scholarship வரை சில நுறு திட்டங்கள் கொண்டு சிறுபான்மையினர் கல்வி , வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் முன்னேற்றம் கொண்டுவர எதற்கு உதவ வேண்டும்?
மேலும் தகவல் வேண்டும் என்றால் தாராளமாக Union Minority Affairs Ministry தொடர்பு கொள்ளுங்கள் , அதன் websiteசென்று பாருங்கள். என்ன இப்போ மோடி வந்தவுடன் குறைத்துவிட்டார் என்று குறை கூறிவிட முடியும்????
அட அவருக்கு தான் இஸ்லாமியரை பிடிக்காதே !!! ??????
78.03% படிப்பறிவு பெற்ற அந்த மாநிலத்தில் இஸ்லாமியர்கள் படிப்பறிவு சதவீதம் இன்று எவ்வளவு தெரியுமா 80%சதவீதம். Sachar Committee Report தேடி பாருங்கள் , அது வெளியாகும் போது குஜராத் முதல்வராக இதே நரேந்திர மோடி அவர்கள் தான் முதல்வராக இருந்தார், தேடி படியுங்கள்.9.1 % சதவீதம் மக்கள் தொகையுள்ள இஸ்லாமியர்கள் High Posts, Officer Posts என்று அரசு வேலைகளில் 8.5 % முதல் 9.9 % வரை பதவியில் இருந்தனர். அதாவது எந்த அளவு மக்கள் தொகை உள்ளார்களோ அதே அளவு அரசு வேலைவாய்ப்பிலும் , பதவிகளிலும் இருந்தனர். ஆனால் சிறுபான்மையினர் வோட்டுக்கு அலையும் இந்த கம்யுனிசத் , காங்கிரஸ் , திராவிட கட்சிகள் ? கேரளா மாநிலம் 24.7 % இஸ்லாமியர் உள்ள மாநிலம் ஆனால் 9.5 % அளவு தான் அரசின் High Posts, Officer Posts என்று பதவியில் இருக்கிறார்கள், 25.2 % என்று இருக்கும் மேற்கு வங்காளத்தில் வெறும் 10% கூட கிடையாது. இதை நான் கூறவில்லை Sachar Committee Reportஅறிக்கை தெரிவிக்கிறது.
என்ன இப்போ இஸ்லாமியர் வளர்ச்சியை முதல்வராக இருக்கும் போது மோடி தடை செய்தார்???? கொஞ்சமாது பகுத்தறிவு இருப்பவனுக்கு இது புரியும்.
"Sufism is the voice of peace, co-existence, compassion and equality" இது கூறியவர் யார்?? இதே மோடி அவர்கள் தானே. சரி March 17, 2016 சூபி இஸ்லாம் மார்க்க அறிஞர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து வாழ்த்தியதும் இதே மோடி தானே..
கம்யூனிஸ்ட , காங்கிரஸ் எவனாது பாராட்டுங்கள் பார்க்கலாம்???
--------------------------------
பின்னர் இஸ்லாம் எதிர்ப்பு என்பது???
நன்கு புரிந்துகொள்ளுங்கள் இந்தியாவில் சூபி இஸ்லாம் மக்களுக்கும் இந்துதுவாவாதிகளுக்கும் எந்த உரசலும் கிடையாது. இதை வம்படியாக கம்யூனிஸ்ட் , திராவிட, காங்கிரஸ் பத்திரிக்கை கூட்டம் மறைக்கிறது. சூபி இஸ்லாம் தான் இந்த நாட்டில் இருக்கிறது. ஆனால் இந்த சவுதி அரபியா பரப்பும் வகாபிசம் கிடையாது. அதாவது பெர்சியன் வழியாக தான் இஸ்லாம் இங்கே பரவியது.. வால் முனையில் பரவிய இஸ்லாம் வரலாறு தவீர்த்துவிட்டு பார்த்தால் ஒரு பக்கம் சூபி ஞான மரபு என்பது இந்திய ஞான மரபில் ஒன்றாக ஏற்றுகொண்டோம்.
வால்முனையில் பரவிய மொகாளாயர் இஸ்லாம் என்பதை எதிர்க்கும் இதே இந்துதுவாவாதிகள்- சூபி ஞானிகள் வழி பரவிய அமைதியான இஸ்லாமிய ஞான மரபை எதிர்ப்பது இல்லை.
அதாவது Syed Mohammad Ashraf,rumi, அப்துல்கலாம், ஏஆர் ரகுமான் , ஜாகீர் குசேன் என்று மிக சிறந்த தேசியவாதிகள் பலரை மதம் கொண்டு எதிர்க்கிறார்களா? கிடையாது. ஆனால் ஜாகீர் நாயக் போன்ற வகாபிசம் பரப்பும் யாரையும் கடுமையாக எதிர்கிறார்கள். கடந்த 35 வருடத்தில் இந்தியாவில் வகாபிசம் வேகமாக பரவுவது கண்கூடு.. இன்றய தலைமுறை இஸ்லாமிய இளைஞர்கள் அதிகம் வகாபிசம் தழுவுகிறார்கள் அவர்களுக்கு தெரியாமலேயே. அது தான் உண்மை.
தர்க்காகளை இடிக்கவேண்டும், தர்க்கா என்பது இஸ்லாமிர்க்கு எதிரானது- இசை கேட்க கூடாது , இசை இஸ்லாமுக்கு எதிரானது - பெண்கள் ஆடை விசயத்தில் இருக்கும் கட்டுபாடுகள். இந்த 3 விவரங்களை எடுத்து கொஞ்சம் வரலாற்றோடு ஒப்பிட்டுபாருங்கள் அப்பட்டமாக சவுதி அரசியாவின் கலாச்சாரம் தெரியும். அதாவது வகாபிசம் மூலம் இங்கே இந்திய ஞான மரபில் பரவி விரிந்த சூபி இஸ்லாம் முழுமையாக அழிக்கபட்டு வகாபிசம் வழியாக மத போர்வையில் அரபிய கலாச்சாரம் பரவுகிறது. இதனால் தான் ISIS போன்ற தீவிரவாத குழுக்களுக்கு அதிகம் ஆதரவு உருவாகிறது. இது இந்திய இஸ்லாமியர்களுக்கு நல்ல விஷயம் அல்ல. இஸ்லாமிய இளையஞர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும். வரலாறு கொண்டு வெறுப்பை நாம் உருவாக்க கூடாது.
இதை நானோ, இந்துத்துவாவாதிகளோ குற்றம்சாட்டவில்லை... இதை குற்றம்சாட்டுவது Syed Akbar Nizamuddin Hussaini போன்றவர்கள் தான் கூறுகிறார்.
ஆன்மீக ஞானம் பரப்புவதற்க்கும் - மதம் வழி ஒரு கலாச்சாரத்தை பரப்புவதற்கும் வித்தியாசம் உண்டு. அரபிய கலாச்சாரம் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறார்கள். அப்படி எதிர்ப்பதை இங்கே பூதாகரமாக திட்டமிட்டு இஸ்லாமியருக்கு எதிரானவர்கள் என்று பரப்புகிறார்கள்.
சரி உங்கள் அனைவரிடமும் நான் கேட்கிறேன் சங்க்பரிவார் அமைப்பில் இருந்து வந்த மோடி அவர்கள் மிக சிறந்த இந்துதுவாவாதி. சரிதானே?
அவர் என்றாவது மாற்றுமத உள்விவகாரங்களில் தலையிட்டு பேசியதை கண்டது உண்டா? RSS மோகன் பகத் அவர்கள் என்றாவது மாற்றுமத உள்விவகாரங்களை தலையிட்டு பேசியது உண்டா? {நீங்கள் சிலரை காட்டலாம். அவர்கள் மூன்றாம் தர பேச்சாளார்கள். அதே பேச்சாளர்கள் எல்லா இடங்களிலும் உண்டு. சிலர் இஸ்லாமியர்களை அவதூராக பேசுகிறார்களே??? என்று நீங்கள் கூறினால் அதே அளவு இந்து கடவுள்களை அவதுறாக பேசும் கூட்டமும் உண்டு தானே??? எனவே இவைகளை நான் கணக்கில் எடுப்பது இல்லை. எனக்கு மோடி மீது இருக்கும் நியாயங்களை பேசவே விரும்புகிறேன்.}
முத்தலாக் விவகாரத்தில் கூட மோடி என்ன கூறினார் என்று தேடி பாருங்கள்.. "இஸ்லாமிய மத பெரியவர்கள் முன்வந்து இந்த விவகாரத்தை தீர்வு காணவேண்டும்" என்று தானே கேட்டுகொண்டார்? இதை விடவா ஒரு இந்துத்துவாவாதி நாகரீகமாக நடந்துகொள்ள முடியும்?
ஒரு உண்மை சொல்லவேண்டும் என்றால் - இஸ்லாமியர்கள் அல்ல எதிரி.. பிஜேபிக்கு உண்மையில் கம்யூனிஸ்ட் தான் எதிரி. கம்யூனிஸ்ட் தந்திரமாக இதை மதபிரச்சனை ஆக்கிவிட்ட வேடிக்கை பார்க்கிறார்கள்.
அதே நேரம் தீவிரவாதம் , பிரிவினைவாதிகளுக்கு எந்த இரக்கமும் காட்டபடாது... காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் காங்கிரஸ் உக்காந்து பேசியது போல் நிச்சயம் மோடி பேசமாட்டார். ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பிரிவினை தீவிரவாதிகளை கூண்டோடு அழித்து ஒழிக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் மத சாயம் தேவை இல்லை.
-----------------------------------------------------
மாற்றுமதங்களை அழிக்க நினைப்பவர்கள் என்று வைத்துகொள்வோம் - அப்படி என்றால் ஏன் புத்தம், ஜெயின் , சீக்கியர் என்று எவருடனும் பகை கொள்ளவில்லை இந்துதுவாவாதிகள்? அது என்ன கிருஸ்தவம் , இஸ்லாம் மட்டும் எதிர்க்கிறார்கள்????
உண்மையில் ஒரு உண்மையான இந்துதுவாவாதி என்பவன் மதங்களால், இறைவழிபாட்டால் ஒருவரை அடையாளபடுத்தி எதிர்ப்பது இல்லை. அவன் இந்த நாட்டின் புனிதம் மீது தொடுக்கபடும் மறைமுக/நேர்முக போரை எதிர்க்கிறான். இங்கேயே இறைவனை வழிபடும் முறைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. கங்கை நதிகரையில் இருக்கும் நாகாசாதுக்கள் முதல் இமயமலையில் மானசரோவர் மலையில் ஒட்டிகொண்டு வாழும் சாதுக்கள் தொட்டு, வேதம் கொண்டு மக்களை வழிநடத்தும் குரு, சித்தர்கள் பலரையும் ஏற்றுகொள்ளும் இந்துதுவாவாதிகள் எப்படி இறைவழிபாட்டால் மாறுபடும் ஒருவரை வெறுப்பார்கள்?
இங்கே ஆன்மீகம் என்பது வெறிதனமான சொல்லி கொடுக்கபடவில்லை. கட்டாயபடுத்தவும் இல்லை.. சரிதானே? அட நாத்திகத்தை அனுமதிக்கும் ஒரே மதகலாச்சரம் இருக்கும் நாடு இந்த மண்.. மனசாட்சிக்கு நேர்மையாக வாழும் நாத்திகனையும், இயற்கைதான் கடவுள் மற்றவை இல்லை என்று ஒதுக்கிய யோகிகளையும் ஏற்றுகொண்ட தர்மம் இந்த மண்ணுக்கு சொந்தமானது.
இந்த மண்ணில் உருவான மக்கள் குணமே கூட அது கிடையாது. அனைத்து வடிவிலும் ஆனந்தமாக இறைவழிபாடு கொண்டவர்கள். மதுரையில் பாண்டி கோவிலில் வந்து சாமி கும்பிடும் பல இஸ்லாமியர் உண்டு சரிதானே??? தர்காவில் பிள்ளைகளை கொண்டு போய் மந்திரிக்கும் ஆயிரம் இந்துகள் உண்டு??? சரிதானே.. இங்கே இருப்பது மதநல்லிணக்கம். இது தான் இந்தியா இதுதான் இந்த மக்கள் குணம்.
இந்து மதமே அனைத்தையும் தன்னுள் இழுத்துகொள்ளும் அளவு ஆன்மவியல் ஈர்ப்பு கொண்டது. வழிபடும் முறையால் மட்டும் பகையை உருவாக்கி கொள்ள இந்துதுவாவாதிகள் முட்டாள்கள் இல்லை. ஆனால் இந்த கலாச்சாரத்தை கெடுத்து இன்னொரு நாட்டின் கலாச்சாரமே மேம்பட்டது என்று திணிக்க முற்படுவதை தடுக்கிறது இந்துத்துவா.
-----------------------------------------
பின்னர் ஏன் வழுகட்டாயமாக மோடி அவர்களை இஸ்லாமிய எதிரியாகவே உருவாக்குகிறார்கள்???
Iconography படித்தீர் என்றால் இந்த மனித சமூகம் எப்படி ஒரு நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற புத்திசாலிதனம் கிடைக்கும். மோடி என்ற பிம்பம் இஸ்லாமியர் எதிரி , ஹிந்து வெறியர் என்று உருவாக்க கம்யூனிஸ்ட் இந்த குஜராத் காலவரத்தை எடுத்து கையாண்ட விதத்தில் வெற்றி பெற்றனர்.. ஆனால் குஜராத் கலவரத்தில் இறந்த ஹிந்துகள் பற்றி எந்த மூச்சும் விடவில்லை கம்யூனிஸ்ட் பத்திரிக்கைகள்!!! அது ஏன்? அதே குஜராத் கலவரத்தை வைத்து பக்கம் பக்கமாக வகாபிசம் ஆதரவாளர்கள் தீவிரமாக மோடியை இஸ்லாமியருக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உருவாக்க பெரியவெற்றி கிடைத்துவிட்டது தான்.
வாய்ப்புகிடைக்கும் அனைத்து நிகழ்வுகளையும் - செய்திகளையும் கம்யூனிஸ்ட் பத்திரிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் மோடிக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள். ஏன் என்றால் அவன் இப்போ ஒரு இந்துத்துவா Icon, இதன் மூலம் இந்துத்துவா என்பது ஒரு மதவெறி கூட்டம் என்று உருவகம் செய்ய முயல்கிறார்கள். அதில் இந்த திராவிட தறுதலை கூட்டமும் சேர்ந்து கொண்டுவிட தமிழகத்தில் இது ஒரு படி மேலை போய் விட்டது.
இன்று மோடி என்ற Icon இஸ்லாமுக்கு எதிரானதாகவே ஆகிவிட்டது. இப்போ அவர் முகம் , அவர் பெயர் எல்லமே ஒரு Icon ஆக்கபட்டுவிட்டது.
மோடி தான் மிக அதிகம் வழுவான உறவை ஆப்கன் அரசுடன் உருவாக்குகிறார். அவர்கள் என்ன இஸ்லாமியர்கள் இல்லையா???? எனவே பொது எதிரியாக மோடி , இந்துதுவா உருவாக்குவது திட்டமிட்டு நடந்து வரும் ஒரு சதி இது.
இந்துக்களை மதம் மாற்றபடுவதை தடுப்பது , இந்துகளின் சிறுபான்மையினராக ஆக்கபடுவதை தடுப்பது , இந்த பிரிவினைவாதிகளை அழித்தொழிப்பது, தீவிரவாதிகளை கூண்டோடு அழிப்பது என்று அடிப்படையில் தெளிவான கொள்கையுடன் தான் பிஜேபி செயல்படுகிறது. சிறுபான்மையினர் நலன் என்று இந்துகளின் நலனை விட்டுகொடுக்க வேண்டுமா என்ன?? இந்தியாவின் எதிரியாக நாட்டுக்குள் திரியும் நரிகளை விட்டு வைக்க வேண்டுமா?
------------------------------------------
கிருஸ்தவர்கள்????
அட கிருஸ்தவர்கள் பிரச்சனையே கிடையாது. மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகள் தான் பிரச்சனை. மதம் அவர் அவர் விருப்பும். மாறுவது அவர் அவர் சுதந்திரம். ஆனால் திட்டமிட்டு மதம் மாற்றுவது???? எனவே கிருஸ்தவர்களை பொறுத்தவரை அவ்வளவு தான் விசயம்.
இரண்டும் மதங்களுமே ஆப்ரகாம் வழி தோன்றல்களால் உருவான மதங்கள்.. இந்த மதங்களின் புனித பூமி இது அல்ல. காசாவும் , ஜெருசலமும் தான் என்னும் போது மத ரீதியாக தங்கள் தாய் மண்ணை இவர்கள் நேசிக்காமல் விலகிவிட கூடாது. அது பிற்காலத்தில் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கே பிரச்சனையை உருவாக்கும் என்பதால் பிஜேபி நாட்டுபற்று என்ற விசயத்தை அதிகம் மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறது. இப்போ அதுவும் பிரச்சனை ஆக்குகிறார்கள்.
----------------------------------------------------------
இறுதியாக :
"சிறுபான்மையினரை திருப்தி படுத்தித்தான் வோட்டு வாங்கி அரசியல் செய்யவேண்டும் என்று எந்த எண்ணமும் பிஜேபிக்கு கிடையாது. யாரையும் திருப்த்திபடுத்தவும் முடியாது; ஆனால் நாட்டின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியது தான் என்பது மோடி நன்கு உணர்ந்தே செயல்படுகிறார்".
"ஆம் நான் இந்துகளுக்கு தான் உழைக்கிறேன், இது இந்துகளுக்கு மட்டுமே சொந்தமான தேசம்" என்று உணர்வை தூண்டிவிட்டு பேச எவ்வளவு நேரம் ஆகும் அவருக்கு? என்றாவது அப்படி பேசியது உண்டா அவர்???? ஒரு மாநிலத்தில் 12ஆண்டுகள் முதல்வராக இருந்த ஒருவர் - 3வருடமாக ஒரு நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் வீட்டு சொத்து என்ன??? அவர் அண்ணன் தம்பி சொத்து என்ன??? அதே கருணாநிதி குடும்பம் சொத்து என்ன???? இதில் கூடவா மோடி அவர்களின் நேர்மை தெரியாது????
1.திமுக, காங்கிரஸ் - மீண்டும் ஆட்சியை பிடிக்கணும்.
2.கம்யூனிஸ்ட்&போராளிகள் - எப்டியாது நாட்டை பிளவு படுத்தனும்.
3.பெரியார் இயக்கம் - இந்துவே இருக்க கூடாது.
4.மதம் மாற்றும் இயக்கங்கள் - நன்கொடை வந்த வழியை அடைத்துவிட்டார் மோடி.
இந்த எல்லோருக்கும் பொது எதிரி? மோடி.. இந்துத்துவா.. அதனால் உருவாகும் குழப்பமே இன்று இந்த கேள்வி.
எனவே இந்துத்துவா என்பது மதவெறி அல்ல. அது இந்த தேசத்தின் ஆன்மாவை நேசிக்கும் உண்மை.
-மாரிதாஸ்

https://www.facebook.com/viji.prabhu.921/posts/1771246146221084

Tuesday, October 17, 2017

GOLD COIN DETAILS IN TAMIL




















Tuesday, October 3, 2017

சூரியனுக்கும் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்?

Image may contain: one or more people, ocean, sky, twilight, outdoor, nature and waterஒளியை வெளிப்படுத்தும் ஒரு பொருளிலிருந்து ஒளியுடன் கூடவே சக்தியும் வெளிவருகிறது. இப்படி வெளிவரும் சக்தியை 'ஒளிர்வுத்தன்மை' என்பார்கள். அதாவது ஆங்கிலத்தில் 'Luminosity'. ஒரு பொருளிலிருந்து, ஒரு செக்கனுக்கு வெளிப்படும் ஒளிச்சக்திதான் அதன் ஒளிர்வுத்தன்மையாகும். இதை 'வாட்' (Watt- W) இல் அளப்பார்கள்.
நம் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிச்சக்தி எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? 3.85X10^16 வாட்கள். அம்மாடியோவ். 1000 வாட் ஒளிவிளக்கைப் பார்க்கும்போதே நமக்கு நாக்கு வெளியே வந்துவிடுகிறது. "அட! சூரியன்தான் எவ்வளவு பெரியது. அதிலிருந்து பிரமாண்டமான சக்தி வருவது நாம் பிறந்ததிலிருந்து பார்த்து வருவதுதானே!" என்றுவிட்டு நகர்ந்து செல்ல நீங்கள் நினைத்தால், சற்றுப் பொறுங்கள். உங்களுக்கு நான் சொல்ல வந்த தகவல் இதுவல்ல. நீங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காதது அது.
ஒரு மனிதன்அது, சூரியனைவிடப் பிரகாசமானவன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? நீங்களோ அல்லது நானோ சூரியனைவிட உண்மையாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் காதலியிடம் சென்று, "நான் சூரியனைவிட அதிகமாக ஒளிர்கிறேன்" என்று பயப்படாமல் சொல்லுங்கள். கணவர்கள் தயவுசெய்து உங்கள் மனைவியிடம் இப்படிச் சொல்வதைத் தவிர்க்கவும். உங்கள் பிரகாசம் எவ்வளவு என்று ஏற்கனவே அறிந்தவள் அவள். எனவே வேண்டாம்.
சூரியன் ஒளிர்கிறது. அது ஒளிர்வதால், அதற்கு ஒளிர்வுத்தன்மை இருக்கிறது என்பது சரி. மனிதனுக்கு எப்படி ஒளிர்வுத்தன்மை வரமுடியும்? அதுவும் சூரியனைவிட அதிகமாக? கரடி விடுவதற்கும் ஒரு அளவு கணக்கு இருக்கிறதல்லவா? ஆனால், இது கரடி அல்ல, உண்மை. நம்புங்கள்.
ஒரு பொருலிலிருந்து தானாகவே வெப்பமும், சக்தியும் உருவாகி வெளியேறுமானால் அதைக் 'கருவுடல் கதிர்வீச்சு' (Black body radiation) என்பார்கள். இந்த வகையில் சூரியனைப் போலவே, நம் உடலும் சக்தியை உள்ளிருந்து உருவாக்கி வெளியேற்ற்றிவரும் ஒரு உலைதான். சக்தியை உருவாக்கும் உலைகளை மனிதன் வெவ்வேறு வடிவங்களில் செயற்கையாக வடிவமைத்துத் தனத்துத் தேவையான மின்சாரம் போன்றவற்றைப் பெற்றுக்கொள்கிறான். ஆனால், தானே சக்தியை உருவாக்கும் ஒரு உலையாக இருக்கிறான் என்பது இயற்கையின் பேராச்சரியம். இப்போது, அந்த மனித உலையை சூரியனுடன் ஒப்பிட்டுப் பேசுகிறோம் என்பது அதைவிடப் பேராச்சரியம்.
சூரியனின் மையக்கோளத்திலிருந்து (Core) உருவாகும் கதிரியக்கச் சக்தி, அதன் மேற்பரப்பையடைந்து, சூரியக் குடும்பத்தின் சுற்றுவட்டாரத்திற்கு பரவுகிறது. சூரியனின் மையக்கோளத்தின் வெப்பநிலை 15 மில்லியன் சதம பாகையாகும் (°C). அங்கிருந்து உருவாகும் கதிரியக்கச் சக்தி, மெல்ல மெல்ல வெளிநோக்கி அனுப்பப்பட்டு, ஒளிவெளிவரும் படலத்தில் (Photosphere) அதன் வெப்பநிலை 5500 சதம பாகையாக வெகுவாகக் குறைந்துவிடுகிறது. அது மேலும் சூரியனின் வெளிமண்டலத்தில் (Atmosphere) 4320 சதம பாகையாகி விடுகிறது. இருந்தாலும் இந்த வெப்பநிலை மிகவும் அதிகமானதுதான். ஆனால், மனிதனின் உடல் வெப்பநிலை, வெறும் 37.5 சதம பாகையே! இந்த 37.5 சதம பாகை எங்கே? சூரியனின் 5500 சதம பாகை எங்கே? எப்படி மனிதனைச் சூரியனுடன் ஒப்பிட முடியும்? சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலையை, அதன் மேற்பரப்பின் அளவுடன் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு சதுர சதம மீட்டருக்குச் சூரிய மேற்பரப்பில் வெளிவரும் வெப்பநிலை, மனிதனின் ஒரு சதுர சதம மீட்டர் மேற்பரப்பில் வெளிவரும் வெப்பநிலையின் 121,000 (ஒரு இலட்சத்து இருபத்தோராயிரம்) மடங்கு அதிகமாகும். சூரியனின் மேற்பரப்புக் கிட்டத்தட்ட 6.1X10^22 சதம மீட்டர் ஆகும். இந்த மேற்பரப்பிலிருந்து வெளிவரும் ஒளிர்வுத்தன்மையின் (Luminosity) அளவு, 4X10^33 ergs/second. இந்த அளவுகள், அலகுகளைப் பார்த்துப் பயந்துவிட வேண்டாம். இவையெல்லாம் ஒரு தகவலுக்கு மட்டும்தான். மனிதனின் உடல் மேற்பரப்பை அண்ணளவாக 25000 சதம மீட்டர் என்று எடுத்துக் கொள்ளலாம். அதிலிருந்து வெளிவரும் ஒளிர்வுத்தன்மையின் அளவு 1.3X10^10 ergs/second ஆகும். இது பலப்பல மடங்குகள் சிறியதாகும். அப்படியென்றால், சூரியனைவிட மனிதன் எப்படி அதிக ஒளிர்வுத்தன்மையை வெளிவிட முடியும்? சத்தியமே இல்லையல்லவா? அப்படியென்றால், உண்மையிலேயே நான் மேலே சொன்னது கரடி(பொய்)தானா? இல்லை. மனித உடலை அவ்வளவு சுலபமாக நீங்கள் கணக்கிட முடியாது. அது சூரியனைவிட அதிக சக்தியை வெளியிடுவது உண்மைதான்.
எந்த இடத்தில், எந்த விதத்தில் மனிதன் சூரியனைவிடப் பெரியவனாகிறான் தெரியுமா? அவனது கனவளவைக் (Volume) கொண்டு. உண்மையில் அளக்கப்பட வேண்டியதும் கனவளவுதானேயொழிய, மேற்பரப்பு அல்ல. சூரியனின் கனவளவைக் கணித்துக் கொண்டால், அது 1.4X10^33 கன சதம மீட்டர். இதன்படி, ஒவ்வொரு கன சதம மீட்டருக்கும், சூரியனால் வெளிவிடப்படும் ஒளிர்வுத்தன்மை, வெறும் 2.8 ergs/second ஆகிவிடுகிறது. இப்போது, மனிதனின் ஒளிர்வுத்தன்மை அளவிட்டால், ஒரு கன சதம மீட்டருக்கு 170,000 ergs/second (ஒரு இலட்சத்து எழுபதாயிரம்) என்னும் மிகப்பெரிய அளவாகிறது. இந்த அளவு, சூரியனைவிடப் பல மடங்குகள் அதிகம். அதாவது அறுபதாயிரம் மடங்குகள் அதிகம்.
ஒரு மனிதன், தன் முழு உருவத்தையும், சூரியனின் முழு உருவத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தானானால், அவன் சூரியனைவிட 60,000 மடங்குகள் அதிகமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். இது கதையல்ல. நிஜம்.

Sunday, March 5, 2017

HYDROCARBON - ஹைட்ரோகார்பன்




ஹைட்ரோகார்பன் என்பது ஒருவகைப் பொருளை மட்டும் குறிப்பது அல்ல. அது பல பொருட்களுக்கான பொதுச்சொல். ரொம்பச் சுலபமாகச் சொன்னால், ஹைட்ரஜனும் (H), கார்பனும் (C) இணைந்து தோன்றும் கூட்டுப்பொருள். இங்கு பொருள் என்பது வாயுவையும் அப்பப்போ திரவத்தையும் குறிக்கின்றது.

இன்று தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பனைப் பலர் வில்லத்தன்மை கொண்டதாகப் புரிந்துகொள்கிறார்கள். உண்மையில் அது ரோஜா அரவிந்தசாமியா, போகன் அரவிந்தசாமியா, இல்லை தனியொருவன் அரவிந்தசாமியா என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கிறது. அதைத் தீர்க்கும் வகையில் இல்லாவிட்டாலும், ஹைட்ரோகார்பன் என்றால் என்ன என்பதற்கான சிறு விளக்கம் இது. ஹை.கா நல்லதா, கெட்டதா என்பதையும், அதன் அரசியலையும் நான் இங்கு பேசப்போவதில்லை.

ஹை.கா என்றால் தனியொரு பொருள் இல்லையென்று மேலே கூறினேன். ஹைட்ரஜனும், கார்பனும் பல விதங்களில், பல படிநிலைகளில் ஒன்று சேர்கின்றன. அப்படி விதவிதமாக அவை ஒன்று சேரும்போது, வெவ்வேறு மூலக்கூறுகள் தோன்றுகின்றன. அவை எல்லாமே ஹை.கார்பன்கள்தான். சொல்லப் போனால், ஆயிரக்கணக்கான ஹை.கா இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மீதேன். தமிழ்நாட்டில் மீதேன் எடுக்கும் திட்டம், ஹை.கா எடுக்கும் திட்டம் என வெவ்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதிலுள்ள உள்ளடி அரசியல்பற்றி எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் இங்கு பேசமுடியாது.

கார்பன் என்பது ஆறு எலெக்ட்ரான்களைக் கொண்ட ஒரு தனிமம். அதில் நான்கு எலெக்ட்ரான்களை யாருடனாவது பகிர்ந்துகொண்டு பதவிசா குடும்பம் நடத்த நினைக்கும். ஹைட்ரஜன் காதலியை அதற்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால், தன் நான்கு கரங்களையும் கொண்டு நான்கு ஹைட்ரஜன்களை அணைத்துக் கொள்ளும். ஹை.கா இல் ரொம்ப எளிமையான மூலகம், ஒரு கார்பனையும், நான்கு ஹைட்ரஜனையும் கொண்ட மூலக்கூறுதான்.

இதன் பெயர்தான் மீதேன் (Methane - CH4).

ஒரு கார்பன், மூன்று ஹைட்ரஜன்களையும் நான்காவதாக வேறொரு கார்பனையும் கூட்டுச் சேர்ந்து கொள்வதும் உண்டு. அப்போது மேலதிகமாக இரண்டு ஹைட்ரஜன்களும் அவற்றுடன் சேர்கின்றன. அப்படி இரண்டு கார்பன்களுடன் ஆறு ஹைட்ரஜன்கள் ஒன்று சேந்து உருவாவதை ஈதேன் (Ethane - C2H6) என்பார்கள். இதுபோல படிப்படியாக ஒரு கார்பனும், இரண்டு ஹைட்ரஜன்களும் தொடர்ச்சியாகச் சேர்ந்துகொண்டு புதிய மூலகங்களை உருவாக்குகின்றன அவை புரொபேன் (Propane - C3H8), பூடேன் (Butane - C4H10), பெண்டேன் (Pentane - C5H12), ஹெக்ஸ்டேன் (Hexane - C6H14) என்று வரிசையாகப் போய்க்கொண்டேயிருக்கும். இவையனைத்தும் கார்பனின் நான்கு எலெக்ட்ரான்களையும் தனித்தனி ஒற்றை இணைப்புகளாகக் கொண்டவை. இந்தவகை ஒற்றை இணைப்பு ஹை.கார்பன்களை அல்கேன் (Alkane) என்று வகைப்படுத்துகிறார்கள். அத்துடன் இவை சாட்சுரேட்டட் (Saturated) ஹைட்ரோ கார்பன்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

கார்பன்கள் தனித்தனி ஒற்றை இணைப்புகளுடன் (Single Bond) இல்லாமல், இரட்டை இணைப்புகளுடனும் (Double Bond), மூன்று இணைப்புகளுடனும் (Triple Bond) தங்களுக்குள் சேர்ந்துகொள்கின்றன. இரட்டை இணைப்புடன் உருவாகும் ஹை.கார்பன்கள் அல்கீன் (Alkene) என்றும், மூன்று இணைப்புகளுடன் உள்ளவை அல்கைன் (Alkyne) என்றும் அழைக்கப்படுகின்றன. அத்துடன், சைக்ளோ அல்கேன் (Cycloalkane), அல்கடீன் (Alkadiene) என்னும் தொகுதிகளும் உண்டு. இவற்றை அன்சாட்சுரேட்டட் ஹைட்ரோகார்பன்கள் (Unsaturated) என்கிறார்கள்.


இவையெல்லாமே ஹைட்ரோ கார்பன்கள்தான்.


பொதுவாக ஹை.கா என்றால் மக்கிப்போகும், உக்கிப்போகும் கழிவுப்பொருட்களிலிருந்து உருவாகும் வாயுக்கள். உயிரினங்கள், மரங்கள் ஆகியவை நிலத்தில் புதைந்து அவைகள் சிதைவதால் உருவாகுபவை.
 
எத்தனையோ ஹைட்ரோ கார்பன்கள் இயற்கையில் கிடைக்க, அவற்றின் விளக்கங்கள் இல்லாமல் பொதுவாக ஹை.கா திட்டம் என்பதும், மீதேன் திட்டம் என்று சொல்வதும் எதையோ நமக்கு உணர்த்தவே செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை ஹை.கார்பனின் உபயோகங்களும், பயன்பாட்டு பெறுநிலையும் நல்லவையே! ஆனால் அவற்றை எப்படிப் பெறப்போகிறோம் என்பதில் தெளிவான விளக்கம் கிடைக்க வேண்டும்.

இரகசிய திட்டங்கள் போல நடைமுறைக்கு கொண்டுவந்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளும் அரசியல் ஏன் நடைபெறுகிறது என்றே புரியவில்லை.

Thanks
-ராஜ்சிவா-

Saturday, February 11, 2017

MEDICAL FITNESS

*MEDICAL FITNESS*
*PREVENTION IS* *BETTER THAN CURE*



           *BLOOD PRESSURE*
          ----------
120/80 --  Normal
130/85 --Normal  (Control)
140/90 --  High
150/95 --  V.High
----------------------------

           *PULSE*
          --------
72  per minute (standard)
60 --- 80 p.m. (Normal)
40 -- 180  p.m.(abnormal)
----------------------------

          *TEMPERATURE*
          -----------------
98.4 F    (Normal)
99.0 F Above  (Fever)


*BLOOD GROUP COMPATIBILITY*

What’s Your Type and how common is it?

O+       1 in 3        37.4%
(Most common)

A+        1 in 3        35.7%

B+        1 in 12        8.5%

AB+     1 in 29        3.4%

O-        1 in 15        6.6%

A-        1 in 16        6.3%

B-        1 in 67        1.5%

AB-     1 in 167        .6%
(Rarest)



*Compatible Blood Types*

O- can receive O-

O+ can receive O+, O-

A- can receive A-, O-

A+ can receive A+, A-, O+, O-

B- can receive B-, O-

B+ can receive B+, B-, O+, O-

AB- can receive AB-, B-, A-, O-

AB+ can receive AB+, AB-, B+, B-, A+,  A-,  O+,  O-

This is an important msg which can save a life! A life could be saved...
What is ur blood group ?
Share the fantastic information..

*EFFECT OF WATER*                  
 We Know Water is 
       important but never 
       knew about the 
       Special Times one 
       has to drink it.. !

       *Did you  ?*

  Drinking Water at the 
       Right Time  
       Maximizes its 
       effectiveness on the 
       Human Body;

         1 Glass of Water 
              after waking up -
              helps to 
              activate internal 
              organs..

         1 Glass of Water 
              30 Minutes   
              before a Meal - 
              helps digestion..

        1 Glass of Water 
              before taking a 
              Bath  - helps 
              lower your blood 
              pressure.

        1 Glass of Water 
              before going to 
              Bed -  avoids 
              Stroke  or Heart 
              Attack.

      'When someone 
       shares something of 
       value with you and 
       you benefit from  it, 
       You have a moral 
       obligation to share