Saturday, August 30, 2014

மரணமில்லா பெருவாழ்வு பகுதி1

மரணமில்லா பெருவாழ்வு- பகுதி1

மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமா???

          மரணத்தை வென்ற பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.எவ்வாறு ஒருவரால் மரணத்தை வெல்ல முடியும்? நம்மால் 100 வருடங்கள் வாழ்வதே சாத்தியமில்லாத போது, எவ்வாறு மரணத்தை மட்டும் வெல்ல முடியும்?? 

என்று நமது புற அறிவான கடன் வாங்கப்பட்ட அறிவைக் கொண்டு கேட்கிறோம்.நமது அக அறிவான உள்-அறிவுக்கு செல்ல எவரும் தயாராக இருப்பதில்லை.

          பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நட்சத்திரங்களும்,கிரகங்களும், இந்த ப்ரபஞ்சமும் எவ்வாறு இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன?? மனிதன் மட்டும் ஏன் அழிகிறான் என்று நாம் சிந்திக்க தயாராகுவதில்லை.

         ஒரு செல் உயிரிகளும், பாக்டீரியாக்களும்,இன்று வரை இறவாமல் தான் வாழ்ந்து வருகின்றன. ஆனால் பல செல்களால் உருவாக்கப்பட்ட நாம் அழிகிறோம்.

ஓரறிவு உயிரே மரணமில்லா பெருவாழ்வை வாழ்கிறது, ஆறறிவு பெற்றிருக்கும் நாம் இறக்கிறோம். இதில் நாம் ஆறறிவு பெற்றிருக்கிறோம் என்ற பெருமை வேறு !

          நாம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 15 முதல் 17 முறை சுவாசித்தால் ஒரு நாளில் சராசரியாக 21600 முறை சுவாசிக்கிறோம்.இவ்வாறு சுவாசிக்கும் போது நமது ஆயுட்காலம் ஏறத்தாழ 100 வருடங்கள் என நிர்ணயிக்கப்படுகிறது.

         ஆனால் இந்த சுவாசம் பல்வேறு புற சூழ்நிலைகளாலும்,மனம் ,உடல்,பிராணனில் உள்ள  குற்றங்களினாலும் பாதிக்கப்படும் போது ஒரு நிமிடத்திற்கு 18 முதல் 55 வரை மாற்றமடைகிறது.

நமது சுவாசத்தின் அளவு அதிகரிக்கும்  போது நமது ஆயுளின் அளவு குறைகிறது. முந்தைய நூற்றாண்டு தலைமுறையினர் ஒரு நிமிடத்திற்கு 11 லிருந்து 13 வரை சுவாசித்து 100+ வருடங்களை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

உங்களின் ஆயுட்காலத்தை தீர்மானிப்பது உங்களின் சுவாசமே.

          கிட்டத் தட்ட மனிதனின் சுவாச அளவீட்டை கொண்டிருக்கும் நாயின் சுவாசமானது ஒரு நிமிடத்திற்கு 28 லிருந்து 45 வரை சுவாசிப்பதாலும் அதன் மனம் ,உடல்,பிராணனில் உள்ள  குற்றங்களினாலும் அதன் ஆயுட்காலம் சராசரியாக 12 லிருந்து 20 வருடங்கள் மட்டுமே வாழ்கிறது.

         உதாரணத்திற்கு  ஆமை ஒரு நிமிடத்திற்கு 5 லிருந்து 6 முறை மட்டுமே சுவாசிக்கும்.இதன் காரணமாகவே இதன் ஆயுட்காலம் சராசரியாக 300 லிருந்து 600 வருடங்கள் வரை இருக்கிறது.         
            

      பிராண வாயுவின் அசைவு எதுவோ அதுவே சித்தத்தின் அசைவு. பிராணனது சலனத்தை ஜெயிக்க முயன்ற சித்தர்கள் வாசியோகம் பயின்று சகல சித்திகளையும் பெற்றனர்! இவ்வாறாக சுவாசத்தின் தன்மையை ஆராய்ச்சி செய்த நம் சித்தர்கள் பின்வருமாறு கூறினர்.

 
        “ஏற்றி இறக்கி இரு காலும்   பூரிக்கும்        
                   கணக்கரிவாரில்லை
         காற்றை பிடிக்கும் கணக்கரிவார்க்கு கூற்றை
         உதிக்கும் குறியதுவாமே”

சுவாசத்தின் அளவை முறைப்படி கட்டுப்படுத்த தெரிந்தவருக்கு கூற்று(எமன்)- மரணத்தையும் தள்ளிபோடலாம்.இவ்வாறாக அவர்களின் அனுபவ மொழிகளில் கூறுகிறார்கள்.

 ஒரறிவு உயிரினம் மரணமில்லா பெருவாழ்வை வாழ்கிறது, ஐந்தறிவான உயிரினங்கள் 600 வருடங்கள் வாழ்கின்றன.ஆனால் ஆறறிவு மனிதன்??
  
இப்போது கூறுங்கள் உங்கள் ஆயுட்காலத்தை தீர்மானிப்பது யார் கையில் இருக்கிறது என்று..?ஆம் நம் கையில் தான் இருக்கிறது.

இதைத் தான் மஹாமகரிஷி,”உன் தலை எழுத்தை நீயே தீர்மானித்துக் கொள்கிறாய்” இதை உங்கள் அனுபவத்தில் உணருங்கள் என்று கூறுகிறார்.

     இந்த மனம் ,உடல்,பிராணனில் உள்ள  குற்றங்களை நீக்கி, சுத்த தேகத்தைப் பெற்று சுவாசமற்ற நிலையில் சுழுமுனை சித்திக்கும் போது சமாதி(சமம்+ஆதி) வாய்க்கப்பெற்று,ஆன்மாவின் பல படிநிலைகளை கடந்து பயணிக்கும் போது, ஆன்ம அனுபவ முதிர்ச்சியால் இந்த சுத்ததேகம் நித்திய தேகமாக, ஒளிச்சரீரமாக மாறி,எந்த அனுக்களால் உருவாக்கப்பட்டாற்களோ.அந்த அனுக்களாகவே தங்கள் உடலை பிரித்து மாறி இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அனுக்களிலும் கலந்து, மரணத்தை வென்று மரணமில்லா பெருவாழ்வை எய்தியவர்கள் தான் நம் ஆதி குரு கந்தன்,மூல குரு அகத்தியர்,குரு போகர்,குரு புலிப்பாணிச்சித்தர், குரு இராமதேவர்,குரு மஹாமகரிஷி, குரு பாபாஜி, குரு திருமூலர்,குரு வள்ளுவர்,குரு அப்பர்,குரு நாகாராணி,குரு சுந்தரர்,குரு சம்பந்தர்,குரு மாணிக்கவாசகர்,குரு ஒளவையார்,குரு இராமலிங்க வள்ளல் மற்றும் பிற சித்தர்கள் என மரணத்தை வென்ற பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

     மகான் பாபாஜி 1900 வருடங்களாகவும்,மூன்றாம் மஹாமகரிஷி 320 வருடங்களுக்கு மேலாகவும்,வள்ளல் பெருமான் முதலான மரணத்தை வென்ற மகான்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பது நிதர்சனமான அனுபவ உண்மெய்.

       இந்த மரணமில்லா பெருவாழ்வை பற்றி அனைத்து மகான்களும் கூறியிருக்கும் நிலையில்,  நாம் எல்லோரும் அறிந்த வகையில் வள்ளல் பெருமான் இதை,

                 “மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடலாம் 

                                         கண்டீர் !!

                  பொய் புகலேன்,சத்தியம் உரைக்கின்றேன் .”

 என்று கூறி அதை அடைவதற்கான அனைத்து வழிகளையும் தெள்ளத் தெளிவாக விளக்கி, ஜீவ காருண்ய ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம்,சுத்த தேகம் என அனைத்து வழிமுறைகளையும் வழங்கி, இறுதியில் அவர் அதை நிரூபித்தும் காட்டினார்.

இவ்வாறு பிரபஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் கூறிய வள்ளல் பெருந்தகை இறுதியில்,

             “கடை விரித்தேன் கொள்வார்க்கு 
  
                       இல்லை,கட்டிக்கொண்டேன்”

என்றார்.இதன் அர்த்தம் என்ன?? அனைத்து வழிமுறைகளையும் கூறிவிட்டேன். இதை பின்பற்ற எவரும் தயாராக இல்லை,புறப்படுகிறேன் என்று கூறிச் சென்றார். 

பல சித்துக்களையும், இரசவாத வித்தைகளிலும்,மரணத்தை வெல்லும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய வள்ளல் பிறான் நினைத்திருந்தால் தனது சீடர்களை தனது சக்தியால் அவர் நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.

பிறகு ஏன் அதைச் செய்யவில்லை எனில், ஒவ்வொருவரும் அவர்களின் சுய ஆன்ம அனுபவத்தால் மட்டும் அல்லாது,பிறரின் அனுபவத்தால் அந்நிலையை அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்த வள்ளல் பிறான் அவர்தம் சீடர்களின் ஆன்ம அனுபவத்தை அடைய கூடிய வழிமுறைகளை வகுத்து அவர்களை அந்த பாதையில் பயணிப்பதற்கான வழியை மட்டும் காட்டினார்.

ஆம் உண்மையான ஆன்ம அனுபவத்தை பெற்ற குருக்கள் உங்களுக்கு வழியை காட்டியும், அந்த ஆன்ம பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சரிசெய்தும் உங்களை வழி நட்த்துவார்கள்.

ஆனால் அந்த பாதையில் பயணிக்கவும்,பயணிக்காமல் இருப்பதற்குமான ஆன்ம சுதந்திரம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் நம் உண்மையான ஆத்ம அனுபவ தரிசனம் என்பது உங்களுக்குள் மட்டுமே உள்ளது.

உங்கள் அனுபவமே உஙகளை வழி நடத்தும் குரு.
மஹாயோகமும் உங்களுக்கு இந்த வழியைதான் காட்டுகிறது.உங்களின் ஆன்ம அனுபவத்திற்கு தேவையானவற்றை வழங்கி மஹாமகரிஷியின் உண்மையான பாதையை உங்களுக்கு காட்டுகிறது. அந்த பாதையில் பயணிக்கவும்,பயணிக்காமல் இருப்பதற்குமான ஆன்ம சுதந்திரத்தை உங்களிடமே விட்டு விடுகிறது.

ஏனெனில் உங்கள் அனுபவம் மட்டுமே நிரந்தர உண்மை.

       எல்லா இரகசியங்களையும் நாம் தெறிந்திருக்கும் பட்சத்திலும் நம்மால் அவர்கள் கூறிய ஆன்ம அனுபவத்தை அடைய முடியாமல் போனதிற்கு காரணம்...

நாம் பல்வேறு புற சூழ்நிலைகளாலும்,மனம் ,உடல்,பிராணனில் உள்ள  குற்றங்களினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நம் ஆன்மாவானது இந்த உடல், மனம், பிராணன் என்னும் நிலைகளால் சிறைப்பட்டு நிற்கும் போது நமக்கு உண்மையான வழி தெறிந்தும் அதில் பயணிக்க முடியாமலும்,அவர்கள் கூறிய உண்மையான ஆன்ம அனுபவத்தை பெற முடியாமலும் தவிக்கிறோம்.

 நீங்கள் உங்கள் உடல், மனம் , பிராணனில் உள்ள குற்றங்களை கலைந்து உங்கள் தேகத்தை சுத்த தேகமாக மாற்றும் போது அவர்கள் கூறிய அந்த ஆன்ம அனுபவத்தை முழுமையாக அடையலாம்.

மஹாயோகம் இவற்றில் இந்த உடல், மனம் , பிராணனில் உள்ள குற்றங்களை கலைந்து உங்கள் தேகத்தை சுத்த தேகமாக மாற்றக் கூடிய மஹாமகரிஷியின் மருத்துவக் கலையை உங்களுக்கு வழங்குகிறது.

இது உங்களுக்கான மருத்துவ சிகிச்சையை கற்றுக் கொடுத்து ,உங்களை ஒரு சுய சிகிச்சையாளராக மாற்றி உங்கள் வாழ்நாள் முழுவதும் ஏற்படுகிற
 பிணிகளில்(நோய்) இருந்து  காத்துக் கொள்ளும் ஒரு சுய மருத்துவர்களாக மாற்றுகிறது.

        இந்த மருத்துவ சிகிச்சையில் பல மூலிகை மருந்துகளும்,கல்ப மருந்துகளும், பல யோக நுணுக்கங்களும்,பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகளும் முற்றிலும் மருத்துவர்களால் நடத்தப்படுகிறது.

ஒருவர் தன்னைப் பற்றிய போதிய  சுய  அறிவைகற்றுக் கொண்டு தன் நோய்களிலிருந்து முழுவதும் வெளிவந்து தன்னை அறிய, தன் சுய முன்னேற்றதிற்காக, தன் மருத்துவ சிகிச்சைக்காக செலவிடும் தொகையே கட்டணமாக பெறப்படுகிறது.
இந்த தொகை முழுவதும் உங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே செலவிடப்படுகிறது.

உங்கள் ஆன்ம விழிப்பிற்கு கற்றுத் தரப்படும் மஹாமகரிஷியின் கலைநுட்பமானது முற்றிலும் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.

ஏனெனில் உங்களின் உள்ளார்ந்த ஆன்மீகம்(ஆன்மாவின் எழுச்சிக்கு) கட்டணம் வசூலிக்க எவருக்கும் உரிமை கிடையாது.

வாழ்க்கை என்னும் அத்தியாயத்தில் ஆன்மா பயணிப்பது எதற்கு எனில்,நம் வாழ்க்கையின் இறுதி வரையிலும் கடவுளை தவிர வேரு எதுவும் நிரந்தரமில்லை என்பதை அனுபவ ரீதியாக உணர்வதற்காகத் தான்.

எனவே உங்கள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த இலக்கு இறைவனை அடைவது மட்டுமே,வேரு எந்த நிரந்தரமின்மையையும் அடைவதற்கும் தங்களுக்கு விருப்பமில்லை என்னும் பட்சத்தில் இவை அனத்தையுமே உங்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து உங்கள் ஆன்ம அனுபவ எழுச்சிக்கு துணை புரிகிறது.

     இன்று பல பேர் இறைவனைக் காட்ட முடியுமா?? மரணமில்லா பெருவாழ்வை அடைந்தவர்களை காட்ட முடியுமா?? என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கான ஒரு சம்பவம். இதை போன்றதொரு கேள்வியை கேட்டவர் தான் வீரத் துறவி விவேகானந்தர்(நரேந்திரன்). 

ஆம் ஆன்மீகத்திற்காக குரல் கொடுத்தவரே தான். நரேந்திரர் சிறு வயதாக இருக்கும் போது பல ஆன்மீக சிந்தனைகள் அவரை இறைவனை தேட ஆரம்பிக்கவைத்த்து.

அவர் தன் கண்ணில் பட்ட ஒவ்வொரு குருமார்களையும்,இறைவனைப் பற்றி பேசுபவர்களிடமும் சென்று இறைவனை காட்ட முடியுமா? என வினவினார். 

அவர்கள் அனைவரும் தயங்கி நின்றனர். ஒரு நிலையில் இவரைக் கண்டாலே பயந்து ஓடும் அளவிற்கு நரேந்திரனின் கேள்வி இருந்தது.

இந்த கேள்விக்கு விடை கிடைக்காத நரேந்திரர் அன்றிலிருந்து நாத்திகரானார்.

இறைவன் என்பவர் கிடையாது என்று பிரச்சாரம் செய்தான். 

ஒருமுறை ராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்ட நரேந்திரர் மிக துணிவுடன் இதே கேள்வியை அவரிடம் சென்று கேட்டார். 

இதற்கு சற்றும் தாமதிக்காத ராமகிருஷ்ணர் உடனே, “ நான் கடவுளைக் காட்டத் தயார் ! நீ அவரை பார்க்கத் தயாரா??” என்று கேட்ட அந்த கணமே அவரின் சீடராக மாறி இறைவனைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மற்றவர்களுக்கு போதிக்கும் அளவிற்கு ராமகிருஷ்ணரின் பதில் அவரை மாற்றியது.
ஏன் ராமகிருஷ்ணரின் பதில் மட்டும் அவரை மாற்றியது??

ஏனெனில்    ராமகிருஷ்ணரிடம் உண்மை இருந்தது.

மற்றவர்கள் அனைவரும் இறைவனைப் பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள்,ஆனால் ராமகிருஷ்ணரோ   இறைவனைப் பற்றி புரிந்து வைத்திருந்தார்.

ஆம் இறைவனை தெரிந்துக்(கேள்வி ஞானம்) கொள்ளாதீர்கள் !! இறைவனை புரிந்துக்(உங்களின் உள்ளார்ந்த அனுபவ அறிவு) கொள்ளுங்கள்.

நம்மில் பலபேர் வெளியில் கேள்விகளைக் கேட்டு ஒரு செய்தியை தெரிந்துக்கொண்டு நம் கடன் வாங்கிய புற அறிவை வளர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

அந்த செய்தியில் கூறப்பட்ட உண்மையை அனுபவ ரீதியாக அனுகி புரிந்துக் கொள்ள தயங்குகிறோம்.

உண்மையைப் பற்றி வள்ளுவப் பெருந்தகை,

   “எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்  அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு ”

இதில் அவ்ர் கூறும் மெய்பொருள் என்பது உண்மையான உள்ளார்ந்த அனுபவ அறிவைக் குறிக்கும்.
                    “கண்ணால் காண்பதும் பொய் !!
                     காதால் கேட்பதும் பொய்,
                     தீர விசாரிப்பதும் பொய்,
                     உன்னில் ஆழ்ந்து உன்னில் அறியும் 
                     உன் உள்ளார்ந்த அறிவே மெய் !! “
                   
நீங்கள் விவேகானந்தரைப் போன்று உண்மையை உங்கள் அனுபவத்தில் பெற தயாராக இருக்கும் பட்சத்தில் இந்த அனுபவ உன்மையை( உன்+மெய்) உங்களுக்கு வழங்கத்தயார்.

மகிழ்வுடன் வாழ்க !! ஜெய் மகரிஷி !!.
மஹாயோகம்

மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமா???

மரணத்தை வென்ற பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.எவ்வாறு ஒருவரால் மரணத்தை வெல்ல முடியும்? நம்மால் 100 வருடங்கள் வாழ்வதே சாத்தியமில்லாத போது, எவ்வாறு மரணத்தை மட்டும் வெல்ல முடியும்??
என்று நமது புற அறிவான கடன் வாங்கப்பட்ட அறிவைக் கொண்டு கேட்கிறோம்.நமது அக அறிவான உள்-அறிவுக்கு செல்ல எவரும் தயாராக இருப்பதில்லை.

பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நட்சத்திரங்களும்,கிரகங்களும், இந்த ப்ரபஞ்சமும் எவ்வாறு இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன?? மனிதன் மட்டும் ஏன் அழிகிறான் என்று நாம் சிந்திக்க தயாராகுவதில்லை.

ஒரு செல் உயிரிகளும், பாக்டீரியாக்களும்,இன்று வரை இறவாமல் தான் வாழ்ந்து வருகின்றன. ஆனால் பல செல்களால் உருவாக்கப்பட்ட நாம் அழிகிறோம்.

ஓரறிவு உயிரே மரணமில்லா பெருவாழ்வை வாழ்கிறது, ஆறறிவு பெற்றிருக்கும் நாம் இறக்கிறோம். இதில் நாம் ஆறறிவு பெற்றிருக்கிறோம் என்ற பெருமை வேறு !

நாம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 15 முதல் 17 முறை சுவாசித்தால் ஒரு நாளில் சராசரியாக 21600 முறை சுவாசிக்கிறோம்.இவ்வாறு சுவாசிக்கும் போது நமது ஆயுட்காலம் ஏறத்தாழ 100 வருடங்கள் என நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால் இந்த சுவாசம் பல்வேறு புற சூழ்நிலைகளாலும்,மனம் ,உடல்,பிராணனில் உள்ள குற்றங்களினாலும் பாதிக்கப்படும் போது ஒரு நிமிடத்திற்கு 18 முதல் 55 வரை மாற்றமடைகிறது.
நமது சுவாசத்தின் அளவு அதிகரிக்கும் போது நமது ஆயுளின் அளவு குறைகிறது. முந்தைய நூற்றாண்டு தலைமுறையினர் ஒரு நிமிடத்திற்கு 11 லிருந்து 13 வரை சுவாசித்து 100+ வருடங்களை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

உங்களின் ஆயுட்காலத்தை தீர்மானிப்பது உங்களின் சுவாசமே.
கிட்டத் தட்ட மனிதனின் சுவாச அளவீட்டை கொண்டிருக்கும் நாயின் சுவாசமானது ஒரு நிமிடத்திற்கு 28 லிருந்து 45 வரை சுவாசிப்பதாலும் அதன் மனம் ,உடல்,பிராணனில் உள்ள குற்றங்களினாலும் அதன் ஆயுட்காலம் சராசரியாக 12 லிருந்து 20 வருடங்கள் மட்டுமே வாழ்கிறது.
உதாரணத்திற்கு ஆமை ஒரு நிமிடத்திற்கு 5 லிருந்து 6 முறை மட்டுமே சுவாசிக்கும்.இதன் காரணமாகவே இதன் ஆயுட்காலம் சராசரியாக 300 லிருந்து 600 வருடங்கள் வரை இருக்கிறது.

பிராண வாயுவின் அசைவு எதுவோ அதுவே சித்தத்தின் அசைவு. பிராணனது சலனத்தை ஜெயிக்க முயன்ற சித்தர்கள் வாசியோகம் பயின்று சகல சித்திகளையும் பெற்றனர்! இவ்வாறாக சுவாசத்தின் தன்மையை ஆராய்ச்சி செய்த நம் சித்தர்கள் பின்வருமாறு கூறினர்.

“ஏற்றி இறக்கி இரு காலும் பூரிக்கும்
கணக்கரிவாரில்லை
காற்றை பிடிக்கும் கணக்கரிவார்க்கு கூற்றை
உதிக்கும் குறியதுவாமே”

சுவாசத்தின் அளவை முறைப்படி கட்டுப்படுத்த தெரிந்தவருக்கு கூற்று(எமன்)- மரணத்தையும் தள்ளிபோடலாம்.இவ்வாறாக அவர்களின் அனுபவ மொழிகளில் கூறுகிறார்கள்.

ஒரறிவு உயிரினம் மரணமில்லா பெருவாழ்வை வாழ்கிறது, ஐந்தறிவான உயிரினங்கள் 600 வருடங்கள் வாழ்கின்றன.ஆனால் ஆறறிவு மனிதன்??
இப்போது கூறுங்கள் உங்கள் ஆயுட்காலத்தை தீர்மானிப்பது யார் கையில் இருக்கிறது என்று..?ஆம் நம் கையில் தான் இருக்கிறது.

இதைத் தான் மஹாமகரிஷி,”உன் தலை எழுத்தை நீயே தீர்மானித்துக் கொள்கிறாய்” இதை உங்கள் அனுபவத்தில் உணருங்கள் என்று கூறுகிறார்.
இந்த மனம் ,உடல்,பிராணனில் உள்ள குற்றங்களை நீக்கி, சுத்த தேகத்தைப் பெற்று சுவாசமற்ற நிலையில் சுழுமுனை சித்திக்கும் போது சமாதி(சமம்+ஆதி) வாய்க்கப்பெற்று,ஆன்மாவின் பல படிநிலைகளை கடந்து பயணிக்கும் போது, ஆன்ம அனுபவ முதிர்ச்சியால் இந்த சுத்ததேகம் நித்திய தேகமாக, ஒளிச்சரீரமாக மாறி,எந்த அனுக்களால் உருவாக்கப்பட்டாற்களோ.

அந்த அனுக்களாகவே தங்கள் உடலை பிரித்து மாறி இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அனுக்களிலும் கலந்து, மரணத்தை வென்று மரணமில்லா பெருவாழ்வை எய்தியவர்கள் தான் நம் ஆதி குரு கந்தன்,மூல குரு அகத்தியர்,குரு போகர்,குரு புலிப்பாணிச்சித்தர், குரு இராமதேவர்,குரு மஹாமகரிஷி, குரு பாபாஜி, குரு திருமூலர்,குரு வள்ளுவர்,குரு அப்பர்,குரு நாகாராணி,குரு சுந்தரர்,குரு சம்பந்தர்,குரு மாணிக்கவாசகர்,குரு ஒளவையார்,குரு இராமலிங்க வள்ளல் மற்றும் பிற சித்தர்கள் என மரணத்தை வென்ற பல மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

மகான் பாபாஜி 1900 வருடங்களாகவும்,மூன்றாம் மஹாமகரிஷி 320
வருடங்களுக்கு மேலாகவும்,வள்ளல் பெருமான் முதலான மரணத்தை வென்ற மகான்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பது நிதர்சனமான அனுபவ உண்மெய்.

இந்த மரணமில்லா பெருவாழ்வை பற்றி அனைத்து மகான்களும் கூறியிருக்கும் நிலையில், நாம் எல்லோரும் அறிந்த வகையில் வள்ளல் பெருமான் இதை,

“மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடலாம்
கண்டீர் !!
பொய் புகலேன்,சத்தியம் உரைக்கின்றேன் .”

என்று கூறி அதை அடைவதற்கான அனைத்து வழிகளையும் தெள்ளத் தெளிவாக விளக்கி, ஜீவ காருண்ய ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம்,சுத்த தேகம் என அனைத்து வழிமுறைகளையும் வழங்கி, இறுதியில் அவர் அதை நிரூபித்தும் காட்டினார்.

இவ்வாறு பிரபஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் கூறிய வள்ளல் பெருந்தகை இறுதியில்,
“கடை விரித்தேன் கொள்வார்க்கு
இல்லை,கட்டிக்கொண்டேன்”
என்றார்.இதன் அர்த்தம் என்ன?? அனைத்து வழிமுறைகளையும் கூறிவிட்டேன். இதை பின்பற்ற எவரும் தயாராக இல்லை,புறப்படுகிறேன் என்று கூறிச் சென்றார்.

பல சித்துக்களையும், இரசவாத வித்தைகளிலும்,மரணத்தை வெல்லும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய வள்ளல் பிறான் நினைத்திருந்தால் தனது சீடர்களை தனது சக்தியால் அவர் நிலைக்கு கொண்டு செல்ல முடியும்.
பிறகு ஏன் அதைச் செய்யவில்லை எனில், ஒவ்வொருவரும் அவர்களின் சுய ஆன்ம அனுபவத்தால் மட்டும் அல்லாது,பிறரின் அனுபவத்தால் அந்நிலையை அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்த வள்ளல் பிறான் அவர்தம் சீடர்களின் ஆன்ம அனுபவத்தை அடைய கூடிய வழிமுறைகளை வகுத்து அவர்களை அந்த பாதையில் பயணிப்பதற்கான வழியை மட்டும் காட்டினார்.

ஆம் உண்மையான ஆன்ம அனுபவத்தை பெற்ற குருக்கள் உங்களுக்கு வழியை காட்டியும், அந்த ஆன்ம பயணத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சரிசெய்தும் உங்களை வழி நட்த்துவார்கள்.
ஆனால் அந்த பாதையில் பயணிக்கவும்,பயணிக்காமல் இருப்பதற்குமான ஆன்ம சுதந்திரம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் நம் உண்மையான ஆத்ம அனுபவ தரிசனம் என்பது உங்களுக்குள் மட்டுமே உள்ளது.

உங்கள் அனுபவமே உஙகளை வழி நடத்தும் குரு.
மஹாயோகமும் உங்களுக்கு இந்த வழியைதான் காட்டுகிறது.உங்களின் ஆன்ம அனுபவத்திற்கு தேவையானவற்றை வழங்கி மஹாமகரிஷியின் உண்மையான பாதையை உங்களுக்கு காட்டுகிறது. அந்த பாதையில் பயணிக்கவும்,பயணிக்காமல் இருப்பதற்குமான ஆன்ம சுதந்திரத்தை உங்களிடமே விட்டு விடுகிறது.

ஏனெனில் உங்கள் அனுபவம் மட்டுமே நிரந்தர உண்மை.
எல்லா இரகசியங்களையும் நாம் தெறிந்திருக்கும் பட்சத்திலும் நம்மால் அவர்கள் கூறிய ஆன்ம அனுபவத்தை அடைய முடியாமல் போனதிற்கு காரணம்...

நாம் பல்வேறு புற சூழ்நிலைகளாலும்,மனம் ,உடல்,பிராணனில் உள்ள குற்றங்களினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நம் ஆன்மாவானது இந்த உடல், மனம், பிராணன் என்னும் நிலைகளால் சிறைப்பட்டு நிற்கும் போது நமக்கு உண்மையான வழி தெறிந்தும் அதில் பயணிக்க முடியாமலும்,அவர்கள் கூறிய உண்மையான ஆன்ம அனுபவத்தை பெற முடியாமலும் தவிக்கிறோம்.

நீங்கள் உங்கள் உடல், மனம் , பிராணனில் உள்ள குற்றங்களை கலைந்து உங்கள் தேகத்தை சுத்த தேகமாக மாற்றும் போது அவர்கள் கூறிய அந்த ஆன்ம அனுபவத்தை முழுமையாக அடையலாம்.
மஹாயோகம் இவற்றில் இந்த உடல், மனம் , பிராணனில் உள்ள குற்றங்களை கலைந்து உங்கள் தேகத்தை சுத்த தேகமாக மாற்றக் கூடிய மஹாமகரிஷியின் மருத்துவக் கலையை உங்களுக்கு வழங்குகிறது.

இது உங்களுக்கான மருத்துவ சிகிச்சையை கற்றுக் கொடுத்து ,உங்களை ஒரு சுய சிகிச்சையாளராக மாற்றி உங்கள் வாழ்நாள் முழுவதும் ஏற்படுகிற
பிணிகளில்(நோய்) இருந்து காத்துக் கொள்ளும் ஒரு சுய மருத்துவர்களாக மாற்றுகிறது.

இந்த மருத்துவ சிகிச்சையில் பல மூலிகை மருந்துகளும்,கல்ப மருந்துகளும், பல யோக நுணுக்கங்களும்,பல்வேறு மருத்துவ சிகிச்சை முறைகளும் முற்றிலும் மருத்துவர்களால் நடத்தப்படுகிறது.

ஒருவர் தன்னைப் பற்றிய போதிய சுய அறிவைகற்றுக் கொண்டு தன் நோய்களிலிருந்து முழுவதும் வெளிவந்து தன்னை அறிய, தன் சுய முன்னேற்றதிற்காக, தன் மருத்துவ சிகிச்சைக்காக செலவிடும் தொகையே கட்டணமாக பெறப்படுகிறது.

இந்த தொகை முழுவதும் உங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே செலவிடப்படுகிறது.

உங்கள் ஆன்ம விழிப்பிற்கு கற்றுத் தரப்படும் மஹாமகரிஷியின் கலைநுட்பமானது முற்றிலும் இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.
ஏனெனில் உங்களின் உள்ளார்ந்த ஆன்மீகம்(ஆன்மாவின் எழுச்சிக்கு) கட்டணம் வசூலிக்க எவருக்கும் உரிமை கிடையாது.
வாழ்க்கை என்னும் அத்தியாயத்தில் ஆன்மா பயணிப்பது எதற்கு எனில்,நம் வாழ்க்கையின் இறுதி வரையிலும் கடவுளை தவிர வேரு எதுவும் நிரந்தரமில்லை என்பதை அனுபவ ரீதியாக உணர்வதற்காகத் தான்.
எனவே உங்கள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த இலக்கு இறைவனை அடைவது மட்டுமே,வேரு எந்த நிரந்தரமின்மையையும் அடைவதற்கும் தங்களுக்கு விருப்பமில்லை என்னும் பட்சத்தில் இவை அனத்தையுமே உங்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து உங்கள் ஆன்ம அனுபவ எழுச்சிக்கு துணை புரிகிறது.

இன்று பல பேர் இறைவனைக் காட்ட முடியுமா?? மரணமில்லா பெருவாழ்வை அடைந்தவர்களை காட்ட முடியுமா?? என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கான ஒரு சம்பவம். இதை போன்றதொரு கேள்வியை கேட்டவர் தான் வீரத் துறவி விவேகானந்தர்(நரேந்திரன்).
ஆம் ஆன்மீகத்திற்காக குரல் கொடுத்தவரே தான். நரேந்திரர் சிறு வயதாக இருக்கும் போது பல ஆன்மீக சிந்தனைகள் அவரை இறைவனை தேட ஆரம்பிக்கவைத்த்து.

அவர் தன் கண்ணில் பட்ட ஒவ்வொரு குருமார்களையும்,இறைவனைப் பற்றி பேசுபவர்களிடமும் சென்று இறைவனை காட்ட முடியுமா? என வினவினார்.
அவர்கள் அனைவரும் தயங்கி நின்றனர். ஒரு நிலையில் இவரைக் கண்டாலே பயந்து ஓடும் அளவிற்கு நரேந்திரனின் கேள்வி இருந்தது.
இந்த கேள்விக்கு விடை கிடைக்காத நரேந்திரர் அன்றிலிருந்து நாத்திகரானார்.
இறைவன் என்பவர் கிடையாது என்று பிரச்சாரம் செய்தான்.
ஒருமுறை ராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்ட நரேந்திரர் மிக துணிவுடன் இதே கேள்வியை அவரிடம் சென்று கேட்டார்.

இதற்கு சற்றும் தாமதிக்காத ராமகிருஷ்ணர் உடனே, “ நான் கடவுளைக் காட்டத் தயார் ! நீ அவரை பார்க்கத் தயாரா??” என்று கேட்ட அந்த கணமே அவரின் சீடராக மாறி இறைவனைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மற்றவர்களுக்கு போதிக்கும் அளவிற்கு ராமகிருஷ்ணரின் பதில் அவரை மாற்றியது.

ஏன் ராமகிருஷ்ணரின் பதில் மட்டும் அவரை மாற்றியது??
ஏனெனில் ராமகிருஷ்ணரிடம் உண்மை இருந்தது.
மற்றவர்கள் அனைவரும் இறைவனைப் பற்றி தெரிந்து வைத்திருந்தார்கள்,ஆனால் ராமகிருஷ்ணரோ இறைவனைப் பற்றி புரிந்து வைத்திருந்தார்.

ஆம் இறைவனை தெரிந்துக்(கேள்வி ஞானம்) கொள்ளாதீர்கள் !! இறைவனை புரிந்துக்(உங்களின் உள்ளார்ந்த அனுபவ அறிவு) கொள்ளுங்கள்.
நம்மில் பலபேர் வெளியில் கேள்விகளைக் கேட்டு ஒரு செய்தியை தெரிந்துக்கொண்டு நம் கடன் வாங்கிய புற அறிவை வளர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

அந்த செய்தியில் கூறப்பட்ட உண்மையை அனுபவ ரீதியாக அனுகி புரிந்துக் கொள்ள தயங்குகிறோம்.
உண்மையைப் பற்றி வள்ளுவப் பெருந்தகை,

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ”

இதில் அவ்ர் கூறும் மெய்பொருள் என்பது உண்மையான உள்ளார்ந்த அனுபவ அறிவைக் குறிக்கும்.

“கண்ணால் காண்பதும் பொய் !!
காதால் கேட்பதும் பொய்,
தீர விசாரிப்பதும் பொய்,
உன்னில் ஆழ்ந்து உன்னில் அறியும்
உன் உள்ளார்ந்த அறிவே மெய் !! “

No comments:

Post a Comment