Sunday, December 8, 2013

அன்பு ஒரு தர்மம்

அன்பு ஒரு தர்மம் அன்று....
அன்பு தவிர்க்க முடியாத ஒன்று
உணவையும் நீரையும் விட ....!
ஒளியையும் விட..காற்றையும் விடவும் தான்..!!
அன்பு செய்வதற்காக யாரும் கர்வப் பட வேண்டாம்
அன்பையே மூச்சுக் காற்றாக உள் வாங்கி வெளி விடுங்கள்.
இயல்பாக ... மூச்சு வாங்கி விடுவது போல்..அந்த நினைவு கூட இல்லாமல் ..
அன்பை யாரும் உயர்த்திப் பிடிக்க தேவையில்லை
புகழ் மொழி அதற்கு தேவையில்லை
அன்புக்குப் பரிசுகள் தேவை இல்லை
அன்பே அன்பின் பரிசு..
வெறுப்பிற்கு வெறுப்பே தண்டனை ஆவது போல் ..!


- மிகெய்ல் நைமி

No comments:

Post a Comment