Thursday, March 12, 2015

JAYA ANAND LINES




1. ஏளனத்திற்கு அஞ்சினால் சிகரம் தொடமுடியாது.
ஆறுதல் தேடுவதை விட அழுது விடு...

2. தூக்கம் வராத இரவைவிட கொடியது, வேலையில் ஈடுபாடில்லாத பகல்

3. நிராகரிப்பவனுக்குத்தெரியாது உருவாக்கியவனின் வலி

4. காவல்கள் அதிகமானால் மனம் காம்பவுண்டு சுவரின் உயரத்தை அளவிடும்.

5. மனதை அழைத்துச்செல்லாத எந்தப்பயணத்திலும் சுவராசியமில்லை.

6. எல்லோர் கையிலும் வாழ்க்கை என்ற அழகான தூரிகையுள்ளது.அதை
அழகான ஓவியமாக்குவதும்,, அதையே கிறுக்கலாக்குவதும் நம் பயிற்சி முறையே.

7.மனதுக்குப்பிடித்த ஒரு நல்ல புத்தகம் படித்ததற்க்குப்பின் மனம் அமைதியடைவதில் சிறிதும் சந்தேகமில்லை

8. அழகான நாட்களையும்,
அன்பான உள்ளங்களையும்
அதிகமாக கொலைசெய்வது
நம் ஈகோ தான்.

9. பஞ்சுகள் பத்திரம்
இங்கு
நெருப்புகள் இலவசம்

10. கல்லடிப்படுவதற்கு மரமே கலங்காதே... 
உன்னிடம் பழம் இருக்கிறது பெருமைக்கொள்!

11. ஆண்கள் பெருந்தன்மையுடையவர்கள் என்பதற்கு பெரிய உதாரணம் ஆண்பேய்களே இல்லை.

12. தாத்தாக்களுக்கு பிளாஸ்டிக் கவர்கள் தருகின்றமாதிரியான ஒரு பாதுகாப்பை எந்த பர்ஸ் கம்பெனியும் கண்டுப்பிடிக்கவில்லை

13. ஒவ்வொரு முடிவிலும் ஆரம்பத்தின் தவறுகள் புரியாமலில்லை,ஆனால் சில தவறுகள் திருத்தப்பட காலம் அனுமதிப்பதில்லை

14. இதயத்துக்குள் எழுந்த மகிழ்ச்சியோ துக்கமோ நினைவுகளால் இமைகளை அழுத்தும்.

15. ரோஜாவுக்கு முட்கள் பாரமல்ல, அதைப்பறிக்க நினைப்பவருக்குத்தான் அந்த முட்கள் பாரம்.

16. உறங்கும்போதும் உறங்காத நினைவுகள்
யாவும் மறந்தே போகும் ஒரு நாளில்
அந்த நினைவுகளை நீ நினைக்காத போது

17.சந்தோஷத்தை கொண்டாடக்கூட நேரம் அனுமதிப்பதில்லை.அந்த நிமிடங்கள் அப்படியே நின்றாலென்ன?

18. முகமூடி இல்லாத முகங்களின் விலாசங்கள் மிக எளிதாக கிடைப்பதில்லை.

19.எங்கே போவது என உயரே உயரே பறக்கும் பட்டத்துக்கு தெரியாது அது காற்றடிக்கும் திசை எங்கும் பறக்கும்,,அது போல தான் மனமும்
நம்மை நேசிப்பரின் கையில் நூலை தருவதில் தவறில்லை,,,,அது அடிமைத்தனமும் இல்லை.

20. ஒரு பொய் இன்னொரு பொய்யை நம்பாது

21. ஏற்றுக்கொள்ளமுடியாத காதல் உண்டு,ஆனால் ஏற்றுக்கொள்ளமுடியாத அன்பு என்று எதுவும் இல்லை

22.சின்ன சின்ன பொய்கள் தரும் சந்தோஷத்தை, எந்த ஒரு பெரிய உண்மையும் தருவதில்லை

23. உனதன்பிற்கு உருவம் இல்லை
உன்னையே உருவகப்படுத்தினாலும் தவறில்லை

24. ”சும்மா சொன்னேன்” என்ற வார்த்தையே நமக்கு கிடைத்த வரம்

25.நகைச்சுவைக்காக மிகைப்படுத்தி சொல்லப்படும் பொய்கள் காலப்போக்கில் நடைமுறைப்பழக்கமாகிவிடுகிறது.

26. ஓவ்வொரு பூவும் அழகுதான்
உன்னைப் போல் சிரிப்பதால்
ஒவ்வொரு எழுத்தும் அழகுதான்
உன் பெயரில் இருப்பதால்
உன் இயல்புகள் அனைத்தையும்
ரசிக்கிறேன்
என்னுள் நீ இருப்பதால் 


27.இல்லாத அன்பை இருப்பதாக காட்டுவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினம் இருக்கும் அன்பை இல்லாததாக காட்டுவதும்.

28.
பணம் இருக்கும் கணவரிடம் அன்பையும்,
அன்பு இருக்கும் கணவரிடம் பணத்தையும்
எதிர் பார்ப்பது மனைவியின் இயல்பு .

29.
புகழ்ச்சிக்கு மயங்காதவனையும்
இகழ்ச்சிக்கு கலங்காதவனையும்
நம்மால் என்ன செய்ய முடியும்??????

30.
உலகில் எதுவும் சிறந்ததில்லை,,,,,,,,,,,,,,,, உனக்கு பிடிக்காதவரை

31. ஒரு இதயம் எப்போதுமே மற்றொரு இதயத்துடன் இனணந்திருக்கவே விரும்பும் 
 
32. என் இரு விழி மூடினால்
நீ வந்து கண் சிமிட்டுகிறாய்...

எண்ண அலைகளில் ஊடுருவி
ஏளனம் செய்கிறாய் !!

என் மன வானில் சிம்மாசனமிட்டு
சிந்தனையைச் சிதைக்கிறாய்..

தானே பேசி, தானே சிரிக்கும்
பைத்தியமென ஊராரின் ஏளனம்...!


இருயிர் ஒன்றன வாழும்
அதிசயம் ஒன்று என்னுள் இருப்பது
இங்கே யாரறிவார்?
 

என்னுள் நீயும் உன்னுள் நானும்
இரண்டற கலந்த பின்னும்
ஏனோ நம் வாழ்க்கை
ரயில் தண்டவாளம் போல?


33. ஒருப்பெண்ணின் மேல் ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்க்காக அவளின் அனைத்து ஆசைகளுக்கும் ஈடுகொடுக்கமுடியாமல் திணறுகிறான் - ஆண்...
அந்த பெண் மேல் கொண்ட அன்பின் ஆழத்தில் மூச்சு விடவும் திணறுகிறான்
சில சந்தோசமான தருணங்களில்







No comments:

Post a Comment