Wednesday, October 29, 2014

இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் 12.36% சேவை வரி செலுத்த வேண்டுமா? சுற்றறிக்கை முழு விபரம்!

அக்டோபர் 14, 2014 அன்று Central Board of Excise and Customs என்ற மத்திய அரசு நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவோர் மத்தியில் இது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் - தங்களது பணத்தை வங்கிகள் மூலமோ, பிற பணம் மாற்றும் நிறுவனங்கள் மூலமோ இந்தியாவிற்கு அனுப்பும் போது, அதற்கு 12.36% சேவை வரி (SERVICE TAX) செலுத்த வேண்டுமோ என்ற கேள்வி - அந்த சுற்றறிக்கையை தொடர்ந்து எழுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பொதுவாக இந்தியாவிற்கு பணம் அனுப்ப - அவர்கள் வாழும் நாட்டில் உள்ள பணம் மாற்றும் நிறுவனத்தை அணுகுவார்கள். உதாரணமாக - துபையில் உள்ள இந்தியர்கள், இந்தியாவிற்கு 1000 திர்ஹம் அனுப்புகிறார்கள் என்றால், அங்குள்ள ஒரு நிறுவனம்/வங்கி மூலம், அதற்கான கட்டணம் (உதாரணம் 20 திர்ஹம்) செலுத்தி இந்தியாவிற்கு பணம் அனுப்புவார்கள்.

இந்தியாவில் அந்த பணத்தை - துபையில் உள்ள நிறுவனம் தொடர்பு வைத்துள்ள இந்திய நிறுவனம்/வங்கி மூலம் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவர் பெறுவார். துபையில் உள்ள நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட அந்த பணத்தை இந்தியாவில் வழங்க, இந்திய நிறுவனம்/வங்கி - சிறு கட்டணம் வசூலிக்கும். 

தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய நிறுவனம்/வங்கி பணத்தை இந்தியாவில் விநியோகம் செய்ய வசூல் செய்யும் கட்டணத்திற்குதான் (COMMISSION/FEE) சேவை வரி விதித்துள்ளது, அனுப்பப்பட்ட மொத்த பணத்திற்கு அல்ல.

உதாரணமாக இந்தியாவிற்கு 100 ரூபாய் அனுப்பப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதனை இந்தியாவில் வழங்க இந்திய நிறுவனம்/வங்கி 10 ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். இந்த சுற்றறிக்கை 10 ரூபாய்க்கு தான் 12.36% சேவை வரி விதிக்கிறது, 100 ரூபாய்க்கு அல்ல.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு - 2011ம் ஆண்டில் 64 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்) வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றறிக்கை முழுமையாக