Saturday, October 25, 2014

உலகால் அறியப்படாத ரகசியங்கள் PART 1


ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும்
சக்தி அதிகம்.

எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) "துணியால் செய்யப்பட்டது.

ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.

வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.

உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே.ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில்இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது.அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.

ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால்,அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.

உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும்
ஒரே உயிரினம்....கொசு.

ஒரு ஆய்வின்படி,வலது கை பழக்கமுடைய மனிதர்கள்,இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக
வாழ்கிறார்கள்.

நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது.அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் மரணமடையும்போது,முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.

ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன..
அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.

தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா?
அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.

டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன்
டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன
செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.

நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும்
சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள்
உடைவதே.

ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை.
அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.

---------------------------------------------------------------------------------------------------


• அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் செட்னா.

• வுட் செரல் என்பது இரண்டு வகையான பூ பூக்கும் செடி.

• திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து 'ஒள'.

• ஹைகூ என்பது ஜப்பான் நாட்டு கவிதை.

• உலகில் அதிக ஆண்டு வாழும் மனிதர்கள் ஜப்பானியர்கள்.

• மிக நீண்ட நாள் வாழும் உயிரினம் ஆமை.

• சீன நகரங்களில் ஒவ்வொரு வீட்டின் கதவிலும் அந்த வீட்டின் தலைவர் பெயர், மனைவி, மக்கள், பணியாளர், ஆடு, மாடு, நாய், குதிரை இவற்றின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த முறையினால் நகரின் மக்கள் தொகை, கால்நடைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசு அலுவலர்கள் எளிதில் கணக்கிடுகின்றனர்.

• ஹாக்கி என்ற சொல் ஹெகோ என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து பிறந்தது. ஹாக்கி விளையாட்டு கி.பி.514இல் தொடங்கப்பட்டது. ஹாக்கி மட்டை இடையர் கைக்கோலைப் பார்த்து உருவாக்கப்பட்டது. ஹாக்கி மைதானம் செவ்வக வடிவமாக இருக்க வேண்டும். அணிக்கு 11 பேர் விளையாடுவார்கள். 1860ம் ஆண்டில் லண்டனில் ஹாக்கி விளையாட்டு விதிகள் உருவாக்கப்பட்டன.

• ஒரு பூவுக்கு மேல் தாங்க வலிமையில்லாததால் காலையில் மலர்ந்து மாலையில் உதிர்ந்து அடுத்த பூவுக்கு இடமளிக்கும் தாவரம் நீலக்கண் புல்.

• வண்ணத் திரைப்படங்களுக்கு 'ஈஸ்ட்மேன் கலர்' என்று பெயர் சூட்டுவதுண்டு. அவ்வாறு சூட்டக் காரணம் என்ன தெரியுமா? 1883ம் ஆண்டில் முதன் முதலாக வண்ண புகைப்பட ஃபிலிம்மை ஈஸ்ட்மேன் என்பவர் கண்டுபிடித்தார். அதன் காரணமாக அவருடைய பெயரை வண்ண பிலிம்களுக்கு சூட்டலாயினர்.


• யானையின் காது முறம் போல இருக்கும் என்று கூறுவார்கள். யானையின் காதுக்கு செந்தமிழ்ப் பெயர் என்ன தெரியுமா? 'தலாடகம்' என்பது தான்.

• தலாடம் என்றால் என்ன தெரியுமா? ராமன் இலங்கைக்குச் சென்றபோது அணை கட்டினானே அப்போது எந்த சிறுபிராணி உதவியது? அணில் தானே! அணிலுக்கு இன்னொரு பெயர்தான் 'தலாடம்'.

• ஆறுகள், ஏரிகள், குளங்களில் பயணம் செய்ய உதவும் சிறுபடகுக்கு 'நடைச்சலங்கு' என்று பெயர்.

• கன்னியாகுமாரி முதல் மகாராஷ்டிரா வரை விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி பாயும் நதிகளின் எண்ணிக்கை 36. இதில் கேரளாவில் மட்டும் 19 நதிகள் பாய்கின்றன. இந்த 19 நதிகளில் பாயும் தண்ணீரில் 85% அரபிக் கடலில் போய் சேர்கிறது.

• சவுதி அரேபியாவிலுள்ள கிங் காலித் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் தான் உலகின் மிகப் பெரிய விமான நிலையம். 236 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது இது.

• பாரீஸ் நகரில் நாய்களுக்கான பொது கழிப்பறை வசதி இருந்தது.

• பைபிள் 349 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

• காகிதத்திலிருந்தே காகிதம் தயாரிப்பதுதான் காகிதம் தயாரிப்பதற்கான மிக எளிய வழியாகும். மூன்று கோடி டன் காகிதக் கூழ் உற்பத்தி செய்ய இரண்டரை கோடி டன் கழிவுக் காகிதம் சேர்க்கப்படுகிறது. எழுதிய காகிதங்களை வீணாக்காமல் ஏழு முறை புதிய காகிதம் தயாரிக்க மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

• பெட்ரோலில் கலக்கும் ஒருவகை ஈயம் 1921ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் எளிதாக இயங்கின. ஆனால், ஈயம் கலந்த பெட்ரோல் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று கருதி அது தவிர்க்கப்பட்டது.

• 1925ம் ஆண்டில் தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட்டன.

• நாணயத்தில் தனது உருவத்தை பொறித்த முதல் அரசர் அலெக்ஸாண்டர்.

• தவளைகள் பெரும்பாலும் குளம், குட்டைகளில் தான் அதிகம் வசிக்கின்றன. கடல்களில் இவை வசிப்பதில்லை.

• பெரும்பாலும் சிறு விலங்குகளின் இதயத் துடிப்பு அதிகமாகவும், பெரியனவற்றின் துடிப்பு குறைவாகவும் இருக்கிறது. சிறு விலங்குகளின் உடலிலிருந்து அதிக வெப்பம் வெளியேறுவதால் அதை ஈடு செய்கின்ற வகையில் இதயத்துடிப்பும் அதிகரிக்கின்றது.

• பாலூட்டிகளான திமிங்கலங்கள் காற்றை சுவாசிக்க நீர்மட்டத்திற்கு வந்தாக வேண்டும். அவ்வாறு வரும் போது இரண்டே செக்கண்டுகளில் 530 காலன் வரை காற்றை அவை இழுத்துக் கொள்கின்றன.

• தவளை இனத்தை சேர்ந்த தேரைகள் பார்க்க அருவெறுப்பாக தோற்றமளித்தாலும் பூச்சிகளை அழிப்பதில் அவை முக்கிய இடத்தை வகிக்கின்றன. மூன்று மாத காலத்தில் ஒரு தேரை 10000க்கும் மேற்பட்ட பூச்சிகளை உணவாகக் கொள்கிறது.

================================================================

* ஒரு அணுகுண்டு தயாரிக்க சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும்.

* 1984-ல் ஓசோனில் துளை இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

* அமெரிக்க டாலர் நோட்டுக்கு `கீரின்பைக்' என்று பெயர்.

* மதுரை மீனாட்சி கோவில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

* இந்தியாவுக்கு இந்தியா என்று பெயரிட்டது, கிரேக்கர்கள்.

* காந்தியடிகள் சிறையில் 2 ஆயிரத்து 338 நாட்கள் இருந்தார்.

* உலகில் உள்ள அணுஉலைகளின் எண்ணிக்கை 529.

* முதன் முதலில் அணுஉலையை உருவாக்கியவர் எண்ரிக்கோ பெர்மி.

==================================================================

*பூமிக்குள் இதுவரை துளையிட்டதிலேயே அதிகபட்ச ஆழம் 13 கிலோ மீட்டர். பூமியின் மையப்பகுதியை அடைய வேண்டும் எனில், இதைப் போல 500 மடங்கு துளையிட வேண்டும்.

*பூமித்தட்டுகள் எப்போதும் நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 2.5 சென்டிமீட்டர் தூரம். ஓராண்டில் நம் நகங்கள் வளர்வதும் ஏறத்தாழ இதே அளவுதான்!

*வெதுவெதுப்பான, சூரிய ஒளி நிறைந்த ஆழ்கடல் பகுதிகளிலேயே பவழங்கள் காணப்படுகின்றன.

*6,690 கிலோமீட்டர் நீளம் கொண்ட, உலகின் மிக நீளமான நைல் நதியும் காலத்தின் கோலத்தில் சுருங்கி வருகிறது.

*உலகின் மிகப்பெரிய ஆற்றுக் கழிமுகம் (டெல்டா), 77 ஆயிரத்து 700 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. கங்கை, பிரம்மபுத்ரா நதிகளால் உருவான இந்த டெல்டா, இந்தியாவிலும் பங்களாதேஷிலும் பரவியுள்ளது.

*நிலவில் அமெரிக்கக் கொடி வைக்கப்பட்டிருந்தாலும், ஒரு போதும் அந்தக் கொடி பறப்பதில்லை. காரணம் காற்றின்மை!

*கலிபோர்னியாவிலுள்ள ஒரு செம்மரத்தின் அடிமரச் சுற்றளவு 24 மீட்டர். உயரம் 83 மீட்டர். இந்த பிரமாண்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், இம்மரத்துக்கு ‘ஜெனரல் ஷெர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

*ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான பிளாங்க்டன் போன்ற உயிரினமாகத்தான் பிறக்கிறது, மிகப்பெரிய ஆக்டோபஸும் கூட. நண்டு, நட்சத்திர மீன் போன்றவையும் பிறப்பால் சின்னஞ்சிறு உயிரிகளே!

*Echinoderm   என்ற கடல்வாழ் குடும்பத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிக இனங்கள் உண்டு. ஆனாலும், அவற்றில் 5 முக்கியப் பிரிவுகள்தான். இக்குடும்பத்தின் பிரதான உயிரினம்  நட்சத்திர மீன்!

*டைனோசரை விடவும் பல மடங்கு மிகப்பிரமாண்டமான உயிரினமான நீலத்திமிங்கலம், 33 மீட்டர் நீளம் வரை வளரும்.


--------------------------------------------------------------------------------------------

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்

நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்

12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.



----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தெரிந்த பெயர்கள் தெரியாத உண்மைகள்...!



ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.



நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது.



நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.



தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.



பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.



23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.



யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.



சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.



திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.



மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.



தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.



சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.



மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.



ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930

கடிதங்கள் எழுதினார்.



எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.



வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.



பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.



விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.



1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.



சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.



தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.!