Thursday, October 30, 2014

100 கிராம் காளானில் 35% புரதச் சத்து உள்ளது

காய்கறிகளின் ராஜாவாக காரட்டைக் குறிப்பிடுகிறார்கள. காய்கறிகளின் இராணியாக காளானைக் குறிப்பிடுகிறார்கள். 100 கிராம் காளானில் 35% புரதச் சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் இருக்கிறது. கொழுப்பும் இருக்கிறது. ஆனால் அவை கொலாஸ்டிரலை இரத்தக் குழாயில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். காளானில் கொழுப்புச்சத்து இல்லை.

எனவே, பயமின்றிக் காளானை நன்கு சாப்பிடலாம். புரதச்சத்தும் உடலுக்குச் தேவையான சக்தியைத் தந்துவிடும். கொலாஸ்டிரல் சேரும் அபாயமும் இல்லை.
இதனால்தான் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதயவியாதி, மலச்சிக்கல், வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி முதலியனவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.

குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணமாக வேண்டும். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியைத் தந்துவிடுகின்றன.

புரதச்சத்து அதிகமாய் இருப்பதால் இராணி என்று வழங்கப்படும் காளானின் இரும்புச்சத்தும், பலவிதமான வைட்டமின்களும் உள்ளன. அதனால் மருத்துவக் குணங்களும் மிக அதிகம். ஏ வைட்டமின் அதிகமாய் இருக்கிறது.

காளானின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத எட்டு வகை அமினோ அமிலங்கள் உள்ளன.

காலரா, அம்மை நோய், விஷக்காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாகக் காளான் சூப் நல்ல பலன் தரும்.

காளானில் உள்ள ஒரு விதமான பொருள் புற்றுநோய் வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையைப் பெற்றுள்ளதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.

வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியன குணமாகக் காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகச் சமைத்துச் சாப்பிடலாம். பிரியாணி செய்தால் காளான், முட்டைகோஸ் பச்சை பட்டாணி ஆகிய மூன்றையும் தவறாமல், சேர்க்க வேண்டும். இது சத்துணவு, உடல் ஆரோக்கியத்துக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.

உடல் நலனில் அக்கறை உள்ள அனைத்து வயதுக்காரர்களும் வாரத்திற்கு இரு நாள்களாவது தக்காளி சூப் போல் காளான் சூப் தயாரித்து அருந்துதல் நலம்.

மட்டன் பிரியர்கள் காளான் சாப்பிட்டால் உடலுக்குச் சக்தி கிடைக்கும். உடலில் கொலாஸ்டிரல் சேராது. இந்தக் காரணத்தால்தான் உலகம் முழுவதும் காளான் உணவு மிகவும் விரும்பிச் சாப்பிடப்படுகிறது.

ஆரஞ்சுப்பழத்தைவிட, 4 மடங்கும், ஆப்பிள் பழத்தைவிட 12 மடங்கும், முட்டைக் கோஸைவிட இரு மடங்கும், புரதச்சத்தும், மருத்துவக் குணங்களும் நிரம்பியது, காளான்.


=================================================

சிப்பிக் காளான் வளர்ப்பு
பருவம் மற்றும் இரகங்கள்
· வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம்
· காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.
· வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை
காளான் குடில்
· 16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை மேயப்பட்ட குடில் போதுமானதாகும். குடிலை, வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்கவும்.
· வித்து பரவும் அறை :25-300சி வெப்பநிலை, நல்ல காற்றோட்டம், இருட்டு இல்லாமல் இருக்க வேண்டும்.
· வளர்ப்பு அறை :23-250சி வெப்பம், 75-80% ஈரப்பதம், மிதமான வெளிச்சம், நல்ல காற்றோட்டம் தேவை.


==============================================================

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.

இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். மேலும் காளானில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.