Sunday, February 22, 2015

கவிதை


காற்றைக்கூட
சுகிக்க தெரியாதவனை 
"கவிதை' எழுத செய்தாய்
சிறு கண்ணசைவில்..!!
^
தூக்கத்தில்
பொழுது போக்கியவனை
'நட்சத்திரங்களை'
எண்ண வைத்தாய்..!!
^
சொர்கத்தின் விலாசத்தை
விசாரித்து திரிந்தவனை
"ஸ்பரிசத்தில்தான் சொர்க்கம்" என
சொல்லாமல் உணர்த்தினாய்..!!
^
தோல்விகளில்
தடுக்கி விழுந்த என்னை
வெற்றிகளோடு
கைகுலுக்க செய்தாய்..!!

No comments:

Post a Comment