Saturday, September 20, 2014

தலையிலுள்ள கோழை நீங்க ஒரேவழி தவம் செய்வதுதான்!

உடல் மலங்களை நீக்குபவன் ஆரோக்கியமாக வாழலாம்!?
மன மலங்களை போக்குபவனே ,மரணமிலாது வாழலாம்!?
உடல் மலத்தில், ஏழாவது ஆதாரமாக சகஸ்ரதளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லப்படுகிறது.
இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்!
இந்த கோழை முழவதும் நீங்கினாலே, நம் மூளை கொஞ்சங் கொஞ்சமாக இயங்க
ஆரம்பிக்கும்.
தலையிலுள்ள கோழை நீங்க ஒரேவழி தவம் செய்வதுதான்!
குரு உபதேசம் பெற்று, நம் மெய்ப்பொருளாகிய- திருவடியாகிய நம் கண்களில் உள்ள ஒளியை குரு தீட்சையின் மூலம் உணர்ந்து,
அந்த ஒளியை நினைந்து உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும்.
கண்களில் கனல் பெருகும்
அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னி கலையை அடைந்து அங்கிருந்து மேலே சகஸ்ரதலம் நோக்கி செல்லும்.
ஞானக்கனல் பெருகப் பெருக அந்த உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி மூக்குவழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும்.
எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவமியற்ற வேண்டும்.
தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை.
நாம் செய்யும் தவம், நம் ஞானத்தீயை நம் கண்வழி பெருக்கி அதனால் அது சகஸ்ரதளத்தை அடைந்து
உணர்வு உண்டாகி அனலால் இளகி கோழை கரைந்து
ஒழுகும் இது சாதனை அனுபவம்.
தலைப் பகுதியிலுள்ள கோழை முழுவதுமாக வெளியேறும் பட்சத்தில்
மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒளி அலைகளால்
அதிர்வு ஏற்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக இயங்க
ஆரம்பிக்கும்.
கோழையால் கவிழ்ந்து இருந்த மூளைபகுதி கனம் குறைந்ததும் மலர ஆரம்பிக்கும்.
ஒளி பிரகாசிக்க ஆரம்பிக்கும்.
1008 பகதியாக சிறுசிறு பகுதியாக மூளை இருப்பதால்தான் 1008 இதழ் தாமரை என்றனர்.
ஒளி-சுத்த ஒளி, பொன்னொளி
எழும்பி பிரகாசிப்பதால் இதை வள்ளலார் 1008 மாற்று பொற்கோவில் என்றார்.

No comments:

Post a Comment