Thursday, August 25, 2016

*மருத்துவமனைகளின் மறுபக்கம் !!!


இதுதான் நடக்கிறது
மருத்துவமனைகளில்...! - இரு
மருத்துவர்களின் ஒப்புதல்
ஆம். *மருத்துவத் துறையில் நடக்கும்
தில்லுமுல்லுகள்* பற்றி
அங்கொன்றும்,
இங்கொன்றுமாக
விவாதிக்கப்பட்ட விஷயங்கள்
இப்போது
பொதுவெளிக்கு
வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு
மருத்துவர்கள்_ மூலம். மருத்துவர்கள்
அருண் காத்ரே மற்றும் *அபய்
சுக்லே*, “ Dissenting Diagonisis"
என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி
இருக்கிறார்கள். _மருத்துவத்துறை
யின் இருட்டுப்பக்கங்களை
வெளிச்சத்திற்கு
கொண்டு வந்திருக்கிறார்
கள்_.
*நோயாளிகளின் நலன் அல்ல,
பங்குதாரர்களின் நலனே
முக்கியம்*:
' *மருத்துவச் சுற்றுலாவில்
இந்தியா, _குறிப்பாக
சென்னை கோலாச்சுகிறது_'
என்று இங்குள்ள கார்ப்பரேட்
மருத்துவமனைகள் பிதற்றிக்
கொள்ளும் இந்த
தருணத்தில்*, இந்த புத்தகத்தின்
உள்ளடக்கம் முக்கியத்துவம்
பெறுகிறது.
இந்த புத்தகத்தின்
ஆசிரியர்களான மருத்துவர்கள்
அருண் காத்ரே மற்றும் *அபய்
சுக்லே* முன் வைக்கும் முக்கிய
குற்றச்சாட்டு, “ _*இங்குள்ள
பெரிய மருத்துவமனைகள்
நோயாளிகளின் நலன்காக
இயங்குவதை விட, அதன்
பங்குதாரர்களின்
நலனுக்காகதான்
இயங்குகின்றன*_” என்பதுதான்.
இவர்கள் எந்த குற்றச்சாட்டையும்
மேம்போக்காக கூறவில்லை.
_பாதிக்கப்பட்ட நோயாளிகள்,
நேர்மையான மருத்துவர்களின்
வாக்குமூலங்களை
கொண்டே பதிவு
செய்திருக்கிறார்கள்_.
நம் அனைவருக்கும் ஒரு அனுபவம்
நிச்சயம் இருக்கும். அதாவது
*_தேவையற்ற பரிசோதனைகளை
மருத்துவர்கள் எடுக்க
சொல்கிறார்கள் என்று_*.
இது குறித்து இந்த மருத்துவர்கள், “
*பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை
மட்டும் பதம் பார்க்கவில்லை*.
பரிசோதனை சாலைகள்,
*நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும்
ரத்த மாதிரிகளை உண்மையாக
பரிசோதிப்பதே இல்லை*. _மருத்துவர்கள்
எது மாதிரியான அறிக்கையை
விரும்புகிறார்களோ... அதைதான்
இவர்கள் தயார் செய்து
தருகிறார்கள்_” என்கிறார்.
இப்போது உங்கள் சொந்த
அனுபவங்களை இந்த
வாக்கியத்துடன் ஒப்பிட்டுக்
கொள்ளுங்கள்.
பெரும் மருத்துவமனைகள்,
இலாப இலக்கு நிர்ணயத்துக்
கொண்டு வேலை
செய்கின்றன. *அவர்களுக்கு
எப்போதும் அப்பாவி நோயாளிகளின்
நலன் முக்கியமே இல்லை*...
லாபம்.. லாபம்...
லாபம்... மேலும் லாபம்
மட்டுமே முக்கியமாக இருந்து
வருகிறது என்கிறார்கள் இந்த
மருத்துவர்கள்.
*நியாயமான மருத்துவர்களை
உதாசீனம் செய்யும்
மருத்துவமனைகள்*:
ஒரு பிரபலமான மருத்துவமனை,
தன் மருத்துவமனையில் வேலை
பார்த்த *சிறந்த சிறுநீரக சிறப்பு
மருத்துவரை பணி நீக்கம்
செய்தது*. அதற்கான
காரணம், _*ஒரு நோயாளிக்கு
அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை
சிகிச்சையை செய்யாமல்,
சாதாரண சிகிச்சை மூலம்
குணப்படுத்தியது*_. " *இது
கார்ப்பரேட் மருத்துமனைகள்
எவ்வளவு வக்கிர மனநிலையில்
செயல்படுகிறது
என்பதற்கான சான்று*"
என்கிறார்கள் இந்த
மருத்துவர்கள்.
“லாபத்தை முதன்மையான நோக்கம்
கொண்ட மருத்துவமனைகள்
அனைத்தும் இப்படிதான்
செயல்படுகின்றன.
*அவர்களுக்கு நோயாளிகளின்
நலன் முக்கியம் அல்ல*.
லாபத்திற்காக _*தேவையற்ற
அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை
தன்னை நம்பி வரும் நோயளிக்கு
அளிக்கின்றன*_” என்று
வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.
சுக்லே, “ *எனக்கு தெரிந்த
ஒருவர், தனக்கு
சொந்தமான வீட்டை
விற்று, தன் மனைவிக்கான மருத்துவ
கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை
கட்டினார். ஆனால், உண்மையில்
அந்த சிகிச்சைக்கு அவ்வளவு
கட்டணமெல்லாம் இல்லை*...”
என்கிறார்.
இதைதாண்டி இவர்கள் வைக்கும்
இன்னொரு குற்றச்சாட்டு
பகீரென்று இருக்கிறது. _*சில
மருத்துவமனைகள் உண்மையில் அறுவை
சிகிச்சையே செய்யாமல்,
வெறும் மயக்க மருந்தை மட்டும்
கொடுத்துவிட்டு, அறுவை
சிகிச்சை செய்துவிட்டோமென
்று பணம் பறிக்கிறார்கள்*_
கொல்கத்தாவை சேர்ந்த
புண்யபிரதா கூன் என்னும்
மருத்துவர், “ *எங்கள் பகுதியில்
மருத்துவர்களுக்கு நியாயமாக
மருத்துவம் பார்த்தும் ஈட்டும்
தொகையை விட, ஆய்வு
மையங்கள் அளிக்கும் பங்கு
தொகை அதிகம். x-ray
எடுக்க பரிந்துரைத்தால் 25
சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க
பரிந்துரைத்தால் 33 சதவீதமும்
கமிஷன் தருகிறார்கள்*...” என்று
தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில்
பதிவு செய்திருக்கிறார்.
" _தன்னிடம் சிகிச்சைக்கு வரும்
நோயாளிகளை, தங்களின்
தொடர்
வாடிக்கையாளர்களாக வைத்துக்
கொள்ள தான் பல
மருத்துவமனைகள் விரும்புகின்றன_.
அதாவது *தேவையற்ற அறுவை
சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து,
நோயாளிகளை மீண்டும் மீண்டும்
திரும்ப வரவைக்க வேண்டும்*. அதை
மருத்துவர்கள் செய்ய தவறும்
போது, _*அவர்கள் பணி நீக்கம்
செய்யப்படுகிறார்கள்*_"
என்று இந்த புத்தகத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம்
சாதாரணமாக கடந்துவிட
முடியாது.
*இந்திய மருத்துவ கவுன்சில் என்ன
செய்து
கொண்டிருக்கிறது*...?
என்ற நம் கேள்விக்கு இந்த
மருத்துவர்களின் பதில், “
*பெரும் மருத்துவமனைகள்
மருத்துவதுறையை திட்டமிட்டு
கொலை செய்து
கொண்டிருக்கிறார்கள்*.
ஆனால், *_இதை
மெளனமாக இந்திய
மருத்துவக் கவுன்சில் வேடிக்கை
பார்த்து
கொண்டிருக்கிறது_*.
*உடனடியாக மருத்துவக்
கவுன்சில் தன்னை புதுப்பித்துக்
கொண்டு, இந்த
அநியாயங்களை தடுத்து நிறுத்த
வேண்டும்*” என்று வலியுறுத்துகிறா
ர்கள் இந்த இரு மருத்துவர்களும்.
இந்திய மருத்துவ துறையின் இன்றைய
வணிக மதிப்பு 100 பில்லியன்
அமெரிக்க டாலர்கள். *இது
2020 ம் ஆண்டு 280 பில்லியன்
அமெரிக்க டாலர்களாக
இருக்கப்போகிறது* என்கிற
விபரங்களே, _இதில் உள்ள
அரசியலையும், அக்கிரமங்களையும்
நமக்கு உணர்த்துகிறது_.
*இவர்களின் குற்றச்சாட்டுகளின்
மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்போகிறது இந்திய
சுகாதாரத் துறை*...?
நன்றி :- Dissenting Diagnosis.

No comments:

Post a Comment