Tuesday, June 11, 2013

ஒரு பெண் எப்போது அழகாகிறாள்..?

 ஒரு பெண் எப்போது அழகாகிறாள்..?
********************************

• மேல் சட்டை கூட்டுக்கு யசைதுவிட்டு தாவணிப் பந்தலுக்குள் தஞ்சம் புகுவாளே, அப்போதா?

• தெரு மணலில் நீள கோடுகள் இழுத்து பாவாடை சொருகி பாண்டியாடுவாளே , அப்போதா?

• தாய் தலையில் விழுந்து சிக்கவிழ்க்கையில் சிரச்சேதம் செய்வதாக அழுது மடிவாளே, அப்போதா?

• சூடான குழம்பை ருசி பார்க்க முனைந்து உதடு சுட்டு – நாவை ‘உஷ்ஷ்’ என்றிழுப்பாளே, அப்போதா?

• சூரியனுக்கு முன் விழித்து ஈரமாய் தலை குளித்து கூந்தலில் துண்டு சுற்றி குளுகுளுவென சிரிப்பாளே, அப்போதா?

• கரு உண்டான தகவலை முதலில் மணந்தவனுக்கு சொல்வதா? மாமியாருக்கு சொல்வதா? – என சிக்கிச் சிரிப்பாளே, அப்போதா?

• வேலைக்கு போகும் வேகாத அவசரத்திலும் – ஓர் ஒற்றை ரோஜாவைப் பறித்துச் சூடி பளிச்சென்று நடப்பாளே, அப்போதா?

• சமையல் அறையினூடே கடுகு பொறியும் புகையில் மேக மண்டல நிலவாய் மெச்சப் பணி செய்வாளே, அப்போதா?

• இடுப்பு பெருத்து இளங் காது பெருத்து வயிற்றை தள்ளிக்கொண்டு வீடெங்கும் திரிவாளே அப்போதா?

• பாசத்தின் அழுகையோ பாசாங்கு அழுகையோ குழாய் திறந்தது மாதிரி பொலபொலவென குளிர்விழிகள் நனைப்பாளே, அப்போதா?

• முன்னழகு திருத்தி இடுப்பில் ஒரு சின்ன இடக்கரம் ஊன்றி கண்களில் திமிர் தொனிக்க கண் முறைப்பு முறைப்பாளே, அப்போதா?

• உடம்பெல்லாம் விறைக்க உயிர்ப்பாதை திறக்க வெளியேறும் உதிரம் படிந்த சிசு பார்த்து ஒரு மூச்சு விடுவாளே, அப்போதா?

• இன்னும் எத்தனையோ தருணங்களில் – பெண் அழகாய் மிளிர்ந்தாலும் என்னை ஈர்த்தது இரண்டு தருணம்தான்!

• ஊண் உயிர் தரித்து குழவியாய் கிடக்கையில்.. கூன்மயிர் விழுந்து கிழவியாய் சிரிக்கையில்.. பேரழகாகிறாள் பெண்!!!

#அப்ப நான் பேரழகி ஆக இன்னும் 80 வருஷங்கள் ஆகுமா?..ப்ச்!#

- பா.விஜய்.



ஒரு பெண் எப்போது அழகாகிறாள்..?
********************************
• மேல் சட்டை கூட்டுக்கு யசைதுவிட்டு தாவணிப் பந்தலுக்குள் தஞ்சம் புகுவாளே, அப்போதா?
• தெரு மணலில் நீள கோடுகள் இழுத்து பாவாடை சொருகி பாண்டியாடுவாளே , அப்போதா?
• தாய் தலையில் விழுந்து சிக்கவிழ்க்கையில் சிரச்சேதம் செய்வதாக அழுது மடிவாளே, அப்போதா?
• சூடான குழம்பை ருசி பார்க்க முனைந்து உதடு சுட்டு – நாவை ‘உஷ்ஷ்’ என்றிழுப்பாளே, அப்போதா?
• சூரியனுக்கு முன் விழித்து ஈரமாய் தலை குளித்து கூந்தலில் துண்டு சுற்றி குளுகுளுவென சிரிப்பாளே, அப்போதா?
• கரு உண்டான தகவலை முதலில் மணந்தவனுக்கு சொல்வதா? மாமியாருக்கு சொல்வதா? – என சிக்கிச் சிரிப்பாளே, அப்போதா?
• வேலைக்கு போகும் வேகாத அவசரத்திலும் – ஓர் ஒற்றை ரோஜாவைப் பறித்துச் சூடி பளிச்சென்று நடப்பாளே, அப்போதா?
• சமையல் அறையினூடே கடுகு பொறியும் புகையில் மேக மண்டல நிலவாய் மெச்சப் பணி செய்வாளே, அப்போதா?
• இடுப்பு பெருத்து இளங் காது பெருத்து வயிற்றை தள்ளிக்கொண்டு வீடெங்கும் திரிவாளே அப்போதா?
• பாசத்தின் அழுகையோ பாசாங்கு அழுகையோ குழாய் திறந்தது மாதிரி பொலபொலவென குளிர்விழிகள் நனைப்பாளே, அப்போதா?
• முன்னழகு திருத்தி இடுப்பில் ஒரு சின்ன இடக்கரம் ஊன்றி கண்களில் திமிர் தொனிக்க கண் முறைப்பு முறைப்பாளே, அப்போதா?
• உடம்பெல்லாம் விறைக்க உயிர்ப்பாதை திறக்க வெளியேறும் உதிரம் படிந்த சிசு பார்த்து ஒரு மூச்சு விடுவாளே, அப்போதா?
• இன்னும் எத்தனையோ தருணங்களில் – பெண் அழகாய் மிளிர்ந்தாலும் என்னை ஈர்த்தது இரண்டு தருணம்தான்!
• ஊண் உயிர் தரித்து குழவியாய் கிடக்கையில்.. கூன்மயிர் விழுந்து கிழவியாய் சிரிக்கையில்.. பேரழகாகிறாள் பெண்!!!

No comments:

Post a Comment