Sunday, June 9, 2013

( பெர்மாகல்சர் முறை )



வானகத்தில் புதிய ஆராய்ச்சி :
நிரந்தர வேளாண்மை ( பெர்மாகல்சர் முறை )
-----------------------------------------------

கால் ஏக்கர் நிலத்தில் ஒரு குடும்பம் வாழத் தேவையான அனைத்துப் பொருள்களும் சுற்றுபுற சூழலை மாசுபடுத்தாமல் உற்பத்தி செய்ய முடியும் என்பதை நிருபிக்கும் ஆராய்ச்சி தொடங்கப் பட்டுவிட்டது.

இந்த ஆராய்ச்சியின் மூலம் செலவில்லாமல், மிக எளிய முறையில், யாரையும் நாடாமல் நமது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு, குறைந்த உழைப்பின் மூலம் நிரந்தரமாக இயற்கை முறையில் நஞ்சில்லா அரிசி, தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மீன்கள், மரங்கள், மின்சாரம், குடிக்க சுத்தமான நீர், உடுத்த துணி, படுக்க பாய் மற்றும் மனிதன் கடைசியாக இறந்தால் தூக்கி செல்ல மூங்கில் உட்பட அனைத்தையும் வெறும் கால் ஏக்கரில் உற்பத்தி செய்ய முடியும்.

இதுவே “ சுய சார்பு வாழ்வியல் முறை “ ஆகும்.
இதன் மூலம் இன்று நாம் சந்தித்துள்ள காய்கறி விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையை சரி செய்து ஆரோக்கியமான வாழ்க்கையை நமது குழந்தைகளுக்கு உருவாக்க முடியும்.

மேலும் இதில் மிகவும் குறைந்த அளவுள்ள சிமெண்ட் மற்றும் செங்கல் இல்லாமல் கட்டப்படும் ” வானகத்தின் நூலகமும் “ அடங்கும். இந்த கட்டுமானத்தில் வெறும் கோணிப் ( சாக்கு ) பையை பயன்படுத்தி அதில் கடுக்காய், சுண்ணாம்பு, மணல், 5% ... போன்றவைகளால் கட்டப் படுகிறது.

உங்கள் வாழ்க்கையை பயன்னுள்ளதாக மாற்றிட ...
வருக.. வருக......

----------------------------------------------------------------------------------------------
*தன்னார்வர்கள் கலந்து கொள்ள :
---------------------------------------------------
இந்த “ சுய சார்பு வாழ்வியல் முறையை “ யார் வேண்டுமானலும் எந்த வித நிபந்தனைகள் இல்லாமல், பகுதி நேரமாகவோ ( விடுமுறை நாட்களிலோ ) அல்லது முழு நேரமாகவே கலந்து பயிற்சியுடன் தன்னார்வலர்களாகவும் ( Volunter) கலந்து கொள்ளலாம்.

*தங்குமிடம் உணவு வழங்கப் படும்.

தொடர்புக்கு : 94435 75431 , 98423 85505, 90032 32058

*( எங்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் )

உதவும் உள்ளங்களுக்கு :
---------------------------------------------
இந்த ஆராய்ச்சிப் பணியில் கலந்து கொள்ள முடியாதவர்கள் , கலந்து கொள்ளும் மற்ற தன்னார்வலர்களுக்கு ” உணவு “ அளிக்கும் பணியையும் மேற்கொள்ளலாம். அதற்கு உங்கள் நிலத்தில் விளைந்த பொருளையையோ அல்லது அதற்குத் தேவையான நிதியையோ நன்கொடையாக அளிக்கலாம்.
=========================================

நன்கொடைக்கான பொருளை அனுப்ப வேண்டிய முகவரி :

M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,
கரூர் மாவட்டம் - 621 311.
தொலைபேசி எண் : 9488055546

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் :
( Vanagam IOB Account no )
G. Nammalvar A/C no :137101000011534
Bank Name : Indian Overseas Bank , Kadavoor
IFSC Code : IOBA0001371
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Contact : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in

No comments:

Post a Comment