Wednesday, December 21, 2016

நாயன்மார்கள் தமிழில் பாடும்போது, சமஸ்கிருதத்தில் அர்ச்சனை எதற்கு?

https://www.youtube.com/watch?v=wwU_r6LVZMQ&list=TLGG9UQHpNg4W0sxMjEyMjAxNg

இந்தக் கேள்வியை திரு. தொல். திருமாவளவன் அவர்கள் யோகி, ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் கேட்ட காணொளி YouTube இணைய தள முகவரியைக் கொடுத்துள்ளோம். இந்தக் காணொளி மொத்தம் நான்கு நிமிடங்களுக்குக் குறைவாகவே உள்ளது. அதில் யோகி. ஜக்கி வாசுதேவ் ஐயா அளித்த பதிலும் முதல் பாதியில் சரியே. ஆனாலும், கேட்ட கேள்விக்கு முழுமையான பதில் இந்தக் காணொளியில் இல்லை என்பது எமது கருத்து. ஒருவேளை இந்தப் பதில் நீண்டு இருக்கலாம் அல்லது திரு. திருமா அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கூறியிருக்கலாம். இருப்பினும், இந்தக் காணொளி மூலம் எமக்குத் தெரிந்து, பொதுமக்கள் புரிந்து கொள்வது நாயன்மார்கள் தமிழில் பாடியது அறிவியல் சார்ந்தது அல்ல என்பது போன்ற ஒரு மாயத்தோற்றம். உண்மையில் அப்படி அல்ல. நாயன்மார்களும் , ஆழ்வார்களும் சித்தர்களே. அவர்களின் எழுத்துக்கள் அத்தனையுமே அறிவியல் சார்ந்தவைகள்தாம். எப்படி, சில சித்தர்களின் பெயரால் பின்னால் வந்தவர்கள் மதங்களை உருவாக்கினார்களோ, அதுபோலவே, சித்தர்களின் பாடல்களை சில குருமார்கள் தங்களின் சுய நலத்திற்குப் பயன்படுத்தி பிரித்து வைத்து மதத்தின் சாயலை உருவாக்கி விட்டார்கள். மேலும், தமிழ் என்றால் அறிவியல் சார்ந்தது இல்லை என்பதை இதுபோன்ற தவறான பிரசங்கங்கள் மூலம் உருவாக்கி விட்டார்கள். அதையே இப்பொழுதும் இந்தக் காணொளி மூலம் மேலும் வலுவடைய வலுவடையவே செய்யும் , அதற்காகவே இந்த பதிவு.. 
உண்மையில் தமிழ் ஒரு உயர்ந்த மொழி . நாமெல்லாம் கற்பனை செய்யமுடியாத ஞான மொழி. அப்படிப்பட்ட மொழியை எல்லோராலும் பின்பற்ற முடியாததால்தான் சமஸ்க்ருதம் ( சமஸ் என்றால் சமமான என்று அர்த்தம், க்ருதம் என்றால் மொழி) அதாவது சமஸ்க்ருதத்தை தமிழுக்கு ஒப்பாக நமது சித்தர்கள் உருவாக்கினார்கள். அதன் ஒலி அலைகள் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவு மட்டுமே செல்ல முடியும் ஏனெனில் சமஸ்க்ருதம் ஒரு வட(ம்) மொழி. இன்று பெரும்பான்மையானவர்கள் கூறுவது போல் அது வடமொழி அல்ல (வடக்கில் இருந்து வந்த மொழி அல்ல ) , வடமொழி (அதாவது வடம் - கயிறு திரிவதுபோல் பிண்ணி பிணைந்திருக்கும் வடம் மொழி). சமஸ்க்ருதத்தில் எமக்குத் தெரிந்தவரை வார்த்தைகளில் பொருள் வரக் குறைந்தது இரண்டு  எழுத்துக்களாவது வேண்டும், ஆனால், தமிழில் ஓரெழுத்தும் பொருள் தரும், உதாரணம் அ, ஆ, மா, கோ போன்றவை  பல நேரங்களில்  ஓரெழுத்தையும் பிரித்தாலும் பொருள் தரும் உதாரணம், ம் என்ற எழுத்தைப் பிரிக்க ம மற்றும் (.) புள்ளி என்ற எழுத்துக்கள் வரும்., அதேபோல் ஒள இதனைப் பிரிக்க ஓ மற்றும் ள வரும். இவற்றையும் மேலும் பிரிக்கலாம் அப்பொழுதும் பொருள் தரும். ஆகவே தமிழில் பாடினாலும் பூசை செய்தாலும் பலன் அதிகம். 

தமிழில் இவற்றையெல்லாம் செய்யும்போது இவ்வுலகிற்குத் தேவையான பொருள் அனைத்தும் கிடைக்கும் மேலும் அது பொருளிச்சை கடந்து ஞான நிலைக்கு விரைவாகச் செல்லும். பொருளிச்சை இல்லாமல் போகும் என்ற காரணத்தினாலேயே பெரும்பாலானவர்கள் தமிழை ஒதுக்கினார்கள். முக்கியமாக ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை இது நடந்திருப்பதாக தெரிகின்றது. இந்த ரகசியத்தைத் தமிழ் மற்றும் சமஸ்க்ருதம் தெரிந்த ஓதுவார்கள் அறிந்து கொண்டதால்தான் மன்னர்களிடம் சேவகம் செய்யும்போது  மன்னர்களுக்கு சமஸ்க்ருதத்தை மட்டும் உயர்ந்ததாகக் காண்பித்தார்கள். ஏனெனில், சமஸ்க்ருதத்தில் வரும் ஒலி அலைகளானது விரைவாக பொருள் சேர்க்க உதவும். ஒரு நாட்டின் மன்னனுக்கு நாட்டை வழிநடத்தி செல்ல, பொருள் என்பது மிக முக்கியம், அதன் பின்பே ஞானம் எல்லாம். அதுமட்டுமல்லாது, ஞானத்தை யோகிகளும் , புலவர்களும் பார்த்துக்கொண்டார்கள். அதனால் கோவில்களில் மன்னர்கள் சமஸ்க்ருதத்தை ஊக்குவித்தார்கள். அப்போதுதான், பொதுமக்களை அவர்களின் அன்றாட தேவைகளுக்கு சிரமம் இல்லாமல் வாழவைக்க முடியும் என்பதால்.


ஆ) இதேபோல், மேலும் எனது நண்பர் ஒருவர் தமிழ் பற்றிய ஆராய்ச்சியில் பல ரகசியங்களைக் கண்டுணர்ந்து உள்ளார். அதன் தொகுப்பில் இருந்து தங்களுக்கு அறிமுக தகவல்களை இங்கு கொடுத்துள்ளேன். 
*தமிழ் மொழி ஒரு தந்திர மொழி*

தமிழ் மொழி ஆய்வில் பல அறிய விடயங்கள் கிடைத்தன.
தமிழ் மொழி மூன்று வகையாக உள்ளது
அவை முறையே
🌲இயல் தமிழ்
🌲இசை தமிழ்
🌲கூத்து தமிழ்(நாடக தமிழ்)
இந்த மூன்று தமிழ் அறியாமல் படிக்காமல் யாரும் சித்தராக முடியாது
இந்த மூன்று தமிழை கற்றால் மனிதனை பற்றியும் இறைவனை பற்றியும் எளிதாக அறியமுடியும்.
எல்லா சித்தர்களும் ஏன் தென்னாட்டுக்கு வந்து தமிழ் கற்றனர் என ஆராய்க
தமிழ் மொழி உயிர்மொழி அந்த உயிரை வளர்க்க தமிழ் மிகவும் பயன்பட்டது அதாவது அறிவு நிலையாக இயல் தமிழ் அமைந்துள்ளது,உணர்ச்சி நிலையே இசை தமிழாக உள்ளது,இவ்விரு நிலையில் இருந்து இயக்க நிலையாக கூத்து(நாடக) தமிழ் உள்ளது.
அதாவது
🌲ஞான சக்தி
🌲இச்சா சக்தி
🌲கிரியா சக்தி
இந்த மூன்று சக்திகளையே வாலை, அன்னையாக இருந்து நம்மை செயல்பட தூண்டுகிறாள். நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ஞான பெறவேண்டுமானால் தமிழ் மொழி அறிந்திருக்கவேண்டும்.
அதாவது மூன்று தமிழையும் நீங்கள் கற்றிருந்தால் உங்களால் பஞ்சபூதத்தை ஆளமுடியும். பிற உயிரை அழிக்கவோ ஆக்கவோ முடியும். உங்கள் உயிரை இறக்காமல் முக்தி பேறு செல்லமுடியும். இவை எல்லமே தமிழ் மொழியில் மறைப்பாக மிகவும் கவனமாக சொல்லப்பட்டுள்ளது.

தமிழ் மொழி அறிந்தால் நீங்கள் சாபம் கொடுத்தால் உடனே அது பலிக்கும். 
பச்சை மரத்தை எறியவைக்க முடியும்
சூரியனை தடுத்து நிறுத்த முடியும். கிரக கதிர்வீச்சை தடை செய்ய முடியும்.
 அந்த காலத்தில் அரசர்கள் முனிவரின் சாபத்திற்க்கு மட்டும் அல்ல புலவர்களின் சாபத்திற்க்கும் பயம் கொண்டனர். காரணம் புலவர்கள் தமிழ்மொழி நுணுக்கமாக அறிந்துள்ளதால்.
தமிழ்மொழியில் இலக்கணம், இசையில் இந்த இரண்டில் தான் மிகுந்த சூட்சமம் உள்ளது மூன்றாவதாக உள்ள கூத்து தமிழ் அழிக்கும் வேலை செய்யகூடியது அதற்கு மேற்கண்ட இரண்டும் துணை செய்கிறது.

👉_சங்கத்தமிழ் மூன்றும்..... தா
    ---------அவ்வையார்
👉_முத்தமிழ் அறிந்த முருகபெருமானே
             -------நக்கீரர்
👉_முத்தமிழே கற்று இயங்கும் மெய்ஞானிக்குச்
சத்தங்கள் எதக்கடி குதம்பாய்?
சத்தங்கள் எதுக்கடி?
      ----குதம்பை சித்தர். பா10
🌲_"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை 
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை 
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் 
அத்தகு சோதியது விரும்பாரன்றே "
           --------திருமூலர் -------திருமந்திரம். 

🌲" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் " 
        ஞானவெட்டியான் 
                 ----திருவள்ளுவர்
👉_பண்னுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "
 🌲சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல் 
    -அகஸ்தியர் ஞானம் 100 
👉_இப்படி எல்லா சித்தர்களும் தமிழ்மொழி கற்று உணர்ந்தனர்.
🌻🌻இதில் வள்ளலார் ஒரு படி மேலே சென்று
👉_தமிழ்மொழி உச்சரிப்பு சாகாகலைக்கு முக்கிய பங்காகும் என வெளிப்படையாக கூறுகிறார்.
எம்மிடத்தில் இருந்து ஒரே ஒரு வேண்டுகோள், இன்று நம்மில் பலர் இந்து மதத்திற்கும், ஆத்திகத்திற்கும், நாத்திகத்திற்கும் , சித்தர்களின் கோட்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசமும் ஒற்றுமையும் தெரியாமல், அனைத்தையும் போட்டு குழப்பிக்கொண்டுள்ளோம். சித்தர்கள் என்பவர்கள், அறிவியல் சார்ந்த ஆன்மீக வாதிகள்.  உடல் அறிவியல், மன அறிவியல், உலோக அறிவியல், வான் அறிவியல், ஆன்ம அறிவியல் போன்ற மேலான அறிவியலை இன்றைய பொருள்/கருவி அறிவியலால்  கண்டுணராத அனைத்தையும் தவத்தில் உணர்ந்து, அன்றைய காலகட்டத்தில் இருந்த வார்த்தைகளோடும் , பொருட்களோடும் இணைப்பை ஏற்படுத்தி எழுதி  வைத்தார்கள். அப்பொழுதுதான் அனைவராலும் எக்காலத்திலும் அதனைச் சுலபமாக புரிந்துகொள்ள முடியும் என்று அவர்கள் நம்பினார்கள், அதுவே உண்மையும் கூட. ஆனால், அப்படிப்பட்ட தமிழ் சித்தர் அறிவியலையும், பிற நாட்டு மதங்களைப்போல், இந்திய நாட்டிலும் சிலரால் தங்களின் சொந்த நலனுக்காகப் பல நேரங்களில் ஒரு மதத்தின் புத்தகங்களாகவே பார்க்கப்பட்டும் பாடப்பட்டும் வந்துள்ளது வருத்தமளிக்கின்றது. இதனை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் தமிழ்நாடு சிறக்கும். தமிழ், அறிவியலோடும் ஆன்மீகத்தோடும் செழிப்போடும் வளரும். வளர்ப்போம்   

யோகி ராஜாபாபு

No comments:

Post a Comment