Saturday, February 9, 2013

வயதானவர்களின் வாக்கியங்கள்!

அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1985 வரை பிறந்த

நம்மை போன்றவர்களை இந்த கால

குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன்

மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும்

கேலி செய்தாலும் நாம் மிக மிக
அதிர்ஷ்டகாரர்களே
WE ARE AWESOME !!!!
OUR LIFE IS A LIVING PROOF

· தனி படுக்கையில் அல்ல
அம்மா அப்பாக்கூட
படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
· எந்த வித உணவுப் பொருட்களும்
நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப்
லாக் போட்டு இருந்ததில்லை.
· புத்தகங்களை சுமக்கும்பொதிமா­
லைடுகளாகஇருந்ததில்.
· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட்
மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
· பள்ளியில்
இருந்து வீட்டிற்கு வந்தது முதல்
இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான்
ரூமிற்குள்
அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
· நாங்கள் விளையாடியது நிஜ
நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம்
இல்லை.
· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில்
தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில்
வாட்டர் தேடியதில்லை.
· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும்
மாறி மாறி குடித்தாலும் நோய்கள்
எங்களை வந்தடைந்ததில்லை.
· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும்
தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த
போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
· காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள்
முழுவதும் சுற்றி வந்தாலும்
காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
· சிறு விளக்கு வெளிச்சத்தில்
படித்து வந்தாலும்
கண்ணாடி அணிந்ததில்லை.
· உடல்
வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தி­
யதில்லை .மிஞ்சிய சாதத்தில்
ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல்
வலிமை பெற்றவர்கள்.
· எங்களுக்கு வேண்டிய
வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க
லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள்
பணம் பணம் என்று அதன் பின்னால்
ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும்
கொடுப்பதும்
அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
· அவர்கள் தொடர்பு கொள்ளும்
அருகாமையில்தான் நாங்கள்
இருந்து வந்தோம் அவர்கள்
எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற
ஒரு வார்த்தை போதுமானதாக
இருந்தது அதனால் தொடர்பு கொள்ள
செல்போனை தேட அவசியமில்லை.
· உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர்
வீடு தேடி வருவார்
டாக்டரை தேடி ஒடியதில்லை
.
· எங்களது உணர்வுகளை போலியான
உதட்டசைப்பினால் செல்போன் மூலம்
பறிமாறவில்லை
உள்ளத்தில் இருந்து வரும்
உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக
எழுதி தெரிவித்து வந்தோம். அதனால்
சொன்ன சொல்லில் இருந்து என்றும்
மாறியதில்லை.
· எங்களிடம் செல்போன் டிவிடி,
ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம்
பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட்
போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான
நண்பர்கள் இருந்தனர்
· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள்
வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம்.
அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில்
அனுமதி பெற தேவையில்லை.
· எங்கள் காலங்களில் திறமை மிக்க
தலைவர்கள் இருந்தனர். அவர்கள்
சமுகத்திற்காக தங்கள்
செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம்
போல சமுக
செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம்
நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க
இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
· நாங்கள் எடுத்த புகைபடங்கள்
கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில்
உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள்
இருப்பதை உணரலாம். ஆனால்
இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக
இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின்
எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக
இருந்ததில்லை.
· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த
நாங்கள் அதிர்ஷ்ட
சாலிகளா இல்லையா என்பதை இப்ப
சொல்லுங்கள்

No comments:

Post a Comment