Friday, September 12, 2014

19. அமானுஷ்ய பரிகாரங்கள் - ஐந்து முக ருத்திராட்சம் தரும் அளப்பரிய பலன்கள்


எல்லோரும் அணியக்கூடிய ஐந்து முக ருத்திராட்சம் கிரகங்களில் குருவை குறிப்பதாகும். இதை அணிவதால் குரு பகவானின் பூரண அருளை பெறலாம். மேலும் இதை தினமும் இரவில் செம்பு பாத்திரம் ஒன்றில் ஊறவைத்து அந்த நீரை காலையில் குடித்து வர பல நோய்கள் குணமாகும்.ஊற வைத்த ருத்திராட்சத்தை நன்றாக துடைத்து உலர்த்தி காய வைத்து பின்பு மீண்டும் உபயோகிக்கலாம். இது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்தவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. கல்லீரல்,வாயு,நீரிழிவு,இரத்த அழுத்தம், நெஞ்சு மற்றும் தொடை சார்ந்த நோய்கள், வீக்கம் போன்றவற்றை நீக்கும் தன்மை உடையது- ஐந்து முக ருத்திராட்சம்.
உபநிஷத்துகளில்"-யவர் மூன்று 5 முக ருத்திராட்சத்தை அணிந்து தினசரி சிவ நாமம் சொல்லி வருகிறானோ அவனுக்கு அகால மரணம் என்பது இல்லை" என கூறப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து விபத்துக்கு உள்ளாகிறவர்கள்-அகால மரண பயம் உள்ளவர்கள் 5 முக ருத்திராட்சம் மூன்று சேர்த்து அணிந்து வரலாம்.அறியாமல் செய்து வருந்தும் பல பாவங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கும் தன்மை கொண்டது இது. அனைத்து மக்களும் பயன் உர வேண்டும் என்ற நோக்கில் மிகுந்த பக்தியோடும் தொடர்ந்து அணிந்து சிவ நாமம் (ஓம் ஹ்ரீம் நமஹ்-108 முறை) கூற முடிபவர்களுக்கு இதை இன்று முதல் (ஆடி பவுர்ணமி-திருவோணம்) கட்டணமில்லாமல் வழங்க முடிவு செய்துள்ளோம்.நேரில் வந்து பெற்று கொள்ளவும்.தற்சமயம் வெளியூர் அன்பர்களுக்கு தபாலில் அனுப்ப கூடிய வசதி இல்லை. பலர் தபால் செலவு கொடுத்து விடுவதாக கூறினாலும் நமக்கு அதை பெற்று கொள்ளும் மனம் இல்லை. எனினும் கூடிய விரைவில் வீபீபீ யில் அனுப்ப முடியுமா என விசாரித்து தெரிவிக்கிறோம். முடிந்தவர்கள் நேரில் வந்து பெற்று கொள்ளலாம்-ஒரே கட்டாயம் என்னவெனில் கண்டிப்பாக இதை அணிபவர் அனைவரும் சிவ நாமம் தினசரி ஜெபித்து வர வேண்டும் என்பதே. செய்யக்கூடிய மனம்-மற்றும் உறுதி உள்ளவர்கள் மட்டும் வாங்கி செல்லவும்.அணிய முடியாதவர்கள் வாங்கி வீணாக்கி விட வேண்டாம்.ஒரு குடும்பத்திற்க்கு மூன்று வரை வழங்கப்படும். ஓம் நமசிவாய !! ஓம் சாய்ராம் !! அணுக வேண்டிய முகவரி : ருத்ர பரிஹார் ரக்‌ஷா ஸென்டர், 69, AF ப்ளாசா,முதல் மாடி,ஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிரிஷ்ணா ஸ்வீட்ஸ் எதிர்புறம்,சென்னை. தொலைபேசி : +91984013015

No comments:

Post a Comment