Saturday, July 11, 2015

கவிதை

 

உலகத்து அழகையெல்லாம் -அன்பே
உனக்குமட்டும் கொடுத்துவிட்டான் - உன்
ஓரவிழிப் பார்வையாலே - என்
உணர்ச்சிகளைக் கெடுத்துவிட்டான் ...


பார்வையிலே என்னைநீ - நித்தம்
பந்தாடியது போதும்போதும் - கொஞ்சம்
பக்கம்வந்து வெட்கம்தா- என்
துக்கமெல்லாம் தூக்கிலேறும்

என்றும் எழுத்தாணி முனையில் ...

-கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

No comments:

Post a Comment