Saturday, January 26, 2013

கண்ணீரை துடைக்க.....









அவன் கட்டிய தாலியோடு..


தூங்கும் போது
என்ன செய்வாய் என்றாய்

உன்னை நினைத்து

தலையணையை

கட்டிபிடித்து தூங்குவேன்

என்றேன்..

அந்த உரிமை

எனக்கு மட்டும்தான்

என கோபம்

கொண்டாய்.

இன்று

நீயோ வேறு ஒருவனை

கட்டிபிடித்து தூங்குகிறாய்

அவன் கட்டிய

தாலியோடு..

அன்று

நான்...

ஒதுக்கிய தலையணை

இன்று எனக்கு

துணையாக....

உன்னை நினைத்து

கட்டிபிடித்து தூங்க அல்ல.

உன்னை நினைத்து

இரவில் நான்

விடும் கண்ணீரை

துடைக்க.....

No comments:

Post a Comment