Saturday, January 26, 2013

உன் நினைவுகளால்..!






உறங்க நினைத்தும்
உறங்காத விழிகள்
சொல்ல நினைத்தும்
திறக்காத உதடுகள்
கேட்க நினைத்தும்
கேட்காத காதுகள்
மறக்க நினைத்தும்
மறக்காத இதயம் என
புலன்கள் யாவும்
போலியாய் மறுகின்றன
உன் நினைவுகளால்..!

No comments:

Post a Comment