Sunday, January 27, 2013

ஓம் சிவாய நம

THIRUVANNAMALAI






**********************
சி - சிவன்
வா - அருள்
- உயிர்
நம - மும்மலங்கள் [மாயை,ஆணவம்,கர்வம்]

ஸ்தூலபஞ்சாட்சரம்-------- நமசிவாய
சூட்சுமபஞ்சாட்சரம்---------சிவயநம
அதி சூட்சுமபஞ்சாட்சரம்--சிவய சிவ
காரண பஞ்சாட்சரம்-------- சிவ சிவ

இம்மந்திரத்தை சொல்லி இறைவனை வேண்டும்போது, கர்வம், ஆணவம் மற்றும் உலக மாயையிலிருந்து விடுபடலாம்.




சிவபெருமானுக்கு போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதமான கோலங்கள் உண்டு.

மனைவி மக்களுடன் வீடு வாசல் என்று வாழும் வாழ்க்கையே போக வாழ்க்கை. இந்த விதத்தில் இறைவனும் கல்யாண சுந்தரனாக, உமா மகேஸ்வரராக அருள் செய்கிறார்.

தீமைகளைப் போக்கும்
விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேகவடிவமும் எடுக்கிறார். கஜசம்ஹாரர், மன்மத தகன மூர்த்தி, ருத்திர மூர்த்தி என்ற வடிவங்களில் தீமைகளைப்...போக்குகிறார்.

மிக உயர்ந்த நிலை ஞானநிலை. ஞானமூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். இதுவே தென்முகக்கடவுளான தெட்சிணாமூர்த்தி ஆகும்.

இந்த மூன்று கோலங்களையும் ஒருசேர அருளுவதே நடராஜர் வடிவாகும்.

அதாவது, உல்லாசமாக தேவியுடனும், கோபத்துடன் ருத்ரமூர்த்தியாக சம்ஹார தாண்டவமும், பெருங்கூட்டத்துடன் ஹாஸ்யமாகவும் இவர் ஆடுகிறார். இவரது ஆட்டத்தில் நவரசங்களும் உண்டு.

இந்நடனத்தின் போது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (உறக்கத்தின் போது உணர்வற்று இறந்தவனைப் போல் நாம் மாறி விடுகிறோம். அந்நேரத்தில் நம் உயிரைப் பாதுகாப்பது இறைவனே. இதையே "மறைத்தல்' தொழில் என்பர்) அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்து, இந்த உலகத்தை இயக்குகிறார்.

No comments:

Post a Comment