Friday, October 4, 2013

கவிதை சாரல்கள்.

அன்பாய்
அணைக்கும் போதும்
செல்லமாய்
சீண்டும் போதும்
கோபமாய்
அலட்சியப் படுத்தும் போதும்
ஆத்திரமாய்
புறக்கணிக்கும் போதும்
தடுமாற்றமாய்
துவளும் போதும்
உன் உணர்வே
என் உணர்வென
உன் வால் பிடித்து திரியும்
பூனைக் குட்டியாய்
என் நேசங்கள் ... 
- கவிதை சாரல்கள்.


என்னோடு பேசிக்கொண்டிருக்கும்
தருணங்களில் - நீ
தேவதையாகிவிடுகிறாய்....
மனிதனாக இருக்கமுடியாமல்
தடுமாறுகிறேன் நான்....
Prakash ponnusamy

No comments:

Post a Comment