Thursday, April 2, 2015

வெக்கத்தை நீ பரிசாக தா போதும்


உன்உயரத்தில் என்கர்வம் குள்ளமானது ...
உன்நடையில் என்உள்ளம் பள்ளமானது ...
கருப்புவெள்ளை படங்கூட
கலராய்தோணுது ...
காவிஉடை அணிந்தமனம்
கம்பனானது ...
இப்படியே நீயிருந்தால்
என்னசெய்வது ...
எட்டியிருந்ததே எத்தனைநாள்
காதல்கொய்வது ...
பக்கம்வந்து தரையைநீ
பார்போதும் - உன்
பாதம்போடும் கோலமழகே
காதல்கூறும் ...
வெக்கத்தைநீ பரிசாக
தாபோதும் - என்
வேதனைகள் தெரித்தோடி
தூக்கிலேறும் ...
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )



No comments:

Post a Comment