Thursday, April 2, 2015

பெண்மை ..

================
பெண்மை ...
================
ரெண்டுஉயிரை சுமக்கின்ற
ஓரினம் பெண்மை ...
ரெண்டாங்கெட்டான் இல்லாத
பேரினம் பெண்மை ...
வாழ்க்கையென்ற வட்டத்தின்
மையப்புள்ளி தாய்மை ...
அவளின்றி தொடங்கிடுமே
இவ்வுலகில் சேய்மை ...
உயிரெழுத்தின் முதல்எழுத்தாய்
இருப்பவளும் இவள்தான்
உலகத்தின் தலைஎழுத்தை
திறப்பபவளும் இவள்தாள்
அழகென்ற சொல்லுக்கு
அகராதி இவள்தான் ...
அகராதி படித்தவனை
அடக்கும்அன்பும் இவள்தான் ...
ஆறுதலாய் பெண்ணொருத்தி
இல்லாத வாழ்க்கை
ஆயிரம்உறவு இருந்தாலும்
அகதியாக்கும் போக்கை
வீட்டைவிட்டு வெளிவந்து
விண்வெளியில் பறந்தாள்
ஆணாதிக்க சமுகத்தின்
ஆணிவேரை அரிந்தாள்
ஆணிற்கு நிகரில்லை
அன்றொருநாள் பெண்மை
அனைதிடத்தையும் அவள்பிடித்தாள் - ஆனால்
ஆண்பிடிகலியே இன்னும்தாய்மை
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )


No comments:

Post a Comment