Thursday, April 2, 2015

பார்த்துப்பார்த்து கவியெழுதி

புருவமென்னும் நங்கூரத்தால் - என்
புலனைந்தை நிறுத்தினாய்
புடம்போட்ட தங்கம்போல் - என்
பூமனதை வருத்தினாய்
சரிந்துவிழும் கார்குழலால் - என்
சகாப்தத்தைப் புறட்டினாய்
சாயம்பூசா உதட்டைக்காட்டியே - என்னுள்
சக்கரைநோயை புகுட்டினாய்
உன்னுடைய வெட்கத்தை - உன்
உடம்புமுழுவதும் தேடப்போறேன்
பத்துவிரலால் உன்னுடம்பில் - நான்
பம்பரமாய் ஆடப்போறேன்
சேர்த்துவைத்த வெக்கத்தை - அப்படியே
சேர்த்துவிடு என்னிடத்தில்
பார்த்துப்பார்த்து கவியெழுதி - அதை
படித்துக்காட்டுவேன் உன்னிடத்தில்
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

No comments:

Post a Comment