Tuesday, August 13, 2013

பெண்கள் விரும்புவது இவ்வளவுதான்!



பெண்களைப்பற்றி சரியாக புரிந்துகொள்ளாமலேயே பெரும் பாலான ஆண்கள் “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்’ என, அவர்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். ஆனால் பெண்கள் அப்ப டிப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் புறக்கணிக்கப்படுவதாலேயே வெறுப்படைகின்றனர். பெண்கள் உற்சாகமாக இருந்தா லே குடும்பம் உற்சாகமாக இருக்கும்.
.
• மனைவி என்பவள் வேலைக்காரி அல்ல, அதேபோல் சம்பாதி த்து கொடுக்கும் மிசினும் அல்ல. அவ ளும் உணர்வு பூர்வமானவள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சரிசமமாக நடத்த வேண்டும் என்பதையே ஒரு பெண் எதிர்பார்ப்பாள்.
• அம்மா போல யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனால் மனைவி யின் சமையலை ஆகா, ஓகோ என்று பாராட்டுங்கள். அவர்கள் உச்சிக்குளிர்ந்து போவார்கள்.
• விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.
• எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக்கூடாது. குழந்தைக்கு உடல்நிலை சரியி ல்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
• மனைவி உடுத்தும் உடைகளைப் பார்த்து இந்த உடை உனக்கு நன்றாகஇருக்கிறது’ என பாராட்ட வேண்டும்.
• வருமானம் முழுவதும் கணவனி டமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தினமும் ஒரு முறை யாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
• நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்லவேண்டும். குழந்தைகளை அடிமை போல்நடத்தக் கூடாது. இதில் கண வர்களின் பங்கு முக்கியம்.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவர் நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

No comments:

Post a Comment