Thursday, August 22, 2013

கண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம்!






கண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம்!

"பொன் ஆம் காண் நீ" அதாவது நம் உடலை பொன்னைப் போல ஆக்கும் தன்மையுடைய மூலிகை என்பதால் இதனை பொன்னாம்காணி என்று அழைத்தனர். காலப் போக்கில் மருவி பொன்னாங்கண்ணி ஆயிற்று. சாதாரணமாக வயல் வரப்புகளின் ஓரம், வேலிகளின் ஓரம் வளர்ந்து கிடக்கும். இது ஒரு படரும் செடியாகும். இதன் இலை, தண்டு, வேர் என எல்லா பாகங்களும் சித்த மருத்துவத்தில் அரு மருந்தாக பயன்படுகிறது.
இத்தனை சிறப்பு வாய்ந்த பொன்னாங்கண்ணி மூலிகையைக் கொண்டு தயாரிக்கப் படும் ஒரு தைலம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய "யாகோபு வைத்திய சிந்தாமணி 700" எனும் நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது. 

தோணாம லிராவணன் சிறையெடுத்த 
தோகைபொன்னாங் கன்னிதனைப் பிடுங்கிவந்து 
நாணாதே கல்லுரலி லிட்டுநைய 
நலம்பெறவே திலகமுன் னெடையும்ரெட்டி 
வாணாமல் வாங்கியடி பாணிரெட்டி 
வகையாக யெரித்துமுடா ஊற்றிக்காய்ச்சிக் 
காணாத தைலங்கள் முழுகக்கேளு 
கண்களுக்கு அருந்ததியுங் காணுந்தானே.
மயிர்களைந்து தைலமது முழுகும்போது
மறுபாசிப் பயருஞ்சீ யக்காய்சேர்த்து
ஒயிலாகத் தானரைத்து முழுகிப்பாரு
உருதிபெருஞ் சிரசினுக்குக் குளிர்ச்சியாகும்
பயிலான வெள்ளெழுத்தும் மாறிப்போகும்
தைலமிந்த விதமுழுக உலகத்தோர்க்குத்
தாட்டிகவான் யாகோபு சாற்றினாரே.

பொன்னாங்கண்ணியை கல்லுரலில் இட்டு அதன் எடைக்கு இரண்டு பங்கு எள்ளையும் சேர்த்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும். பின்னர் இதற்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து மண் பாண்டத்தில் வைத்துக் காய்ச்சி தைலம் எடுத்து சேகரித்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை தலைக்கு வைத்து குளித்து வந்தால் கண்களுக்கு ஒளி உண்டாகும் என்கிறார். இவ்வாறு தைலம் சேர்த்து குளிக்கும் பொழுது பாசிப் பயறும், சீயக்காயும் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து முழுகினால் வெள்ளெழுத்தும் மாறிப் போகும் என்கிறார் யாகோபு சித்தர்.

via தமிழ்ச் சித்தர்கள்

-----------------------------------------------------
https://www.facebook.com/Siththar.Masters

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
"பொன் ஆம் காண் நீ" அதாவது நம் உடலை பொன்னைப் போல ஆக்கும் தன்மையுடைய மூலிகை என்பதால் இதனை பொன்னாம்காணி என்று அழைத்தனர். காலப் போக்கில் மருவி பொன்னாங்கண்ணி ஆயிற்று. சாதாரணமாக வயல் வரப்புகளின் ஓரம், வேலிகளின் ஓரம் வளர்ந்து கிடக்கும். இது ஒரு படரும் செடியாகும். இதன் இலை, தண்டு, வேர் என எல்லா பாகங்களும் சித்த மருத்துவத்தில் அரு மருந்தாக பயன்படுகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த பொன்னாங்கண்ணி மூலிகையைக் கொண்டு தயாரிக்கப் படும் ஒரு தைலம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய "யாகோபு வைத்திய சிந்தாமணி 700" எனும் நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

தோணாம லிராவணன் சிறையெடுத்த

தோகைபொன்னாங் கன்னிதனைப் பிடுங்கிவந்து
நாணாதே கல்லுரலி லிட்டுநைய
நலம்பெறவே திலகமுன் னெடையும்ரெட்டி
வாணாமல் வாங்கியடி பாணிரெட்டி
வகையாக யெரித்துமுடா ஊற்றிக்காய்ச்சிக்
காணாத தைலங்கள் முழுகக்கேளு
கண்களுக்கு அருந்ததியுங் காணுந்தானே.
மயிர்களைந்து தைலமது முழுகும்போது
மறுபாசிப் பயருஞ்சீ யக்காய்சேர்த்து
ஒயிலாகத் தானரைத்து முழுகிப்பாரு
உருதிபெருஞ் சிரசினுக்குக் குளிர்ச்சியாகும்
பயிலான வெள்ளெழுத்தும் மாறிப்போகும்
தைலமிந்த விதமுழுக உலகத்தோர்க்குத்
தாட்டிகவான் யாகோபு சாற்றினாரே.

பொன்னாங்கண்ணியை கல்லுரலில் இட்டு அதன் எடைக்கு இரண்டு பங்கு எள்ளையும் சேர்த்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும். பின்னர் இதற்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து மண் பாண்டத்தில் வைத்துக் காய்ச்சி தைலம் எடுத்து சேகரித்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை தலைக்கு வைத்து குளித்து வந்தால் கண்களுக்கு ஒளி உண்டாகும் என்கிறார். இவ்வாறு தைலம் சேர்த்து குளிக்கும் பொழுது பாசிப் பயறும், சீயக்காயும் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து முழுகினால் வெள்ளெழுத்தும் மாறிப் போகும் என்கிறார் யாகோபு சித்தர்.

No comments:

Post a Comment