Tuesday, July 1, 2014

அந்தரங்கம்

முதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில 'முக்கிய ஆலோசனைகள்'...



ஆயிரம் இரவுகள் வருவதுண்டு...ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா...

முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் மண்டபத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் புதிய இடம் உங்களுக்குப் ஒருவித படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்வீர்களானால், நீங்கள் விரும்பும் இடத்தை அவர்களிடம் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன் செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தெளிவாகி கொள்ளலாம் என்பதால் இந்த ஆலோசனையை அவசியம் பின்பற்றுங்கள்.முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.நீங்களாக மருத்துவம் செய்து கொள்ளும் முடிவு இருந்தால் கைவிட்டுவிடுங்கள்.அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக வாசனையும், மசாலாக்களும் சேர்க்கப்படும் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

முதலிரவிற்கு செல்வதற்கு முன் ஒரு முறை குளித்துவிடுங்கள். அப்படி சூழ்நிலை காரணமாக குளிக்க முடியாவிட்டாலும், மாலையில் போட்ட அலங்காரங்களை அகற்றி விட்டு, மிதமான அலங்காரத்திற்கு மாறுங்கள். உடலை உறுத்தாத உடையை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளுங்கள். குறைவான நகைகளை அணிந்து கொள்ளலாம். உங்கள் துணைவரின் உணர்ச்சிக்கு உற்சாகமூட்ட காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான வாசனை திரவியங்களை அதே சமயம் நல்ல உணர்வுகளை தூண்ணடக் கூடிய திரவியங்களை தடவிக் கொள்ளுங்கள்.படுக்கை விரிப்பை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ படுக்கையில் உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

முதல் ஸ்பரிசம் என்பது நிச்சயமாக படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செயல்கள் உங்களுக்கு ஒருவித தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை தயங்காமல் அவரிடம் நாசூக்காக தெரிவியுங்கள்.முதலிரவன்றே உறவில் ஈடுபட வேண்டும் என்று அவசியம் ஏதும் இல்லை என்பதை இருவரும் உணர்ந்தாலே உங்கள் டென்ஷன் ஓடிவிடும். நீங்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச இந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்கலாம். வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.

------------------------------------------------------------------------------------------------------------

படுக்கையில் பெண்களின் எதிர்பார்ப்புகள்

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிவதில்லை. உநவின் போது மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்...

மனைவி தான் இருந்தாலும்..அனுமதி அவசியம்

தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் உறவிற்கு தயாராகும் முன் துணைவன் தங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்த மழையில் நனைக்கலாமா நீ தயாரா என்று சில கேள்விகளை கேட்டு வையுங்கள்...

படுக்கையில் மெல்லிசை

படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மெல்லிசையை கசியவிட்டால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம்.

ஓகே ஆன பின் செல்லப் பெயர்

உங்கள் பெண் துணை உறவிற்கு கிரீன் சிக்னல் காட்டிய பின் படுக்கையறையில் உடனே விளையாட்டுக்களை துவக்கி விடாதீர்கள். துணைக்கு முதலில் நல்ல கிளுகிளுப்பான செல்லப் பெயர் வைத்து கூப்பிடுங்கள். அநேக பெண்கள் ஆண்களின் இந்த செல்ல பெயரை படுக்கை அறையில் நிச்சம் எதிர்பார்க்கிறார்கள். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சி துணையின் உடல் வாகுக்கு ஏற்ப நல்ல அம்சமான செல்லப் பெயரை சூட்டுங்கள் அவருக்கு. பின்னர் அவர்களது உடலை வருடவேண்டும், கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருட வேண்டுமென்று எதிர்பார்கிறார்கள்.

இறுதியும் தொடக்கம் போல்...

முத்தம் என்பது உறவு என்னும் பூட்டை திறக்கும் சாவி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நெற்றியில் ஆரம்பிக்கும் முத்த மழையானது கண்கள், கண்ணம், முகவாய், உதடு என அனைத்து பகுதிகளையும் நனைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். துவக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பெண்களை திருப்தியடையச் செய்யுங்க

ஆண்களின் ஆசை சில நிமிட நேரங்களில் தீர்ந்துவிடும். ஆனால் பெண்களுக்கு நிச்சயம் அப்படி இல்லை. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சில நிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாகவே இருக்கும். எனவே பெண்களின் இச்சை அடங்கும் வரை  அவர்களுக்கு தேவையான காம விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடிதான் ஆக வேண்டும்.

  -------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த '3' நாட்களில் உறவு கொள்ளலாமா?

மாதவிடாய் என்பது பெண்களிலே  சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.

பெண்களுக்கு வரும் பீரியட்ஸ் சமயத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா? இது குறித்த சில தகவல்களை பார்ப்போம். பீரியட்ஸ் சமயத்தில் தங்கள் வேதனையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லையென்று எத்தனையோ பெண்கள் குமுறுவது உண்மைதான். பீரியட்ஸ் சமயத்தில் தங்களது துணை  தொந்தரவு பண்ணுவதாக சில பெண்கள் புகாராகவே கூறுமளவிற்கு இந்த விஷயம் போயுள்ளது. சில சமயங்களில் அந்த 3 நாட்களின் போது ஆண்கள் பிடிவாதத்தை காட்டி நேரடியான உறவை மேற்கொள்ளாமல், தங்களது இச்சையை தணித்து கொள்கிறார்கள்.

மாதவிடாய் நாட்களின் போது கர்ப்பபையின் உட்புற சுவர்கள் சிறிது பலவீனம£கவும், மேலும் உதிரப் போக்காகவும் இருக்கின்ற பட்சத்தில் எளிதில் தொற்று நோய்கள் தொற்றி கொள்ளும் அபாயம் இருக்கிறது. அந்த சமயத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால். அடுத்தடுத்து ஏற்படும் பீரியட்ஸ் சமயங்களில் ரத்தபோக்கு. வலி. எரிச்சல், கர்ப்பபையில் கட்டி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக மாதவிடாய் காலத்திலேயே ஒரு பெண்ணுக்கு வயிற்று சம்பந்தமான உபாதைகள் , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்சினைகள் குறைய வாய்ப்பு உள்ளது.மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்றைய நாட்களில் உறவில் ஈடுபடும் போது கிடைக்கும் திருப்தியைவிட அதிக திருப்தி ,கிடைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் மாதவிடாய் நேரத்தில் பெண்ணின் உறுப்புகள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் இன்பத்தை அதிகரிக்கின்றன.

மேலும் நம்முடைய சமூகத்தில் உள்ள பிழையான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.மேலும் மாதவிடாய் காலத்தில் உறவு வைத்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஆனாலும் மிகவும் அரிதாக  இந்தக் கருத்தரிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே குவா குவாவை  தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை உபயோகித்து கொள்ளுங்கள்...
-------------------------------------------------------------------------------------------------------------------------

உறவில் பெண்களுக்கு 'உச்சகட்டம்' ஏற்படும் பகுதிகள்...

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று புதுமொழி உருவாகியுள்ளது.

பெண்கள் உடலில் ஏற்படும் இந்த உச்சகட்ட செக்ஸ்  நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள், மருத்துவ பயன்கள் நிறைய என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமாஞ் ஆர்கஸமா னது பல வகைகளில் இருக்கிறதாம். அதாவது 11 வகையான ஆர்கஸத்தை பெண்கள் உணர்கிறார்களாம்

ஜி ஸ்பாட்

அடிக்கடி ஜி ஸ்பாட் என்று பேசுவதைழுதுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் பேரிடமிருந்து தெரியாது என்ற பதில் தான் கிடைக்கும். இந்த ஜி ஸ்பாட் என் பதை இதுவரை யாருமே கண்டுபிடித்ததுமில்லை, பார்த்ததுமில்லை . இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இப்படி ஒன்றே இல்லை என்பதும் நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் ஜி ஸ் பாட் என்பது ஒரு உணர்வுதான். அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது என்பது நிபுணர்களின் கருத்தாகும்.

செக்ஸ் உணர்ச்சி பொங்கி பெருகும் போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்று உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அவ்விடத்தில் புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன. இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும்.

கிளிட்டோரிஸிலும் ஆர்கஸம் வரும்

அதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியில் கூட ஆர்கஸம் வரும். கிளிட்டோரிஸ் தூண்ட ப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படுகிறது. பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுவதால் இவை எளிதில் தூண்டப்படு கின்றன.செக்ஸ் உணர்ச்சிகள் பெருகும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், சிலர் நாவாலும் தூண்டும் போதும் உண ர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா தான்.

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்

சிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும். ஏகப்பட்ட காம விளையாட்டுகள் -ஆடிய பிறகுதான் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமேக்ஸை உணர்வார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும்கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத்தி்ல இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.

மார்புகளில் ஆர்கஸம்

மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலம், முத்தமிடுவதன் மூலம், சுவைப்பதன் மூலம் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.

வாய்வழி கிளைமேக்ஸ்

வாய் வழியாகவும்கூட உச்சகட்டத்தை அடைய முடியும். முத்தமிடுதல், நாவின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்டவற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.
------------------------------------------------------------------------------------------------------------------------------

பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்...

ஆர்கஸம். இது செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் உள்ளது. பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.

ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், உறவின்போது இன்பம் அனுபவிப்பது அதிகரிப்பதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இடுப்பு தொடர்பான உடறபயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பான சர்வே ஒன்றில் கலந்து கொண்ட பெண்களில், 82 சதவீதம் பேர் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல அதிசயிக்கதக்க மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர்.92 சதவீதம் பேருக்கு முன்பை விட அதிக அளவிலான இன்பம் செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.


தாம்பத்ய உறவின்போது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து துணைவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் திருப்தி இல்லாத பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.

ஆர்கஸம் வருவதில் சிரமம் உள்ளவர்கள் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. இது இன்பத்தைத் தூண்ட பயன்படும். இயல்பான உறவின் மூலம் முழுமையான இன்பத்தை, ஆர்கஸத்தை அனுபவிக்க முடியாத நிலை வரும்போது ஆர்கஸத்தை ஏற்படுத்துவதற்காக வைப்ரேட்டரை பயன்படுத்தலாம். இருப்பினும் இது உங்களது கணவரின் மனதைப் பாதிக்காத வகையில் இருப்பது அவசியம்.

உறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு பேருதவி செய்யும். கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.உணர்வுகளைத் தூண்டவும், தாம்பத்ய ரீதியான உணர்வு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பதுபோன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், உங்களது உணர்வை தயார் செய்ய ஒரு கருவிதான் இவைகள்.அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்க கூடாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.



உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருப்பது அவசியம். உங்களது பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இருவரும் மனரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படுமாறு உங்களது பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் உங்களுக்கு சந்தேகமா என்ன...?

-----------------------------------------------------------------------------------------------------------------------

செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் 'ஃப்ரியா இருங்க'...

இப்பலாம் முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம். இறுக்கமான உள்ளாடைகள், டைட்டான ஜீன்ஸ் போன்றவைகளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் பாலியல் நிபுணர்கள். கவலை வேண்டாம் இது தீர்க்கக் கூடிய பிரச்சனைதான் ..

தாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான். சமீப காலமா மூடு சரியா இல்லைன்னு உங்களவர் சொல்கிறார் என்றால் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.

தம், தண்ணிக்கு நோ

புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் தாம்பத்யத்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இருந்தால் உறவின் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.

சுய இன்பம் வேண்டாம்

திருமணத்திற்குப் பின்னரும் சில ஆண்கள் சுய இன்பப்பழக்கத்தில் ஈடுபடுவார்கள். இதனால் இயற்கையான தாம்பத்ய உறவில் சிக்கல் ஏற்படும். அடிக்கடி சுய இன்பம் அனுபவிப்பதால் ஆண்குறியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதன் நீச்சித்தன்மை குறைந்து உங்கள் துணையின் ஆசையை சரியான அளவிற்கு நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

எளிதான பொசிஷனையே தொடருங்க

நமக்கு எது வருமோ அதனை நன்கு கையாளுவது நல்லது. கடினமான பொசிஷனை முயற்சித்து பாதியிலேயே நிறுத்திவிடுவதை விட எளிதான, அதிகம் சுகம் கிடைக்கும் பொசிஷனை கண்டறிந்து அதனை பின்பற்றுங்கள். நீண்ட நேர உறவுக்கு இதுவும் ஒரு வழி.

இறுக்கமான உள்ளாடை நோ

ஆணோ, பெண்ணோ இருக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்கள். அடிக்கடி டைட்டான ஜீன்ஸ், டைட்டான உள்ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எதிர்பாலினரை கவரவேண்டும் என்று நினைத்து அணியும் ஆடையே அவர்களின் பாலியல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தரங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் இரவில் கூடுமானவரை உள்ளாடைகளை அணிவதை தவிர்த்துவிடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

சத்தான உணவே உற்சாக உறவு

நாம் உண்ணும் சத்தான உணவே உற்சாக உறவை நிர்ணயிக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம். அதனால்தான் முன்னோர்கள் தாம்பத்ய வாழ்க்கைக்கு ஏற்ற உணவுகளை சரியாக கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றை சாப்பிட்டு வந்துள்ளனர். பாதாம், பிஸ்தா, பூண்டு, முருங்கை, சின்ன வெங்காயம், நிலக்கடலை உள்ளிட்ட கிளார்ச்சியைத் தூண்டும் உணவுகளை சாப்பிடுங்கள். அப்புறம் என்ன நீங்கள் உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை உற்சாகமாக அனுபவிக்கலாம்.,

---------------------------------------------------------------------------------------------------------------------

தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்

உறவில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்யாமல், இன்பத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித்தும் யோசிக்க வேண்டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்தவரை சீக்கிரமே கிளைமேக்ஸுக்கு வந்து விடுவார்கள். ஆனால் பெண்கள் நிச்சயம் அப்படி இல்லை, அவர்கள் உறவின் உச்சநிலையை அடைய சிறிது நேரம் ஆகும். அவர்கள் உச்சத்தை ஆண்கள் தாக்குப் பிடிக்க வேண்டுமல்லவா எனவே நீடித்த இன்பத்திற்கான வழிகளை யோசித்துப் பார்த்து அதைக் கடைப்பிடித்தால் நல்லது..
அதுகுறித்த சில யோசனைகள்ஞ்



கண்ட்ரோல் யுவர்செல்ஃப்

உறவின் போது சீக்கிரமே உயிரணுவை வெளியேற்றுவதைத் நிச்சயமாக தவிர்க்க வேண்டும். இதற்கு சில பயிற்சிகள் உள்ளன. சிலருக்கு உறுப்புகள் சந்தித்தவுடனேயே விந்தணு முந்திக் கொண்டு வந்து விடும். இதைத் தடுக்க வேண்டியது மிக முக்கியம். உறவில் ஈடுபடும்போதும் சரி அல்லது சுய இன்பம் அனுபவிக்கும்போதும் சரி, வி்ந்தணுவை வெளியேற்றுவதை கட்டுப்படுத்தி தாமதப்படுத்துங்கள். இவ்வாறு செய்து வந்தாலே உங்கள் உறுப்பு உங்கள் கட்டுபாட்டில் வந்துவிடும்.


நீடித்த முன்விளையாட்டில் ஈடுபடுங்கள்

தம்பதியர் முன்விளையாட்டில் ஈடுபடும்போது அதை நீண்ட நேரமாக நீட்டியுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளையாடுங்கள். உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் வரை விளையாடுங்கள். குறிப்பாக பெண்கள் உணர்ச்சியில் கொந்தளித்துக் கொதிக்கும் வரை விளையாடுங்கள். இங்கு பெண்களின் உணர்ச்சிகளுக்குத்தான் ஆண்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இதுக்கு மேல தாங்காதுடா சாமி என்று பெண்கள் உங்களிடம் குமுறும் வரை விளையாடுங்கள். அதற்குப் பிறகு உள்ளே போங்க.



மெதுவாக ஆரம்பித்து வேகத்தை அதிகரியுங்கள்

உறவில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் முதலில் வேகத்தை கட்டுப்படுத்துங்கள். தாம்பத்யத்தில் மேலே இருந்து உறவில் ஈடுபடும் நபர்தான் டிரைவர் போல. எனவே அவர்தான் பார்த்துப் பதமாக, கவனமாக இயங்க வேண்டும். எப்போது வேகமாக போக வேண்டும், எங்கு ஸ்லோவாக வேண்டும் என்பதைஅவர்தான் முடிவு செய்து இயங்க வேண்டும். நிதானமாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக வேகமாக இயங்குங்கள். வேகம் அதிகமாவது போல தோன்றினால் உறுப்பை வெளியே எடுத்து விட்டு சில விநாடி தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் இயங்கலாம். இது உறவை நீட்டிக்க உதவும்.



துணையின் மூடுக்கு ஏற்ப முன்னேறுங்கள்

எப்போது உறவில் ஈடுபட்டாலும், துணையின் மூடையும் அறிந்து செயல்படுவது நல்லது. பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் முதலில் கிளைமேக்ஸ் வரும், பெண்களுக்குப் பின்னால்தான் வரும். சில சமயங்களில் பெண்கள் முந்திக் கொள்வார்கள், ஆண்கள் ஸ்லோவாக இருப்பார்கள். எனவே இருவரும் அவரவர் மூடை அறிந்து அதற்கேற்ப உறவில் ஈடுபடுவது நல்லது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

உறவிற்குப் பின் தவிர்க்க வேண்டியவை...

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்று சொன்னாலும், படுக்கையில் தெரிந்து கொள்வதற்கு சில விஷயங்கள் இருக்கின்றன. அந்த வகையில், தாம்பத்திய உறவுக்கு பின் தவிர்க்க சில செயல்களை பார்ப்போமா..

உடனே தூங்காதீர்

செக்ஸ் உறவு முடிந்தத உடனேயே தம்பதியர் இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ உடனே தூங்கிவிடாதீர்கள். இது தவறறான அணுகுமுறையாகும். ஏனெனில் உங்களுக்கிடையேயான தாம்பத்யம் எவ்வாறு இருந்தது என்பதை சிந்திக்க முடியாமல் போய்விடும். இது தாம்பத்திய உறவின் வசீகரத்தை கொன்றுவிடும் என்பதை முதலில் உணருங்கள்

வேலை அல்லது படிப்பில் ஆழ்வது கூடாது

பல தம்பதிகள் உறவு முடிந்தப் பின் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போய்விடுவார்கள். காரணம் தாம்பத்திய உறவின் போதும் அவர்களின் மனதை வேலை அல்லது படிப்பு தான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி வேலையின் போது செக்ஸ் எண்ணங்கள் மனதில் அலைபாய்வது தவறோ, அதே போல தான் உறவின் போது படிப்போ, வேலையோ இடையே வருவதை தவிர்க்க வேண்டும்.

தனித்தனியே எதற்கு தூக்கம் ?


தம்பதியரிடையே தனித்தனியாக படுக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் அநது 'அன்றைய' நாளிலும் இருக்க வேண்டுமா என்ன? காம வித்தை புரிந்த அந்த இரவிலும் உடனே தனியாக தூங்கச் செல்வது நல்ல முறையல்ல. அன்றைய இரவின் அழகான சூழ்நிலையைக் கெடுப்பது மட்டுமல்லாது. தொடர்ந்து வரும் இரவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உறவில் சாப்பிட்டது போதும்

உறவிற்கு பின் சாப்பிடுவது மிகவும் மோசமான விஷயமாகும். உங்களுக்கு உடல் பசியை விட குடல் பசி தான் பெரியது என்றும் உறவின் போது நிச்சயமாக நீங்கள் உங்கள் வயிற்றை
பற்றிதான் சிந்தித்து இருப்பீர்கள் என்று உங்கள் துணையை தவறாக நினைக்க வைத்து விடும்.

உடனடி குளியல் வேண்டாம்

உறவிற்குப் பின் குளித்து உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அதுவும் இருவரும் ஒன்றாக எனில் கூடுதல் சுகம். ஆனால் உடனே குளியலறை நோக்கி ஓட தேவையில்லை .வேலை முடிந்து விட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் துணை இன்னும் அந்த மன நிலையில் இருக்கலாம், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று எதிர்பார்க்கலாம். உடனே குளியலறை நோக்கி ஓடினால், ஏதோ தவறு போல என்றும் துணையை எண்ண வைக்கக்கூடும்.

குழந்தைகளை அழைத்துக் கொள்வது

அந்தரங்கச் சூழலில்அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோசத்தின் முழுமையைச் சிதைத்து விடும். அதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. உறவு நேரத்திற்குப் பின் குழந்தைகளை அழைத்து உடன் படுக்க வைத்துக்கொள்ளுவது துடிப்பு, இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் “ரொமாண்டிக் மூடில்”இருந்து மாறாத கணவனுக்கு அது ஏமாற்றத்தைத் தரும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment