Tuesday, July 1, 2014

அந்தரங்கம்

மலட்டுத் தன்மையை குணமாக்க.. ஆண்மையை அதிகரிக்க




இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.

ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

* காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

* பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

* சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும்.

48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

------------------------------------------------------------------------------------------------------------------


பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!!!


தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

மனதை மயக்கும் சிவப்பு

பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு என்ன காரணம் என்றால், நல்லகுணம், என்று பொய், மேல் பொய் சொல்வார்கள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை காதல் வருவதற்கு அழகும், உடல் கூறும் தான் காரணம் என்று கூறும் ஆராய்ச்சிகள் ஒரு கட்டத்தில் சிவப்பு நிறத்தாலும் தான் பெரும்பாலும் செக்ஸ் உணர்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் காதல் வலையில் விழுகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், பொதுவாக சிவப்பு கலரில் உடை அணியும் பெண்கள் கவர்ச்சியாக தெரிவார்கள் என்கின்றனர். காமம் இல்லாத காதல் இல்லை என்பார்கள். அதுவும் இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாகத்தான் இருக்கிறது.

உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே படம் எடுக்கிறது வாலிபர்களின் காமிரா கண்கள்…! கண்ணை பறிக்கிற சிவப்பு கலர் உடை அணிபவர்களுக்கு பாலுணர்வு தானாகவே வந்து விடுகிறது. சிவப்பு என்பது பெண்களை பகலிலும், இரவிலும் வசீகரிக்கும்ஒரு கலர் என்று தெரிவிக்கிறது அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள்.

ஆண்களை கவரும் பெண்கள்

பெண்களின் அழகுக்கு முதல் அழகு சேர்ப்பது கண்கள் தான். இதில் கண்களுக்கு மேக்கப் போடாத பெண்களை குறைந்த ஆண்களுக்கு மட்டுமே பிடிக்குமாம். அதுவும் கிராமபுறத்து வாலிபர்களுக்கு தான் இது போன்ற கண்கள் பிடிக்கும். ஆனால் நகரத்தில் வசிக்கும் வாலிபர்களுக்கு ஒவ்வொரு அழகு பிடிக்கிறது.

ஐ லைனர் போடும் பெண்கள் பெரும்பாலான இளைஞர்களை வசீகரிக்கின்றனர். அவர்களின் கண் அழகும், முகம், சிரிப்பு என ஒட்டுமொத்தமாக வாலிபர்களை கட்டிவைக்கிறது இது போன்ற அழகுடன் கண் மேக்கப் செய்தவுடன் மேலும் அழகு சேர்ந்து கொள்வதால் பெண்களின் அழகுக்கு எப்போதுமே நாங்கள் அடிமை தான் என்று கூறும் அளவுக்கு இளைஞர்கள் மாறிவிடுகின்றனர்.

இயற்கை அழகை ரசிக்கும் வாலிபர்கள்

ஆனால் இதே அளவுக்கு மேக்கப்போடும் பெண்களை வெறுக்கும் வாலிபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் என்ன தான் இருந்தாலும் பெண்களுக்கு இயற்கையான அழகே, தனிதான் என்று ரசிக்கின்றனர். இப்படி வேறுப்பட்டு இருந்தாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பது பெண்களின் கண்கள் தான் என்பது மற்றொரு விசேஷம்…! கண்ணுக்கு மை அழகு… கவிதைக்கு பொய் அழகு என்பது போல பெண்ணின் கண்ணுக்கு மேக்கப் அழகு தான் என்கிறார்கள் காதலில் விழாதவர்களும்.

முத்தம் சிந்தும் உதடுகள்

அடுத்து பெண்களின் அழகை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக இருப்பது உதடுகள். ஆண்களை விட பெண்களின் உதடுக்கு எப்பவுமே தனி மவுசுதான். அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இன்றைய காலகட்டத்தில் உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடாத பெண்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நாகரீகம் வளர்ந்து விட்டது. லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வதால் முகத்திற்கு பளிச்சென்ற தோற்றம் ஏற்படுகிறது. உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், வெய்யிலில் பாதுகாக்கவும் லிப்ஸ்டிக்கில் உள்ள மாய்சுரைசர் உதவுகிறது. இதே போல் உதடுகளுக்கு நிறம் கொடுக்கும் மற்றொரு பொருளாக லிப்கிளாஸ் உதவுகிறது.

உதட்டினை பளப்பளப்பாகவும், மிருதுவானதாகவும் இது காட்டும். இதை பெரும்பாலான இளைஞர்கள் ரசிக்கின்றனர். பெண்களின் அடுத்த அழகாக உருவெடுத்துள்ளது நகங்கள். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் நீண்ட நகங்கள் வளர்த்து வருகிறார்கள். பொதுவாகவே நகம் வளர்க்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்பது தான் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயம்.

பந்தா இல்லாத ஆண்கள்

சரி இனி ஆண்களைப்பற்றி சர்வே முடிவு என்ன கூறுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்கள் அணியும் உடையின் வர்ணத்தில் சிவப்பு தூக்கலாக இருந்தாலே போதும், தன்னை அறியாமலே பெண்கள் திரும்பிப்பார்ப்பார்கள். சிவப்பு கலரில் பனியன், சட்டை போடும் ஆண்களை கவர்ச்சிகரமானவராக பெண்கள் உணர்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் பெண்களுக்கு பந்தா இல்லாத ஆண்களை தான் மிகவும் பிடிக்கும். எளிமையான, நகைச்சுவை உணர்வு, பேச்சு திறமை கொண்ட ஆண்களை தான் பெண்கள் வளைத்து வளைத்து காதலிக்கிறார்கள் என்கிறது சர்வே…! பெண்களை கவர ஆண்களுக்கான செலவு கம்மிதான். ஆனால் தமக்கு பின்னால் ஆண்களை சுற்ற வைக்க வேண்டும் என்றால் பெண்களுக்குத்தான் செலவு அதிகம் பிடிக்கும் என்கிறது தெரிவித்துள்ளது ஆராய்ச்சி முடிவு.

--------------------------------------------------------------------------------------------------------------------------

சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!

முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு.

முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா?

சப்த நாடியும் ஒடுங்க வேண்டும்

சின்னதாக இருந்தாலும், மென்மையாக இருந்தாலும் இதழோடு இதழ் சேர்த்துத் தரப்படும் முத்தமானது, உங்களது சப்தநாடியும் ஒடுங்கிப் போகும் வகையில் அழுத்தமானதாக, ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் பெர்பெக்ட் முத்தமாம்.

மனசெல்லாம் கரைந்து போக வேண்டும்
கொடுக்கும் முத்தமானது தித்திப்பாக இருக்கிறதோ, இல்லையோ அந்த முத்தம் கொடுக்கும்போதும் சரி, கொடுத்த பின்னரும் சரி, கொடுத்தவரும், வாங்கியவரும் அப்படியெ மனசெல்லாம் கரைந்து போய் மயக்க நிலைக்குப் போய் விட வேண்டுமாம். அதுதான் நல்ல முத்தமாம்.

கண்ணெல்லாம் சொக்கி
இதழ்கள் இரண்டும் சேர்ந்து பின் பிரியும்போது உயிரின் அடி ஆழம் வரைக்கும் அதன் பாதிப்பு தெரிய வேண்டும். பிரிந்த உதடுகள் மீண்டும் இணையத் துடிக்க வேண்டும்.. உயிரின் தவிப்பு அந்த முத்தத்தி்ல தெறிக்க வேண்டும் அதுதான் அருமையான முத்தமாம்.

உறவுக்கு திறவுகோல்
ஒவ்வொரு உறவுக்கும் திறவுகோலாக முத்தம்தான் திகழ்கிறதாம். இறுக்கி அணைத்து, இடை பிடித்து, ஒரு கையால் கீழுதட்டை தடவி, மேலுதட்டில் உங்கள் இதழ் பதித்து, செல்லமாக ஒரு கடி கடித்து, திமிரிப் பாயும் காதல் உணர்வுகளை அப்படியே இதழ்களுக்குப் பாஸ் செய்து இரு இதழ்களையும் சேர்த்துக் கவ்விப் பிடித்து அழுத்தமாக நீண்டதொரு முத்தம் கொடுத்து.. இதழ் விலக்கி நிற்கும்போது உறவுக்கான அருமையான சூழலை நீங்கள் ஏற்படுத்துகிறீர்களாம்.

எங்கே கொடுத்தால் என்ன?
உடலின் எந்தப் பகுதியில் கொடுக்கப்படும் முத்தத்தை விடவும் இதழில் தரும் முத்தம்தான் இதயத்தை தடதடக்க வைக்குமாம் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் தரும்போது பெண்கள் கிட்டத்தட்ட மயக்க நிலைக்குப் போய் விடுவார்களாம். மேலும் அந்த ஆண் மீதான அவர்களது விருப்பமும், ஆசையும் பல மடங்கு அதிகரிக்குமாம்.

கிடைக்கும்போதெல்லாம்
முத்தத்திற்கு கணக்கே கிடையாது. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கொடுங்க.. மனசெல்லாம் லேசாகும்.. மேலுதட்டில், கீழுதட்டில், இரண்டையும் சேர்த்து, செல்லமாக கடித்து, மென்மையாக இழுத்து, சுவைத்து  என்று டிசைன் டிசைனாக கொடுக்கலாம்.

வெட்கப்படாதீர்கள்
முத்தம் கொடுக்கும்போது வெட்கம் இருக்கக் கூடாது. மாறாக கலைஞனாக மாறி விட வேண்டும், ரசிகனாக மாறி விட வேண்டும். ரசித்து, சுவைத்து, லயித்துத் தரப்படும் முத்தம் இருக்கிறதேவாவ், அதற்கு ஈடு இணையே கிடையாதாம். அனுபவித்தவர்கள் உதடுகளை ஈரமாக்கியபடி சொல்கிறார்கள்.

எத்தனை ஸ்டைல்கள்!
இப்படித்தான் முத்தமிட வேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான முத்தத்தை பல ஸ்டைல்களில் கொடுக்கலாம். லிப் லாக், பிரெஞ்சு கிஸ் என்று ஏகப்பட்ட வகைகள். ஒவ்வொன்றையும் படித்துப் பார்த்து பரீட்சிக்காதீர்கள்.. மாறாக உதடுகளோடு விளையாடி விளையாடி ஒவ்வொன்றையும் அனுபவித்துப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.. அதுதான் பெஸ்ட்டாம்.

வெரைட்டி இல்லாட்டி வேலைக்கு ஆகாது
பெரும்பாலான ஆண்கள், தங்கள் துணைகளுக்கு முத்தமிடுவதை ஏதோ ஒரு சடங்கு போல செய்வார்கள். அது மகா தப்பு.. என்ன அவசரம், மனைவியையும், காதலியையும் திருப்திப்படுத்துவதை விட அப்படி என்ன பெரிய வேலை..

நிதானமாக, அழகாக, அவருக்குப் பிடித்தாற் போல, அந்த செப்பு உதடுகளில் செப்படி வித்தை காட்டி விளையாடுவது எவ்வளவு சுகமானது.. அதை விட வேற என்ன வேண்டும்.. எனவே வெரைட்டியாக வெளுத்துக் கட்டுங்கள். உங்களது துணைக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்.

கீழுதட்டைக் கடித்து .. அப்படியே காது மடலில்
கீழுதடுதான் பெண்களுக்கு உணர்வுகளைத் தூண்டும் ஏரியா. எனவே முத்தமிடும்போது கீழுதட்டில் நிறைய ஜாலம் காட்டுங்கள். செல்லமாக கடியுங்கள், சுவையுங்கள், பிடித்து இழுங்கள்.. அப்படியே அவரது காது மடலிலும் முத்தமிட்டு விளையாடுங்கள்..

இன்னும் என்ன வேண்டும் என் செல்லமே!
முத்தமிடும்போது காதல் மொழி பேசுவது அவசியமோ அவசியம். இந்த நேரத்தில் என்ன பேச்சு வேண்டி கிடக்கு என்று சிலர் சொல்லலாம். ஆனால் இந்த சமயத்தி்ல காதுகளுக்கு கிட்டே போய் கிறக்கமாக, மயக்கமாக ஹஸ்க்கியான வாய்ஸில் பேசும்போது கிடைக்கும் சுகமே அலாதி தெரியுமா செய்து பாருங்கள்.

முத்தமிடுவதும் ஒரு அழகிய கலை அதற்கும் நிறைய நேரம் கொடுங்கள். உதடுகளுடன் விளையாடுங்கள், உறவுக்குள் புகுந்து உள்ளூர ஆன்ம திருப்தியைப் பெறுங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்

இன்றைக்கு ஏதாவது ஸ்பெசல் இருக்கா? இப்படி கணவர் மனைவியைப் பார்த்து கேட்டால் அன்றைக்கு இரவு வீட்ல விசேசம் என்று அர்த்தம். பாதம், முந்திரி போட்டு பாயசமோ, கேசரியோ செய்தால் நிச்சயம் விசேசம்தான் என்பதை புரிந்து கொள்வார்களாம் கணவர்கள்.

உணவில் மட்டுமல்ல தலையில் வைக்கும் பூவின் மூலம் கூட தங்களின் காதலை, தேவையை பெண்கள் உணர்த்துவார்களாம். வாசனை நிறைந்த மல்லி, முல்லை, சாதி மல்லி சூடினால் அன்றைக்கு இரவு படுக்கை அறையில் காதல் மழை இருக்கிறது என்று அர்த்தம். அதே சமயம் வாசமில்லாத கனகாம்பரம் சூடினாலோ, அல்லது பூக்கள் வைக்காமல் இருந்தாலே வேறு எதுவும் விசேசமில்லை பேசாமல் படுத்து தூங்குங்க என்று குறிப்பால் உணர்த்துவதில் பெண்கள் கில்லாடிகளாம்.

இதுபோன்ற சில பல சமாச்சாரங்களை சொல்லி காமசூத்திரக் கலையை குறிப்பால் உணர்த்தியுள்ளது ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’. முன்குறிப்பு மட்டுமல்லாது உறவுக்கு முன்னும் பின்னும் தம்பதியர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கிளு கிளு சமாச்சாரங்களை அள்ளித் தெளித்துள்ளது அந்த ஆய்வுப் புத்தகம்.

சலிக்க சலிக்க முத்தமழை

உறவின் தொடக்கத்தில் முன் விளையாட்டுக்கள் களை கட்டும். சலிக்க சலிக்க ( சலிக்குமா என்ன?) முத்தமழைதான். ஆனால் முடிந்த பின்னரோ துணையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். இதுவே பெண்களுக்கு உளவியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்திவிடுமாம். உறவின் முன்பு எப்படி துணையை தயார் படுத்துகிறோமோ அதேபோல உறவிற்குப் பின்னும் அன்பாய் தலை வருடி ஆறுதலாய் அணைத்தபடி படுக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வெட்கத்தில் சிவக்கும் முகம்

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 170 பேர் பங்கேற்றனர். உறவின் போது அவர்களின் தேவைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. உறவின் முன் செக்ஸியான பேச்சு, முத்தம், போன்ற முன்விளையாட்டை விரும்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் உறவுக்கு பின் அன்பான அரவணைப்பை விரும்புவதாக கூறியுள்ளனர்.

மெதுவாய் வருடிக்கொடுக்க ஆசை

அதேபோல் உறவு முடிந்து, சோர்ந்து போய் படுத்திருக்கும் ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம். அதேபோல் உறவின் போது நடந்த ரொமான்ஸ் நிகழ்வுகளை கதோரம் கிசுகிசுப்பாய் பேச விரும்புகின்றனராம்.

காதல் வெளிப்படும் தருணம்

உறவின் தொடக்கத்தில் ஐ லவ் யூ கூறுவதைப்போல உறவு முடிந்த பின் அதற்கு நன்றி கூறும் விதமாக ஐ லவ் யூ சொல்லுங்களேன். அதுவே அடுத்த ரவுண்டுக்கு வழி ஏற்படுத்தி தரும். ஆனால் பெரும்பாலான ஆண்கள் உறவு முடிந்த உதறிவிட்டு வெளியேறத்தான் நினைக்கின்றனர். சட்டென்று குளிக்கபோகின்றனர். ஆனால் தம் அடிக்கப் போய்விடுகின்றனர். ஒரு சிலர் மட்டுமே மனைவியை பூவாய் தாங்கி அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு, காதோரம் ஐ லவ் யூ சொல்கின்றனராம்.

தம்பதியரிடையேயான தாம்பத்ய உறவு என்பது உடலின் சங்கமம் மட்டுமல்ல அது இரு மனங்களின் சங்கமம் கூடத்தான். எனவேதான் மனமொத்து உறவில் ஈடுபடும் போது அது எண்ணற்ற ஹார்மோன்களை சுரக்கின்றன. இந்த ஹார்மோன் காதலின் ஆழத்தை அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு நூலில் தெரிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------

அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!!


செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.

ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.

போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.

ஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில் உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------

இதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…!

சிலுசிலுன்னு காத்து வீசும் நேரம்..  உள்ளுக்குள் இரண்டு இதயங்களின் தடதடப்பு…   இரவு நேரத்து உறவுக்கு எப்படியெல்லாம் உணர்வு இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு உறவும் நினைத்து நினைத்து ரசிக்கும் வகையில் இருக்க வேண்டியது அவசியம். அதற்குத் தேவை, ஒவ்வொருவருக்கும் பிடித்தது போல நடந்து கொள்ள வேண்டியது.

ஆண்களுக்கு சில விஷயம் பிடிக்கும், பெண்களுக்கு சில பிடிக்கும். இருவருக்கும் பொதுவான விருப்பங்கள் சில நேரத்தில் அமையும். யாருக்கு எது பிடிக்கும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும்போது உறவு சுகப்படும், இனிக்கும். பெண்களைப் பொறுத்தவரை சில வகை பொசிஷன்கள் அவர்களுக்கு மிக மிகப் பிடிக்குமாம். அதை தொடர்ந்து பின்பற்றும்போது அவர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விடுவார்களாம். காரணம் இந்த வகை பொசிஷன்களில் உச்சத்தை மிக எளிதாக எட்டுகிறார்கள் பெண்கள் என்பதால்தான்.

டாகி – இதைப் பற்றி நிறைய விளக்க வேண்டியதில்லை.. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இது பெண்களுக்கு மிகவும் பிடித்த பொசிஷனாம். மேலும் செக்ஸ் பொசிஷன்களிலேயே மிகவும் சிறந்ததும் கூட. அதை விட முக்கியமாக ஆண்களுக்கு கூடுதல் பரவசம் தரக்கூடியதும் இதுதான். மிகவும் சந்தோஷத்துடன் இதைச் செய்யும்போது பெண்களும் கூட பெரும் பரவசம் அடைகிறார்களாம்.

மிஷனரி – இதுவும் ஆண், பெண் இருவருக்குமே பிடித்த ஒன்றுதான். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடித்தது. பெரும்பாலும் எல்லோரும் இதே ஸ்டைலைத்தான் கடைப்பிடிப்பார்கள். போரடிப்பது போல இருக்கத்தான் செய்யும். இருந்தாலும், செக்ஸ் உறவு பெரும்பாலும் இந்த பொசிஷனில்தான் ஆரம்பிக்கிறது. பெண்களுக்குப் பிடித்த ஒரு பொசிஷன் இது. தன் மீது ஆண் இயங்குவதை பார்த்தபடியே பெண் சுகத்தை அனுபவிக்க முடியும் என்பதால் இந்த பொசிஷனை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.

கெள கேர்ள் – இருவருக்குமே பிடித்த இன்னொரு பொசிஷன் இது. மிகவும் செக்ஸியான பொசிஷனும் கூட. சில நேரங்களில் ஆண்கள் மீது ஏறி அமர்ந்து பெண்கள் உறவு கொள்ள விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கானது இது. பெண்களுக்கு இந்த பொசிஷன் பெரும் சுகத்தையும், கூடுதல் இன்பத்தையும் தருமாம்.

ஸ்பூன்- இருவருக்கும் மிகவும் சவுகரியமான பொசிஷன் இது. மேலும் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்கும் வாய்ப்பும் இதில் அதிகம். மேலும் ஏகப்பட்ட விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே இன்பம் அனுபவிக்கவும் முடியும். இப்படிச் சின்னச் சின்னதாக எதையாவது செய்து அசத்த ஆரம்பியுங்கள்…!

---------------------------------------------------------------------------------------------------------------

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில
நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

சரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம்.
பொதுவாக படுக்கை அறையில் ஆண்களுக்கு எப்பவுமே வெட்கம் வருவதே இல்லை. அநியாயத்திற்கு சுதந்திரமாக இருப்பார்கள். பல நேரங்களில் ஆண்களின் இந்த திறந்த மனோபாவம்தான் பெண்களை வெட்கப்பட வைக்கும். பல பேர் முதலிரவு என்றாலே முற்றும் துறந்த இரவு என்று நினைத்து பால் சொம்புடன் வரும் மனைவியை பயமுறுத்துவது போல காட்சி தருவார்கள். அந்த நிமிடமே அந்தப் பெண்ணுக்கு கணவர் மீது ஒருவிதமான பயம் வந்து விடுமாம். எனவே அப்படிப்பட்ட துறவு நிலையை ஆண்கள் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லதாம்.

பெண்களைப் பொறுத்தவரை வெட்கத்தை துறக்க வேண்டும் என்றால் அது ஆண்களின் கையில்தான் உள்ளது. தனது துணை வெட்கப்படாமல் இருக்கும் வகையில், இயல்பாக பேசி அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ரிலாக்ஸ்டாக இருக்குமாறு அவர்களை இயல்புப்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் முரட்டுத்தனமாக செயல்படுவதை விட்டு விட்டு மென்மையாக அணுக வேண்டும்.

நான்தானே உன்னுடன் இருக்கிறேன், என்னை முழுமையாக நம்பலாம் என்று நயமாக பேசி அவர்களை சகஜமாக்க வேண்டும். எடுத்ததுமே செக்ஸ் குறித்துப் பேசாமல் வேறு சில டாபிக்குகளுக்குள் நுழைந்து மெதுவாக செக்ஸ் பக்கம் போக வேண்டும்.
காமம் பாவம் அல்ல, அசிங்கம் அல்ல, அதில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அறுவறுப்பானது அல்ல, உடலுக்கும், மனதுக்கும் இன்பம் பயக்கக் கூடியதே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு செக்ஸ் கல்வியாளர் போல மாறி விட வேண்டும் இந்த இடத்தில்.

ஆரம்பத்திலிருந்தே அவரது போக்குக்கு நீங்கள் மாறி அவர் வழியிலேயே போக வேண்டும். அப்போதுதான் உங்களது துணை இயல்பு நிலைக்கு வருவார், உங்களிடம் முழுமையாக சரணடைய முன்வருவார்.
செக்ஸ் விளையாட்டுக்கள் சிலவற்றை சில பெண்கள் விரும்ப மாட்டார்கள். குறிப்பாக ஓரல்செக்ஸில் பல பெண்களுக்கு நாட்டம் இருக்காது. எனவே அதை நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேசமயம், அதனால் ஏற்படும் இன்பங்களை நீங்கள் பக்குவமாக கூறி அதை ஏற்கும் வகையில் செய்வது உங்களது சாமர்த்தியம்.

எதைச் செய்தாலும் உங்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு செய்யாதீர்கள். மாறாக, துணையின் விருப்பத்தையும் அறிந்து, அவரது மூடையும் புரிந்து, அவரது சாய்ஸையும் தெரிந்து பின்னர் ஈடுபடும்போது முழுமையான இன்பம் கிடைக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

மண வாழ்க்கை மனம் கவர்ந்ததாக மாற, உறவுக்கு வழிவகுக்க

திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டுகொள்வதில்லை என்பது பெரும்பாலான பெண்களின் புகார். இதன் காரணமாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் பூதாகரமாக பார்க்கப்பட்டு பிரச்சினைகளாக உருவெடுகின்றன. பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அலசும் கட்டுரை இது.

மனம் கவர்ந்தவரிடம் எதிர்பார்ப்பது
வெறும் உடல் ரீதியான உறவு மட்டுமே கணவரிடம் இருந்து பெண்கள் எதிர்பார்ப்பதில்லை. அதையும் தாண்டி மனதளவில் ஆறுதலாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர். பெண்களின் தேடுதல் மிகவும் பெரியது. அதை நிறைவேற்றும் ஆண்களை அவர்கள் பூஜிக்கின்றனர்.

பேசி புரிய வைக்கலாம்
பேச்சு என்பது இரு மனங்களுக்கிடையேயான இறுக்கத்தை தளர்த்தும் ஆயுதம். மனதில் பாரம் என்றால் இருவரும் பேசுங்கள். அதிகமாக பேசுவது ஆறுதலைத் தரும். இருவருக்கிடையேயான நேசத்தை பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும்.

புறத்தோற்றத்தை ஒதுக்கித் தள்ளுங்கள்
மணமான புதிதில் ஒல்லியாக இருக்கும் பெண்கள் குழந்தை பெற்றவுடன் அவர்களின் உடல் குண்டாவது இயல்பு. இது அநேக ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கிறது. மனைவியின் புறத்தோற்றத்தை விமர்சனம் செய்யும் கணவர்கள் இன்றும் இருக்கின்றனர். இதனால் மனரீதியான பிரச்சினைக்கு பெண்கள் ஆளாகின்றனர். அழகு என்பது உருவத்தில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும். பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஆண்களே நல்ல துணைவர்களாக இருக்க முடியும்.

சின்ன சின்ன ரொமன்ஸ்
தாம்பத்ய உறவு மட்டுமே மணவாழ்க்கைக்கு முக்கியமில்லை. சின்ன சின்ன ரொமன்ஸ்களையும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர். பெண்கள் எதிர்பாராத நேரத்தில் அவ்வப்போது கொடுக்கும் முத்தம். சமையலறையில் சத்தமின்றி செய்யும் சில்மிசங்கள். மனைவியின் கைகளை பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக காதோரம் கிசு கிசுப்பாக கூறும் ஐ லவ் யூ என்ற வார்த்தை என பெண்கள் எதிர்பார்ப்பது எத்தனையோ உண்டு. ஆனால் இவற்றை நிறைய ஆண்கள் செய்யத் தவறிவிடுகின்றனர்.

இனிய உறவின் உன்னதம்
ஆண்கள் அவசரக்காரர்கள். தங்களின் காரியம் முடிந்தவுடன் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கப் போய்விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு எதையுமே ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். கணவருடனான நெருக்கத்தை அசை போடுவதில் பெண்களுக்கு அலாதி பிரியம் உண்டு. எனவே உறவின் போது மட்டுமல்லாது உறவிற்கு முன்பும், பின்பும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

இவற்றை கடைபிடிக்கும் ஆண்களை பெண்கள் ஆராதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை

No comments:

Post a Comment