Tuesday, July 1, 2014

அந்தரங்கம்

கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா?



முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.

கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.

கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.

கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.

கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.

அதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக கீழே ஆண், மேலே பெண் முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தின்போது வாய் வழி உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.

தாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.

பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------
 

முத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்!

எல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன்மையானவர்களும் கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியாசமானவர்கள், வித்தியாசமான, நூதனமான, வினோதமான பழக்க வழக்கங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா..

சற்றும் கற்பனையே செய்து பார்க்க முடியாத பல விஷயங்கள் பெண்களிடம் இருக்கிறதாம். ஆண்கள் செய்யத் துணியாததை செய்யத் துணிபவர்கள் பெண்களாம். பல விஷயங்களை உண்மை போலவே செய்து ஆண்களுக்கு டகாய்ச்சி காட்டுவதில் பெண்கள் கில்லாடிகளாம்.

ஆண்களுக்கு செக்ஸ் ரொம்பப் பிடிக்கும் என்றால் பல பெண்களுக்கு சாக்லேட்தான் ரொம்ப இஷ்டமாம். வயதை மறைப்பதில், மனசுக்குள் இருப்பதை கடைசி வரை மனசோடு வைத்திருப்பது என பல விஷயங்களில் ஆண்களை பீட் செய்து விடுகிறார்களாம் பெண்கள்.

ஆண்கள் செய்யத் தயங்கும் விஷயத்தை, ஏன் யோசிக்கத் தயங்கும் விஷயத்தைக் கூட சட்டென்று முடித்து விடுவதில் கில்லாடிகளாம் பெண்கள்.

பெண்கள் குறித்த சில வினோதமான விஷயங்கள்…

கைப்பை இல்லாமல் பெண்களை வெளியில் யாருமே பார்க்கவே முடியாது. கைப்பையும், பர்ஸும் பெண்களுடன் ஒட்டிப் பிறந்தவை. வீட்டைவிட்டு இறங்கி அடுத்த தெருவுக்குப் போனால் கூட இதில் ஏதாவது ஒன்று கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும். கையில் எதுவும் இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்குமாம். ஆனால் கைப்பையில் என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை அறிவது மட்டும் ரொம்பக் கஷ்டமான காரியம்.

அதேபோல ஜவுளிக்கடைக்குப் போனால் பெண்களைத் திருப்திப்படுத்துவது ரொம்பக் கஷ்டம். எத்தனை துணிகளைப் பார்த்தாலும் அவர்களுக்குத் திருப்தியே வராதாம். கடைசியில் ஏதாவது ஒன்றை செலக்ட் செய்வார்கள்தான்… ஆனால் பில்லுக்குப் பணம் கட்டும் நொடியில் கூட, இதை விட பெஸ்ட்டா இருந்திருக்கலாம் என்று எண்ணுவார்களாம்.

பெரும்பாலான பெண்கள் தினசரி குளித்து அழகாக, கமகமவென்று காட்சி தருபவர்கள் என்றாலும் கூட பல பெண்கள் தினசரி குளிக்கும் வழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்களாம். இருந்தாலும் எப்படி வாசனையாக திகழ்வது என்ற ரகசியம் அவர்களது கை நுனியில் இருக்குமாம்.

ஆண்களுக்கு முன்பு குறைவாக சாப்பிடுவது போல பெரும்பாலான பெண்கள் நடிக்கிறார்களாம். ஆனால் தனியாக சாப்பிடும்போது நிறையவே சாப்பிடுவார்களாம். ஆண்களை விட பெண்கள்தான் ரசித்து, ருசித்து சாப்பிடுகிறார்களாம்.

செக்ஸின்போது அதை பூரணமாக அனுபவிப்பது பெண்கள் மட்டுமே. முன்விளையாட்டு தொடங்கி, உறவு முடிந்து களைத்து விழும் வரையிலும் பெண்கள் ஒவ்வொன்றையும் அனுபவித்து ரசிப்பார்களாம். அதேபோல உறவு முடிந்த பின்னரும் கூட அரவணைப்பு தொடர வேண்டும் என்று ஆசைப்படுவார்களாம். குறிப்பாக முத்த மழை பொழிந்தால் உள்ளூரக் குளிர்ந்து போகிறார்களாம்.

பெண்களுக்கு பிடித்த விஷயம் முத்தம். எத்தனை முத்தம் கொடுத்தாலும் அவர்களுக்குத் திகட்டுவதில்லையாம். நாள் முழுக்க மனசுக்குப் பிடித்தமானவர் முத்தம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றுமாம் பெண்களுக்கு. குறிப்பாக இதழ்களில் தரப்படும் முத்தத்தை பெண்கள் அதிகம் ரசிப்பார்களாம், விரும்புகிறார்களாம்.

மேக்கப், தோற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்ட பெண்கள், செக்ஸ் உறவின்போதும் கூட தங்களது தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களாம்.. இதெப்படி இருக்கு.

70 சதவீத பெண்களுக்கு சாக்லேட் என்றால் உயிராம். செக்ஸ் வேண்டுமா, சாக்லேட் வேண்டுமா பாப்பா என்று கேட்டால் சாக்லேட்தான் என்று சப்புக் கொட்டி வாங்கிச் சாப்பிடுவார்களாம்.

தான் அணியும் டிரஸ்ஸைப் போல வேறு யாரும் டிரஸ் அணிவதை பெண்கள் விரும்ப மாட்டார்களாம். அதுவும் ஒரே மாதிரியான டிரஸ்ஸில் யாராவது பெண் வந்து விட்டால் அவ்வளவுதான் டென்ஷனாகி விடுவார்களாம்.

ஆண்களை விட வேகமாக பருவத்திற்கு வந்து விடுகிறார்களாம் பெண்கள். மேலும் ஆண்களை விட மன முதிர்ச்சியிலும் பெண்கள்தான் பாஸ்ட்டாம்.

செக்ஸைப் பொறுத்தவரை ஆண்களைப் போல எப்போது பார்த்தாலும் செக்ஸ் தேவை என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பதில்லையாம். அதை உணர்வுப்பூர்வமான விஷயமாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகிறார்களாம்.

இப்படி பெண்கள் குறித்த வித்தியாசமான விஷயங்கள் நிறையவே இருக்கு…!

------------------------------------------------------------------------------------------------------------------

பாலின நோய்கள் தெரியுமா?


1.பொதுவாக பாலின நோய்களை தடுப்பதற்கு மருந்து ஏதுவும் கிடையாது. ஆனால், இவைகளை நம் உடம்பில் மேலும் பரவாமல் இருக்க, சில பாதுகாப்பு முறைகளை கையாளலாம்.

2.இப்பொழுது உள்ள பாலின நோய்களில், மிகக் கொடுமையானது 'எய்ட்ஸ்' சிபிலிஸ், கொனேரியா போன்றவைகள் தான்.

3. எயிட்ஸ் நோய் என்ற மிக நுண்ணிய வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இதை 'ஹெச்ஐவி'  என்றும் அழைக்கலாம்.

4.இவைகள் ஒரு கூட்டுக் குடும்பம் போல வாழ்கின்றன. இது நம்முடைய நோய் எதிர்பு சக்தியை அழித்து, பல தொற்று வியாதிகள் நம் உடலில் ஏற்பட காரணமாகிறது. இது தாக்கி, சுமார் 5 வருடம் வரை எந்த அறிகுறியும் ஏற்படாது,பிறகு மெல்ல மெல்ல பல நோயின் ஆரம்பமாகின்றன.

5.இதைத் தடுக்கவோ, அழிக்கவோ இதுவரை மருந்து கிடையாது. வெளிபடையாக நோயின் அறிகுறிகள் ஏற்பட்ட 2-3 ஆண்டுகளில் மரணம் ஏற்படும்.

6. சிபிலிஸ் என்ற பாலின நோய், 'ஸ்பைரோசீட்டஸ்' என்ற நுண்ணிய கிருமிகளால் ஏற்படுவது. இதனுடைய அறிகுறிகள், சாதாலண தோல் வியாதியைப் போல காணப்பட்டு, பிறகு மரைந்து விடும். இதனால் இது பெரும்பாலும் அலட்சியப்படுத்தபடுகிறது.

7. இது சுமார் 30 ஆண்டு காலம், பல அறிகுறிகளை ஏற்படுத்தி மறைந்து, உடல் உள் உறுப்புகளைத் தாக்கிய வண்ணம் இருக்கும். முற்றிய நிலையில் மரணம் நிச்சயம். ஆரம்ப கட்டங்களில், இதற்கு மருந்துகள் உண்டு.

8.'கொனோரியா' என்ற நோய் மிகப் பரவலாகக் காணப்படும் நோய். சுமார் 80 சதம் பெண்கள், எந்தவித அறிகுறியும் இல்லாமல் இதைச் சுமந்தே செல்கின்றனர். ஏனென்றால், இந்த நோய் கண்டவர்களின் படுக்கை, தலையணை, டவல் போன்றவற்றால், இது எளிதில் பிறரிடம் பரவும். இதற்கு மருந்துகள் உண்டு,

9.பொதுவாக தோலிலேயோ, பாலின உறுப்புகளிலேயோ, எதும் மாற்றம் ஏற்பட்டால், உடனே சரும நோய் டாக்டரிடம் அல்லது பாலின டாக்டரிடமோ காட்ட வேண்டும்,

10. இதைத் தவிர இன்னும் பல பாலின நோய்க்கிருமிகள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல முடியாத பல பாலின நோய்களும் உண்டு.

---------------------------------------------------------------------------------------------------------------------

சுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்?


பரம்பரை வைத்தியர்கள் கூறுவது போலச் சக்தி ஒன்றும் வெளியேறவில்லை! விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமான சத்தே தவிர இதனால் உடலுக்கு சக்தி இழப்பு என்று எதுவும் கிடையாது.

சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்புக்கு காரணம் என்னவென்றால், பாலுணர்வு என்பது குறிமலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித இன்பப்பரப்புதான். அப்பொழுது இரத்தஓட்டம் அதிகமாகி, உடல் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறுகின்றன. விந்து வெளியேறும் பொழுது, ஆண்குறி முனையில் அழுத்தம் ஏற்பட்டு, நரம்புகளில் இன்பத்துடிபபு ஏற்படுகிறது. இதுவே உச்ச இன்பம் என்பதாகும். பிறகு, உடல் சாதாரண நிலைக்கு வருகிறது.

இப்பொழுது ஏற்படும் உடல் தளர்ச்சியும், மன அமைதியும், ஒருவிதக் களைப்பு உணர்வைக் கொடுக்கிறது. தூக்க உணர்வை ஏற்படுத்துகிறது. இதுவரை ஆட்டிப் படைத்த பாலுணர்வுக் கற்பனைகள் தற்காலிகமாக மறைகிறது.

இந்த உடல் சோர்வு, நீங்கள் சாதாரணமாக விளையாடி விட்டு வந்தபிறகு ஏற்படும் உடல் சோர்வு போலத்தான். இதில் ஏற்படும் சக்தி விரயம், விளையாட்டில் ஏற்படும் சக்தி விரயத்தை விட குறைவுதான். ஆனால், பெரும்பாலோர் குற்ற உணர்வினால் மனச்சோர்வு அடைந்து, அதன் மூலமாக உடல் சோர்வை அடைகிறார்கள், அவ்வளவுதான்.

பின்குறிப்பு : அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. (புரிந்தால் சரி)

---------------------------------------------------------------------------------------------------------------------

பெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்

முத்தம் என்பது உறவின் போது தம்பதிகளின் உடம்பில் பாயக்கூடிய மின்சாரம் ஆகும். இந்த மின்சாரத்தை உங்கள்  பெண் துணையின் உடலில் சரியாக
பாய்ச்சினால் அவர்களை வெகு எளிதாக உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்ல  முடியும். பெண்ணை எவ்வாறு முத்தமிட்டு உச்சகட்டத்திற்கு அழைத்துச் செல்லமுடியும் என்பதை பார்ப்போமா...

1.  பெண் துணையின் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் முத்தம் பிரெஞ்சு முத்தம்

2. கண்களின் மேல் மற்றும் இமைகளில் கொடுக்கப்படும் மெல்லிய முத்தம்

3. நன்கு ஆழமாக நாவைச் சுழற்றி தொண்டை வரை கொடுக்கப்படும் முத்தம்

4. நீண்ட தேடுதல் முத்தம்

5.கைகளின் உள்ளே கீழிருந்து மேல் வரை கொடுக்கப்படும் முத்தம்

6. உதடுகள் மற்றும் முகத்தில் கொடுக்கப்படும் மின்னல் வேகத்திலான முத்தம்

7. காதுகளினுள் மற்றும் காது மடல்களில் கொடுக்கும் ஈரமுத்தம்

8. இதழ்களில் துவங்கி அதுமுதல் கீழிறங்கி வந்-து மர்ர்பு வரையிலும் பயணித்து மார்பக காம்புகளில் முடியும் விரைவான மற்றும் நீண்ட பரிமாற்ற முத்தம்

9. பெணட துணையின் கீழ் இதழ்களில் கொடுக்கப்படும் அதிக நேர முத்தம்


10. நாவின் மூலம் பெண் இதழ்களை வலது&இடது மற்றும் இடது&வலது வருடி கொடுக்கப்படும் முத்தம்

11. பெண்ணின் வாயினுள்நாவை நுழைத்து மெதுவாக ஒரு ஒரு பகுதியாக ஆராய்ந்து, சுழற்றிக் கொண்டே கொடுக்கப்படு சுழல் முத்தம்

12. இதழ்களையும், வாயையும் கடிக்காமல் பற்களிடையே கொண்டு வந்து தரப்படும் முத்தம்

13. மார்பகங்கள், வயிற்றுபகுதி மற்றும் பெண்ணுறுப்பு உள்ளிட்ட இடங்களில் கொடுக்கப்படும் ஆழமான முத்தம்

14. பெண்ணின் உணர்ச்சிப் பகுதியை கைவிரல்களால் தூண்டியப்படியே கொடுக்கப்படும் முத்தம்

15. பின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியை சிலிர்க்க வைக்கும் முத்தம்

இப்படி ஏராளமான முத்தங்கள் உள்ளன. மேற்கண்ட முத்த வகைகளால் உங்கள் துணையை உச்சநிலைக்கு அழைத்து செல்லுங்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்களுக்கு 'ஜி ஸ்பாட்' உண்டா?

உடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனைத்து பகுதிகளுமே ஜி ஸ்பாட் தான் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது. சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க கூடியதாக சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக்கூடியதாக சொல்வதும் உண்டு. உதாரணமாக திருமணம் முடிந்த முதல் நாள், பெண்ணின் விரல் நுனிகள் ஆண் உடல் மீது பட்டாலே ஷாக் அடிக்கும் அளவிற்கு ஆனந்தம் தருவதாக அமையும். அதுவே தொடர்ந்து தொட்டு பழகிவிட்டால் கைவிரல்களில் இருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது. ஆனாலும் எப்போதும் இன்பம் தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியை கூலாம்.

ஆனால் பலர் மேற்கூறப்பட்ட எதையும் ஜி ஸ்பாட் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி கூறும் பலர் -ஆசனவாய்க்கும், ஆண் குறிக்கும் இடையில் இருக்கும் விதைப்பைக்கும் இடையயில் இருக்கும் பிராஸ்டேட் சுரப்பியையே ஜி ஸ்பாட் என்று வருணிக்கிறார்கள். ஆசனவாய்க்கும், ஆண் விதைப்பைக்கும் இடையில் இதைத் தொட்டு உணர முடியும். ஆண்களுக்கு உணர்ச்சி பொங்கும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறிளவில் புடைப்பு ஏற்படும். இதை பெண் துணை கைகளாலோ அல்லது நாவாலோ வருடும்போது ஆண்களுக்கு உச்சகட்டம் ஏற்படம் என்பது நிபுணர்களின் கூற்று

-------------------------------------------------------------------------------------------------------------------

இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்...

வயகரா!!! இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர் தான் வயாகரா. இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.

முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டு மடங்கோ 100 மடங்கோ, இல்லை ஆயிரம் மடங்கு சிறந்தவை ஆகும்.முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது. உறவில் முருங்கையின் பங்களிப்பு மகத்தானது.

ஆண்மை அதிகரிக்க :

முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டையும் சம அளவில் சேர்த்து, சிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

விந்து விருத்தியாக :

முருங்கைப் பூ 10, சுத்தமான பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி இரவு படுக்கும்போது குடிக்க, விந்து விருத்தியாகும், தேகம் பலம் பெறும், அத்துடன் பேரீச்சம்பழம் சேர்த்துச் சாப்பிட, விந்து விருத்தியாவது மட்டுமின்றி விந்து கெட்டியாகும். விந்து சீக்கிரம் முந்தாமலும் இருக்கும். தெவிட்டாத தேன் உண்டது போல், தீராத தாகம் தீர்ந்தது போல், ஆனந்தக் கடலில் ஆண், பெண் மூழ்கலாம்.

காமம் பெருக :

முருங்கைப் பூவை உணவாகவோ, மருந்துகளில் சேர்த்தோ, பச்சையாகவோ எந்த விதத்தில், எந்த மாதிரி உபயோகப்படுத்தினாலும், உண்டபின் உடலில் காமத்தைப் பெருக்கும். இச்சையைத் தூண்டும். பச்சையாக நான்கு பூவை தினம் இருவேளை மென்று திண்ணலாம். அரைக்கீரையுடன் அரை பங்கு முருங்கை பூ சேர்த்துக்கடைந்து, சோற்றுடன் சாப்பிடலாம். காமம் பெருகும், வயகரா உண்டால், காமஉணர்ச்சி வந்து, உடன் போய்விடும். ஆனால் இந்த இயற்கை வயகரா உண்டால், அணையில் நீர்த்தேக்கம் போல் காம உணர்ச்சி அப்படியே அலைமோதி நிற்கும். வயகரா உண்டவருக்கு ஒருவித மின்சாரம் தாக்கியது போன்ற காம வலிப்பு வந்து போய்விடும். ஆனால் இந்த முருங்கை வயகரா உண்டால் உடலிலுள்ள 72,000 நரம்புகளிலும் இன்பக் களிப்பு ஏகாந்த நடனமிடும்.


உடலுறவில் மகிழ்ச்சி நீடிக்க :

முருங்கையின் இளம் பிஞ்சுக் காயைக் கொண்டு வந்து அனலில் காட்டி, சாறு பிழிந்து குடிக்க, காம உணர்வு பெருகும், மனையாளுக்கு பெருமகிழ்ச்சி அளிக்குமளவு உடலுறவில் இன்புறல் நீடிக்கும். சிலருக்கு மனைவியோடு எவ்வளவு நேரம் பேசிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தாலும் உடலுறவில் ஈடுபட்டால் ஒரு நிமிடத்தில் விந்து வெளியாகி விடும். இதனால் அவர்கள் மிகுந்த வேதனைப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்கு இம்முறை சிறந்த பலனளிக்கும்.

உறவில் பரவசம் பெருக:

முருங்கைக் கீரையைப் பொடியாக அரிந்து, அதில் கேரட் திருவி போட்டு, பசு நெய் விட்டு, பொரித்து, இறுதியில் முட்டையை அதில் ஊற்றி கிளறி, பொரித்துண்ண ஆண்கள் பாலுறவில் பரவசமடைவர். ஆண்மை அதிகரித்து ஆனந்தம் அடைவர். இல்லாள் கணவன்மீது ஈடில்லா பாசமும், மதிப்பும் கொள்வாள். இல்லற சுகத்தில் இருவரும் ஒரு நிலையில் உல்லாசம் காண்பர்.
----------------------------------------------------------------------------------------------------------------------

தினம் வால்நட் சாப்பிடுங்க... படுக்கையில் அசத்திடுங்க...

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும் வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை
அறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்,தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குபின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்தபோது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment